புதன், 16 மே, 2018

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாழ்த்துகளைவிட, பிறந்த நாளை நினைவு வைத்திருப்பவர்கள் நமக்கு சொல்லும் செய்தி, நாம் அவர்களுக்கு முக்கியமானவர்கள்.
நீ எனக்கு ரொம்ப முக்கியம், சோ, பிறந்த நாள் விஷஸ்
ஒவ்வொரு பிறந்த நாளிலும்,
எல்லா பழைய கோட்டையும் அழிச்சுட்டு,
முதல்ல இருந்தே புதுசா கோடு போடுங்க!
# ரீவைண்ட் லைஃப்
- இனிய பிறந்த நாளாகட்டும்!
‌‌__________________________________________
எவ்ளோ வயசானாலும், பிறந்த நாளில் வாழ்த்தும்போது,
கொஞ்சூண்டு வெட்கம் பூக்குமே,
அதுமட்டுமே, அவர்கள் இன்னும்
மிச்சம் வைத்திருக்கும் குழந்தைத்தனம்!
ஹாப்பி பிறந்த நாள்!
‌‌__________________________________________
உன்
பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்ல வாசகம்
தேடித் தேடி,
ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று
உனக்கான என்
கவிதை...
நீண்ட ஆயுளோடும்,
நல்லசுகத்தோடும்,
மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும்,
எப்போதும் இன்பமாய் இருக்க வேண்டும்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
‌‌__________________________________________
குழந்தை என்னும் வடிவாய் அம்மாவின் வயிற்றில் பிறந்தாய், வளர வேண்டும் என்று வளர்ந்தாயோ தெரியவில்லை, நாளை உன் பிறந்தநாள் கொண்டாட போகிறாய், நீ பல நூறு வருடம், வாழ என் வாழ்த்துக்கள்.
‌‌__________________________________________
உனக்கு வாழ்த்துக்கள் சொல்ல புதிதாய் பிறந்தது, நீயா இல்லை நானா. புதிதாய் யோசித்து யோசித்து பிறக்கவில்லை, கவிதை  புதிதாய் பிறந்ததா  நீயே ஒரு கவிதை தானே எனக்கு
‌‌__________________________________________
உன் பிறந்த நாளுக்கு
நான் ஏன் வாழ்த்து கூறவில்லை
தெரியுமா?
நான் உன்னை முதன் முதலில்
கண்டபோது எப்படி இருந்தாயோ
இன்றும் அதே இளமையோடு இருக்கிறாயே!!??
பின், நான் வாழ்த்துக் கூறி
உனக்கு வயது ஒன்றுக் கூடிவிட்டதை உணர்ந்து
நீ வருந்தக்கூடாது என்றுதான்.
‌‌__________________________________________

புத்தம் புது நாள்...,
புத்தம் புது வருடம்...,
புத்தம் புது வாழ்க்கை...,
எல்லா சோகங்களும்,,
கஷ்டங்களும்..,
கரைந்துவிட ...,
இனி....,
உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சி மட்டுமே
பொங்குவதற்கு...,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
‌‌__________________________________________
அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையாய்
ஊக்கத்தில் குமரியாய்
எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு
நீ வாழிய வாழியவே..,
‌‌__________________________________________
அம்மாவின் ஆராரோ ...
அப்பாவின் முதல் முத்தம் ...

தத்தி நடந்த முதல் நடை ...
கொஞ்சிப் பேசிய முதல் பேச்சு ...

நிலவு ஊட்டிய முதல் சோறு ...
பள்ளி சென்ற முதல் நாள் ...

நினைவூட்டும் இந்நாளில்
மகிழ்ச்சியான பிறந்த நாள்
வாழ்த்துக்கள்!
‌‌__________________________________________
என் நண்பனே !
இன்று பிறந்த நாள் காணும்
குறிஞ்சிப் பூவே !

உன்னை ஈன்றெடுத்த
தாய் தந்தைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல!
நன்றியுடன் வாழ்த்துகிறேன்
என் நண்பனே!
‌‌__________________________________________
நாம் பிறக்கும் பொழுது
எதை கொண்டு வந்தோம்
பிறருக்கு உதவி செய்தால்
எதையும் வாழ்வில் இலக்க மாட்டோம்

உன் பிறந்தநாள்
நீ பிறந்தாக மட்டும் இல்லாமல்
நல்ல செயல் செய்ய பிறந்த
ஆரம்பமாக இருக்கட்டும்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
‌‌__________________________________________
நாம் பிறக்கும் பொழுது
எதை கொண்டு வந்தோம்
பிறருக்கு உதவி செய்தால்
எதையும் வாழ்வில் இலக்க மாட்டோம்

உன் பிறந்தநாள்
நீ பிறந்தாக மட்டும் இல்லாமல்
நல்ல செயல் செய்ய பிறந்த
ஆரம்பமாக இருக்கட்டும்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
‌‌__________________________________________
பிறப்புகளில் உயர் பிறப்பு
மானிட பிறப்பு ....
இப்பிறப்பில் நீ எல்லாம்
பெறவும் ....
பெற்றவற்றை உலகிக்கு
பகிரவும் வாழ்த்துகிறேன்
மகிழ்கிறேன் உன் பிறந்த
தினத்தை நினைத்து .....!!!
வாழ்க வளமுடன்
மிளிர்க தமிழுடன் ....!!!
‌‌__________________________________________
என் உடல் நலனிலும்
உடையிலும் அக்கறை காட்டும்
இன்னொரு அப்பா நீ!

உன் பாசத்தினை வெளிப்படுத்தத்
தெரியா குட்டி ராட்சசன் நீ!
அன்பினால் நம் வீட்டை ஆளும்
இளவல் நீ!

உன் கல்வி சிறக்க
உடல் உள நலமுடன் வாழ்ந்திட
இறைவனை வேண்டுகிறேன்!
எனதினிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சின்னவனே!
‌‌__________________________________________
கள்ளம் இல்லா வெள்ளை மனம்
கடவுள் கொடுத்த நல்ல குணம்
கவர்ந்திடுவாள் விழிகளால்
கவலை தீர்ப்பாள் கனி மொழியினால்

கோபம் போல நான் நடித்தால்
குழந்தையவள் தான் துடிப்பாள்
கொஞ்சி கொஞ்சி அருகில் வந்து
கன்னமதில் இதழ் பதிப்பாள்.

என் தேவதைக்கு இன்றோடு
வயது தான் ஈராறு
எம் வீட்டினில் இவளே தான்
மணம்வீசும் மலர் தேரு.

வாழ்த்துகின்றேன் மனதால் முத்தே
வாழ வேண்டும் பதினாறும் பெற்றே..!!!!!!
‌‌__________________________________________
என்னுயிர் இன்று
தனியாய் பிறந்ததோ....

விண்ணில் நிலா இன்று
தனியாய் பிரிந்ததோ...

இன்று பிறந்தவளே ...
என்றும் என்னுள் வாழ்பவளே,
வாழிய பல்லாண்டு
‌‌__________________________________________
வாழ்த்தலாம் வாங்க
அற்புதமாய் ஓர் நாள்..
ஒரு கவிதையின் பிறந்த நாள்
இதயக்கண்ணாடி என்றென்றும்.
நட்பின் வண்ணங்கள் தரும்
புன்னகை தருணங்கள் இது!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
‌‌__________________________________________
பூக்களின் வித்து நீ...!
புன்னகையின்சொத்து நீ...!

அவதாரம்பத்து நீ...!
ஆண்களுக்கெல்லாம்கெத்து நீ..!

பெண்களுக்கெல்லாம்
முத்து நீ ...!
உலக அன்னையர்களுக்குகொடுத்த தத்து நீ...!

நீ என்னை நட்பில்
பித்தாக்கிவிட்டாய்...!
அதை நான்
பூங்கொத்தாக்கிவிட்டேன்..!
பிறந்த நாள் வாழ்த்து கூற...!

‌‌__________________________________________

Previous Post
Next Post

0 Comments: