வியாழன், 19 பிப்ரவரி, 2015

மரணவலியினும் கொடுமை



மரணம் வரை இருப்பாயா என்றாய்
இதோ நான் மட்டுமே இருக்கிறேன்
இன்னும் உன்னை தேடிக்கொண்டு

உன் மொழிகளில் எதை மறக்க
என எனக்கு தெரியவில்லை
மறக்கவும் முடியவில்லை

நீ பேசிய வார்த்தைகளெல்லாம்
வேதவாக்காய் நான் என் இதயத்தில்
வைத்து இன்னும் பூஜிக்க உனக்கு
மட்டும் என்னிடம் எப்படி சலிப்பு வந்தது
எந்த உறவும் உன்னை கடந்து
என் நினைவை தொட அனுமதிக்காமல் நான
அதிகபட்ச எதிர்பார்ப்பு
உன் அன்பான வார்த்தைகள் மட்டுமே

என்னை அழவைக்காதது நீ மட்டுமே
என பெருமிதமாய் கழிந்த நாட்கள் போய்
அழதா நாட்கள் இல்லை என்ற நிலை.

சின்ன சின்ன சந்தோஷங்களில்
என் கண்ணாடி கனவு மாளிகை
பல நேரம் நீ சொல்வது பொய்
என அறியும் போது உடைந்து
சிதிலமாகும் இதயம் இருப்பினும்
இணைத்திடுவேன் அதனுள்ளே நீ
வாழ்வதால்

எவர் வந்தார் குறுக்கே?
எது தடுக்கிறது உன்னை?
ஏன் மாறினாய் இப்படி?

அன்று நீயாக தந்த அன்பும் அக்கறையும்
இன்று நானாய் கேட்டு வாங்குவது
மரணவலியினும் கொடுமை        
Previous Post
Next Post

0 Comments: