வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

திரை கவிதைகள்

கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் ஏங்குதேமுத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்றும் ஏங்குதே வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பக் கணம் கேட்குதே கேட்குதே... பாறையில் செய்ததும் என் மனம் என்றுதோழிக்கு சொல்லியிருந்தேன் பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்து விட்டாய் எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை...

2.
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
ததளிக்கும் மனமே ததை வருவாள
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாள
கொஞ்சம் பொரு கொலுசொலி கேட்கிரதெய்
(என்னை தாலாட்ட...)
பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பேயரில் மாற்றினாள்
காதல் தாயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராத
நான் தூங்க மடி ஒன்று தாராத
தாகங்கள் தாபங்கள் தீராத
தாளங்கள் ராகங்கள் சேராத
வழியோரம் விழி வைக்கிரேன்
எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலுக்கு நீரூற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்
(என்னை தாலாட்ட...)

3.
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
(ஒரு பொய்யாவது..)
பூக்களில் உன்னால் சத்தம்
அடி மெளனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
பெண்மையும் மென்மையும் பக்கம் பக்கம்தான்
ரொம்பப் பக்கம் பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும் வேறுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்
பார்க்கும் கண்கள் ஒன்றுதான்
உண்டால் ரெண்டும் வேறுதான்
(ஒரு பொய்யாவது...)
இரவினைத் திரட்டி..யி..யி.......ஓ.....
இரவினைத் திரட்டி கண்மணி உன் கூந்தல் செய்தானோ
கண்மணி உன் கூந்தல் செய்தானோ
நிலவின் ஒளி எடுத்து கண்கள் செய்தானோ...
விண்மீன், விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டு
தங்கம், தங்கம் பூசி தோல் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
(ஒரு பொய்யாவது..)
நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே
அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னதும் நீதானே
ஒ.. காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தவள் யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே
ஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
காதல் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
(ஒரு பொய்யாவது....)
 
4.
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத் தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன
ஓ....கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்ல
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா
காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே
ஓடோடி வா...
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வ
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்ல
வானம் எங்கும் உன் ‌பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத் தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்...


5.
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழை காலம்
என் வாழ்வில் வருமா
மழை கிளியே மழை கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே சென்றேனே
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழை காலம்
என் வாழ்வில் வருமா
மழை கிளியே மழை கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே சென்றேனே
கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானா எந்தன் கால் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால்
நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் திரிந்திடுமே
ஒ ..ஒ ..ஒ ..
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழை காலம்
என் வாழ்வில் வருமா
மழை கிளியே மழை கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே சென்றேனே
ஆசை என்னும் தூண்டில் முள் தான்
மீனை நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட
மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ
புது மயக்கம்
இது மாய வலை அல்லவா
புது மோக நிலை அல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னை பிடிக்கும்
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழை காலம்
என் வாழ்வில் வருமா


6.
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே
என் ந‌தியே என் க‌ண் முன்னால் வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்
என் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில்
ஏன் சேர்கிறாய்.
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே.
க‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னைக் காணாம‌ல்
வானும் என் ம‌ண்ணும்
பொய்யாக‌ க‌ண்டேனே.
அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான் ஏற்றுப் போனேனே
வெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிரிவொன்றை க‌ண்டால்தான் காத‌ல் ருசியாகும்
உன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே
க‌ள்வா என் க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்ஞும் என் பேச்சை கேட்காதே
காத‌ல் மெய் காத‌ல் அது ப‌ட்டு போகாதே
காற்றும் நாம் பூமி ந‌மை விட்டு போகாதே
ஆகாய‌ம் இட‌ம் மாறி போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறி போக‌ கூடாதே
ஏ ம‌ச்ச‌த் தாம‌ரையே
என் உச்ச‌த் தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும்
ந‌ம் காத‌ல் மாறாதே
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே
என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ எனை தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்
உன் தாக‌ங்க‌ள் தீராம‌ல் ம‌ழையே
ஏன் வ‌ருகிறாய்...


7.
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்
நான் தலை தாழ்ந்து தொழுதேன்
என் தலை மீது நடந்தாய்
உலகை உலகை உன்னால் வெறுத்தேன்
உறவாய் உறவாய் உன்னையே நினைத்தேன்
இந்த உலகெல்லாம் நான் இழந்தாலும்
என் பனி பூவே உன்னை பார்த்தால் போதும்
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்
நீ எங்கே சென்று சேர்ந்தாலும்
உன் நிழல் வழியே வருவேன்
தீயோடு என்னை எரித்தாலும்
நீ தீண்டி விட்டால் உயிர்ப்பேன்
ஒரு முறை முகம் பார்க்க துடிக்குது உள்ளம்
காவிரி நதி தாண்டும் கண்களில் வெள்ளம்
காதல் உறவை எரித்திடுமா  ?
இதுதான் காதல் சரித்திரமா ?
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்
நான் தலை தாழ்ந்து தொழுதேன்
என் தலை மீது நடந்தாய்
உலகை உலகை உன்னால் வெறுத்தேன்
உறவாய் உறவாய் உன்னையே நினைத்தேன்
இந்த உலகெல்லாம் நான் இழந்தாலும்
என் பனி பூவே உன்னை பார்த்தால் போதும்
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்...


8.
உலகில் எந்தக்காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதலாகாது
எல்லாமே சந்தர்ப்பம் கற்ப்பிக்கும் தப்பர்த்தம்
(உலகில்..)
நினைவுகளாலே நிச்சயதார்த்தம் நடந்தது அவனோடு
அவனை அல்லாது அடுத்தவன் மாலை ஏற்பது பெறும்பாடு
ஒரு புறம் தலைவன் மறுபுறம் தகப்பன்
இருகொள்ளி எறும்பானாள்
பாசத்துக்காக காதலைத் தொலைத்து ஆலையில் கரும்பானாள்
யார் காரணம்
யார் பாவம் யாரைச் சேரும்
யார்தான் செந்நிழல் கண்ணீர் வாழ்த்தா கண்ணீர் ஆனான்
சுற்றம் செய்த குற்றம் தானே
உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை
உணர்வைப் பார்ப்பதேது உறவின் சூழ்நிலை
மனம் என்னும் குளத்தில் விழியென்னும் கல்லை
முதன் முதல் எறிந்தாளே
அலை அலையாக ஆசைகள் எழும்ப அவள் வசம் விழுந்தானே
நதி வழிப்போனால் கரைவரக்கூடும் விதிவழிப்போனானே
விதை ஒன்றூப்போட வேறொன்று முளைத்த கதை என்று ஆனானே
எந் சொல்வது என் சொல்வது
தான் கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தாய்
கற்பைப்போலே நட்பைப் பார்த்தான்
காதல் தோற்கும் என்றாப்பார்த்தான்
(உலகில்..)


9.
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
கொடுத்து வைத்தப் பூவே பூவே
அவள் கூந்தல் மணம் சொல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்தச் சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்தக் கொலுசே
கால் அழகைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே
மார் அழகைச் சொல்வாயா
அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிரால் உறையிடுவேன்
மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளித்
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே...


10.
அன்பே..
என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..
நடைப்போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா
என் வாசல்தான்
வந்தால் வாழ்வேனே நான்
ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்..
என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்த காதலென்றால்
என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே....


11.
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று உன்னை
கண்டதும் கண்டு கொண்டேன்
கழுத்து வரை எந்தன் காதல் வந்து
கண்விழி பிதுங்கி நின்றேன்
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் என்னை பார்ப்பது போல் ஒரு கலக்குமும் தோன்றுதடி
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்
வாழ்வதும் வீழ்வதும் போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டு கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக் கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்நிலவே உன்னை தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சுடக்குகெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை காதுக்குள் ஒதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள் புதிய
கவிதைகள் என்றுரைப்பேன்
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று உன்னை
கண்டதும் கண்டு கொண்டேன்
கழுத்து வரை எந்தன் காதல் வந்து
கண்விழி பிதுங்கி நின்றேன்
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்.....


12.
காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவும் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்சம் ஆகும்
காதலின் சங்கீதமே
ம்ம் ம்ம் பூமியின் பூபாளமே
(காதலின்..)
காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே
காதல் ஒன்னும் குற்றம் கிற்றம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே
குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்தால் ல‌ட்ச ரூபாய்
ம்ம் ம்ம்..
(காதலிக்கும்..)
காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட ராசி ஆகுமே
காதலுக்கு அன்னபட்சி தேவையில்லையே
காக்கை கூட தூது போகுமே
காதல் ஜோதி குறைவதில்லை
காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை
இது நட்பமாந்தோ எதுவும் இல்லை
இந்த நுட்பம் ஊருக்கு புரிவதில்லை
பாலும் வண்ணம் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆதாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே
காதல் கெட்ட வார்த்தையா என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் இன்று
காதல் முள்ளின் வேலியா என்ன யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் இன்று..


13.
பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா....
(பேசுகிறேன்..)
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே.. ஓஹோ
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே....
வளைவில்லாமல் மலை கிடையாது
வலியில்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா.....
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..
காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னைக் காக்கவே தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்ச நேரம்தானே
உன்னைத் தோண்டினால்
இன்பம் தோன்றுமே
விடியாமல்தான் ஓர் இரவேது
வடியாமல்தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா...
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..
(பேசுகிறேன்..)

14.
காதல் சிலுவையில்.. அறைந்தால் என்னை...
தீயின் குடுவையில்.. அடைத்தால் கண்ணை...
காதல் சிலுவையில்.. அறைந்தால் என்னை...
தீயின் குடுவையில்.. அடைத்தால் கண்ணை...
கனவுகளில் விழுந்த என்னை கவலையிட மனம் புகுகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள்
உயிரும் விழும் போது உறவுகளும் வீணோ...
உலகம் இதுதானோ....
கழுகுகளின் கண்களிலே மரண பயம் இல்லை
ஊமைகளின் தாலாட்டை செவி உணர வாய்ப்பில்லை
புழுதியிலே இரத்தினமாய் இருந்தது ஒரு தொல்லை
பாவங்களை பாராமல் பழகியதனால் தொல்லை
தேவை பூமியை தினமும் தேனாக்கும்
கோபம் துயரங்களை சேர்க்கும்
கனவுகளில் விழுந்த என்னை கவலையிட மனம் புகுகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள்
உயிரும் விழும் போது... உறவுகளும் வீணோ...
உலகம் இதுதானோ....
அவளுடைய கற்பனையை எழுத வழியில்லை
கூண்டுக்கிளி நான் ஆனேன் வெளிவரவும் வாய்ப்பில்லை
இவனுடைய உண்மைகளை உளர வழியில்லை
தோல்விகளின் வீடானேன் துணை வரவும் ஆளில்லை
வாழும் மானிடரின் சுமைகள் தீராது
காலம் உறவுகளின் தீவு
கனவுகளில் விழுந்த என்னை கவலையிட மனம் புகுகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள்
உயிரும் விழும் போது... உறவுகளும் வீணோ...
உலகம் இதுதானோ....
(காதல் சிலுவையில்...)


15.
காதல் நீதானா காதல் நீதானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா
தெரிந்ததே உன் முகம் மறந்ததே என் முகம்
வழிந்ததே சந்தனம் நனைந்ததே குங்குமம்
என் வானமும் என் பூமியும் உன்னிடம்
(காதல் நீதானா..)
எந்த குரல் கேட்டால் என்ன தோன்றுது உனக்கென்ன தோன்றுது?
நேரில் பார்க்கச் சொல்லி என்னை தூண்டுது அது என்னை தீண்டுது
கேட்காத குயில் ஓசை கேட்குதே உன் வார்த்தயில்
நாம் பேசும் சொல்லும் கவிதை ஆகுதே நம் காதலில்
கேலண்டரில் தேத்ஹிகளை என்னுகின்றேன் நாளும்
தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம்
(காதல் நீதானா..)
என்ன கனவு கண்டாய் நீ வந்தாய் முத்தம் தந்தாய்
பதிலுக்கென தந்தாய் போ போ போ சொல்ல மாட்டேன் போ
கனவில் நீ செய்த குறூம்பை நேரிலே நான் செய்யவா?
கனவின் முத்தங்கள் காயவில்லையே அதை சொல்லவா?
பார்க்காமலே கேட்காமலே போகின்றதே காலம்
சொர்க்கத்திலே சேர்கின்றதே உன் ஞாபகம்..
(காதல் நீதானா..)


16.
உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்
(உன் பேர்...)
உன்தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் நுழைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்.
(உன் பேர்...)
கண்ணில் கடைக் கண்ணில் நீயும் பார்த்தால் போதுமே
கால்கள் இந்தக் கால்கள் காதல் கோலம் போடுமே
நாணம் கொண்டு மேகம் ஒன்று மறையும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன
தூக்கத்தில் உன்பேரை நான் சொல்ல காரணம் காதல் தானே
பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன்தான் உன்னைப் படைத்ததாலே
(உன் பேர்...)
நீயும் என்னைப் பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால் மறு பிறவி தொடருமே
நீயும் கோவிலானால் சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபமானால் அங்கு ஒளியுமாகிறேன்.
வானின்றி வெண்ணிலா இங்கில்லை நாமின்றி காதல் இல்லையே
காலம் மறைந்த பின்னும் கூந்தல் நரைத்தபின்னும் அன்பில் மாற்றம் இல்லையே
(உன் பேர்..)


17.
லவ் லெட்டர் - கண்ணா லட்டு தின்ன ஆசையா
லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன்
இன்னும் எழுதல
அத உன்னிடம் கொடுக்க ஆசைப்பட்டேன்
கொடுக்க முடியல
கானா கத்துக்க வந்தேன் நானு உங்க வீட்டில
பெட்ரோல் இல்லாத காராட்டம் நின்னேன் ரோட்டுல
லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன்
இன்னும் எழுதல
அத உன்னிடம் கொடுக்க ஆசைப்பட்டேன்
கொடுக்க முடியல
உன் சித்தி டார்ச்சர நான் தாங்கி
உன் சித்தப்பன் கிட்ட அடிவாங்கி
லவ் பண்ணேன் உன்னைத்தான்
உன் தம்பி வந்தான் எமனாட்டம்
தினமும் எனக்கு போராட்டம்
கிழிஞ்சு போச்சு என் பெல்பாட்டம்
தொரத்தி தொரத்தி காதலிச்சேன்
வெறி பிடிச்ச நாயாட்டம்
எகிறி குதிச்சு ஒடுறியே
வண்டலூரு மானாட்டம்
நான் அப்பாடக்கரு
இந்தா வங்கிக்க லெட்டரு
அன்ன நடை போடாத
என்ன ஆட்டிபடைக்காத
என் வொய்ப்பா வந்திடு
ஆசைய மூடி மறைக்காத
உங்கப்பன் பேச்சை மதிக்காத
ஐ லவ் யூ சொல்லிடு
விளம்பரத்த பாத்துக்கிட்டு
விழுந்திடாத ஆத்துக்குள்ள
நடனமாடி காட்டிடுவான்
மாட்டிக்காத சேத்துக்குள்ள
அவன் சைனா மேடு மா
இவன் பக்கா பிராடு மா
அவன் சைனா மேடு மா
இவன் பக்கா பிராடு மா


18.
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா
இந்த பொண்ணுங்களே இப்படிதான் புரிஞ்சுபோச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா
பின்னால சுத்த வச்சி பித்துக்குளி ஆகா வச்சிஇல்லாத கணக்கயெல்லாம் போடுவாங்கடா
அவங்க பார்வையாள பால்டாயில ஊத்துவாங்கடா
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா
கார்ட வாங்கி கொடுக்கிறோம் கவிதை எழுதி கொடுக்கிறோம்
செல்லு வாங்கி கொடுக்கிறோம் ரீசார்ஜும் பண்ணி கொடுக்கிறோம்
அன்ப கூட வாரி வாரி கொடுக்கிறோம்
அவங்க வீடுக்கும்தான் ரேஷன் வாங்கி கொடுக்கிறோம்
நம்ம கொடுத்ததையெல்லாம் வாங்கிகிட்ட அவங்க தான்
நமக்கு வேதனைய குடுகிறாங்க என்னடா
இதுல நீதி நேர்மை இருக்குதான்னு சொல்லுடா சொல்லுடா
பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா
வீடு வாசல் மறக்குறோம் வெட்கம் ரோஷம் மறக்குறோம்
நல்ல தூங்க மறக்குறோம் நண்பனையும் மறக்குறோம்
நாளு கிழமை கூட நாம மறக்குறோம்
அவங்க நெனப்புல தான் எல்லாத்தையும் மறக்குறோம்
நாம மறப்பதெல்லாம் தெரிஞ்சிக்கிட்ட அவங்க தான்
நம்மள போற போக்கில் மறக்குறாங்க என்னாடா
இந்த சோகம் மறக்க குடிகிறேன்னு சொல்லுடா சொல்லுடா
பொண்ணுங்களே இந்த பொண்ணுங்களே
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா
பின்னால சுத்த வச்சி பித்துக்குளி ஆக வச்சி
இல்லாத கணக்கயெல்லாம் போடுவாங்கடா
அவங்க பார்வையால பால்டாயில ஊத்துவாங்கடா     
இல்லாத கணக்கயெல்லாம் போடுவாங்கடா
அவங்க பார்வையால பால்டாயில ஊத்துவாங்கடா..


19.
தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில் போலிந்த மாளிகை எதற்காக?
தேவியே என் ஜீவனே இந்த ஆலையம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்?
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுக்குள் அடைப்பேன்
சத்தியமாகவா?
நான் சத்தியம் செய்யவா..
(தொடு தொடு..)
இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்?
நட்சத்திரங்களை தூசு தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப்போய்விடுவேன் என் செய்வாய்?
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் தந்தே உயிர் தருவேன்
ஏ ராஜா இது மெய்தானா?
ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை
(தொடு தொடு..)
நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
இதில் எங்கு நீச்சலடிக்க?
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க
இந்த நீரிலே அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு?
காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கைது செய்வதென ஏற்பாடு
பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்
ஏ ராணி அந்த இந்திரலோகத்தில்
நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்
உன் அன்பு அது போதும்
(தொடு தொடு..)


20.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிகொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிகொள்ளடா
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணியேற்கும்
கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா
செஞ்சோற்று கடன் தீர்த்த
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா  கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
வஞ்சகன் கண்ணனடா

21.
ஆறாத ஆசைகள் தோன்றும் என்னை தூண்டும்
ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மொகம் பாதி
என்னை கொல்லும் என்னாளும்
22.
நேரம் கூடிவந்த வேலை
நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
நேரம் கூடிவந்த வேலை
நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
என் காதலி


23.
என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்திவிட்டுப் போகும்
என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்திவிட்டுப் போகும்
உன் வாசலில் எனைக் கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே


24.
ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே


25.
வாசம் பூவாசம் வாலிப காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிகை பூ மனம் வீசும்
நேசத்துல வந்த வாசத்துல
நெஞ்சம் பாடுது ஜோடிய தேடுது பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடைய போடுது பார்வையில்
சொந்தம் தேடுது மேடையில


26.
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
அலைபோல நினைவாக


27.
நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே ஓ பூவும் ஆளானதே


28.
பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலை
ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான் ஊர்போவது நாளாலதான்
கருவோடு வந்தது தெருவோடு போவது
கருவோடு வந்தது தெருவோடு போவது
மெய் என்று மேனியை யார் சொன்னது


29.
எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீரூற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்
Previous Post
Next Post

0 Comments: