புதன், 1 ஜூன், 2022

தமிழ் கவிதைகள்

🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

 Me to life 🤨

நான் ஒன்னு 
நினைக்க..

அது வேறஒன்னு 
நடக்க..

ஒரே கூத்தா இருக்கும்!!

 😼😼

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
'நான் இருக்கிறேன்'..

இந்த வார்த்தையின் அர்த்தம்
எல்லோருக்கும் புரியாது..

'இழந்துவிட்டு'
நிற்பவர்களுக்கே புரியும்..

அர்த்தம் மட்டுமல்ல..
வலியும் கூட!

💔💔

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

💗என்னை தாலாட்டு பாடி
💗தூங்க வைக்க
💗தவறியதே இல்லை
💗நீயும் உன் காதலும்!

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

பிடித்த ஒன்றின் மீதான 
காத்திருப்பு..

என்றாவது 
பிடித்து விடாதா என்பதே!

💜
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

வேண்டாம் என ஒருவர்
ஒதுங்குவதற்கும்..

வேண்டும் என ஒருவர்
நெருங்குவதற்கும்..

நாம் தான்
காரணமாக இருப்போம்!

✌🏻😉
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

விழுந்து எழு..

அப்போதுதான் 
நீ கீழே விழ காத்திருந்தவன் 
யார்..

உன்னை தூக்கிவிட கை கொடுப்பவன் 
யாரென்று தெரியும்!


இனிய காலை!

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

இதயம் ஒன்றே!
       
ஆனாலும்
அதை பல முறை
தொலைக்கின்றேன்..

ஏனோ உன்னிடத்தில்!

❤️
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

நாம் தவிர்த்தது..
     
நம்மை தவிர்க்கும்
போதுதான் புரிகிறது..
                         
வலிகள்!

❤️
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

வேறு யாரிடமும் இல்லாத
தனித்தன்மை உன்னிடம்
உள்ளது என்று நம்பு..

ஏனென்றால் 
உன்னைப்போல் வேறொரு நகல் 
இந்த உலகில் கிடையாது..

உன்னை போல் நீ மட்டும்!

💐💐💐

இனிய காலை!
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

நம்ம Best Friend..

நம்ம கூட மட்டும் Close-ஆ இருக்கனும்னு Expect பண்ணுறது தப்பா?

😩😩😩

சொல்லுங்க நண்பர்களே..
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

நதியோர நாணல்கள்!

நதியின் வெள்ளோட்டத்தை..  
அனுசரித்தே.. நாணல்கள்..  
போக்குகாட்டியும்..  
தலையசைத்தும்..  
தலைகுனிந்தும்..

வாழ்க்கை வெள்ளோட்டத்தில்.  
நதியோர நாணல்களாய்..  
பெண்கள்!!!!  
அனுசரிப்பதும்.. அடங்குவதும்  
அடிமைத்தனமல்ல..

விரும்பியே பூட்டிக்கொள்ளும்  
பூவிலங்கே...  
பாதுகாப்பே...  
ஆக்கவும்..அழிக்கவும்..  
அவளால்..முடியும்..

ஆக்கமும்..ஊக்கமும்..போதும்  
ஆயிரம்..யானைபலம்கூடும்..  
ஆடவருக்கு...

கரையோர அரிப்பைதடுக்கும்  
அரணாக....  
நதியோரநாணலென...  
வாழ்க்கைபயணத்தில்..  
பெண்களின்..பங்கு..  
பெரும்பங்குதானே???

ஓவியமும்  ... நானே..  
🦚

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
நர்த்தனமாடிடும்.. உன் ..  
விழி மொழிகள்...

எத்தனை எத்தனை கூறடி!

என் சிந்தையோ .. கிறங்குதடி;

ஆழ் மனதில்...  
பதிந்ததென்னவோ~~  
ஒரு மொழி.. அது...  
அது.. உன்  
காதல் மொழியடி!!
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

திறந்து வைக்கிறேன் ....  
என் இதயகோவிலை~~~

தெய்வமாக நீ குடியமர!!

என் இதயக் கருவறையில்;  
எண்ணங்களால் அபிஷேகம்;

கவிதையை பாமாலையாக்கி  
பூமாலை ....  
சூட்டுகிறேன்~~  
வா~~ நடைசார்த்துவதற்குள்~~

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

எரி மலையும்  குளிரும்  
பூங்காற்றின் சுவாசத்தினால்  
மனித  எண்ணங்கள்  
குளிர எந்த  பூங்காற்று  
துணையாகுமோ  
உலக எட்டாவது அதிசயம்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

கணத்தில் தோன்றி  
நிறங்கள் பல காட்டி  
வானின் அழகு கூட்டி  
வாழ்வின்  நிலை காட்டும்  
அழகு  வானவில்.....

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

வெட்டப்படும் பிள்ளை.... 
மகிழும் தாய்.... தென்னை....!

மணி அடித்தது.... 

விடுதலை உணர்வோடு பள்ளிக் குழந்தை...! 

வீதியில் உறவு... வீட்டிற்குள் துறவு.... பாதுகை....!

எந்தப் பாம்பிடம் கடிபட்டதோ...?
நுரையுடன் கடல்....!

ஊர் சுற்ற ஆசை.... கரை மீறும் அலைகள்....!

ஒரே குடை.... ஏராளமாய் கைப்பிடிகள்.... ஆலமரம்....!

விலை போகும் விளையாட்டு.... விரயமாகும் நேரம்.... கிரிக்கெட்....!

தடம் மாறிய பாதை.... தடுமாறும் பேதை..... போதை...!

கண்ணாடி அறைக் கைதிகள்... சில்மிசம் தொட்டி.... 
மீன்கள்.....!


கடும் மழை... கவலையோடு கூட்டில் சிட்டுக்குருவி....!

வளர்த்த உழவனுக்காய்.... வணங்கி உயிர் விடும் நெற்கதிர்....!

மானுக்கு விரித்த வலையில்.... சிக்கிய வேடன்.... காதல் வலை.....!

மக்களை மயக்கும் மன்மத வார்த்தைகள்.... வாக்குறுதி....!

பற்று வைத்தவனை.... பற்ற வைக்கும்... சிதை...

சொற்கள் மலரானால்.... காத்துக் கொண்டிருக்கிறது.....
பாதபூஜை....!

 உயிர் காத்த கடவுளுக்கு.... உயிர்ப் பலி வேண்டுதல்.... கிடா...!

அளவுக்கு அதிகமானல் நீரும் கரிக்கும்.... 
கடல்....!

முத்திரை முத்தம்.... நித்தமும் பெற்றனர்.... கடிதக் காதலர்கள்....!

எட்டி இருந்தால் துக்கம்.... 

கிட்ட நெருங்க வெட்கம்....!

மோதலில் ஆரம்பித்து.... காதலில் முடிந்தது....
முத்தம்....!

கருவாடு விற்பவளின் கையில் வாசம்.... 

தலையில் மல்லிகை.....! 

பாமரனைப் பார்த்து மந்திரி வணக்கம்.... தேர்தல் நாள்....!

பொருள் இருந்தால் தான்... கவிதைக்கு மதிப்பு.... குறும்பா....!

சிறு துகளும் சுவர் எழுப்ப உதவும்....
மணல்.....!

பெயர் மட்டும் பூங்கா... மலர்களைத் தான் காணவில்லை... ஐ.டி.பூங்கா....! 

காலை எழுந்ததும்... கடமை தவறாமலே... கதிரவன்....!

வான சேலையில்.... வண்ணப் பூக்களாய்.... நட்சத்திரங்கள்....!

இருட்டுப் பயணத்தில்... வெளிச்ச மின்னல்... தைரியம்....! 

தீ வைத்த பாவிக்கே... 
பானம் கொடுக்கும்.... தேனீ...!

உனக்கு 
மேலே உள்ளவனைப் 
பார்த்து ஏங்காதே
தாழ்வு மனப்பான்மை வரும்..!

உனக்கு 
கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்...!

இரண்டுமே ஆபத்து...


🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*_எல்லா கல்லையுமா கருவறைக்குள் ஏற்ற முடியும், அதேபோல தான் வாழ்கையில் ஜெயுச்சவங்களும்...,_*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*_சில கற்கள் செதுக்க முயற்சிக்கும் போதே வலி தாங்க முடியாமல் தன் தகுதியினை குறைத்து கொள்கின்றன..!!_*

*மதிய வணக்கம்*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

வாய்ப்பு இருக்கும் 
போதே உங்கள் 
மனதிற்குப்பிடித்ததை 
செய்து விடுங்கள்..

நாளை என்பது 
கனவாக கூட போகலாம்!

💐💐💐

இனிய மாலை!
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

தேவைகளையும்
தேடல்களையும்
பொறுத்தே..

மனம்
மகிழ்ச்சியும்,
மன நிறைவும்
பெறும்!

☕️☕️🫖

ஹேப்பி மார்னிங்!
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

சில வரிகள் மட்டும்
மனதில் ஞாபகமிருக்க
முதல் வரிகள்
தொலைந்துபோன
பரிதவிப்பு பாடல்
நீ ! 

எத்தனை முட்டி மோதியும்
சில வரிகளை விரட்டி விட
முடியாது..

கண்டுபிடிக்கும் வரை
தேடல் ஓயாது..

கண்டுபிடித்த பின் வரும்
சிறுபிள்ளைச் சிரிப்பை 
மறைக்க முடியாது..

நான் தெரிந்தே மறந்த
பாடல் நீ !

❤️
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

வளையாமல் நதிகள் இல்லை..

வலிக்காமல் வாழ்க்கை இல்லை..

வரும் காலம் காயம் ஆற்றும்!

❤️❤️
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

சிறைப்பட்டு இருக்கும்வரை சிறகுகளின் பயன் எதுவென்று புரியாது!

🕊🕊🕊
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

உடல்கள் இணைவதை விடவும்
ஆன்மாக்கள் உயிர்கலந்து இணைவது
ஆயுளுக்கும் அழிவதில்லையே
உடலுக்காக மட்டுமே நேசங்கள் இல்லயே

சிகரம் தொடுவதல்ல
இன்பம்..

அதைத் தொட
தொடரும் பயணம் தான்
பேரின்பம்!

💐💐💐

குட் மார்னிங்!
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

கையில் வந்து 
சேரும் வரை 
எதுவும் நிலையில்லை 
இந்த மாய உலகில்...!
கையில் வந்த 
பின்பும் 
நிலையென்று 
நினைத்து விட முடியாது...
வாழ்க்கையின் நிதர்சனம்...
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

செவிவழி கேட்கும் போதெல்லாம்..

இதயத்தில் மின்னல் பாய்ச்சும்
பேரிடி நின் முத்தச்சத்தம்..

...ம்ம்ம்!!

😜😜😜
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

எப்போதும் 
    நனைந்து கொண்டிருக்க 
              ஆசைதான் அவள் அன்பில்!
   பித்தம் தலைக்கேரும் 
                      போதெல்லாம்
    மொத்தமும் தொலைத்த 
                                     நினைவுகளே !

     அடர்மழைச்சாரலில் 
             கண்ணாடியில் விழுந்த 
                 நீரிலையாய்  
         வேகமெடுந்து முந்துகிறது 
               சில நினைவுகளை நெஞ்சில்
                      சுமந்தபடி கண்ணீர்!

           வேகமெடுக்கும் 
                  நினைவுகளை வெருமனே
       கடந்துவிட அடிக்கடி 
         அரைகுவழை தேனீருடன் 
              முத்தமிட்ட இதழுக்கு 
       முழுநீள சிகரெட்டும் 
                       தேவைபடுகிறது!

    அறிவு தேவையின் பசியை 
          அடக்கிக்கொள்ள 
              அன்புடன் வாசித்த 
                                       புத்தகமாய்
      வெண்ணிரஇரவுகளே 
           என்னை தனிமையாக்கியது!
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

எழுதித்தீர்க்க போகிறேன் 
கொஞ்சம் தேநீர் கொடு..

இந்தக் காதலை 
கொண்டாடித்தீர்க்க!

☕️☕️🫖

தேநீர் காலை!
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

பலரோடு அன்பாய் அழகாய் பேசலாம்..

நம் அன்பை 
உணர்ந்தவர்களிடம் மட்டுமே 
உணர்வோடு பேச முடியும்!

🌸🌼🌸
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

பயணங்கள் இன்றி வாழ்க்கையும் இல்லை..

பணம் இன்றி உறவுகளும் இல்லை!

நாம் சொல்லும் பொய்களுக்கு ஒரு நாளும் உடந்தையாக இருந்ததில்லை...........
                   
நம் கண்கள்....................!!

தொல்லை செய்யாமல் தொடர்பில் இருந்து பாருங்கள்.........

யாரும் உங்களை தொலைக்க முயற்சிக்க மாட்டார்கள்........!!

வாழ்க்கை தவறாகிப் போவது பெரும்பாலும்...........

சிலரது வார்த்தைகள் தவறிப் போவதால் தான்............!!

ஆசையையும் ஆபத்தையும் எளிதில் அடைய முடியும்...

ஆனால்..........

ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் அனுபவித்தால் மட்டுமே பெற முடியும்.................!!

அன்பின் திமிர் இரண்டே வகை தான்!

போகட்டுமென்கிற திமிர்..

எங்கே போய்விடப் போகிறார்களென்கிற திமிர்!!

😍😍
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Previous Post
Next Post

0 Comments: