ஞாயிறு, 17 ஜூன், 2018

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

புதிய துவக்கம் புதிய நம்பிக்கை புதிய எல்லைகள் இப்புத்தாண்டில் சூரிய கதிர் நம் வாழ்வில் பரவி, என்றும் பல நன்மைகளை அளிக்கும்.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

இருளை நீக்கி ஒளியை அருள தமிழ் மகளே வருக !
புத்தாண்டில் புத்தொளி தருக !!

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

சூரியன் கதிர் பரப்ப... தாமரை இதழ் விரிக்க... அந்தணர் இன்னிசை கானம் வசிக்க... புது மனப்பெண்ணாய் பவனி வா "இனிய புது வருடமே".

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

கனவுகளுடன் முடிந்து விட்டது நேற்றைய நாள்
சாதனைகளுக்காக பிறக்கிறது இன்றய நாள்
நாட்கள் பெருமை மிக்கது
அதிலும் இந்த நாள் தமிழருக்கு மிகவும் பெருமை மிக்கது
விடியல் காணப் போகும் விழிகளுக்கு
தமிழ் தோழமைகளுக்கு இதோ
தமிழர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

வாழ்க்கை வளம் பெற வாழ்த்திப்பாடும் சொற்களெல்லாம் 
வந்து சேரட்டும்
உங்கள் வாசல் கதவை தட்டிடவே
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்
மாற்றங்கள் மலரட்டும்
இன்னிசை முழங்கட்டும்
எல்லோர்  வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

ஆண்டிற்கு ஒருமுறை மலர்வாய்
இல்லம் தோறும் மகிழ்ச்சி தருவாய்
பேதமின்றி இருப்பாய்
பேசு தமிழில் சிரிப்பாய்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

இருளை நீக்கி
ஒளியை அருள
தமிழ் மகளே வருக
புத்தாண்டில் புத்தொளி தருக
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

புதிய சரித்திர புத்தாண்டு புறப்பட்டு வருது
பூமிக்கு மறுப்பிறப்பு புனிதமாய் அமையுது
விதியை மாற்றும் வேகமிங்கு வெளிச்சமாய் தெரியுது
வீரமிக்க புதுவுள்ளம் எல்லோருக்கும் பிறக்குது
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

முன்னேற்ற பாதையிலே
முனைந்து நின்றால் ஏற்றமுண்டு
எந்நாளும் துன்பமில்லை
என்றறிய வந்ததின்று
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

சாதி மத பேதமற்ற
சமதர்ம சமுதாயம்
மேதினியில் மலர்கவென்று
இன்று மலர்ந்த புதுவசந்தம்
இனிய புத்தாண்டு  வாழ்த்துக்கள்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

இறைவன் அருளால்
இன்பம் பொங்கவும்
இல்லறம் சிறக்கவும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

உலகெங்கிலும் உள்ள தமிழ் நண்பர்களுக்கு உங்கள் வாழ்வில் துயர்கள் நீங்கி உற்காகத்துடனும் உல்லாசத்துடனும் உன்னத வாழ்வு வாழ உளம் கனிந்த எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

கவலைகளை  சுமந்து
கண்ணீர்  சிந்துவதை  விட,
லட்சியங்களை  சுமந்து
இரத்தம்  சிந்து
உலகம் உன்னை  போற்றும் .
இந்த புதிய  வருடம் 
உனது  இலட்சியங்கள்
நிறைவேற
இறைவனை  வேண்டிகொள்கிறேன்
என்  நண்பா!
என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

நீங்கள்  எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்பாய் வாழ என்  இனிய சித்திரை  திருநாள் வாழ்த்துக்கள்.....

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருக என்  இனிய  தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

வெற்றியை விரும்பும் நமக்கு  தோல்வியை தாங்கும் மனம் இல்லை,
தோல்வியை தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றி தான் ...!
இந்த தமிழ் புத்தாண்டு முதல் நீங்கள் வெற்றிகளை குவிக்க என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .....

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

இனிய கிறஸ்துமஸ் வாழ்த்துக்கள்


🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

மண்ணுலக மக்களின் பாவ இருள் போக்க விண்ணிலிருந்து இறங்கிவந்த நம் இயேசு பாலனை வரவேற்போம் அவரை போற்றி புகழ்ந்து கொண்டாடுவோம் அனைவருக்கும் இனிய கிறிஸ்துபிறப்பு நல்வாழ்த்துக்கள்

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

மண்ணில் வந்த விண்ணின் வேந்தனை
போற்றிப் பாடிக் கொண்டாடுவோம்
ஆர்ப்பரித்துக் கொண்டாடுவோம்
இந்த கிறிஸ்துமஸ் நன்னாளிலே
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

மேசியா இயேசு ராஜன்
இப்புவியின் நிந்தை நீங்க
கந்தை பொதிந்த கோலமாய்
பாரினில் தோன்றினார்.
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

மாந்தர்கள் காண வாசம் செய்த
மகிமை தேவனை
மண்ணில் கண்டோமே
மகிழ்வோம் கிறுஸ்து பிறந்த இந்நாளிலே
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

இயற்கையில் உறைந்திடும்
இணையற்ற இறைவா நீ
என் இதயத்தில்
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

என்னை உணர்ந்திரு என்னோடு விழித்திரு
என்னோடு நினைந்திரு உன்னோடு
இனிய கிறிஸ்தும்ஸ் வாழ்த்துக்கள்

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

இன்னே நான்பேசி முடித்தேன்
நீயும் நன்றாக கேட்டுக் கொண்டாய்
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர்
இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை இன்பமாய்
மாற்றும் இயேசு அற்புதர்
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

ஆவியோடும் உண்மையோடும் ஆண்டவரை தொழுதிடுவோம் பரிசுத்த
அலங்காரத்துடனே நாமும் பரிசுத்தரை தொழுவோமே
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

மாட்டுத் தொழுவத்து மாபரன்
மண்ணுலக மக்களின் மனதினில்
மங்கா புகழோடு வாழ்ந்திட
மரியின் தியாகமல்லவா மடிந்தது
செல்வ புதல்வா சிங்கார தலைவா
செல்வங்களை நிரப்பிட வா
தெவிட்டாத அன்பு வெள்ளம்
தெருவினில் பாய்ந்தோட
உருவெடுத்து வா
இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

மாடடையும் குடிலினில்
மாசற்ற மகிமை தேவன்
மண்ணில் உதித்தார்
மரியின் மகனாய்
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

கர்த்தரின்  வார்த்தைகளை ஏற்று
கட்டளைகளைப் பத்திரப்படுத்து
கனிவாகட்டும் உன் வாழ்வு
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

தூதர்கள் துதித்துப் பாட
மேய்ப்பர்கள் புகழ்ந்துப் போற்ற
சாஸ்திரிகள் பணிந்து துதிக்க
மண்ணிலே சாமதானம்
விண்ணிலே மகா மகிமை
வாழ்வின் இருள் நீங்கி
வெளிச்சம் உதித்து எமக்காய்
வாள் வெள்ளியும் முளைத்தது
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

அன்று ஆயர்கள் கேட்ட
ஆச்சர்ய நற்செய்தியை
நாமும் கேட்போமா
இயேசு நாமக்காய் பிறந்தாரென..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

கிறிஸ்துமஸில் பல விஷயங்கள் இருக்கலாம்
அல்லது ஒரு சில இருக்கலாம்.
நீங்கள் மகிழ்வோடு வாழ இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

இறைவனின் அருளால் என்றும் நமக்கு எல்லாம் கிடைக்கும் என்று நம்புவோம் ஒரு இந்தியனாக யேசுவின் பிறப்பை கொண்டாடுவோம்.

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

பனிபொழியும் நாட்களிலே
இனிப்புடனே இன்பத்தையும்
உவந்துஉண்டு மகிழ
அன்புடன் தோழனின்
வளமான வாழ்த்துக்கள்!!

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

​கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
வானத்தில் இருந்து
ஒளியாய் வந்தார்
ஏசு எனும்
ஓர் மனித
கடவுள் ஏசு
மனிதர்கள் செய்யும்
குற்றங்களை மன்னிக்க
சொன்னார் தந்தையிடம்
மீண்டும் பிறப்பார்
அந்த ஏசு
என்ற மாமனிதர் !
அனைவருக்கும் இனிய
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தான்டு
வாழ்த்துக்கள் நட்புகளே !!

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

வேதனை தீர்க்கவும் சாதனை சேர்க்கவும்
வேதமாய் வந்துதித்தான்! - வானில்
விண்மீனாய் வந்துதித்தான்!
விந்தைகள் விளைந்திட விடுதலை நாம்பெற
விரைவாக வந்துதித்தான்! - அந்த
விண்மகன் வந்துதித்தான்!
விரும்பிய வாழ்வினை விளைத்திட வேண்டிய
ஆண்டவன் வந்துதித்தான்! - ஒளி
பூண்டவன் வந்துதித்தான்! -
அரும்பிய ஆசையால் அவன்புகழ் பாடியே
நலமெலாம் ஏற்றிடுவோம் - யேசு
மலரடி போற்றிடுவோம்!
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்..

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

மன்னிப்பை மக்களுக்கு அருளிய
மகா கடவுள் பிறந்த தினம்
மக்களின் துன்பம் மறைந்த தினம்
மகிழ்ச்சி நிறைந்த தினம்..
அனைவருக்கும் ​கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

அகிலத்தைக்காத்திட்டு அன்பினைப் பரப்பிட
அன்புப்பூ ஒன்று பூமிக்கு வந்தது  அது
ஆனந்தச் சிரிப்புடன் அழகாய் மலர்ந்திட்டு
அனைவரையும் கவர்ந்தது.
மனிதாபிமானத்தை மக்களுக்குச் சொல்லி
மன்னிக்கும் குணத்தை மனதார ஏற்று  நல்
மனிதனாக வாழ வழி வகுத்துத்தந்தது,
மனமகிழ்ச்சிக்கு வித்திட்டது.
தன்னிரு கரங்களில் சிலுவையைத்தாங்கிடினும்
கண்ணிரண்டில் கருணையே காட்டி நின்றது  அந்த
எண்ணிலாப்பெருமை கொண்ட இறைவன் யேசு
மண்ணில் உதித்த நாள் இன்று!
அனைவருக்கும்​ கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்...

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

உலகின் ஒளியே - எங்கள்
உயிரின் ஒலியே
உண்மையின் உருவே - எங்கள்
உணர்வின் உணர்வே
அண்டமும் கண்டமும்
அசைவும் காற்றும்
நீரும் நெருப்பும்
நிலவும் வானும்
உன் அசைவின் ஆக்கம்
உன் இசையின் இயக்கம்
உன் ஜனனமும் மரணமும்
உலகின் தத்துவம்
இரக்கமும் அன்பும்
இருவிழியென உணர்த்தி
இன்பமும் மகிழ்வும்
எங்களுக்களித்து
எம்மைக் காத்திடும் தேவா
என்றும் உன் நினைவே
எல்லாம் உன் செயலே
எந்நாளும் உன்னைப்
போற்றிடுவோம்
எங்களை ரட்சிப்பாய்
என வேண்டுகிறோம்..!!

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

"தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே
சத்திய வேதம் நின்று நிலைத்தது
தாரணி மீதினிலே!
எத்தனை உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து
தேவை நித்தியமே!
விண்ணர சமையும் உலகம் முழுவதும்
இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
இயேசுவை நம்புவமே!"
- கண்ணதாசன்
அனைவருக்கும் ​கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

தட்டுங்கள் திறக்கப்படும் என்றவன்
தட்டுமுன்னே -
திறந்தே வைத்திருப்போம்..
அனைவருக்கும் ​கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்....

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

மனித நேயம் ஒவ்வொருவர் வாழ்விலும் பிறக்கட்டும்.
மற்றவரை ஏற்றுக்கொள்ளும் தன்மை இன்னும் வளரட்டும்.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்....

🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅

சனி, 16 ஜூன், 2018

Love Miss u காதல் மி்ஸ் யூ கவிதைகள்


💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
அருகில் நீ  இல்லை      ஆனால் நீ கொடுத்த பரிசு என்னோடு பேசி சிரிக்கின்றது
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
காலம் பொன் போன்றது எனச் சொல்லுவார;கள் தெரியவில்லை அப்பொழுது உணர;கிறேனட இப்பொழுது நீ என் கண்ணருகில் இல்லாத போது
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
அவமானங்களால் மட்டுமே
வாழ்க்கையில் அதிக
தெளிவு கிடைக்கிறது சிலரை
புரிந்து கொள்ளவும் முடிகிறது.!
உன்னுடன் பேசுவதை
நிறுத்தி விட்டேன்
உனக்காக இப்பொழுது
காத்திருப்பதில்லை
உன்னிடமிருந்து எந்த
எதிர்பார்ப்புக்களும்
எனக்கில்லை. ஆனால்
உன் நினைவுகள் மட்டும்
முன்பை விட அதிகமாக
என்னை வதைக்கிறது..
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
எனக்கு மிகவும் பிடித்தது நீ தான் !!
அதனால் தான் உன்னிடம் அதிக
சண்டையிடுகிறேன் !!
அது உன்னை காயப்படுத்தி
இருந்தால் மன்னித்துவிடு !!
விலகிவிடாதே..
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
நான் உன்மீதுகொண்ட காதல்
உன்னை சுற்றி உள்ளவர்களுக்கெல்லாம்
தெரிந்து விட்டது.
உன்னை தவிர!!!!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
விழிகளை மூடினேன்
உறங்குவதற்காக் அல்ல
உன்னை காண்பதற்காக
அதிலும் எனக்கு
ஏமாற்றம் தான் தந்தாய்!!!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
கண் சிமிட்டாமல் உன்னை பார்க்க ஆசைப் பட்டேன்.
ஆனால்,
இப்போது உன்னை கண் சிமிட்டும் நேரமாவது பார்க்க ஆசை படுகிறேன்!!!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
மறக்க சொல்கிறாய் எதை மறப்பது
உன்னுள் தொலைந்த என்னையா...
இல்லை என்னுள் தொலையாமல் இருக்கும்
உன் நினைவுகளையா....
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
நினைத்துப் பார்த்தேன்
கண்ணீராய்ச் சிதறின....!!
அவளுடன் பேச நினைத்த
அந்தக் காதல் வார்த்தைகள்....!!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
நீ
வரும் போது
சின்னச் சின்னதாய்
கிடைக்கிற
சந்தோசங்களை
எல்லாம்
ஒட்டுமொத்தமாய்
அள்ளிக் கொண்டு
போகிறாய்
போகும்போது...
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
பெண்ணே...
சுலபமாக நீ
சொல்லிவிட்டாய்
என்னிடம்...
உன்னை எனக்கு
பிடிக்கவில்லை  என்று...
பதில் சொல்ல
முயன்றேன் உன்னிடம்...
வார்த்தைகள் இருந்தும்
இதழ்கள் திறக்க முடியாமல்...
தோற்றது என் இதழ்கள்...
சொல்லியது பதிலாக
என் கண்ணீர்...
உன்னிடம்.....
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
இழந்துவிட்டதால்
இழந்து கொண்டே
இருக்கிறேன் கண்ணீரை...
உதிர்ந்துவிட்டால்
என்றும் உதிராமல்
இருப்பேன் உன் இதயத்தில் ....!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
காதலை சொல்லியும்
பதில் சொல்லாத
போது தான்
ஒவ்வொரு நிமிடமும்
இதயம் உடைந்து போகிறது.
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
பல நாளுக்கு பிறகு ஒருவரை பார்க்கும்
போது உன்னை அறியாமல் கண்ணீர்
வந்தால், உன் மனதில் அவர் இடத்தை
யாராலும் நிரப்ப முடியாத நபர் அவரே....
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
இந்நேரம் நீ என்னைத் தேடக் கூடும் என்ற எண்ணம் எழுந்தபோதெல்லாம் நிஜமாகவே நான்தான் உன்னைத் தேடியிருக்கிறேன்....
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
நீயே தடுத்தாலும்...
நீயே பிரிக்க நினைத்தாலும்...
உன் உதடுகள்
ஒன்று சேர மறக்காது..!
அது போலத்தான் அன்பே
உன்னுடைய காதலும்..!
என்னதான் நீ மறைக்க
நினைத்தாலும்...
நம் இதயங்கள்
ஒன்று சேர மறக்காது..!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
பகலில் மட்டும் வருகின்ற
பகல் கனவு அவள்தானே,
கொலையின்றி
உயிர் மட்டும்
அப்படியே தின்கிறாள்....!!
நிஜங்களுக்குள் நிழலாக
நிற்பவளும் அவள்தானே,
வெயிலிலும்
விரும்பியே
நட்சத்திரம் கேட்கிறாள்..!
பார்த்தவுடன் பிடிக்கின்ற
குறுங்கவிதை அவள்தானே,
விழிகளில்
வரிகளை
மறைத்து வைக்கிறாள்...!!
தொட்டவுடன் சிலிர்க்க செய்யும்
பனிக்கட்டி அவள்தானே,
இதழ் அசைவில்
பதில் தந்து
உறைய வைக்கிறாள்...!!
நெஞ்சுக்குள்ளே கேட்கின்ற
இதய சத்தம் அவள்தானே,
எனக்குள்ளே
ஏதோ ஒன்றை
தினம் தேடச் சொல்கிறாள்...!!
சினுங்கலிலே சிறுபார்வை,
நெற்றி மேலே துளி வியர்வை,
கண்ணை சுருக்கி,
கூந்தல் ஒதுக்கி,
அழகுக்கு
ஆணவம் தருகிறாள்..!!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
உன்னை
மறக்க வேண்டும்
என்று எண்ணிக்கொண்டே
மது அருந்தினேன்
அருந்த அருந்த
உன்னை
நினைத்து நினைத்து
மகிழ்கிறது
எனக்குள் இருக்கும்
உன் நினைவு..!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
எவ்வளவோ முயற்சிகளுக்கு பின்னும் மறக்கமுடியாத அவளின் நினைவுக்காக வருத்தப்படாதீர்கள்,ஒருத்தியை உண்மையாக நேசித்திருக்கிறோமென சந்தோசப்படுங்கள்...
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
மன்னித்துவிடு இறைவா
அவளுக்கு ஒரு சத்தியம்
கொடுத்துவிட்டேன்....!!!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
இனி
உன்னை காதலிக்க மாட்டேன்
பின் தொடரமாட்டேன் ....
உனக்கும் எனக்கும்
எதுவுமே இல்லை என்று
சத்தியம் சொல்லி விட்டேன்
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
ஆனால் இன்னுமும்
இருக்கிறது என் இதயத்தில்
அவள் நினைவுகள் ....!!!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
ஆயிரம் வலிகள் தந்தாலும்
என்னை ஒரு நொடி கூட
விட்டுப் பிரிந்து விடாதே
அந்த வலிகளுக்கு
ஆறுதல் உன்அன்பு மட்டுமே.!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
"நான்
போய்ட்டு
வரேன்டா",
என்று
சொல்லி விட்டு
என் நினைவுகளை
பிடுங்கிக் கொண்டு,
உன் நினைவுகளை
வலுக்கட்டாயமாக
என் மேல்
திணித்து விட்டு
செல்கிறாய்
தினமும்..!!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
என்னைச்சுற்றி
எல்லாம்
இருந்தாலும்,
ஏதோ ஒன்று
உன்னை நினைவு
படுத்தி விடுகிறது....!!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
உன்னோடு
சண்டை போட்டு
விட்ட நாட்களில்,
உன்னிடம் பேச
வேண்டும் என்று
மனசு துடித்தாலும்,
ஏனோ
உன்னை கண்டதும்,
முறைக்கும் என்
கண்கள்....!!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
சூரியன்
************
பகல் முழுக்க,
உன்னை காணும்
சந்தோஷத்தில்,
சுற்றித் திரியும்
சூரியன்,
மாலையில்,
நீ வீட்டுக்குள்
போனதும்,
உன்னைக் காண
முடியாத ஏக்கத்தில்
தானும் மறைந்து
விடுகிறானோ.......???
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
முடியாது...
என்றாவது
சொல்லி விட்டு
போய்
தொலை...!
ஒவ்வொரு
நாளும்
பிரிவை நினைத்து
செத்து கொண்டிருக்க
முடியவில்லை...!!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
அன்று என் காதலியின் பெயரை பச்சை குத்திய நெஞ்சை தடவி பார்த்து இன்று என் மகள் கேட்கிறாள் என் மீது அவளவு பாசமா அப்பா..
(படித்ததில் பிடித்தது)
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
என்
மனதில்
நீ விதைத்த
காதல் விதைகளை தொகுத்து
தாளிலே விதைக்கிறேன்
கவிதைகளாக.......
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
நீ வாழ்ந்த என் கனவுகளை கூட
என்னால் கொல்ல இயலாது
வேண்டும் என்றால் என்னை கொன்று மீட்டுச்செல் உன் நினைவுகளை ....
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
என்னிடம் கேட்காமலே
என் இதயத்தை பறித்து கொண்டாய்!
உன் இதயத்தையும் தர மறுக்கிறாய்!

இதயம் இரண்டிலும் நீயே
இருப்பதால் என் காதல்
நிராகரிக்கப்படுகிறதா ?

இனியவளே என்னை வெறுப்பதாய்
சொல்லி உன்னை நீயே வெறுக்காதே!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
நேசித்த ஒருவரை எந்த அளவு
வெறுக்கமுடியும் என்று
எனக்கு நீ காட்டி விட்டாய் ...
சற்று பொறுத்திரு ,
வெறுக்கும் ஒருவரை எந்த அளவு
நேசிக்க முடியும் என
உனக்கு நான் காட்டுகிறேன் ...!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
மடி சாயும் மனைவியாக
வேண்டாம்.
தோல் சாயும் போது நீ
தோழியாக இருக்க
ஆசைப்படுகிறேன்
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
தேடி கிடைத்தாலும் தேடாமல் கிடைத்தாலும் உங்களை போன்ற உறவுகளை, தொலைக்கவும் மாட்டேன் மறக்கவும் மாட்டேன்.! மிஸ் யு.
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
சொர்க்கமும் நீ நரகமும் நீ
சொர்க்கத்தின் சுகத்தையும்,
நரகத்தின் கொடுமையையும்,
உணர்கிறேன்.... அன்பே!!
உன்னை பார்க்கும் போதும்,
பிரியும் போதும்...!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
எனக்கும் ஆசைதான்...,
உன் உள்ளங்கைகளினுள்
உறைந்திடவும்..
உன் விரலோடு விளையாடி
என் வாழ்வைக் கழித்திடவும்..
எனக்கும் ஆசைதான்..!
ஆனால்..,
உன்னுடனான எனது நாட்கள்
நிலையில்லை என
தெரிந்திருந்தும்...,
உனக்கேன் என்மீது
இவ்வளவு ஆசை...???
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
நல்ல கவிஞன் என்பாய்;
நல்ல நண்பனென்பாய்
என்னை நான் அறிய
தரும் பொழுதுகளில்;
உன் காதலைச் சேதப்படுத்த
விரும்பியதில்லையாதலால்
நல்ல காதலன் எனச்
சொல்லிக் கொள்வேன்
என்னையே நான்!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
உன்னை தவிர
வேறெதையும்
கண்டிராத
என்
கண்களுக்கு
உன்
கண்களில்
இருந்த
காதல்மட்டும்
தெரியாமல்போனதெப்படி?

💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

காதல் கவலை கவிதகைள்


😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
பணம் உலகத்தை கவரும்,
அழகு உள்ளத்தை கவரும்,
என்னால் இந்த உலகத்தையும் கவர முடிய வில்லை, அவள் உள்ளதையும் கவர முடியவில்லை,
ஏன் என்றால் எனக்கு இந்த இரண்டுமே இல்லை...
😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
பத்திரமாக இரு...

நீ எப்போதும் பத்திரமாக என்னோடு இருக்கத்தான் ..
இறைவன் இதயத்தை உள்ளே படைத்திருக்கிறான்...
😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
நீ கிடைக்க மாட்டாய் என்று நன்றாகத்தெரியும்
என்றாலும் உன் துன்பநினைவுகளும் எனக்கு சுகம்தான்
எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டே இருப்பதற்கு....
😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
சீக்கிரமே காதலில் விழுந்தோம்
உனக்கு நான்; எனக்கு நீயென
நம்பிக்கை வளர்த்தோம்.
எல்லாம் சில காலம்.
தெரிந்தே பிரிந்தோம்
புரியாமல் திரிந்தோம்.
அதிகம் பேசி
அதிஅதிகம் எதிர்பார்த்து
எதுவும் கிடைக்காமல்
சீக்கிரமே தேடுகிறோம்
அடுத்த காதலை!
😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
காதல் ஆழமானது
அதை விட ஆழமானது
காதல் தரும் காயம்!
😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
உனக்கு திருமணம் ஆக இன்னும் சிறு நாழிகையே உள்ளது,

இப்பொழுது நான் இதை கூறுகிறேன்
என் சிறு வயது காதலி நீ
நான் உன்னை காதலிக்கிறேன்
இனி நமக்குள் நட்பு மட்டுமே
நான் உன்னை வெறுக்கிறேன்
இதை ஏன் இப்பொழுது நான் உன்னிடம் கூறுகிறேன் என்றால்
உன் காதலை இனியும் நான் சுமக்க விரும்பவில்லை
உன் காதலை உன்னிடமே பத்திரமாக நான் திருப்பி கொடுத்து விட்டேன்
திருமண வாழ்த்துக்கள்......
😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
சில பெண்களுக்கு
நேர்மையான
ஆண்களைப்
பிடித்தாலும்,
ஏனோ,
பல பெண்களுக்கு
நேர்மையில்லா
ஆண்களைத்தான்
பிடிக்கிறது.....!!
😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
கவலை
--------------
நல்ல வாழ்வு
பற்றிய கவலை
மனதில் எவ்வளவு
இருந்தாலும்,
வெட்டி
பந்தாவிற்கு
மட்டும் குறைவே
இருக்காது இந்த
பெண்களுக்கு..
😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
மீண்டும் ஒரு நேசம் தேவையில்லை,
மணிகணக்காய் பேசும் அவசியமில்லை,
கை கோர்த்து சுற்றி வரும் எண்ணமில்லை,
பரிசு பொருட்களின் பரிமாற்றங்கள் எதிர் பாக்கவில்லை,
சீண்டிவிடும் தீண்டல்கள்
லட்சியம் இல்லை,
எனக்கு தேவை ஒன்று மட்டும் தான்..!!
முழு ஆயுளில் என்றாவது ஒரு நாள்
என்னை இழந்ததற்கான ஆதங்கம்
உன் விழியில் தெரியும்..
அந்த ஒரு நொடி மட்டுமே.....
😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
இமைகள் தாழ்ந்தன‌
விழிகள் அழுதன
என் முக‌ம் நோக்காத‌,
உன் பார்வையினால்!!
😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

காதல் கண்ணீர் கவிதகைள்


😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
எனது காதலை அவளிடம்
சொன்னபோது அவளின் பதில்
கண்ணீராக
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪

ஒருவரை இழக்கும்  போது வரும் கண்ணீரை விட.....
அவர்களை இழக்கிறோம் என்று நினைக்கும் பொழுது வரும் கண்ணீருக்குத் தான் வலி அதிகம்........
என் காயத்திற்க்கு மருந்து அவள் கண்ணீர் துளிகளே......
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
பணத்தை பார்த்து வரும் காதல் பாசம் இல்லை!!!...
நிறத்தை பார்த்து வரும் காதல் நிரந்தரம் இல்லை!!!....
மனதை பார்த்து வரும் காதலுக்கு என்றுமே மரணம் இல்லை!!!....
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
உன்னை மறக்க எடுத்த அத்தனை முயற்சியிலும் தோற்றுப்போகின்றன் உன்னை கண்ட அந்த நொடியில்....
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
அவளோடு வாழ நினைத்தேன் ஆனால் கல்லறையில் வாழ்கிறேன்    காதல்
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
இதயத்தில் நீ இருந்தால் உன்னை மறக்க முடியும்
இதயமே நீ என்றால் எப்படி மறக்க முடியும் பெண்ணே
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
கண்கள் தானாக கலங்குகின்றன
நீ என்னை விட்டு பிரியும் பொழுது
மீண்டும் வருவாயா என் கண்ணீர;
துடைக்க
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
என்ன மறந்து விட்டேன்
பெண்ணே....!
எத்தனை முறை
அழுதேன் என்று....!
காதல்
இருக்கும் வரை
இது போன்ற
கண்ணீர் கவிதைகளும்
இருக்கும்......!
இங்கு வார்த்தைகள்
மட்டுமே
மாறுகின்றன.....!
ஆனால்
வலிகள் மாறவில்லை.....!
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
ஆண்டவனின் அற்புத படைப்பில் அசைக்க முடியாத அதிசய படைப்பு ஏழையின் கண்ணீர்
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
நான் கதறி அழும் வேளையில்
என் கண்ணீரை துடைக்க நீளும்
என் தாயின் கையையும் தட்டிவிடுகிறேன்
கண்ணீராய் வழிவது நீ என்பதால்
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
உன் கண்களில்
ஒரு துளி கண்ணீர்
வருமென்றால் என்
மரணத்தைக் கூட
நிறுத்தி வைப்பேன்...!!!
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
உன் ஆத்மாவில் ....
சிறு உரசல் காதலாய்
வருமென்றால் ....
மறு ஜென்மம் வரை ....
காத்திருப்பேன் ....!!!
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
அன்பே ..
நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
என்றாலும் நான் அழமாட்டேன் ..
என் கண்ணீருக்குள் நீந்திக்கொண்டு இருக்கிறாய் ....
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
முதல் சந்திப்பு
எதிர்பாராதது
முதல் முத்தம்
விவரிக்க முடியாதது
முதல் காதல்
மறுபடியும் கிடைக்காதது
முதல் முறிவு
மறக்க இயலாதது.....
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
சந்தோஷமாக இருக்கும்போது பாடலின் இசை பிடிக்கிறது.
துக்கமாக இருக்கும்போது பாடலின் வரிகள் புரிகிறது.
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
உனக்கு
வேண்டிய
அழகோ,
பணமோ
என்னிடம்
இல்லாமல்
இருந்தாலும்,
எனக்கு
வேண்டிய
அன்பு
உன்னிடத்தில்
இல்லை...!!!
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
ஒரு பெண்
ஏமாற்ற படும் போது,
அவளை ஏமாற்றியவனை
பழிவாங்க நினைப்பது
இயற்கையாக இருந்தாலும்,
ஒரு பெண்
ஏமாறும் போது,
இயற்கையே அவளை
பழிவாங்குகிறது.....!!!
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
கால நேரம் தெரியாமல்
இரவு பகல் தெரியாமல்
உன்னை தேடுதடி கண்கள்
உன்னை காணாமல்
உன் உருவத்தை என் முன் நிறுத்தி
கண்ணீர் வடிக்கிதடி என் கண்கள்........
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி . . .
ஆனாலும்,
இவள் ஆறுதல் தேடியதில்லை மதுவிலோ போதையிலோ . . . !
இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை மாப்ள-மச்சான் நண்பர்களிடத்தில் . . . !
இவள் சோகத்தை மறந்ததில்லை கானா மெட்டுக்கள் பாடி . . . !
இவள் பழி சுமத்தியதில்லை ஒட்டுமொத்த ஆண்கள் வர்க்கமே மோசமென்று . . . !
இவள் கவனிக்கத் தவறியதில்லை கேட்கக் கூசும் விமர்சனங்களை . . . !
இவளுக்கு தெரிந்தது,
முடிந்தது, அனுமதிக்கப்பட்டது,
எல்லாம்..
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
மௌனத்தில் வலி வைத்து
வார்த்தைகள் மறைப்பவள்
உன் எண்ணத்தில் நானிருந்தால்
ஒரு வார்த்தை பேசி விடு
என் கன்னத்தை துடைத்துடுவேன்...
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
என்றாவது நீ என்னை சந்தித்தால்
அழுதுவிடாதே...!
உன் பிரிவை சுமக்கின்ற
மெல்லிய என் இதயம்
உன் கண்ணீரின் கனம் தாங்காமல்
உடைந்துவிடக்கூடும்...!

😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪

வியாழன், 14 ஜூன், 2018

காதல் பிரிவு கவிதகைள்


💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நான் தனிமையில் இருந்தபோது என் வாழ்வை புரிந்து கொள்ளவில்லை நி கிடைத்த அந்த நிமிடம் என் வாழ்க்கையை புரிந்துகொண்டேன்
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நான் தனிமையில் இருந்தபோது என் வாழ்வை புரிந்து கொள்ளவில்லை நி கிடைத்த அந்த நிமிடம் என் வாழ்க்கையை புரிந்துகொண்டேன்
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உன்னுடன் இருக்கும் போது மழைதுளியை ரசிதேன் நீ என்னை விட்டுச் சென்ற பின் கண்ணீர; துளியை ரசிகிறேன்
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நீ வேண்டும் நான் சந்தோஷமாக வாழ ஆனால் உன் நினைவுகள் மட்டும் போதும் நான் உயிர் வாழ
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
ஆயுள் முழுவதும்
          காத்திருக்க தயார்
மரணம் போல் நிச்சயமாய்
          வருவதாயிருந்தால்
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
தென்றல்   தீண்டும் ஒவ்வொரு
முறையும்
    உன்னை பற்றி  எண்ணுகிறேன்
தென்றலாய் தீண்டுவாய் என்று
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
மனம் வலிக்கும் போதெல்லாம் மறக்காமல் வந்துவிடுகிறது உன் நினைவுகள்...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
எவ்வளவோ முயற்சி செய்த
பின்பும்
நீ
கொடுத்த பிரிவு மட்டும்
பிரியாமால் இருக்கிறது
என்னுள்
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
காதலித்தால் ஏமாற்றம் தான்.
என்றார்கள் பலபேர்
தப்பி பிழைத்தவர்களில் நானும் ஒருவனாக
இருக்கமாட்டேனா என்ற .ஆசையில் தான்
காதலித்தேனடி உன்னை...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
என்னை நீ விட்டுப்போன பின்தான்
உரைத்ததடி எனக்கு...
இப்போது வருந்தி என்ன
பயன் என் எலும்புகள் நொறுங்கி கிடக்குதடி ஆறடிக்
குழிக்குள்....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
காயத்தின் வலியை
தாங்குவேன்
உன் பிரிவின் வலியில்
வாழுவேன்
அன்பே ஒருமுறை
வந்துவிடு
உன் பார்வையால்
என்னை வீழ்த்திவிடு...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
ஒருமுறையாவது உன் தோள்சாய்ந்து
உன்னை இறுகக் கட்டியணைத்தபடி
என் கண்ணீரில் உன் தோள் நனைத்தபடியே
என் சோகமெல்லாம் சொல்லியழ வேண்டும்
ஒருமுறை ஒரே ஒருமுறை.....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
காதல் தோல்வியும் அழகான சித்ரவதை
தான் உன்னை
நினைக்கவும் முடியாமல்
மறக்கவும் முடியாமல்
தவித்த தருணங்கள்
சோகமான சுகங்கள்
காதல்...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நான் உன்னை நேசிக்கும்
அளவு நீ என்னை நேசிக்க
வேண்டாம்....
ஆனால்,
என்னையும் என் பாசத்தையும்
புரிந்து கொண்டாலே
போதும்...!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
தேடி வந்து காதலை சொல்பவர்கள் தான்
நம்மை தேட வைத்து விட்டு பாதியிலே
தொலைந்து போய் விடுகிறார்கள்..
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உன் பெற்றோரின் மானம் காக்க என்
மனதை கொன்று விட்டு..! தலை குனிந்து
அமர்ந்து விட்டாயோ மணப்பந்தலில்
இன்னொருவனோடு..!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உன் மீதான என் அன்பை என்னைவிட
அதிகமாக வேறொருவரால் தர முடியுமானால்
அன்று தாராளமாக நானே உன்னைவிட்டு
விலகி சென்று விடுவேன்..
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
ஒரு பொண்ணை உண்மையாக
நேசிக்கும் ஒரு ஆணால் அவள்
அடுத்த ஆணுடன் பேசுவதை
தாங்கிக்கொள்ள முடியாது !!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
வலிகளை தருவது நீயாக இருந்தால்
எவ்வளவு வலியையும் தாங்கிக்
கொள்வேன் என்று கூறும் உறவு
கிடைப்பது வாழ்வில் என்றும் வரமே...!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
எனக்கு தேவைப்படும் போது
நீ கொடுக்காத அன்பு
அதன் பின்
நீ எப்போது கொடுத்தாலும்
எனக்கு தேவைப்படாது..
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உன் நெஞ்சினில் ஒரு முறை
சாய்ந்து கொண்டால்
மரணம் ஏதடா என் கண்ணா!!
உன்னை ஒரு முறை
அணைத்துக்கொண்டால்
சரணம் ஆகுமே என் மன்னா!!
குழந்தயாய் மடி மேல்
சாய்ந்து கொண்டாய்
இன்று குழந்தயாகினேன்
உன் நினைவால்!!
அன்பிலே உன்னை எண்ணி
தவிப்பது தெரியாதா!!
ஒரு முறை ஒரே முறை
என்னிடம் வருவாயா!!
ஏங்குகிறேன் நீ என்
பக்கம் இல்லையே!!
உருகுகிறேன் உந்தன்
ஏக்கம் தொல்லையே...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
என்னை நான் வெறுக்கக் கற்றுக் கொள்கிறேன்
எனக்காக இல்லை...
என்னை விட்டு போன உனக்காக
எனக்குள் இருக்கும் உனக்காக...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
ஒரு வரிடம் பேசவே கூடாது என்று முடிவு
செய்த பிறகும் அவரிடம் மீண்டும் பேச
தூண்டும் உணர்வே உண்மையான அன்பு...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
என் வாழ்வில் இந்த நொடி பொழுது வரை
உன்னை மறக்கத்தான் முயற்சிக்கிறேன்.
உன்னை மறப்பதாக எண்ணி மீண்டும் மீண்டும்
உன்னை அதிகமாக காதலித்து என்னையே
நான் ஏமாற்றி கொள்கிறேன்.
வேடிக்கையாக இருக்கிறதா?
ஆனால் அந்த ஏமாற்றத்திலும்
தோன்றும் காதலை நான் அதிகமாக காதலிக்கிறேன்.
ஏனெனில் அந்த ஒற்றை காதலுக்கு
என்றுமே பிரிவுஇல்லை என்பதால் தான்.
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உன்னை மறப்பதற்கு
நான் செய்யாதது எதுவும் இல்லை
ஆனால்
உன்னை நான் நினைத்திருக்க
நீ தந்தது உன் மௌனம் மட்டுமே..!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உருகி உருகி காதலித்தேன் ...!
உதடு வலிக்காமல் சொல்லிவிட்டாள்  --
வேண்டாம் என்று ...
உள்ளம் வலிக்குதடி உண்மையான
காதலோடு உன் விழிகளை
பார்க்கையில்....!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
இல்லை என்று தெரிந்தும்
துடிகின்றது மனம்!
வேண்டும் என்று.......
கற்பனை என்று தெரிந்தும்
துடிகின்றது கண்கள்!
காண வேண்டும் என்று.......
பொய் என்று தெரிந்தும்
துடிகின்றது வார்த்தைகள்!
பேச வேண்டும் என்று.......
நான் என்று தெரிந்தும்
துடிகின்றது இதயம்!
நீ என்று தான்...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
மறக்க வேண்டும் என்று தான் நினைப்பேன்
அவளை பார்க்கும் வரை...
ஆனால்,
அதை கூட மறந்து விடுகிறேன்,
அவளை பார்க்கும் போது!!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
தனிமையில் இருக்க முயற்சிக்கிறேன்.
முடியவில்லை..
என்றுமே என்னுடன் அவள் நினைவுகள் இருப்பதால்.
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
என்னை வெறுத்த அவளையே மறக்க முடியாத போது...?
நான் விரும்பிய அவளை என்னால் எப்படி
மறக்க முடியும்?
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
கா - காலமெல்லாம்
த - தவித்திருப்பான்
ல் - இல்லாத ஒன்றிற்காக..!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நான் உன்னையே
உயிராய், வாழ்வாய்
எண்ணியிருந்தாலும்
நீ உன்னவனை  காட்டிய
அந்த நொடியில் தான்
"நம் காதல்" ஆகாமலே
சருகாகிப் போனது
என் காதல்.....!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
மறக்க
வேண்டுமென்றுமீண்டும்
அதையேதான்
நினைக்கிறேன்.
மறக்க
முடியவில்லைஎன்பதை
விட
மறப்பதற்கு
மனமில்லை
என்பதுதான்
உண்மை!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
படுக்கும்போதும்
உறங்கமறுத்து
உன்னையே நினைக்கிறேன்!-அந்த
காதலே இல்லையென
மறுத்தபோதும்
உன்னை மறக்காமல்
நான்
தவிக்கிறேன்!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
காதலுக்கு கண்கள் உண்டு ஏனெனில்
காதல் வந்தால்
நம் கண்களை தான் மறைத்து விடுகிறது
இந்த உலகத்தை மறக்க........
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நான் செய்த ஒரே தவறு
நீ செய்தது எல்லாம்
எனக்காக என்று
நினைத்தது மட்டுமே.
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
என்னவனே
உன்னோடு வாழ்ந்த நாள்
மிக சொற்பம்
உன் நினைவோடு
வாழ்ந்த நாள் அதிகம்
என்பதை என் டயரி
சொல்லும் பார் ....!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
இடை இடையே ...
எழுத்துகள் அழிந்திருக்கும் ...
என்னசெய்வது கண்ணீருக்கு ...
தெரியவில்லை ....!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
முள் மீது பட்ட சேலையை கூட சேதாரமில்லாமல்  எடுத்துவிடலாம்....
ஆனால் பெண்மீது அன்பு கொண்டால் சேதாரம் மட்டுமே மிஞ்சும்.....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நான் இறந்த பின் என்னை புதைக்க வேண்டாம் எரித்துவிடுங்கள் ..
இல்லையேல் புதைக்கப்பட்ட நான் உரமாகி புல் பூண்டாக முளைக்க கூடும் அவன் நினைவுகள்
மீண்டும் என்னை கொன்றுவிடும் ....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
அன்று நான் தேடாமல்
தந்தாய் உன் பாசத்தை - இன்று
நான் தேடியும் கிடைக்கவில்லை
உன் பாசம்...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
விட்டுவிடு! பெண்ணே விட்டுவிடு!
உன் பிரிவினால் நான் பட்ட துன்பங்கள் போதும்!
உன் நினைவினால் நான் படும் இன்னல்கள் போதும்!
வெளியே சிரித்து, உள்ளே அழுகும் இந்நாடகம் போதும்!
உயிரில்லா உடலைப்போல் நான் உணர்வற்று திரிவது போதும்!
கனவும் கண்ணீரும் கசிந்தொழுக, காதலோடு நான் படும் அவஸ்தைகள் போதும்!
அழுது அழுது வீங்கிய கன்னங்களோடு- நான்
அவஸ்தைப்படும் இவ் இன்னல்கள் போதும்!
முகமதை புதைக்க மடியில்லாமல் - நான்
முணுங்கி அழும் இரவுகள் போதும்.
அழுகும் குரல் அருகில் தெரியாமல், கையடக்கி விம்மிய வின்னல்கள் போதும்!!!
போதும் பெண்ணே விட்டுவிடு!
உன் பிரிவிக்குப் பின்,
உன் நினைவில்லாமல்,
இனியாவது என்னை வாழவிடு!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
வருவாயா?????
நின் நீங்கா நினைவுகள் நெஞ்சால் ஆழ
நித்தம் நித்தம் உனைத் தேடுகிறேன்...
தனிமைகள் எனை ஆட்கொள்ள,
தவிப்புகள் மேலும் அதிகரிக்க,
தேடிக்கொண்டே இருக்கிறேன் - நின்
தெரியாத முகம்தனை!
உன்னோடு வாழவே உள்நெஞ்சம் ஏங்குதடி,
கண்ணால் காணாமல் கனவிங்கு வேகுதடி!
காத்திருக்கிறேன் முகம் தெரியாத உன் முகவரிக்காக!
நாட்கள் உறுண்டோட நானும் உயிர் ஏந்தி நிற்கிறேன் நினக்காக!
நின் இனிய முகம் காணாமல் இதயமும் சுவாசத்திற்கு இடம் தர மறுக்குதடி!
இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் என் செவிதனில் இடியாய் கேட்க,
இன்னல்களை உணர்கிறேன் நீயில்லாத இதயமதை வெறுக்கிறேன்!!!
துடித்த இதயத்தை கையில் எடுத்து காத்திருக்கிறேன்-
நீ வந்தால் தந்துவிடலாமென!!
கனவிலும் உன்முகம் தெரிவதில்லை - நின்
நினைவிலும் என் மனம் மலரவில்லை!
என் மனம் கேட்கிறது - நின்
நிலம் போன்ற முகம்தனை!!!
வருவாயா.............!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
இறுக்கமாக வைத்துக்கொள்!
என்னை தான் விட்டுவிட்டாய்,
என் இதயத்தையாவது.....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
என் இதயத்தில்
உனக்காக கோயில் கட்டினேன்...
நீ மாசற்றவள் என்றெண்ணி
விழா எடுத்தேன் .........
கணக்கின்றி பணத்தை
வாரியிறைத்தேன்.......
என் வீட்டு தேவதையாய்
உனைப் பூஜித்தேன்....
மனதைத் தைத்துவிட்டு
கண்டவன் எல்லோருடனும்
கைகோர்த்து திரிகிறாயே.....
இதுதான் காதலா
நீதான் இரவு ராணியா??
தாஜ்மஹால் இடிந்ததே உயிரெடுத்த ஜடமே ....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
பார்வையில் நெருப்பாய் இருந்தாள்....
பேசுவதில் தீயாய் இருந்தாள் ....
கற்பில் தீ பிழம்பாய் இருந்தாள் ....
அன்பில் அழகான சுடராய் இருந்தாள் ....
காதலால் என்னை கருக்கி விட்டாள்....!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
ஒருத்தியின் இறுதி வரிகள் ...

தோழிகளில் எவளோ ஒருத்தி
செய்து வைத்த அறிமுகம்
ஆரம்பத்தில் அதிகம் நாட்டமில்லை
பிறகொரு பொழுதில்
என்னதான் இருக்குமென்று
உள் நுழைந்தேன்!
அடுக்கடுக்காய் அதீத
இன்பத்தில் அகம் மகிழ்ந்தேன்!
மனமது மாறியது!
குலுங்க குலுங்க கை குலுக்கினேன்,
எவரென்று தெரியாது
இருப்பினும் உறவாடினோம்!
எத்தனை இரவுகள்
எத்தனை பகல்கள்,
வேண்டுமென்றே தொலைத்திருப்பேன்!
வேண்டாமென்று
புத்தியுள்ளவர்கள் கூறுகையில்
உமக்கென்ன தெரியும் என்று சாடினேன்!
என்னை கொண்டாடுகையில்
ஏதோ நானும் சாதித்துவிட்ட பெரும் நிறைவு!
நான் நானாகவே உலாவினேன்,
என்னை சுற்றிய முகங்களனைத்தும்
முகமூடி என்பதை அறியாமல்!
அருகிலிருந்த உறவை உதறினேன்
எங்கோ இருந்த பதறுகளை நம்பி!
திரைக்கு முன்னாடி அமர்ந்து
எண்ணியதை எழுதினேன் ஏளனம் கொண்டு!
நொடியில் நூறு விருப்பங்கள் சேருகையில்
கயிரறுந்த காளையானது மனசு!
காலம் கொடியது,
காட்சிகள் மாறியது,
என்னின் ஒற்றை புகைப்படம் கொண்டு
என் வாழ்வை திசை மாற்றினான்
நயவஞ்சக நண்பன்!
எல்லாம் அறிகையில்
ஆயிரம் நண்பர்களும்,
இருந்த இடத்தில் இருந்தே ஆறுதல் "குறி"
நெஞ்சில் ஏறிய பாரம்
புத்தியில் உரைத்தது
நானும் பெண் தானென்று!
போதும்,
இதோ இதுதான்
என் பயணத்தின் முற்றுபுள்ளி
என்னை நேசித்த உறவுகளிடம்
இதையும் சேர்த்து விடும்
இந்த "அரட்டை குழுமம்"
முகம் தொலைத்தவளின்
இந்த முகவரி அற்ற கடிதம்
இன்னொருவளின் திசையை
சீராக்கினால் போதும்
நான் சாந்தி அடைவேன்!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
பெண்ணே தாலிக்கட்டி உன்னை தாரமாக்க நினைத்தேன் நீயோ... வேறொருவனை மனதில் நினைத்துக்கொண்டு என்னை தாடிக்காரனாய் மாற்றிவிட்டாய இது நியாயமா?
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
காதலித்துபார் வாழ்கை புதிதாகவும்
காதலித்து தோற்றுபார் உலகமே உனதாகும்
தோல்வி உன்னை வெற்றிஇன் விளிம்பிற்கு அழைத்து செல்லும்...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
மனதினுள் வைத்தால் தொலைந்துவிடும் என்று உன் இதயத்தை என் இதயத்தினுள் வைத்தேன் பத்திரமாய்! நீயோ என் இதயத்தையே அறுத்து உன் இதயத்தை எடுத்துச் செல்கிறாய்!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
கண்களின் அனுமதி கேட்டா நான் உன்னைப் பார்த்தேன்?
இதயத்தின் அனுமதி கேட்டா நீ உள்ளே வந்தாய்?
நம் இருவரின் அனுமதி கேட்டா காதல் நம்முள் வந்தது?
இப்போது யார் அனுமதி கேட்டு என்னை நீ பிரிந்தாய்♥♥♥
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
என்னமோ புரியவில்லை ....
உன்னை நினைக்கும்போது ...
கண்ணீருடன் கவிதை ...
அருவியாய் வருகிறது ....!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உனக்கு காதல் குப்பை ...
எனக்கு காதல் குண்டுமணி ....
தண்டவாளமாய் ......
பயணிக்கிறோம் ....!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உன்னில்
ஒரு திறமை இருக்கிறது .....
நீ சிரித்துகொண்டே ...
என்னை அழவைப்பதில் ....!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
என்
உயிர் காதலியே
நீ
எனை பிரிந்து இன்றோடு
நான்காண்டுகள்
முடிகிறதடி.......
எதிர்பார்க்காத
உன் பிரிவால்
என்னுள் எத்தனை
மாற்றமடி.....
தாடியும் பீடியுமாக
என்
தோற்றம் மாறி போனேன்
தலையணை இருந்தும்
உறக்கம்
இழந்து போனேன்
தாய் அன்பு கிடைத்தும்
அனாதை
நான் என உணர்ந்தேன்......
உன்
ஒற்றை காதல்
எனை
பைத்தியமாய் மாற்றியதடி
இத்தனை
துன்பங்களையும்
தாங்கி கொண்டே
இன்னும்
உன்
நினைவுகளை சுமந்து
கொண்டு
வாழ்வதற்க்கு
ஒரே
காரணம் தானடி......
நான்
அழுதாலும்
நீ
சிரிக்கிறாய் அல்லவா.....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உன்னோடு ....
பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ...
ஒவ்வொரு பூக்களாக இருந்தது.........
ஒவ்வொரு மணிநேரமும் .....
ஒவ்வொரு நிமிடமாக இருந்தது ...........!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உன் பிரிவுக்கு
பின்னால் ஒவ்வொரு வார்த்தையும்
ஒவ்வொரு முள்ளுகளாக குத்துதடி
ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு
யுகமாக வலிக்கிதடி.....!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உன்னை பார்த்த போது
கவிதை எழுத எண்ணினேன்
உன்னை காணாத போது
கவிதை எழுதினேன்
காதலித்தபோது கவிஞரானேன்
என்னை ஏமாற்றியபோது ..
கவிதை ஞானியானேன்...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நான் விஷம் குடித்து
பலவருடமாகியும் இன்னும்
முழுதாய் இறக்கவில்லை
உன் நினைவால்
காதல் ஒரு உயிர் கொள்ளி ...!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
காதலில் தோல்வி கண்ட
ஒவ்வொரு இதயமும் மயானம் தான்
சோகம் மட்டுமே சொத்துக்களாக இருக்கும்
இறந்தவர்கள் திரும்பி வருவதில்லை....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
எனக்கு மட்டுமே சொந்தம்

யாருக்கு வேண்டுமானாலும்
உன் உடல் சொந்தமாகலாம்
எந்த நபரும் உன்னால்
வசீகரிக்கபடலாம்
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உன் இதழ்களை
யாரேனும் சுவைக்கலாம்
ஆனால் உன் இதயத்தை
தொட்டவன் நான் மட்டுமே..
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உன் நினைவுகளால்
என் இதயத்தின் துடிப்புகள்
வெகுவாக குறைந்து கொண்டே
வருகிறது
இறப்பதற்கு முன் வருவாயா?
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
பிரிவு
நமக்கு தவிர்க்கவும் ....
மறக்கவும் முடியாத வலி,
நினைவு என்பது யாராலும்
என்னிடமிருந்து உன்னால் ....
பறிக்க முடியாத பரிசு ....!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நீ ....
எனக்காக மூச்சு விடும்போது ....
நான் .....
உனக்காக இறப்பதில் ....
என்ன தப்பு ...?
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
காதலித்துப்பார் ஆரம்பத்தில் சிரிப்பாய் ....
என்னைப்போல் ஒரு நாள் அழுவாய் ....!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
காற்றிருந்தால் தான் பட்டம் பறக்கும்...
காதல் இருந்தால் தான் வாழ்க்கை சிறக்கும்....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
அன்று வேப்பெண்ணெய் தந்தாள் இனித்தது ....
இன்று கற்கண்டு தந்தாள் கசக்கிறது ....!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
காதல் ஒரு வழி பாதை புரிந்து கொள்...
நினைக்க தெரியும் மறக்க தெரியாது....!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நான் தனிமையில் இருந்தபோது என் வாழ்வை புரிந்து கொள்ளவில்லை நி கிடைத்த அந்த நிமிடம் என் வாழ்க்கையை புரிந்துகொண்டேன்
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
காதல் தோல்வியா? அழு... வாய்விட்டு அழு... கதறிக்கதறி அழு... உன் கண்ணீரோடு காதலும் கரைந்து போகும் வரை அழு... பின்பு உலகத்தைப் பார்... காதலையும் மீறி எத்தனையோ அழகுகள்... காதல்தோல்வியும் தாண்டி எவ்வளவோ பிரச்சனைகள்... அழகுகளை ரசிக்கக்கற்றுக்கொள்... பிரச்சனைகளை தீர்க்க பழகிக்கொள்.. வாழ்வதற்கே வாழ்க்கையென்பதை புரிந்துகொள்...! பெற்றவள் இறந்தாலே கண்ணீர்தான் சிந்துகிறாய்... காதல் இறந்ததற்கா உயிரைச் சிந்தத்துணிகிறாய்? காதல் புனிதமானது தான்... புனிதமான தெதுவும் உயிரை விலையாய் கேட்பதில்லை.. விலங்குகளை பலிகொடுத்து கடவுளின் புனிதத்தை கெடுக்கிறோம்... நம்மையே பலிகொடுத்து காதலின்புனிதத்தை கெடுக்கிறோம்..
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
அன்பானவர்களிடம் உன் மனதை மறைத்து விடாதே. உன் மனதில் உள்ளதை மறைப்பதாயின் அன்பாய் இருப்பது போல் நடித்து வாழாதே.
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நம் மனதிற்கு பிடித்தவர்கள் நம்மைவிட மற்றவர்களுடன் அதிகமாக பேசும் போதும் சிரிக்கும் போதும்.. மனதின் ஓரத்தில் லேசாக வலிக்கவே செய்கிறது...!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உண்மையான அன்பை புரிந்துக் கொள்ளாதவர்களும் உண்மையான அன்பை வெளிப்படுத்தாதவர்களும் இந்த உலகில் அனாதைகள் தான்...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
காலம் முழுவதும் உன்னுடன் என்றுவளே. இன்று எங்கே சென்றாய் என்னவளே. காத்திருந்தும் காணவில்லை .....காதலி.....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நீ போகும் பாதையில் மட்டுமல்ல போகாத பாதையிலும் காத்துக் கிடக்கிறது உனக்காக என் மனசு!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
வருசையில் நின்று வாங்கப் போன மருந்துக்கடையில்தான் வாங்கி வந்தேன் மருந்தே இல்லாத காதல் நோயை.....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
கல்லூரி கடைசிநாளில் எல்லோரும் கலந்திருக்க பிரிவு் கவலையில் கரைந்திருக்க! என் கண்களும் அழுது கிடந்தன நீ பேசாததால் இறந்துப் போன
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
புள்ளிகளையும், கோலங்களையும் என் மனசுக்குள் போட்டு விட்டு பூவை மட்டும் ஏனடி வாசலில் வைக்கின்றாய்?!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
என்னை உன் மனச்சிறையில் தானே வைக்கச் சொன்னேன் !! உன் அப்பனிடம் சொல்லி ஏன்-என்னை மத்திய சிறையில் வைத்தாய் ?
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
அவளின் அனுமதி இல்லாமல் அவளை காதலித்ததால்தான்  என்னவோ அவளும் என் அனுமதி இல்லாமல் நிராகரித்துவிட்டால் என் காதலை
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
அழவைக்கும் ..
அதிகம் புலம்பவைக்கும்..
வெறித்து பார்த்து எதையோ எழுதி
கவிதை என்று சொல்லும்...
தூரம் தெரியும் வெளிச்சம் பிடிக்க
இருட்டு பாதையில் நடக்க வைக்கும்..
நெருங்கி போனால் அணைந்து போகும் ...
விட்டில் பூச்சியாய் எட்டிப் போகும்..
எரிகிற காதலில்
எண்ணையை ஊற்றாமல்
உன்னையே நினைத்து உருக..
காதல்.. அழவைக்கும்..
அதிகம் புலம்பவைக்கும்..
(இப்போது முதலில் இருந்து படிக்கவும்)
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
இன்னுமா காத்திருக்கிறாய்..
நான் உன்னை கடந்து போய் வெகு நேரமாகிறது..
உன் பக்கத்தில் இருக்கும்
நினைவு குப்பைதொட்டியை கிளறி பார்..
உன்னை பற்றிய சிந்தனைகளை
அங்கே தான் கிழித்து போட்டு வைத்திருக்கிறேன்..
நீ வேண்டும் என்றபோதும்,
வேண்டாம் என்றே சொல்கிறேன்..
உன் பாதை, நான் நடந்து வந்த பாதை தான்..
போகும் வழியில் முட்களை குத்தியதும்
ஓரம் எடுத்து போட்டுக்கொண்டே செல்கிறேன்..
நீ வரும் போது.. முட்களை விட
என் காதல் உன்னை குத்திக்கொண்டே இருக்கட்டும் ..
இன்னுமா காத்திருக்கிறாய்..
நான் உன்னை கடந்து போய் வெகு நேரமாகிறது..
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
எனக்கு பிடிக்காத எல்லாம்
உனக்கும் பிடிக்காமல்
போன போது
உன்னை
பிடிக்க தொடங்கியது...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நீ மனம் தேடும் நிம்மதி நீ ..! குணம் திணறும் போதை நீ ..! காலம் கடத்தும் கடிகாரம் நீ ..! கவிஞனுக்கு   கிடைக்காத வார்த்தை நீ ..! கைக்கு எட்டாத நிலவு நீ ..! நெஞ்சை கொத்தும் பறவை நீ ..! சிரிப்பில் கொள்ளும் என் தேவதை நீ ..! காதல் தந்து வாழ்வு கொடுக்கும் கடவுளும் நீ ..! சொல் .......,,, தற்போது என் மனசில் ஒரு உறுத்தல் கடைசியாய் சந்திக்கையில் ஒரு முத்தம் தந்தேனே அதன் ஈரம் அப்படியே இருக்குமா இன்னும் உன்னுள் .....!!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
கடற்கரைக் காணும் போதும், கைக்கோர்த்த காதலர்கள் கடக்கும் போதும், காதலர் தினப் பரிசுகளை தோழி வரிசைப்படுத்தும்போதும், முள்ளென முளைத்து நிற்கும் காதலர் தினந்தன்று நானும் என் காதலும் தனிமையாய்-இந்த தனிமையை என்ன செய்ய??
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
வலிகளை சுமக்கும் இதயத்திற்கு. கண்ணீர் சிந்த தெரியாது.! கண்ணீர் சிந்தும் கண்களுக்கோ வலிகளை தாங்க முடியாது.!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நான் உனிடம் கொடுத்த ரோஜா மலர் வாடுவதற்குள் நீ என்  இறுதி ஊர்வலத்திற்கு மலர்வளையம் அனுப்பி விட்டாய்....
அழித்துவிடு...
நீ இருக்கும் நெஞ்சில்
சுகமான வலியை
உணர்கிறேன் நான்...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
பழகிய நாளில்
பேசிய வார்த்தைகள்
இன்னும் ஓயாமல்
ரீங்காரமாய் ஒலிக்கிறது என்னுள்...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நினைத்து நினைத்து
சலித்து போய் மறக்க முயல்கிறேன்...
இயலவில்லை என்னால்...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நினைவுகளை
கடக்க மட்டுமே முடிகிறது
அழிக்க முடியவில்லையே...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நீ ஏதும் அழிப்பான்
வைத்திருந்தால் அழித்துவிடு!
என்னுள் இருக்கும்
உன் நினைவுகளை...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
தாக்க வேண்டிய
கை, தாங்கும் போது
ஏற்படும் இனிமையை
விட,
தாங்க வேண்டிய
கை தாக்கும் போது
ஏற்படும் வலியே
அதிகம்...!!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
பிரிதலுக்கான
முகாந்திரங்களோடு
தொடர்பறுத்துக் கொள்வதெல்லாம்
சரி.....
காதல் சொல்லியதைப்
போலவே.....
காரணத்தையும்
சொல்லிவிட்டுப் போ......!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
செருமும் பொழுதில் கூட
எச்சில் தெறித்துவிடக்கூடாதென
கவனத்தோடு இருக்கும்
உனக்கும்....
அகோரப் பசிக்கு
அவ்வப்பொழுது எச்சில்
விழுங்கிக் கொள்ளும் எனக்கும்.....
காதல்...
சரிப்பட்டுவராதுதான்.....!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
பல அன்புகளுக்கு திறந்த என் இதய கதவுகள்
மூட மறுக்கின்றது வலி தந்த உன் அன்புக்கு மட்டும் .....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
ஆண்களின் காதல்
ஒரு உடைக்கப்பட்ட
கண்ணாடி...
அதை வேறு ஒரு பெண்
ஒட்ட வைக்க நினைத்தாலும்...
பழைய காதலின் நினைவுகள்
விரிசல்களாய் இருக்கும்.
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
அன்பே உன் மனதில்

நான் இல்லை என்றாய்
துடித்துப் போனேன் !

பின்பு

உனக்கு மனசே இல்லை
என்று தெரிந்து
ஆறுதல் அடைந்தேன் !

💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔