செவ்வாய், 31 மே, 2022

தமிழ் கவிதைகள்


காய்ந்த சருகை
மீட்டீடும்
வல்லமை உனக்கு
உண்டோ..?

விதை ஏற்கும்
சுழற்சி உனக்கு தெரியுமா..?

கேள்வி கணைகளுடன்
வந்தவள்..
அன்பின் ஆத்மார்த்தம்..

விடியா என் இரவுக்கெல்லாம்
தீப்பெட்டி
நின் காலை வாழ்த்தே!

பிறந்து சகிக்கணும்
வாழ்ந்து சுகிக்கணும்..

தொடரும் துன்பம்
தொடரும் கவலை..

தொடரும் வேலை பளு
தொடரும் அசதி..

தொடரும் அடிப்பட்ட காயம்
தொடரும் நிம்மதி இன்மை..

இவை அனைத்தும் அடித்தட்டு
மக்கள் சம்பாதிக்கும் பெரும்
சொத்துக்கள்!

அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை..

முன்னேற்றம் இல்லா முடிவில்லா பயணம்..

ஏழை சாதி!

💔💔💔

'ஒருவனை எவ்வாறு அறிந்துகொள்ளலாம்?

ஒருவனின் உண்மை இயல்பு..

எதைச் சொல்கிறான் என்பதில் இல்லை;
எதை மறைக்கிறான் என்பதில் உள்ளது!

அவனை அறிந்துகொள்ள
அவன் சொல்வதைக் கேளாதே;

எதைச் சொல்லாமல் மறைக்கிறான்
என்பதை உணர்க!


உயர்வான நட்பிற்கும் 
உண்மையான அன்பிற்கும் 
உருவம் அவசியமில்லை..

உணர்வுகள் போதும்!

☕️☕️🫖

ஹேப்பி மார்னிங்!


அனுதினமும்
உன் நினைவு நெரிசலுக்குள்
சிக்கி பிழைக்கிறது..

என் காதல் ! 

❤️❤️

சிலநேரங்களில்.. சகாரா...  
சிலநேரங்களில்.. நயாகரா...  
என்ன மாயம்.. செய்தென்னை...

மாற்றுகிறாய்??  
சொல்லிவிடு..  
அந்த வித்தையை...

கற்றுக்கொள்ள  
தட்சணையாக.. என்  
இதயம்... சமர்ப்பிக்கிறேன்...  
இமயமாக.. ஏற்றுக்கொள்!!!

நெஞ்சோடு பூ வளர்த்தேன்
உன்னிடம் தருவதற்கு,
நெடுநாளாய் நீ வரவில்லை..

விழி நீரில் 
என் கவிதை 
உனைத் தேடும்!

கனவெல்லாம் 
உன் முகமானதால் 
உறக்கத்தில் 
நான் பேசுவது 
உன் அருகாமையில்
எப்படி சேரும்?

நிழலாகும் மலர் 
உன் பார்வை பட்டால் பூக்கும் 
என் இதயத்தில்!

❤️❤️❤️

இனிய காலை!


காய்ந்த சருகை
மீட்டீடும்
வல்லமை உனக்கு
உண்டோ..?

விதை ஏற்கும்
சுழற்சி உனக்கு தெரியுமா..?

கேள்வி கணைகளுடன்
வந்தவள்..
அன்பின் ஆத்மார்த்தம்..

விடியா என் இரவுக்கெல்லாம்
தீப்பெட்டி
நின் காலை வாழ்த்தே!

பிறந்து சகிக்கணும்
வாழ்ந்து சுகிக்கணும்..

நான் ரெண்டாம் கெட்டான்!!

💜💙


என்னை  
நீ கை விட்டதால் 
நான் உள்ளேன்.. 

முதியோர்  
இல்லத்தில்,, 

உன்னை  
நான்  
கை விட்டு 
இருந்தால்  
நீ இருந்து  
இருப்பாய்... 

அனாதை இல்லத்தில்!,,.


நண்பர்கள் அனைவருக்கும்

      காலை வணக்கம்
            🌹 🌹


*_எதிர்பார்ப்புகளற்றவன்..._* 


காணாமல் போன கனவுகள் 
தோல்வியடைந்த எதிர்பார்ப்புகள் ...

நிறைவேறாத ஆவல்கள்
நிகழ முடியாத நிகழ்வுகள்....

முளைக்காத விதைகள்
புரியாத புதிர்கள்...

ஏமாற்றமே வாழ்வின்
ஆணி வேராக...

எல்லாத் திசைகளிலும் இருந்து
எனை தாக்கிச் சென்றன...

இப்பொழுதெல்லாம் எதையும்
ஏற்கும் பக்குவம் வந்து கொண்டது...

என் கனவுகள் பற்றி 
எச்சரிக்கையாக இருந்து கொள்ளகிறேன் ...

ஒரே மணலில் மீண்டும் மீண்டும் புதைய என் மூளை பழுதாகிவிடவில்லை...

சுயதோற்கடிப்பு சிறப்பாகவே
நிகழ்கிறது....

நான் எதிர்பார்ப்புகளற்றவன்...


தேவைகளையும்
தேடல்களையும்
பொறுத்தே..

மனம்
மகிழ்ச்சியும்,
மன நிறைவும்
பெறுகிறது!

😍😍

மதிய வணக்கம்!


என் இறுதிமூச்சுவரை உன்னை காதலிக்க வேண்டும்..

என்னுயிரே!

உன்னோடு நான்
கனவில் வாழ்வதால்..

உறக்கத்தை விரும்பி
பகலை வெறுக்கிறேன்..

உன்னுடன் உலாவரும்
கனவு மட்டும்..

எப்போதும் வளர்ந்துகொண்டே
இருக்கிறது..

ஒருதலை காதலில் சிறகடித்து
விண்ணில் பறந்த நான்!

❤️❤️❤️

காகித இதயம்~~~

உன் நினைவுகளை  
என் இதய கருவறையில்  
எண்ணங்களாளால் எழுதி  
பத்திரப்படுத்தியுள்ளேன்!!

படிக்காமலே புரியும்  
உனக்கு... என்...  
எண்ணங்களின் எழுத்து...  
காதலின்  பரிணாமங்களில்..

  
என்னின் ஒவ்வொரு  
அசைவிலும்... என்..  
எண்ணங்களை  உனக்கு  
புரிய வைக்க முயலுகிறேன்..

படி என் இதயத்தின்  
எண்ணங்களை...  
கசக்கி எறிய ....  
காகித இதயமல்ல...

காதலும் கனவும்..  
ரத்தமும் சதையுமாய்...  
நாளங்களால் ....  
பூட்டபட்ட இரும்பு இதயமடி!


நிலவும்.... நானும்..!!

யாரைத்தேடி அலைகிறாய்?  
நட்சத்திர பையன்களின் ..  
கண் சிமிட்டலில்...

மேகத்திரையிட்டு மறைந்து கொள்கிறாய்?  
நீ தேடும் உன் காதலன்  
உன்னைத்...  
தேடுவதறியாயோ?

நீ தேடி வருவதறியாமல்..  
உன்னைத்  
தேடி மேற்கே மறையும்  
அவனை...  
அறியாயோ?

மீண்டும் கிழக்கே உதயமாகி ... உன்னைத்  
தேட.. நீயோ ..  
மேற்கே தேடி ... ஓடுகிறாய்!

  
இந்த கண்ணாம்பூச்சி  
விளையாட்டில்..  
உலகத்திலோர் அற்புத நிகழ்வு...

எப்போதாவது சந்திக்கும் நிகழ்வு...  
சந்திரகிரகணமா?  
சூரிய கிரகணமா?

எது எப்படியோ?  
நிலவழகி... உன்னை  
நிலத்திலிருந்தே ..  
ரசிக்கும் ரசிகை நானடி!


பிழையென
   வாசித்த 
       கவிதன்னில்..

இழையென
   அசைந்தது
       நின் நினைவு..!!

ஏந்திக் கொள்ள தாய் ஒருவர் இருந்துவிட்டால்..

எட்டிப் பிடிக்க நிலவு ஒன்றும் தூரமில்லை!

❤️❤️

வாழ்க்கையை புரிந்து கொள்ள..

முதலில் பிடித்தவரின்
மெளனங்களை புரிந்து
கொள்ள வேண்டும்!

💗💗

ஆசைகளை நிறைவேற்றிக் 
கொள்ள வயது ஒரு 
தடையில்லை!

😍😍😍


சில நேரங்களில்
நாம் செய்யும் செயல்கள்
தவறானதோ என நம் 
மனது யோசிக்கும்..

சந்தேகமே வேண்டாம்..

அது நிச்சயமாக
தவறானதாகவே இருக்கும்..

நம் மனதின் சக்தி அப்படி!

🖤

சில காதல்கள் 
புனிதமானவை தான்..

கை கோர்த்த நாளிலிருந்து
மண்ணுக்குள் நுழையும் வரை..

அவர்களுடையதாகவே வாழ்ந்து விட்டுச் செல்வதில்!

💙💞💜

வேடிக்கை பார்ப்பவர்கள்
என்ன நினைத்தால் என்ன?

நகர்ந்து கொண்டே இருப்போம்..

நல்லதோ கெட்டதோ
நடப்பது நமக்குத் தான்!

💐💐💐

இனிய காலை வணக்கம்!

முகமூடிகளற்ற
முகங்கள் 
ஏனோ
பலருக்கும்
பிடிப்பதில்லை!

🤡🤡


ஒரு வார்த்தை என்ன செய்யும்?

கடுப்பை கிளப்பும்
கோபத்தை கொட்டும்
இஷ்டத்துக்கு திட்டும்
புலம்ப வைக்கும்
ஓவரா பொங்கும்
பதிலுக்கு பேசும்
எதிரிடையான அத்தனையும் செய்யும்...

இது அத்தனையும் பார்த்து
நக்கலாய் சிரிக்கவும் வைக்கும்..

அவ்வளவே .. !!

🤔🤭🤫🤐



யாரோ
ஒருவருடைய
வாழ்க்கையில்

சிரிப்பைக்
கொண்டு
வந்தால்

நீயும் 
கடவுளே!!!

மகிழ்வித்து
மகிழ்ந்திரு.

உற்சாகமான
காலை வணக்கம்.


கொல்லி மலைப் பேயே..

கொல்லாமல் கொல்லும் நோயே..

நில்லாமல் செல்லும் நீயே..

தள்ளாயே தாழ்ந்தே நெஞ்சின் நோயை! 

💛💛💛

யாவுமாய் இருந்து, 
யாரோவாகி போகும் ஓர் உறவைதான்..

உரிமை கொண்டாடவும் முடியாமல், 
உதறி தள்ளவும் மனமில்லாமல்..

ஏதோ கடந்துபோகும்மென கடமைக்கென 
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

😢😢


கள்ளமிலாச் சிரிப்பு,
கடற்கரையில் சிரிப்பு..

கடல் அலைகளின் ஓசையை,
கபளிகரம் செய்த சிரிப்பு..

கடல் காற்றினிலே கரைந்த,
அட்டகாகமான சிரிப்பு..

காரணம் தெரியாத சிரிப்பு,
இந்தப் பெண்கள் 
மனதிற்கு மட்டுமே புரிந்த காரணச் சிரிப்பு!!

😍😍😍


மனிதனின் மிருகத்தனத்தை புரிந்துகொண்ட மனிதர்கள்..

மிருகத்திடம் மனிதத்தை தேடுகிறார்கள்!

❤️🧡

என் வெற்றிடங்களை நிரப்ப முயலாதீர்கள்..

நீங்கள் சென்ற பின்பு அது இன்னும் பெரிதாகும்!

❤️‍🔥❤️‍🔥


*தையல்* அவள் மீது
          என் மனது

*மையல்* கொண்ட
        நாள் முதல்

*கையில்* உள்ள
          வெண்ணெய்

*வெய்யில்* பட்டு
    ‌ உருகுவது போல்

*பொய்யில்* தான்
        புரளுது பொழுது

*மெய்யில்* நேசம்
      உள்ளதடி எனக்கு

விரைந்து வந்து விடு
மனதைக் தந்து விடு
🌷🌷🌷🌷🌷🌷🌷

கட்டியணைக்கும்
போதெல்லாம்..

காட்டு தீயாய்
பரவுகின்றது
கட்டுக்கடங்காமல்
எனக்குள்..

அவன் காதல்!

❤️🔥

கடைசி
   மரமும்
வெட்டிய பின்

கடைசி
  சொட்டுநீரும்
தீர்ந்தபின்

கடைசி
  காற்றும்
நஞ்சானபின்

  கார்ப்ரேட்
     முதலாளி தரும்
  சம்பளத்தை
     வைத்துக்கொண்டு

என்ன செய்யப்
    போகிறாய். தமிழா??
🌳🌳🌳🌳🌳🌳🌳


இதயத்திற்கும் 
பசியுண்டு..

நினைவுகளை 
உண்பதால்!

💗💗

வெறுமையென்பது வேறொன்றுமில்லை..

என்றோ கழன்ற சட்டை பட்டன் 
இன்னமும் தைக்கப்படாதிருப்பது..

என்றோ இடறிய கால் நக இடுக்கில் 
இன்னமும் இரத்தம் கசிந்துகொண்டிருப்பது! 

❤️‍🩹❤️‍🩹


நேசமுடன் பூத்திருப்பாள்
நெஞ்சில் தேன் மழையாய்..

தோள் ஏறும் மழலைக்கு
அவள் மரமாய்..

கன்னத்தில் முத்தம் பெற்ற மகிழ்ச்சியில்
குதூகலத்தில்
மழையில் ஆடும் மரமாய்..

விழுதுகள் தாங்கிய மரம் விழுவதில்லை!

தாய்மை அவள்
விழுகளை தாங்கும்
மரம்
உண்மையில் அவள்தான்..

போதி மரம்!!

💚❤️💙


Previous Post
Next Post

0 Comments: