சனி, 16 ஜூன், 2018

Love Miss u காதல் மி்ஸ் யூ கவிதைகள்


💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
அருகில் நீ  இல்லை      ஆனால் நீ கொடுத்த பரிசு என்னோடு பேசி சிரிக்கின்றது
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
காலம் பொன் போன்றது எனச் சொல்லுவார;கள் தெரியவில்லை அப்பொழுது உணர;கிறேனட இப்பொழுது நீ என் கண்ணருகில் இல்லாத போது
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
அவமானங்களால் மட்டுமே
வாழ்க்கையில் அதிக
தெளிவு கிடைக்கிறது சிலரை
புரிந்து கொள்ளவும் முடிகிறது.!
உன்னுடன் பேசுவதை
நிறுத்தி விட்டேன்
உனக்காக இப்பொழுது
காத்திருப்பதில்லை
உன்னிடமிருந்து எந்த
எதிர்பார்ப்புக்களும்
எனக்கில்லை. ஆனால்
உன் நினைவுகள் மட்டும்
முன்பை விட அதிகமாக
என்னை வதைக்கிறது..
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
எனக்கு மிகவும் பிடித்தது நீ தான் !!
அதனால் தான் உன்னிடம் அதிக
சண்டையிடுகிறேன் !!
அது உன்னை காயப்படுத்தி
இருந்தால் மன்னித்துவிடு !!
விலகிவிடாதே..
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
நான் உன்மீதுகொண்ட காதல்
உன்னை சுற்றி உள்ளவர்களுக்கெல்லாம்
தெரிந்து விட்டது.
உன்னை தவிர!!!!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
விழிகளை மூடினேன்
உறங்குவதற்காக் அல்ல
உன்னை காண்பதற்காக
அதிலும் எனக்கு
ஏமாற்றம் தான் தந்தாய்!!!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
கண் சிமிட்டாமல் உன்னை பார்க்க ஆசைப் பட்டேன்.
ஆனால்,
இப்போது உன்னை கண் சிமிட்டும் நேரமாவது பார்க்க ஆசை படுகிறேன்!!!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
மறக்க சொல்கிறாய் எதை மறப்பது
உன்னுள் தொலைந்த என்னையா...
இல்லை என்னுள் தொலையாமல் இருக்கும்
உன் நினைவுகளையா....
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
நினைத்துப் பார்த்தேன்
கண்ணீராய்ச் சிதறின....!!
அவளுடன் பேச நினைத்த
அந்தக் காதல் வார்த்தைகள்....!!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
நீ
வரும் போது
சின்னச் சின்னதாய்
கிடைக்கிற
சந்தோசங்களை
எல்லாம்
ஒட்டுமொத்தமாய்
அள்ளிக் கொண்டு
போகிறாய்
போகும்போது...
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
பெண்ணே...
சுலபமாக நீ
சொல்லிவிட்டாய்
என்னிடம்...
உன்னை எனக்கு
பிடிக்கவில்லை  என்று...
பதில் சொல்ல
முயன்றேன் உன்னிடம்...
வார்த்தைகள் இருந்தும்
இதழ்கள் திறக்க முடியாமல்...
தோற்றது என் இதழ்கள்...
சொல்லியது பதிலாக
என் கண்ணீர்...
உன்னிடம்.....
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
இழந்துவிட்டதால்
இழந்து கொண்டே
இருக்கிறேன் கண்ணீரை...
உதிர்ந்துவிட்டால்
என்றும் உதிராமல்
இருப்பேன் உன் இதயத்தில் ....!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
காதலை சொல்லியும்
பதில் சொல்லாத
போது தான்
ஒவ்வொரு நிமிடமும்
இதயம் உடைந்து போகிறது.
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
பல நாளுக்கு பிறகு ஒருவரை பார்க்கும்
போது உன்னை அறியாமல் கண்ணீர்
வந்தால், உன் மனதில் அவர் இடத்தை
யாராலும் நிரப்ப முடியாத நபர் அவரே....
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
இந்நேரம் நீ என்னைத் தேடக் கூடும் என்ற எண்ணம் எழுந்தபோதெல்லாம் நிஜமாகவே நான்தான் உன்னைத் தேடியிருக்கிறேன்....
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
நீயே தடுத்தாலும்...
நீயே பிரிக்க நினைத்தாலும்...
உன் உதடுகள்
ஒன்று சேர மறக்காது..!
அது போலத்தான் அன்பே
உன்னுடைய காதலும்..!
என்னதான் நீ மறைக்க
நினைத்தாலும்...
நம் இதயங்கள்
ஒன்று சேர மறக்காது..!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
பகலில் மட்டும் வருகின்ற
பகல் கனவு அவள்தானே,
கொலையின்றி
உயிர் மட்டும்
அப்படியே தின்கிறாள்....!!
நிஜங்களுக்குள் நிழலாக
நிற்பவளும் அவள்தானே,
வெயிலிலும்
விரும்பியே
நட்சத்திரம் கேட்கிறாள்..!
பார்த்தவுடன் பிடிக்கின்ற
குறுங்கவிதை அவள்தானே,
விழிகளில்
வரிகளை
மறைத்து வைக்கிறாள்...!!
தொட்டவுடன் சிலிர்க்க செய்யும்
பனிக்கட்டி அவள்தானே,
இதழ் அசைவில்
பதில் தந்து
உறைய வைக்கிறாள்...!!
நெஞ்சுக்குள்ளே கேட்கின்ற
இதய சத்தம் அவள்தானே,
எனக்குள்ளே
ஏதோ ஒன்றை
தினம் தேடச் சொல்கிறாள்...!!
சினுங்கலிலே சிறுபார்வை,
நெற்றி மேலே துளி வியர்வை,
கண்ணை சுருக்கி,
கூந்தல் ஒதுக்கி,
அழகுக்கு
ஆணவம் தருகிறாள்..!!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
உன்னை
மறக்க வேண்டும்
என்று எண்ணிக்கொண்டே
மது அருந்தினேன்
அருந்த அருந்த
உன்னை
நினைத்து நினைத்து
மகிழ்கிறது
எனக்குள் இருக்கும்
உன் நினைவு..!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
எவ்வளவோ முயற்சிகளுக்கு பின்னும் மறக்கமுடியாத அவளின் நினைவுக்காக வருத்தப்படாதீர்கள்,ஒருத்தியை உண்மையாக நேசித்திருக்கிறோமென சந்தோசப்படுங்கள்...
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
மன்னித்துவிடு இறைவா
அவளுக்கு ஒரு சத்தியம்
கொடுத்துவிட்டேன்....!!!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
இனி
உன்னை காதலிக்க மாட்டேன்
பின் தொடரமாட்டேன் ....
உனக்கும் எனக்கும்
எதுவுமே இல்லை என்று
சத்தியம் சொல்லி விட்டேன்
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
ஆனால் இன்னுமும்
இருக்கிறது என் இதயத்தில்
அவள் நினைவுகள் ....!!!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
ஆயிரம் வலிகள் தந்தாலும்
என்னை ஒரு நொடி கூட
விட்டுப் பிரிந்து விடாதே
அந்த வலிகளுக்கு
ஆறுதல் உன்அன்பு மட்டுமே.!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
"நான்
போய்ட்டு
வரேன்டா",
என்று
சொல்லி விட்டு
என் நினைவுகளை
பிடுங்கிக் கொண்டு,
உன் நினைவுகளை
வலுக்கட்டாயமாக
என் மேல்
திணித்து விட்டு
செல்கிறாய்
தினமும்..!!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
என்னைச்சுற்றி
எல்லாம்
இருந்தாலும்,
ஏதோ ஒன்று
உன்னை நினைவு
படுத்தி விடுகிறது....!!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
உன்னோடு
சண்டை போட்டு
விட்ட நாட்களில்,
உன்னிடம் பேச
வேண்டும் என்று
மனசு துடித்தாலும்,
ஏனோ
உன்னை கண்டதும்,
முறைக்கும் என்
கண்கள்....!!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
சூரியன்
************
பகல் முழுக்க,
உன்னை காணும்
சந்தோஷத்தில்,
சுற்றித் திரியும்
சூரியன்,
மாலையில்,
நீ வீட்டுக்குள்
போனதும்,
உன்னைக் காண
முடியாத ஏக்கத்தில்
தானும் மறைந்து
விடுகிறானோ.......???
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
முடியாது...
என்றாவது
சொல்லி விட்டு
போய்
தொலை...!
ஒவ்வொரு
நாளும்
பிரிவை நினைத்து
செத்து கொண்டிருக்க
முடியவில்லை...!!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
அன்று என் காதலியின் பெயரை பச்சை குத்திய நெஞ்சை தடவி பார்த்து இன்று என் மகள் கேட்கிறாள் என் மீது அவளவு பாசமா அப்பா..
(படித்ததில் பிடித்தது)
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
என்
மனதில்
நீ விதைத்த
காதல் விதைகளை தொகுத்து
தாளிலே விதைக்கிறேன்
கவிதைகளாக.......
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
நீ வாழ்ந்த என் கனவுகளை கூட
என்னால் கொல்ல இயலாது
வேண்டும் என்றால் என்னை கொன்று மீட்டுச்செல் உன் நினைவுகளை ....
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
என்னிடம் கேட்காமலே
என் இதயத்தை பறித்து கொண்டாய்!
உன் இதயத்தையும் தர மறுக்கிறாய்!

இதயம் இரண்டிலும் நீயே
இருப்பதால் என் காதல்
நிராகரிக்கப்படுகிறதா ?

இனியவளே என்னை வெறுப்பதாய்
சொல்லி உன்னை நீயே வெறுக்காதே!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
நேசித்த ஒருவரை எந்த அளவு
வெறுக்கமுடியும் என்று
எனக்கு நீ காட்டி விட்டாய் ...
சற்று பொறுத்திரு ,
வெறுக்கும் ஒருவரை எந்த அளவு
நேசிக்க முடியும் என
உனக்கு நான் காட்டுகிறேன் ...!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
மடி சாயும் மனைவியாக
வேண்டாம்.
தோல் சாயும் போது நீ
தோழியாக இருக்க
ஆசைப்படுகிறேன்
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
தேடி கிடைத்தாலும் தேடாமல் கிடைத்தாலும் உங்களை போன்ற உறவுகளை, தொலைக்கவும் மாட்டேன் மறக்கவும் மாட்டேன்.! மிஸ் யு.
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
சொர்க்கமும் நீ நரகமும் நீ
சொர்க்கத்தின் சுகத்தையும்,
நரகத்தின் கொடுமையையும்,
உணர்கிறேன்.... அன்பே!!
உன்னை பார்க்கும் போதும்,
பிரியும் போதும்...!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
எனக்கும் ஆசைதான்...,
உன் உள்ளங்கைகளினுள்
உறைந்திடவும்..
உன் விரலோடு விளையாடி
என் வாழ்வைக் கழித்திடவும்..
எனக்கும் ஆசைதான்..!
ஆனால்..,
உன்னுடனான எனது நாட்கள்
நிலையில்லை என
தெரிந்திருந்தும்...,
உனக்கேன் என்மீது
இவ்வளவு ஆசை...???
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
நல்ல கவிஞன் என்பாய்;
நல்ல நண்பனென்பாய்
என்னை நான் அறிய
தரும் பொழுதுகளில்;
உன் காதலைச் சேதப்படுத்த
விரும்பியதில்லையாதலால்
நல்ல காதலன் எனச்
சொல்லிக் கொள்வேன்
என்னையே நான்!
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
உன்னை தவிர
வேறெதையும்
கண்டிராத
என்
கண்களுக்கு
உன்
கண்களில்
இருந்த
காதல்மட்டும்
தெரியாமல்போனதெப்படி?

💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

Previous Post
Next Post

0 Comments: