வெள்ளி, 7 ஜூலை, 2017

சதுரகிரி மலை

சதுரகிரி
  
        சிறுவயது முதலே கேட்ட ஏழு மலைகள், அடர் வனம், சித்தர்கள் உலவும் பூமி, நீர் வீழ்ச்சிகள் என பெரியவர்கள் கூற கேட்டு அது ஓர் அதிசிய தீவாகவே என் மன சுவற்றில் பதிந்து போனது.
வாருங்கள்.! சதுரகிரிக்கு பயணப்படலாம் !!
There were many miracles listed in it below.,
* சித்தர்களை பலர் அங்கு கண்டதாகவும் அவர்களின் கண்கள் மிக பிரகாசமாக ஒளி வீசும் வண்ணமாகவும் அவர்கள் ஏழு முதல் எட்டு அடி உயரம் இருப்பதாகவம் கூறுகின்றனர்
*பக்தர் ஒருவர் '"சுவாமி தரிசனத்திற்கு தான் சன்னதி வெளியே நின்று கொண்டிருந்தபோது தற்சமயம் வயது முதிரந்த குருக்கள் ஒருவர் பூஜை செய்து அவர் நெற்றியில் தீருநீரு இட்டு மீண்டும் சன்னதி உள்ளே சென்றவர் வெளியே வரவேவில்லையென்றும் உள்ளாகவே மாயமாகி போனதையும் கண்டுள்ளார்.
*முழு பௌவர்னமி மற்றும் அமாவசை தினத்தில் சித்தர் ஒருவர் வானிலிருந்து ஒளியுடன் வருவதாகவும் #தவசிபாறையில் இறங்கி உலவுவாதகவும் சுவடிகள் கூறுகின்றன.
* மேலும் ஓர் அமாவசை இரவன்று மகாலிங்கம் சன்னதிக்கு சிலர் தனிமையில் சென்றவேளையில், குழுவாக சித்தர்கள் வட்டவடிவில் அமர்ந்து மந்திரங்களை ஈசன் முன்னிலையில் ஓதி கொண்டிருந்தாக கூறுகின்றனர். மேலும் அவர்களில் ஒருவர் கண்இமை கூட இமைக்கவே இல்லையென்றும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஓரே குரலில் துல்லியமாக மந்திரம் ஓதியதாகவும் கூறுகின்றனர்.
◆ சதுரகிரி பயணம் ◆ :
----------------------------------
                மக்கள் அனைவரும் கண்டிப்பாக செல்லவேண்டிய புனிததலம் இது. ஏழு மலை கடந்து மகாலிங்கத்தை தரிசிக்கும் போது கிடைக்கும் அருளுக்கும் மனநிறைவுக்கும் அளவே இல்லை.
அடர்வனத்தின் உள்ளே சுமார் ஏழு கிமீ மேலாக நடந்து செல்ல வேண்டும். வழியில் வனவிலங்குகளையும், பள்ளங்களையும், நீரோடைகளையும் கவனமாக கடந்து செல்லல் வேண்டும். மலை உச்சியை அடையும் வரை உண்ணவோ பருகுவோ ஏதும் கிடைக்காது இயற்கை நீரை தவிர. அமாவசை பௌவர்னமி தினங்களை தவிர வனத்தினூடே வழி தவறி போனாலும் உதிவிக்கு யாரும் இருக்கமாட்டார்கள். மலை உச்சியை அடைந்த பின் #கஞ்சிமடம் என ஒன்று உள்ளது அங்கு உண்ண உணவு இலவசமாக வழங்கபடுகிறது வந்தடைந்த களைப்பிற்கு அங்கு உண்ணும் உணவு தேவாமிர்தமாக இருக்கிறது.
◆வெளியூர் நண்பர்களுக்கான பயனதிட்ட உதவி :
---------------------------------------------------------------------
      *ஶ்ரீவில்லிபுத்தூர் நகரை அதிகாலை அல்லது மாலை பொழுதில் வந்தடையும் படி திட்டம் கொள்ளுதல் நன்று.

* இரவு வருவதாக இருப்பின் பேருந்து நிலையத்தில் இருந்து 500மீ தொலைவில் ராஜா லாட்ஜ் பட்ஜெட் அறைகள் சிறப்பாக கிடைக்கும். மேலும் பல விடுதிகளும் உள்ளது. ரயில் பயனமாக இருப்பின் ஆட்டோ மூலம் 50ரூபாயில் நகருக்குள் வர வேண்டும்.
*அதிகாலை கிளம்பி வத்றாப் பேருந்தில் ரூ.10 டிக்கெட் எடுத்து 40நிமட பயணத்தில் வத்றாப் சென்றடையலாம். அங்கிருந்து share auto மூலம் 15 நிமடங்களில் மலை அடிவாரமான தானிபாறை சென்றுவிடலாம்.
◆ செய்வன/ செய்யகூடாதவை ◆
-------------------------------------------------
* ஶ்ரீவியில் இருந்து கிளம்பும் முன் மிதமான காலை உணவு எடுத்து கொள்க. பொங்கல் வடையை தவிர்க்கலாம். ஏனெனில் மலை அடிவாரத்திலே களைப்பு ஏற்படுத்தி விடும்.
*எவ்வளவு விரைவாக தானிபாறை செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாக சென்றுவிடுவது நலம். சூரியன் மேல் சென்றுவிட்டால் மலை ஏறுவது சிரமமாக போய் விடும்
*வலது புறத்தில் உயரமான பாறைகளும் இடதுபுறம் 300அடி பள்ளதாக்கும் வழி நெடுக உள்ளது. காற்று சுழற்சியும் பல இடங்களில் குறைவாக இருக்கிறது.
*உடைமைகள் சுமைகளை குறைத்து கொள்க. வாட்டர் பாட்டில் குளுக்கோஸ் உங்கள் பட்டியலில் இருக்க வேண்டும்.
*மலைக்கு செல்லும் வழியில் குறைந்தது 100 சந்நியாசிகளை காண வேண்டி வரும்.இரவல் வேண்டுவர். மணமிருந்தால் முன்னதாகவே சில்லறைகளாக மாற்றி கொள்ளலாம்.
*கையில் walking stick கைத்தடி எடுத்து செல்வது உதவியாகவே இருக்கும்.
*தவசிபாறை பகுதி செல்வதாக இருந்தால் இரண்டு நாட்கள் தங்க வேண்டி இருக்கும்.
◆ தாணிபாறை அடிவாரம் ◆
---------------------------------------------
    தானிபாறை அடிவாரத்தை அடைந்தவுடன் அங்கு நிறைய கடைகளும் பழ விற்பனையாளர்களும் இருப்பர். ஒரு வேளை நீங்கள் அதிக சுமை எடுத்து வந்திருந்தால் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பும் பொழுது வாங்கி செல்லலாம்.
Previous Post
Next Post

0 Comments: