வியாழன், 14 ஜூன், 2018

காதல் பிரிவு கவிதகைள்


💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நான் தனிமையில் இருந்தபோது என் வாழ்வை புரிந்து கொள்ளவில்லை நி கிடைத்த அந்த நிமிடம் என் வாழ்க்கையை புரிந்துகொண்டேன்
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நான் தனிமையில் இருந்தபோது என் வாழ்வை புரிந்து கொள்ளவில்லை நி கிடைத்த அந்த நிமிடம் என் வாழ்க்கையை புரிந்துகொண்டேன்
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உன்னுடன் இருக்கும் போது மழைதுளியை ரசிதேன் நீ என்னை விட்டுச் சென்ற பின் கண்ணீர; துளியை ரசிகிறேன்
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நீ வேண்டும் நான் சந்தோஷமாக வாழ ஆனால் உன் நினைவுகள் மட்டும் போதும் நான் உயிர் வாழ
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
ஆயுள் முழுவதும்
          காத்திருக்க தயார்
மரணம் போல் நிச்சயமாய்
          வருவதாயிருந்தால்
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
தென்றல்   தீண்டும் ஒவ்வொரு
முறையும்
    உன்னை பற்றி  எண்ணுகிறேன்
தென்றலாய் தீண்டுவாய் என்று
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
மனம் வலிக்கும் போதெல்லாம் மறக்காமல் வந்துவிடுகிறது உன் நினைவுகள்...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
எவ்வளவோ முயற்சி செய்த
பின்பும்
நீ
கொடுத்த பிரிவு மட்டும்
பிரியாமால் இருக்கிறது
என்னுள்
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
காதலித்தால் ஏமாற்றம் தான்.
என்றார்கள் பலபேர்
தப்பி பிழைத்தவர்களில் நானும் ஒருவனாக
இருக்கமாட்டேனா என்ற .ஆசையில் தான்
காதலித்தேனடி உன்னை...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
என்னை நீ விட்டுப்போன பின்தான்
உரைத்ததடி எனக்கு...
இப்போது வருந்தி என்ன
பயன் என் எலும்புகள் நொறுங்கி கிடக்குதடி ஆறடிக்
குழிக்குள்....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
காயத்தின் வலியை
தாங்குவேன்
உன் பிரிவின் வலியில்
வாழுவேன்
அன்பே ஒருமுறை
வந்துவிடு
உன் பார்வையால்
என்னை வீழ்த்திவிடு...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
ஒருமுறையாவது உன் தோள்சாய்ந்து
உன்னை இறுகக் கட்டியணைத்தபடி
என் கண்ணீரில் உன் தோள் நனைத்தபடியே
என் சோகமெல்லாம் சொல்லியழ வேண்டும்
ஒருமுறை ஒரே ஒருமுறை.....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
காதல் தோல்வியும் அழகான சித்ரவதை
தான் உன்னை
நினைக்கவும் முடியாமல்
மறக்கவும் முடியாமல்
தவித்த தருணங்கள்
சோகமான சுகங்கள்
காதல்...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நான் உன்னை நேசிக்கும்
அளவு நீ என்னை நேசிக்க
வேண்டாம்....
ஆனால்,
என்னையும் என் பாசத்தையும்
புரிந்து கொண்டாலே
போதும்...!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
தேடி வந்து காதலை சொல்பவர்கள் தான்
நம்மை தேட வைத்து விட்டு பாதியிலே
தொலைந்து போய் விடுகிறார்கள்..
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உன் பெற்றோரின் மானம் காக்க என்
மனதை கொன்று விட்டு..! தலை குனிந்து
அமர்ந்து விட்டாயோ மணப்பந்தலில்
இன்னொருவனோடு..!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உன் மீதான என் அன்பை என்னைவிட
அதிகமாக வேறொருவரால் தர முடியுமானால்
அன்று தாராளமாக நானே உன்னைவிட்டு
விலகி சென்று விடுவேன்..
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
ஒரு பொண்ணை உண்மையாக
நேசிக்கும் ஒரு ஆணால் அவள்
அடுத்த ஆணுடன் பேசுவதை
தாங்கிக்கொள்ள முடியாது !!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
வலிகளை தருவது நீயாக இருந்தால்
எவ்வளவு வலியையும் தாங்கிக்
கொள்வேன் என்று கூறும் உறவு
கிடைப்பது வாழ்வில் என்றும் வரமே...!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
எனக்கு தேவைப்படும் போது
நீ கொடுக்காத அன்பு
அதன் பின்
நீ எப்போது கொடுத்தாலும்
எனக்கு தேவைப்படாது..
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உன் நெஞ்சினில் ஒரு முறை
சாய்ந்து கொண்டால்
மரணம் ஏதடா என் கண்ணா!!
உன்னை ஒரு முறை
அணைத்துக்கொண்டால்
சரணம் ஆகுமே என் மன்னா!!
குழந்தயாய் மடி மேல்
சாய்ந்து கொண்டாய்
இன்று குழந்தயாகினேன்
உன் நினைவால்!!
அன்பிலே உன்னை எண்ணி
தவிப்பது தெரியாதா!!
ஒரு முறை ஒரே முறை
என்னிடம் வருவாயா!!
ஏங்குகிறேன் நீ என்
பக்கம் இல்லையே!!
உருகுகிறேன் உந்தன்
ஏக்கம் தொல்லையே...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
என்னை நான் வெறுக்கக் கற்றுக் கொள்கிறேன்
எனக்காக இல்லை...
என்னை விட்டு போன உனக்காக
எனக்குள் இருக்கும் உனக்காக...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
ஒரு வரிடம் பேசவே கூடாது என்று முடிவு
செய்த பிறகும் அவரிடம் மீண்டும் பேச
தூண்டும் உணர்வே உண்மையான அன்பு...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
என் வாழ்வில் இந்த நொடி பொழுது வரை
உன்னை மறக்கத்தான் முயற்சிக்கிறேன்.
உன்னை மறப்பதாக எண்ணி மீண்டும் மீண்டும்
உன்னை அதிகமாக காதலித்து என்னையே
நான் ஏமாற்றி கொள்கிறேன்.
வேடிக்கையாக இருக்கிறதா?
ஆனால் அந்த ஏமாற்றத்திலும்
தோன்றும் காதலை நான் அதிகமாக காதலிக்கிறேன்.
ஏனெனில் அந்த ஒற்றை காதலுக்கு
என்றுமே பிரிவுஇல்லை என்பதால் தான்.
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உன்னை மறப்பதற்கு
நான் செய்யாதது எதுவும் இல்லை
ஆனால்
உன்னை நான் நினைத்திருக்க
நீ தந்தது உன் மௌனம் மட்டுமே..!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உருகி உருகி காதலித்தேன் ...!
உதடு வலிக்காமல் சொல்லிவிட்டாள்  --
வேண்டாம் என்று ...
உள்ளம் வலிக்குதடி உண்மையான
காதலோடு உன் விழிகளை
பார்க்கையில்....!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
இல்லை என்று தெரிந்தும்
துடிகின்றது மனம்!
வேண்டும் என்று.......
கற்பனை என்று தெரிந்தும்
துடிகின்றது கண்கள்!
காண வேண்டும் என்று.......
பொய் என்று தெரிந்தும்
துடிகின்றது வார்த்தைகள்!
பேச வேண்டும் என்று.......
நான் என்று தெரிந்தும்
துடிகின்றது இதயம்!
நீ என்று தான்...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
மறக்க வேண்டும் என்று தான் நினைப்பேன்
அவளை பார்க்கும் வரை...
ஆனால்,
அதை கூட மறந்து விடுகிறேன்,
அவளை பார்க்கும் போது!!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
தனிமையில் இருக்க முயற்சிக்கிறேன்.
முடியவில்லை..
என்றுமே என்னுடன் அவள் நினைவுகள் இருப்பதால்.
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
என்னை வெறுத்த அவளையே மறக்க முடியாத போது...?
நான் விரும்பிய அவளை என்னால் எப்படி
மறக்க முடியும்?
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
கா - காலமெல்லாம்
த - தவித்திருப்பான்
ல் - இல்லாத ஒன்றிற்காக..!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நான் உன்னையே
உயிராய், வாழ்வாய்
எண்ணியிருந்தாலும்
நீ உன்னவனை  காட்டிய
அந்த நொடியில் தான்
"நம் காதல்" ஆகாமலே
சருகாகிப் போனது
என் காதல்.....!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
மறக்க
வேண்டுமென்றுமீண்டும்
அதையேதான்
நினைக்கிறேன்.
மறக்க
முடியவில்லைஎன்பதை
விட
மறப்பதற்கு
மனமில்லை
என்பதுதான்
உண்மை!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
படுக்கும்போதும்
உறங்கமறுத்து
உன்னையே நினைக்கிறேன்!-அந்த
காதலே இல்லையென
மறுத்தபோதும்
உன்னை மறக்காமல்
நான்
தவிக்கிறேன்!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
காதலுக்கு கண்கள் உண்டு ஏனெனில்
காதல் வந்தால்
நம் கண்களை தான் மறைத்து விடுகிறது
இந்த உலகத்தை மறக்க........
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நான் செய்த ஒரே தவறு
நீ செய்தது எல்லாம்
எனக்காக என்று
நினைத்தது மட்டுமே.
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
என்னவனே
உன்னோடு வாழ்ந்த நாள்
மிக சொற்பம்
உன் நினைவோடு
வாழ்ந்த நாள் அதிகம்
என்பதை என் டயரி
சொல்லும் பார் ....!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
இடை இடையே ...
எழுத்துகள் அழிந்திருக்கும் ...
என்னசெய்வது கண்ணீருக்கு ...
தெரியவில்லை ....!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
முள் மீது பட்ட சேலையை கூட சேதாரமில்லாமல்  எடுத்துவிடலாம்....
ஆனால் பெண்மீது அன்பு கொண்டால் சேதாரம் மட்டுமே மிஞ்சும்.....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நான் இறந்த பின் என்னை புதைக்க வேண்டாம் எரித்துவிடுங்கள் ..
இல்லையேல் புதைக்கப்பட்ட நான் உரமாகி புல் பூண்டாக முளைக்க கூடும் அவன் நினைவுகள்
மீண்டும் என்னை கொன்றுவிடும் ....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
அன்று நான் தேடாமல்
தந்தாய் உன் பாசத்தை - இன்று
நான் தேடியும் கிடைக்கவில்லை
உன் பாசம்...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
விட்டுவிடு! பெண்ணே விட்டுவிடு!
உன் பிரிவினால் நான் பட்ட துன்பங்கள் போதும்!
உன் நினைவினால் நான் படும் இன்னல்கள் போதும்!
வெளியே சிரித்து, உள்ளே அழுகும் இந்நாடகம் போதும்!
உயிரில்லா உடலைப்போல் நான் உணர்வற்று திரிவது போதும்!
கனவும் கண்ணீரும் கசிந்தொழுக, காதலோடு நான் படும் அவஸ்தைகள் போதும்!
அழுது அழுது வீங்கிய கன்னங்களோடு- நான்
அவஸ்தைப்படும் இவ் இன்னல்கள் போதும்!
முகமதை புதைக்க மடியில்லாமல் - நான்
முணுங்கி அழும் இரவுகள் போதும்.
அழுகும் குரல் அருகில் தெரியாமல், கையடக்கி விம்மிய வின்னல்கள் போதும்!!!
போதும் பெண்ணே விட்டுவிடு!
உன் பிரிவிக்குப் பின்,
உன் நினைவில்லாமல்,
இனியாவது என்னை வாழவிடு!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
வருவாயா?????
நின் நீங்கா நினைவுகள் நெஞ்சால் ஆழ
நித்தம் நித்தம் உனைத் தேடுகிறேன்...
தனிமைகள் எனை ஆட்கொள்ள,
தவிப்புகள் மேலும் அதிகரிக்க,
தேடிக்கொண்டே இருக்கிறேன் - நின்
தெரியாத முகம்தனை!
உன்னோடு வாழவே உள்நெஞ்சம் ஏங்குதடி,
கண்ணால் காணாமல் கனவிங்கு வேகுதடி!
காத்திருக்கிறேன் முகம் தெரியாத உன் முகவரிக்காக!
நாட்கள் உறுண்டோட நானும் உயிர் ஏந்தி நிற்கிறேன் நினக்காக!
நின் இனிய முகம் காணாமல் இதயமும் சுவாசத்திற்கு இடம் தர மறுக்குதடி!
இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் என் செவிதனில் இடியாய் கேட்க,
இன்னல்களை உணர்கிறேன் நீயில்லாத இதயமதை வெறுக்கிறேன்!!!
துடித்த இதயத்தை கையில் எடுத்து காத்திருக்கிறேன்-
நீ வந்தால் தந்துவிடலாமென!!
கனவிலும் உன்முகம் தெரிவதில்லை - நின்
நினைவிலும் என் மனம் மலரவில்லை!
என் மனம் கேட்கிறது - நின்
நிலம் போன்ற முகம்தனை!!!
வருவாயா.............!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
இறுக்கமாக வைத்துக்கொள்!
என்னை தான் விட்டுவிட்டாய்,
என் இதயத்தையாவது.....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
என் இதயத்தில்
உனக்காக கோயில் கட்டினேன்...
நீ மாசற்றவள் என்றெண்ணி
விழா எடுத்தேன் .........
கணக்கின்றி பணத்தை
வாரியிறைத்தேன்.......
என் வீட்டு தேவதையாய்
உனைப் பூஜித்தேன்....
மனதைத் தைத்துவிட்டு
கண்டவன் எல்லோருடனும்
கைகோர்த்து திரிகிறாயே.....
இதுதான் காதலா
நீதான் இரவு ராணியா??
தாஜ்மஹால் இடிந்ததே உயிரெடுத்த ஜடமே ....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
பார்வையில் நெருப்பாய் இருந்தாள்....
பேசுவதில் தீயாய் இருந்தாள் ....
கற்பில் தீ பிழம்பாய் இருந்தாள் ....
அன்பில் அழகான சுடராய் இருந்தாள் ....
காதலால் என்னை கருக்கி விட்டாள்....!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
ஒருத்தியின் இறுதி வரிகள் ...

தோழிகளில் எவளோ ஒருத்தி
செய்து வைத்த அறிமுகம்
ஆரம்பத்தில் அதிகம் நாட்டமில்லை
பிறகொரு பொழுதில்
என்னதான் இருக்குமென்று
உள் நுழைந்தேன்!
அடுக்கடுக்காய் அதீத
இன்பத்தில் அகம் மகிழ்ந்தேன்!
மனமது மாறியது!
குலுங்க குலுங்க கை குலுக்கினேன்,
எவரென்று தெரியாது
இருப்பினும் உறவாடினோம்!
எத்தனை இரவுகள்
எத்தனை பகல்கள்,
வேண்டுமென்றே தொலைத்திருப்பேன்!
வேண்டாமென்று
புத்தியுள்ளவர்கள் கூறுகையில்
உமக்கென்ன தெரியும் என்று சாடினேன்!
என்னை கொண்டாடுகையில்
ஏதோ நானும் சாதித்துவிட்ட பெரும் நிறைவு!
நான் நானாகவே உலாவினேன்,
என்னை சுற்றிய முகங்களனைத்தும்
முகமூடி என்பதை அறியாமல்!
அருகிலிருந்த உறவை உதறினேன்
எங்கோ இருந்த பதறுகளை நம்பி!
திரைக்கு முன்னாடி அமர்ந்து
எண்ணியதை எழுதினேன் ஏளனம் கொண்டு!
நொடியில் நூறு விருப்பங்கள் சேருகையில்
கயிரறுந்த காளையானது மனசு!
காலம் கொடியது,
காட்சிகள் மாறியது,
என்னின் ஒற்றை புகைப்படம் கொண்டு
என் வாழ்வை திசை மாற்றினான்
நயவஞ்சக நண்பன்!
எல்லாம் அறிகையில்
ஆயிரம் நண்பர்களும்,
இருந்த இடத்தில் இருந்தே ஆறுதல் "குறி"
நெஞ்சில் ஏறிய பாரம்
புத்தியில் உரைத்தது
நானும் பெண் தானென்று!
போதும்,
இதோ இதுதான்
என் பயணத்தின் முற்றுபுள்ளி
என்னை நேசித்த உறவுகளிடம்
இதையும் சேர்த்து விடும்
இந்த "அரட்டை குழுமம்"
முகம் தொலைத்தவளின்
இந்த முகவரி அற்ற கடிதம்
இன்னொருவளின் திசையை
சீராக்கினால் போதும்
நான் சாந்தி அடைவேன்!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
பெண்ணே தாலிக்கட்டி உன்னை தாரமாக்க நினைத்தேன் நீயோ... வேறொருவனை மனதில் நினைத்துக்கொண்டு என்னை தாடிக்காரனாய் மாற்றிவிட்டாய இது நியாயமா?
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
காதலித்துபார் வாழ்கை புதிதாகவும்
காதலித்து தோற்றுபார் உலகமே உனதாகும்
தோல்வி உன்னை வெற்றிஇன் விளிம்பிற்கு அழைத்து செல்லும்...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
மனதினுள் வைத்தால் தொலைந்துவிடும் என்று உன் இதயத்தை என் இதயத்தினுள் வைத்தேன் பத்திரமாய்! நீயோ என் இதயத்தையே அறுத்து உன் இதயத்தை எடுத்துச் செல்கிறாய்!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
கண்களின் அனுமதி கேட்டா நான் உன்னைப் பார்த்தேன்?
இதயத்தின் அனுமதி கேட்டா நீ உள்ளே வந்தாய்?
நம் இருவரின் அனுமதி கேட்டா காதல் நம்முள் வந்தது?
இப்போது யார் அனுமதி கேட்டு என்னை நீ பிரிந்தாய்♥♥♥
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
என்னமோ புரியவில்லை ....
உன்னை நினைக்கும்போது ...
கண்ணீருடன் கவிதை ...
அருவியாய் வருகிறது ....!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உனக்கு காதல் குப்பை ...
எனக்கு காதல் குண்டுமணி ....
தண்டவாளமாய் ......
பயணிக்கிறோம் ....!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உன்னில்
ஒரு திறமை இருக்கிறது .....
நீ சிரித்துகொண்டே ...
என்னை அழவைப்பதில் ....!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
என்
உயிர் காதலியே
நீ
எனை பிரிந்து இன்றோடு
நான்காண்டுகள்
முடிகிறதடி.......
எதிர்பார்க்காத
உன் பிரிவால்
என்னுள் எத்தனை
மாற்றமடி.....
தாடியும் பீடியுமாக
என்
தோற்றம் மாறி போனேன்
தலையணை இருந்தும்
உறக்கம்
இழந்து போனேன்
தாய் அன்பு கிடைத்தும்
அனாதை
நான் என உணர்ந்தேன்......
உன்
ஒற்றை காதல்
எனை
பைத்தியமாய் மாற்றியதடி
இத்தனை
துன்பங்களையும்
தாங்கி கொண்டே
இன்னும்
உன்
நினைவுகளை சுமந்து
கொண்டு
வாழ்வதற்க்கு
ஒரே
காரணம் தானடி......
நான்
அழுதாலும்
நீ
சிரிக்கிறாய் அல்லவா.....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உன்னோடு ....
பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ...
ஒவ்வொரு பூக்களாக இருந்தது.........
ஒவ்வொரு மணிநேரமும் .....
ஒவ்வொரு நிமிடமாக இருந்தது ...........!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உன் பிரிவுக்கு
பின்னால் ஒவ்வொரு வார்த்தையும்
ஒவ்வொரு முள்ளுகளாக குத்துதடி
ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு
யுகமாக வலிக்கிதடி.....!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உன்னை பார்த்த போது
கவிதை எழுத எண்ணினேன்
உன்னை காணாத போது
கவிதை எழுதினேன்
காதலித்தபோது கவிஞரானேன்
என்னை ஏமாற்றியபோது ..
கவிதை ஞானியானேன்...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நான் விஷம் குடித்து
பலவருடமாகியும் இன்னும்
முழுதாய் இறக்கவில்லை
உன் நினைவால்
காதல் ஒரு உயிர் கொள்ளி ...!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
காதலில் தோல்வி கண்ட
ஒவ்வொரு இதயமும் மயானம் தான்
சோகம் மட்டுமே சொத்துக்களாக இருக்கும்
இறந்தவர்கள் திரும்பி வருவதில்லை....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
எனக்கு மட்டுமே சொந்தம்

யாருக்கு வேண்டுமானாலும்
உன் உடல் சொந்தமாகலாம்
எந்த நபரும் உன்னால்
வசீகரிக்கபடலாம்
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உன் இதழ்களை
யாரேனும் சுவைக்கலாம்
ஆனால் உன் இதயத்தை
தொட்டவன் நான் மட்டுமே..
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உன் நினைவுகளால்
என் இதயத்தின் துடிப்புகள்
வெகுவாக குறைந்து கொண்டே
வருகிறது
இறப்பதற்கு முன் வருவாயா?
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
பிரிவு
நமக்கு தவிர்க்கவும் ....
மறக்கவும் முடியாத வலி,
நினைவு என்பது யாராலும்
என்னிடமிருந்து உன்னால் ....
பறிக்க முடியாத பரிசு ....!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நீ ....
எனக்காக மூச்சு விடும்போது ....
நான் .....
உனக்காக இறப்பதில் ....
என்ன தப்பு ...?
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
காதலித்துப்பார் ஆரம்பத்தில் சிரிப்பாய் ....
என்னைப்போல் ஒரு நாள் அழுவாய் ....!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
காற்றிருந்தால் தான் பட்டம் பறக்கும்...
காதல் இருந்தால் தான் வாழ்க்கை சிறக்கும்....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
அன்று வேப்பெண்ணெய் தந்தாள் இனித்தது ....
இன்று கற்கண்டு தந்தாள் கசக்கிறது ....!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
காதல் ஒரு வழி பாதை புரிந்து கொள்...
நினைக்க தெரியும் மறக்க தெரியாது....!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நான் தனிமையில் இருந்தபோது என் வாழ்வை புரிந்து கொள்ளவில்லை நி கிடைத்த அந்த நிமிடம் என் வாழ்க்கையை புரிந்துகொண்டேன்
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
காதல் தோல்வியா? அழு... வாய்விட்டு அழு... கதறிக்கதறி அழு... உன் கண்ணீரோடு காதலும் கரைந்து போகும் வரை அழு... பின்பு உலகத்தைப் பார்... காதலையும் மீறி எத்தனையோ அழகுகள்... காதல்தோல்வியும் தாண்டி எவ்வளவோ பிரச்சனைகள்... அழகுகளை ரசிக்கக்கற்றுக்கொள்... பிரச்சனைகளை தீர்க்க பழகிக்கொள்.. வாழ்வதற்கே வாழ்க்கையென்பதை புரிந்துகொள்...! பெற்றவள் இறந்தாலே கண்ணீர்தான் சிந்துகிறாய்... காதல் இறந்ததற்கா உயிரைச் சிந்தத்துணிகிறாய்? காதல் புனிதமானது தான்... புனிதமான தெதுவும் உயிரை விலையாய் கேட்பதில்லை.. விலங்குகளை பலிகொடுத்து கடவுளின் புனிதத்தை கெடுக்கிறோம்... நம்மையே பலிகொடுத்து காதலின்புனிதத்தை கெடுக்கிறோம்..
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
அன்பானவர்களிடம் உன் மனதை மறைத்து விடாதே. உன் மனதில் உள்ளதை மறைப்பதாயின் அன்பாய் இருப்பது போல் நடித்து வாழாதே.
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நம் மனதிற்கு பிடித்தவர்கள் நம்மைவிட மற்றவர்களுடன் அதிகமாக பேசும் போதும் சிரிக்கும் போதும்.. மனதின் ஓரத்தில் லேசாக வலிக்கவே செய்கிறது...!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உண்மையான அன்பை புரிந்துக் கொள்ளாதவர்களும் உண்மையான அன்பை வெளிப்படுத்தாதவர்களும் இந்த உலகில் அனாதைகள் தான்...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
காலம் முழுவதும் உன்னுடன் என்றுவளே. இன்று எங்கே சென்றாய் என்னவளே. காத்திருந்தும் காணவில்லை .....காதலி.....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நீ போகும் பாதையில் மட்டுமல்ல போகாத பாதையிலும் காத்துக் கிடக்கிறது உனக்காக என் மனசு!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
வருசையில் நின்று வாங்கப் போன மருந்துக்கடையில்தான் வாங்கி வந்தேன் மருந்தே இல்லாத காதல் நோயை.....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
கல்லூரி கடைசிநாளில் எல்லோரும் கலந்திருக்க பிரிவு் கவலையில் கரைந்திருக்க! என் கண்களும் அழுது கிடந்தன நீ பேசாததால் இறந்துப் போன
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
புள்ளிகளையும், கோலங்களையும் என் மனசுக்குள் போட்டு விட்டு பூவை மட்டும் ஏனடி வாசலில் வைக்கின்றாய்?!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
என்னை உன் மனச்சிறையில் தானே வைக்கச் சொன்னேன் !! உன் அப்பனிடம் சொல்லி ஏன்-என்னை மத்திய சிறையில் வைத்தாய் ?
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
அவளின் அனுமதி இல்லாமல் அவளை காதலித்ததால்தான்  என்னவோ அவளும் என் அனுமதி இல்லாமல் நிராகரித்துவிட்டால் என் காதலை
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
அழவைக்கும் ..
அதிகம் புலம்பவைக்கும்..
வெறித்து பார்த்து எதையோ எழுதி
கவிதை என்று சொல்லும்...
தூரம் தெரியும் வெளிச்சம் பிடிக்க
இருட்டு பாதையில் நடக்க வைக்கும்..
நெருங்கி போனால் அணைந்து போகும் ...
விட்டில் பூச்சியாய் எட்டிப் போகும்..
எரிகிற காதலில்
எண்ணையை ஊற்றாமல்
உன்னையே நினைத்து உருக..
காதல்.. அழவைக்கும்..
அதிகம் புலம்பவைக்கும்..
(இப்போது முதலில் இருந்து படிக்கவும்)
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
இன்னுமா காத்திருக்கிறாய்..
நான் உன்னை கடந்து போய் வெகு நேரமாகிறது..
உன் பக்கத்தில் இருக்கும்
நினைவு குப்பைதொட்டியை கிளறி பார்..
உன்னை பற்றிய சிந்தனைகளை
அங்கே தான் கிழித்து போட்டு வைத்திருக்கிறேன்..
நீ வேண்டும் என்றபோதும்,
வேண்டாம் என்றே சொல்கிறேன்..
உன் பாதை, நான் நடந்து வந்த பாதை தான்..
போகும் வழியில் முட்களை குத்தியதும்
ஓரம் எடுத்து போட்டுக்கொண்டே செல்கிறேன்..
நீ வரும் போது.. முட்களை விட
என் காதல் உன்னை குத்திக்கொண்டே இருக்கட்டும் ..
இன்னுமா காத்திருக்கிறாய்..
நான் உன்னை கடந்து போய் வெகு நேரமாகிறது..
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
எனக்கு பிடிக்காத எல்லாம்
உனக்கும் பிடிக்காமல்
போன போது
உன்னை
பிடிக்க தொடங்கியது...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நீ மனம் தேடும் நிம்மதி நீ ..! குணம் திணறும் போதை நீ ..! காலம் கடத்தும் கடிகாரம் நீ ..! கவிஞனுக்கு   கிடைக்காத வார்த்தை நீ ..! கைக்கு எட்டாத நிலவு நீ ..! நெஞ்சை கொத்தும் பறவை நீ ..! சிரிப்பில் கொள்ளும் என் தேவதை நீ ..! காதல் தந்து வாழ்வு கொடுக்கும் கடவுளும் நீ ..! சொல் .......,,, தற்போது என் மனசில் ஒரு உறுத்தல் கடைசியாய் சந்திக்கையில் ஒரு முத்தம் தந்தேனே அதன் ஈரம் அப்படியே இருக்குமா இன்னும் உன்னுள் .....!!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
கடற்கரைக் காணும் போதும், கைக்கோர்த்த காதலர்கள் கடக்கும் போதும், காதலர் தினப் பரிசுகளை தோழி வரிசைப்படுத்தும்போதும், முள்ளென முளைத்து நிற்கும் காதலர் தினந்தன்று நானும் என் காதலும் தனிமையாய்-இந்த தனிமையை என்ன செய்ய??
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
வலிகளை சுமக்கும் இதயத்திற்கு. கண்ணீர் சிந்த தெரியாது.! கண்ணீர் சிந்தும் கண்களுக்கோ வலிகளை தாங்க முடியாது.!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நான் உனிடம் கொடுத்த ரோஜா மலர் வாடுவதற்குள் நீ என்  இறுதி ஊர்வலத்திற்கு மலர்வளையம் அனுப்பி விட்டாய்....
அழித்துவிடு...
நீ இருக்கும் நெஞ்சில்
சுகமான வலியை
உணர்கிறேன் நான்...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
பழகிய நாளில்
பேசிய வார்த்தைகள்
இன்னும் ஓயாமல்
ரீங்காரமாய் ஒலிக்கிறது என்னுள்...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நினைத்து நினைத்து
சலித்து போய் மறக்க முயல்கிறேன்...
இயலவில்லை என்னால்...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நினைவுகளை
கடக்க மட்டுமே முடிகிறது
அழிக்க முடியவில்லையே...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நீ ஏதும் அழிப்பான்
வைத்திருந்தால் அழித்துவிடு!
என்னுள் இருக்கும்
உன் நினைவுகளை...
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
தாக்க வேண்டிய
கை, தாங்கும் போது
ஏற்படும் இனிமையை
விட,
தாங்க வேண்டிய
கை தாக்கும் போது
ஏற்படும் வலியே
அதிகம்...!!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
பிரிதலுக்கான
முகாந்திரங்களோடு
தொடர்பறுத்துக் கொள்வதெல்லாம்
சரி.....
காதல் சொல்லியதைப்
போலவே.....
காரணத்தையும்
சொல்லிவிட்டுப் போ......!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
செருமும் பொழுதில் கூட
எச்சில் தெறித்துவிடக்கூடாதென
கவனத்தோடு இருக்கும்
உனக்கும்....
அகோரப் பசிக்கு
அவ்வப்பொழுது எச்சில்
விழுங்கிக் கொள்ளும் எனக்கும்.....
காதல்...
சரிப்பட்டுவராதுதான்.....!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
பல அன்புகளுக்கு திறந்த என் இதய கதவுகள்
மூட மறுக்கின்றது வலி தந்த உன் அன்புக்கு மட்டும் .....
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
ஆண்களின் காதல்
ஒரு உடைக்கப்பட்ட
கண்ணாடி...
அதை வேறு ஒரு பெண்
ஒட்ட வைக்க நினைத்தாலும்...
பழைய காதலின் நினைவுகள்
விரிசல்களாய் இருக்கும்.
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
அன்பே உன் மனதில்

நான் இல்லை என்றாய்
துடித்துப் போனேன் !

பின்பு

உனக்கு மனசே இல்லை
என்று தெரிந்து
ஆறுதல் அடைந்தேன் !

💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

Previous Post
Next Post

0 Comments: