சனி, 13 பிப்ரவரி, 2016

காதல் கவிதைகள்


1.
விழி நோக்கும் ஆண்மகனை
விரும்புவாளாம் பெண்மகள் !
விழி காண வழியில்லை !
நீ அங்கே !நான்இங்கே !
விரும்புவாயா என்னை?

2
சற்று நீ முன் சிரித்தபோது தான்
சிதறித் தொலைந்தேன் நான் !
அதை மெல்ல தேடி எடுப்பதற்குள்
ஏன் மறுபடி சிரித்தாய் ?

3
அடி என்னவளே ! -உன்
கருவிழி மேகங்கள்
கண்ணுக்குள் மோதிக்கொண்டு
கருங்குளத்து நீர்
கன்னங்களில் வழியும் பொது - என்
இதயக் குளத்தின்
செந்நீர் சிதறி
சாலையில் ஓடுதடி- என்னை
சோகத்தில் வாட்டுதடி.
வழிகின்ற நீர் - உன்
வாய்க் கமலத்தில்
வடிந்து விட்டால் - நீ
மகிழ்ச்சியால் சற்று சிரித்து விட்டால் - என்
இதயத்தின் நீரெல்லாம்
ஓட மறுத்து
ஒரு நிமிடம் உறைந்து
உன் அழகை ரசிக்குதடி
உன்னை முத்தமிட துடிக்குதடி
கண்கள் தான் காதலின் பிறப்பிடம்
கவிஞர்கள் சொல்கிறார்கள் - உன்
கண்ணீரல்லவா என் உயிரின் இருப்பிடம்
நான் சொல்கிறேன்.
சிந்தி விடாதே - என் செல்லமே !
கண்ணீரை மட்டுமல்ல - என்
காதலையும் தான்.    - சத்தியசீலன்

4
இனிமேல் என்கிட்ட பேசாதே என்று
சொல்லிவிட்டு அரை மணி நேரத்தில்
நீ இன்னும் சாப்பிடலாயாடானு
கேக்கும் காதல் வரம்...

5
வாழ்க்கையில் எது
கிடைக்காமல் போனாலும்
பரவாயில்லை நம் மீது
அன்பும் அக்கறையும் கொண்ட
சில உறவுகள் மட்டும்
கிடைத்தால் போதும்..!!

6
நூறு பெண்களிடம் காதல்
சொல்வது உண்மையான
காதல் இல்லை,
நூறு முறை ஒரே பெண்ணிடம்
சொல்வது தான் உண்மையான
காதல்!!!

7
தேர்வுக்கு தயாராகும் மாணவன் போல்
இன்று,நாளை,நாளை மறுநாள் என்று
காலம் கடத்துகிறேன் என் காதலை சொல்ல
சொல்வதற்கு வார்த்தை இல்லை என்று
தமிழ் மீது பழி போடுகிறேன்
சொல்ல தைரியமற்ற கோழை ஆனதால்
நாட்கள் வாரங்கள் வருடங்கள் என
என் காதல் செடி தன் கனவு
வேர்களில் கால் ஊன்றி மரமாகி விட்டது
காரணங்கள் பல சொல்லி என்
மனம் என்னை தேற்றுகிறது
இன்றளவும் என் காதலை
உன்னிடம் சொல்வதற்கு தயங்குகிறேன்
தயங்கி தயங்கி ஏனோ என் காதல்
ஒரு தலை காதலாகவே நெஞ்சின்
ஓரத்தில் உறைந்தே போய் விட்டது
உறைந்து போனது என் காதல் மட்டுமல்ல
என் உயிரும் தான்....

8
மறக்க
நினைக்கிறன்
உன்னை
அல்ல,
உன்னிடம்
பேசாமல்
விட்ட அந்த
நிமிடங்களை!!!

9
கண் சிமிட்டாமல் உன்னை பார்க்க ஆசைப் பட்டேன்.
ஆனால்,
இப்போது உன்னை கண் சிமிட்டும் நேரமாவது பார்க்க ஆசை படுகிறேன்!!!

10
கனவுகளுக்கு எச்சரிக்கை...
கனவில் வந்த காதலி
அவளாகசென்று
எனக்கு நினைவு திரும்பும்வரை..
கலைத்து விடாதீர்கள்..
எங்கள் கனவுகளையும்....
காதலையும்.......

11
நான் உன்னிடம்
கனவிலும் நினைவிலும்
பேசியிருந்தாலும்
நீ என்னிடம் பேசிய
அந்த நொடியில் தான்
கனிந்து கசிந்தது
என் காதல்.....!

12
நான் உன் பெயரை
கோடி முறை
ஜெபித்திருந்தாலும்
நீ என் பேர் சொன்ன
அந்த நொடியில் தான்
முதல் பூ பூத்தது
என் காதல்....!

13
நான் உன்னை
ஆயிரம் முறை
பார்த்திருந்தாலும்
நீ என்னைப் பார்த்த
அந்த நொடியில் தான்
விதையாய் விழுந்தது
என் காதல்....!

14
உன்னிடம் நான் பேசியது இல்லை என்றாலும்..
உன்னைப்பற்றி அதிகமாகவே பேசிக்கொண்டிருக்கிறேன்
மற்றவர்களிடம் உன்னை
மறந்துவிடக்கூடாது என்பதற்காக..!

15
காதலுக்கு கள்ளத்தனம்
தெரியாது என்கிறாய்
பிறகு எப்படி?
என் இதய அறையின்
எல்லா கதவுகளையும்
பூட்டியபின்பும்
எனக்குள் வந்தாய்....?!

16
இதயங்கள் சொல்ல நினைக்கும் வார்த்தைகளை
இதழ்கள் சொல்லாமல் மறைப்பதால்தான்
காதல் இன்னும்
தோற்றுக்கொண்டிருக்கிறது...!

17
நீ பேசிய ...
மொழியே காதல் ......
பொது மொழி ....
நீ கொஞ்சிப்பேசினால் ....
இலக்கணம் .....
கோபப்பட்டால் ....
காவியம் ....!!!

18
இத்தனை அடைமழை ....
பொழிந்துமா உன் இதயம் ....
ஈரமாக வில்லை ....?
எத்தனை காதலை ....
இணைத்து வைத்துள்ளது ...
இந்த அடைமழை ....!!!

19
உன்னிடம்
என்னை பற்றி சொல்ல ...
என்ன இருக்கிறது ...?
என் பிறப்பிடம் காதல் ...
நிரந்தர வசிப்பிடம் காதல் ...
தற்போதைய முகவரி ...
உன் மீது வைத்த காதல் ....!!!

20
காதலில்
தான் பொய்யும் அழகு
களவும் அழகு ...
என் வீட்டுக்கு முதல் ...
முதலில் வந்தபோது ...
இரண்டையும் செய்தாய் ....!!!

21
பூ போன்ற பாதமும்
பட்டு போன்ற மேனியும்
கள்ளங்கபடமற்ற சிரிப்பையும்
கொண்டு என்னை
அடிமைப்படுத்தியவள் நீ தானே
என் அன்பு தேவதையே -ஸ்ரிவிஷா

22
என் கண் இமைகள்
கூட மூடிவிடலாம்
ஆனால் என் இதய
கதவு என்றும்
திறந்தே இருக்கும்
உன் வரவை எதிர்பார்த்து -ஸ்ரிவிஷா

23
தண்ணி இல்லையேல்
மீன்கள் துடிதுடிக்கும்..!
அன்பே நீ இல்லையேல்
என் இதயம் துடிப்பதை
நிறுத்திவிடுகிறது..!!
-ஸ்ரிவிஷா

24
காலை பனியில் கன்னியவள் கனவில் வந்தது கனவோ இல்லை என்னவளின்  நினைவோ .......
- தேனி முத்துகுமார்

25
எத்தனை முறை கேட்டிருப்பேன் என்னை நேசிக்கிறாயா என்று.... ஒரு முறை கூட சொன்னதில்லை உன் நேசத்தை.... காலத்தின் சூறாவளி நம்மை எதிரெதிரே எறிந்தது... இரண்டு மகாமகம் கழித்து இரவு நேர ரயில் பயணத்தில் எதிர்பாராமல் சந்தித்தோம்... நேரெதிரே இருந்தும் கூட மவுனம் மட்டுமே நம் பாஷையானது... சிலர் வாழ்க்கையில் விளையாட்டு வினையாகும்... நம் வாழ்க்கையில் விதியே விளையாடியது... நள்ளிரவு கடந்தும் கண்கள் மூடவில்லை... ரயிலின் சப்தத்தைவிட உன் இதயத்துடிப்பின் ஓசைதான் அதிகமாய் கேட்டது.... இது நாள் வரை புரியாமல் இருந்த புதிருக்கு அன்று விடை கிடைத்தது.... நீயும் என்னை காதலித்ததை காலம் கடந்து உணர வைத்தது...

26
காதலித்து பார் காக்கை கூட உன்னை கவனிக்காது...............................
ஆனால் இந்த உலகமே உன்னை கவனிப்பதை போல் உனர்வாய்....

27
நான்
வியந்து
நோக்கிய
ஐந்தடி
ஓவியம் ... நீ

28
ஒவ்வொரு இரவிலும்
ஏதோ
ஒரு காதலர்களின்
கண்ணீர் குரல்
காதுகளில் ஒலித்துக்
கொண்டுதான் இருக்கிறது
எப்போது சேருவோம் என்று...
இதை எல்லாம்
ஓர் மூலையில் ரசித்தபடி
இரவும், சந்திரனும்
காதலித்து கொண்டு
இருக்கிறார்கள்
சுயநலவாதிகளாய்,..

29
உன்னைத் தவிர
மற்றப் பெண்களைக்
காணும் பொழுதெல்லாம்
பிரம்மன் கடமைக்கு
செய்திருப்பதை உணர்கிறேன்.....

30
நீ
எதிர்வரும் பொழுதெல்லாம்
என்
எதிர்காலம் வருவதாய்
உணர்கிறேன்..

31
காற்றை நேசித்தேன் ...
உணர முடிந்தது ...
பார்க்க முவியவில்லை ...
கடலை நேசித்தேன் ...
... பார்க்கமுடிந்தது ...
கடக்க முடியவில்லை ...
கடவுளை நேசித்தேன் ...
நம்பிக்கை வந்தது
நிரூபிக்க முடியவில்லை
உன்னை நேசித்தேன் ..
நினைவுகள் வந்ததால் ..
மறக்கமுடியவில்லை ....

32
என்இதயம் நீ இருக்கும் வரை துடிக்கணும் ....
கண்கள் உன்னை மட்டுமே பார்க்கணும் ....
உன் தெருவைநோக்கி கால்கள் நடக்கணும் ....
நம் காதல் உலகம் வரை இருக்கணும் ....
இல்லை- கல்லறையில் இருவரும் தூங்கணும் ....!!!

33
மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
உன் இதயம் வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!

34
ஆறுதல் சொல்ல நீ இருந்தால்,
அழுவதில் கூட சுகம் உண்டு

35
என் மரணத்தின் போதும்
என் உயிர் என்னை விட்டு
பிரிவதில்லை..!
ஏன்னென்றால்
என் உயிரே நீயாக இருக்கும் போது
நான் எப்படி பிரிவது...!!
-ஸ்ரிவிஷா 

36
என் கண்ணுக்கு கண்ணான கண்களை
காணாத போது
கலங்கின என் கண்கள்...!!!
-சத்தியகலா

37
நினைவுகள் எப்போதும் வித்யாசமனவை ...
சில நேரங்களில் அழுத நாட்களை நினைத்து
சிரிக்க வைக்கும்.....
சில நேரங்களில் சிரித்த நாட்களை நினைத்து
அழ வைக்கும்.........

38
எனக்குத் தெரியும் அவனை....
தெருவடைத்துப் பந்தல்.
சூரியஒளியைத் தவிர,
உலகே திரண்டு வந்தது போன்ற கூட்டம்.
அத்தனைக் கண்களும் காணும் அவனை
எதேச்சையாக என் கண்களும் காண -
ஓ, எனக்குத் தெரியும் அவனை....,
அந்த சன நெரிசலில்,
வெள்ளை உடையில்
ரோஜா மாலையுடன் அவன் மட்டும்
வித்தியாசமாய்த் தெரிந்தான்.
எதற்காக நெளிகிறான்?
ஓ, ரோஜா வாசம் அவனுக்கு பிடிக்காதே,
அதனாலா?
எனக்குத் தெரியும் அவனை....
வருவோரின்
ஒவ்வொரு கைக்குலுக்கலின் போதும்
அவன் முகம் சுளிக்கிறான்.
அந்த முகச்சுளிப்புக்கு காரணமே
கைக்குலுக்கல் தான்.
கைக்குலுக்கல் அவனுக்குப் பிடிக்காது-
எனக்குத் தெரியும் அவனை....,
எவரோ ஒருவர்
பழச்சாறு கொண்ட கோப்பையை
அவனுக்கு நீட்ட, அவன் கண்கள்
மற்றவர்களுக்கு அளிக்கப்படும்
பெப்சி மெதுபானத்தின் மேல்
மேய்வதை நான் அறிவேன்.
எனக்குத் தெரியும் அவனை....
அவன் இடப்பக்கம்
அமர்ந்திருக்கும் மணப்பெண்ணின்
பச்சை நிறப் புடவையைப் பார்த்தேன்.
நிச்சயமாக அது அவனுடைய தேர்வு அல்ல.
எனக்குத் தெரியும் அவனை....
எதேச்சையாக அவன் பார்வை
என்னைத் தீண்ட -
வியப்புடன்!?
துளிர்த்த கண்ணீரை
தூசு துடைப்பதுபோல்
துடைத்துக்கொள்கிறான்.
எனக்குத் தெரியும் அவனை...

39
வாழ்ந்தால் உன் இதயத்தில்
வாழ வேண்டும்....
இருந்தால் உன் விழிக்கு இமையாக
இருக்க வேண்டும்...
இறந்தால் உன்னை நினைத்து
இறக்க வேண்டும்..

40
உன் கரங்களை..
என் விரல்கள் பற்றி இருந்தால்..
வாழ்க்கையில் வரும்..
அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து ஜெயித்திடுவேன்.

41
காதலியே நிலவில் தண்ணீர் உண்டு
உன் முகத்தில்
வியர்வைத்துளிகள்..

42
அன்பே !
அந்த நதிக்கறையில்
உன் கைக்குட்டை ஒன்றைக்
கண்டெடுத்தேன் !
அது கைக்குட்டையா?
இல்லை
காதல் தேவதை
தன் ஒரு சிறகை
உதிர்த்து விட்டுப்
போய் விட்டதா?
இது கைக்குட்டைதானா?
இல்லை
கல்யாணப் புடவைக்கு
அச்சாரமா?
நீ
வித்தியாசமானவள்
காதல் கடிதத்தை
நெசவு செய்து அனுப்பியவள்
நீ மட்டும்தான்
இப்படித்தான்
பேச நினைக்கிறேன்
ஏதேதோ அர்த்தத்தில்
ஆனால் என் வார்த்தைகளோ
மௌனத்தின் கர்ப்பத்தில்...

43
கனவுகள் எனக்கு பிடிக்கும்... நீ வருவதால்.. கண்ணீர் எனக்கு பிடிக்கும்.. உனக்காக வருவதால்... தனிமை எனக்கு பிடிக்கும்.. உன் நினைவுகள் என்னோடு இருப்பதால்...

44
தென்றலை நேசித்தேன் புயல் வரும் வரை...!பூக்களை நேசித்தேன் வாடும் வரை...!நிலவை நேசித்தேன் விடியும் வரை...!உன்னை நேசித்பேன் என் உயிர் போகும் வரை...!

45
வாழ்கையில் ஒரு அழகான பொண்ண காதல் பண்றத விட நம்ம வாழ்கை அழகா வச்சுகுற பொண்ண காதல் பண்றதுதான் நல்லது...

46
எத்தனை முறை சொன்னாலும் எப்படி சொன்னாலும் எழுதிவைத்து சொன்னாலும் எழுதாமல் சொன்னாலும் என் இதயம் உனக்காகத் துடிக்கிறது...


47
காதலை சொல்ல உதடுகள் வேண்டும்
என நினைத்திருந்தேன். கண்ணீர்த்துளிகளை
கண்டபிறகு தெரிந்துகொண்டேன்....
காதலை சொல்ல கண்ணில் ஈரமிருந்தால் போதுமென்று...


48
சத்தம் இன்றி அழுகின்ற உயிர்
எது தெரியுமா?
இதயம் தான்.
உண்மையாக நேசித்து பாருங்கள்
புரியும்.....


49
மனதுக்கு பிடித்தவர்களிடம் மனம் விட்டுபேசினால் மரணவலி கூட மரத்து போகும்....


50
மனதுக்கு பிடித்தவர்களிடம் மனம் விட்டுபேசினால் மரணவலி கூட மரத்து போகும்....


51
ஓரு ஆண் தனது இரண்டாவது தாயையும் ஓரு பெண் தனது இரண்டாவது குழந்தையையும் தேடுவதே!-காதல்


52
கண்ணை காப்பது இமைதானடி,
காதலின் சுகம் இதயத்தின் வலிதானடி,
ஒரு முறை பார்த்தால் போதும்,
ஆயுள் வரை சுகம் நீளும்,
இறந்தாலும் மீண்டும் பிறப்பேன்,
உன் காதலனாக மட்டும்,
உன் காதலுக்காக மட்டும்.

53
சிறகுகள் இல்லாமலேயே, பெண்களை தேவதைகளாக்கும் வல்லமை புடவைகளுக்கு உண்டு!

54
அன்பே...
உன்  பிரிவு தரும் வலி,
என் வாழ்க்கையின்
வழியாக அமைந்தால்,
விரைவில்
என் வளி நின்று விடும்...

55
கவிதையும் காதலும்....
கவிதை காதலுக்கென்றே பிறந்ததா!
கவிஞர்களின்   உணர்வுக்காக உயிர்தெழுந்ததா!
கவிதையை வெறுக்க நான் மனம் இல்லா ஜீவனும் அல்ல!
கவிதையை  சுவாசிக்க கலையறிந்த கவிஞனும் அல்ல!
கவிதை இல்லாத காதல் உண்டோ?
கற்பனை உணர்வுகள் நம்  கண்ணோடு உரைத்திடும் தருணம் இதோ!
விழிகளின் பயணத்தில் காத்திருங்கள் விடையறிய....
காதல் உணர்வோம்! கவி பாராட்டுவோம்!
-தமிழ் தாமரை

56
புள்ளிகள் இல்லாத கோலம்
என்னவளின் பாத சுவடுகள் ....

57
நகத்தை கடிக்காதே !
நசுங்குவது நகம் அல்ல
என் மனம்.....
-கருணாகரன்

58
காதலித்துப்பார் பகலில் நிலாதெரியும்..
காதலில் தோற்றுப்பார் இதயத்தில் சூரியன் எரியும் ....!!!

59
நானோ உன்னை....?
சாகும் வரை காதலிக்கிறேன்
நீயோ என்னை....?
சாகடிக்கவே காதலிக்கிறாய் .

60
மனிதன் கடவுளிடம்
வாங்கிக் கொண்ட
விலைமதிக்கா வரம் கனவு ....!!!
என்னவள் ....
என் இன்பத்துக்கு ....
இலவசமாய் வழங்கும் ....
சேவை காதல் கனவு .....!!!

61
பலமுறை ஏங்குவதும்
ஏங்க வைத்து பின் ....
வார்த்தையில் தூங்குவதும் ....
தூங்கிய வார்த்தையை ....
துலங்கமாய் கூறுவதும் ....
காதல் உறவு ....!!!

62
உன்னை என் இதயமென்று
சொல்லமாட்டேன்...
என் இதயத்தில் இருப்பவன்
நீயென்றே சொல்லுவேன்!!!
உன்னை உயிர் என்று ....
சொல்லமாடேன் ....
என் உயிர் வாழ்வதே ...
நீ தான் என்பேன் ....!!!

63
நான் நேசிக்கும்
பலர் என்னை நேசிக்க மறந்தாலும்,
என்னை
நேசிக்கும் உன்னை உயி௫ள்ள
வரை மறக்க மாட்டேன்.....

64
பத்திரமாக இரு...
நீ எப்போதும் பத்திரமாக என்னோடு இருக்கத்தான் ..
இறைவன் இதயத்தை உள்ளே படைத்திருக்கிறான்

65
என்னை சுற்றி அடைக்க பட்ட முள் வேலி நீ ...!!!
உன்னை சுற்றி வரையப்பட்ட வட்டம் நான் ...!!!

66
நீ என் காதல் பூவா...? முள்ளா ..?
உண்மை காதல் உண்மை சொல்லும் ....!!!

67
மீன் தொட்டியில் இருக்கும் மீனைப்போல் ....
உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன் காதலால் ...!!!


68
இதமாக இருந்த இதயத்தை ....
இதய சோலையாக மாற்றும் காதல் ...!!!


69
உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்தினால் அது பாவம். உனக்காக ஒருவர் கண்ணீர் சிந்தினால் அது பாசம்.

70
ஒரே ஒருவருடைய நிராகரிப்பு வாழ்க்கையில் தனிமை என்ன என்பதை உணர்த்தி விடுகிறது..

71
ஆயிரம் நண்பர்கள் இணையத்தில்...... ஆயிரம் மின் அரட்டை நொடியில்...... ஓசை கேட்காத பல நூறு குரல்கள்...... பார்க்க முடியாத பல நூறு சினேகங்கள்...... இருந்தும் எதையும் மனம் விரும்பவில்லை ... உன்னிடம் வரும் ஒரு வார்த்தைக்காய் .... உன்னையே தேடும் இதயத்தில் வலி ....!!!

72
இந்த உலகத்தில் உன்னை மட்டும் பிடிக்கும்! எனக்கு பிடிக்காதது என்னை உனக்கு பிடிக்காதது !

73
நான் போகும் முன்னால் உனக்கு ஒரு காதல் கடிதம் படித்துவிட்டு பதில் அனுப்பு


74
உன் கடிதம் பிரிக்கவே ஆசைப்படாதவளின் இதயம் பிரிக்க ஆசைப்பட்டுவிட்டாயோ..?

75
உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே இனிப்பாய் இருக்கிறது. நீயும் என்னை நினைத்துக்கொண்டிருப்பாய் என நான் நினைத்துக்கொள்வது!

76
உன்னை பலமுறை சந்தித்த போதும் என்னால் உன் மெளனத்தை கலைக்கமுடியாமல் போன போதுதான் எனக்கு உதவிசெய்து உறுதிப்படுத்தியது உன் கைபேசி நீ ஊமையானவள் அல்ல என்று....

77
உன் காதோர கம்மலும்,
கால் தொடும் கொலுசும்
என்னை சபிக்கின்றது,
அவை புண்ணியம் தேடும்
இடத்தை நான் பரித்துவிடுவேனோ ! என்று ......
-கருணாகரன்

78
உன் உடலுக்கு வெட்கம் தெரியும்
என் விரலுக்கு வித்தை தெரியும்.....


79
நீ வேண்டும் எனக்கு
நான் என்பது
நாமாக வேண்டும்
எல்லாமே எனக்கு வேண்டும்
உன்னோடு வேண்டும்
உன்னோடு மட்டுமே வேண்டும்!

80
என் பக்கத்து வீட்டு கதவு
உன் வீட்டு கதவாக
இருக்க கூடாதா??
அதுவே சொர்க்கவாசல்...
நம் தெருவே
இந்திரலோகம்!

81
அவள் சொன்னது வேறு
எனக்கு புரிந்தது இது தான்
கை கோர்க்க வேண்டும்
தொட்டிழுக்க வேண்டும்
கட்டிபிடிக்க வேண்டும்
முத்தமிட்ட வேண்டும்
உச்சி முகர வேண்டும்
காதல் சொல்ல வேண்டும்
அவள் சொன்னது இது தான்
"நான் உன்னை பார்க்கனும்"

82
அழகாய் இருக்கிறாய் என்றேன்
உன் கண்களுக்கும் மட்டும் என்றாள் !
காதலிக்கிறேன் என்றேன்
என்னை மட்டுமா என்றாள்!
உயிரை விடவா என்றேன்
நானும் வருகிறேன் என்றாள்!

83
உனக்கும் எனக்குமான
நட்பில் தீப்பிடித்தது
காதல் தொடங்கியது
நமக்குள்!

84
மலர்ந்தது என் முகம் மழையை கண்டு. துடித்தது என் மனம் நனைவேன் என்று.. கரைந்தது என் தினம் நொடியில் அன்று

85
உன் பெயரில் நடக்கும் பிறந்தநாள் அர்ச்சனையை ஏற்றுக்கொள்ள தவம் கிடக்கின்றன நம் தெய்வங்கள் ......

86
சின்ன வயதிலிருந்து என்னை
தொட்டுப் பேசும் பழக்கத்தை
நீ நிறுத்திக்கொண்ட போதுதான்
தெரிந்துகொண்டேன்...
நீ என்னைக் கட்டிக்கொள்ள
ஆசைப்படுவதை!


87
நீ ஆற்றில் குளிப்பதை
நிறுத்திவிட்டு
வீட்டுக்குள் குளியலறை கட்டிக்
குளிக்க ஆரம்பித்தாய்.
வறண்டு போனது
ஆறு.

88
உன்னைக் கடித்த எறும்புகளெல்லாம்
"தேவதையைக் கடித்த எறும்புகள் சங்கம்" என்று
ஒரு சங்கம் வைத்திருக்கிறதாமே


89
பல நூற்றாண்டுகள் ஆகுமாமே
ஒரு வைரம் உருவாக.
நீ மட்டும் எப்படி
பத்தே மாதத்தில் உருவானாய்?

90
உன்னிடம்
என் இதயத்தைத் தொலைத்துவிட்டதாக
எப்போதும் புலம்பியதில்லை நான்.
எனக்குள் இருந்த இதயத்தைக்
கண்டுபிடித்துக் கொடுத்தவளே நீதான்....

91
கரையில் நின்றிருந்த
உன்னைப் பார்த்ததும்
கத்திவிட்டன
கடல் அலைகள்...
கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக் குதித்து
கடைசியில் பறித்தே
விட்டோமா
நிலவை! என்று.


92
உன் அழகு
வெட்டி வைத்திருந்த
ஆழ்துளைக் கிணற்றில்
விழுந்த சிறுவன் நான்...!


93
அன்று
நீ குடை
விரித்தற்காக்க்
கோபித்துக் கொண்டு
நின்றுவிட்ட
மழையைப்
பார்த்தவனாகையால்
இன்று
சட்டென்று மழை
நின்றால்
நீ எங்கோ குடை
விரிப்பதாகவே
நினைத்துக்
கொள்கிறேன்...!

94
நீ யாருக்கோ செய்த
மெளன அஞ்சலியைப்
பார்தத்தும்..
.
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.....


95
என்னை
உடைப்பதற்காகவே
என் எதிரில்
சோம்பல் முறிப்பவள் நீ!!!!

96
நீ எப்போதும்
தலையை குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க
வெட்கத்தையெல்லாம்
இந்தப் பூமி மட்டுமே தரிசிக்க
முடிகிறது!
ஓரேயொரு முறை
கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி
வெட்கப்படேன்..
வெகுநாட்களாய்
உன் வெட்கத்தைத் தரிசிக்க
துடிக்கிறது
வானம்!


97
ஒரு நிமிடத்தில்
உன்னைக் கடந்துபோகிற பெண்ணைப் பார்க்க
தினமும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே என்று
கேட்ட என் நண்பனிடம் சொன்னேன்...
நீ கூடத்தான்
ஒரே ஒரு நாள் சம்பளம் வாங்குவதற்காக
ஒரு மாதம் முழுவதும் வேலை செய்கிறாய்!


98
காதல்தான்
நான் செய்யும் தவம்
என் கடுந்தவத்தைக் கலைத்து
என்ன வரம் வேண்டும் என்று
எந்த தெய்வமும்
என்னை கேட்காமலிருக்கட்டும்..
என் தவத்தைவிட
சிறந்ததாய்
எந்த வரத்தையும்
எந்த தெய்வத்தாலும்
தந்துவிட முடியாது!


99
"உன்னிடம் பேச எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ அவ்வளவு
ஆசை உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேச வேண்டும் என்பதில்."
"நான் எது கேட்டாலும் வெட்கத்தையே
தருகிறாயே...வெட்கத்தைக் கேட்டால்
என்ன தருவாய்?."

100
அழகான பொருட்களெல்லாம்
உன்னை நினைவு படுத்துகின்றன.
உன்னை நினைவுபடுத்துகிறவை எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன."


101
அற்புதமான காதலை
மட்டுமல்ல
அதை உன்னிடம்
சொல்ல முடியாத
அதி அற்புதமான
மெளனத்தையும்
நீதான் எனக்குத்
தந்தாய்....

102
ஓரே ஓரு முறைதான்
எனினும்
உன் உன்னத நிழல்
என்மீது பட்ட போதுதான்
நான் ஓளியூட்டப்பட்டுக்
கவிஞனானேன்!


103
எவ்வளவு
வேகமாக ஓடினாலும்,
61ம் வினாடியை
தொட முடியாது
எந்த வினாடி
முள்ளும்...
என்னை
விட்டு
எங்கு ஓடினாலும்
யாரையும்
தொட முடியாது
உன்னாலும்....!!


104
ஒருவருகென
ஒருவர் என்று
பிறந்தவர்கள்
நாம் இருவரும்....
காதலி...
அல்லது
காதலிக்க
வைக்கப்படுவாய்......!!

105
உன்னை
நினைக்கும்
போதெல்லாம்
நீ என்னுடன்
பேசிய நிமிடங்களை
நானாக நினைத்தாலும்
உன்னுடன்
பேசிய நிமிடங்கள்
தானாக உன்னை
நினைக்க
வைக்கிறது....!!!

106
என்னுடன்
நீயும் நன்றாகத்தான்
பேசுகிறாய்....!
உனக்கும்
என்மேல் காதல்
இருப்பது
தெரிந்தாலும்,
ஏனோ
பயமாக
இருக்கிறது,
உன்னிடம்
காதல் சொல்ல...!!


107
விதவிதமான
எழுத்துக்களில்
பார்த்திருக்கிறேன்,
என் பெயரை....!
ஏனோ,
உன் கையெழுத்தில்
பார்க்கும் போது
அத்தனை அழகாக
தெரிகிறதே....!!



108
என்னதான்
உருகி உருகி
தான் காதலித்தாலும்,
அவன் காதல்
சொல்லும் போது,
அதை மறுத்து
அவனை
அலைய விட்டு
பார்க்கத்தோன்றும்
இந்த
பெண்களுக்கு....!!



109
ஆணுக்கு,
பெண் கவர்ச்சி....
ஆனால்,
பெண்ணுக்கு,
ஆண் வாழ்வு...



110
ஆணுக்கு,
பெண் கவர்ச்சி....
ஆனால்,
பெண்ணுக்கு,
ஆண் வாழ்வு...

111
"அவன்
எப்போது
வருவான்"
என்று நீ இல்லாத
நேரங்களிலும்,
"வந்து விட்டால்
என்ன செய்வானோ"
என்ற பயத்தின்
காரணத்திலுமே
எப்போதும்
சினுங்கி கொணடே
இருக்கின்றன
என் கொலுசுகள்....!!!


112
உன்னுடன் மௌனமாக
இருக்க வேண்டிய
தருணங்களில்
நான் பேசினாலும்,
நான் பேச வேண்டிய
தருணங்களில்,
மௌனமே பேசி
தொலைக்கிறது.


113
ஒவ்வொரு நாளும்
என் முதல் நினைவும்
நீதான்
கடைசி சிந்தனையும்
நீதான்
ஒருவேளை,
உன்னை காதலிக்க
ஆரம்பித்து விட்டேனோ
என்னவோ....!


114
இழந்தால் நான் துடிப்பேன் உன்னை...
மறந்தால் நான் இழப்பேன் என்னை...
மறுத்தால் நான் அடைவேன் மண்ணை..
பார்த்து நான் காத்திருப்பேன் உன்னை.
உயிரே நீ இல்லாமல் என்
உயிரும் மரணம் காணாது.
உன் பார்வை என்னை தீண்டாமல்
என் கனவும் ஜனனம் ஆகாது

115
உன்னை பார்த்து
துள்ளி வந்த
அலைகள் கூட
பௌர்ணமி
நிலவென்று
கிள்ளி செல்கின்றன
உன் கால்களை
மெல்ல.....

116
பூத்துக் குலுங்கும்
மலர்களை விட...
வாடிய மலர்களையே...!
நான்...
அதிகம் நேசிக்கிறேன்!
ஆம்.
அது அவள் கூந்தலில்
இருந்து உதிர்ந்த மலர்கள்

117
என்னைப் பிரிந்து
மண்ணில் புதைந்து
மழையாய் நீ வந்தாய்
மழையில் நனைந்து-என்
இதயம் கிழிந்து
செடியாய் நான் முளை்தேன்
உன் கல்லறையில்..!!


118
உன் கண்கள் என்னை தீண்டி விட்டு போன பின்பு தான் புரிந்து கொண்டேன்.......
என் ஆன் மனம் கூட மிகவும் அழகு என்று...


119
ஓற்றை முத்தம்.......
மெதுவாக முத்தம் ஓன்று கொடுத்து விட்டு போதுமா என்கிறாள்......
இன்னும் வேண்டும் என்கிறது உதடுகள்....

120
கிடச்சா உடைச்சிடுறாங்க...
கிடைக்கலனா உடைஞ்சு போறாங்க ‪#‎காதல்‬

121
தன்னையும் ஒரு பெண்
நேசிக்கிறாள் என்று தெரிந்த
பின், அந்த ஆணின் உலகமே
மாறிவிடுகிறது.


 ஒருவரை முழுமையாக
புரிந்துகொண்டவர்கள் அவர்களுக்கு
வாழ்க்கைதுனையாய் கிடைப்பது
அவரவர் வரம்..


 நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறதெல்லாம்
உனக்காக தான்..
.
நம்ம லவ் success ஆகனும் ,
நீ லைப் லோங்கா என்கூடவே இருக்கனும்,
உனக்கு எந்த health problem உம்
வரக்கூடாது,
நம்ம கடைசி வரைக்கும் இதே
மாதிரி லவ் பண்ணிட்டு சந்தோசமா
இருக்கனும் னு தான் வேண்டிக்குவன்..
என் அம்மா,அப்பா and குடும்பத்துக்காக எப்பவுமே வேண்டிக்குவேன் தான்..
நீயும் என் குடும்பத்துல ஒருத்தன் தான் ,எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்,என்னோட வாழ்க்கை,எதிர்காலம் எல்லாமே...
so உனக்காக ஸ்பெஷலா வேண்டிக்குவன்..
LoVe Uu So MuCh MamA



 நீ நல்லா இருக்கனும் அதான் எனக்கு
முக்கியம் என்கிறாய்.....
நீ இல்லை என்றாலே நான் நல்லா
இருக்க மாட்டேன் என்று உனக்கு தெரியாதா..




Previous Post
Next Post

0 Comments: