செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

இரவு வணக்கம் கவிதைகள்


இரவின்  மயக்கத்தில் மொட்டுகளும் உறங்கும்
உங்கள் மனதும் உறங்கட்டும்
காலையில் புன்கையுடன் மலர
என் இனிய இரவு வணக்கம்..


இரவின்  மயக்கத்தில் மொட்டுகளும் உறங்கும்
உங்கள் மனதும் உறங்கட்டும்
காலையில் புன்கையுடன் மலர
என் இனிய இரவு வணக்கம்


வீழும்  ☆நட்சத்திரங்களாய் இன்றி
வாழும் ○ நிலவினை போல் கொண்ட நட்பே..
நல் இரவு வணக்கம்


இரவென்னும் கவிதையில்
நிலவும் ☆ நட்சத்திரங்களும்
தேன் சுவை சந்தங்கள்
கவிதையின் பரிசாக இமைகளை தழுவும்
இனிய உறக்கம்
இதமான கனவுகளுடன்
இரவு வணக்கம்


விடியும் என்றிருப்போருக்கு...
விடியலை காட்ட காத்திருக்கும் பொழுது!
விடியாதென்று இருப்போருக்கு...
விடியலை மீண்டும் தேட வைக்கும் பொழுது!
நடந்த நாள்
நல்லதாயிருக்க நள்ளிரவு;
இல்லாத போது மறக்க
இறைவன் தரும் நல்லிரவு!
இனிய இரவு வணக்கம்..!!


நீ தூங்க சிறந்த இடம் என் இதயம் என்றால், உனக்காக என் இதயம் துடிப்பதையும் நிறுத்திவைப்பேன் நீ விழிக்கும்வரை...!
இனிய இரவு வணக்கம்...!!!


நிலவு விண்ணை தொடும் நேரத்தில்...!
நட்சத்திரங்கள் கண் சிமிட்டும் இனிய வேளையில்...!
தூக்கம் உங்கள் கண்களை தழுவும் முன்...!
என் இனிய இரவு வணக்கம்...!


உறக்கத்தில் என் விழிகள் மூடினாலும்,
என் இதயத்தில் உன் நினைவுகள்
மலர்ந்து கொண்டே இருக்கும்...!
இனிய இரவு வணக்கம்!!!


பகலுக்கு பாய் சொல்லி...
இரவுக்கு ஹாய் சொல்லி...
தூக்கத்திற்கு வெல்கம் சொல்லி..
கனவு என்னும் மலர் பறிக்க
போகும் உங்களுக்கு இரவு வணக்கம்...!


என்றோ ஒரு நாள் நிரந்தரமாக உறங்குவதற்காக நாம் அன்றாடம் எடுக்கும் பயிற்சி தான் தூக்கம், அதன் முதலும் முடிவும் நம்மில் யார்க்கும் தெரியாது...
இனிய இரவு வணக்கம்..!!


இமைமூடி நீ உறங்கு!
உன் விழி வாசலில் நான் காவல் இருப்பேன்.
இந்த இரவு இனிய இரவாகட்டும்..!
இனிய கனவுகளோடு...
இரவு வணக்கம்...!


தொட்டு பறிக்கலாம் மலரை,
தொடாமல் ரசிக்கலாம் நிலவை,
தொட்டும் தொடாமலும் ரசிப்போம்
இனிய கனவை...!
இனிய இரவு வணக்கம்...


அமைதியான இரவு..!
அம்சமான நிலவு..!
அர்ப்பரிக்கும் நட்சத்திரங்கள்..!
அசரவைக்கும் பனிக்காற்றில்,
அசந்து தூங்கும் என்
நண்பனுக்கு..!
இனிய இரவு வணக்கம்..!!


நிலவே நீ பாடு தாலாட்டு
இங்கே ஏராளமானோர்
வீதியில்தான் உறங்குகின்றனர்!!!
இனிய இரவு வணக்கம்......


நிலாப் பெண்ணே! நீ குளிரை
ஆடையாகக் கொண்டாயோ!
உன் பார்வையில் தேகமெங்கும் சில்லிடுகிறதே!
என் கனவும் உன்னோடு உறைகிறதே!!!
இனிய இரவு வணக்கம்!!!


சில்லென்ற சாரல் காற்றில்
சிலிர்க்குதே மனசு!
மழையின் வருகையை
முன்னறிவிப்பு செய்கின்றன
கார்முகில் கூட்டங்கள்..!
ஜன்னலைத் திறக்கும் போதிலே
முகத்தைத் தழுவி இனிமையளிக்கிறது
இரவின் குளிர்த்தென்றல்...!
மழைத்துளிச் சிந்தும் சத்தம்
எத்தனையோ இசைக்கருவிகளை
எளிதில் வென்று செவி நிரப்புகிறது!!!
இனிய இரவு வணக்கம்..!!


இருள் திரையாலும் மறைக்க இயலாத ஒளிர்மதி இவள்..!
இருளின் அழகை இமைகளில் காட்சியாக்குகிறது..!
அழகிய இரவை அமைதியுடன் சேர்த்து ரசித்திடுங்கள்!!!
இனிய இரவு வணக்கம்...!


நிலவின் ஒளியில் நீ உறங்க...!
விண்மீன் உன்னை கண்டு கண்சிமிட்ட...!
தென்றல் உனக்கு தாலட்டுபாட...!
என் நண்பனே நீ கண்ணுறங்கு!!!
இனிய இரவு வணக்கம்...!


அந்தி வானம் சிவக்கையில்...
இவள் ஒளிர்கிறாள்!
அடிவானில் முத்தமிட்டு,
நிலவை வரவேற்க்கும் கதிரவன்!
இரவெனும் கவிதையின்
நாயகி இவள்!
நட்சத்திர பிருந்தாவனத்தில்,
எழில்மிகு அரசி அவள்..!
இனிய இரவு வணக்கம்
குளிர் தென்றல் காற்றில்
நிலவு இளைப்பாரும்...
நிலவின் அழகில்
கவிதைகள் வழிந்தோடும்...
அன்பான இதயங்களின் வருகையால்,
கனவுகளால் நிறையும் விழிகள்...
அதிகாலை வரை
இரவை அழகாக்கும் நட்சத்திர விரிப்பு...
இனிய இரவு வணக்கம்..


பனி துளிகள்
மறைந்து கொண்டு இருக்க...
உன் நினைவுகள் என்னுள்
மலர்ந்து கொண்டு இருக்க...
என்னை நேசிக்கும்
அன்பான உள்ளத்திற்கு
இரவு வணக்கம்...!


இனிதாய் தாலாட்ட தென்றல் தவழ்ந்துவர
இதமான ஒளிதந்து நிலவு குளிரூட்ட
இன்பமான இரவு உனக்காக விழித்திருக்க
இனிய கனவுகளோடு நட்பே நீ தூங்கு!...
இனிய இரவு வணக்கம்! 


விழிகள் உறங்க அழைத்தாலும்
மனங்கள் உறங்க மறுக்கிறதே
இமைகள் மூடிக்கிடந்தாலும்
இதயம் மூடமறுக்கிறதே!
நாளைய வேலைகள் கிடக்கிறதே!
மீண்டும் நாளை சந்திப்போம்!
அதுவரை உடல்கள்
சாயட்டும் படுக்கையில்..
நேசித்த நினைவுகள்
மனதில் ஓடட்டும் விடியும் வரையில்..

பொது கவிதைகள்

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

பெண்ணே நீ விழித்தெழு
இருளைக் கிழித்தெழு
அறியாமையைத் தகர்த்தெழு
அறிவியலை இழுத்தெழு
கண்ணீர் அருவிகள்
தொலைத்தெழு.......

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

அடிமைத் தனத்தை உடைத்தெழு
அன்பிற்கு அடி பணிந்திடு.. வம்பிற்குத் தலை நிமிர்ந்தெழு.......

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

தலைக் கனத்தை கைவிட்டு
நம்பிக்கையை கையில் எடுத்து
உயர்ந்த இடத்தில் நிலைத்து நில்.....

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

அதட்டல் மிரட்டல் உருட்டல் எல்லாம்
புரட்டிப் போட்டு படிப் படியாக படிப்பில்
உயர்ந்து நில் .......
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

ஏற்ற தாழ்வுகளையும் முரண்பாடுகளையும்
மடக்கி கசக்கி சுறுட்டிப் போட்டு மகளிராலும்
முடியும் என்று நிரூபித்து விடு நல்ல
செயலில்...............
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

நன்மைக்குத் தன்னடக்கம், நாவடக்கம் இவற்றைத்
துணையாக எடு ....
தீமைக்குச் சுட்டெரிக்கும் விழி கொண்டு
வெகுண்டு எழு ...........
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

மனையாள மட்டுமே மனையாள்
என்ற தவறான கறையை கரம்
பிடித்தவன் நெஞ்சில் இருந்து
துடைத்து தூக்கிப் போடு........
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

அன்பாலும் ஆதரவாலும் எடுத்துக் கூறி
வளைத்துப் பிடி உன் பிடியில் கணவனை
மடி கொடுக்க மட்டும் துணைவி இல்லை
பிடி கொடுக்கவும் என்று புரியவை.........
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

புன்னகையில் பெண் ஒரு மலர்
தென்றலாகும் போது ஒரு மங்கை
கொன்றலாக தடவும் போது அவள்
ஒரு நல்ல துணைவி பொறுமை
இழந்தால் புயலாக மாறும் கண்ணகி என
உணர வை ஆண் ஆதிக்கம் கொண்ட
சிலருக்கு..............
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

ஆணும் பெண்ணும் ஓர் உயிரே
பிறப்பும் இறப்பும் ஒன்றே என்று
உணரவை ஆனால் ஆணவத்தில்
ஆட்டம் போடாதே பெண்ணே
அதைஉன் உள்ளத்தில் இருந்து
தூக்கிப் போடு கண்ணே...........
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

பாரதி கண்ட கனவு கலையாமல்
சிலையாகாமல் உயிர்த்தெழ வேண்டுமாயின்
நீ பாரதிப் பெண்ணாக விழித்தெழ
வேண்டும்.....
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

உலகில்......
வென்றவர்கள் ...
பட்டியலை விட ...
தோற்றவர்கள் ....
தோற்று கொண்டிருப்பவர்கள் ...
பட்டியலே அதிகம் ....!!!
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

தோல்வி என்பது ...
வெற்றியின் கருவறை .....
உரு பெற்றவுடன் தான் ...
பிறப்பு வருவதுபோல் ....
தோல்விகள் நிறைந்ததே ....
வெற்றி ....!!!
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

ஒன்றை நினைவில் வை ...
நீ தோற்றது- இன்னொருவனுக்கு ....
அனுபவம் .....
அவனுக்கு வெற்றியின் வெளிச்சம் ...!!!
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

ஆசையும் விருப்பமும்
அளவோடு இருந்தால்
அது அழகு..!
அளவுக்கு மீறினால்
அது அழிவு..!!
-ஸ்ரிவிஷா
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

சாதிகள் இல்லையடி பாப்பா
என்ற பாரதிக்கு தெரியவில்லை
இந்த மக்கள் சாதிகளே
தம் உயிராகக் கொண்டு
உயிரை விடுகிறார்கள் என்று..!
-ஸ்ரிவிஷா

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

இறந்த காந்தி மீண்டும்
பிறந்தால் கிடைத்த
சுதந்திரத்தை திருப்பி
கொடுத்து விடுவார்...!
ஊழலால் அடிமையாகிய
மக்களுக்கு இனி
சுதந்திரம் எதற்கு என்று..!!
-ஸ்ரிவிஷா
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

பிறக்கும் குழந்தைக்கும்
கற்று தருகின்றனர்
இக்கால மக்கள் அவர்கள்
என்ன சாதி, மதமென்று..!
-ஸ்ரிவிஷா
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

தாய்க்காவும் தந்தைக்காவும்
சண்டை போடலாம்
ஆனால் மததிற்காகவும், சாதிக்காவும்
சண்டைப் போட்டால்
இறுதியில் சண்டை போட
நீயும் இருக்கமாட்டாய்..!
-ஸ்ரிவிஷா
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

மனிதனை படைத்த கடவுள்
ஒருமுறை பூமி வந்தால்
அவனும் ஏந்துவான் கையில்
பிச்சை பாத்திரத்தை,
அம்மா, தாயே என்றல்ல..!
சாதியே, மதமே, என்று..!!
-ஸ்ரிவிஷா
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

தன்னம்பிக்கை கவிதை:

தன்மேல் தனக்கிருக்கும்
ஆளுமையின் உச்சம்
தன்னம்பிக்கை!

தன்மானம் பிழைத்திடவே
தக்கவைக்கும் மிச்சம்
தன்னம்பிக்கை!

எல்லாமே தொலைத்தபின்னும்
எஞ்சியிருக்கும் சௌபாக்கியம்
தன்னம்பிக்கை!

ஜீவனே போனபின்னும்
உயிர்த்தெழும் வைராக்கியம்
தன்னம்பிக்கை!

அனுதாபப் பார்வைகளை
அறுத்தெறியும் கூர்வாள்
தன்னம்பிக்கை!

அனைத்துமிங்கு சாத்தியமே என
அறிவித்திடும் சுய அறிவால்....
தன்னம்பிக்கை!

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

ஒரு பெண் எப்போதெல்லாம்
அழகாகிறாள்?
.
.
1.அதிகாலை பனியில்
நனைந்த படியே கோலம்
போடும் போது.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
.
2.தாவணிக் கோலத்தில்
சுபநிகழ்ச்சிகளில் அங்கும்
இங்கும் வளம் வரும்போது.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
.
3.பேச்சில் ஆங்கிலம்
கலக்காமல் ,
படிக்காதவர்களிடம்
அவர்களுக்கு புரியும்
விதத்தில் தெளிவாக பேசும்
போது.
.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
4.அழகை திமிராக
காட்டாமல், ஆண்களை
மதித்து நடக்கும் போது.
.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
5.யார் மனதையும்
புண்படுத்தாமல் , தன்
மனதில் இருப்பவனின் கை
பிடிக்க எவ்வளவு நாள்?
என்றுக் கேள்வியே
கேட்காமல் காத்திருக்கும்
போது.
.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
6.அச்சப் பட வேண்டிய
இடங்களில் மட்டும்
அச்சப்பட்டு கம்பீரமாய்
இருக்க வேண்டிய
இடங்களில் கம்பீரமாய்
இருக்கும் போது.
.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
7.காதில் இருக்கும் கம்மல்
தன் பேச்சுக்கு தாளம்
போடும் படி, தலையை
ஆட்டி ஆட்டி பேசும் போது.
.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
8.தம்பி தங்கைகளுக்கு
இன்னொரு தாயாய் இருக்கும்
போது.
.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
9.தந்தையின் குடும்ப
கஷ்டத்தில் பங்கெடுத்துக்
கொள்ளும் போது.
.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
10.ஆபாசமில்லாத
உடையணிந்து அழகை
எப்போதும் மறைத்தே
வைத்திருக்கும் போது.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
.
11.ஆண்கள் கூட்டத்தை
கடக்கும் போது,நம்மை
ஏதேனும் சொல்லி
கிண்டலடித்து
விடுவார்களோ என்று
மனதில் ஆயிரம்
கேள்விகளை சுமந்த படியே
செல்லும் போது.
.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
12.சமைக்கத் தெரியாது
என்பதை பெருமையாக
சொல்லாமல்,
அன்னமிடுவதில்
அன்னையாய் இருக்கும்
போது.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
.
தன்னலமில்லாத ,
செயற்கைத் தனமில்லாத
எல்லா பெண்களுமே அழகு
தான்❀❀❀❀❀❀❀❀❀❀.

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

கனவு ஒன்று கண்டேன் தோழா
அதில் வானமும் பூமியும்
மாறுவது போல..!
அதிலும் மாறாத ஒன்றை மட்டும் கண்டேன்
சாதி, மதம் என்ற குப்பைகளை..!!
-ஸ்ரிவிஷா

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!!

ஆழக் கிணற்றிற்குள் தெரியும்
நிலா போலவே
தெரிந்துக்கொண்டேயிருக்கிறது
மனதுள் உன்முகம்,
நினைவுச் சிறையிலிட்ட உன்
மரணமொன்றே
வேகமாய் தள்ளுகிறது எனை
விதவையெனும் வார்த்தைக்குள்,
விழுந்ததும் மண்ணள்ளிப்போடும் சமூகம்
மீண்டும் வாழ
இடம் தராத மனதிற்குள் மட்டுமே
சிறைவைக்கிறது என்னை,
சிரிக்கவும் அழவும் முடிகிற எனக்கு
பொட்டையும் பூவையும் தந்தாலும்
வண்ணப்புடவையின் மீதும் விதவை விதவையென்றே
எழுதுகிற மனசு அசிங்கமானது,

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

பெண் அழகானவள்
உடம்பு சுகமானது
அதை ஏற்கும் மனசு ஒன்றெனப் போதித்ததில்
முளைத்துவிட்டது அசுரச் செடிகளும்,
தாலியை வேலியென்று கற்ற எனக்கு
அது இல்லாதபோது நுழையும்
மிருகங்களைத் துரத்த
இன்னொரு மிருகம் வாய்ப்பது அவசியமற்றது,
மனதின் ஒழுக்கம் வெல்லும் திசையில்
மீண்டுமொரு பூ எனக்காகப் பூக்குமெனில்
பூக்கட்டுமென நடக்கும் தெருவில்
நீ மட்டுமே தெரிவதை மறைக்கத் தோற்கிறேன்;
மறுமணத்தை எண்ணாததும்
துறவறத்தை தீண்டாததும்
உன் அருகாமையை மறக்காததும்
இயல்பு எனில் யாரை இங்கு நான் நோக,
ஆணை பெண் வதைப்பதும்
பெண்ணை ஆண் வதைப்பதும்
மனிதத்தைக் கொல்லுஞ் சடங்கென்று ஒரு
சமபுரிதலை ஏற்படுத்த இன்னும் நிறையப் புனிதர்கள் தேவை,
இனி வாழ்வதற்கென்று இவ்வுலகில்
எங்களுக்கென்று ஒன்றுமில்லை,
நினைவுகள் கொடியது
நாளைக்குப்பின் வந்துவிழும்
வார்த்தைகள் நஞ்சுடையது
எங்களின் வலிகளைத் தொலைக்கும் மரணமேனும் வேண்டும்,
அல்லது உனை மறக்கச் செய்யும் ஒரு
மனிதர் வேண்டும,
இரண்டையும் தந்திடாத வார்த்தை "விதவை" யெனில்
அப்படிச் சொன்னவரை கொல்!!
-வித்யாசாகர்
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

தொட்டில் ஆடாத வயிறு☃.. தாலிச் சுமையை தாங்கித் தாங்கி வயதைத் தொலைக்கும் மாசற்றவள்; பிறக்கையில் பாவம் செய்தேனென்று பேசப்பட்டாலும் புரிதலில்லா மண்ணிற்குக்கொய்த மலரைப் போன்றவள்; எச்சில் உமிழ்ந்த முகந் துடைத்து எள்ளி நகைப்போரை தினங் கடந்து வாழப் பழகும்-வலிமையானவள்.. செய்தக் குற்றம் தேடி தேடி செய்யா தெய்வப் பாதம் நாடி தொட்டில் ஆடும்-வயிறு கேட்பவள்; கெஞ்சிக் கெஞ்சியழுங் கண்ணீரில் பஞ்சுத் தலையணை தினம் நனைய கொஞ்சு(ம்☃)சுகம் மறந்து மறந்தே வருடக் கணக்கில் வரண்டுப் போனவள்; பிறக்கும் வயிறு பற்றியெரிய பெற்ற வயிறும் வளர்த்தத் தோளும் பாதி பங்குக்குச் சுமக்க ஒற்றைக் கூப்பில் அம்மாவாக பத்துமாத பிச்சைகேட்பவள்☃; பாவம் அனாதைக் குழந்தையென்று☃ வாங்கி வளர்க்க ஆசைப்பட்டும் தத்துப் பிள்ளைக்கு தாயென்றுச் சொல்லும் ஒற்றை வார்த்தைக்கு பயந்துப் போனவள்; நடக்கும் பிறக்கும் நாளே போ போவென்று நாளும் கணவனைத் தாங்கி தாங்கி கிடைப்பதையெல்லாம் தின்றுப் பார்ப்பவள்☃; கொஞ்சம் விசமேனும் கொடுத்து உண்டுப்பார் தொட்டிலாடுமென்றால் அதையும் சிரித்துக்கொண்டே தின்றுதீர்க்க மனசெல்லாம் வலி சுமப்பவள்☃; விளையா மண்ணின் வாசம்போல-பிறவாவயிறும் பாவி கணக்கு, பிறந்த பாவம் ஒழியட்டுமென்று தினம் தினம்- தனை மனச்சிலுவையில் சுமக்கும் தாயுமனவள்!! -வித்யாசாகர்

இயற்கை:
கதிர் தோன்றி மறையும்,
கரு ஊன்றி வளரும்,
அதிகாலைக் குயில்களும்
அழகாகக் கூவும்.

தென்றலும் வீசும்,
தேய்பிறையும் பேசும்,
இரவு விண்மீன்களும்,
எப்போதும் ஒளிரும்.

வயல்களும் செடிகளும்,
வானுயர் மரங்களும்,
நமக்காக வாழ்ந்து,
நன்மைகளை ஈயும்.

செயற்கை உரங்களில்,
சீரழிந்த வனங்களில்,
இயற்கை அன்னை,
எப்படித்தான் வாழும்?

இறுதியாக ஒரு கவிதை எழுது என்றால்
உயிர் மூச்செடுத்து ஒரு கவிதை எழுதுவேன்
மகிழ்ச்சியாக மரணத்திலும், தமிழ் வாழ்கவென்று !

படிப்பு முடிஞ்சதும் பொண்ணுங்க கல்யாணம் பண்ணிட்டு ராணி மாதிரி ஊர்ஊரா சுத்துறாங்க
பசங்கதான் வேலைதேடி தெருத்தெருவா சுத்துறாங்க
என்னடா டிசைன்!!

ஜெயிக்கிறதுங்கிறது
வாழ்க்கையில்
ஏழைமக்களுக்கு ஒரு வேளை சாப்பாடாகவும்,
பணக்காரனுக்கு பல கோடி
சொத்தாகவும் உள்ளது.

தெருவை கடந்தேன்
ஜாதியைகேட்டான்
மாவட்டத்தை
கடந்தேன்
ஊரை கேட்டான்
மாநிலம்கடந்தேன்
இனமொழியை கேட்டான்
நாட்டை கடந்தபிறகே
இந்தியன் ஆனேன்!


ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம் !!

நீச்சல் .....
அடிக்க தெரிந்தவனுக்கு....
கடல் எவ்வளவு ஆழம் ....
அறிய தேவையில்லை ,.....!!!

வாழ்க்கை ரசிப்பவனுக்கு, .....
பிரச்சனை ஒன்றும் பெரிதில்லை !!

பிரச்சனை இல்லாதவன் ....
வாழ்க்கை இயந்திர மனிதனை ...
போன்றது - இயக்கம் இருக்கும்....
உணர்வு இருக்காது ....!!!

என் மனைவி....

ஒரு வேளை
எனக்கு முன் என் மனைவி இறந்தால்
அவளுக்காக உலகிலையே புதிய கோயில்
ஒன்றைக்கட்டுவேன் ..இதுவே மனைவிக்கு கட்டிய மனைவி மஹாலாகஇருக்கும் ..
ஆனால் அந்த கோயிலை ....!!!

நான் தான் அமைப்பை வடிவமைப்பேன்
நான் தான் கல் உடைப்பேன்
நான் தான் மண் சுமப்பேன்
நான்தான் கட்டி முடிப்பேன்
நானே அழகு பார்ப்பேன்...!!!

அந்த கோவிலில் என்குடும்ப உறுப்பினரை
யாரையும் வணங்க விடமாட்டேன்,
அவர்கள் கோவிலாக பார்ப்பார்கள்
நான் கடவுளாக பார்க்கிறேன்.
என் மீதிக்காலத்தை அங்கேயே
உண்ணா நோன்பிருந்து இறந்து விடுவேன் ...!!!

மகிழ்வோடு வாழ்..
நான் கோபப்படாமல் இருப்பேனாக.
நான் வெறுப்பில்லாமல் இருப்பேனாக.
நான் பொறாமைப்படாமல் இருப்பேனாக.
நான் மனக் கவலையின்றி இருப்பேனாக.
நான் உடல் நலத்தோடு இருப்பேனாக.
நான் அமைதியோடு வாழ்வேனாக.
நான் மகிழ்வோடு வாழ்வேனாக.
நான் உழைத்து கொண்டே இருப்பேனாக ...
நான் அறிவை தேடிக்கொண்டே இருப்பேனாக ...
நான் தியானித்துக்கொண்டு இருப்பேனாக ....
நான் காதலித்து கொண்டு இருப்பேனாக ....
மகிழ்வான வாழ்வுக்கு இதை ....
தொடர்ந்து செய்வேனாக ....!!!

வருமானம்

உன்னால் ஏதேனும்( வருமதி ) இருந்தால் தான்
உனக்கு( மானம் ) இருக்கும் என்பதைத்தான் வருமானம்
என்கிறார்களோ ...

அம்மாவின் கருவறையில் பிறந்து
அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்த
என்னை மறுபடியும் தாலாட்ட வந்தவள்
- மனைவி
ஓரே ஓரு முறைதான்

எனினும்

உன் உன்னத நிழல்

என்மீது பட்ட போதுதான்

நான் ஓளியூட்டப்பட்டுக்

கவிஞனானேன்!

ஓரு

கிணற்று தவளையின்

கூச்சலைப் போல

என்

இதுவரையிலான வாதங்கள்.. !

தேடல்கள் சுணங்கி

மூளையை துருப்பிடிக்க

வைக்கும் என்னின்

இதுவரையிலான முயற்சியை

மூட்டை கட்டலாமா

என யோசனைகள்

விரிய ஓரு

விடியல் கிட்டுமென நம்பிக்கையுடன்..!!

தவிப்பு
எப்போதும்
இருந்து கொண்டு தான்
இருக்கிறது...
ஆணுக்கு
தன்னை
பிடிக்க வேண்டுமே
என பெண்ணுக்கும்,
பெண்ணுக்கு
தன்னை
பிடிக்க வேண்டுமே
என ஆணுக்கும்......!!

ஏமாற்றம்
----------------
முதலில்
சின்ன முள்..
பின் பெரிய முள்...
இன்னும் பெரிய
முள்ளை தொட்டு
விட முடியுமென
ஒவ்வொரு வினாடியும்
ஏமாந்து கொண்டிருக்கிறது
வினாடி முள்.....

நான்
செய்யும் எல்லா
செயல்களையும்,
நீ
கண்காணித்து
கொண்டிருப்பதாக
நினைத்தே
செய்கிறேன்....!!!
இவ்வுலகில்
பணத்தை கொண்டு
எல்லாவற்றையும்
வாங்கி விட
முடியாது....!
இருப்பினும்,
இவ்வுலகில்
அனவருக்கும்
புரியக்கூடிய
மொழி,
"கரன்சி"

ஹைக்கூ கவிதைகள்


இருக்கும் நொடியும்
இழக்கும் நொடியும்
உனக்காக உன்னைக்
காணவே.

காலம் கவிதை பாடும் போது நாம் இசை அமைத்தால் இசை விருந்து இசை அமைக்கா விட்டால் இசைக்கு நாம் விருந்து  - நேரம்
- தேனி முத்துகுமார்

நீ இன்றி போனால்
உயிர் இன்றி தவிக்கும்
நாம் கொண்ட காதலும் இங்கே !

அளவிற்கு அதிகமாக அன்பு எல்லாம்
அளவில்லாமல் அழ வைக்கும் என்று
சொன்னாலும் கேட்பதில்லை மனம்!

காயம் இன்றி கூட கண்ணீர் உண்டு
உண்மையான அன்பை உணரும்போது...!

உன்னிடம் உள்ளது உண்மை அன்பென்றபோது
தவறாமல் கிடைக்கும் வேதனைகள் ...!

மனமெல்லாம் "மழை" வரும் வானிலை
என்னை கண்டு உன் புன்னகை வெளிவரும்போது!

உன்னைப் போலவே...அழகாக இருக்கிறது, உன் மௌனத்திற்கான ஒவ்வொரு காரணங்களும்!

நாம் யாரென சொல்ல
உன்னை என்னிடம் சேர்க்க
தேடி வந்தது தான் காதல்...!

புன்னகையை கட்டி வைக்க வெட்கமும் உண்டு
சோகத்தை தீர்த்து வைக்க கண்ணீரும் உண்டு
இரண்டும் வலிமைதான் பெண்களுக்கு!

இதயத்தில் அவளையும்❤...
அவள் தாய்மையில் என் உயிரையும்❤ சேர்த்து
உணர்வாக்கிகொண்டு சுமக்கும் எனக்கும்முண்டு
பிரசவ வலிகள் மனதிற்குள்❤!
-ஆண்கள்☻

முத்தமிட முயல்கின்ற மழைக்கும்
எண்ணிக்கையை அதிகமாக்க முயற்சிக்கும் எனக்கும்
காதலின்றி வேறொன்றுமில்லை ...!
-மழைகாதலி.

முதல் காதல் கடிதம்:

முதல் காதல் கடிதம்.....
புதிதாய் படிக்கிறேன்..
நூறாவது முறையாய்...

தூக்கம் வராமல்
முதலாளி...
தூங்கி வழியும்
வாட்ச்மேன.........முரண்.

தாடி ...

உன் காதலின் அடையாளமாய் கால தேவன் எனக்கு இட்ட கருப்பு தழும்பு ...

கிரிக்கட் காதல்
நானும் நீயும் ..
அவ்வப்போது முரண் பட்டாலும்
எமக்குள் உறவுதான் இருந்தது

மூன்றாம் நபர் குறுக்கிட்டதால்
அவுட்டாகி விட்டோம்
கிரிக்கட்டை போல...

கிறிஸ்மஸ்
கடவுளுக்கும் கூட
உன் மேல் தான்
பிரியம் அதிகம்...

பின்னே,
வருடத்தில் 365 நாட்களிருக்க
அவர் பிறப்பதற்கும் உன்
பிறந்த நாளையே
தேர்ந்தேடுப்பாரா என்ன!

- கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்

முத்தம்
எப்போதும் நான்
கோபப்படாமலேயே
இருக்க விரும்புகிறேன்...

நீ பூக்களுக்கு
முத்தமிடுவதைப்
பார்த்த போதும் கூட...

ஹைக்கூ
வெண்மேகம்
மழை தூறுகிறது... பாட்டியின்
தலை துவட்டல்...

கொலுசு
♪♪♪♪♪
உன் இதய திருடன்
நான் இருக்கும் போதும்
கொலுசு வேண்டுமாடி
உனக்கு....?♥♥
என்னுடன்
நீ இருக்கும் போது♥♥♥
ஏன் உன் கொலுசு
சத்தம் போட்டு
ஊரை கூட்டுகிறது....???
ஏன்...??
அது உன்னுடைய கொலுசு
என்பதாலா,
அல்லது
நான் திருடன்
என்பதாலா.....??????

பெண்மை
என்ற பெயரை அழகாக்கும்
பருவம் தான்
‪#‎தாய்மை‬

சில குப்பை தொட்டிகளுக்கு கிடைத்த வரங்கள் கூட பல பெண்களுக்கு கிடைக்கவில்லை ‪#‎தாய்மை‬

தீபாவளி

ஒளிகளின் வரிசை தீபாவளியெனில்,
உன் பார்வையும்
தீபாவளிதான்!

குழந்தை மனம்...

அனைவரும்
படிக்கவேண்டிய
மிகப்பெரிய காவியம்.

தாய் பாசம்....

இரும்பு சிறையில் 
இருந்துகூட தப்பி விடலாம் - ஆனால்
அவள் விழி சிறையில் இருந்து தப்ப இயலாது

பசி

சமூகப்பணியில் மாடுகள்
நகரத்துச் சுவர்களில்
ஆபாச சுவரொட்டிகள்

சொல்வதெல்லாம் உண்மை!

"பெட்ரோலைச் சேமிக்க சிறந்த வழி..
கேர்ள் ஃபிரெண்ட்
இல்லாமல் இருப்பது!"

தீ

தந்தியை விட
வேகமாகச் சென்றடைகிறது
வதந்தி!

இறுதிப் பூக்கள்...!

சாலை முழுவதும்
பூக்கள்...
வரவேற்க அல்ல
வழியனுப்புவதற்கு

அடடே..!
மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
கூட்டக் கூட்ட
குறைந்து போனது
துடைப்பம்!

முழு நிலவு....

பொட்டு
மூன்றாம் பிறை
நெற்றியில்
முழு நிலவு

தாஜ்மகால்....

மனைவி இறந்தற்காக
கணவன் கட்டிய
வெள்ளை புடவை

முத்தம்.....

நான் எதிர்பாராத நேரங்களில்
அவள் தரும் - முத்தம்
எனக்கு ஆஸ்கர்

என்னுள் நீ......

என் அந்தாதி நீதான் - இதில்
எங்கே தேடுகிறாய் என்னுள்
உன்னை!!!!!!...........

மழை.....

வானம் அழுகிறது.....
கண்ணீரை ஏந்திய மண்..
சிரிக்கிறது.....

அன்பு

அறிமுகப்படுத்த அன்பு தேவையில்லை....
அன்பை காட்ட அறிமுகம் தேவையில்லை....

மீன் தொட்டி

உன் மீன் தொட்டிக்குள்
என் மனது - பராமரிப்பது
நீ என்பதால் மட்டும்!

அம்மா...

இப்பொழுதே மரிக்க தயார்,
மறுஜென்மமும்
என் ஜனனம்
உன் கருவறையில் என்றால்!!

செய்யாதே!!!

அன்பே! நம்மை கண் இமைகளோடு ஒப்பிடாதே
கண்கள் இமைக்கும் வரை பிரிந்திருக்க நேரிடும்!!!

நிலா....

காப்பாற்றினேன்
வாளியில் வந்தது
கிணற்று நிலா!

தற்கொலை.....

வீரமான கோழைத்தனம்
புரியவில்லையா?
கோழையால் மட்டுமே
சாத்தியப்படும் வீரசெயல்....

உனக்காக

நீ இன்றி
உன் நினைவுகளை
நேசிக்கின்றேன்

கடிகாரம்

பலருக்கு ஓய்வு நேரம்
காட்டுகிறது
தான்
ஓய்வெடுக்காமல்

சுயநலம்!!!

வெறும் தொட்டில்களை பரிசளித்துவிட்டு,
குழந்தைகளை வரமாக்கி கொள்வது!!!

காலணி.....

நான் காலணி அணியவில்லை என்று
சலித்து கொண்டு இருந்தேன்,
கால் ஊனமுற்ற ஒருவரை
பார்க்காதவரை.....

திருநங்கை

உதாரணம்:
பிரம்மனுக்கும் மறதி
உண்டு
என்பதற்கு.

நான் ரசித்த கவிதை......

நீ என்னை வெறுத்து திட்டும்
சில வார்த்தைகள் கூட
நான் ரசிக்கும் ஒரு கவிதை அன்பே.

மீசை.....

இந்த மீசை.,
என்ன இறக்கைகளா..
முளைத்த உடன்.,
மனதை பறக்க செய்ததே...!!!

கிடச்சா உடைச்சிடுறாங்க...
கிடைக்கலனா உடைஞ்சு போறாங்க ‪#‎காதல்‬

காதலிக்கும் செருப்புக்கும் உள்ள வித்தியாசம்...!!!
.
புதிய காதலி
முதல்ல இனிக்கும்
பழக பழக கடிக்க
ஆரம்பிச்சுரும்....
.
புதிய செருப்பு முதல்ல கடிக்கும்
போக போக பழகிரும்...
‪‎கடிக்கும்_கடிக்காது‬ .

அப்பா கவிதைகள்


சுயநலமில்லா அன்பின் மூன்றெழுத்து மந்திரம்-அப்பா.....
இரா. கருணாகரன்

அம்மாவின் அன்பை விட
சிறந்த அன்பு உலகில்
இருக்கிறதென்றால்
அது அப்பாவின் அன்பு !

"மாறாத அன்பு
அம்மாவின் அன்பு" என்று
திருமணமாகதவன் சொன்னது !

அம்மா-அன்பை அன்பாக காட்டுவார்
அப்பா-அன்பை கண்டிப்பாக காட்டுவார்

பேரன் பேத்தியிடம் விளையாடும் போது
    அம்மாவை பாட்டியாக பார்க்கலாம்
பேரன் பேத்தியிடம் விளையாடும் போது
   அப்பாவை குழந்தையாக பார்க்கலாம்!

மகனிடம் தோற்பதை
   லட்சியமாய் கொண்டவர் !
மகன் தோற்றாலும்
   வெற்றிக்கு நம்பிக்கை கொடுப்பவர் !
மகன் நடைபயில
   மகன் வேகத்துக்கு நடப்பவர் !
மகன் ஒடுவதை
   ஒதுங்கி நின்று ரசிப்பவர் !

முதுமையில் மகன் கரம் பிடித்து
குழந்தைப் போல் நடப்பார்
அப்பா !

கொண்டுவந்தால் தான் தந்தை என்று
யார் பொய் சொன்னது
தான் கொண்டதை எல்லாம் கொடுப்பவர்
தந்தை உண்மை சொல்கிறது !

மகனின்
முதல் கதாநாயகன்
முதல் வில்லன்
அப்பா !

மகன் விழும் போது எழுவோம் என்று
நம்பிய முதல் மனிதர்
அப்பா !

"முடியாது" என்ற ஒற்றை வார்த்தையில்
கொடுத்த செயற்கை வலியால்
"முடியும்" என்ற நம்பிக்கையை
விதைத்தவர் அப்பா !

தந்தையிடம் வாக்குவாதம் பண்ணுவதில் பெண்பிள்ளைகளுக்கு இருக்கும் சுதந்திரம் ஆண்பிள்ளைகளுக்கு இல்லை....

நம்மை முன்னே நடக்க சொல்லி
பின்னால் மகிழ்வதும்,
நம்மை முன்னேற சொல்லி
பின்னின்று ஆனந்தப்படுவதும்,
இவரால் மட்டுமே முடியும் -அப்பா
-கருணாகரன்

ஒன்றுக்கும் உதவாதவன்
உருப்பிடதவன் ,தண்டசோறு
தடிமாடு என்று நம் முன்னால் அதிகம்
திட்டினாலும்
உடல் நல குறைபாடு ஏற்பட்டு
அயர்ந்து தூங்கும் பொழுது
நமக்கே தெரியாமல் நம்
கால்களை நீவி விட்டு நமக்காக சில
துளி கண்ணீர் விடுவார்
நம் தந்தை....

தோளில் சுமந்தாலும் ,

வார்த்தையால் வழி நடத்திய,

கண்ணரிந்த தெய்வம் நீ

வெளிப்படையாய் அன்பு காட்டி

நடிக்கும் உறவினர்கள் மத்தியில்

உள்நெஞ்சில் ஆழ் கடல் அன்பால்

என்னை வழி நடத்தியவன் நீ

என்றும் நீயே என் வழிகாட்டி

என்றும் நீயே என் தெய்வம் தந்தையே !!

ஐந்திரண்டு மாதம் சுமந்து
வலிகொண்டு பெற்றாள் அன்னை!!
ஆனால் இருபது  வருடமாய்

சுமக்காமல் சுமந்தாயே என்ன சொல்ல உன்னை...

அன்பை உள்ளே வைத்து கொண்டு
எதிரியை போல் தெரியும் ஒரே உறவு
-அப்பா

உலகில் விலை மதிப்பில்லாதது
அன்பு ஒன்றுதான்
ஏனோ  அது மட்டும் விலை இல்லாமல் கிடைப்பதால் தான்
அதை யாரும் உணரவில்லை..

கால தாமதம் ........

தாய், தந்தை
இந்த பொக்கிஷங்கள் உடனிருக்கும் பொது பணத்தை தேடி அலைந்தேன்,
பணம் வந்த வேளையிலே பொக்கிஷங்களை இழந்தேன்....
உண்மையை விட்டு பொய்யை தேடி வெகுதூரம்  அலைந்தேன்,
காலன் போட்ட கணக்கினாலே அத்தனையும்  இழந்தேன்,
எனது உறவுக்கு துவக்கம் தந்த உங்களை காண தவம் கிடக்கின்றேன்.....
கருணையோடு வாய்ப்பு கொடுங்கள் உங்கள் காலடி தொழுது கிடக்க
-கருணாகரன்.

தாயின் பாரம்
பத்து மாதம் தான்
நீயோ ஆயிள் வரை
சுமக்கும் தாயாகிறாய்
அறிவுக்கே அறிவுரை
கூறும் ஆசானே
ஆயிரம் வித்தகர்களை
உன் ஒற்றை வார்த்தையில் கண்டேன்
பார்வையால் சுட்டெரிக்கும் சூரியனாய்
பணிவால் உருகச் செய்யும் பனிமலையாய்
அன்பை மட்டுமே அடை மழையாய் பொழியும்
தந்தை எனும் விந்தையே
ஆண்டவனே அடைக்கலம் தேடும்
உன் அன்பு நெஞ்சம் தான்
எனக்குத் தஞ்சம்....

என்னை பத்து மாதம்
கருவறையில் சுமந்தவள்
என் தாய் என்றால்
என் தாயையும் சேர்த்து
என்னையும்
தன்  நெஞ்சிலே சுமந்தவர்
என் அப்பா....

பொறுமையே இல்லாதவன் கூட
ஒரு குழந்தைக்கு தகப்பனாக முடியும் ஆனால்
பொருப்புள்ளவன் தான் தந்தையாக முடியும்...

கடவுள் கொடுத்த வரம்
கிடைக்கவில்லை எனக்கு
கடவுளே கிடைத்தார் வரமாக-அப்பா

உன்னை வயிற்றில் சுமக்கும்
பாக்கியம் எனக்கு இல்லை
ஆகையால் நெஞ்சில் சுமந்து
தீர்த்துக்கொள்கிறேன்.....

ஏன் "அப்பா" என்னை விட்டு
சென்றாய் - கடவுளுக்கு அன்பு போதிக்கவா!

இல்லை நான் உண்மையாக அழ
வேண்டும் என்பதற்காகவா ?

உன் விருப்படியே படித்தேன்
பட்டமும் பெற்றேன்...,
பாராட்ட நீ இல்லையே-"அப்பா"

நல்லதொரு வேலையும் பெற்றேன்...,
நீ இல்லையே சந்தோசப்பட....

என்னிடம் பொய் கூறி விட்டாய்
காலம் முழுவதும் சுமப்பேன் என்று...,

உன்னை நினைக்கும் போது- ஆறுதல் சொல்ல
கண்ணீர் மட்டுமே எனக்கு...,

-ஆனால்

என்னை பற்றிய நினைவே இல்லாமல் -
உறங்கி கொண்டிருக்கிறாய் மண்ணுக்குள்ளே.... 

அம்மாவிடம் பாசத்தையும் அப்பாவிடம் நேசத்தையும் இன்றே உணர்த்துங்கள் சில நாளைகள் இல்லாமலும் போகலாம்...
நன்றி-SDPC

நானும் காட்டியதில்லை அவரும் காட்டியதில்லை எங்கள் பாசத்தை... இருந்தும் காட்டிக் கொடுத்த கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை

நன்றி-SDPC

சொல்லிக் கொடுத்ததில்லை திட்டியதும் இல்லை இல்லை என்றும் சொன்னதுமில்லை வேண்டாம் எனக் கூறியதும் இல்லை இருந்தும் ஏதோ ஒன்றினால் கட்டுப்படுத்தியது அப்பாவின் அன்பு.....
நன்றி-SDPC

அம்மா செல்லமா அப்பா செல்லமா என கேட்டபோதெல்லாம் பெருமையாகச் சொல்லி இருக்கிறேன் அம்மா செல்லமான அப்பா செல்லம் என இன்று அப்பா சென்ற பின்னர் நான் யார் செல்லம்..?

லேசாக என் கால் தடுமாறினாலும் பதறும் அப்பா இன்று நான் தடுமாறிய போது பதறாமல் இருக்கிறார் மீளா துயிலில்...

சிறுவயதில் என் கைப்பிடித்து நடைபயில சொல்லிக்கொடுத்த அப்பா என் கரம் பிடித்து நடந்த போது என்ன நினைத்திருப்பார்..?

கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்..?

உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என...

அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது
நன்றி- SDPC

முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை...

நன்றி-SDPC

எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... நன்றி-SDPC

முதன் முதலாய் தன் குழந்தையை எப்படி தூக்குவதுஎனத் தெரியாமல் திணறி தூக்கக் கற்றுக் கொள்கையில் துவங்குகிறது தந்தை எனும் ‪#‎தாய்மை‬

மத்தாப்பு வாங்க
காசில்லை என்றிருந்தேன் ..
மகளே உன் சிரிப்பில் தீபாவளியும்
சிரிக்குதடி ..
‪‎ஏழை‬ அப்பாவின் கவிதை !!!

அம்மா கவிதைகள்


சின்ன சின்ன சிரிப்பில்
சிறகை விரித்து ஆடும்
மயில் போல்
என் மனம்
உன் சிரிப்பில் மயங்குதடி
கண்ணம்மா -ஸ்ரிவிஷா

கருவில் நான்
அடித்தும் அதை இன்பமாக
ஏற்று என்னை தழுவியவள்
அவள் ஒருத்தியே..!
அவள் அன்பை முழுவதும்
எனக்கு அளிக்கும் என் அன்னையே-ஸ்ரிவிஷா

அவள் பெற்ற அன்பு கடனை
நான் அடைக்க
அவளை பெற நினைக்கிறேன்
என் குழந்தையாக
-ஸ்ரிவிஷா

இன்பம் துன்பம் எது வந்த போதிலும்
தன் அருகில் வைத்து அனைத்து
கொள்கிறது தாய்மை!

பெண்மையில் அன்பை மட்டும் போதிக்கும் அவதாரம்-தாய் 
-இரா.கருணாகரன்

சின்னஞ்சிறு
மகள்களின்
சேலைக்கனவை
பூர்த்தி செய்து விடுகிறது..
‪தாயின்‬ துப்பட்டாக்கள்...........

முக்கால வேதம் இனி எக்காலமும்
    சர்வ தேச பரிநாணமம் என்றும்
எம் உயிர் புதைந்த கருவறையில்
    காலம் என் கண்ணினுள்
எம் துடிப்பு... என் கற்பனை கனவினுள்
    யாம் வித்திடும் வினை
ஈடு இணையில்லா இதம்
எம் மழலையரின் முதல் மழை
    எம் உயிரிலும் உணர்விலும்
எந்நாளும் துடிக்கும் இதயம்
    என்னுள்…
                 உனக்காக மட்டுமே -அம்மா

வலி தந்தவர்களையும் உயிராய் நினைப்பது  தாய்மையும், காதலும் தான்.......

இரவில் அழுத குழந்தையின்
ஒலி கேட்டு
சோம்பேறி கூட
சுறுசுறுப்பாக
மாறி விடுவாள் தாய்மைக்கு பின் ..

அம்மா ...!
உனக்கு வலி கொடுத்து
பிறந்த காரணத்தால் தானோ
என்னோவோ
எனக்கு வலி
ஏற்படும் போதெல்லாம்
உன்னையே அழைக்கிறேன்
அம்மா என்று.....

உயிர் போகும் வலிகளை கொடுத்தும்
அதை தாங்கி ஏற்றுக் கொண்டு என்னை
இந்த உலகிற்கு அறிமுகப் படுத்தியவள்...
நீ தான் அம்மா...
தன் மகன்/மகள் தன்னை போல் கஷ்ட படக்கூடாது என்று ‪#‎கூலி‬
வேலைக்கு சென்று நம்மை ‪#‎படிக்கவைக்கும்‬ சுயநலம் இல்லாத அன்பு
‪‎தாய்மை‬

சிலமாதங்களே என்றாலும் மற்றொரு உயிரைத் தன்னுடைய ஒரு பகுதியாகவே தன் உயிராக தனக்குள்ளேயே இணைத்துக்கொள்ளும் உன்னதம்.

மனதளவிலும்
உடலளவிலும்
‪#‎பெண்‬ என்பவள்
வலிமைக்கொண்டவள்
என்பதற்கு
ஒற்றை சான்று
‪தாய்மை‬

பெண்மைக்கு எத்தனையோ
சிறப்புகள் இருந்தாலும் அதில் அனைத்திலும்
உச்சமாய் இருப்பது ‪‎தாய்மை‬ மட்டும்தான்...

வலி கொடுத்து பிறந்தாலும்
பிள்ளைக்கொரு வலியென்றால்
துடிக்கிறது..
‎தாய்மை‬

ஆணிற்க்கு‬ கிடைக்காத
பெண்ணிற்கு கிடைத்திட்ட
இயற்கையின் வரம்
தாய்மை‬...!!!.

மனமிருந்தால் மானின் முதுகிலும்
"மங்க்கி" ஏறலாம்...
அரவணைக்கும் அனைத்திலும்
"‪#‎தாய்மை‬" தான் மிகுந்திருக்கும்...!!

"மகள்களை"
பெற்ற அப்பாக்களுக்குத்தான்,
தெரியும், "தாயின்"
"அன்பு"
"" என்னவென்று!!!

தாய்மை‬ என்கிற ஓர் உயிரை படைத்தளிக்கும் பெண்ணின்,
ஒற்றை ஆற்றலுக்கு முன்,
உலகின் சகல திறமைகளும்,
நிற்க முடியாது!!

ஆயிரம் பேரின் கண்கள் உன்னை நோக்கினாலும் இரு கண்கள் மட்டுமே என்றும் உன்னை அன்பாக நோக்கும் உன்னைப் பெற்றவள், நீ அவதரிக்க காரணமாய் இருந்தவர்.

கருவறையில் காத்து
கவித்துவமாய்
என்னை பெற்ற
என் அன்பு அம்மா நீ என் அருகில் இல்லாவிடினும் உன் பாசம் என்றும் பெற்ற இந்த மகன் உனக்காக இந்த பதிவை
சமர்ப்பிக்கிறேன்..

உன் சமையலை ஜ??
குறைகூறியே சாப்பிட்ட நான்
இங்கே
குறைகளை மட்டுதானம்மா சாப்பிடுகிறேன்
தயவுசெய்து
நீ அனுப்புகின்ற
கடிதத்தில் ஒரே ஒரு
சோற்றுபருக்கையாவது ஒட்டு.

புதன், 17 பிப்ரவரி, 2016

Tamil Romantic Songs & Lyrics

Tamil Romantic Songs & Lyrics



அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
மழை காலம் கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன் (2)
என் மேஜை மீது பூங்கொத்தை
என் மேஜை மீது பூங்கொத்தை
வைத்தது நீ தானே
நான் வானம் பார்க்க வழி செய்த
சாரலும் நீ தானே
என் இதயம் மெல்ல சிதையில் தள்ள
நீ தான் நிலவைக் காட்டித் தேற்றினாய்
அன்பே அன்பே ….
தூக்கம் கண்ணில் வரவில்லை
சொப்பனம் காண வழி இல்லை
எங்கோ பாடல் கேட்டாலும்
நெஞ்சில் உன் போல் தீ இல்லை (2)
வழி தரும் கால் முகிலே
நீ மிதந்திடும் மயில் இறகே
இதம் தரும் இன்னிசையே
நீ ஒலி தரும் இன்னிசையே
இருப்பது ஓர் உயிரே
அது உருகியே கரைகிறதே
நினைவுகள் கொல்வதனால்
மனம் மறுபடி சருகிறதே
ஓ அன்பே அன்பே ….
உன்னைப் பார்க்க கூடாது என
கண்ணை மூடிக் கொண்டாலும்
கண்ணை பிரித்து நீ வந்தாய்
இமைகளின் இடையில் நீ நின்றாய்
உன்னிடம் சொல்வதற்கு
என் கதை பல காத்திருக்கு
இரு கண்களின் தந்திகளால்
அதை கடத்திட சொல் எதற்கு
உடைகளின் நீதியினால்
இந்த உலகினை வென்றவள் நீ
சிறு உதட்டினில் புன்னகையால்
என் இதயத்தில் நின்றவள் நீ
ஓ அன்பே அன்பே ….
அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
மழை காலம் கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன் (2)
என் மேஜை மீது பூங்கொத்தை
என் மேஜை மீது பூங்கொத்தை
வைத்தது நீ தானே
நான் வானம் பார்க்க வழி செய்த
சாரலும் நீ தானே
என் இதயம் மெல்ல சிதையில் தள்ள
நீ தான் நிலவைக் காட்டித் தேற்றினாய்
அன்பே அன்பே ….
தூக்கம் கண்ணில் வரவில்லை
சொப்பனம் காண வழி இல்லை
எங்கோ பாடல் கேட்டாலும்
நெஞ்சில் உன் போல் தீ இல்லை (2)
வழி தரும் கால் முகிலே
நீ மிதந்திடும் மயில் இறகே
இதம் தரும் இன்னிசையே
நீ ஒலி தரும் இன்னிசையே
இருப்பது ஓர் உயிரே
அது உருகியே கரைகிறதே
நினைவுகள் கொல்வதனால்
மனம் மறுபடி சருகிறதே
ஓ அன்பே அன்பே ….
உன்னைப் பார்க்க கூடாது என
கண்ணை மூடிக் கொண்டாலும்
கண்ணை பிரித்து நீ வந்தாய்
இமைகளின் இடையில் நீ நின்றாய்
உன்னிடம் சொல்வதற்கு
என் கதை பல காத்திருக்கு
இரு கண்களின் தந்திகளால்
அதை கடத்திட சொல் எதற்கு
உடைகளின் நீதியினால்
இந்த உலகினை வென்றவள் நீ
சிறு உதட்டினில் புன்னகையால்
என் இதயத்தில் நின்றவள் நீ
ஓ அன்பே அன்பே ….


 பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
தின தக்கிடுதானே நா ….
இந்த உலகின் ஒளிவென்ன ஒருவன் இல்லை
உந்தன் அசைவுகள் யாவிலும் ஐ
விழி அழகு கடந்து உன் இதயம் நுழைந்து
என் ஐம்புலம் உணர்ந்திடும் ஐ
இவன் பயத்தை அணைக்க
அவள் இவனை அணைக்க
அவள் செய்கையில் பெய்வது ஐ
அவள் விழியின் கனிவில்
இந்த உலகம் பணியும்
சிறு நோய்யளவும் ஐயமில்லை
என் கைகளை கோர்த்திடு மந்திரனை
இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை
அவள் இதழ்களை நுகர்ந்துவிட
பாதை நெடுக தவம் புரியும்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் ....
நீர்வீழ்ச்சி போலே நின்றவன் நான்
நீந்த ஒரு ஓடை ஆனான்
வான் முட்டும் மலையை போன்றவன் நான்
ஆட ஒரு மேடை ஆனான்
என்னுள்ளே என்னை கண்டவள்
யாரென்று எனை காணச்செய்தாள்
கேளாமல் நெஞ்சை கொய்தவள்
சிற்பம் செய்து கையில் தந்தாள்
யுகம் யுகம் காண முகம் இது போதும்
புகலிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்
மறு உயிர் தந்தாள் நிமிர்ந்திடச் செய்தாள்
நகர்ந்திடும் பாதை எங்கும் வாசம் வீச வந்தாளே
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் ....

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்
காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்
தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜமென்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த துறக்கத்தில் தான்
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்
உன்னை கண்ட நாள் ஒலி வட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்
காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்

 கண்ணான கண்ணே நீ கலங்காதடி
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே
நீ கலங்காதடி நீ கலங்காதடி
யார் போனா யார் போனா என்ன
யார் போனா யார் போனா யார் போனா என்ன
நான் இருப்பேனடி நீ கலங்காதடி
ஒரு கணம் ஒரு போதும் பிரியக் கூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுகக் கூடாதே
நீ கண்ட கனவு எதுமே கலையக் கூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுகக் கூடாதே
கிடைச்சதை இழக்குறதும்
இழந்தது கிடைக்கிறதும்
அதுக்குப் பழகுறதும் ஞாயம் தானடி
குடுத்ததை எடுக்குறதும்
வேற ஒன்ன குடுக்குறதும்
நடந்ததை மறக்குறதும் வழக்கம் தானடி
கண்ணான கண்ணே ....
என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும்
நசுங்குற அளவுக்கு இறுக்கி நான் புடிக்கணும்
நான் கண்ண தொறக்கையில் உன் முகம்
தெரியனும்
உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும்
கடல் அலைப் போல உன் கால் தொட்டு உரசி
கடலுள்ள போறவன் நான் இல்லடி
கடல் மண்ணப் போல உன் காலோட ஒட்டி
கர தாண்டும் வர நான் இருப்பேனடி
கண்ணான கண்ணே ....
ஒரு கணம் ஒரு போதும் பிரியக் கூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுகக் கூடாதே
நீ கண்ட கனவெதுமே கலையக் கூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுகக் கூடாதே
நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா
ஓட்ட வைக்க நான் இருக்கேன்
கிட்ட வைச்சு பாத்துக்கவே உயிரே வாழுறேன்டி
பெத்தவங்க போனா என்ன
சத்தமில்லா உன் உலகில்
நித்தம் ஒரு முத்தம் வைக்க நான் உயிரே வாழுறேன்டி

சனி, 13 பிப்ரவரி, 2016

காதல் கவிதைகள்


1.
விழி நோக்கும் ஆண்மகனை
விரும்புவாளாம் பெண்மகள் !
விழி காண வழியில்லை !
நீ அங்கே !நான்இங்கே !
விரும்புவாயா என்னை?

2
சற்று நீ முன் சிரித்தபோது தான்
சிதறித் தொலைந்தேன் நான் !
அதை மெல்ல தேடி எடுப்பதற்குள்
ஏன் மறுபடி சிரித்தாய் ?

3
அடி என்னவளே ! -உன்
கருவிழி மேகங்கள்
கண்ணுக்குள் மோதிக்கொண்டு
கருங்குளத்து நீர்
கன்னங்களில் வழியும் பொது - என்
இதயக் குளத்தின்
செந்நீர் சிதறி
சாலையில் ஓடுதடி- என்னை
சோகத்தில் வாட்டுதடி.
வழிகின்ற நீர் - உன்
வாய்க் கமலத்தில்
வடிந்து விட்டால் - நீ
மகிழ்ச்சியால் சற்று சிரித்து விட்டால் - என்
இதயத்தின் நீரெல்லாம்
ஓட மறுத்து
ஒரு நிமிடம் உறைந்து
உன் அழகை ரசிக்குதடி
உன்னை முத்தமிட துடிக்குதடி
கண்கள் தான் காதலின் பிறப்பிடம்
கவிஞர்கள் சொல்கிறார்கள் - உன்
கண்ணீரல்லவா என் உயிரின் இருப்பிடம்
நான் சொல்கிறேன்.
சிந்தி விடாதே - என் செல்லமே !
கண்ணீரை மட்டுமல்ல - என்
காதலையும் தான்.    - சத்தியசீலன்

4
இனிமேல் என்கிட்ட பேசாதே என்று
சொல்லிவிட்டு அரை மணி நேரத்தில்
நீ இன்னும் சாப்பிடலாயாடானு
கேக்கும் காதல் வரம்...

5
வாழ்க்கையில் எது
கிடைக்காமல் போனாலும்
பரவாயில்லை நம் மீது
அன்பும் அக்கறையும் கொண்ட
சில உறவுகள் மட்டும்
கிடைத்தால் போதும்..!!

6
நூறு பெண்களிடம் காதல்
சொல்வது உண்மையான
காதல் இல்லை,
நூறு முறை ஒரே பெண்ணிடம்
சொல்வது தான் உண்மையான
காதல்!!!

7
தேர்வுக்கு தயாராகும் மாணவன் போல்
இன்று,நாளை,நாளை மறுநாள் என்று
காலம் கடத்துகிறேன் என் காதலை சொல்ல
சொல்வதற்கு வார்த்தை இல்லை என்று
தமிழ் மீது பழி போடுகிறேன்
சொல்ல தைரியமற்ற கோழை ஆனதால்
நாட்கள் வாரங்கள் வருடங்கள் என
என் காதல் செடி தன் கனவு
வேர்களில் கால் ஊன்றி மரமாகி விட்டது
காரணங்கள் பல சொல்லி என்
மனம் என்னை தேற்றுகிறது
இன்றளவும் என் காதலை
உன்னிடம் சொல்வதற்கு தயங்குகிறேன்
தயங்கி தயங்கி ஏனோ என் காதல்
ஒரு தலை காதலாகவே நெஞ்சின்
ஓரத்தில் உறைந்தே போய் விட்டது
உறைந்து போனது என் காதல் மட்டுமல்ல
என் உயிரும் தான்....

8
மறக்க
நினைக்கிறன்
உன்னை
அல்ல,
உன்னிடம்
பேசாமல்
விட்ட அந்த
நிமிடங்களை!!!

9
கண் சிமிட்டாமல் உன்னை பார்க்க ஆசைப் பட்டேன்.
ஆனால்,
இப்போது உன்னை கண் சிமிட்டும் நேரமாவது பார்க்க ஆசை படுகிறேன்!!!

10
கனவுகளுக்கு எச்சரிக்கை...
கனவில் வந்த காதலி
அவளாகசென்று
எனக்கு நினைவு திரும்பும்வரை..
கலைத்து விடாதீர்கள்..
எங்கள் கனவுகளையும்....
காதலையும்.......

11
நான் உன்னிடம்
கனவிலும் நினைவிலும்
பேசியிருந்தாலும்
நீ என்னிடம் பேசிய
அந்த நொடியில் தான்
கனிந்து கசிந்தது
என் காதல்.....!

12
நான் உன் பெயரை
கோடி முறை
ஜெபித்திருந்தாலும்
நீ என் பேர் சொன்ன
அந்த நொடியில் தான்
முதல் பூ பூத்தது
என் காதல்....!

13
நான் உன்னை
ஆயிரம் முறை
பார்த்திருந்தாலும்
நீ என்னைப் பார்த்த
அந்த நொடியில் தான்
விதையாய் விழுந்தது
என் காதல்....!

14
உன்னிடம் நான் பேசியது இல்லை என்றாலும்..
உன்னைப்பற்றி அதிகமாகவே பேசிக்கொண்டிருக்கிறேன்
மற்றவர்களிடம் உன்னை
மறந்துவிடக்கூடாது என்பதற்காக..!

15
காதலுக்கு கள்ளத்தனம்
தெரியாது என்கிறாய்
பிறகு எப்படி?
என் இதய அறையின்
எல்லா கதவுகளையும்
பூட்டியபின்பும்
எனக்குள் வந்தாய்....?!

16
இதயங்கள் சொல்ல நினைக்கும் வார்த்தைகளை
இதழ்கள் சொல்லாமல் மறைப்பதால்தான்
காதல் இன்னும்
தோற்றுக்கொண்டிருக்கிறது...!

17
நீ பேசிய ...
மொழியே காதல் ......
பொது மொழி ....
நீ கொஞ்சிப்பேசினால் ....
இலக்கணம் .....
கோபப்பட்டால் ....
காவியம் ....!!!

18
இத்தனை அடைமழை ....
பொழிந்துமா உன் இதயம் ....
ஈரமாக வில்லை ....?
எத்தனை காதலை ....
இணைத்து வைத்துள்ளது ...
இந்த அடைமழை ....!!!

19
உன்னிடம்
என்னை பற்றி சொல்ல ...
என்ன இருக்கிறது ...?
என் பிறப்பிடம் காதல் ...
நிரந்தர வசிப்பிடம் காதல் ...
தற்போதைய முகவரி ...
உன் மீது வைத்த காதல் ....!!!

20
காதலில்
தான் பொய்யும் அழகு
களவும் அழகு ...
என் வீட்டுக்கு முதல் ...
முதலில் வந்தபோது ...
இரண்டையும் செய்தாய் ....!!!

21
பூ போன்ற பாதமும்
பட்டு போன்ற மேனியும்
கள்ளங்கபடமற்ற சிரிப்பையும்
கொண்டு என்னை
அடிமைப்படுத்தியவள் நீ தானே
என் அன்பு தேவதையே -ஸ்ரிவிஷா

22
என் கண் இமைகள்
கூட மூடிவிடலாம்
ஆனால் என் இதய
கதவு என்றும்
திறந்தே இருக்கும்
உன் வரவை எதிர்பார்த்து -ஸ்ரிவிஷா

23
தண்ணி இல்லையேல்
மீன்கள் துடிதுடிக்கும்..!
அன்பே நீ இல்லையேல்
என் இதயம் துடிப்பதை
நிறுத்திவிடுகிறது..!!
-ஸ்ரிவிஷா

24
காலை பனியில் கன்னியவள் கனவில் வந்தது கனவோ இல்லை என்னவளின்  நினைவோ .......
- தேனி முத்துகுமார்

25
எத்தனை முறை கேட்டிருப்பேன் என்னை நேசிக்கிறாயா என்று.... ஒரு முறை கூட சொன்னதில்லை உன் நேசத்தை.... காலத்தின் சூறாவளி நம்மை எதிரெதிரே எறிந்தது... இரண்டு மகாமகம் கழித்து இரவு நேர ரயில் பயணத்தில் எதிர்பாராமல் சந்தித்தோம்... நேரெதிரே இருந்தும் கூட மவுனம் மட்டுமே நம் பாஷையானது... சிலர் வாழ்க்கையில் விளையாட்டு வினையாகும்... நம் வாழ்க்கையில் விதியே விளையாடியது... நள்ளிரவு கடந்தும் கண்கள் மூடவில்லை... ரயிலின் சப்தத்தைவிட உன் இதயத்துடிப்பின் ஓசைதான் அதிகமாய் கேட்டது.... இது நாள் வரை புரியாமல் இருந்த புதிருக்கு அன்று விடை கிடைத்தது.... நீயும் என்னை காதலித்ததை காலம் கடந்து உணர வைத்தது...

26
காதலித்து பார் காக்கை கூட உன்னை கவனிக்காது...............................
ஆனால் இந்த உலகமே உன்னை கவனிப்பதை போல் உனர்வாய்....

27
நான்
வியந்து
நோக்கிய
ஐந்தடி
ஓவியம் ... நீ

28
ஒவ்வொரு இரவிலும்
ஏதோ
ஒரு காதலர்களின்
கண்ணீர் குரல்
காதுகளில் ஒலித்துக்
கொண்டுதான் இருக்கிறது
எப்போது சேருவோம் என்று...
இதை எல்லாம்
ஓர் மூலையில் ரசித்தபடி
இரவும், சந்திரனும்
காதலித்து கொண்டு
இருக்கிறார்கள்
சுயநலவாதிகளாய்,..

29
உன்னைத் தவிர
மற்றப் பெண்களைக்
காணும் பொழுதெல்லாம்
பிரம்மன் கடமைக்கு
செய்திருப்பதை உணர்கிறேன்.....

30
நீ
எதிர்வரும் பொழுதெல்லாம்
என்
எதிர்காலம் வருவதாய்
உணர்கிறேன்..

31
காற்றை நேசித்தேன் ...
உணர முடிந்தது ...
பார்க்க முவியவில்லை ...
கடலை நேசித்தேன் ...
... பார்க்கமுடிந்தது ...
கடக்க முடியவில்லை ...
கடவுளை நேசித்தேன் ...
நம்பிக்கை வந்தது
நிரூபிக்க முடியவில்லை
உன்னை நேசித்தேன் ..
நினைவுகள் வந்ததால் ..
மறக்கமுடியவில்லை ....

32
என்இதயம் நீ இருக்கும் வரை துடிக்கணும் ....
கண்கள் உன்னை மட்டுமே பார்க்கணும் ....
உன் தெருவைநோக்கி கால்கள் நடக்கணும் ....
நம் காதல் உலகம் வரை இருக்கணும் ....
இல்லை- கல்லறையில் இருவரும் தூங்கணும் ....!!!

33
மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
உன் இதயம் வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!

34
ஆறுதல் சொல்ல நீ இருந்தால்,
அழுவதில் கூட சுகம் உண்டு

35
என் மரணத்தின் போதும்
என் உயிர் என்னை விட்டு
பிரிவதில்லை..!
ஏன்னென்றால்
என் உயிரே நீயாக இருக்கும் போது
நான் எப்படி பிரிவது...!!
-ஸ்ரிவிஷா 

36
என் கண்ணுக்கு கண்ணான கண்களை
காணாத போது
கலங்கின என் கண்கள்...!!!
-சத்தியகலா

37
நினைவுகள் எப்போதும் வித்யாசமனவை ...
சில நேரங்களில் அழுத நாட்களை நினைத்து
சிரிக்க வைக்கும்.....
சில நேரங்களில் சிரித்த நாட்களை நினைத்து
அழ வைக்கும்.........

38
எனக்குத் தெரியும் அவனை....
தெருவடைத்துப் பந்தல்.
சூரியஒளியைத் தவிர,
உலகே திரண்டு வந்தது போன்ற கூட்டம்.
அத்தனைக் கண்களும் காணும் அவனை
எதேச்சையாக என் கண்களும் காண -
ஓ, எனக்குத் தெரியும் அவனை....,
அந்த சன நெரிசலில்,
வெள்ளை உடையில்
ரோஜா மாலையுடன் அவன் மட்டும்
வித்தியாசமாய்த் தெரிந்தான்.
எதற்காக நெளிகிறான்?
ஓ, ரோஜா வாசம் அவனுக்கு பிடிக்காதே,
அதனாலா?
எனக்குத் தெரியும் அவனை....
வருவோரின்
ஒவ்வொரு கைக்குலுக்கலின் போதும்
அவன் முகம் சுளிக்கிறான்.
அந்த முகச்சுளிப்புக்கு காரணமே
கைக்குலுக்கல் தான்.
கைக்குலுக்கல் அவனுக்குப் பிடிக்காது-
எனக்குத் தெரியும் அவனை....,
எவரோ ஒருவர்
பழச்சாறு கொண்ட கோப்பையை
அவனுக்கு நீட்ட, அவன் கண்கள்
மற்றவர்களுக்கு அளிக்கப்படும்
பெப்சி மெதுபானத்தின் மேல்
மேய்வதை நான் அறிவேன்.
எனக்குத் தெரியும் அவனை....
அவன் இடப்பக்கம்
அமர்ந்திருக்கும் மணப்பெண்ணின்
பச்சை நிறப் புடவையைப் பார்த்தேன்.
நிச்சயமாக அது அவனுடைய தேர்வு அல்ல.
எனக்குத் தெரியும் அவனை....
எதேச்சையாக அவன் பார்வை
என்னைத் தீண்ட -
வியப்புடன்!?
துளிர்த்த கண்ணீரை
தூசு துடைப்பதுபோல்
துடைத்துக்கொள்கிறான்.
எனக்குத் தெரியும் அவனை...

39
வாழ்ந்தால் உன் இதயத்தில்
வாழ வேண்டும்....
இருந்தால் உன் விழிக்கு இமையாக
இருக்க வேண்டும்...
இறந்தால் உன்னை நினைத்து
இறக்க வேண்டும்..

40
உன் கரங்களை..
என் விரல்கள் பற்றி இருந்தால்..
வாழ்க்கையில் வரும்..
அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து ஜெயித்திடுவேன்.

41
காதலியே நிலவில் தண்ணீர் உண்டு
உன் முகத்தில்
வியர்வைத்துளிகள்..

42
அன்பே !
அந்த நதிக்கறையில்
உன் கைக்குட்டை ஒன்றைக்
கண்டெடுத்தேன் !
அது கைக்குட்டையா?
இல்லை
காதல் தேவதை
தன் ஒரு சிறகை
உதிர்த்து விட்டுப்
போய் விட்டதா?
இது கைக்குட்டைதானா?
இல்லை
கல்யாணப் புடவைக்கு
அச்சாரமா?
நீ
வித்தியாசமானவள்
காதல் கடிதத்தை
நெசவு செய்து அனுப்பியவள்
நீ மட்டும்தான்
இப்படித்தான்
பேச நினைக்கிறேன்
ஏதேதோ அர்த்தத்தில்
ஆனால் என் வார்த்தைகளோ
மௌனத்தின் கர்ப்பத்தில்...

43
கனவுகள் எனக்கு பிடிக்கும்... நீ வருவதால்.. கண்ணீர் எனக்கு பிடிக்கும்.. உனக்காக வருவதால்... தனிமை எனக்கு பிடிக்கும்.. உன் நினைவுகள் என்னோடு இருப்பதால்...

44
தென்றலை நேசித்தேன் புயல் வரும் வரை...!பூக்களை நேசித்தேன் வாடும் வரை...!நிலவை நேசித்தேன் விடியும் வரை...!உன்னை நேசித்பேன் என் உயிர் போகும் வரை...!

45
வாழ்கையில் ஒரு அழகான பொண்ண காதல் பண்றத விட நம்ம வாழ்கை அழகா வச்சுகுற பொண்ண காதல் பண்றதுதான் நல்லது...

46
எத்தனை முறை சொன்னாலும் எப்படி சொன்னாலும் எழுதிவைத்து சொன்னாலும் எழுதாமல் சொன்னாலும் என் இதயம் உனக்காகத் துடிக்கிறது...


47
காதலை சொல்ல உதடுகள் வேண்டும்
என நினைத்திருந்தேன். கண்ணீர்த்துளிகளை
கண்டபிறகு தெரிந்துகொண்டேன்....
காதலை சொல்ல கண்ணில் ஈரமிருந்தால் போதுமென்று...


48
சத்தம் இன்றி அழுகின்ற உயிர்
எது தெரியுமா?
இதயம் தான்.
உண்மையாக நேசித்து பாருங்கள்
புரியும்.....


49
மனதுக்கு பிடித்தவர்களிடம் மனம் விட்டுபேசினால் மரணவலி கூட மரத்து போகும்....


50
மனதுக்கு பிடித்தவர்களிடம் மனம் விட்டுபேசினால் மரணவலி கூட மரத்து போகும்....


51
ஓரு ஆண் தனது இரண்டாவது தாயையும் ஓரு பெண் தனது இரண்டாவது குழந்தையையும் தேடுவதே!-காதல்


52
கண்ணை காப்பது இமைதானடி,
காதலின் சுகம் இதயத்தின் வலிதானடி,
ஒரு முறை பார்த்தால் போதும்,
ஆயுள் வரை சுகம் நீளும்,
இறந்தாலும் மீண்டும் பிறப்பேன்,
உன் காதலனாக மட்டும்,
உன் காதலுக்காக மட்டும்.

53
சிறகுகள் இல்லாமலேயே, பெண்களை தேவதைகளாக்கும் வல்லமை புடவைகளுக்கு உண்டு!

54
அன்பே...
உன்  பிரிவு தரும் வலி,
என் வாழ்க்கையின்
வழியாக அமைந்தால்,
விரைவில்
என் வளி நின்று விடும்...

55
கவிதையும் காதலும்....
கவிதை காதலுக்கென்றே பிறந்ததா!
கவிஞர்களின்   உணர்வுக்காக உயிர்தெழுந்ததா!
கவிதையை வெறுக்க நான் மனம் இல்லா ஜீவனும் அல்ல!
கவிதையை  சுவாசிக்க கலையறிந்த கவிஞனும் அல்ல!
கவிதை இல்லாத காதல் உண்டோ?
கற்பனை உணர்வுகள் நம்  கண்ணோடு உரைத்திடும் தருணம் இதோ!
விழிகளின் பயணத்தில் காத்திருங்கள் விடையறிய....
காதல் உணர்வோம்! கவி பாராட்டுவோம்!
-தமிழ் தாமரை

56
புள்ளிகள் இல்லாத கோலம்
என்னவளின் பாத சுவடுகள் ....

57
நகத்தை கடிக்காதே !
நசுங்குவது நகம் அல்ல
என் மனம்.....
-கருணாகரன்

58
காதலித்துப்பார் பகலில் நிலாதெரியும்..
காதலில் தோற்றுப்பார் இதயத்தில் சூரியன் எரியும் ....!!!

59
நானோ உன்னை....?
சாகும் வரை காதலிக்கிறேன்
நீயோ என்னை....?
சாகடிக்கவே காதலிக்கிறாய் .

60
மனிதன் கடவுளிடம்
வாங்கிக் கொண்ட
விலைமதிக்கா வரம் கனவு ....!!!
என்னவள் ....
என் இன்பத்துக்கு ....
இலவசமாய் வழங்கும் ....
சேவை காதல் கனவு .....!!!

61
பலமுறை ஏங்குவதும்
ஏங்க வைத்து பின் ....
வார்த்தையில் தூங்குவதும் ....
தூங்கிய வார்த்தையை ....
துலங்கமாய் கூறுவதும் ....
காதல் உறவு ....!!!

62
உன்னை என் இதயமென்று
சொல்லமாட்டேன்...
என் இதயத்தில் இருப்பவன்
நீயென்றே சொல்லுவேன்!!!
உன்னை உயிர் என்று ....
சொல்லமாடேன் ....
என் உயிர் வாழ்வதே ...
நீ தான் என்பேன் ....!!!

63
நான் நேசிக்கும்
பலர் என்னை நேசிக்க மறந்தாலும்,
என்னை
நேசிக்கும் உன்னை உயி௫ள்ள
வரை மறக்க மாட்டேன்.....

64
பத்திரமாக இரு...
நீ எப்போதும் பத்திரமாக என்னோடு இருக்கத்தான் ..
இறைவன் இதயத்தை உள்ளே படைத்திருக்கிறான்

65
என்னை சுற்றி அடைக்க பட்ட முள் வேலி நீ ...!!!
உன்னை சுற்றி வரையப்பட்ட வட்டம் நான் ...!!!

66
நீ என் காதல் பூவா...? முள்ளா ..?
உண்மை காதல் உண்மை சொல்லும் ....!!!

67
மீன் தொட்டியில் இருக்கும் மீனைப்போல் ....
உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன் காதலால் ...!!!


68
இதமாக இருந்த இதயத்தை ....
இதய சோலையாக மாற்றும் காதல் ...!!!


69
உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்தினால் அது பாவம். உனக்காக ஒருவர் கண்ணீர் சிந்தினால் அது பாசம்.

70
ஒரே ஒருவருடைய நிராகரிப்பு வாழ்க்கையில் தனிமை என்ன என்பதை உணர்த்தி விடுகிறது..

71
ஆயிரம் நண்பர்கள் இணையத்தில்...... ஆயிரம் மின் அரட்டை நொடியில்...... ஓசை கேட்காத பல நூறு குரல்கள்...... பார்க்க முடியாத பல நூறு சினேகங்கள்...... இருந்தும் எதையும் மனம் விரும்பவில்லை ... உன்னிடம் வரும் ஒரு வார்த்தைக்காய் .... உன்னையே தேடும் இதயத்தில் வலி ....!!!

72
இந்த உலகத்தில் உன்னை மட்டும் பிடிக்கும்! எனக்கு பிடிக்காதது என்னை உனக்கு பிடிக்காதது !

73
நான் போகும் முன்னால் உனக்கு ஒரு காதல் கடிதம் படித்துவிட்டு பதில் அனுப்பு


74
உன் கடிதம் பிரிக்கவே ஆசைப்படாதவளின் இதயம் பிரிக்க ஆசைப்பட்டுவிட்டாயோ..?

75
உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே இனிப்பாய் இருக்கிறது. நீயும் என்னை நினைத்துக்கொண்டிருப்பாய் என நான் நினைத்துக்கொள்வது!

76
உன்னை பலமுறை சந்தித்த போதும் என்னால் உன் மெளனத்தை கலைக்கமுடியாமல் போன போதுதான் எனக்கு உதவிசெய்து உறுதிப்படுத்தியது உன் கைபேசி நீ ஊமையானவள் அல்ல என்று....

77
உன் காதோர கம்மலும்,
கால் தொடும் கொலுசும்
என்னை சபிக்கின்றது,
அவை புண்ணியம் தேடும்
இடத்தை நான் பரித்துவிடுவேனோ ! என்று ......
-கருணாகரன்

78
உன் உடலுக்கு வெட்கம் தெரியும்
என் விரலுக்கு வித்தை தெரியும்.....


79
நீ வேண்டும் எனக்கு
நான் என்பது
நாமாக வேண்டும்
எல்லாமே எனக்கு வேண்டும்
உன்னோடு வேண்டும்
உன்னோடு மட்டுமே வேண்டும்!

80
என் பக்கத்து வீட்டு கதவு
உன் வீட்டு கதவாக
இருக்க கூடாதா??
அதுவே சொர்க்கவாசல்...
நம் தெருவே
இந்திரலோகம்!

81
அவள் சொன்னது வேறு
எனக்கு புரிந்தது இது தான்
கை கோர்க்க வேண்டும்
தொட்டிழுக்க வேண்டும்
கட்டிபிடிக்க வேண்டும்
முத்தமிட்ட வேண்டும்
உச்சி முகர வேண்டும்
காதல் சொல்ல வேண்டும்
அவள் சொன்னது இது தான்
"நான் உன்னை பார்க்கனும்"

82
அழகாய் இருக்கிறாய் என்றேன்
உன் கண்களுக்கும் மட்டும் என்றாள் !
காதலிக்கிறேன் என்றேன்
என்னை மட்டுமா என்றாள்!
உயிரை விடவா என்றேன்
நானும் வருகிறேன் என்றாள்!

83
உனக்கும் எனக்குமான
நட்பில் தீப்பிடித்தது
காதல் தொடங்கியது
நமக்குள்!

84
மலர்ந்தது என் முகம் மழையை கண்டு. துடித்தது என் மனம் நனைவேன் என்று.. கரைந்தது என் தினம் நொடியில் அன்று

85
உன் பெயரில் நடக்கும் பிறந்தநாள் அர்ச்சனையை ஏற்றுக்கொள்ள தவம் கிடக்கின்றன நம் தெய்வங்கள் ......

86
சின்ன வயதிலிருந்து என்னை
தொட்டுப் பேசும் பழக்கத்தை
நீ நிறுத்திக்கொண்ட போதுதான்
தெரிந்துகொண்டேன்...
நீ என்னைக் கட்டிக்கொள்ள
ஆசைப்படுவதை!


87
நீ ஆற்றில் குளிப்பதை
நிறுத்திவிட்டு
வீட்டுக்குள் குளியலறை கட்டிக்
குளிக்க ஆரம்பித்தாய்.
வறண்டு போனது
ஆறு.

88
உன்னைக் கடித்த எறும்புகளெல்லாம்
"தேவதையைக் கடித்த எறும்புகள் சங்கம்" என்று
ஒரு சங்கம் வைத்திருக்கிறதாமே


89
பல நூற்றாண்டுகள் ஆகுமாமே
ஒரு வைரம் உருவாக.
நீ மட்டும் எப்படி
பத்தே மாதத்தில் உருவானாய்?

90
உன்னிடம்
என் இதயத்தைத் தொலைத்துவிட்டதாக
எப்போதும் புலம்பியதில்லை நான்.
எனக்குள் இருந்த இதயத்தைக்
கண்டுபிடித்துக் கொடுத்தவளே நீதான்....

91
கரையில் நின்றிருந்த
உன்னைப் பார்த்ததும்
கத்திவிட்டன
கடல் அலைகள்...
கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக் குதித்து
கடைசியில் பறித்தே
விட்டோமா
நிலவை! என்று.


92
உன் அழகு
வெட்டி வைத்திருந்த
ஆழ்துளைக் கிணற்றில்
விழுந்த சிறுவன் நான்...!


93
அன்று
நீ குடை
விரித்தற்காக்க்
கோபித்துக் கொண்டு
நின்றுவிட்ட
மழையைப்
பார்த்தவனாகையால்
இன்று
சட்டென்று மழை
நின்றால்
நீ எங்கோ குடை
விரிப்பதாகவே
நினைத்துக்
கொள்கிறேன்...!

94
நீ யாருக்கோ செய்த
மெளன அஞ்சலியைப்
பார்தத்தும்..
.
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.....


95
என்னை
உடைப்பதற்காகவே
என் எதிரில்
சோம்பல் முறிப்பவள் நீ!!!!

96
நீ எப்போதும்
தலையை குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க
வெட்கத்தையெல்லாம்
இந்தப் பூமி மட்டுமே தரிசிக்க
முடிகிறது!
ஓரேயொரு முறை
கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி
வெட்கப்படேன்..
வெகுநாட்களாய்
உன் வெட்கத்தைத் தரிசிக்க
துடிக்கிறது
வானம்!


97
ஒரு நிமிடத்தில்
உன்னைக் கடந்துபோகிற பெண்ணைப் பார்க்க
தினமும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே என்று
கேட்ட என் நண்பனிடம் சொன்னேன்...
நீ கூடத்தான்
ஒரே ஒரு நாள் சம்பளம் வாங்குவதற்காக
ஒரு மாதம் முழுவதும் வேலை செய்கிறாய்!


98
காதல்தான்
நான் செய்யும் தவம்
என் கடுந்தவத்தைக் கலைத்து
என்ன வரம் வேண்டும் என்று
எந்த தெய்வமும்
என்னை கேட்காமலிருக்கட்டும்..
என் தவத்தைவிட
சிறந்ததாய்
எந்த வரத்தையும்
எந்த தெய்வத்தாலும்
தந்துவிட முடியாது!


99
"உன்னிடம் பேச எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ அவ்வளவு
ஆசை உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேச வேண்டும் என்பதில்."
"நான் எது கேட்டாலும் வெட்கத்தையே
தருகிறாயே...வெட்கத்தைக் கேட்டால்
என்ன தருவாய்?."

100
அழகான பொருட்களெல்லாம்
உன்னை நினைவு படுத்துகின்றன.
உன்னை நினைவுபடுத்துகிறவை எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன."


101
அற்புதமான காதலை
மட்டுமல்ல
அதை உன்னிடம்
சொல்ல முடியாத
அதி அற்புதமான
மெளனத்தையும்
நீதான் எனக்குத்
தந்தாய்....

102
ஓரே ஓரு முறைதான்
எனினும்
உன் உன்னத நிழல்
என்மீது பட்ட போதுதான்
நான் ஓளியூட்டப்பட்டுக்
கவிஞனானேன்!


103
எவ்வளவு
வேகமாக ஓடினாலும்,
61ம் வினாடியை
தொட முடியாது
எந்த வினாடி
முள்ளும்...
என்னை
விட்டு
எங்கு ஓடினாலும்
யாரையும்
தொட முடியாது
உன்னாலும்....!!


104
ஒருவருகென
ஒருவர் என்று
பிறந்தவர்கள்
நாம் இருவரும்....
காதலி...
அல்லது
காதலிக்க
வைக்கப்படுவாய்......!!

105
உன்னை
நினைக்கும்
போதெல்லாம்
நீ என்னுடன்
பேசிய நிமிடங்களை
நானாக நினைத்தாலும்
உன்னுடன்
பேசிய நிமிடங்கள்
தானாக உன்னை
நினைக்க
வைக்கிறது....!!!

106
என்னுடன்
நீயும் நன்றாகத்தான்
பேசுகிறாய்....!
உனக்கும்
என்மேல் காதல்
இருப்பது
தெரிந்தாலும்,
ஏனோ
பயமாக
இருக்கிறது,
உன்னிடம்
காதல் சொல்ல...!!


107
விதவிதமான
எழுத்துக்களில்
பார்த்திருக்கிறேன்,
என் பெயரை....!
ஏனோ,
உன் கையெழுத்தில்
பார்க்கும் போது
அத்தனை அழகாக
தெரிகிறதே....!!



108
என்னதான்
உருகி உருகி
தான் காதலித்தாலும்,
அவன் காதல்
சொல்லும் போது,
அதை மறுத்து
அவனை
அலைய விட்டு
பார்க்கத்தோன்றும்
இந்த
பெண்களுக்கு....!!



109
ஆணுக்கு,
பெண் கவர்ச்சி....
ஆனால்,
பெண்ணுக்கு,
ஆண் வாழ்வு...



110
ஆணுக்கு,
பெண் கவர்ச்சி....
ஆனால்,
பெண்ணுக்கு,
ஆண் வாழ்வு...

111
"அவன்
எப்போது
வருவான்"
என்று நீ இல்லாத
நேரங்களிலும்,
"வந்து விட்டால்
என்ன செய்வானோ"
என்ற பயத்தின்
காரணத்திலுமே
எப்போதும்
சினுங்கி கொணடே
இருக்கின்றன
என் கொலுசுகள்....!!!


112
உன்னுடன் மௌனமாக
இருக்க வேண்டிய
தருணங்களில்
நான் பேசினாலும்,
நான் பேச வேண்டிய
தருணங்களில்,
மௌனமே பேசி
தொலைக்கிறது.


113
ஒவ்வொரு நாளும்
என் முதல் நினைவும்
நீதான்
கடைசி சிந்தனையும்
நீதான்
ஒருவேளை,
உன்னை காதலிக்க
ஆரம்பித்து விட்டேனோ
என்னவோ....!


114
இழந்தால் நான் துடிப்பேன் உன்னை...
மறந்தால் நான் இழப்பேன் என்னை...
மறுத்தால் நான் அடைவேன் மண்ணை..
பார்த்து நான் காத்திருப்பேன் உன்னை.
உயிரே நீ இல்லாமல் என்
உயிரும் மரணம் காணாது.
உன் பார்வை என்னை தீண்டாமல்
என் கனவும் ஜனனம் ஆகாது

115
உன்னை பார்த்து
துள்ளி வந்த
அலைகள் கூட
பௌர்ணமி
நிலவென்று
கிள்ளி செல்கின்றன
உன் கால்களை
மெல்ல.....

116
பூத்துக் குலுங்கும்
மலர்களை விட...
வாடிய மலர்களையே...!
நான்...
அதிகம் நேசிக்கிறேன்!
ஆம்.
அது அவள் கூந்தலில்
இருந்து உதிர்ந்த மலர்கள்

117
என்னைப் பிரிந்து
மண்ணில் புதைந்து
மழையாய் நீ வந்தாய்
மழையில் நனைந்து-என்
இதயம் கிழிந்து
செடியாய் நான் முளை்தேன்
உன் கல்லறையில்..!!


118
உன் கண்கள் என்னை தீண்டி விட்டு போன பின்பு தான் புரிந்து கொண்டேன்.......
என் ஆன் மனம் கூட மிகவும் அழகு என்று...


119
ஓற்றை முத்தம்.......
மெதுவாக முத்தம் ஓன்று கொடுத்து விட்டு போதுமா என்கிறாள்......
இன்னும் வேண்டும் என்கிறது உதடுகள்....

120
கிடச்சா உடைச்சிடுறாங்க...
கிடைக்கலனா உடைஞ்சு போறாங்க ‪#‎காதல்‬

121
தன்னையும் ஒரு பெண்
நேசிக்கிறாள் என்று தெரிந்த
பின், அந்த ஆணின் உலகமே
மாறிவிடுகிறது.


 ஒருவரை முழுமையாக
புரிந்துகொண்டவர்கள் அவர்களுக்கு
வாழ்க்கைதுனையாய் கிடைப்பது
அவரவர் வரம்..


 நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறதெல்லாம்
உனக்காக தான்..
.
நம்ம லவ் success ஆகனும் ,
நீ லைப் லோங்கா என்கூடவே இருக்கனும்,
உனக்கு எந்த health problem உம்
வரக்கூடாது,
நம்ம கடைசி வரைக்கும் இதே
மாதிரி லவ் பண்ணிட்டு சந்தோசமா
இருக்கனும் னு தான் வேண்டிக்குவன்..
என் அம்மா,அப்பா and குடும்பத்துக்காக எப்பவுமே வேண்டிக்குவேன் தான்..
நீயும் என் குடும்பத்துல ஒருத்தன் தான் ,எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்,என்னோட வாழ்க்கை,எதிர்காலம் எல்லாமே...
so உனக்காக ஸ்பெஷலா வேண்டிக்குவன்..
LoVe Uu So MuCh MamA



 நீ நல்லா இருக்கனும் அதான் எனக்கு
முக்கியம் என்கிறாய்.....
நீ இல்லை என்றாலே நான் நல்லா
இருக்க மாட்டேன் என்று உனக்கு தெரியாதா..




காதலா் தினம்

காதலா் தினம்

1.
நீ மௌனம்
கொண்டால்
நானும்
மௌனமாகிறேன்
உன் மௌனத்தை
படிப்பதற்கென.....
என்  இனிய காதலர்தின வாழ்த்துக்கள்...
நீ என்னைப் பார்க்கும்போது
என்னுள் நிகழ்கிறது ஜல்லிகட்டு !
முடிவில்
சாந்தமாய் நான்
உன் பின்னால் !
என்  இனிய காதலர்தின வாழ்த்துக்கள்...

2.
"வீழ்வது வெட்கமல்ல
வீழ்ந்தே கிடப்பதே
வெட்கம்"
வீழ்ந்தேன் நான்
வெட்கப்பட்டாய்
நீ...
என்  இனிய காதலர்தின வாழ்த்துக்கள்


3.
(காதலர் தினத்திற்கு
முந்தைய நாள்
மாலையில்)
"காதல் பரிசாய்
உனக்கொன்று
தரப்போகிறேன்"
"என்ன அது ?"
பதிலை
நாளை
சொல்வதாய்
தொடர்பைத்
துண்டித்துக்
கொண்டாய் நீ
மறுமுறை
முயன்றும்
உன்னைத்
தொடர்பு
கொள்ள
முடியாமல்
போனது
என்னால் !
அடடா!
என்ன செய்வேன் !
என் கனவுக்
குதிரையின்
கடிவாளம்
அறுந்துவிட்டதே
இன்று
இரவு
அது
எங்கெல்லாம்
ஓடப்போகிறதோ ?
என்  இனிய காதலர்தின வாழ்த்துக்கள்...

4.
திறக்காத
மனங்கள்
எல்லாம்
திறந்து
கொள்ளும்
நாள் இன்று
திறந்து
நீயும்
சொல்லாவிடில்
எதற்குனக்கு
காதல்
என்று
தயக்கத்தை
மென்று
பயத்தைக்
கொன்று
தந்தே
விடு
அவ(ள்)ன்
கையில்
ரோஜா
ஒன்று
என்  இனிய காதலர்தின வாழ்த்துக்கள்...

5.
காதலர்தின வாழ்த்து
ஒருநாள் மட்டும்
கொண்டாடி மகிழ்வதற்கு
காதல் ஒன்றும்
திருவிழாவும் அல்ல
வைத்த அன்பை
திரும்ப பெறுவதற்கு
காதல் ஒன்றும்
கடனும் அல்ல..
என்  இனிய காதலர்தின வாழ்த்துக்கள்...
 
6.
ஓர் மாலைப்
பொழுதில்
மருதானி
கையிலிட்டு
வந்து
அழகாய்
சிவந்திருப்பதாய்
என்னிடம்
நீ சிவந்தாய்
எதற்கு
உனக்கு
மருதானி
என
கேட்குமுன்னர்
அடிவானம்
சிவந்திருந்தது
உன்னைப்
பார்த்து
எனக்கென்னவோ
அதன் நிறம்
போதவில்லையோ
என்றே
தோன்றியது
என்  இனிய காதலர்தின வாழ்த்துக்கள்...


7.
எனக்கே
என்னிடம்
பிடிக்காத
என்
முன்கோபம்
கூட ரசிக்கிறாய்
நீ
என் அசைவுகள்
அத்தனையும்
படம் பிடித்து
ரசிக்கும்
உன் கண்களாலும்
அது ஒய்வாக
இருக்கும்போது
உன் விரல்களின்
கவிதைகளாலும்
என் காதலை
தூண்டிக்
கொண்டேயிருக்கிறாய்
எனக்கொன்றும்
செய்யத்
தெரிவதில்லை
உன் மீதும்
உன்
கவிதைகள்
மீதும்
பைத்தியம்
கொள்வதைத்
தவிர

8
நீ கேட்டு
நான் கொடுக்க
காதல் என்ன
புத்தகமா?
பத்திரமாய் ஒருத்தனுக்கு  மட்டுமே
அர்ப்பணிக்கும்
இராண்டம் உயிர்
கேட்டவுடன் கிடைத்திடுமா

9
நீ என்ருகில் இல்லை
என்பது எவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை
நீ எனக்குள் இருகிறாய் என்பதும்

10
உன்னை மட்டுமே நேசித்து
உனக்காக வாழும் சுகம் போதும்
உன்னை எதிர் பார்த்தே வாழ்ந்திருப்பேன்
என் வாழ்நாளின் இறுதி வரை இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

11
நீ நேசித்த ஓன்று உன்னை விட்டு சென்றாலும் உன் நினைவை விட்டு செல்லாமல் காத்திருக்கும் உனக்காக!இனிய காதலர் தின வாழ்த்துகள்.

12
உன்னை ஏன் இதயம் என்று சொல்ல மாட்டேன். ஏன் தெரியமா? உன்னை துடிக்க விட்டு உயிர் வாழ எனக்கு விருப்பம் இல்ல


13
ஒவ்வொரு காதலர் தினத்திலும்
நீ தோல்வியையும்
விரக்தியையும் தான்
பரிசாக தந்தாய் எனக்கு...
இந்த காதலர் தினத்தில்
எதை தரபோகின்றாய்
என்ற எதிர்பார்ப்பில்
ரோஜாவோடு நான் இருக்கிறேன்.


14
தினம் தினம்
சுவாரசியமாக
காதலிக்கும்
நமக்கு காதலர்
தினம் தேவையில்லை...
இன்று,
மற்றுமொரு நாளே....!!
இருந்தாலும்,
"காதலர் தின"
வாழ்த்துக்கள்....!!!


15
நிறைய நீ;
கொஞ்சம் நானென
இன்னும் வாழ்கின்றன
காதலர் தினங்கள்..


16
உன் தொலைப்பேசி
முத்தங்களுக்கெல்லாம்
மௌனமே காக்கிறேன்
பரிசுகளாக திருப்பித்தர
காதலர் தினத்தை
எதிர்பார்த்து...

17
வாழ்த்துமடல்களில்லை,
வந்து குவியும் பரிசுகளில்லை,
நான் அங்கும், நீ இங்குமில்லை,
எல்லா விடுமுறை நாட்களின்
மதியப் பொழுதின்
வெறுமைப் போலவே
கழிகிறது
இந்த காதலர் தினமும்...


18
உன்னுடன் நான் கழித்த
நொடிகளைத்தான்
உருக்கி வார்த்து
உலகம் கொண்டாடுகிறது
காதலர் தினமென...


19
இந்தக் காதலர் தினத்திலாவது
தந்துவிடுவாய்
என ஏக்கத்துடன் நான்...
பிரிவிற்கு பின்னும்
உன்னுடையதாகவே இருக்கும்
என்னிதயம்...


20
இந்தக் காதலர் தினத்திலாவது
தந்துவிடுவாய்
என ஏக்கத்துடன் நான்...
பிரிவிற்கு பின்னும்
உன்னுடையதாகவே இருக்கும்
என்னிதயம்...


21
உன் பிறப்பு

உன் தாய்க்குத்

தாய்மையையும்,

எனக்கு

வாழ்வையும்

தந்தது...
இனிய காதலர் தின வாழ்த்துக்கள் ....