செவ்வாய், 13 டிசம்பர், 2022

உயிர் நண்பன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள் வரிகள்

உயிர் நண்பன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள் வரிகள்

நிலையான அன்பிற்கு
பிரிவில்லை சொல்லாத
சொல்லுக்கு அர்த்தமில்லை
தேடும் பாசத்திற்கு தோல்வி
இல்லை.. உண்மையான
நம் நட்புக்கு என்றும்
மரணமில்லை..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பா..!

தடுமாறும் போது தாங்கி
பிடிப்பவனும் தடம் மாறும்
போது தட்டிக் கேட்பவனுமே
உண்மையான நண்பன்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!

நட்பு..! கடற்கரை மணலில்
எழுதும் வெறும் எழுத்தல்ல..
இதய ஆழத்தில் குத்தப்படும்
பச்சை..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் உயிர் நண்பன்..!

நல்ல நண்பன் உள்ள எவனும்
வாழ்க்கையில் தோற்றுப்
போக மாட்டான்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!

அர்த்தமற்ற வாழ்வை
அர்த்தமுள்ளதாக மாற்றுவது
அன்பு.. அர்த்தமுள்ள வாழ்வை
அற்புதமாக மாற்றுவது நட்பு..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் என்
உயிர் நண்பன்..!

நட்பு என்பது கண்களையும்
கை விரல்களையும் போன்றது
கை விரலில் காயம் பட்டால்
கண்கள் அழுகிறது..
கண்கள் அழுதால்
கை விரல்கள் துடைக்கிறது..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!


நம்மை பற்றி நமக்கே
தெரியாத ரகசியங்களை
நமக்கு வெளிச்சம்
போட்டு காட்டும்
சிறந்த கருவி தான் நட்பு..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் உயிர் நண்பன்..!

அறிமுகம் இல்லாமல்
வந்தோம் அடிகடி
பேசி கொண்டோம்
உறவுகளுக்கு மேலே..
உயிர் ஆனோம். காலங்கள்
கடந்து சென்றாலும்
கடைசி வரை
தொடர வேண்டும்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பா..!

நல்ல நண்பன் இருப்பின்..
முகம் பார்க்கும் கண்ணாடி
அவசியம் இல்லை.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நண்பன்..!

வார்த்தைகள் இல்லாத
வடிவம்..
அளவுகோள்
இல்லாத அன்பு..
சுயநலம் இல்லாத
இதயம்..
வெறுப்பை காட்டாத
முகம் “நட்பு”..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!

சண்டையிட்டு ஐந்து
நிமிடத்தில் எதுவும்
நடக்காதது போல்
உரிமையுடன் பேசும்
நட்பு உடனிருந்தால்
வாழ்க்கை சொர்க்கம் தான்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!


உன்னை உண்மையிலேயே
புரிந்து கொண்டிருக்கும்
நண்பன் தான் உன்னையே
உருவாக்கிறான்.. பிறந்தநாள்
வாழ்த்துக்கள் உசுரு..!

உன் நட்புக்காக எதை
வேண்டுமானாலும்
விட்டுக் கொடுப்பேன்.. ஆனால்
எதற்காகவும் நட்பை
விட்டுக் கொடுக்கமாட்டேன்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நண்பா..!

நட்புக்கு வயதில்லை
பிறப்பு முதல் இறப்பு வரை
தொடரும் உன்னதமான
உறவே நட்பு.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நண்பன்..!

உறவு என்பது ஊஞ்சல் மாதிரி
அது சிலரை தாங்கும் சிலரை
விழவைக்கும் ஆனால்
நட்பு என்பது பூமி மாதிரி
அது எல்லோரையும் தாங்கும்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நண்பா..!

அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில்

*அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில், குக்கி சுப்ரமண்யா, தட்ஷின கன்னடா, கர்நாடகா*

*திருவிழா*     கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, நவராத்திரி ஆகிய விழாக்கள் நடத்தப்படுகிறது.  

*தல சிறப்பு*   முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  

*பொது தகவல்*

சமஸ்கிருதத்தில் இத்தலம் "குக்ஷி' என அழைக்கப்படுகிறது. பேச்சு வழக்கில் "குக்கி சுப்ரமண்யா' என மாறி அந்தப் பெயரே நிலைத்து விட்டது. இத்தலத்தை சுற்றி 113 சிவத்தலங்கள் உள்ளன. 9 கால பூஜை நடக்கிறது. 

காலையில் கோ பூஜை, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் சாயரட்சை பூஜை ஆகியவற்றை கேரள தந்திரிகள் செய்கின்றனர். மற்ற பூஜைகளை அர்ச்சகர்கள் செய்கின்றனர். கால பைரவர் சன்னதி உள்ளது. நாகர் பிரகார ஈசான மூலையில் உள்ளது. 

நாக தோஷ பரிகார ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.  

*பிரார்த்தனை*

நாகங்களின் தலைவியான வாசுகிக்கு முருகன் அபயம் அளித்துள்ளதால், ராகு, கேது தோஷத்தால் சிரமப்படுபவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்கிறார்கள். 

பிரம்மஹத்திதோஷம் (கொலை பாவம்), முன் ஜென்ம பாவங்கள், பித்ரு கடன் நிவர்த்தி தலமாக விளங்குகிறது. வயிற்று வலி, தோல் நோய், மன நோயால் பாதிக்ப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

*நேர்த்திக்கடன்*

சர்ப்பஹத்தி தோஷம், காலசர்ப்ப தோஷ நிவர்த்திக்கு ரூ. 1500 கட்டணத்தில் சிறப்பு பூஜையும், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், வேலை வாய்ப்பு வேண்டுபவர்களுக்கு ரூ. 250 கட்டணத்திலும் பூஜை நடத்தப்படுகிறது.  

*தலபெருமை*

தமிழகத்தில் பழநி முருகன் கோயில் பிரசித்தமாக இருப்பது போல, கர்நாடக மாநில முருக ஸ்தலங்களில் பிரபலமானது "குக்கி சுப்ரமண்யா' கோயிலாகும்.

இது பல யுகம் கண்ட கோயிலாகும்.

கந்தபுராணத்தில் "தீர்த்த சேத்ரா மகிமணிரூபணா' அத்தியாயத்தில் இத்தலத்தை பற்றி கூறப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள குமாரமலைப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. இயற்கை காட்சிகளை தன்னகத்தே அடக்கியது இம்மலை.

முருகப்பெருமான் தாரகாசூரனை அழித்த பின், தனது வேலில் படிந்திருந்த ரத்தத்தை கழுவ இந்த நதிக்கு வந்தார் என புராணங்கள் தெரிவிக்கின்றன. பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க இங்குள்ள தீர்த்தத்தில் நீராடியுள்ளார். 

ஆதிசங்கரர், மத்வாச்சாரியார் ஆகியோர் இங்கு வந்துள்ளனர்.  

*தல வரலாறு*

காஷ்யப முனிவரின் மனைவியரான கத்ரு, வினதா என்பவர்களுக்கு இடையே குதிரைகள் பற்றிய சர்ச்சை எழுந்தது. இருவரும் தங்கள் கருத்தே சரியென வாதம் புரிந்தனர். முடிவில், யாருடைய கருத்து சரியானதோ, அவர் மற்றவருக்கு அடிமைப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

இந்த பந்தயத்தில், கத்ரு தோற்றாள். ஒப்பந்தப்படி கத்ருவும், அவளது குழந்தைகளான நாகங்களும் வினதாவிற்கு அடிமையாயின. வினதாவின் குழந்தையான கருடன், நாகங்களை துன்புறுத்தி வந்தது.

வருந்திய நாகங்கள், வாசுகி என்ற பாம்பின் தலைமையில் குமாரதாரா என்ற நதியின் அருகிலிருந்த குகையில் வந்து தங்கின. அங்கிருந்தபடியே தங்களைக் காக்கும்படி அவை சிவனை வேண்டின.

சிவபெருமான் அந்தப் பாம்புகள் முன்தோன்றி, ""எனது மகன் சுப்பிரமணியனிடம் உங்கள் குறைகளைக் கூறுங்கள். அவன் உங்களைக் காப்பாற்றுவான்,'' என்றார். அதன்படி பாம்புகள் குமாரதாரா நதியில் நீராடி, சுப்ரமணியரை வழிபாடு செய்தன. 

இதனால் மகிழ்ந்த சுப்பிரமணியர் நாகங்களைக் காப்பாற்றினார். இதற்கு நன்றிக்கடனாக வாசுகி பாம்பு, தனது ஐந்து தலைகளையும் விரித்து சுப்பிரமணியருக்கு குடையானது.

இந்த நதி தற்போது கர்நாடகத்தில் ஓடுகிறது. அந்த நதிக்கரையில் சுப்பிரமணியருக்கு கோயில் எழுப்பப்பட்டது. ஊரின் பெயரே "சுப்ரமண்யா' என்பது தான். சேவல் கொடி வைத்துள்ள இத்தல முருகன், "குக்குட த்வஜ கந்தஸ்வாமி' என அழைக்கப்படுகிறார்.

இக்கோயிலை ஒட்டி பள்ளூஸ் என்ற இடத்திலுள்ள குகையில், சிவபார்வதி அருள்பாலிக்கின்றனர்.  

*அதிசயத்தின் அடிப்படையில்* : முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இன்றைய கோபுர தரிசனம்

*கோபுர தரிசனம் கோடி புண்ணியமே..*

*🙏இன்றைய கோபுர தரிசனம்..!!🙏*

*ஈரோடு மாவட்டம்.*
*தமிழ்நாடு.*
*கதித்தமலை.*
*வெற்றி வேலாயுத சுவாமி ஆலயம்.*

*கடவுள் குடியிருக்கும் இடம் கோயில். இதன் அடையாளம் கோபுரம். அதை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நின்று வழிபட்டாலும் புண்ணியமே. இதனால் எல்லா சன்னதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும்.  இதை ’கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பர்.*

*வெற்றிவேலாயுதசுவாமி*

*மூலவர் : வெற்றி வேலாயுதன்*

*உற்சவர் : -*

*அம்மன்/தாயார் : தனி கோயிலில் வள்ளி, தெய்வானை*

*தல விருட்சம் : -*

*தீர்த்தம் : முருகன் உண்டாக்கிய தீர்த்தம் மலை மீது உள்ளது.*

*ஆகமம்/பூஜை : -*

*பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்*

*புராண பெயர் : -*

*ஊர் : கதித்த மலை*

*மாவட்டம் : ஈரோடு*

*மாநிலம் : தமிழ்நாடு*

*பாடியவர்கள்: அருணகிரிநாதர்.*

திருவிழா

தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி 

தல சிறப்பு

வள்ளி தெய்வானை தனி சன்னதியிலும் முருகன் தனி சன்னதியிலும் அருள்பாலிக்கின்றனர். 

திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும். 

முகவரி

அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில், கதித்த மலை, ஊத்துக்குளி-638 751,ஈரோடு மாவட்டம். 

போன்

+91- 4294-262 052-54 

பொது தகவல்

கோயில் அமைப்பு

குன்றின் மீது 5 நிலை கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கி நிற்கிறது. கோயிலுக்கு செல்ல அகலமான படிக்கட்டுகள் உள்ளன. ராஜகோபுரத்தின் முன்னால் தீப ஸ்தம்பம் உள்ளது. பிரகாரமும் இருக்கிறது. முருகனின் கண தலைவரான இடும்பனுக்கு தனி சன்னதி உள்ளது.

முருகனின் கோயிலுக்கு கீழே தென்கிழக்கு பக்கமுள்ள பாம்பு புற்றுக்கு தனி கோயில் உள்ளது. இது மயூரகிரி சித்தரின் சமாதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கு அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. பக்தர்கள் இந்த புற்றை "சுப்பராயர்' என அழைக்கிறார்கள். வள்ளி தெய்வானை சன்னதிக்கு செல்லும் வழியில் பாலை மரத்தின் அடியில் காவல் தெய்வமான சுக்குமலையான் சன்னதி உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் சுக்கு மலையானை வழிபாடு செய்கிறார்கள். 

பிரார்த்தனை

திருமணத்தில் தடை உள்ளவர்கள், பிரிந்த தம்பதியினர் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். 

நேர்த்திக்கடன்

முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். 

தலபெருமை

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்' என்பதற்கேற்ப ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி கதித்தமலையில் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். அருணகிரிநாதரால் பாடல் பெற்றதும், அகத்தியர் பூஜித்த பெருமை பெற்றதுமான இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. கோயிலில் மூலவரான வெற்றி வேலாயுதசுவாமி வள்ளி தெய்வானை இல்லாமல் தனியாக நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

வள்ளி தெய்வானை தனி சன்னதிக்கான காரணம்

சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகன் தனிமையில் இருந்தார். அவரை மணம் முடிக்க விரும்பிய இந்தப் பெண்கள் இம்மலைக்கு வந்து முருகன் தங்களை ஆட்கொள் ளுமாறு வேண்டினர். அவரது அருளாசியின்படி இந்திரனின் மகளாக தெய்வானையும், நம் பிராஜனின் வளர்ப்பு மகளாக வள்ளியும் அவதரித்தனர். திருமணத்துக்கு முன்னதான நிலை என்பதால், இவர்களுக்கு தனி சன்னதி தரப்பட்டுள்ளது.

மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. வள்ளி, தெய்வானை, வேல் ஆகியன முறையே இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகியவை. ஆசை, செயல், அறிவு என் னும் மூன்று சக்திகளை குறிக் கின்றன. இவை மூன்றும் பரப் பிரம்மமாகிய முருகனுக்குள் அடங்கியுள்ளது. பெரும்பாலான முருகன் கோயில்களில் இச்சா சக்தியும், கிரியா சக்தியும் அவருக்கு இருபக்கம் வைக்கப்பட்டு, ஞான சக்தியான வேல் மட்டும் அவரது மார்பின் மேல் வைக்கப்படும். ஞானசக்தி தான் இம் மூன்றில் முக்கியமானது. இச்சையும், கிரியையும் இருந்தால் தான் ஞானம் பெற முடியும். ஆனால், அபூர்வ சக்தி படைத்த முருகன், இவ்விரண்டும் இல்லாமலே ஞானசக்தி பெற்றவர் என்பதையும் இது காட்டுகிறது.

தல வரலாறு

முருகன் குடிகொண்டுள்ள தலங்களுக் கெல்லாம் அகத்தியர் தரிசிக்க சென்றார். அவருடன் நாரதர் மற் றும் பல தேவர் களும் உடன் வருகின்றனர். பூஜைக் குரிய நேரம் வந்ததும் அகத்தியர் ஓரிடத்தில் முருகனுக்கு பூஜை நைவேத்தியம் செய்ய நீரின்றி தவித்தார். அவருக்கு தாகமும் ஏற்பட்டது. இதனால் முருகப்பெருமானை வேண்ட, முருகன் அங்கு தோன்றினார். தம் வேலை தரையில் குத்தி ஒரு ஊற்று ஏற்படுத்தினார். நீர் பெருக்கெடுத்து ஓடியது.

அகத்தியரும் மகிழ்ச்சியுடன் பூஜைகளை முடித்து கொண்டு தன் தாகத்தையும் தீர்த்துக்கொண்டார். முருகனால் அன்று ஏற்படுத்தப் பட்ட ஊற்று வற்றாமல் இன்று வரை நீரை கொடுத்துக் கொண்டிருக்கிறது. குழியில் இருந்து ஊற்று தோன்றியதால் "ஊத்துக்குளி' என அப் பகுதி அழைக்கப்பட்டது. இந்த அற்புதத்தை நிகழ்த்திய முருகனுக்கு கோயிலும் கட்டப்பட்டது.

சிறப்பம்சம்

அதிசயத்தின் அடிப்படையில்
வள்ளி தெய்வானை தனி சன்னதியிலும் முருகன் தனி சன்னதியிலும் அருள் பாலிக்கின்றனர்.

அமைவிடம்

திருப்பூரில் இருந்து (15 கி.மீ)ஊத்துக்குளி வழியாக ஈரோடு செல்லும் பஸ்களில் சென்றால், கதித்த மலை முருகன் கோயிலை அடையலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம்

ஊத்துக்குளி,திருப்பூர்.

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்புத்தூர்

தங்கும் வசதி

திருப்பூர்

திங்கள், 12 டிசம்பர், 2022

உண்மை கவிதைகள் வரிகள் | Unmai Kavithai

உண்மை கவிதைகள் வரிகள் | Unmai Kavithai
இந்த தொகுப்பில் “உண்மை கவிதைகள் வரிகள் | Unmai Kavithai” காணலாம்.

உண்மை கவிதைகள் வரிகள் | Unmai Kavithai
உண்மை ஒரு போதும்
ஆபத்தானது அல்ல.

பொய்யால் செழிப்பாக
வாழ்வதை விட உண்மைக்காக
துன்பப்படுவது மிகச் சிறந்தது.

நீங்கள் மற்றவர்களை சில
மணிநேரம் முட்டாளாக்கலாம்..
ஆனால் அவர்களை எல்லா
நேரத்திலும் முட்டாளாக்க
முடியாது.

நீங்களே நேர்மையாக
இல்லாவிட்டால் வேறு
யாருடனும் நீங்கள்
உண்மையாக நேர்மையாக
இருக்க முடியுமா..?

உண்மைக்காக எதையும்
துறக்கலாம்; ஆனால்
எதற்காகவும் உண்மையைத்
துறக்காதே..!

உண்மையும் நேர்மையும்
உள்ளவனாக வாழ்ந்தால்
அஞ்சா நெஞ்சம்
கொண்டவனாக இருக்கலாம்.


உங்கள் கண்கள்
காணாதவற்றிற்காக உங்கள்
காதுகளை நம்ப வேண்டாம்.

உண்மையாகவும்
நேர்மையாகவும் இருப்பது
அடுத்தவனுக்காக இல்லை.
நமக்காக..!

நேர்மையாகவும்
உண்மையாகவும்
இருப்பவர்களை தான்
வாழ்க்கை அதிகம்
ஏமாற்றி விடுகின்றது.

உள்ளத்தில் உண்மையும்
தைரியமும் இருந்தால்
நடக்கும் பாதை
நேரானதாகவே இருக்கும்.

பணத்திற்காக
உண்மையை விற்ற
அற்ப நபரின் மனம்
ஒரு போதும் அமைதியாக
இருக்காது.


உரிமை இல்லாத உறவும்
உண்மை இல்லாத
அன்பும் நேர்மை இல்லாத
நட்பும் என்றும்
நிரந்தரம் இல்லை.

ஒரு உண்மையான மனிதன்
யாரையும் வெறுக்க மாட்டான்.

நாம் உண்மையின் பாதையில்
நடக்க வேண்டும்..
ஏனென்றால்
உண்மை தான்
இறுதியில் வெல்லும்.

உண்மைக்கு ஒத்திகை
தேவையில்லை.

கஷ்ட காலங்களில் தான்
நாம் உண்மையான
உறவுகளை காண்கிறோம்.

மிகவும் ஆபத்தான
பொய்கள் என்னவென்றால்
பாதி சிதைந்த உண்மைகள்.

குழந்தைகளும் முட்டாள்களும்
உண்மையாக பேசுகிறார்கள்.


நேர்மையும் உண்மையும்
விலை உயர்ந்த பரிசு
எல்லா மனிதர்களிடமிருந்து
அதை எதிர்பார்க்க வேண்டாம்.

நீங்கள் எதையாவது
உண்மையாகவும்
நேர்மையாகவும்
செய்ய விரும்பினால்
அதை எப்போதும் நீங்களே
தனியாக செய்து கொள்ளுங்கள்.

தவறு செய்யும் மனிதர்களை
பார்த்து தவறாக பேசாதீர்கள்
ஏனென்றால் உங்கள்
வாழ்க்கை இன்னும்
முடியவில்லை.

உண்மையான வார்த்தைகள்
எப்போதும் அழகாக
இருப்பதில்லை. அழகான
வார்த்தைகள் எப்போதும்
உண்மையாக இருப்பதில்லை.

உண்மை சில நேரங்களில்
வலிக்கும் ஆனால் இறுதி
வரை வாழ வைக்கும்.
பொய் எல்லா நேரமும்
மனிதனைக் கொல்லும்.

உன்னை வெறுப்பவர்கள்
வெறுக்கட்டும் ஆனால்
நீ எப்போதும்
உண்மையாக இரு.

அன்பும் ஒரு நாள்
தோற்றுப் போகும்
உண்மை இல்லாதவரை
நீ நேசித்தால்.

பொய்யான உறவுகளுக்கு
முன் புன்னகையும் ஒரு
பொய் தான். உண்மையான
உறவுகளுக்கு முன் கோபம்
கூட புன்னகை தான்.

எனக்கு என் வாழ்க்கையில்
நான் கஷ்டப்படாமல்
கிடைத்த ஒரு விடயம்
கஷ்டம் மட்டும் தான்.

ஆணின் அன்பில் மென்மை
இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் நிச்சயம்
உண்மை இருக்கும்.

நேசித்த பின் மறந்தால்
அது வெறும் நினைவுகள்..
வெறுத்த பின்பும் நேசித்தால்
அது தான் உண்மையான
உறவுகள்.

உனக்கு பிடித்தவரிடம்
அன்பாக இரு உன்னைப்
பிடித்தவர்களிடம் எப்போதும்
உண்மையாக இரு.

உண்மையான உழைப்பிற்கு
ஊதியம் உண்டு..
உண்மையான அன்பிற்கு
அர்த்தம் உண்டு.. உண்மையான
காதலுக்கு கனவு உண்டு..
உண்மையான வாழ்க்கைக்கு
உயர்வு உண்டு.

புதன், 23 நவம்பர், 2022

காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு திருப்பாடகம் அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் ஆலயம்

*🙏இன்றைய கோபுர தரிசனம்..!!🙏*

*காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு திருப்பாடகம் அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் ஆலயம்.*

*கடவுள் குடியிருக்கும் இடம் கோயில். இதன் அடையாளம் கோபுரம். அதை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நின்று வழிபட்டாலும் புண்ணியமே. இதனால் எல்லா சன்னதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும்.  இதை ’கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பர்.*

*மூலவர் : பாண்டவ தூதர்*

*அம்மன்/தாயார் : சத்யபாமா, ருக்மணி*

*தீர்த்தம் : மத்ஸ்ய தீர்த்தம்*

*பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்*

*புராண பெயர் : திருப்பாடகம்*

*ஊர் : திருப்பாடகம்*

*மாவட்டம் : காஞ்சிபுரம்*

*மாநிலம் : தமிழ்நாடு*

*பாடியவர்கள் : மங்களாசாசனம்*

*பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார்*

*நின்ற தெந்தை யூரகத்து இருந்ததெந்தை பாடகத்து அன்று வெஃகணை கிடந்தது எண்ணிலாத முண்ணெலாம் அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன் நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே.*

*திருமழிசையாழ்வார்*

*திருவிழா*

*கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, முக்கோட்டி ஏகாதசி, பங்குனி உத்திரம். அருளாளப்பெருமாள் எம்பெருமானாருக்காக கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்று முறை உற்சவம் நடக்கிறது.*

*தல சிறப்பு*

*கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் , மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பம்சமாகும்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 49 வது திவ்ய தேசம்.*

*திறக்கும் நேரம்*

*காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி*

*அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில்,திருப்பாடகம்காஞ்சிபுரம் - 631 502.காஞ்சிபுரம் மாவட்டம்*

*போன்*

*+91- 44-2723 1899*

*பொது தகவல்*

*மூலவரான கிருஷ்ணர் பத்ர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.*

*பிரார்த்தனை*

*ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது நம்பிக்கை.*

*நேர்த்திக்கடன்*

*கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளும் தலம். எனவே இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களின் 72,000 அங்க நாடிகளும் துடிப்புடன் செயல்பட்டு சோதனைகளும், துன்பங்களும் விலகும். புதன், சனி, ரோகிணி, அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது சிறப்பு.*

*தலபெருமை*

*கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால் பாண்டவ தூதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டுக்களில் தூதஹரி என குறிக்கப்படுகிறார். திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார். இத்தலத்தில் அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற ஆசாரியார் எழுந்தருளியுள்ளார். இவர் யக்ஞமூர்த்தி என்ற பெயருடன் ராமானுஜருடன் 18 நாள் வாதம் செய்து, அவரைச் சரணடைந்து, பின் அநேக மகான்களுக்கு ஆச்சாரியராக விளங்கினார். மணவாள மாமுனிகள் இங்கு எழுந்தருளியுள்ளார்.*

*ரோகிணி நட்சத்திரம்*

*ரோகிணி தேவி கிருஷ்ண பகவானை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். சந்திரன் தனது 27 நட்சத்திர தேவியர்களில் முதலில், ஞான சக்திகளை கொண்ட ரோகிணியையும், அக்னி சக்திகளை கொண்ட கார்த்திகையையும் மணந்த பிறகே ஏனைய நட்சத்திர தேவியர்களை மணந்தார். ரோகிணி தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனமும் கொடுத்த கிருஷ்ணனை இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம்.*

*தல வரலாறு*

*கிருஷ்ணாவதாரத்தில் பாண்டவர்களுக்காக ஐந்து வீடாவது கேட்டு வாங்கி வர, துரியோதனனிடம் தூது சென்றவர் பகவான் கிருஷ்ணர். இவர் தான் பாண்டவர்களின் மிகப்பெரிய பலம். இவரை அவமானப்படுத்த நினைத்தான் துரியோதனன். எனவே கண்ணன் தூது சென்ற போது அவர் அமர்வதற்காக போடப்பட்ட ஆசனத்தின் கீழே, பூமியில் ஒரு பெரிய நிலவறையை உண்டாக்கி அதன்மீது பசுந்தழைகளை போட்டு மறைத்தான். கண்ணனும் வந்து அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்து உள்ளே விழுந்தது. கண்ணன் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்க வந்த மல்லர்களை அழித்து விஸ்வரூப தரிசனம் காட்டினார்.*

*பாரத யுத்தம் முடிந்த வெகுகாலத்திற்கு பின் ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையை கேட்க வந்தார். அப்போது ராஜா, கிருஷ்ணர் தூது சென்றபோது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விசுவரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை கூறுங்கள் என ரிஷியிடம் வேண்டினார். ரிஷி கூறிய அறிவுரையின் படி இத்தல தீர்த்தத்தில் அமர்ந்து தவம் செய்த ஜனமேஜய மன்னனுக்காக பெருமாள், தன் பாரத கால தூது கோலத்தை இத்தலத்தில் காட்டியருளினார்.*

*சிறப்பம்சம்*

*அதிசயத்தின் அடிப்படையில்*
*கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் , மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பம்சமாகும்.*

*அமைவிடம்*

*காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் எதிரில் கோயில் அமைந்துள்ளது.*

*அருகிலுள்ள ரயில் நிலையம்*

*காஞ்சிபுரம்*

*அருகிலுள்ள விமான நிலையம்*

*சென்னை*

*தங்கும் வசதி*

*காஞ்சிபுரம்*

*வாழ்க வளமுடன்*

*வாழ்க வையகம்*

*🙏 ஓம் நமோ*
*நாராயணாய நமஹ 🌷*

சபரிமலை கோவில் சிறப்புகள்

⛰️🌟சபரிமலை கோவில் சிறப்புகள்🌟⛰️

🌄சபரிமலை ஐயப்பன் கோவிலின் சன்னிதானத்தில் மேற்கூரைப் பகுதியில் ‘தத்துவமசி’ என்று எழுதப்பட்டிருக்கும்.இதற்கு ‘நீ எதை நாடி வந்தாயோ,அது நீயாகவே இருக்கிறாய்’ என்பது பொருளாகும்.

🌄சபரி மலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள்,48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு.

🌄சபரிமலை ஐயப்பனை நினைத்து மாலை அணிபவர்கள்,அந்த மாலை தன் நெஞ்சில் படும்போதெல்லாம்,ஐயப்பன் நம் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை உணர்வதாகக் கூறப்படுகிறது.

🌄மகிஷியை வதம் செய்த மணிகண்டன்,அந்த அரக்கியின் உடல் வளர்ந்து பூமியின் மேல் பகுதிக்கு வரக்கூடாது என்பதற்காக,அவள் உடல் மீது கனமான கல்லை வைத்ததாக தல புராணம் சொல்கிறது.இதை நினைவுகூரும் வகையில் தான்,அழுதா நதியில் எடுக்கப்படும் கற்களை,பக்தர்கள் கல்லிடும்குன்று என்ற பகுதியில் போடுகிறார்கள்.

🌄மனிதனின் மனதில் உள்ள ஆணவம்,கன்மம்,மாயை ஆகிய மூன்று மலங்களை விரட்டும் வகையில் தான்,சபரிமலை பதினெட்டாம் படியில் மூன்று கண்களைக் கொண்ட தேங்காய் உடைக்கப்படுகிறதாம்.அந்த பதினெட்டாம் படியில் ஏறும் போது பக்தர்கள் அனைவரும் ஐயப்பனிடம் கோரிக்கை வைத்தால் அது உடனடியாக நிறைவேறுமாம்.எனவே,எவ்வளவு கூட்ட நெரிசலைச் சந்தித்தாலும்,பதினெட்டாம் படியில் வைக்கும் கோரிக்கையை பக்தர்கள் எவரும் மறப்பதில்லை என்கிறார்கள்.

🌄திருப்பதி லட்டு,பழனி பஞ்சாமிர்தம் போல,சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழங்கப்படும் ‘அரவனை பாயசம்’ மிகவும் புகழ் பெற்றது.அரிசி,நெய்,சர்க்கரை,ஏலக்காய் கலந்து இந்த பிரசாதம் தயாரிக்கப்படுகிறது.

🌄சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தி அன்று தோன்றும் மகர ஜோதியை,அப்பாச்சிமேடு,பம்பை,பெரியானை வட்டம்,புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம்.புல்மேடு பகுதியில் தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.

🌄சபரிமலை ஐயப்பனுக்கு
விபூதி,
சந்தனம்,
பால்,
பன்னீர்,
108 ஒரு ரூபாய் நாணயம்,
தேன்,
பஞ்சாமிர்தம்,
இளநீர் ஆகிய எட்டு பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.இதற்கு ‘அஷ்டாபிஷேகம்’ என்று பெயர்.

🌄சபரிமலை ஐயப்பனின் உற்சவர் திருமேனி,ஆண்டுக்கு ஒரு முறை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு ஆராட்டு உற்சவம் செய்யப்படும்.பிறகு ஐயப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்துக்காக 3 மணி நேரம் வைப்பார்கள்.

🌄சபரிமலை வர இயலாத 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த சமயத்தில்,ஐயப்பனின் உற்சவர் திருமேனியை தரிசிக்க முடியும்.

🙏⛰️ #சுவாமியே #சரணம் #ஐயப்பா⛰️🙏

அருள்மிகு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி திருக்கோயில்...

_*தினம் ஒரு திருத்தலம்...🛕*_ 

அருள்மிகு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி திருக்கோயில்...!!

*இந்த கோயில் எங்கு உள்ளது?* 

கேரளா மாநிலம்‚ ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஆலப்புழை என்னும் ஊரில் அருள்மிகு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி திருக்கோயில் அமைந்துள்ளது.

*இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?* 

கேரளாவிலிருந்து சுமார் 162 கி.மீ தொலைவில் ஆலப்புழா அமைந்துள்ளது. ஆலப்புழாவிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

*இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?* 

இத்தலத்தில் அமைந்துள்ள அம்மன் மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் 5 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார்.

இங்கு மக்கள் நிழலில் நின்று அம்பாளை தரிசிக்க‚ அம்பாள் வெயிலில் நின்று அற்புதமாய் தரிசனம் தருவது கண்கொள்ளாக்காட்சியாக அமைந்துள்ளது.

இத்தலத்தில் திருவிழாவின்போது 41 நாட்களும் அம்மனுக்கு சந்தன அபிஷேகம் நடைபெறுகின்றன.

இத்தலத்தில் மேற்கூரை இல்லாமல் மூலஸ்தானம் அமைந்துள்ளது. மழை காலத்தில் ஒரு சிறு ஓலை வைத்து கூரையை மூடுகிறார்கள்.

*வேறென்ன சிறப்பு?* 

இத்தலத்தில் கணேசர்‚ முருகன்‚ கிருஷ்ணர்‚ ஆஞ்சநேயர்‚ ஐயப்பன்‚ நவகிரகம் ஆகிய சன்னதிகள் அமைந்துள்ளன.

இங்கு கார்த்திகை 1ஆம் தேதி முதல் மார்கழி 11ஆம் தேதி வரை 41 நாட்கள் களபாபிஷேகம் (சந்தனம்) நடைபெறுகிறது.

இக்கோயிலில் தினமும் பஞ்சாமிர்த அபிஷேகமும்‚ சிறப்பு பூஜைகளும்‚ அர்ச்சனையும் நடைபெறுகிறது.

*என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?* 

சரஸ்வதி பூஜை‚ நவராத்திரி விழா ஆகியவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

*எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?* 

இத்தலத்தில் திருமணத்தடை மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர்.

*இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?* 

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அம்மனுக்கு சந்தனத்தில் அலங்காரம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


🌷🌷

வியாழன், 17 நவம்பர், 2022

காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு வடநாகேஸ்வரம் அருள்மிகு நாகேஸ்வரர் ஆலயம்

*🙏இன்றைய கோபுர தரிசனம்..!!🙏*

*காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு வடநாகேஸ்வரம் அருள்மிகு நாகேஸ்வரர் ஆலயம்.*

*கடவுள் குடியிருக்கும் இடம் கோயில். இதன் அடையாளம் கோபுரம். அதை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நின்று வழிபட்டாலும் புண்ணியமே. இதனால் எல்லா சன்னதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும்.  இதை ’கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பர்.*

*மூலவர் : நாகேஸ்வரர்*

*உற்சவர் : சோமாஸ்கந்தர்*

*அம்மன்/தாயார் : காமாட்சி*

*தல விருட்சம் : செண்பக மரம்*

*தீர்த்தம் : சூரிய புஷ்கரிணி*

*ஆகமம்/பூஜை : காரணாகமம்*

*பழமை : 500 வருடங்களுக்குள்*

*ஊர் : வடநாகேஸ்வரம்*

*மாவட்டம் : காஞ்சிபுரம்*

*மாநிலம் : தமிழ்நாடு*

*திருவிழா*

*சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், வைகாசியில் சேக்கிழார் குருபூஜை, புரட்டாசியில் நிறைமணிக்காட்சி, தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் தெப்பத்திருவிழா, ஆடிப்பூரம், மாசிமகம்.*

*தல சிறப்பு*

*சில ஆண்டுகளுக்கு முன்பு, சேக்கிழார் பிரதிஷ்டை செய்த நாகேஸ்வர லிங்கம் பின்னப்பட்டது. எனவே, பக்தர்கள் அந்த லிங்கத்தை இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் போட்டுவிட்டு, புதிதாக ஒரு லிங்கத்தை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தனர். அன்றிரவில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவன், மூலஸ்தானத்தில் பழைய லிங்கத்தையே பிரதிஷ்டை செய்யும்படி கூறினார். அதன்பின்பு, தீர்த்தத்தில் போடப்பட்ட லிங்கத்தை எடுத்து, மீண்டும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தனர். புதிதாக பிரதிஷ்டை செய்த லிங்கத்தை, சன்னதிக்கு பின்புறம் வைத்துள்ளனர். இந்த சிவன், அருணாச்சலேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். பக்தர்கள் இவரையும் மூலவராகவே பாவித்து வழிபடுகின்றனர்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.*

*திறக்கும் நேரம்*

*காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி*

*அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயில்,வடநாகேஸ்வரம், குன்றத்தூர்- 600 069.காஞ்சிபுரம் மாவட்டம்.*

*போன்*

*+91- 44 - 2478 0436, 93828 89430.*

*பொது தகவல்*

*இது சேக்கிழார் கட்டிய கோயில். இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர். இங்குள்ள கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது.*

*பிரகாரத்தில் பரவை நாச்சியாருடன் சுந்தரர், நாகத்தின் வடிவில் சத்யநாராயணர், நாகேந்திரர் மற்றும் நாகநாதேஸ்வரர் இருக்கின்றனர். இந்த மூன்று நாகங்களுக்கு மத்தியிலும் லிங்க வடிவம் இருக்கிறது. காசி விஸ்வநாதர், லட்சுமி, சரஸ்வதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், கற்பக விநாயகர், சனீஸ்வரர் ஆகியோரும் உள்ளனர்.*

*பிரார்த்தனை*

*நாக தோஷ நிவர்த்தி, ராகுப்பெயர்ச்சியால் தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.*

*நேர்த்திக்கடன்*

*சுவாமியை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள், விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை செய்து வழிபடுகிறார்கள்.*

*தலபெருமை*

*நாக தோஷம் நீக்கும் சிவன்*

*நாகேஸ்வரர், இத்தலத்தில் ராகுவின் அம்சமாக காட்சி தருகிறார். தினமும் இவருக்கு காலை 6.30, 10 மணி மற்றும் மாலை 5 மணிக்கு பாலபிஷேகம் செய்கின்றனர். நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அபிஷேகத்தில் கலந்து கொண்டும், ராகு காலத்தில் சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து, உளுந்து தானியம் மற்றும் உளுந்து சாதம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள் (கோயிலிலேயே உளுந்து சாதம் செய்து தருவர்). இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை.*

*அம்பாள் காமாட்சி தெற்கு நோக்கி, எதிரில் சிம்ம வாகனத்துடன் தனிச்சன்னதியில் காட்சி தருகிறாள். தை வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு பன்னீர் அபிஷேகம் செய்கின்றனர். சித்ரா பவுர்ணமியை ஒட்டி இக்கோயிலில், 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. இவ்விழாவின் எட்டாம் நாளில் சிவன், அடியாருக்கு காட்சி தரும் வைபவம் நடக்கும். அப்போது சுவாமிக்கு முன்புறம் அவரை பார்த்தபடி ஒரு சப்பரத்தில் நால்வர் மற்றும் சேக்கிழார் உலா செல்வர். சித்ரா பவுர்ணமியன்று சிவன், அம்பாள் திருமணம் நடக்கிறது. விழாவில் ஒருநாள் சுவாமி, நாக வாகனத்தில் உலா செல்வார்.*

*சேக்கிழாரின் சிவ தரிசனம்*

*கோயில் பிரகாரத்தில் சேக்கிழாருக்கு, தனிச்சன்னதி இருக்கிறது. சிவனை தரிசித்தபடி மேற்கு நோக்கி நின்றிருக்கும் இவர், வலது கையில் சின்முத்திரை காட்டி, இடக்கையில் ஏடு வைத்திருக்கிறார். அனைத்து பூசம் நட்சத்திரத்தன்றும் இவருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது. வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தை ஒட்டி 10 நாட்கள் குருபூஜை விழா கொண்டாடுகின்றனர். குருபூஜை தினத்தன்று, காலையில் சேக்கிழார் உற்சவமூர்த்தி இங்கிருந்து தேரடிக்குச் செல்வார். அப்போது பொதுமக்கள் சிவன் சார்பில், சேக்கிழாரை கோயிலுக்குள் அழைத்து வருவர். அதன்பின்பு, சேக்கிழார் மூலஸ்தானத்திற்குள் சென்று நாகேஸ்வரரை தரிசிக்கும் வைபவம் நடக்கும். அன்றிரவில் சேக்கிழார் சப்பரத்தில் எழுந்தருளி உலா சென்று, மறுநாள் காலையில் கோயிலுக்குத் திரும்புவார். அன்று இரவு முழுதும் கோயில் திறந்தே இருக்கும்.*
*இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் சேக்கிழார் பிறந்த தலத்தில், அவருக்கு தனிக்கோயில் உள்ளது. அங்கும் சேக்கிழார் குருபூஜை விழா 11 நாட்கள் நடக்கும். அவ்விழாவின் நான்காம் நாளில், சேக்கிழார் இத்தலத்திற்கு எழுந்தருளி சிவனை தரிசிப்பார்.*

*தல வரலாறு*

*சோழமன்னன் அனபாயன் இப்பகுதியை ஆண்டபோது, அவனது அரசவையில் இவ்வூரில் வசித்த சிவபக்தர் ஒருவர் அமைச்சராகப் பணியாற்றினார். அவரது மகன் அருண்மொழிராமதேவர், குலத்தின் பெயரால் "சேக்கிழார்' என்றழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே புலமையுடன் இருந்த சேக்கிழாரை, மன்னன் தனது அமைச்சராக்கிக் கொண்டான். அவரது சிறப்பான பணிகளைக் கண்டு மகிழ்ந்தவன், "உத்தமசோழபல்லவர்' என்றும் சிறப்பு பெயரிட்டு அழைத்தான். சிவபக்தரான சேக்கிழார், சிவனருள் பெற்ற அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறை, "பெரியபுராணம்' என்னும் தொகுப்பாக வெளியிட்டார்.*

*ஒருசமயம் சேக்கிழார், கும்பகோணம் அருகிலுள்ள ராகு தலமான திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயிலுக்குச் சென்று சிவனை தரிசித்தார். அத்தலத்து சிவன் மீது அதீத பக்தி கொண்ட அவர், தினமும் நாகேஸ்வரரின் தரிசனம் கிடைக்க வேண்டுமென விரும்பினார். அதேசமயம் அடிக்கடி திருநாகேஸ்வரம் செல்ல முடியாதென்பதால், நாகேஸ்வரருக்கு தனது ஊரில் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். நாகேஸ்வரரின் அமைப்பில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, இங்கு ஒரு கோயில் எழுப்பினார். சிவனுக்கு, "நாகேஸ்வரர்' என்று பெயர் சூட்டி, தினமும் வழிபட்டார். தலமும், "வடநாகேஸ்வரம்' என்று அழைக்கப்பெற்றது.*

*சிறப்பம்சம்*

*அதிசயத்தின் அடிப்படையில்*

*சில ஆண்டுகளுக்கு முன்பு, சேக்கிழார் பிரதிஷ்டை செய்த நாகேஸ்வர லிங்கம் பின்னப்பட்டது. எனவே, பக்தர்கள் அந்த லிங்கத்தை இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் போட்டுவிட்டு, புதிதாக ஒரு லிங்கத்தை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தனர். அன்றிரவில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவன், மூலஸ்தானத்தில் பழைய லிங்கத்தையே பிரதிஷ்டை செய்யும்படி கூறினார். அதன்பின்பு, தீர்த்தத்தில் போடப்பட்ட லிங்கத்தை எடுத்து, மீண்டும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தனர். புதிதாக பிரதிஷ்டை செய்த லிங்கத்தை, சன்னதிக்கு பின்புறம் வைத்துள்ளனர். இந்த சிவன், அருணாச்சலேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். பக்தர்கள் இவரையும் மூலவராகவே பாவித்து வழிபடுகின்றனர்.*

*அமைவிடம்*

*சென்னை தாம்பரத்தில் இருந்து 12 கி.மீ., பல்லாவரத்தில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் குன்றத்தூர் உள்ளது. பஸ் ஸ்டாண்டிற்கு அருகிலேயே கோயில் அமைந்துள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து செல்வோர் தாம்பரம் அல்லது பல்லாவரத்தில் இறங்கி, அங்கிருந்து வேறு பஸ்களில் இக்கோயிலுக்குச் செல்லலாம்.*

*அருகிலுள்ள ரயில் நிலையம்*

*பல்லாவரம், தாம்பரம்*

*அருகிலுள்ள விமான நிலையம்*

*சென்னை மீனம்பாக்கம்*

*தங்கும் வசதி*

*சென்னை*

*வாழ்க வளமுடன்*

*வாழ்க வையகம்*

*🙏 திருச்சிற்றம்பலம் 🌷*

காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலய

*🙏இன்றைய கோபுர தரிசனம்..!!🙏*

*காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலயம்.*

*கடவுள் குடியிருக்கும் இடம் கோயில். இதன் அடையாளம் கோபுரம். அதை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நின்று வழிபட்டாலும் புண்ணியமே. இதனால் எல்லா சன்னதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும்.  இதை ’கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பர்.*

*மூலவர் : சுப்பிரமணியசுவாமி*

*தல விருட்சம் : வில்வம்*

*தீர்த்தம் : சரவணபொய்கை*

*ஆகமம்/பூஜை : சிவாகமம்*

*பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்*

*ஊர் : குன்றத்தூர்*

*மாவட்டம் : காஞ்சிபுரம்*

*மாநிலம் : தமிழ்நாடு*

*பாடியவர்கள் : அருணகிரிநாதர்.*

*திருவிழா*

*வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்.*

*தல சிறப்பு*

*திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடன் மட்டும் வடக்கு திசை நோக்கி காட்சி தருகிறார். ஆனால் இத்தலத்தில் முருகன், வள்ளி, தெய்வானை இருவருடனும் வடக்கு நோக்கியிருக்கிறார். சேக்கிழார் குருபூஜையின்போது, முருகன் மலைக்கோயிலில் இருந்து, கீழே உள்ள சேக்கிழார் கோயிலுக்குச் சென்று காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.*

*திறக்கும் நேரம்*

*காலை 6.30 மணி முதல் 12.30மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி*

*அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,குன்றத்தூர்,சென்னை-600069.காஞ்சிபுரம் மாவட்டம்.*

*போன்*

*+91- 44 - 2478 0436,93828 89430.*

*பொது தகவல்*

*முருகன் சன்னதி கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை இருக்கின்றனர். பிரகாரத்தில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, விநாயகர், பைரவர், நவக்கிரகம், நாகர் சன்னதிகள் உள்ளது. இங்குள்ள விமானம் ஷட்கோண அமைப்பில் உள்ளது.*

*பிரார்த்தனை*

*திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள்.*

*நேர்த்திக்கடன்*

*முருகனுக்கு திருக்கல்யாணம் செய்து வைத்தும், வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.*

*தலபெருமை*

*84 படிகள் கொண்ட குன்றின் மீது அமைந்த கோயில் இது. இக்கோயிலில் முருகன் சன்னதிக்கு நேரே நின்று பார்த்தால், முருகன் மட்டுமே தெரிவார். வள்ளி, தெய்வானையைக் காண முடியாது. சன்னதிக்கு இடப்புறம் அல்லது வலப்புறம் நின்று பார்த்தால் முருகனை, வள்ளி அல்லது தெய்வானை ஆகிய இருவரில் ஒருவருடன் சேர்ந்திருக்கும்படிதான் தரிசிக்க முடியும் வகையில் சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. முருகன் சன்னதி முன்புள்ள துவாரபாலகர்கள் இருவரும், முருகனைப் போலவே கையில் வஜ்ரம், சூலம் வைத்திருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்த விபூதியையே, பிரசாதமாக தருகின்றனர். கந்தசஷ்டி விழா இங்கு எட்டு நாட்கள் நடக்கிறது. ஆறாம் நாளில் சூரசம்ஹாரம், ஏழாம் நாள் வள்ளி திருமணம், எட்டாம் நாளில் தெய்வானை திருமணம் நடக்கிறது. பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் இவ்வூரில் அவதரித்தவர். இவருக்கு மலையடிவாரத்தில் தனிக்கோயில் இருக்கிறது. குன்றுடன் அமைந்த ஊர் என்பதல் இத்தலம் குன்றத்தூர் என்று அழைக்கப்படுகிறது. மலைப்பாதையின் நடுவே வலஞ்சுழி விநாயகர் சன்னதி இருக்கிறது.*

*தல வரலாறு*

*திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வென்ற முருகப்பெருமான், சாந்தமாகி திருத்தணிக்குச் சென்றார். வழியில் சிவபூஜை செய்ய எண்ணினார். இங்கு ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். அப்போது இக்குன்றில் சிறிது நேரம் சிவனை வேண்டி தியானித்துவிட்டுச் சென்றார். பிற்காலத்தில் இப்பகுதியை குலோத்துங்க சோழ மன்னன், ஆட்சி செய்தபோது குன்றின் மீது முருகனுக்கு கோயில் கட்டப்பட்டது. முருகனால் பூஜிக்கப்பட்ட சிவன், மலைக்கு அடிவாரத்தில் "கந்தழீஸ்வரர்' என்ற பெயரில், தனிக்கோயில் மூர்த்தியாக அருளுகிறார். கந்தனால் வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு இப்பெயர்.*

*சிறப்பம்சம்*

*அதிசயத்தின் அடிப்படையில்*

*திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடன் மட்டும் வடக்கு திசை நோக்கி காட்சி தருகிறார். ஆனால் இத்தலத்தில் முருகன், வள்ளி, தெய்வானை இருவருடனும் வடக்கு நோக்கியிருக்கிறார். சேக்கிழார் குருபூஜையின்போது, முருகன் மலைக்கோயிலில் இருந்து, கீழே உள்ள சேக்கிழார் கோயிலுக்குச் சென்று காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.*

*அமைவிடம்*

*சென்னை தாம்பரத்திலிருந்து 16 கி.மீ., பல்லாவரத்தில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் குன்றத்தூர் உள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து செல்வோர் தாம்பரம் அல்லது பல்லாவரத்தில் இறங்கி எளிதில் இக்கோயிலுக்குச் செல்லலாம். பாரிமுனை பஸ் ஸ்டாண்டில் இருந்து இவ்வூருக்கு பஸ்கள் செல்கிறது.*

*அருகிலுள்ள ரயில் நிலையம்*

*பல்லாவரம், தாம்பரம்*

*அருகிலுள்ள விமான நிலையம்*

*சென்னை மீனம்பாக்கம்*

*தங்கும் வசதி*

*சென்னை*

*வாழ்க வளமுடன்*

*வாழ்க வையகம்*

*🙏ஓம் சரவண பவ🌷*

எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள் !! கவலைகளை விட்டொழியுங்கள்.

எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள் !! கவலைகளை விட்டொழியுங்கள்.

ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்.

பெருமையும், கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்.

கவலையும், துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்.

துக்கமும், அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்.

பயமும், சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்.

எரிச்சலும், கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்.

அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.

ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.

பசிக்கும்போது உணவருந்துங்கள். பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும்!

எடையைக் குறைக்க விரும்புகிறவர்களின் கவனத்துக்கு!

எடையைக் குறைக்க விரும்புகிறவர்களின் கவனத்துக்கு!

எடை குறைக்க விரும்புகிறவர்கள் முதல் வேலையாக கை வைப்பது உணவு விஷயத்தில்தான். உணவைத் தவிர்த்தாலோ அல்லது அளவைக் குறைத்தாலோ எடையைக் குறைத்து விடலாம் என்று பலரும் நம்புகிறார்கள்.

ஆனால், போதுமான அளவில் உணவை உட்கொள்ளாதபோது கீட்டோசிஸ் என்ற மோசமான நிலை உருவாகும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த கீட்டோசிஸ் என்பது என்ன? இதே பெயரில் பிரபலமாக இருக்கும் கீட்டோஜெனிக் உணவு என்பது என்ன? ஊட்டச்சத்து நிபுணர் கிரேட்டா ஷெரின் அவர்கள் கூறியது ...

நாம் உண்ணும் அரிசி போன்ற உணவுகள் செரிமானம் அடைந்த பிறகு அதிலுள்ள மாவுச்சத்து என்று சொல்லப்படுகிற கார்போஹைட்ரேட்டில் இருந்து உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கிறது. இந்த மாவுச்சத்தானது கல்லீரலில் குளுக்கோஸாக மாற்றப்பட்டு உடலுக்குத் தேவையான முதன்மை ஆற்றலைக் கொடுக்கிறது.

நாம் சில நேரங்களில் உணவு உட்கொள்ளாமல் இருக்கும்போது அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும் மாவுச்சத்து இல்லாமல் போய்விடும். இந்த சூழலில் உடலில் உள்ள கொழுப்புச்சத்து கல்லீரலில் கீட்டோன்களாக மாறி நமக்கு ஆற்றலைக் கொடுக்கிறது. இந்த வளர்சிதை மாற்ற செயல்முறைக்கு கீட்டோஸிஸ்(Ketosis) என்று பெயர்.

இப்படி ரத்தத்தில் உருவாகும் கீட்டோன்கள் அமிலத்தன்மை உடையவை. இவை சிறுநீரின் வழியே வெளியேற்றப்படுகின்றன. ரத்தத்தில் அளவுக்கு அதிகமாகும் கீட்டோன்கள் உடலை விஷமாக்கும் இயல்புடையது. இதற்கு கீட்டோஅசிடோஸிஸ் (Ketoacidosis) என்று பெயர். உயர் கீட்டோன் அளவுகள் நீரிழிவு கீட்டோஅசிடோஸிஸாக மாறி நம்மை கோமா அல்லது மரண நிலைக்குக் கொண்டு செல்லலாம்.

ரத்தத்தில் கீட்டோன்கள் 0.6 முதல் 1.5 mmol/liter என்ற அளவில் இருப்பது நடுநிலையானது. 0.6 mmol/liter என்ற அளவுக்குக் குறைவாக இருந்தால் கீட்டோன்கள் மிகவும் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது. இதன் அளவு 1.6 முதல் 3.0 mmol/liter என்ற அளவில் இருப்பதை நீரிழிவு கீட்டோஅசிடோஸிஸ் என்று சொல்கிறோம்.   

கீட்டோஅசிடோஸிஸ் அறிகுறிகள்..

சிறுநீரில் கீட்டோன் அளவு அதிகமாக இருப்பது, அடிக்கடி சிறுநீர் கழித்தல், தாகம் அல்லது நாக்கு வறண்டுபோதல், குமட்டல், உடல் வறட்சி, சுவாச கோளாறு, பழ வாசனை நிறைந்த சுவாசம் மற்றும் குழப்ப சூழ்நிலை போன்றவை இதன் அறிகுறிகள்.

இதை தடுப்பது எப்படி?

ரத்த சர்க்கரை அளவை தவறாமல் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த சர்க்கரை மற்றும் அதிக கீட்டோன்கள் இருந்தால் உடற்பயிற்சி செய்ய வேண்டாம். உடலில் உள்ள கீட்டோன்கள் வெளியேறுவதற்கு அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு முறையை மேற்கொள்ள வேண்டும். பட்டினி கிடக்கக் கூடாது. எடை குறைப்பு முயற்சி என்றும் உணவைத் தவிர்க்கக் கூடாது.

உடலில் ஏற்படும் நீரிழப்பு மற்றும் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளின் (Electrolite) அளவை சரி செய்ய Intravenous திரவங்களை(IV Fluids) செலுத்த வேண்டும். கீட்டோன்களைக் கட்டுப்படுத்த இன்சுலின் செலுத்த வேண்டும். மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகி உரிய பரிசோதனையும், சிகிச்சையும் மேற்கொள்வதன் மூலம் இந்த பிரச்னையைத் தடுக்கலாம்.

கீட்டோஜெனிக் உணவுமுறை என்பது...

Ketogenic diet 1920-களில் கை-கால் வலிப்பு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை உணவுமுறையாக இருந்தது. இந்த உணவுமுறையில் கொழுப்புச்சத்து அதிகமாகவும், மாவுச்சத்து குறைவாகவும், புரதச்சத்து சராசரி நிலையிலும் காணப்படும். அதாவது கொழுப்புச்சத்து 75%, மாவுச்சத்து 5%, புரதச்சத்து 20% என்ற அளவில் இருக்கும்.

இந்த உணவு முறையில் இறைச்சி, மீன், முட்டை, வெண்ணெய், க்ரீம், பாலாடைக்கட்டி, கொட்டைகள், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அவகேடோ எண்ணெய், குறைந்த மாவுச்சத்துள்ள காய்கறிகள், குறைந்த இனிப்புச்சத்துள்ள பழங்கள், டார்க் சாக்லேட் மற்றும் க்ரீக் யோகர்ட் போன்றவை எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்த உணவு முறையில் நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்கள் மிகவும் குறைவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. சர்க்கரை, தானிய வகைகள், பீன்ஸ் மற்றும் கேரட், உருளை, பீட்ரூட் போன்ற வேர் காய்கறிகள், சுவையூட்டிகள் போன்றவற்றை இந்த உணவுமுறையில் உட்கொள்ளக்கூடாது.

மருத்துவ சிகிச்சையில்
கீட்டோஜெனிக் உணவு முறை...

1.இதன் மூலம் வலிப்பு நோயின் தாக்கம்(Epileptic seizures) வெகுவாக குறைந்து பின்பு முழுமையாக நின்றுவிட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள்
தெரிவிக்கின்றன.

2.PFK குறைபாடு (Phospho fructo kinase deficiency) என்று சொல்லப்படுகிற வளர்சிதை மாற்றக் குறைபாடுள்ள நபர்கள் இந்த உணவு முறையைப் பின்பற்றிய பிறகு, தசைகள் வலுப்பெற்று நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

3.இந்த உணவு முறையால் உடலில் உள்ள லாக்டிக் அமிலம் குறைவதால் புற்றுநோய்க் கட்டியின் (Malignancy) வளர்ச்சியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. 
4.இந்த உணவு முறை மைக்ரோகாண்டியல் ஆற்றலை மேம்படுத்துவதால் Multiple sclerosis, பார்கின்சன், அல்சைமர் போன்ற Neuro degenerative நோய்களைக் குறைக்கிறது.

5.சில ஆட்டிஸம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு ஒரு வகையான கீட்டோஜெனிக் உணவு முறையைப் பின்பற்றியபோது, அவர்கள் நன்கு செயல்படுகிறவர்களாவும், சிறந்த முறையில் பதிலளிக்கிறவர்களாவும் காணப்பட்டனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கீட்டோஜெனிக் உணவு முறையில் உடல் பருமனைக் குறைத்தல்உடலின் தினசரி ஆற்றல் தேவைக்குரிய மாவுச்சத்து மற்றும் கொழுப்புச் சத்தினை குறைவாக எடுத்துக் கொள்கிறபோது, நமது உடல் தனக்குள் சேமித்து வைத்திருக்கும் கொழுப்பினை ஆற்றலாக மாற்ற உந்தப்படுகிறது. இது உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது.

இது ரத்த குளுக்கோஸின் அளவில் வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக லிபோலிசிஸ் (Lipolysis) என்று சொல்லப்படுகிற கொழுப்புச்சத்து ஆற்றலாக மாறக்கூடிய செயல்முறை நிகழ்கிறது. இதில் அதிகளவு புரதச்சத்தினை எடுத்துக்கொள்வதால் பசி உண்டாகும் தன்மையைக் குறைக்கிறது.

நாம் உணவு உண்பதற்கு முன் நமது மூளையில், பசி ஏற்படுவதை உணர்த்தும் பணியை வயிற்றில் சுரக்கும் Ghrelin என்கிற ஹார்மோன் செய்வதால் அதை பசியைத் தூண்டும் ஹார்மோன் என்கிறோம். நமது உடலில் கொழுப்பு செல்கள் அதிகரிக்கும்போது Leptin என்கிற ஹார்மோன் அளவு அதிகரித்து, மூளைக்கு சாப்பிடுவதை நிறுத்தும்படியான உணர்வைத் தருகிறது. எனவே, இதை பசியை அடக்கும் ஹார்மோன் என்று சொல்கிறோம். இது உடல் பருமன் குறைய உதவுகிறது. இந்த வகை உடல் பருமன் குறைவு முதலில் உடலில் உள்ள நீர் அளவினைக் குறைத்து அதன்பின்பு உடல் கொழுப்பைக் குறைக்கிறது.

இந்த உணவு முறை சுவாசக் குறியீட்டைக் (Resting Respiratory Quotient) குறைக்கிறது. எனவே, அதிக கொழுப்புச் சத்தினை உட்கொள்கிறபொழுது அதிக வளர்சிதை மாற்ற செயல்திறனைக் கொண்டுள்ளது.

கீட்டோஜெனிக் உணவு முறையின் பக்க விளைவுகள்...

புரதச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதால் உடற்பயிற்சியின்போது அதிகளவில் அமோனியா உற்பத்தியாகிறது.
சோர்வு, எரிச்சல், மலச்சிக்கல், செரிமான பிரச்னைகள், சிறுநீரக பிரச்னைகள், மூளையின் மந்தநிலை (Brain fog), வைட்டமின் மற்றும் தாதுச்சத்து குறைபாடு போன்றவை உண்டாகிறது. அதிகளவு சிறுநீர் வெளியேறுவதால் உடலில் நீர் அளவு குறைந்து நீர்வறட்சி (Dehydration) ஏற்படுகிறது. ஆரோக்கியமற்ற கொழுப்புச்சத்து சேர்வதால் உடலில் எதிர்மறை விளைவுகள் ஏற்படும்.

விரைவாக உடல் பருமன் குறையும் என்பதற்காக மட்டுமே இந்த உணவுமுறையைப் பின்பற்றுவது சரியல்ல. ஏனென்றால் உடல் எடையானது படிப்படியாக சரியான முறையில் குறைவதே ஆரோக்கியமானதாக இருக்கும். கீட்டோஜெனிக் உணவுமுறையைப் பின்பற்றுவது எப்படி?

கீட்டோஜெனிக் உணவு முறை தனித்துவமானது. இது ஒவ்வொரு நபரின் உடல் நிலைகளுக்கு ஏற்றவாறு பரிந்துரை செய்யப்படுகிறது. எனவே, கீட்டோஜெனிக் டயட்டினைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் உணவியல் நிபுணர் மற்றும் மருத்துவரின் தொடர் ஆலோசனைகளைப் பெறுவது அவசியம். இந்த முறையில் உணவு உட்கொள்வதற்கு முன்னும், பின்னும் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.

இம்முறையில் மல்டி வைட்டமின் மற்றும் மல்டி மினரல் எடுக்க வேண்டும். நீர் மற்றும் மினரல் அளவுகளில் மாற்றம் ஏற்படுவதால் தேவையான அளவு உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதால் உடல் பருமன் குறைய உதவுகிறது. மேலும் இந்த உணவு முறையில் சில கட்டுப்பாடுகள் இருப்பதால் இது பொதுவான உடல் பருமன் குறைக்கும் உணவு முறை அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஊட்டச்சத்து அல்லது உணவியல் நிபுணர் மற்றும் மருத்துவரின் வழிகாட்டுதல்படி பரிசோதனைகள் மேற்கொண்டு இந்த உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும்..

ஸ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில் மயிலாப்பூர், சென்னை*

*🙏அன்பே சிவம்🙏*

*தினம் ஒரு*
       *திருக்கோயில்*

*ஸ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில் மயிலாப்பூர், சென்னை*
*தமிழ்நாடு*

*சென்னை பட்டணத்தின் மயிலாப்பூர்*
*மயிலாப்பூர் வீர* *ஆஞ்சநேய ஸ்வாமி திருக்* *கோயில்-1999இல்தற்போது சென்னை என* *அழைக்கப்படும் மெட்ராஸ் நகரத்திற்கு வந்திருந்த மக்கள் மைலாப்பூரில் உள்ள பிரமாண்டமான மற்றும் அற்புதமான கபாலிஸ்வரர் கோயிலை நிச்சயமாக பார்த்திருப்பார்கள். அழகு மிகு கம்பீரமான இக்கோயிலின் ராஜா கோபுரம் பார்ப்பவர் நினைவை விட்டு அகலாது என்பது உண்மை. இந்த கோயிலுக்குள் இருக்கும்போது நகரத்தின் ஆரவாரகளிலிருந்தும் மக்களின் நெருச்சலிருந்தும் வெகு தொலைவில் நாம் இருப்பதை உணர முடியும். சிவபெருமானைப் புகழ்ந்து பாடிய சிறந்த நான்கு புனிதர்களில் ஒருவர் ஸ்ரீ திருஞான சம்பந்தர். ஸ்ரீ திருஞான சம்பந்தர் இக்கோயிலில் உறையும் இறைவன் கபாலீஸ்வரரை புகழ்ந்து பாடல் பாடினார், எனவே மயிலாப்பூரில் ஶ்ரீகபாலீஸ்வரர் கோயில் வெகு காலமாக இருக்கிறது என்பது உண்மை.*

*உலகம் புகழும் "திருக்குறள்" எழுதிய கவி ஸ்ரீ திருவள்ளுவர் மைலாப்பூரில் பிறந்தவர். அன்னார் மைலாப்பூரில் பிறந்த இடத்தில் ஒரு கோயில் உள்ளது. சென்னை நகரில் மயிலாப்பூர் பகுதி பழமையான இடங்களில் ஒன்றாகும். திருவொற்றியூர் சென்னை பட்டணத்தின் வடக்கு எல்லை என்று கூறப்பட்டாலும், தெற்கு எல்லை திருவான்மியூர். பட்டணத்தின் (பட்டணம் என்பது ஒரு கடல் கடற்கரை நகரத்தை குறிக்கும் சொல்) மைய பகுதி மைலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி ஆகும்.*

*தண்ணீர் துறை ஆஞ்சநேய சுவாமி கோயில்*
*திருவள்ளுவர் கோயிலுக்கு அருகில் புகழ்பெற்ற* *ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது.* *சென்னையின் மைலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரிக்கு அருகிலுள்ள பகவான் ஆஞ்சநேய சுவாமி கோயில் சென்னையின் பழமையான ஆஞ்சநேய கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயில் நாற்பது மற்றும் ஐம்பதுகளில் "தண்ணீர் துறை ஆஞ்சநேயர் கோயில்" என்று பிரபலமாக அறியப்பட்டது, ஏனெனில் இந்த கோயில் "தண்ணீர் துறை" காய்கறி சந்தைக்கு அருகில் அமைந்துள்ளது. அந்த நாட்களில் சென்னை முழுவதிலும் ஆஞ்சநேயருக்கு மட்டுமே பிரத்யேகமான கோவில்கள் குறைவாகவே இருந்தன. ஆனால் இன்று மைலாப்பூரில் மட்டும் மூன்று ஆஞ்சநேயர் கோயில்கள் இருப்பதால் தற்போது இந்த கோயிலை "லஸ் ஆஞ்சநேயர் கோயில்" என்று அழைக்கிறார்கள்.*

*இக்கோயில் பல வழிகளில் தனித்துவமானது*
*இந்த கோயிலின் பகவான் ஆஞ்சநேய சுவாமி பல வழிகளில் தனித்துவம் வாய்ந்தவர். இந்த கோயிலுக்கு அருகிலுள்ள சமஸ்கிருத கல்லூரியில் பிரம்மா ஸ்ரீ அனந்தராம தீட்சிதர், ஸ்ரீ கிருபானந்த வாரியர் போன்ற பல அறிஞர்கள் இராமாயணம் குறித்து சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருந்தனர். இராம நாமம் உச்சரிக்கப்படும் இடமெல்லாம் இருக்கும் பகவான் ஆஞ்சநேய சுவாமி, கோயிலிருந்தே இராமாயணத்தைக் கேட்டிருந்தார். இந்த ஆஞ்சநேய சுவாமி இந்த சொற்பொழிவுகளுக்குப் பிறகு ராமபக்தர்கள் அதிகமாவதைக் கண்டவர்.*

*சமஸ்கிருதக் கல்லூரி பல வேத நடவடிக்கைகள், இந்து தர்மம் குறித்த கல்விசார் கலந்துரையாடல்கள் மற்றும் புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் பற்றிய சொற்பொழிவுகளுக்கு இடமாக இருந்தது.*

*ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ பரமாச்சார்யா சதுர் மாசத்திற்கான விரதத்தை சமஸ்கிருதக் கல்லூரியில் முகாமிட்டு சந்திர மௌளிஸ்வர பூஜை செய்து கொண்டிருந்தார். மாலை பூஜைக்குப் பிறகு பல நாட்கள் ஸ்ரீ பரமாச்சாரியார் ஆன்மீக போதனைகளால் பக்தர்களுக்கு அறிவொளி கொடுத்தார். இந்த போதனைகளில் தர்மத்தைப் பற்றிய பல விளக்கங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இந்து தர்மத்தைப் பற்றி மக்கள் கொண்டிருந்த பல தெளிவற்ற கருத்துக்கள் - ஒரு சாதாரண மனிதனுக்கு இந்த கருத்துக்கள் மர்மத்தின் எல்லையாக இருந்தன - அவருடைய போதனைகளால் தெளிவுபடுத்தப்பட்டன. இந்த கோயிலின் பகவன் அஞ்சநேய சுவாமி சமஸ்கிருத கல்லூரியில் இந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் செயல்பாடுகளுக்கும் சாட்சியாக இருந்துள்ளார்.*

*ஸ்ரீ ராஜாஜியின் இராமாயணம் (மீண்டும் கூறப்பட்டது)*
*மயிலாப்பூர் வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக் கோயில்-2017இல்ராஜாஜி என்று பிரபலமாக அறியப்பட்ட இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ஸ்ரீ சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, தமிழில் ராமாயணத்தை "சக்கரவர்த்தி திருமகன்" (பேரரசரின் பெருமகன் என்று பொருள்) என்ற தலைப்பில் விவரித்தார். தமிழ் வார இதழான "கல்கி" யில் இதை ஒரு தொடராக வெளியிடுவதற்கு முன்பு, ஸ்ரீ ராஜாஜி அவர்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரின் ஆசீர்வாதம் கோரி கையெழுத்துப் பிரதியை இந்த கோயிலில் வைத்திருந்தார்.*

*தல புராணம்🌹*

*சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் மைசூர் மாநிலத்திலிருந்து அரசியல் கொந்தளிப்பின் காரணமாக வெளியேறிய ஷேட்டி எனப்படும் வணிக குலத்தவர்கள் சென்னையை தங்கள் இருப்பிடமாக கொண்டனர். அவர்கள் தங்கள் குல தெய்வமான ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் சிலையினை தங்களுடன் கொண்டு வந்தனர்.
சென்னையில் அவர்கள் மயிலாப்பூரில் குயவர்பேட்டையில் குடிப்புகுந்தனர். தங்கள் இல்லத்திற்கு அருகாமையில் அவர்கள் மைசூரிலிருந்து கொண்டு வந்த ஆஞ்சநேயர் சிலையையும் குடி வைத்தனர். ஆஞ்சநேய ஸ்வாமிக்கு சிறியக் கோயில் கட்டினார்கள். அக் கோயில் 'அனுமந்தராயர் குடி' என்று அழைக்கப் பட்டது. நாளடைவில் ஷேட்டி இனத்தவர்கள் தமிழ் நாட்டில் உள்ள செட்டியார் இனத்தவருடன் இணைந்து விட்டனர் இந்த மயிலாப்பூரில் குயவர்பேட்டை வாசிகள்.*

*சிறியதாக இருந்த இக்கோயில் இப்பொழுது பக்தர்களின் கைங்கரியத்தாலும், தர்மகர்த்தாவினாலும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. ராஜகோபுரம், கல்யாணமண்டபம் ஆகியவைகளும் கட்டபட்டுள்ளது. இந்த க்ஷேத்திரத்தில் வடமாலை மிக ப்ரசுத்தம். ஆங்கில வருடபிறப்பு அன்று ஐநூறு வடமாலைக்கு மேல் பகவான் ஆஞ்சநேய ஸ்வாமிக்கு சாத்தப் படுகிறது.*

*சுவாமியின் சிற்பம்*
*மேற்கு நோக்கியுள்ள* *சன்னிதியில் புடைப்பு* *சிலை ["அர்த்த ஷிலா"] வடிவத்தில் பகவன் ஆஞ்சநேய* *சுவாமி விக்கிரஹம் உள்ளது. அவர்* *தெற்கு நோக்கி நடந்து செல்வது போல்* *காணப்படுகிறார்.* *பக்தரை முதலில் ஈர்ப்பது அவரது ஒளிரும் கண்களும், காதுகளில் அவர் அணிந்துள்ள குண்டலமும் தான். அவரது வலது கை "அபய முத்திரை"யில் உள்ளது, அவரது இடது கையை இடுப்பில் ஊன்றி கதாயுதத்தை மோல் நோக்கி பிடித்துள்ளார். அவரது மேல்கைகளில் அவர் கேயூரம் என்று அழைக்கப்படும் கையைச் சுற்றி அணியும் சித்தரிக்கப்பட்ட பட்டையை அணிந்துள்ளார் மற்றும் அவரது மணிக்கட்டில் கங்கணம் எனப்படும் திடமான வளையல்கள் உள்ளன. அவரது சரணாரவிந்தத்தை தண்டை எனப்படும் கணுக்கால் அணிகலம் அலங்கரித்துள்ளது. அவரது வால் (லங்கூலம்) தலைக்கு மேலே உயர்ந்து தெற்கு நோக்கிச் செல்கிறது. ஸ்ரீ லட்சுமி, மற்றும் ஸ்ரீ சரஸ்வதி ஆகியோரைப் போலவே பகவன் தாமரை பீடத்தில் சேவை சாதிப்பதைக் காணலாம்.*

*பகவான் ஆஞ்சநேயர் சன்னிதியில் ஆஞ்சநேய சுவாமியின் உட்சவமூர்த்தியையும் ஒரு பஞ்சலோக வேணுகோபால சுவாமியையும் காணலாம். பகவான் ஆஞ்சநேயர் சன்னிதியின் வலதுபுறத்தில் 1954 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பெருமாள் கோதாண்ட ராமர் சன்னிதி, ஸ்ரீ ராமருடன் அவரது துணைவியார் தேவிஶ்ரீ சீதா, அவரது அனுஜர் லட்சுமணர் என்னும் இளய பெருமாள் ஆகியோர் சேவை சாதிக்கிறார்கள்.*

*அனுபவம்*
*மனதினை ஒருமுக படுத்தி இவரை பிராத்தனை செய்யுங்கள், நினைத்தவை அனைத்தும் கிட்டும். இந்த க்ஷேத்திரத்தின் வீர ஆஞ்சநேய ஸ்வாமி வாஞ்சிதாய ப்ரதாயானன், நினைத்ததை நினைக்ககும் முன் நிறைவேற்றி வைப்பவர்.*

*திருக்கோயில் இருப்பிடம் :*
  *ஸ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை "*

*ஜெய் ஸ்ரீ ராம்🙏*

*ஓம் நமச்சிவாய🙏*

கொற்றவாளீஸ்வரர் திருக்கோவில்- சிவகங்கை...

#ஆலயதரிசனம்...

கொற்றவாளீஸ்வரர் திருக்கோவில்- சிவகங்கை...

கோவில் முன்புறம் உள்ள சதுர வடிவ தெப்பம் கண்களுக்கு குளிர்ச்சியூட்டுகிறது.

இத்தல இறைவன் வன்னி மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

மூலவர்: கொற்றவாளீஸ்வரர்

அம்மன்: நெல்லை அம்பாள்

தீர்த்தம்: மது புஷ்கர்ணி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது, கோவிலூர் என்ற ஊர். இங்கு அமைந்துள்ள கொற்றவாளீஸ்வரர் திருக்கோவிலைப் பற்றி பார்ப்போம்.

இந்த ஆலயத்தை காளையார்கோவில் பகுதியை ஆட்சி செய்து வந்த வீரபாண்டியன் என்ற மன்னன் கட்டமைத்துள்ளான்.

இத்தல இறைவன் வன்னி மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

காளீசர் அருளால் வீரபாண்டியன் பெற்றிருந்த கொற்றவாளை, இத்தல இறைவன் மறைத்து விளையாடியதால்,  அவருக்கு 'கொற்றவாளீஸ்வரர்' என்று பெயர் வந்தது.

மன்னனுக்கு மீண்டும் கொற்றவாளை வழங்கிய ஈசன் என்பதால், இவருக்கு 'ராஜகட்க பரமேஸ்வரர்' என்ற பெயரும் உண்டு.

மதுப்பிரியன் என்ற முனிவரின் தவத்திற்கு அருள்பாலித்த காரணத்தால், இத்தல இறைவன் 'திரிபுவனேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

இக்கோவிலில் வீணை சரஸ்வதி, ஊர்த்துவ தாண்டவ நடராஜர், மீனாட்சி திருக்கல்யாண திருவுருவம், சர்வ அலங்கார சாரதாம்பிகை, ரிஷப வாகனத்தில் சிவ-பார்வதி, மயில் மீது சண்முகர் ஆகியோரது சிற்பங்கள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன.

இங்கு பிரதோஷம், பவுர்ணமி மற்றும் சிவராத்திரி தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இந்த ஆலயத்தை புதுப்பித்து திருப்பணி செய்தவர், கோவிலூரில் வேதாந்த மடத்தை நிறுவியவரான முத்துராமலிங்க தேசிகர் ஆவார்.

கோவில் முன்புறம் உள்ள சதுர வடிவ தெப்பம் கண்களுக்கு குளிர்ச்சியூட்டுகிறது. இதன் நடுவில் 16 தூண்களுடன் கூடிய நீராழி மண்டபம் இருக்கிறது. தெப்பக்குளத்தைச் சுற்றி நடந்தால் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் உள்ளது.

அமைவிடம்...

சிவகங்கையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், திருப்பத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலும், பிள்ளையார்பட்டியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, கோவிலூர்.

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாளும், ராமானுஜரும்...

#ஆலயதரிசனம்..

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாளும், ராமானுஜரும்...

இத்தலத்தில் தான் ஸ்ரீ ராமானுஜர் அவதரித்தார். அவருக்கென இக்கோவிலில் தனி சந்நிதியொன்று உள்ளது. இங்குள்ள பெருமாள் தன் துணைவிகளான ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி அளிக்கிறார். 

ஒவ்வொரு கோவிலும் வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்கலோக கதவை
திறப்பார்கள். ஆனால் இக்கோவிலே பூலோகத்தின் வைகுண்டமாக கருதப்படுவரால் வைகுண்ட ஏகாதசி அன்றைக்கு இக்கோவிலில் அடி எடுத்து வைத்தாலே சொர்க்க வாசலில் நுழைந்த முழு பலனைப் பெறலாம். 

இங்குள்ள தாயாரின் பெயர் யதிராஜவல்லி. தாயாருக்கென்று தனி சந்நிதியுள்ளது. அத்தோடு ஆண்டாளுக்கும் தனி சந்நிதி ஒன்று தனியாக உள்ளது. ஆண்டாளின் அழகை வர்னிக்க நம் அகக்கண் கூட பத்தாது. பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். பிறகு ராமருக்கும், வேணுகோபாலருக்கும் தனித்தனி சந்ந்திகள் உள்ளன. இப்பெருமாளின் திருநட்சத்திரம் திருவோணம். ஸ்ரீராமானுஜரின் திருநட்சத்திரம் திருவாதிரை. ஆகவே ஒவ்வொரு மாதத்திலும் இந்த நட்சத்திரங்கள் வரும் தினங்களில் திருவீதி உலா வரும் வைபோகத்தை நாம் காணலாம்.

தல வரலாறு..

இக்காலத்தில் ஸ்ரீபெரும்புதூராக அழைக்கப்படும் இத்தலம் முன்னொரு காலத்தில் பூதபுரி என்ற பெயரில் இருந்தது. இதற்கு காரணம் ஒரு நாள் சிவபெருமான் கைலாயத்தில் தன்னை மறந்து நடனமாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரையும் அறியாமல் அவர் உடம்பில் இருந்த வஸ்திரம் நழுவி விழுந்தது. இதை பார்த்த சிவகணங்கள் சிவனை பார்த்து சிரித்தன. 

இதை உணர்ந்த சிவபெருமான் சிவகணங்களை பூமிக்கு செல்லுமாறு சாபமளித்தார். இதனால் மன வேதனை அடைந்த சிவகணங்கள், சிவனின் அருளை மீண்டும் பெற பெருமாளை நோக்கி தவம் செய்தார்கள். இதனால் பெருமாள், ஆதி கேசவப் பெருமாளாக, கணங்களுக்கு காட்சி அளித்து , பின் ஆதிசேஷனை அழைத்து குளம் ஒன்றை எழுப்பினார்.

அவற்றில் அந்த பூத கணங்களை மூழ்கி எழச்செய்து அவர்களுக்கு சாப விமோச்சனம் பெற வழி செய்தார். பூதகணங்களுக்கு சாப விமோச்சனம் கிடைத்த இடமானதால் இந்த இடம் பூதபுரி என்ற பெயர் பெற்றது. பின் நாளடைவில் புதூர் என்று மாறி, பின் ராமானுஜர் அவதரித்தனால் ஸ்ரீபெரும்புதூராக மாறியது.

தோஷம் நீங்கும் ஆலயத்தின் விசேஷம்; ராமானுஜர் என்பவர் ஆதிசேஷனின் மறுபிறவிகளில் ஒன்றாக பிறந்து பெருமாளின் உடனிருந்து, அவறை என்றுமே பிரியாதிருப்பவர். ஸ்ரீராமர் காலத்தில் லக்ஷ்மணராக பிறந்து அவருடனே இருந்து உதவி புரிந்தவர். அதே போல ஸ்ரீ கிருஷ்ணர் காலத்தில் பலராமனாக பிறந்து கிருஷ்ணருக்கு உதவி புரிந்தார். 

இக்கலிகாலத்தில் ராமானுஜராகப் பிறந்து பெருமாளுக்கு தொண்டு செய்தார். அவரைப் பற்றி கூறிக் கொண்டிருந்தால் ஒரு கட்டுரையே பத்தாது. ஆக ஆதிசேஷணனின் அவதாரமாக பிறந்த இவரை வணங்கினால் ராகுவினால் ஏற்படும் மாங்கல்ய தோஷம், புத்தர பாக்கியமின்மை மற்றும் கேதுவினால் ஏற்படும் வாதக்கோளாருகள் போன்ற காலசர்ப்ப தோஷங்கள் நிவர்த்தியாகும்..

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் !!!

கோபத்தை அடக்க 
சுலபமான வழிகள் !!!

1. பொருட்படுத்தாதீர்கள்(Objects do not)

உங்களைப் பற்றி அவதூறாகவோ,

மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள்.

அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள்.

எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்.

(Do not expect anything to anyone)

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால்,

அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான்.

எனவே ,

யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்

(Please disregard opponents)

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.

தன்னம்பிக்கை உள்ளவனை

ஒரு போதும் அவதூறுகளும்,

ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்

(Please stop unwanted thoughts)

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது,

அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

நமது புராணங்களும் கோபத்தின் தீமைகளைப் பற்றி விபரமாக விளக்குகின்றன.

பாருங்கள் ....

இங்கொரு முனிவரின் கோபத்தை..

துர்வாசர் என்றொரு முனிவர் இருந்தார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இவர் அடிக்கடி கோபப்படகூடியவர். கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன.

அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு,

தனது தவவலிமைகளை இழந்தவர்.

மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம்?

எனவே

நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும்.

அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும்

நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது....

காஞ்சிபுரம் அருள்மிகு சத்யநாதர் ஆலயம்*

*🙏இன்றைய கோபுர தரிசனம்..!!🙏*

*காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு காஞ்சிபுரம் அருள்மிகு சத்யநாதர் ஆலயம்*

*கடவுள் குடியிருக்கும் இடம் கோயில். இதன் அடையாளம் கோபுரம். அதை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நின்று வழிபட்டாலும் புண்ணியமே. இதனால் எல்லா சன்னதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும்.  இதை ’கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பர்.*

*மூலவர் : சத்யநாதர், திருக்காலீஸ்வரர், காரைத்திருநாதர்*

*அம்மன்/தாயார் : பிரமராம்பிகை*

*தல விருட்சம் : காரைச்செடி*

*தீர்த்தம் : இந்திர, சத்யவிரத தீர்த்தம்*

*ஆகமம்/பூஜை : காமீகம்*

*பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்*

*புராண பெயர் : கச்சிநெறிக்காரைக்காடு*

*ஊர் : காஞ்சிபுரம்*

*மாவட்டம் : காஞ்சிபுரம்*

*மாநிலம் : தமிழ்நாடு*

*பாடியவர்கள் : திருஞானசம்பந்தர்*

*தேவாரப்பதிகம்*

*பிறைநவின்ற செஞ்சடைகள் பின்தாழப் பூதங்கள் மறைநவின்ற பாடலோடு ஆடலராய் மழுவேந்திச் சிறைநவின்ற வண்டினங்கள் தீங்கனிவாய்த் தேன்கதுவும் நிறைநவின்ற கலிக்கச்சி நெறிக்கரைக் காட்டாரே.*

*திருஞானசம்பந்தர்*

*தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 5வது தலம்.*

*திருவிழா*

*மார்கழி திருவாதிரை, சிவராத்திரி, அன்னாபிஷேகம்.*

*தல சிறப்பு*

*இங்குள்ள இறைவன் மேற்கு பார்த்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரத்து சிவதலங்களில் உள்ள சிவனுக்கு, காஞ்சி காமாட்சி அம்மனே பொதுவான அம்பாளாக இருப்பதால் இங்குள்ள கோயில்களில் அம்பாளை பார்ப்பது அரிது. ஆனால், இங்கு கருவறையிலேயே சுவாமிக்கு அருகே தெற்கு பார்த்தபடி உற்சவ வடிவில் அம்பாள் இருக்கிறாள். உற்சவராக இருந்தாலும் மூலவருக்கு உரிய பூஜைகளே இவளுக்கு செய்யப்படுகிறது. விழாக் காலங்களில் இவளை வெளியே கொண்டு செல்வதில்லை என்பது சிறப்பு.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 237 வது தேவாரத்தலம் ஆகும்.*

*திறக்கும் நேரம்*

*காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி*

*அருள்மிகு சத்யநாதசுவாமி திருக்கோயில்,காஞ்சிபுரம் - 631 502.காஞ்சிபுரம் மாவட்டம்.*

*போன்*

*+91- 44 - 2723 2327, 2722 1664.*

*பொது தகவல்*

*இக்கோயில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது.*

*பிரார்த்தனை*

*சிவனிடம் வேண்டிக்கொள்ளும் காரியங்கள் நிறைவேறும். புதன்கிழமைகளில் தீர்த்தத்தில் நீராடி பச்சை நிற வஸ்திரம் சாத்தி, பச்சைப்பயறு நைவேத்யம் படைத்து "ஞானகாரகன்' எனப்படும் புதனை வணங்கினால் கல்வியில் சிறக்கலாம், அறிவு கூடும், மொழியில் புலமை, பேச்சுத் திறமை, உண்டாகும், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.*

*நேர்த்திக்கடன்*

*சுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு பூஜைகள் செய்யலாம்.*

*தலபெருமை*

*ஏழு சீடர்களுடன் தெட்சிணாமூர்த்தி:பொதுவாக தெட்சிணாமூர்த்தி சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுக்கு ஞானம் போதித்த நிலையில்தான் காட்சிதருவார். ஆனால், இங்கு அவருக்கு கீழே 7 சீடர்கள் இருக்கின்றனர். இது வித்தியாசமான அமைப்பாகும். இவரிடம் வேண்டிக்கொண்டால் ஞானம் பிறக்கும் என்பது ஐதீகம். சத்யநாதசுவாமி சற்றே சிவந்த நிறத்தில் காட்சியளிக்கிறார். அம்பாளுக்கு காரார்குழலி என்ற பெயரும் உள்ளது. நந்தியின் கழுத்து மட்டும் தெற்கு முகமாக திரும்பியிருக்கிறது. இதற்கு நேரே ஒரு வாசலும் உண்டு.*

*பிரகாரத்தில் புதனுக்கு அருகில் இந்திரன் இருக்கிறார். பிரஹஸ்பதியை (வியாழன்) குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடம் கல்வி கற்ற சந்திரன், அவரது மனைவியான தாரையை குருபத்தினி என்பதையும் கருதாமல் அவள்மீது ஆசை கொண்டான். ஒருசமயம் அவன் மகாவிஷ்ணுவின் அருள் பெறுவதற்காக யாகம் ஒன்றை நடத்தினான். அந்த யாகத்திற்கு குரு என்ற முறையில் வியாழன், தன் மனைவி தாரையுடன் கலந்து கொண்டார். அவள் மீது காதல் கொண்டிருந்த சந்திரன் அவளை மயக்கி அவனுடனே இருக்கச் செய்துகொண்டான்.*

*சந்திரனுக்கும், தாரைக்கும் மகனாக பிறந்தார் புதன். பிரஹஸ்பதி, சிவனிடம் முறையிட்டு தாரையை கூட்டிச் சென்றார். புதனை சந்திரனே வளர்த்து வந்தார். புதன் பெரியவனாகியதும் தான் பிறந்த முறையை அறிந்து வெறுப்புற்று சந்திரனை பிரிந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டார். தாய், தந்தையை பிரிந்திருந்த புதன் இத்தலத்திற்கு வந்து, தனக்கு கிரகங்களில் ஒரு பதவி கிடைக்க அருளும்படி சத்யநாதரிடம் வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், உரிய காலத்தில் கிரகப்பதவி கிடைக்கப்பெறும் என்று அருள்புரிந்தார். புதன் இத்தலத்தில் பிரகாரத்தில் சுவாமிக்கு வலதுபுறத்தில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார்.*

*தல வரலாறு*
*தேவர்களின் தலைவனான இந்திரன் தனது தவத்தினால் விரும்பிய வடிவம் எடுக்கும் திறன் பெற்றிருந்தான். ஒருசமயம் கவுதம மகரிஷியின் மனைவியான அகல்யா மீது அவனுக்கு ஆசை ஏற்பட்டது. எனவே, அகல்யாவை கவுதமரிடம் இருந்து பிரித்து அவளிடம் செல்ல வஞ்சக எண்ணம் கொண்டான். இதற்காக ஒருநாள் அதிகாலையில் கவுதமரின் ஆசிரமத்திற்கு சென்று, சேவல் போல கூவினான்.*

*பொழுது விடிந்தது என நினைத்த கவுதமர் வெளியில் சென்று விட்டார்.*

*இத்தருணத்திற்காக காத்திருந்த இந்திரன், அவர் சென்ற சிறிது நேரத்தில் அவரைப் போலவே உருவத்தை மாற்றிக் கொண்டு அகல்யாவிடம் சென்று அவளை ஏமாற்றி காமுற்றான். இதனிடையே ஏதோ மாயையால் தான் கிளம்பி வந்திருப்பதை உணர்ந்த கவுதமர், ஆசிரமத்திற்கு திரும்பினார். அவரைக் கண்ட இந்திரன் பூனை போல வடிவத்தை மாற்றி தப்பிக்கப் பார்த்தான். அவனது வஞ்சக எண்ணத்தை ஞானதிருஷ்டியால் உணர்ந்த கவுதமர், அவனது உடல் முழுக்க கண்களைப் பெற்று திரியும்படி சபித்ததோடு, அகல்யாவையும் கல்லாக மாற்றி விட்டார். சாபம்பெற்ற இந்திரன் பூலோகம் வந்து பல தலங்களிலும் சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். அவன் இத்தலத்திற்கு வந்தபோது, காரைச்செடிகளின் மத்தியில் சிவன் காட்சி தந்து அவனது சாபத்தை போக்கி, "காரைத்திருநாதர்' என்ற பெயரும் பெற்றார்.*

*சிறப்பம்சம்*

*அதிசயத்தின் அடிப்படையில்*

*இங்குள்ள இறைவன் மேற்கு பார்த்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.*

*அமைவிடம்*

*காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து சுமார் 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் இருக்கிறது.*

*அருகிலுள்ள ரயில் நிலையம்*

*காஞ்சிபுரம்*

*அருகிலுள்ள விமான நிலையம்*

*சென்னை*

*தங்கும் வசதி*

*காஞ்சிபுரம்*

*வாழ்க வளமுடன்*

*வாழ்க வையகம்*

*🙏 திருச்சிற்றம்பலம் 🌷*

கைலாசநாதர் ஆலயம்

*ஆலயம்அறிவோம்*

*கைலாசநாதர் ஆலயம்*


*ரேவதிநட்சத்திர_ஆலயம்*
*இன்று ரேவதி நட்சத்திரம்*
 

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தாத்தயங்கார் பேட்டை அருகில் காருகுடியில் உள்ளது 
அருள்மிகு கைலாச நாதர் திருக்கோயில்.

 மூலவர் கைலாசநாதர்.

 தாயார் கருணாகர வல்லி. 

இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு:   

சந்திர பகவான், கடைசி நட்சத்திர தேவியான ரேவதியை மணந்தார். அவர்கள், சிவனையும், பார்வதியையும் தரிசிக்க விரும்பினர். இதையறிந்த அம்பிகை கருணை கொண்டு, இத்தலத்தில் சிவனுடன் காட்சி கொடுத்தாள். சிவனுக்கு கைலாசநாதர் என்றும், அம்பாளுக்கு கருணாகரவல்லி என்றும் பெயர் ஏற்பட்டது. கார் எனப்படும் ஏழுவகை மேகங்களும் ரேவதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்கின்றன.
சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி என்ற மன்னன் இக்கோயிலை புதுப்பித்து கட்டியுள்ளான். 1266ம் ஆண்டில் கர்நாடக மன்னன்போசல வீரராமநாதன் என்பவன் இக்கோயில் பூஜைகள் தடையின்றி நடக்க நிறைய நிலங்களை தானம் செய்துள்ளான். இக்கோயிலுக்காக ராமசக்கவர்த்தி எனும் மன்னன் நில தானம் செய்துள்ளான். காசிக்கு அடுத்த காருகுடி என்பார்கள். இத்தலத்தின் கீழ் அசோக நட்சத்திரம் சுற்றுகிறது.

ரேவதி நட்சத்திர பலன்: 

சந்திரனுக்கும் 27 நட்சத்திர தேவியருக்கும் சிவனும் ,பார்வதியும் இத்தலத்தில் காட்சி கொடுத்தனர். இறைவனின் கருணையை எண்ணி ரேவதி மட்டும் தினமும் இங்கு வந்து பூஜை செய்வதாக கூறப்படுகிறது. எனவே ரேவதி என்ற பெயருடையவர்கள், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வந்து 27 என்ற எண்ணிக்கை வரும்படியான பொருட்களை சிவனிடமும் அம்மனிடமும் சமர்ப்பித்து, கோயிலுக்கு வருபவர்களுக்கு கொடுத்தால் தடை பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். ரேவதி நட்சத்திரம் முடிந்து, அஸ்வினி நட்சத்திரம் தொடங்கும் முன்பாக உள்ள 12 நிமிடங்களின் போது சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் திருவாதிரையன்றும், ரேவதி நட்சத்திரத்தன்றும் இங்கு வருண பகவானுக்கு ஹோமம் செய்தால், மழை பெய்யும். சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பாவங்கள் விலகும், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. ரேவதி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். நீர் சம்பந்தமான நோய்கள், கண்சம்பந்தப்பட்ட நோய்கள், நாள்பட்ட நோய்கள் குணமாக இங்கு சிறப்பு அர்சசனை செய்யப்படுகிறது.

பத்ரகாளியம்மன் கோயில்..மேச்சேரி...

#ஆலயதரிசனம்...

பத்ரகாளியம்மன் கோயில்..
மேச்சேரி...

அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயில் சேலம் மாவட்டத்தில், மேச்சேரியில் உள்ளது.

மூலவர்..
பத்ரகாளியம்மன்..

கட்டப்பட்ட நாள்..
800 ஆண்டுகளுக்கு முன்

கோயில்..

இந்தக் கோவில் பிரதான வாசல் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. மேலும் கோவிலைச் சுற்றி உயர்ந்த மதில்களும், நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்களுடன் கூடிய வாசல்களும் உள்ளன.

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் அன்னையின் அஷ்டபுஜங்களில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரரூபமான சூலாயுதம், கபாலம், உடுக்கை, வாள், கேடயம், தலை, மணிகளை தாங்கிய தண்டையணி பொன்சலங்கை அணிந்து வலதுகால் மேலூன்றி,

பொன் சலங்கை அணிந்த இடது காலை அசுரன் மீது ஊன்றி வீராசனத்தில் அமர்ந்து, மூக்கில் மின்னும் மூக்குத்தியும், பவளமாய் ஜொலிக்கும் புன்சிரிப் புடனும், அக்னி மகுடமும், குண்டலமும் அணிந்து தேவியாய், பத்ரகாளியாய் அனைவருக்கும் அருள்புரிகின்றாள்.

தோசம் தீர்க்கும் தலம் ..

அன்னையைத் தரிசனம் செய்வதால் 21 தலைமுறையில் செய்த பாவங்கள், சோகம், ரோகம் போன்றவை நீங்கும். வித்தை, புத்தி சித்திக்கும். அஷ்டமாசித்திகளும் அன்னையை பணிந்து வழிபட்டால் கைகூடிவரும்.

மேலும் பாவ தோஷங்கள், ஏவல், பில்லிசூனியம், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், ராகு, கேது தோஷத்தால் ஏற்படும் திருமண தடைகள், குழந்தை பேறின்மை ஆகியவைகளுக்கு ராகுகாலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

மேலும் மனநோய் பாதித்தவர்கள் ஒருமண்டலம் இங்குவந்து தீர்த்தம், விபூதி உட்கொண்டால் நோய் நீங்குகிறது. பேய், பிசாசு பிடித்தவர்கள் வந்து பூதகணங்களின் முன் கூட்டு பிரார்த்தனை செய்து விபூதி அணிந்தால் அவைகள் நீங்கிவிடுகிறது.

கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் நீங்க பக்தர்கள் வீபூதி பெற்று செல்கின்றனர்.' மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் ஆலயத்திற்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர்.

பூஜைகள்..

தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும்.

தமிழ்ப் புத்தாண்டு ,ஆங்கிலப் புத்தாண்டு, வைகாசி விசாகம் , சித்ரா பெளர்ணமி, தை அமாவாசை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், மாசி மகம், கார்த்திகை தீபம், நவராத்திரி பெருவிழா, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

திருவிழா ..

மாசி மாதம் திருவிழா நடைபெறும்.அப்போது பூக்கரகம் எடுத்தல் ,அலகு குத்துதல், அக்னிக்குண்டம் இறங்குதல், தீச்சட்டி எடுத்தல் என பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்.

அமைவிடம்..

சேலத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், மேட்டூர் அணையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது...

சுனாமி

சுனாமி...

கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற நிகழ்வுகளால்  சுனாமி ஏற்படுகிறது.

சுனாமி அலைகள் 100 அடி உயரம் வரை எழும் ஆற்றல் கொண்டது.

கடலில் ஏற்படும் சுனாமிகளில் சுமார் 80 சதவீத சுனாமிகள், பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படுகின்றன.

சுனாமியின்போது முதல் அலை அத்தனை வலுவாக இருக்காது. அடுத்தடுத்து வரும் அலைகள்தான் வலுவானதாக இருக்கும்.

சுனாமி அதிக அளவில் தாக்கும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் உள்ளது.

2004-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமிதான், இதுவரை உலகைத் தாக்கியதிலேயே வலுவான சுனாமி ஆகும்.

14 நாடுகளைத் தாக்கிய இந்த சுனாமியில் சுமார் 2.50 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

சுனாமி அலைகள் மணிக்கு 500 முதல் 800 மைல் வேகம் வரை தாக்கும்.

அமெரிக்கா மற்றும் கனடாவில் 1964-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் 106 மில்லியன் டாலர் வரை சேதம் ஏற்பட்டது.

நவீன சுனாமி எச்சரிக்கை கருவி, ஜப்பான் நாட்டின் கடற்கரையில் நிறுவப்பட்டுள்ளது...

செல்போன்களும் உடல் நல பாதிப்புகளும்...

செல்போன்களும் உடல் நல பாதிப்புகளும்...

செல்போன், கணினி போன்றவற்றில் அதிக நேரம் செலவிடும் நபர்களுக்கு மனிதர்களை முகத்தோடு முகம் பார்த்து இயல்பாக பேசும் திறனும், உண்மையான மனித தொடர்பியல் சார்ந்த திறன்களும் குறைகின்றன.

காலம் மாற மாற, புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் வித விதமாக தோன்றி உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல் நல கோளாறுகள் ஏற்கனவே உண்டு.

அது தற்சமயம் வாட்ஸ்-அப் பைட்டிஸ் என்ற புதிய பெயரோடு புழக்கத்துக்கு வந்திருக்கிறது. இது வாட்ஸ்-அப் அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை என்பதால் அதையே பெயரிலும் வைத்துவிட்டார்கள். எனவே இது வாட்ஸ்-அப் பயன்படுத்துகிற அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமாகிறது.

செல்போன் வருவதற்கு முன்பு தட்டச்சு எந்திரத்தில் அதிக நேரம் தட்டச்சு செய்பவர்களுக்கு அனைத்து விரல்களிலும் தேய்மானம் ஏற்பட்டு தசை மற்றும் எலும்புகளில் பிரச்சினைகள் ஏற்படுவதை ‘ஸ்டெனோகிராபர் தம்ப் டிசார்டர்’ என்று சொல்வது உண்டு. செல்போனில் வாட்ஸ்-அப் போன்ற செயலிகளில் நாம் அதிக நேரம் தொடர்ந்து டைப் செய்து சாட்டிங் செய்கிற போது, நமது கையில் உள்ள விரல்களை அதிக அளவு பயன்படுத்துவதோடு நீண்ட நேரம் தலையை குனிந்த நிலையில் இருக்கிறோம்.

இதனால் உடல் நல பாதிப்பு ஏற்படக் கூடும். சிலர் செல்போனில் டைப் செய்வதற்கு ஒரு கையை மட்டுமே பயன்படுத்துவது உண்டு. இதனால் ஒரு கையில் மட்டும் அதிக பாதிப்பு ஏற்படும். இதற்கு பதிலாக இரண்டு கைகளாலும் டைப் செய்கிற போது கைகளில் ஏற்படுகிற பாதிப்புகள் சற்று குறைய வாய்ப்புள்ளது. அதேபோல செல்போனின் அளவு பெரிதாக பெரிதாக டைப் செய்கிற பகுதி பெரிதாவதால் சற்று சுலபமாக டைப் செய்யலாம். டேப்லெட், லேப்டாப் போன்ற சற்று பெரிய திரையை உடைய கருவிகளை கீழே வைத்து பயன்படுத்தும் போது அதிக அளவு தலையை குனிந்து இருப்பதால் தோள்பட்டை, கழுத்து பகுதிகளில் அதிக வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தசைகள், எலும்புகள் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதோடு நீண்ட நேரம் செல்போன் மற்றும் கணினி திரைகளை பார்த்து கொண்டிருப்பதால் கண்கள் உலர்ந்து விடுகின்றன. இதுபோன்ற டிஜிட்டல் திரைகளில் இருந்து வெளிப்படும் நீலநிற ஒளிக்கதிர்களால் தற்காலிக கண்பார்வை குறைபாடு ஏற்படுவதோடு கண் விழித்திரை குறைபாடும் உண்டாகிறது. இரவு நேரங்களில் தூக்கத்தை தவிர்த்து இந்த கருவிகளை பயன்படுத்துவதால் தூக்கக் குறைபாடுகள் மற்றும் நினைவுத்திறன் குறைபாடுகள் ஏற்படுகின்றன.

செல்போன், கணினி போன்றவற்றில் அதிக நேரம் செலவிடும் நபர்களுக்கு மனிதர்களை முகத்தோடு முகம் பார்த்து இயல்பாக பேசும் திறனும், உண்மையான மனித தொடர்பியல் சார்ந்த திறன்களும் குறைகின்றன. மேலும் இதனால் அதிக கோபமும், அதிக மன அழுத்தமும் உண்டாகிறது.

குழந்தை பருவத்தில் இதுபோன்ற டிஜிட்டல் திரைகளை அதிக அளவு பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு கவனக்குறைவு, மொழியை கற்றுக்கொள்ளும் திறனில் பிரச்சினை ஏற்படுவதோடு கண்ணில் கிட்டப்பார்வை கோளாறு ஏற்படவும் வழிவகுக்கிறது. மேலும் இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பிரச்சினை ஏற்படவும் காரணமாகிறது. பெற்றோர் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து வருவதோடு, அவர்களை அமைதிப்படுத்துவதற்காக செல்போனை கொடுத்து பழக்கப்படுத்துவதால், நாளடைவில் அவர்கள் அதற்கு அடிமை யாகிவிடும் நிலை உண்டாகிறது.

குழந்தைகளுக்கு தேவைப்படும் கால்சியம்...

குழந்தைகளுக்கு 
தேவைப்படும் கால்சியம்...

கால்சியம் சத்து உடலில் சேர்வதால் எலும்புகள் வலுப்பெறும். குறிப்பாக குழந்தைகளும், இளம் வயதினரும் இளமைப்பருவத்தில் கால்சியம் நிறைந்த பால் உள்ளிட்ட உணவுகளை சாப்பிடுவது அவசியம் ஆகும்.

குழந்தைகள், மாணவர்கள், இளம் பருவத்தினர் உள்பட அனைவருக்கும் கால்சியம் சத்து அவசியமாகும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் கால்சியம் சத்து அதிகம். காய்கறிகள், பழங்களிலும் கால்சியம் சத்து உள்ளது.

கால்சியம் சத்து உடலில் சேர்வதால் எலும்புகள் வலுப்பெறும். குறிப்பாக குழந்தைகளும், இளம் வயதினரும் இளமைப்பருவத்தில் கால்சியம் நிறைந்த பால் உள்ளிட்ட உணவுகளை சாப்பிடுவது அவசியம் ஆகும். ஏனெனில் 18 வயதுக்குள் தான் எலும்புகள், பற்கள் நன்றாக வளர்ச்சி அடையும்.

நரம்பு மண்டலம் உறுதியாக இருக்க கால்சியம் உதவும். இதே போன்று இதயம், இதய தசைகள் வலுப்பெறவும், உயர் ரத்த அழுத்த அளவினை குறைக்கவும் கால்சியம் அவசியம். பொதுவாக 1 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு 500 மில்லி கிராம் அளவில் கால்சியம் சத்து தேவைப்படும்.

அதே போன்று 4 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு 800 கிராமும், இளம் வயதினரான 9 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு 1,300 மில்லிகிராமும், 19 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு 1000 மில்லி கிராமும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 1,200 மில்லிகிராமும், கர்ப்பிணி பெண்களுக்கு 1,300 மில்லிகிராமும் கால்சியம் சத்து தேவைப்படுகிறது.

மணம் தரும்... குணமும் தரும்! சுகந்தி மலர்’லாவண்டர் பூ’

மணம் தரும்... குணமும் தரும்!

மனம் கவரும் ஊதா நிறத்தில் உள்ள ‘லாவண்டர் பூ’ நறுமணம் மிக்கது என்பதாலேயே தமிழில் ‘சுகந்தி மலர்’ என்பார்கள். 

உணவுகள் மற்றும் பானங்களில், இந்த மலர் நறுமணமூட்டியாகவும் சுவை கூட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக மருந்து தயாரிப்புகளிலும் லாவண்டர் எண்ணெய் பயன்படுகிறது. இதன் முழுமையான பலன்கள் என்னவென்று அரோமா தெரபிஸ்ட்டான கீதா அசோக் அவர்கள் கூறுவது..

‘‘லாவண்டர் பூக்களை சோப்புகள், அழகுசாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் அலங்காரங்களில் ஒரு மண மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பூவின் எண்ணெயை உணவு தயாரிப்பில், ஐஸ்க்ரீம் மற்றும் தேநீருடனும் வாசனைக்காக சேர்க்கிறார்கள். மேலும் பாத்ரூமில் கிருமிநாசினியாகவும், எண்ணெய்  வடிவில் அதிக பயன்பாட்டில் உள்ள முக்கியமான ஒன்று லாவண்டர் ஆயில். பொதுவாக லாவண்டர் பூ மற்றும் எண்ணெயை மருத்துவத்தில் கவலை, அமைதியின்மை, தூக்கமின்மை, மனச்சோர்வு, தலைவலி, பல்வலி மற்றும் பிற வலிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

லாவண்டர் எண்ணெய் மயக்க விளைவைக் கொண்டிருப்பதால்(Sedative) தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து தளர்வடையச் செய்கிறது. Antibacterial, Anti inflammatory மற்றும் Anti fungal விளைவுகளைக் கொண்டிருப்பதால் பல நோய்களுக்கு மருந்தாகிறது. லாவண்டர் எண்ணெய் எல்லா வயதினருக்கும், அனைத்துவிதமான சரும வகைக்கும் ஏற்றது. சருமம் மற்றும் கூந்தல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும், அழற்சியால் ஏற்படும் வீக்கத்திற்கும் சிறந்த பலனைத் தருவது.

சிலர் தூக்கமின்மைப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள், இரவில் ஒரு பக்கெட் தண்ணீரில் சில துளிகள் லாவண்டர் ஆயிலை விட்டு குளித்தாலோ, காதுக்குப்பின்னால் சில துளிகள் தடவிக்கொண்டு அல்லது தலையணையில் தடவிவிட்டுத் தூங்கினால் ஆழ்ந்த நித்திரை கிடைக்கும். படிப்பதற்கு அடம்பிடிக்கும் குழந்தைகளின் அறைகளில் 100 மிலி தண்ணீரில் சில துளிகள் லாவண்டர் ஆயில் விட்டு ஸ்ப்ரே செய்தால், அந்த நறுமணத்தால் அவர்கள் அப்படியே அமைதியாகி, நல்ல கவனம் செலுத்தி படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். மன அமைதிக்கும், கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கும் நல்ல பயனுள்ளது.

தீக்காயம் ஏற்படும்போது பாதிக்கப்பட்ட சருமத்தின்மேல் லாவண்டர் எண்ணெயை அப்படியே நேரடியாக தடவும்போது தீக்காயம் விரைவில் குணமடையும். வீட்டில் சமையலறை, பாத்ரூம், புத்தக ஷெல்ப்,  துணிகள் அடுக்கும் பீரோ போன்றவற்றில் லாவண்டர் எண்ணெயை தெளித்து மூடி வைத்தால் சிறு பூச்சிகள் அண்டாது. இது சிறந்த கிருமிநாசினியாக வேலை செய்கிறது. பாம்பு, பூரான், தேள் போன்ற விஷக்கடிகளுக்கு அதன்மேல் நேரடியாக 30 சொட்டுகள் லாவண்டர் ஆயிலை தடவினால் விஷம் உடலில் ஏறவிடாமல் தடுப்பதோடு, அதுபோன்ற நேரங்களில் பாதிப்படைந்தவர்களுக்கு இயல்பாக ஏற்படும் பயத்தையும் குறைத்துவிடும்.

கூந்தல் உடைந்து, துண்டு துண்டாக உதிர்பவர்கள் 100 மிலி விளக்கெண்ணெயில் 200 சொட்டு லாவண்டர் எண்ணெயை சேர்த்து போடும்போது, கூந்தலின் உலர்வைப்போக்கி கூந்தல் உடைவதைத் தடுக்கும். முகத்தில் பெரிய பருக்கள் வந்தவர்கள் லாவண்டர் எண்ணெயை நேரிடையாகத் தடவினால் பருக்கள் அமுங்கி, சிவப்புத்திட்டுக்களும் குறைந்துவிடும். கண்களுக்கு அருகில் கருவளையம் உள்ளவர்கள் தாமரைப்பூவை அரைத்து அதனுடன் லாவண்டர் ஆயில் துளிகளைச் சேர்த்து தடவி வந்தால் 2, 3 நாட்களிலேயே கருப்பு நிறம் குறைவதைப் பார்க்கலாம்.

லாவண்டர் எண்ணெயில் உள்ள Anti Analgesic தன்மை பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் வரும் Menstrual Cramp  எனப்படும் அடிவயிற்றுவலி, இடுப்பு வலி, கை, கால் குடைச்சல் போன்ற வலிகளைக் குறைத்துவிடும். ஒரு ஸ்பூன் கடுகு எண்ணெய், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயுடன் 10 முதல் 20 சொட்டு லாவண்டர் ஆயிலை கலந்து வலி உள்ள இடங்களில் தடவினால், கடுமையான வலி கூட குறைந்துவிடும். ஒருவருக்கு மன அழுத்தம், பதற்றம் இருக்கும்போது தூக்கம் வராது. தூக்கமின்மைக்கு காரணமான மனப்பிரச்னைகளையும் போக்கும் தன்மை உடையது லாவண்டர் எண்ணெய்.

மன அழுத்தத்தை குறைக்க வேண்டுமானால், மனதையும், உடலையும் ஒருமைப்படுத்த வேண்டும். இந்த வேலையை லாவண்டர் ஆயில் செய்கிறது. சிலர் தேவையில்லாமல் எல்லாவற்றுக்கும் பயப்படுவார்கள். இதன் காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். அவர்களின் பயத்தையும் லாவண்டர் எண்ணெய் நறுமணம் போக்கிவிடும். எப்படி தியானம், பிரார்த்தனை இடங்களுக்கு செல்லும்போது மனம் அமைதியடைகிறதோ, அதே விளைவை இந்த எண்ணெய் ஏற்படுத்தும். அறுவை சிகிச்சைக்கு முன் எப்படிப்பட்ட தைரியசாலிக்கும் ஒரு மரண பயம் வந்துவிடும்.
அறுவைசிகிச்சை செய்யப்போகும் நோயாளியின் மனநிலையை தயார்படுத்த இதை பயன்படுத்தலாம். அந்த விதத்தில், நம் மூளையில் உள்ள மோட்டார் நரம்புகளை அமைதிப்படுத்த, கழுத்துக்கு பின்புறம் 10 சொட்டு லாவண்டர் எண்ணெயைத் தடவினால், ரத்த ஓட்டத்தில் கலந்து உடலையும், மனதையும் அமைதிப்படுத்தும். அறுவைசிகிச்சைக்குப்பின் உண்டாகும் புண்ணை ஆற்றுவதற்கு லாவண்டர் எண்ணெய் மிகவும் முக்கியம். புண்களும் மிக விரைவில் குணமாகும். குறிப்பாக அரோமா தெரபியில் மட்டுமே லாவண்டர் ஆயிலை பயன்படுத்துகிறோம். இதை பலவிதங்களிலும் பயன்படக் கூடிய எண்ணெய் என்று சொல்லலாம். மனம், உடல், நோய் என எல்லாவற்றுக்கும் ஒரே மருந்தாக பயன்படுகிறது.

வயது, குறிப்பிட்ட நோயுள்ளவர்கள் என வேறுபாடில்லாமல் எல்லோருமே பயன்படுத்தக் கூடிய ஒன்று. தொண்டைப்புண் உள்ளவர்கள் வெந்நீரில் 10 சொட்டு கிளிசரின், 10 சொட்டு தேன், 10 சொட்டு லாவண்டர் எண்ணெய் கலந்து வாயில் விட்டு புண்ணில் படுமாறு கொப்பளித்தால் வாய்ப்புண்ணை ஆற்றிவிடும். தலையில் வட்ட வட்டமாக கரப்பான் வந்த இடத்தில் முடி உதிர்ந்து சொட்டையாக இருக்கும். அந்த இடத்தில் லாவண்டர் ஆயிலை தடவி வந்தால், முடி புதிதாக வளர்ந்துவிடும். மைக்ரேன் தலைவலி, மெனோபாஸ் அறிகுறி, ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் போன்ற பிரச்னைகளுக்கெல்லாம் கூட லாவண்டர் எண்ணெய் நல்ல பலன் தருகிறது...