வெள்ளி, 7 ஜூலை, 2017

அன்னை தெரசா பொன்மொழிகள்

அன்னை தெரசா பொன்மொழிகள்

இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட
ஒரு கை நீட்டி உதவி செய்..
மனிதர்களை நீ மதிப்பீடு செய்து கொண்டு இருந்தால்
ஒருக்காலும் உனக்கு அன்பு செய்ய வாய்ப்பு கிடைக்காது!
பிரார்த்தனை செய்யுங்கள் கடவுள்
அருகே நீங்கள் போகலாம்! பிரார்த்தனை
செய்ய முடியவில்லையா? அதற்குப் 
பதிலாகச் சேவை செய்யுங்கள் கடவுள்
உங்கள் அருகே வருவார்...
அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை.
அன்பைச் சொற்களால் விளக்கவும் முடியாது,
செயல்களால் விளக்கம் பெறுகிறது அன்பு..
இறக்கத்தான் பிறந்தோம் அது வரை இரக்கத்தோடு இருப்போம்!!!
மனம் விட்டு பேசுங்கள் அன்பு பெருகும்
உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி,
உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி..
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்..
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால்
அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.
கண்ணுக்கு தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால்,
கண்ணுக்கு தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை..
கொடுப்பது சிறிது என்று தயங்காதே
பெறுபவருக்கு அது பெரிது.
எடுப்பது சிறிது என்று திருடாதே
இழந்தவருக்கு அது பெரிது.
பிரார்த்தனை செய்யுங்கள்! கடவுளுக்கு அருகே நீங்கள் செல்லலாம். ஆனால், சேவை செய்து பாருங்கள்! கடவுளே உங்கள் அருகில் வருவார்!
உனக்காக வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதைவிட உன்னால் வாழ்கிறேன் என்று ஒருவரைச் சொல்ல வை! -அன்னை தெரசா
நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து
கொள்வது அவசியம்.
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.
Previous Post
Next Post

0 Comments: