செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

ஹைக்கூ கவிதைகள்


இருக்கும் நொடியும்
இழக்கும் நொடியும்
உனக்காக உன்னைக்
காணவே.

காலம் கவிதை பாடும் போது நாம் இசை அமைத்தால் இசை விருந்து இசை அமைக்கா விட்டால் இசைக்கு நாம் விருந்து  - நேரம்
- தேனி முத்துகுமார்

நீ இன்றி போனால்
உயிர் இன்றி தவிக்கும்
நாம் கொண்ட காதலும் இங்கே !

அளவிற்கு அதிகமாக அன்பு எல்லாம்
அளவில்லாமல் அழ வைக்கும் என்று
சொன்னாலும் கேட்பதில்லை மனம்!

காயம் இன்றி கூட கண்ணீர் உண்டு
உண்மையான அன்பை உணரும்போது...!

உன்னிடம் உள்ளது உண்மை அன்பென்றபோது
தவறாமல் கிடைக்கும் வேதனைகள் ...!

மனமெல்லாம் "மழை" வரும் வானிலை
என்னை கண்டு உன் புன்னகை வெளிவரும்போது!

உன்னைப் போலவே...அழகாக இருக்கிறது, உன் மௌனத்திற்கான ஒவ்வொரு காரணங்களும்!

நாம் யாரென சொல்ல
உன்னை என்னிடம் சேர்க்க
தேடி வந்தது தான் காதல்...!

புன்னகையை கட்டி வைக்க வெட்கமும் உண்டு
சோகத்தை தீர்த்து வைக்க கண்ணீரும் உண்டு
இரண்டும் வலிமைதான் பெண்களுக்கு!

இதயத்தில் அவளையும்❤...
அவள் தாய்மையில் என் உயிரையும்❤ சேர்த்து
உணர்வாக்கிகொண்டு சுமக்கும் எனக்கும்முண்டு
பிரசவ வலிகள் மனதிற்குள்❤!
-ஆண்கள்☻

முத்தமிட முயல்கின்ற மழைக்கும்
எண்ணிக்கையை அதிகமாக்க முயற்சிக்கும் எனக்கும்
காதலின்றி வேறொன்றுமில்லை ...!
-மழைகாதலி.

முதல் காதல் கடிதம்:

முதல் காதல் கடிதம்.....
புதிதாய் படிக்கிறேன்..
நூறாவது முறையாய்...

தூக்கம் வராமல்
முதலாளி...
தூங்கி வழியும்
வாட்ச்மேன.........முரண்.

தாடி ...

உன் காதலின் அடையாளமாய் கால தேவன் எனக்கு இட்ட கருப்பு தழும்பு ...

கிரிக்கட் காதல்
நானும் நீயும் ..
அவ்வப்போது முரண் பட்டாலும்
எமக்குள் உறவுதான் இருந்தது

மூன்றாம் நபர் குறுக்கிட்டதால்
அவுட்டாகி விட்டோம்
கிரிக்கட்டை போல...

கிறிஸ்மஸ்
கடவுளுக்கும் கூட
உன் மேல் தான்
பிரியம் அதிகம்...

பின்னே,
வருடத்தில் 365 நாட்களிருக்க
அவர் பிறப்பதற்கும் உன்
பிறந்த நாளையே
தேர்ந்தேடுப்பாரா என்ன!

- கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்

முத்தம்
எப்போதும் நான்
கோபப்படாமலேயே
இருக்க விரும்புகிறேன்...

நீ பூக்களுக்கு
முத்தமிடுவதைப்
பார்த்த போதும் கூட...

ஹைக்கூ
வெண்மேகம்
மழை தூறுகிறது... பாட்டியின்
தலை துவட்டல்...

கொலுசு
♪♪♪♪♪
உன் இதய திருடன்
நான் இருக்கும் போதும்
கொலுசு வேண்டுமாடி
உனக்கு....?♥♥
என்னுடன்
நீ இருக்கும் போது♥♥♥
ஏன் உன் கொலுசு
சத்தம் போட்டு
ஊரை கூட்டுகிறது....???
ஏன்...??
அது உன்னுடைய கொலுசு
என்பதாலா,
அல்லது
நான் திருடன்
என்பதாலா.....??????

பெண்மை
என்ற பெயரை அழகாக்கும்
பருவம் தான்
‪#‎தாய்மை‬

சில குப்பை தொட்டிகளுக்கு கிடைத்த வரங்கள் கூட பல பெண்களுக்கு கிடைக்கவில்லை ‪#‎தாய்மை‬

தீபாவளி

ஒளிகளின் வரிசை தீபாவளியெனில்,
உன் பார்வையும்
தீபாவளிதான்!

குழந்தை மனம்...

அனைவரும்
படிக்கவேண்டிய
மிகப்பெரிய காவியம்.

தாய் பாசம்....

இரும்பு சிறையில் 
இருந்துகூட தப்பி விடலாம் - ஆனால்
அவள் விழி சிறையில் இருந்து தப்ப இயலாது

பசி

சமூகப்பணியில் மாடுகள்
நகரத்துச் சுவர்களில்
ஆபாச சுவரொட்டிகள்

சொல்வதெல்லாம் உண்மை!

"பெட்ரோலைச் சேமிக்க சிறந்த வழி..
கேர்ள் ஃபிரெண்ட்
இல்லாமல் இருப்பது!"

தீ

தந்தியை விட
வேகமாகச் சென்றடைகிறது
வதந்தி!

இறுதிப் பூக்கள்...!

சாலை முழுவதும்
பூக்கள்...
வரவேற்க அல்ல
வழியனுப்புவதற்கு

அடடே..!
மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
கூட்டக் கூட்ட
குறைந்து போனது
துடைப்பம்!

முழு நிலவு....

பொட்டு
மூன்றாம் பிறை
நெற்றியில்
முழு நிலவு

தாஜ்மகால்....

மனைவி இறந்தற்காக
கணவன் கட்டிய
வெள்ளை புடவை

முத்தம்.....

நான் எதிர்பாராத நேரங்களில்
அவள் தரும் - முத்தம்
எனக்கு ஆஸ்கர்

என்னுள் நீ......

என் அந்தாதி நீதான் - இதில்
எங்கே தேடுகிறாய் என்னுள்
உன்னை!!!!!!...........

மழை.....

வானம் அழுகிறது.....
கண்ணீரை ஏந்திய மண்..
சிரிக்கிறது.....

அன்பு

அறிமுகப்படுத்த அன்பு தேவையில்லை....
அன்பை காட்ட அறிமுகம் தேவையில்லை....

மீன் தொட்டி

உன் மீன் தொட்டிக்குள்
என் மனது - பராமரிப்பது
நீ என்பதால் மட்டும்!

அம்மா...

இப்பொழுதே மரிக்க தயார்,
மறுஜென்மமும்
என் ஜனனம்
உன் கருவறையில் என்றால்!!

செய்யாதே!!!

அன்பே! நம்மை கண் இமைகளோடு ஒப்பிடாதே
கண்கள் இமைக்கும் வரை பிரிந்திருக்க நேரிடும்!!!

நிலா....

காப்பாற்றினேன்
வாளியில் வந்தது
கிணற்று நிலா!

தற்கொலை.....

வீரமான கோழைத்தனம்
புரியவில்லையா?
கோழையால் மட்டுமே
சாத்தியப்படும் வீரசெயல்....

உனக்காக

நீ இன்றி
உன் நினைவுகளை
நேசிக்கின்றேன்

கடிகாரம்

பலருக்கு ஓய்வு நேரம்
காட்டுகிறது
தான்
ஓய்வெடுக்காமல்

சுயநலம்!!!

வெறும் தொட்டில்களை பரிசளித்துவிட்டு,
குழந்தைகளை வரமாக்கி கொள்வது!!!

காலணி.....

நான் காலணி அணியவில்லை என்று
சலித்து கொண்டு இருந்தேன்,
கால் ஊனமுற்ற ஒருவரை
பார்க்காதவரை.....

திருநங்கை

உதாரணம்:
பிரம்மனுக்கும் மறதி
உண்டு
என்பதற்கு.

நான் ரசித்த கவிதை......

நீ என்னை வெறுத்து திட்டும்
சில வார்த்தைகள் கூட
நான் ரசிக்கும் ஒரு கவிதை அன்பே.

மீசை.....

இந்த மீசை.,
என்ன இறக்கைகளா..
முளைத்த உடன்.,
மனதை பறக்க செய்ததே...!!!

கிடச்சா உடைச்சிடுறாங்க...
கிடைக்கலனா உடைஞ்சு போறாங்க ‪#‎காதல்‬

காதலிக்கும் செருப்புக்கும் உள்ள வித்தியாசம்...!!!
.
புதிய காதலி
முதல்ல இனிக்கும்
பழக பழக கடிக்க
ஆரம்பிச்சுரும்....
.
புதிய செருப்பு முதல்ல கடிக்கும்
போக போக பழகிரும்...
‪‎கடிக்கும்_கடிக்காது‬ .

Previous Post
Next Post

0 Comments: