வெள்ளி, 25 அக்டோபர், 2024

ராகி பணியாரம்! செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

ராகி பணியாரம்!


தேவையான பொருள்கள்:

ராகி மாவு - ஒரு கப்
கோதுமை மாவு - அரை கப்
பேக்கிங் சோடா - ஒரு தேக்கரண்டி
அரிசி மாவு. - கால் கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து (பொடியாக நறுக்கியது)
காரட் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை:

வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும். காரட்டை துருவி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எல்லா வகையான மாவையும் ஒன்றாக போட்டு உப்பு சேர்த்து கலக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, துருவிய காரட், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.

பின்னர் வதக்கியவற்றை மாவில் போட்டு கலக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் பணியார கல்லை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி கரைத்து வைத்திருக்கும் மாவை குழியின் முக்கால் அளவிற்கு ஊற்றி இருபுறமும் நன்றாக திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கவும்.

சுவையான ராகி பணியாரம் ரெடி.

கோதுமை குழி பணியாரம்...!

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

கோதுமை குழி பணியாரம்...!

தேவையான பொருட்கள்:

1. கோதுமை மாவு - கால் கிலோ
2. இட்லி மாவு - கால் கப்
3. ரவை - 1 டேபிள் ஸ்பூன்
4. முட்டை - 1
5. தேங்காய் துருவல் - கால் கப்
6. முந்திரி - 3(பொடியாக்கியது)
7. உப்பு - தேவைக்கேற்ப
8. வெல்லம் - 300 கிராம் (பொடியாக்கியது)
9. ஏலக்காய் - 3(பொடியாக்கியது)
10. எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

1. வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

2. கோதுமை மாவில் இட்லி மாவு, ரவை, முட்டை, பொடியாக்கிய முந்திரி, உப்பு, ஏலக்காய் பொடி, வடிகட்டிய வெல்லம் அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

3. கலவை கெட்டியாக இருந்தால் தேவைக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி கலக்கி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.

4. பின்பு, குழிபணியார சட்டியை காயவைத்து கொஞ்சமாக எண்ணெய் அல்லது நெய் விட்டு பணியாரமாக சுட்டெடுக்கலாம்.

5. இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

மில்க் கேசரி செய்வது எப்படி.....?

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

மில்க் கேசரி செய்வது எப்படி.....?


தேவையான பொருட்கள்:

பால் - 200 மில்லி லிட்டர்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய் - 7
வெள்ளை ரவை - 100 கிராம்
நெய் - 30 மில்லி
முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்
கிஸ்மிஸ் (உலர் திராட்சை) - 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் பருப்பு - 2
பிஸ்தா - 2
செர்ரி பழம் - 2

மில்க் கேசரி
செய்முறை:

வாணலியில் சிறிது நெய் விட்டு ரவையை நிறம் மாறாமல் சிம்மில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.

மற்றொரு வாணலியில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.

மற்றொரு வாணலியில் பால் சேர்த்து காய்ச்சியதும் வறுத்த ரவை, தட்டிய ஏலக்காய் சேர்த்துக் கிளறவும்.

பால் வற்றி ரவை வெந்த பிறகு சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். சர்க்கரை உருகி, கேசரி பதத்துக்கு ரவை வந்த பிறகு, நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் (உலர் திராட்சை) சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

இதில் பாதாம் பருப்பு, பிஸ்தா, செர்ரியை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

நெய் மைசூர்பாகு ரெசிபி

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

நாவில் வைத்ததும் கரைந்து போகும் நெய் மைசூர்பாகு ரெசிபி:

தேவையானப் பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 21/2 கப்
நெய் - 2 கப்

செய்முறை

1.கடலைமாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். 

2.நெய்யை சூட வைத்து கரைத்துக் கொள்ளவும். 

3. அடி கனமான ஒரு பாத்திரத்தில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி சர்க்கரையை போட்டு கம்பி பாகு வரும் வரை கொதிக்க விடவும். 

4. சர்க்கரை பாகு வைத்த உடனே பாகில் சிறிது சிறிதாக மாவையும் நெய்யையும் சேர்த்து கட்டி விழாமல் கிளறவும். அடுப்பை லோப் பிளேமில் வைத்து தான் மாவை பாகில் இட்டு கிளற வேண்டும். 

5.இப்படியே மாவையும் நெய்யையும் மாறி மாறிச் சேர்த்து கிளறவும். 

6. நெய்யுடன் மாவு பொங்கி வரும் சமயத்தில் அடுப்பை ஆஃப் செய்து மீதமுள்ள நெய்யையும் சேர்த்து கலந்து நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்த தாராஸ் கிச்சன் ஸ்டைலில் நெய் மைசூர் பாகு ரெடி. 

7. மைசூர் பாகு ஆறியதும் உங்களுக்கு பிடித்த வடிவத்தில் துண்டுகள் இட்டு முந்திரி பாதாம் பிஸ்தா தூவி கொடுக்கலாம் பிரண்ட்ஸ். 

8. இந்த மைசூர் பாகு வாயில் வைத்ததும் கரைந்துவிடும். 

பி.ற கு:

நெய் அதிகம் வேண்டாம் என்றால் குறைத்துக் கொள்ளலாம்.

பால் பேடா எப்படி?

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

பால் பேடா எப்படி? 


தேவையான பொருட்கள் :

கெட்டியான பால் - 200 கிராம்
பால் பவுடர் - 3/4 கப்
நெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
குங்குமப் பூ - 3-4


செய்முறை:

அடுப்பில் கடாயை வெச்சு மிதமான சூட்டில் நெய் சேர்த்துக்கோங்க.. அது கூட பால் பவுடர், கெட்டியான பாலை சேர்த்துக்கோங்க.... 2-3 நிமிசம் நல்லா கிளறிவிடுங்க.. அடி பிடிக்காம கவனமா இருக்கணும்..

அது கூட ஏலக்காய் பொடி சேர்த்துக்கோங்க.... (உங்களுக்கு பிடிச்சா ஏலக்காய் பொடி சேர்த்துக்கோங்க). நல்லா கிளறி விட்டு பாத்திரத்தில பக்கவாட்டில ஒட்டாம பார்த்துக்கோங்க. பால் கெட்டியாகி கோவா போல திரண்டு வரும். சீக்கிரமா அடிபிடிச்சிடும். அதனால கைவிடாம கிண்டிகிட்டே இருங்க. முடிஞ்ச அளவுக்கு அடி கனமான Non - Stick கடாய் பயன்படுத்துங்க. சரியான பதம் வந்ததும் அடுப்பை அனைச்சுட்டு 5-10 நிமிசம் நல்லா ஆற வெச்சுடுங்க...

இந்த நேரத்துல இது கூட குங்குமப் பூ சேர்த்துக்கோங்க.... 

உங்களோட உள்ளங்கைல வெச்சு சின்ன சின்ன பந்து உருண்டைகளா உருட்டிட்டு, அப்படியே பேடா வடிவத்துல தட்டிக்கோங்க.

நீங்க விருப்பபட்டால் பேடா நடுவில காஞ்ச திராட்சை வெச்சுக்கலாம்...

அப்படியே ஒரு தட்டுல நீங்க செஞ்ச பேடாவ வரிசையா அடிக்கி வெச்சி பாருங்க... இதையெல்லாம் நீங்களா செஞ்சீங்கன்னு ஆச்சர்யமா இருக்கும்.