செவ்வாய், 25 மே, 2021

இதயதிருடனின் கவிதை உலகம்

 இதயதிருடனின் கவிதை உலகம்


அடுத்தவர் 
வாழ்த்தினாலும்;
வசைபாடினாலும்; அவமதித்தாலும்.. 
தன் மனம் 
கலங்காமல் இருப்பது பக்குவத்தின் 
உச்ச நிலை..!


அப்பார்வைக்கு ஏதும்

அர்த்தமில்லை..

உன்னை

பார்க்கிறேன் 

என்பதை தவிர. !


உனக்காக 

காத்திருக்கும் 

பொழுதுகள் 

தோற்று போகும்..


உன்னோடு

பழகிய

சில நிமிட

நினைவுகளால்! ❣️

சில கெட்ட நிகழ்வுகள்

பல நல்ல நிகழ்வுகளுக்கு..

விதையாக கூட இருக்கலாம்! 🌱


கூட வருவதற்கு மட்டுமே 

புரிதலுக்கான முயற்சிகள்

தேவைப்படுகிறது..


தூக்கி வீசிவிட சில சொற்கள்

மட்டுமே போதுமானது!

Previous Post
Next Post

0 Comments: