சனி, 16 ஜூன், 2018

காதல் கண்ணீர் கவிதகைள்


😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
எனது காதலை அவளிடம்
சொன்னபோது அவளின் பதில்
கண்ணீராக
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪

ஒருவரை இழக்கும்  போது வரும் கண்ணீரை விட.....
அவர்களை இழக்கிறோம் என்று நினைக்கும் பொழுது வரும் கண்ணீருக்குத் தான் வலி அதிகம்........
என் காயத்திற்க்கு மருந்து அவள் கண்ணீர் துளிகளே......
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
பணத்தை பார்த்து வரும் காதல் பாசம் இல்லை!!!...
நிறத்தை பார்த்து வரும் காதல் நிரந்தரம் இல்லை!!!....
மனதை பார்த்து வரும் காதலுக்கு என்றுமே மரணம் இல்லை!!!....
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
உன்னை மறக்க எடுத்த அத்தனை முயற்சியிலும் தோற்றுப்போகின்றன் உன்னை கண்ட அந்த நொடியில்....
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
அவளோடு வாழ நினைத்தேன் ஆனால் கல்லறையில் வாழ்கிறேன்    காதல்
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
இதயத்தில் நீ இருந்தால் உன்னை மறக்க முடியும்
இதயமே நீ என்றால் எப்படி மறக்க முடியும் பெண்ணே
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
கண்கள் தானாக கலங்குகின்றன
நீ என்னை விட்டு பிரியும் பொழுது
மீண்டும் வருவாயா என் கண்ணீர;
துடைக்க
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
என்ன மறந்து விட்டேன்
பெண்ணே....!
எத்தனை முறை
அழுதேன் என்று....!
காதல்
இருக்கும் வரை
இது போன்ற
கண்ணீர் கவிதைகளும்
இருக்கும்......!
இங்கு வார்த்தைகள்
மட்டுமே
மாறுகின்றன.....!
ஆனால்
வலிகள் மாறவில்லை.....!
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
ஆண்டவனின் அற்புத படைப்பில் அசைக்க முடியாத அதிசய படைப்பு ஏழையின் கண்ணீர்
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
நான் கதறி அழும் வேளையில்
என் கண்ணீரை துடைக்க நீளும்
என் தாயின் கையையும் தட்டிவிடுகிறேன்
கண்ணீராய் வழிவது நீ என்பதால்
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
உன் கண்களில்
ஒரு துளி கண்ணீர்
வருமென்றால் என்
மரணத்தைக் கூட
நிறுத்தி வைப்பேன்...!!!
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
உன் ஆத்மாவில் ....
சிறு உரசல் காதலாய்
வருமென்றால் ....
மறு ஜென்மம் வரை ....
காத்திருப்பேன் ....!!!
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
அன்பே ..
நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
என்றாலும் நான் அழமாட்டேன் ..
என் கண்ணீருக்குள் நீந்திக்கொண்டு இருக்கிறாய் ....
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
முதல் சந்திப்பு
எதிர்பாராதது
முதல் முத்தம்
விவரிக்க முடியாதது
முதல் காதல்
மறுபடியும் கிடைக்காதது
முதல் முறிவு
மறக்க இயலாதது.....
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
சந்தோஷமாக இருக்கும்போது பாடலின் இசை பிடிக்கிறது.
துக்கமாக இருக்கும்போது பாடலின் வரிகள் புரிகிறது.
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
உனக்கு
வேண்டிய
அழகோ,
பணமோ
என்னிடம்
இல்லாமல்
இருந்தாலும்,
எனக்கு
வேண்டிய
அன்பு
உன்னிடத்தில்
இல்லை...!!!
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
ஒரு பெண்
ஏமாற்ற படும் போது,
அவளை ஏமாற்றியவனை
பழிவாங்க நினைப்பது
இயற்கையாக இருந்தாலும்,
ஒரு பெண்
ஏமாறும் போது,
இயற்கையே அவளை
பழிவாங்குகிறது.....!!!
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
கால நேரம் தெரியாமல்
இரவு பகல் தெரியாமல்
உன்னை தேடுதடி கண்கள்
உன்னை காணாமல்
உன் உருவத்தை என் முன் நிறுத்தி
கண்ணீர் வடிக்கிதடி என் கண்கள்........
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி . . .
ஆனாலும்,
இவள் ஆறுதல் தேடியதில்லை மதுவிலோ போதையிலோ . . . !
இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை மாப்ள-மச்சான் நண்பர்களிடத்தில் . . . !
இவள் சோகத்தை மறந்ததில்லை கானா மெட்டுக்கள் பாடி . . . !
இவள் பழி சுமத்தியதில்லை ஒட்டுமொத்த ஆண்கள் வர்க்கமே மோசமென்று . . . !
இவள் கவனிக்கத் தவறியதில்லை கேட்கக் கூசும் விமர்சனங்களை . . . !
இவளுக்கு தெரிந்தது,
முடிந்தது, அனுமதிக்கப்பட்டது,
எல்லாம்..
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
மௌனத்தில் வலி வைத்து
வார்த்தைகள் மறைப்பவள்
உன் எண்ணத்தில் நானிருந்தால்
ஒரு வார்த்தை பேசி விடு
என் கன்னத்தை துடைத்துடுவேன்...
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
என்றாவது நீ என்னை சந்தித்தால்
அழுதுவிடாதே...!
உன் பிரிவை சுமக்கின்ற
மெல்லிய என் இதயம்
உன் கண்ணீரின் கனம் தாங்காமல்
உடைந்துவிடக்கூடும்...!

😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪

Previous Post
Next Post

0 Comments: