செவ்வாய், 31 மே, 2022

தமிழ் கவிதைகள்


காய்ந்த சருகை
மீட்டீடும்
வல்லமை உனக்கு
உண்டோ..?

விதை ஏற்கும்
சுழற்சி உனக்கு தெரியுமா..?

கேள்வி கணைகளுடன்
வந்தவள்..
அன்பின் ஆத்மார்த்தம்..

விடியா என் இரவுக்கெல்லாம்
தீப்பெட்டி
நின் காலை வாழ்த்தே!

பிறந்து சகிக்கணும்
வாழ்ந்து சுகிக்கணும்..

தொடரும் துன்பம்
தொடரும் கவலை..

தொடரும் வேலை பளு
தொடரும் அசதி..

தொடரும் அடிப்பட்ட காயம்
தொடரும் நிம்மதி இன்மை..

இவை அனைத்தும் அடித்தட்டு
மக்கள் சம்பாதிக்கும் பெரும்
சொத்துக்கள்!

அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை..

முன்னேற்றம் இல்லா முடிவில்லா பயணம்..

ஏழை சாதி!

💔💔💔

'ஒருவனை எவ்வாறு அறிந்துகொள்ளலாம்?

ஒருவனின் உண்மை இயல்பு..

எதைச் சொல்கிறான் என்பதில் இல்லை;
எதை மறைக்கிறான் என்பதில் உள்ளது!

அவனை அறிந்துகொள்ள
அவன் சொல்வதைக் கேளாதே;

எதைச் சொல்லாமல் மறைக்கிறான்
என்பதை உணர்க!


உயர்வான நட்பிற்கும் 
உண்மையான அன்பிற்கும் 
உருவம் அவசியமில்லை..

உணர்வுகள் போதும்!

☕️☕️🫖

ஹேப்பி மார்னிங்!


அனுதினமும்
உன் நினைவு நெரிசலுக்குள்
சிக்கி பிழைக்கிறது..

என் காதல் ! 

❤️❤️

சிலநேரங்களில்.. சகாரா...  
சிலநேரங்களில்.. நயாகரா...  
என்ன மாயம்.. செய்தென்னை...

மாற்றுகிறாய்??  
சொல்லிவிடு..  
அந்த வித்தையை...

கற்றுக்கொள்ள  
தட்சணையாக.. என்  
இதயம்... சமர்ப்பிக்கிறேன்...  
இமயமாக.. ஏற்றுக்கொள்!!!

நெஞ்சோடு பூ வளர்த்தேன்
உன்னிடம் தருவதற்கு,
நெடுநாளாய் நீ வரவில்லை..

விழி நீரில் 
என் கவிதை 
உனைத் தேடும்!

கனவெல்லாம் 
உன் முகமானதால் 
உறக்கத்தில் 
நான் பேசுவது 
உன் அருகாமையில்
எப்படி சேரும்?

நிழலாகும் மலர் 
உன் பார்வை பட்டால் பூக்கும் 
என் இதயத்தில்!

❤️❤️❤️

இனிய காலை!


காய்ந்த சருகை
மீட்டீடும்
வல்லமை உனக்கு
உண்டோ..?

விதை ஏற்கும்
சுழற்சி உனக்கு தெரியுமா..?

கேள்வி கணைகளுடன்
வந்தவள்..
அன்பின் ஆத்மார்த்தம்..

விடியா என் இரவுக்கெல்லாம்
தீப்பெட்டி
நின் காலை வாழ்த்தே!

பிறந்து சகிக்கணும்
வாழ்ந்து சுகிக்கணும்..

நான் ரெண்டாம் கெட்டான்!!

💜💙


என்னை  
நீ கை விட்டதால் 
நான் உள்ளேன்.. 

முதியோர்  
இல்லத்தில்,, 

உன்னை  
நான்  
கை விட்டு 
இருந்தால்  
நீ இருந்து  
இருப்பாய்... 

அனாதை இல்லத்தில்!,,.


நண்பர்கள் அனைவருக்கும்

      காலை வணக்கம்
            🌹 🌹


*_எதிர்பார்ப்புகளற்றவன்..._* 


காணாமல் போன கனவுகள் 
தோல்வியடைந்த எதிர்பார்ப்புகள் ...

நிறைவேறாத ஆவல்கள்
நிகழ முடியாத நிகழ்வுகள்....

முளைக்காத விதைகள்
புரியாத புதிர்கள்...

ஏமாற்றமே வாழ்வின்
ஆணி வேராக...

எல்லாத் திசைகளிலும் இருந்து
எனை தாக்கிச் சென்றன...

இப்பொழுதெல்லாம் எதையும்
ஏற்கும் பக்குவம் வந்து கொண்டது...

என் கனவுகள் பற்றி 
எச்சரிக்கையாக இருந்து கொள்ளகிறேன் ...

ஒரே மணலில் மீண்டும் மீண்டும் புதைய என் மூளை பழுதாகிவிடவில்லை...

சுயதோற்கடிப்பு சிறப்பாகவே
நிகழ்கிறது....

நான் எதிர்பார்ப்புகளற்றவன்...


தேவைகளையும்
தேடல்களையும்
பொறுத்தே..

மனம்
மகிழ்ச்சியும்,
மன நிறைவும்
பெறுகிறது!

😍😍

மதிய வணக்கம்!


என் இறுதிமூச்சுவரை உன்னை காதலிக்க வேண்டும்..

என்னுயிரே!

உன்னோடு நான்
கனவில் வாழ்வதால்..

உறக்கத்தை விரும்பி
பகலை வெறுக்கிறேன்..

உன்னுடன் உலாவரும்
கனவு மட்டும்..

எப்போதும் வளர்ந்துகொண்டே
இருக்கிறது..

ஒருதலை காதலில் சிறகடித்து
விண்ணில் பறந்த நான்!

❤️❤️❤️

காகித இதயம்~~~

உன் நினைவுகளை  
என் இதய கருவறையில்  
எண்ணங்களாளால் எழுதி  
பத்திரப்படுத்தியுள்ளேன்!!

படிக்காமலே புரியும்  
உனக்கு... என்...  
எண்ணங்களின் எழுத்து...  
காதலின்  பரிணாமங்களில்..

  
என்னின் ஒவ்வொரு  
அசைவிலும்... என்..  
எண்ணங்களை  உனக்கு  
புரிய வைக்க முயலுகிறேன்..

படி என் இதயத்தின்  
எண்ணங்களை...  
கசக்கி எறிய ....  
காகித இதயமல்ல...

காதலும் கனவும்..  
ரத்தமும் சதையுமாய்...  
நாளங்களால் ....  
பூட்டபட்ட இரும்பு இதயமடி!


நிலவும்.... நானும்..!!

யாரைத்தேடி அலைகிறாய்?  
நட்சத்திர பையன்களின் ..  
கண் சிமிட்டலில்...

மேகத்திரையிட்டு மறைந்து கொள்கிறாய்?  
நீ தேடும் உன் காதலன்  
உன்னைத்...  
தேடுவதறியாயோ?

நீ தேடி வருவதறியாமல்..  
உன்னைத்  
தேடி மேற்கே மறையும்  
அவனை...  
அறியாயோ?

மீண்டும் கிழக்கே உதயமாகி ... உன்னைத்  
தேட.. நீயோ ..  
மேற்கே தேடி ... ஓடுகிறாய்!

  
இந்த கண்ணாம்பூச்சி  
விளையாட்டில்..  
உலகத்திலோர் அற்புத நிகழ்வு...

எப்போதாவது சந்திக்கும் நிகழ்வு...  
சந்திரகிரகணமா?  
சூரிய கிரகணமா?

எது எப்படியோ?  
நிலவழகி... உன்னை  
நிலத்திலிருந்தே ..  
ரசிக்கும் ரசிகை நானடி!


பிழையென
   வாசித்த 
       கவிதன்னில்..

இழையென
   அசைந்தது
       நின் நினைவு..!!

ஏந்திக் கொள்ள தாய் ஒருவர் இருந்துவிட்டால்..

எட்டிப் பிடிக்க நிலவு ஒன்றும் தூரமில்லை!

❤️❤️

வாழ்க்கையை புரிந்து கொள்ள..

முதலில் பிடித்தவரின்
மெளனங்களை புரிந்து
கொள்ள வேண்டும்!

💗💗

ஆசைகளை நிறைவேற்றிக் 
கொள்ள வயது ஒரு 
தடையில்லை!

😍😍😍


சில நேரங்களில்
நாம் செய்யும் செயல்கள்
தவறானதோ என நம் 
மனது யோசிக்கும்..

சந்தேகமே வேண்டாம்..

அது நிச்சயமாக
தவறானதாகவே இருக்கும்..

நம் மனதின் சக்தி அப்படி!

🖤

சில காதல்கள் 
புனிதமானவை தான்..

கை கோர்த்த நாளிலிருந்து
மண்ணுக்குள் நுழையும் வரை..

அவர்களுடையதாகவே வாழ்ந்து விட்டுச் செல்வதில்!

💙💞💜

வேடிக்கை பார்ப்பவர்கள்
என்ன நினைத்தால் என்ன?

நகர்ந்து கொண்டே இருப்போம்..

நல்லதோ கெட்டதோ
நடப்பது நமக்குத் தான்!

💐💐💐

இனிய காலை வணக்கம்!

முகமூடிகளற்ற
முகங்கள் 
ஏனோ
பலருக்கும்
பிடிப்பதில்லை!

🤡🤡


ஒரு வார்த்தை என்ன செய்யும்?

கடுப்பை கிளப்பும்
கோபத்தை கொட்டும்
இஷ்டத்துக்கு திட்டும்
புலம்ப வைக்கும்
ஓவரா பொங்கும்
பதிலுக்கு பேசும்
எதிரிடையான அத்தனையும் செய்யும்...

இது அத்தனையும் பார்த்து
நக்கலாய் சிரிக்கவும் வைக்கும்..

அவ்வளவே .. !!

🤔🤭🤫🤐



யாரோ
ஒருவருடைய
வாழ்க்கையில்

சிரிப்பைக்
கொண்டு
வந்தால்

நீயும் 
கடவுளே!!!

மகிழ்வித்து
மகிழ்ந்திரு.

உற்சாகமான
காலை வணக்கம்.


கொல்லி மலைப் பேயே..

கொல்லாமல் கொல்லும் நோயே..

நில்லாமல் செல்லும் நீயே..

தள்ளாயே தாழ்ந்தே நெஞ்சின் நோயை! 

💛💛💛

யாவுமாய் இருந்து, 
யாரோவாகி போகும் ஓர் உறவைதான்..

உரிமை கொண்டாடவும் முடியாமல், 
உதறி தள்ளவும் மனமில்லாமல்..

ஏதோ கடந்துபோகும்மென கடமைக்கென 
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

😢😢


கள்ளமிலாச் சிரிப்பு,
கடற்கரையில் சிரிப்பு..

கடல் அலைகளின் ஓசையை,
கபளிகரம் செய்த சிரிப்பு..

கடல் காற்றினிலே கரைந்த,
அட்டகாகமான சிரிப்பு..

காரணம் தெரியாத சிரிப்பு,
இந்தப் பெண்கள் 
மனதிற்கு மட்டுமே புரிந்த காரணச் சிரிப்பு!!

😍😍😍


மனிதனின் மிருகத்தனத்தை புரிந்துகொண்ட மனிதர்கள்..

மிருகத்திடம் மனிதத்தை தேடுகிறார்கள்!

❤️🧡

என் வெற்றிடங்களை நிரப்ப முயலாதீர்கள்..

நீங்கள் சென்ற பின்பு அது இன்னும் பெரிதாகும்!

❤️‍🔥❤️‍🔥


*தையல்* அவள் மீது
          என் மனது

*மையல்* கொண்ட
        நாள் முதல்

*கையில்* உள்ள
          வெண்ணெய்

*வெய்யில்* பட்டு
    ‌ உருகுவது போல்

*பொய்யில்* தான்
        புரளுது பொழுது

*மெய்யில்* நேசம்
      உள்ளதடி எனக்கு

விரைந்து வந்து விடு
மனதைக் தந்து விடு
🌷🌷🌷🌷🌷🌷🌷

கட்டியணைக்கும்
போதெல்லாம்..

காட்டு தீயாய்
பரவுகின்றது
கட்டுக்கடங்காமல்
எனக்குள்..

அவன் காதல்!

❤️🔥

கடைசி
   மரமும்
வெட்டிய பின்

கடைசி
  சொட்டுநீரும்
தீர்ந்தபின்

கடைசி
  காற்றும்
நஞ்சானபின்

  கார்ப்ரேட்
     முதலாளி தரும்
  சம்பளத்தை
     வைத்துக்கொண்டு

என்ன செய்யப்
    போகிறாய். தமிழா??
🌳🌳🌳🌳🌳🌳🌳


இதயத்திற்கும் 
பசியுண்டு..

நினைவுகளை 
உண்பதால்!

💗💗

வெறுமையென்பது வேறொன்றுமில்லை..

என்றோ கழன்ற சட்டை பட்டன் 
இன்னமும் தைக்கப்படாதிருப்பது..

என்றோ இடறிய கால் நக இடுக்கில் 
இன்னமும் இரத்தம் கசிந்துகொண்டிருப்பது! 

❤️‍🩹❤️‍🩹


நேசமுடன் பூத்திருப்பாள்
நெஞ்சில் தேன் மழையாய்..

தோள் ஏறும் மழலைக்கு
அவள் மரமாய்..

கன்னத்தில் முத்தம் பெற்ற மகிழ்ச்சியில்
குதூகலத்தில்
மழையில் ஆடும் மரமாய்..

விழுதுகள் தாங்கிய மரம் விழுவதில்லை!

தாய்மை அவள்
விழுகளை தாங்கும்
மரம்
உண்மையில் அவள்தான்..

போதி மரம்!!

💚❤️💙


தமிழ் கவிதைகள்

உன் திறமையில் தான்
ஒளிந்திருக்கிறது சந்தோஷம்...

உன்னுடைய ஆற்றல்களை
தடை போட்டு முடக்காதே...

இன்னோரு சந்தர்ப்பம்
இயற்கை தரப்போவதில்லை...

எண்ணங்களை செயல்படுத்த
இன்றே முயற்சிகளை எடு...

உறவில் உரிமையை
கொடுங்கள்....!!

வாழ்க்கையில் நம்பிக்கையை
கொடுங்கள்....!!

அன்பில் உண்மையை
கொடுங்கள்...!!

நட்பில் நேர்மையை
கொடுங்கள்....!!

சந்தோஷம் தானாக
அமையும்....

காலைநேர பூங்குயில் கவிதை பாட அழைக்கிறதே!!

காலைப்பனித்துளி  
புல் வெளியில்  
கோலம் போடுதே!!

வானம்பாடி  
பறவைகள் எல்லாம்கூட்டமாக செல்லுதே!

காலைக்கதிரவன் வாசல்வந்து கதவைத்தட்டி அழைக்கிறதே ! 

 சோம்பல்  
முறித்து சுறுச்சுறுப்பாய்,, எழுந்திருங்கள்!!!..


உயரிய 
எண்ணங்களும்

நல்ல 
சிந்தனைகளும் 
இல்லாமல் 

எத்தனை
ஆலயங்களுக்கு
சென்று 
வழிபட்டாலும் 

பரிகாரங்கள்
செய்தாலும்

படையல்கள்
போட்டாலும் 

பூசைகள் 
செய்தாலும் 

பாவங்களும் 
நீங்காது 

படைத்தவனும்
இரங்கமாட்டான்

கருப்பொருள் 
அறிக 

மனமது
செம்மையானால்

நடப்பதெல்லாம் 
நன்மையாகும்.


 *வாழ்க வளர்க வளமுடன்*


யாரும் கவிதை எழுதுவதில்லை..

கவிதையென்று 
ஏதோ எழுதுகிறார்கள்;
காலப்போக்கில் மெருகேறி 
கவிதையாகி விடுகிறது!

உயரத்தில் ஏறி நின்றால்
உலகமே உனக்கு தெரியும்,,
ஆனால்
உயர உயர வளர்ந்தால் மட்டுமே
உலகத்திற்கு நீ தெரிவாய்!!.. ☘️


உபசரிப்பில் மனைவி
அன்னை போல் ஆகிறாள்
பராமரிப்பில் கணவன்
தந்தை போலாகிறான 
வாழ்க்கை விளையாட்டில்
*வேசம் மாறினாலும்*
*பாசம்* *குறைவதில்லை*🟢🔴

🌴🌴🌴


*மத்தவங்களுக்கு பிடிச்ச மாதிரி* 

*பளபளப்பா வாழ்றத விட*

*நமக்கு பிடிச்ச மாதிரி*

*கலகலப்பா வாழனும்* 

*அதுதான் வாழ்க்கை😎*



உங்கள் பார்வை நல்லதாக இருந்தால் உலகம் அழகாகத் தெரியும்...*

*உங்கள் வார்த்தைகள் நல்லதாக இருந்தால்* *உலகத்திற்கு* 
*நீங்கள்* *அழகாக தெரிவீர்கள்...💐💐*

மனிதரின்
பலவீனம்
வீம்பு என்ற பிடிவாதம்

வீம்பு மனித இயல்பு
ஏமாற்றத்தின் வெளிப்பாடு

வீம்பு
தனிமைப்படுத்தி விடும்

உங்களது
நிம்மதி மகிழ்ச்சியைக் கெடுக்கும்

காலம் கடந்த ஞானோதயம்
வீம்பினால் ஏற்படும்
இழப்புகளை ஈடு செய்வதில்லை

*வேண்டாமே வீம்பு*

காலங்கள் இனியது....!

காத்திருப்பில் கரையும்
கண்களுக்குத் தெரியும்
காலத்தின் கடமையிலும்
கற்பனைகள் விரியும்..

பூத்திருப்பில் உலரும்
பூக்களுக்குத் தெரியும்
பூமியின் புல்வெளியில்
பூட்டிவைக்க முனையும்..

விடியல் வருமென
விழிகள் ஏங்கினால்
விடையும் தெரியா 
கேள்வியே பதிலாகும்..

பலவும் வாழ்வில்
பார்த்து வந்திடில்
பழகிய மனமும் 
வாழ்வின் புதிராகும்..

விட்டுக் கொடுப்பதில்
வித்தை ஏதுமில்லை
கற்றக் கொடுத்திட
கல்வியும் தேவையில்லை
தானம் தந்திட தனமும் பாரிலில்லை..
வானம் என்றும் தொடாத தூரமில்லை..

காத்திரு விழிகள் பூத்திரு
தோற்றிடு தினமும் வீழ்ந்திடு
வென்றிடு எங்கும் சென்றிடு
கற்றிடு வளங்கள் பெற்றிடு
இதுவே உலகின் ஆரம்பம்
இனிதாம் வாழ்வின் ஆனந்தம்..

பிரச்சினை
கவுண்டமணியாக இருந்தால்
வாழ்க்கை எதிர்பாராத
நேரத்தில் அடி வாங்கும்
செந்திலாகத் தான் பயணிக்கிறது

தவறான பாதைகள் மிகவும்..
அழகானதாகவும்

சரியான பாதைகள் கொஞ்சம்
கரடுமுரடானதாகவே இருக்கும்..

நிஜத்தில் நடக்க வேண்டும்
என்று நினைப்பதெல்லாம்
கனவில் நடக்கிறது
கனவில் கூட
நடக்கக் கூடாது
என்று நினைப்தெல்லாம்
நிஜத்தில் நடக்கிறது

அறியாமல் செய்த தவறை
மன்னிக்க தெரியாத
மனிதர்களிடம் அறிந்து
செய்த தவறுக்கு
மன்னிப்பை எதிர்பார்ப்பது
முட்டாள்தனம்


தனக்கு உபயோகபடுமென்றே அடுத்தவனுக்கு உபகாரம் செய்கின்றான்...

அதற்கு பெயர் பரிகாரம் என்கின்றான்...

பரிகாரம் என்பது அதுவல்ல
நாம் செய்த பாவங்கள் நாமே உணர்வதே மிகச்சிறந்த பரிகாரமாகும்....


முயற்சி செய்வதில்
தாமதம் காட்டாதே..

முயற்சி செய்வதால்
ஒரு நாளும் 
வீணாகுவது இல்லை!

பெண் மயில் தோகை
விறிக்கிறது..

சிக்கிக்கொண்டவன்
யாரோ..?

#நீ_கவிதைகளாய்...!
_______________

கதவுகளின் ஓரம்
தாழுக்கும் வெட்கம்
அவளுக்கும் தான்.....

மேலும்
கீழும்
தாழ்ப்பாளின்
ஏக்கங்கள்....!

சிதறிய மல்லிகையில்
அவள் விரல் படாத
வாசனை....!

தழும்பிய
பால் செம்பில்
இனிப்புடன்
காமத்துப்பால்
காமத்திற்கு
காமம் ஊட்ட...!

அவளுக்கு
அவனும்
அனைத்திற்கும்
அவனும்...!

சொட்டிவிடாத
தேனை
தேடுகிறான்
இதழில்
மச்சமிட்ட காரணத்தினால்
கண்பட்டது
முழுதாய்.....!

இருளுக்கு
என்ன தெரியும்
இவன்
இனி அறியும்
இருட்சுவைகளை....!

மேடு
பள்ளங்களில்
ஆற்று வெள்ளமாய்
ஆசை
கரை தேடி
சிறு கடி மட்டுமே மிச்சம்....
விரல்களுக்கு

அறுசுவைகளை
கண்டுவிட்ட அவனுக்கு
எழாம் சுவைக்கு
பெயர் தெரியவில்லை....
நாவோடு
சிறு சுவையரங்கம்....


உன் எல்லை எதுவென்று
உன் மனதுக்கு தெரியும் போது
அடுத்தவர்களின் விமர்சனத்தைபற்றிய
கவலை உனக்கெதெற்கு

யாரையும் 
நுகராமல் 

ரசிப்பதிலேயே 
நகர்கிறது...

இந்த 
தனிமை....


நினைவுகளில் 
நெருங்கியே இருக்கிறார்கள்,

நிஜங்களில் 
யாரோவாய் போனவர்கள்....


சொற்ப ஆசைகளில் 
தொலைந்து போகின்றன...

நிறைவாய் இருக்க வேண்டிய நிம்"மதி"கள்...!!

எதிர்ப்பது என 
முடிவெடுத்த பின்,

எதிரில் நிற்பது,
 
எவனா இருந்தால் என்னா..

எமனா இருந்தால் என்னா....


தடைகள் என்பது தற்காலிகமானது

அதை தகர்க்கும் மனம் 
என்றும் நிரந்தரமானது.......!!


தூரமாக 
நினைக்காதே..

அது உன்னாலும் முடியாது 
என்னாலும் முடியாது..

புரியுதா?

💜 காதலோடு 💜

ஒரு தவறை மன்னிப்பது
விஷயமல்ல..

ஆனால் அந்தத் தவறு
திருத்தப்பட்டால் தான்..

மன்னிப்பிற்கு ஒரு அர்த்தம் இருக்கும்!

🌸🌸🌸


முடங்கிக் கிடக்கும்  
பறவைக்கு..

சிறை கதவுகள் 
திறந்து இருந்தாலென்ன..

மூடி இருந்தாலென்ன!!


மேகத்திரையில் 
விசித்திரம் !?

மின்னல்கள் ரெண்டு
இடமாறுகிறது..

அவள் கண்கள்!

😍😍


நம் உதட்டில் இருக்கும் 
சிரிப்பின் மதிப்பை விட ....

நம்மால் மற்றவரின் உதட்டில் இருக்கும் சிரிப்பு விலை மதிப்பற்றது ...

சிரிக்க வையுங்கள் 
ஏழையின் சிரிப்பில் 
இறைவனை காண்போம் ...


எத்தனை கவிஞர்களுக்கு இந்த வெண்மதி காதலியாக இருக்கிறாள் என்று தெரியவில்லை!

அவள் ❤️


இரவு வரைந்த ஓவியமே
வெண்ணிலவை மிஞ்சும் காவியமே
கருமையான காரிருள் கூட கலையாகுமே
பெண்ணே உந்தன் பார்வையால்..


மலரே...
மார்கழிமாத மாக்கோலம்
உன்வாசல் எங்கும் பூ கோலம்...

எனக்குள்
மணக்கோலம் போட்டு...

காத்திருக்கிறேன்
உன்னை நினைத்து...

நீ வாசலில் வைத்த
பூசணி பூ வாடிவிடுமடி...

உன்னை சுமக்கும் என்
இதயத்தை நீ வாட வைப்பது ஏனடி...

உன்னாலே மாகோலம்
போடா கற்று கொண்டேன்...

உன் மனதில்
குடியேற
வழி சொல்லடி...

மாக்கோலத்தில் விழுந்த
சில
மழைதுளிக்காக வருந்துகிறாய்...

உன்னை நினைத்து தினம்
தினம் வெந்நீரில் நனையும்...

என் இதயத்தை நீ
எப்போது உணர்வாய் கண்ணே...
நான் காத்திருக்கிறேன்
நீயும் வந்துவிடடி என்னருகில்.....

பணமா பாசமான்னு கேட்டா எல்லோரும் பாசமுன்னு தான் சொல்லுவாங்க.....

ஆனால்....

அந்த பாசத்தோட அளவை நிர்ணயம் செய்வதே இங்கே பணம் தான்......!!


உப்புமா சமைப்பது ஒரு பாவச்செயல்..

உப்புமா சமைப்பது பெருங்குற்றம்..

உப்புமா சமைப்பது ஒரு மனிதத் தன்மையற்ற செயல்!

😭💔💔🚶🚶

அனுதினமும்
உன் நினைவு நெரிசலுக்குள்
சிக்கி பிழைக்கிறது..

என் காதல் ! 

❤️❤️


உன்னோடு இருந்த நினைவுகளோடு
வாழ்கிறேன் நானடி !
உன் இருவிழி காண
விரும்பினேன் நானடி !!
உன் சிரிப்பினில்
சிதைந்தவன் நானடி !!!
உன் பிரிவினில்
கறைந்தவன் நானடி.


என்னழகே...

வரலாற்றை
புரட்டி பார்த்தேன்...

பலரின் ரத்தத்தில் உருவான
வரலாறு மன்னரின் வரலாறு...

காதலை
புரட்டி பார்த்தேன்...

பலரின் கல்லறையும்
கண்ணீரும் கலந்த வரலாறு...

கண்ணீரையும் வரவேற்க தினம்
பூத்து கொண்டுதான் இருக்கிறது...

காதல்
மலர் பலரின் இதயத்தில்...

உன் மீதான காதல்
எனக்குள்ளும் பூத்தது...

என் காதல் பூத்து
குலுங்கும்
நந்தவனமா இல்லை...

கண்ணீர்
கலந்த வரலாறா...

நீ சொல்லும்
வார்த்தையில் தானடி உள்ளது...

என்
காதலின் வரலாறு.....

தனிமையை போக்கிக்கொள்ள மற்றவர்களை பயன்படுத்தாதே..

தனிமையே ஆகச் சிறந்த துணை தான்! 


இப்போதெல்லாம் அடக்கத்தை விட ஆரவாரத்திற்கே அதிகம் மதிப்பும் மரியாதையும்..

சத்தம் இன்றி இருந்தால் சமுத்திரத்தை கூட குட்டை என்று சொல்லும் உலகம் இது!

😢😢😢