திங்கள், 21 மார்ச், 2022

அன்பு கவிதைகள்

 


பார்வை

உன் ஒரு பார்வையால் என் உலகத்தை மறந்தேன்!!!!!!

உன் கருணையினாள் கர்ணனையே மறந்தேன் !!!!!

உன் ஒரு வார்த்தைகளால் இந்த நாளையே மறந்தேன்!!!!

உன் அழகினால் என்னையே மறந்தேன் என்னவளே!!!!!


காதல் அலை

🧚‍♀️உன் வழிகளில் விழுந்தவுடன் தான் உணர்ந்தேன்...


🌊நான் விழுந்தது ஆழ்கடலென்றும்

⛵அதில் நானோ காகிதக் கப்பலென்றும் ...


💞மறுகரை அடைய எண்ணினேன் அதன் ஆழம் கண்டறிய இயலவில்லை....


💔திரும்பி கரைக்கு செல்ல எண்ணினேன் நினைவலைகள் மூழ்கடிக்கிறது...


காதல் வாழ்க்கை

வீட்டின் வாசல் திறந்திருக்க ஜன்னலின் வழியே எட்டி பார்க்கும் நிலா -- ♡ஓரப் பார்வை

விளக்கை ஏற்றிவிட்டு விண்மீனை இரசிப்பது போல -- ♡உரையாடல்

சமைத்தவருக்கு பரிமாறிக் கிடைக்காத உணவு -- ♡கடிதம்

வலையில் தப்பித்து தூண்டிலில் விழுந்தது -- ♡ஆசை

கண்ணாடியும் பிம்பமும் -- ♡நீயும் நானும்

லட்டை பூந்தியாக்கினாலும் பிரியாத ஜீரா போல -- ♡நம் வாழ்க்கை

விரல்கள் மீட்டிய வீணையின் சங்கீத வடிவம் -- ♡மகள்/மகன

கூடெல்லாம் ஓட்டையிருந்தும் ஒழுகாத தேனை போல் -- ♡அன்பு /குடும்பம்


கருவாச்சி

எனக்காக பிறந்திருக்கும் என்னருமை என்னவளே,

கருப்பொருளாய் என்வாழ்வில் வரப்போவதும் நீதானே,

எனை வாழ்வில் வழிநடத்த கருக்கொண்டு பிறந்தவளே,

நீ எவ்வாறு இருப்பாய் என இந்நாள்வரை நானறியேன்,

என்வாழ்வில் கருப்பொருளாய் வந்து ஆட்சிசெயும் நீயாதலால்,

இந்நாளும், எந்நாளும் எனக்கு நீ கருவாச்சியே.


 

புதிய காதல் கவிதை

அதிகமாக பார்த்தவை

தேர்வு செய்யப்பட்டவை

கவிதை பிரிவுகள்

அப்பா

அறிவால் வழிநடத்தி புதுப்பாதை காட்டியவனே!

உனைபோல் அறிவுடையோனை அன்னையை தவிர நான் அறியேன்,


பார்ப்பவர்கள் வியப்பாரே அதிகாரியோ நீயென்று,

ஆனாலும் சாதாரண மானுடனாய் எந்நாளும் இருப்பவன்நீ,


ஞாலத்தில் எவ்விடத்திலும் கருணையோடு இருப்பவனே,

ஞாலத்திலும் உனக்குநிகர் யாவரும் நின்றத்திலை,


உலகில் நான் உயரும் போதல்லாம் எனக்கு கீழ் இருப்பவனே,

வழிதவறி, நெறிதவறி நான்விழும் நேரமெல்லாம் எனைத்தாங்கி பிடிப்பதற்க்கே,


உனை யாமாற்றி வென்றவரையும் நீவென்றாய் உன்குணத்தால்,

அவரது பணத்திற்கு சரிநிகராய் பெயாராடைந்தாய்,

நீ வாழ்ந்த வாழ்க்கையை நான் வாழ இயலவில்லை,

எவ்வாறு நானுரைப்பன் இயலாமையை இவ்வுலகிற்கு,


ஆராரோ ஆரிராரோ

ஆராரோ ஆரிராரோ கண்மணியே நீ உறங்கு,

என்றும் உடனிருப்பேன் பயமில்லாமல் நீ உறங்கு,


உனையடையவே வாழ்வினிலே இத்தனை நாள் காத்திருந்தேன்,

ஆதி முதல் அந்தமெல்லாம் என்வாழ்வில் நீதானே,


உனையடைய வாழ்விதனில் ஈரைந்துமாதம் தவமிருந்தேன்,

இறைவனே வந்தானோ என்தவத்தின் பிரதிபலனாய்,


நீயடைய உலகுண்டு எந்நாளும் அதை மறவாதே,

உன்னுடனே துணையிருப்பேன் நீ தோற்க்கும் போதெல்லாம்,


உன்கோலுசொலியை கேட்டுத்தான் என் இதயம் துடிக்குதடி,

நீ சுழன்று விளையாடுவதால் என்னுலகம் சுழுலுதடி,


நீவிடும் மூச்சினிலே என்னுயிர் இங்கு வாழுதடி,

நீ செய்யும் குறும்புனிலே என்பேச்சு திக்குதடி,

நீ நிலைபெற்று இருப்பதற்க்கே என்வாழ்வு உள்ளதடி,


இவையாவும் நீயடைய இவ்வுலகில் காத்திருக்க,

நீ எதற்கு அழுகிறாய் கண்மணியே நீஉறங்கு.