வெள்ளி, 30 செப்டம்பர், 2022

ஆவணி அவிட்டம் என்றால் என்ன

ஆவணி அவிட்டம் என்றால் என்ன
AVANI AVITTAM ENDRAL ENNA

ஆவணி அவிட்டம் என்பது இந்துப் பிராமணர்கள் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஓர் விசேடம் வாய்ந்த நாளாகும். இதனை ஆண்டுச் சடங்கு (உபநயனம் ) எனக் கூறுகின்றனர்.

இதனை அநேகமாக பிராமணர், விஸ்வகர்மா மற்றும் செட்டியார் போன்றோர் விசேடமாக அனுஷ்டிப்பர். இது ரிக், யசுர்வேதிகள் கொண்டாடும் தினமாகும். சாம வேதிகள் பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் இந்நாளை கொண்டாடுகின்றனர். இது ஓர் கூட்டுவழிபாடு ஆகும்.

Table of Contents
ஆவணி அவிட்டம் என்றால் என்ன
உபநயனம் என்றால் என்ன
உபநயனம் செய்தல்
பூணூல் தரித்தவர்கள் பூணூல் புதுப்பித்தல்
பூணூலின் வகைகள்
பூணூலின் மகிமை
ஆவணி அவிட்டம் என்றால் என்ன
ஆவணி அவிட்டம் என்பது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தினோடு கூடிய பௌர்ணமி தினத்திலே பிராமணர்கள் உபநயனச் சடங்கை அனுஷ்டிப்பது ஆகும்.

உபநயனம் என்றால் என்ன
உபநயனம் என்பது பிராமண ஆண்களுக்கு இன்றியமையாத ஓர் வாழ்க்கை நிகழ்வு ஆகும். பிராமண ஆண் பிள்ளைகள் முதன் முதலாக பூணூல் தரிக்கும் நிகழ்வே “உபநயனம்” என அழைக்கப்படுகிறது.

உபநயனம் செய்தல்

முதலில் ஐந்து வயதான சிறுவனை மங்கள நீராட்டுவார்கள். மங்கள நீராட்டிற்கு உதகசாந்தி எனப் பெயர். குடத்தில் நீரை நிரப்பி தேவர்களையும், தேவதைகளையும் மந்திரத்தால் வரவழைத்து அந்த மந்திர ஜபங்களால் அவற்றுக்கு வலுவூட்டி அந்த நீரை உபநயனம் செய்து கொள்ளப் போகும் சிறுவனுக்கு அபிஷேகம் செய்வது போல் தலையில் விடுவார்கள்.

இதன் மூலம் அந்தச் சிறுவனின் உடலும் , உள்ளமும் மாசற்றதாக ஆகும் என்பது ஐதீகம். இது உபநயனம் செய்யப் போகும் நாளுக்கு முதல் நாளே நடக்கும். உபநயனத்திற்குச் சிறுவனின் நட்சத்திரத்துக்கு ஏற்றவாறு நாள் கணிப்பார்கள். அதற்கு முதல் நாள் இந்த உதகசாந்தி நடைபெறும்.

மனதில் விபரீத எண்ணங்கள் ஏற்படாமல் இருக்கவும் இந்த மந்திரசக்தி வாய்ந்த புனித நீர் தெளிப்பர். மாணவன் மனம் அமைதி பெறச் செய்யும். பின்னர் மாணவனின் வலக்கரத்தில் மஞ்சள் கயிறால் காப்புக் கட்டுவார்கள். இதற்கு ரட்சாபந்தனம் எனப் பெயர். இன்னல்களிலிருந்து காக்கும் ரட்சை எனவும் குறிப்பிடுகின்றனர்.

அதன் பின்னர் குடும்பத்து, குலத்து முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு உணவு படைப்பது. இதற்கு “நாந்தீ” என்று பெயர். இதில் ஒன்பது அந்தணர்களுக்கு உணவு படைக்கும் வழக்கம் உண்டு. முன்னோர்களிடம் பிரார்த்தித்துக்கொண்டு உபநயனம் நடைபெறப்போகும் சிறுவனுக்காக ஆசிகளை வேண்டும் விதமாகச் செய்யப்படுவது. பிராமணர்களுக்கு உணவு படைத்த பின்னரே மற்றவர்கள் உணவு உண்ணலாம்.

பொதுவாக நாந்தி நடைபெறும் வீடுகளில் அவர்களின் சகோத்திரத்தைச் சேர்ந்தவர்கள், தாயாதிகள் மட்டுமே முன் காலங்களில் எல்லாம் சாப்பிடுவார்கள். மற்றவர்களுக்குத் தனியாக உணவு சமைத்து வைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இப்போதெல்லாம் பொதுவிலே உணவு சமைத்து எடுத்து வரும் வழக்கம் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து, நாந்தி பிராமணர்களுக்கு உணவு படைக்காமல் வாழைக்காய், அரிசி, பருப்பு கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இப்போதைய சூழ்நிலையில் அனைவரும் இதையே விரும்புகின்றனர்.

ஆசாரக் குறைவு என்பதால் வெளியில் சமைத்து எடுத்து வருவதைப் புரோகிதர்கள் சாப்பிடுவது கிடையாது. ஆகவே இன்றைய சூழ்நிலையில் இதுவே நடைபெற்று வருகிறது. இந்த நாந்தியோடு முதல்நாள் விசேஷங்கள் முடிவடைகின்றன.

பூணூல் தரித்தவர்கள் பூணூல் புதுப்பித்தல்

இந்நாளில் அனைவரும் ஆற்றங்கரையிலோ குளக்கரையிலோ குளித்து இத்தகைய சடங்கினை உருவாக்கிய இருடிகளுக்கு நன்றி கூறி தர்ப்பணம் செய்வர்.

தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையருக்கு எள்ளும் அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர். பின்னர் தாங்கள் அணிந்துள்ள பூணூலைப் புதுப்பிப்பதோடு தங்கள் வேதங்களைப் படிக்கவும் தொடங்குவார்கள்.

பூணூலின் வகைகள்
கள்ளப் பூணூல்

ஆவணி அவிட்டம் அன்று உபநயனம் செய்து சாஸ்திரத்துக்காக மாத்திரை போடப்படும் பூணூல் கள்ளப் பூணூல் ஆகும். அன்று மாத்திரமே அணிவர். பின்னர் கழற்றி விடுவர். இப்பூணூலில் மூன்று நூல்கள் இணைத்து கட்டப்பட்டிருக்கும். நடுவில் காணப்படும் முடிச்சு பிரம்மமுடிச்சு எனப்படும்.

பிரம்மச்சாரிய பூணூல்

திருமணம் ஆகாதவர்களுக்கு போடப்படுகின்ற பூணூல் பிரம்மச்சாரிய பூணூல் எனப்படும். இப்பூணூலில் மூன்று நூல்கள் இணைத்து கட்டப்பட்டிருக்கும். நடுவில் காணப்படும் முடிச்சு பிரம்மமுடிச்சு எனப்படும்.

பிரகஸ்த பூணூல்

திருமணம் ஆனவர்கள் போடுகின்ற பூணூல் கிரகஸ்தப் பூணூல் எனப்படும். இதில் ஆறு நூல்கள் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும்.

சஷ்டி அப்தி பூணூல்

60 வயதான பின்னர் சஷ்டி அப்தி பூர்த்தி என்று கூறப்படுகிறது. அறுபதாம் கல்யாணம் முடிந்தவர்களுக்கு போடப்படும் பூணூல் “சஷ்டி அப்தி பூணூல்” எனப்படும். இதில் ஒன்பது நூல்கள் இணைத்து கட்டப்பட்டிருக்கும். நடுவில் பிரம்ம முடிச்சு காணப்படும்.

பூணூலின் மகிமை
பூணூல் தரித்த ஒருவரே, ஆகம விதிக்கு அமைவாக அமைந்துள்ள ஆலயங்களில் பூஜை செய்ய முடியும். வேதங்களை சரிவர கற்று உணர முடியும். ஆலயங்களில் மந்திர உச்சாடனங்கள் செய்ய முடியும். பூணூல் தரித்தவர்களை தீய சக்திகள் நெருங்காது.

கரிநாள் என்றால் என்ன

கரிநாள் என்றால் என்ன
KARINAL ENDRAL ENNA

அறிமுகம்
கரிநாள் என்றால் என்ன
கரிநாள் கணக்கிடப்படும் முறை
அறிமுகம்
நம் வீட்டில் ஒரு சுப காரியத்தினை நடத்த வேண்டும் என்றால் அந்த நாள் நல்ல நாளா என்பதை நாட்காட்டியில் பார்த்துவிட்டுத்தான் சுப நிகழ்ச்சியை வைக்கலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்வோம்.

இந்தப் பழக்கம் பொதுவாகப் பலபேருக்கு உண்டு. அப்படி அந்த நாட்காட்டியில் கரிநாள் என்று இருந்தால் அந்த நாட்களில் எந்தவொரு நல்ல காரியமும் நடத்தக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

சந்திரனை வைத்து சந்திராஸ்டமம் எப்படி கணக்கிடப்படுகின்றதோ அதேபோல் சூரியனை அடிப்படையாகக் கொண்டு கரிநாள் கணக்கிடப்படுகின்றது. சந்திராஸ்டம நாளில் நல்ல காரியங்கள் செய்வதை மற்றும் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பதுபோல் கரிநாளில் சுப காரியங்களைச் செய்வதில்லை.

கரிநாள் என்பது நல்ல காரியங்களைச் செய்வதற்கு ஏற்ற நாள் இல்லை என்பது ஜோதிட நம்பிக்கையாகும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் உட்பட எந்த நல்ல காரியமும் கரிநாளில் செய்வதில்லை.


எனினும் தெய்வம் சம்மந்தப்பட்ட கோமங்கள், யாகங்கள், பூஜைகள் இவைகள் எல்லாம் இந்தத் தேதிகளில் வைத்துக் கொள்ளலாம் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

கரிநாள் என்றால் என்ன
கரிநாள் என்றால் என்ன என்பதை சுரக்கமாகக் கூறினால் சூரியனின் தீட்சண்யம் (கதிர்வீச்சு) அதிகமாக இருக்கின்ற நாள் என்பதே ஆகும்.

கரிநாள் என்றால் நஞ்சு என்று பொருள்படும். கரிநாள் அன்று சூரியனின் கதிர்வீச்சின் தாக்கம் பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியைவிட அதிகமாக இருக்கும்.

கரிநாள் என்பது அஸ்டமி, நவமி போன்றோ அல்லது பரணி, கிருத்திகை போன்றோ திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்ததல்ல.

கரிநாள் கணக்கிடப்படும் முறை
தமிழ்நாட்டில் சௌரமான மாதங்கள் நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுகின்றன. சௌரம் என்றால் சூரியன் என்று பொருள். அதாவது சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் மாதங்கள் சௌரமான மாதங்களாகும்.

தமிழ் மாதங்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றன. சித்திரையில் சூரியன் மேஷ ராசியிலும் சஞ்சரிக்கத் தொடங்கி பங்குனியில் மீன ராசியில் தனது சுற்றினை முடிக்கின்றார்.

12 ராசிகளில் சூரியன் கடந்து செல்வதை வைத்து தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுவதால் சூரியனின் கதிர்வீச்சு வேகத்தை வைத்து கரிநாள் கணக்கிடப்படுகின்றன.


இது வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாள்களாகும். இவ்வாறு நமது நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள கரிநாட்கள் அனைத்தும் தமிழ்மாத நாட்களில் மாறுபடாது. எல்லா வருடமும் ஒரே தேதியில்தான் கரிநாட்கள் வரும். அதாவது

தை மாதம் – 1,2,3,11,17
மாசி மாதம் – 15,16,17
பங்குனி – 6,15,19
சித்திரை – 6,15
வைகாசி – 7,16,7
ஆனி – 1,6
ஆடி – 2,10,20
ஆவணி – 2,9,28
புரட்டாசி – 16, 29
ஐப்பசி – 6,20
கார்த்திகை – 1,10,17
மார்கழி – 6,9,11
இவை கரிநாட்களாகும்.

இது அறிவியல் பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட நாட்களே அன்றி ஜோதிட ரீதியாக கடைப்பிடித்துவரும் விடயம் அல்ல.

இந்நாளில் சூரியனின் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதனால் உடலிலுள்ள அனைத்துச் சுரப்பிகளும் ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று அதிகமாகத் தூண்டப்படும். இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற நிகழ்வுகளுக்கு அதிக வாய்ப்புண்டு எனக் கூறப்படுகின்றது.

புராணங்கள் என்றால் என்ன

புராணங்கள் என்றால் என்ன
PURANANGAL IN TAMIL

புராணங்கள் வேதத்தின் கண்ணாடி எனக் கூறப்படுகின்றன. புராணங்கள் எழுதப்பெற்ற காலத்தினைக் கணக்கிட்டுக் கூறுவதில் கருத்துவேறுபாடுகள் உள்ளன. எனவே புராணங்கள் எழுதப்பட்ட காலத்தை இன்றளவும் துல்லியமாகக் கணித்துக்கூற முடியவில்லை.

இந்தியத் துணைக்கண்டத்தில் நான்கு வேதங்களும், பதினெட்டுப் புராணங்களும் தோன்றியுள்ளன. இவை உலக அளவில் மிகப் பழமையான நூல்கள் எனக் கருதப்படுகின்றன.

Table of Contents
புராணங்கள் என்றால் என்ன
யுகங்கள் பற்றிய புராண ரகசியங்கள்
பஞ்சபுராணம் என்றால் என்ன
புராணங்கள் என்றால் என்ன
புராணம் என்ற சொல்லானது சமஸ்கிருத மொழியிருந்து பெறப்பட்டதாகும். புராணம் என்பது “பழமையான வரலாறு” என்று பொருள்படுகின்றது.

மேலும் வேதங்களைத் தெளிவாக விரிவாக விளக்கமாக எடுத்துக் கூறுவதே புராணங்கள் எனலாம்.

யுகங்கள் பற்றிய புராண ரகசியங்கள்

யுகம் என்பது இந்துக்களின் காலக்கணிப்பு முறையில் காலத்தை அளக்கும் அலகுகளில் ஒன்றாகும். யுகங்கள் மொத்தம் 4 வகைப்படும். கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்பனவையே அவை நான்குமாகும்.

கிருத யுகம் மக்கள் அனைவரும் அறநெறியுடன் வாழும் யுகமாகப் பார்க்கப்படுகின்றது. இங்கு மனிதர்கள் சராசரியாக 5 அடி உயரமும் 840 வருடங்களும் வாழலாம். இந்த யுகமானது 1718,000 ஆண்டுகள் கொண்டது. இங்கு அசுரர்கள் பாதாள உலகிலும், தேவர்கள் மேல் உலகிலும், மனிதர்கள் பூலோகத்திலும் வாழ்ந்தனர்.

திரேதாயுகத்தில் நான்கில் 3 பங்கு மக்கள் அறநெறியுடனும், ஒரு பகுதி மக்கள் அறம் இல்லாமலும் வாழ்வார்கள். அங்கு வாழும் மனிதர்கள் சராசரியாக 5 அடி உயரம் உள்ளவர்களாகவும் சராசரியாக 616 வருடங்களும் வாழ்வார்கள். இவ் யுகமானது 129000 ஆண்டுகள் கொண்டதாகும். ஸ்ரீராமர் இந்த யுகத்தில்தான் அவதாரம் எடுத்தார்.

துவாபரயுகத்தில் மக்கள் சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி மக்கள் அறம் இல்லாமலும் வாழ்வார்கள் இங்குள்ள மனிதர்கள் சராசரியாக 7 அடி உயரம் கொண்டவர்களாகவும் 300 ஆண்டு காலமும் வாழ்வார்கள். இந்த யுகம் 864000 ஆண்டுகள் கொண்டது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்த யுகமாகும். இங்கு அசுரர்களும் தேவர்களும் ஒரே குடும்பத்தில் வாழ்ந்தார்கள்.

கலியுகத்தில் நான்கில் ஒருபகுதி மக்கள் அற நெறியுடனும் 3 பகுதி மக்கள் அறம் இல்லாமலும் வாழ்வார்கள். இங்கு மனிதர்கள் சராசரியாக 6 அடி உள்ளவர்களாகவும் 120 வருடங்களும் வாழ்வார்கள். இந்த யுகம் 436000 ஆண்டுகள் கொண்டதாகும். இந்த யுகத்தில் அசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழத் தொடங்குவார்கள்.

இந்த நான்கு யுகங்களும் இணைந்து மகா யுகம் அல்லது சதுர்யுகம் என்று அழைக்கப்படுகின்றது.

இவ்வாறு 71 மகா யுகங்கள் கடந்தால் மனுமந்திரம் என்று பெயர். மொத்தமாக 14 மனுமந்திரங்கள் உள்ளன. இப்போது நாம் இருப்பது 7 ஆவது மனுமந்திரம் ஆகும்.

பஞ்சபுராணம் என்றால் என்ன

பஞ்ச என்று சொல்லப்படுகின்ற வார்த்தையின் பொருள் ஐந்து என ஒரு பொருள் இருந்தாலும் அதன் பொருளில் இங்கு பார்ப்பதில்லை.

பஞ்ச என்ற சொற்தொடருக்கு வடமொழியின் “விரிவது” என்று பொருளாகும். புராணம் என்பது “பெருமை நிறைந்தது” என்று பொருளாகும்.

அதே வேளை புரா என்றால் “பழமை” ணம் என்றால் “புதுமை” என்றும் பொருளுண்டு. எனவே பழையதுக்குப் பழமையாகவும், புதுமைக்குப் புதுமையாகவும் இருக்கக் கூடிய சிவபெருமானை அவருடைய பெருமை விளங்குமாறு போற்றித் துதித்துப்பாடும் பாடல்களுக்குத்தான் பஞ்சபுராணம் என்று பெயராகும்.

பிரதோஷம் என்றால் என்ன

பிரதோஷம் என்றால் என்ன
PRADOSHAM ENDRAL ENNA

சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானுக்கு உரிய விரத நாட்களுள் பிரதோஷமும் ஒன்றாகும். இது சிவ வழிபாட்டுக்கு சிறப்பு வாய்ந்த நாளாக காணப்படுகிறது.

Table of Contents
பிரதோஷம் என்றால் என்ன
பிரதோஷம் உருவான வரலாறு
பிரதோஷ பூஜை
பிரதோஷ வகைகள்
பிரதோஷம் என்றால் என்ன
பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய் பிறையில் வரும் திரயோதசி திதி தினத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலமாக கடைப்பிடிக்கப்படும் சிவனுக்குரிய விசேட விரத நாள் ஆகும்.

அதாவது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.

பிரதோஷம் உருவான வரலாறு
தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தை பெறுவதற்காக திருப்பாற்கடலை கடைய தீர்மானித்து, மந்தரம் எனும் மலையை மத்தாகவும் சிவபெருமானின் கழுத்தில் உள்ள உள்ள வாசகி என்னும் பாம்பினை கயிறாகவும் கொண்டு ஒரு புறம் அசுரர்களும் மறுபுறம் தேவர்களும் சேர்ந்து திருப்பாற்கடலை கடைய முயற்சித்தனர்.


அப்போது மந்தரமலை கடலில் மூழ்க ஆரம்பித்தது. அதனால் திருமால் கூர்ம அவதாரம் எடுத்து கடலுக்கடியில் சென்று மந்திர மலையை தன்னில் தாங்கிக் கொண்டார். பின்னர் அசுரர்களும் தேவர்களும் மீண்டும் திருப்பாற்கடலை கடைய ஆரம்பித்தனர்.

கடையும் பொழுது வலி தாங்க முடியாத வாசுகி பாம்பானது தனது ஆலகால விடத்தை கடலிலே கக்கியது. அந்த நச்சுத்தன்மையின் வீரியத்தால் அசுரர்களும் தேவர்களும் அச்சம் அடைந்து சிவபெருமானிடம் உதவியை நாடி சென்றனர்.

சிவபெருமான் அவர்களை காத்தருளும் பொருட்டு அந்த கொடிய ஆலகால விடத்தை எடுத்து உட்கொண்டார்.

உமாதேவியார் அதனை சிவபெருமானின் வயிற்றிற்குள் செல்ல விடாது, அவரது கழுத்தில் தடுத்து நிறுத்தினார். இந்நிகழ்வுகள் நடந்த நாளே பிரதோஷ நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

பிரதோஷ பூஜை
பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல் அல்லது வில்வ இலை மாலை சாற்றி நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்வது வழக்கம்.

சாதாரண நாளில் சிவன் கோயிலில் வலம் வருவதைப் போல் இல்லாமல், பிரதோஷ நேரத்தில் சற்று வேறு விதமாக வலம் வருதல் வேண்டும். அதற்கு சோமசூக்தப் பிரதட்சணம் என்று பெயர்.

அதாவது, நந்தியை வணங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்யும் நீர் வரும் கோமுகி வரை சென்று அங்கு நின்று வணங்கி, பின்னர் அதே வழியாக வலம் வந்து சண்டிகேஸ்வரர் வரை வந்து அவரை வணங்கி மீண்டும் கோமுகிக்குச் செல்ல வேண்டும். இப்படி மூன்று முறை வணங்க வேண்டும். இந்த பிரதட்சண முறைக்கு பிரதோஷ பிரதட்சணம் என்று பெயர்.

பிரதோஷ வகைகள்

தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு முக்தி நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

பட்சப் பிரதோஷம் : அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் திரயோதசி திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு சிறந்தது.

மாசப் பிரதோஷம் : பௌர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் திரயோதசி திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு சிறந்தது.

நட்சத்திரப் பிரதோஷம் : பிரதோஷ திதியாகிய திரயோதசி திதியில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

பூரண பிரதோஷம் : திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது சுயம்பு லிங்கத்தைத் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும்.

திவ்யப் பிரதோஷம் : பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது திவ்யப் பிரதோஷம் ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு வழிபாடு செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

தீபப் பிரதோஷம் : பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் : வானத்தில் வ வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, சப்தரிஷி மண்டலம் ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும்.

மகா பிரதோஷம் : ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் மகா பிரதோஷம் ஆகும்.

உத்தம மகா பிரதோஷம் : சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும்.

ஏகாட்சர பிரதோஷம் : வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை ஏகாட்சர பிரதோஷம் என்பர்.

அர்த்தநாரி பிரதோஷம் : வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர்.

திரிகரண பிரதோஷம் : வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும்.

பிரம்மப் பிரதோஷம் : ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

அட்சரப் பிரதோஷம் : வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். சூநான் என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

கந்தப் பிரதோஷம் : சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு.

சட்ஜ பிரபா பிரதோஷம் : ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, சட்ஜ பிரபா பிரதோஷம் எனப்படும்.

அஷ்ட திக் பிரதோஷம் : ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

நவக்கிரகப் பிரதோஷம் : ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

துத்தப் பிரதோஷம் : அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

சதுர்த்தி என்றால் என்ன

சதுர்த்தி என்றால் என்ன
VINAYAGAR SATHURTHI ENDRAL ENNA

இந்து மதத்தின் முதல் வணங்கப்படும் கடவுளாக விநாயகப் பெருமான் காணப்படுகிறார். விக்னங்களுக்கு அதிபதியாக காணப்படும் இவரை நாம் எந்த சுபகாரியங்களை தொடங்கும் முன்பு வழிபட்டு விட்டு தொடங்கினால் எந்த இடையூறும் ஏற்படாமல் காரியசித்தி ஏற்படும்.

Table of Contents
சதுர்த்தி என்றால் என்ன
சங்கடஹர சதுர்த்தி
சதுர்த்தி புராணக்கதை
மகா சங்கடஹர சதுர்த்தி
விரதம் இருக்கும் முறை
சதுர்த்தி என்றால் என்ன
சதுர்த்தி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக்காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறைகள் வரும் ஒரு நாளை குறிக்கும்.

இந்த நாட்கள் பொதுவாக “திதி” எனும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அம்மாவாசை நாளையும், பூரண நாளையும் அடுத்து வரும் நான்காவது திதி சதுர்த்தியாகும்.

சங்கடஹர சதுர்த்தி
“சங்கம்” என்றால் சேருதல் என்று பொருள்படும். கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேர்வதே சங்கஷ்டம் (சங்+கஷ்டம்) என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இச்சொல்லே மருவி “சங்கட” ஆக உருமாற்றம் பெற்று விட்டது.


சங்கடத்தை நீக்குவது சங்கடஹர சதுர்த்தி ஆகும். இது ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. இது இருள் சூழும் மாலை நேரத்தில் வரும்.

நமக்கு வருகின்ற துன்பங்கள், கஷ்டங்கள், தடைகள் என்பவற்றை தேய்த்து அழிவடைய செய்யும் சிறப்பு மிக்க விரதமாகும்.

மனிதர்கள் மட்டுமல்ல, தேவர்களும் தங்களுக்கு கஷ்டங்கள் வருகின்ற போது, அவர்கள் விநாயகரை குறிப்பிட்ட இந்நாளிலே வணங்கி நலம் பெற்றுள்ளனர்.

சதுர்த்தி புராணக்கதை
முன்பு ஒரு காலத்தில் பிரம்மதேவன், சிவபெருமானை தரிசிக்க திருக்கைலாயத்திற்கு சென்றார். அப்போது நாரதர் அங்கே ஒரு கனியுடன் வந்திருந்தார். அந்தக் கனியை யாருக்கு கொடுப்பது என்ற வாதம் அங்கே இடம்பெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது, அந்த தெய்வீக கனியை முருகனுக்கு கொடுக்கும் படி பிரம்மதேவன் சிவபெருமானிடம் கூறினார்.

சிவபெருமானும் அந்த பழத்தை முருகனிடம் கொடுத்தார். இதனைக் கண்ட மூத்தப்பிள்ளையான விநாயகருக்கு கோபம் வந்தது. அவர் பிரம்மதேவனை கோபத்துடன் பார்த்தார்.

விநாயகரின் அந்தக் கோபப்பார்வை பிரம்மதேவனை அஞ்சி நடுங்க செய்தது. தன் தவறை உணர்ந்த பிரம்மதேவன் விநாயகரை நோக்கி, “முழுமுதற் பெருமானே, என் தவறை பொறுத்தருள வேண்டும்.” என்று சொல்லி, இருகரம் குவித்து தலையை தாழ்த்தி உடம்பை குறுக்கிக் கொண்டு பணிந்து நின்றார்.


இக்காட்சியை அங்கு இருந்த சந்திரன் பார்த்தான். அத்துடன் முனிவர்கள், ரிஷிகள், பெரியோர்கள் கூடியுள்ள இடத்தில் பிரம்மதேவனை பார்த்து இகழ்ச்சியுடன் சிரித்தார் சந்திரபகவான். விநாயகரின் கோபப்பார்வை சந்திரனின் பக்கம் திரும்பியது.

அவர் சந்திரபகவானை பார்த்து “பெரியோர்கள் கூடியுள்ள இச்சபையில் அடக்கமின்றி சிரித்த சந்திரனே உன் பிரகாசம் உலகில் எங்கும் இல்லாமல் போகட்டும். உன் பிரகாசம் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்தே போகட்டும்” என்று சபித்தார்.

அப்போது வானத்தில் சந்திரன் இல்லாமல் போனது. பௌர்ணமி பூஜைகள் அமாவாசை திதி எதுவுமே நடைபெறவில்லை.

நிலைமையின் விபரீதத்தை அறிந்த இந்திரனும், தேவர்களும் சந்திரனுக்கு சாபவிமோசனம் அளிக்குமாறு விநாயகரை வேண்டினர்.


கருணை கடலான விநாயகப்பெருமான் மனம் மகிழ்ந்து “வருடத்தில் ஆவணி மாத சதுர்த்தியன்று சந்திரனை பார்ப்பவர்கள் துன்பப்படுவார்கள்” என்று கூறி, சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை குறைத்துவிட்டார்.

மேலும், “ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்த வரும் சதுர்த்தி அன்று விரதம் இருந்து தம்மை வழிபடுபவர்களின் சங்கடத்தை எல்லாம் தான் நிவர்த்தி செய்வேன். அவர்கள் புண்ணிய பேறுகளை அடைவார்கள்.” என்று திருவருள் புரிந்தார்.

இதைக் கேட்ட சந்திரபகவான் தன் தவறை உணர்ந்து விநாயகரை நோக்கி கடும் தவம் இருந்தார். அவருடைய தவத்திற்கு மனமகிழ்ந்த விநாயகர், அவருக்கு அருள் புரிந்து வளரும் வரத்தை கொடுத்தார்.

அவ்வாறு சந்திரன் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி தினமாகும். ஆகவே சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்தது. வளர்பிறை சதுர்த்தி திதியை பார்த்தால் தீமை விளையும்.

பகவான் கிருஷ்ணர், செவ்வாய், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளை பெற்றனர்.

முற்பிறவிகள் நாம் செய்த வினையின் பயனால் நமக்கு இப்பிறவிகள் சங்கடங்கள் வருகின்றன.

சங்கடஹரசதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால், அவர் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி அளவில்லாத நன்மைகளையும் தருவார்.

மகா சங்கடஹர சதுர்த்தி
ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி வருகின்றது. இவ்வாறு விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக வரும் சதுர்த்தி “மகா சங்கடஹர சதுர்த்தி” எனப்படும். அன்று வழிபாடு செய்தால் வருடம் முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்ததற்கான பலன் கிடைக்கும்.

விரதம் இருக்கும் முறை
அதிகாலையிலே எழுந்து, குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலை தோரணம் கட்டவேண்டும். பின்னர் பூஜை அறையை சுத்தம் செய்து ஒரு மணையை அமைத்து அதன்மேல் கோலம் போட்டு, ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும்.

இலையின் நுனி வடக்கு பார்த்தது போல இருத்தல் வேண்டும். இந்த இலையின் மேல் பச்சரிசியை பரப்பி வைத்து நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.

பத்ர புஷ்பம் எனப்படுகின்ற பலவகை பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என 21 வகையான பூக்களையும், 21 வகையான பழங்களையும் அத்துடன் விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டையும் அன்றைய தினம் படைத்தல் வேண்டும்.

விநாயகரை பூக்களால் அலங்காரம் செய்து, பிறகு விநாயகர் பாடல்கள் பாடலாம். விநாயகருக்கு கொழுக்கட்டை மட்டுமல்லாமல் எள்ளுருண்டை, பாயாசம், வடை என்றும் நைவேத்தியங்கள் படைக்கலாம்.

அத்துடன் பால், தேன், வெல்லம், முந்தரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாக கலந்து அதையும் நைவேத்தியமாக வைக்கலாம்.

விநாயகர் சதுர்த்தி அன்று மேற்கொள்ளும் விரதம், காலையில் இருந்து உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். விரதத்திற்கு பிறகு விநாயகரை கிணற்றில் அல்லது ஏதாவது ஏரியில் கரைப்பது வழக்கம்.

பகுத்தறிவு என்றால் என்ன

பகுத்தறிவு என்றால் என்ன
PAGUTHARIVU ENDRAL ENNA IN TAMIL

“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”

என்கின்றார் வள்ளுவர். அதாவது எந்த கருத்தாக இருந்தாலும் அந்தக் கருத்தை யாரிடமிருந்து கேட்டாலும் மேலோட்டமாகப் பார்த்து முடிவு செய்யாமல் ஆழ்ந்து சிந்தித்து அதற்கான காரணங்களை கண்டறிந்து அதன் உண்மைப் பொருளைக் காண வேண்டுமென வள்ளுவர் கூறியுள்ளார்.

பகுத்தறிவே மனிதனை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது. இதுவே மனிதனுக்கு ஜீவநாடி உயிர் நாடி ஆகும். இதில் மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்று பொருள்.

மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு பகுத்தறிவுடையவனாக இருக்கின்றானோ அவ்வளவுக்கவ்வளவு பக்குவமானவனாகின்றான். பகுத்தறிவே மனித வாழ்வை உயர்த்தும்.

ஒரு செயலை செய்வதற்கு முன்பு அந்த செயலால் ஏற்படக்கூடிய நன்மைகள், தீமைகளை முன்னரே அறிந்து கொள்வதற்காக உதவுவது தான் ஆறாவது அறிவு என்னும் பகுத்தறிவு ஆகும்.


ஒரு செயலை செய்வதற்கு முன்பு அந்த செயலால் ஏற்படக்கூடிய நன்மைகள், தீமைகளை ஆராய்ந்து நன்மையை மட்டும் செய்ய வேண்டும்.

பகுத்தறிவு என்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருக்க மாட்டாது. எல்லோரிடத்திலும் இருக்கமாட்டாது என்பதனை புரிந்து கொள்வது அவசியம். ஆனால் பகுத்தறிவுள்ள மக்களால் எந்த ஒரு இடத்திலும் வாழ்ந்து விட முடியும்.

வாழ்வில் பிரச்சனைகளை சரிசெய்து வாழ இவர்களால் முடியும். சுயநலம் இல்லாது எவன் ஒருவரின் செயல் அனைவருக்கும் நன்மையை ஏற்படுத்துகின்றரோ அவரே ஆறாம் அறிவு முழுமை பெற்றவராகின்றார்.

எனவே சிந்தனையே அறிவு அதுவே மனித வாழ்வை உயர்த்தும் என்பதனை உணர்ந்து எதையும் ஆராய்ந்து பகுத்தறிவுடன் செயற்படுவதே சிறந்ததாகும்.

Table of Contents
பகுத்தறிவு என்றால் என்ன
தந்தை பெரியாரின் பகுத்தறிவு வாழ்வியல் சிந்தனைகள்
பகுத்தறிவு என்றால் என்ன
பகுத்தறிவு என்பது ஒன்றை வைத்து ஒன்றை விளக்கும் நுண்ணறிவு ஆகும். ஒரு பொருளை கண்ணால் பார்த்து நம்புவதை விட அதன் விளைவுகளை வைத்து நம்புவது பகுத்தறிவின் தன்மையாகும்.

மேலும், ஒரு கருத்து உண்மையோ, பொய்யோ அல்லது நல்லது, கெட்டது அல்லது பயனுள்ளது, பயனற்றது அல்லது தேவையானது, தேவையற்றது என அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.


மேலும் எந்த காரியத்தை செய்வதற்கு முன்பும் அது அறிவுக்குப் பொருத்தமாக உள்ளதா? இது நடைமுறைக்கு ஒத்து வருமா? செயற்பாட்டில் இருக்கின்றதா? (செய்வதற்குரிய காரியம்) உண்மையானதா? என நமது சொந்த அறிவைக் கொண்டு சிந்தித்தலே பகுத்தறிவு ஆகும்.

பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையைக் கண்டறிவதே ஆகும்.

தந்தை பெரியாரின் பகுத்தறிவு வாழ்வியல் சிந்தனைகள்
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.
கல்வியறிவும், எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
எந்த மனிதனும் எவனுக்கும் மேலானவனல்ல. அதுபோல் எவனும் எவனுக்கும் கீழானவனும் அல்ல.
மானமுள்ள நூறு பேருடன் போராடலாம் மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.
ஒரு மதத்தை குறை சொல்லும் ஒருவனை விட அயோக்கியன் எவனும் இருக்கமாட்டான்.
விதியை நம்பி மதியை இழக்காதே.
யார் சொல்லியிருந்தாலும் எங்கு சொல்லியிருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.

தரிசு நிலம் என்றால் என்ன

தரிசு நிலம் என்றால் என்ன
THARISU NILAM ENRAL ENNA

பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலமானது மனித வாழ்வில் இன்றியமையாததும், முக்கியமானதும், மனித வாழ்வுக்கு ஆதாரமாகவும் விளங்குகின்றது. இன்று இந்நிலங்களின் தன்மைக்கேற்ப பல வகைகளாகக் காணப்படுகின்றன.

எனினும் நம் முன்னோர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தை பாகுபாடு செய்துள்ளனர். குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என நிலங்களை ஐவகையாகப் பிரித்துள்ளனர்.

தற்போது பல வகைகளில் நிலங்கள் பிரிக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். உதாரணமாக தரிசு நிலம், கல்லாங்குத்து நிலம், செம்பாட்டு நிலம், மேச்சல் நிலம், வட்டகை நிலம், அறப்பு நிலம், இறையிலி, உழவுகாடு போன்ற பல நிலங்களைக் கூறலாம்.

Table of Contents
தரிசு நிலம் என்றால் என்ன
தரிசு நிலங்களின் வகைப்பாடு
தரிசு நிலப் பயன்கள்
தரிசு நிலங்களை விளை நிலங்கள் ஆக்குதல்
தரிசு நிலம் என்றால் என்ன
சாகுபடி செய்யாமல் இருக்கும் நிலங்களை தரிசு நிலம் என்பர். தரிசு நிலங்களைப் போடுகால் எனவும் அழைப்பர்.

தரிசு நிலங்களின் வகைப்பாடு

பொதுவாகத் தரிசு நிலங்களை மூன்று வகைப்படுத்துவர். அவையாவன,

நடப்பு தரிசு
சாகுபடிக்கு லாயக்கான தரி
இதர தரிசு
நடப்பு தரிசு – அதாவது நடப்பாண்டில் மட்டும் தரிசாக வைத்திருக்கும் நிலங்கள் அதற்கு முந்திய ஆண்டில் பயிர் செய்யப்பட்டிருக்கும்.

சாகுபடிக்கு லாயக்கான தரிசு – நிலங்களில் சாகுபடி செய்ய முடியும். ஆனால் ஏதேனும் ஒரு காரணத்தால் சாகுபடி செய்யாமல் வைத்திருக்கும் நிலங்களாகும்.

இதர தரிசு – ஒன்றுக்கு மேற்பட்ட வருடங்களில் நிலங்கள் தரிசாக வைத்திருந்தால் அல்லது சாகுபடி செய்யாமல் வைத்திருந்தால் இதனை இதர தரிசு நிலங்களாக வகைப்படுத்தி வைக்கின்றனர்.

இவ்வகைப்பாடானது கிராம நிறுவன அலுவலகத்தில் பதிவு செய்து வைத்திருப்பர்.

தரிசு நிலப் பயன்கள்
தரிசு நிலங்களில் கால்நடை வளர்ப்பு மிகுந்த பயனைத் தரும் அதிலும், செம்மறியாடு மற்றும் வெள்ளாடு எருமை மாடு வளர்ப்பு போன்றவை மிகுந்த லாபத்தை தரும்.

உழுந்து, பாசிப் பயறு, நரிப் பயறு, கொள்ளு, தட்டைப் பயறு, சோளம், மக்காச் சோளம், இராகி, கடலை போன்றவற்றைப் பயிரிடலாம். இப் பயிர்கள் மூலம் கிடைக்கும் தீவினைகளான சோளத்தட்டு, கடலைச்செடி, கொள்ளுக் கொடி போன்றவை ஆடுகளுக்கு நல்ல தீவினங்களாகும்.


ஒரு ஏக்கர் தரிசு நிலத்தில் இரண்டு எருமை மாடுகள் மற்றும் பத்து ஆடுகள் வளர்ப்பதற்குத் தேவையான தீவனத்தை உற்பத்தி செய்யலாம். இதன் மூலம் உற்பத்திச் செலவு குறைக்கப்படுவதுடன் நிகர இலாபத்தையும் ஈட்டலாம்.

தரிசு நிலங்களை விளை நிலங்கள் ஆக்குதல்
குறைந்த அல்லது நீர் ஆதாரம் இல்லாத பலம் குறைந்த தரிசு நிலங்களில் பயிர் செய்வதன் மூலம் உழவர்ப் பெருமக்கள் வருடம் முழுவதும் நிரந்தர வருவாயைப் பெற முடியாது மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

அவர்கள் துயர்துடைக்க நிரந்தர வருவாயை பெற்று தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய மற்றும் மாநில அரசாங்கமானது பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி கொண்டு வருகின்றது. எடுத்துக்காட்டு – தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்.

நல்லொழுக்கம் என்றால் என்ன

நல்லொழுக்கம் என்றால் என்ன
NAL OLUKKAM IN TAMIL

மனிதன் ஒரு சமூக பிராணி ஆவான். மனித வாழ்வு ஒரு சமூக வாழ்வு ஆகும். மனிதனின் சமூக வாழ்வுக்குத் தீங்கு விளைவிக்கும் தீய பழக்கங்கள் மற்றும் ஒழுக்கக்கேடுகளை தவிர்க்க வேண்டும். மனிதனை சமூக வாழ்வில் நிலைபெறச் செய்வது நல்லொழுக்கங்களே ஆகும்.

வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான தேவை நல்லொழுக்கம் ஆகும். நல்ல குணங்கள் பிறவியிலேயே உள்ளன என்று சிலர் கூறலாம். இருப்பினும் நல்லொழுக்கப் பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இரக்கம், பொறுப்பு, கடமை உணர்வு, சுய ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு, நேர்மை, விசுவாசம், நட்பு, தைரியம் மற்றும் விடாமுயற்சி ஆகியவை ஒழுக்கமான வாழ்க்கையை நிலை நிறுத்துவதற்கான விரும்பத்தக்க நற்பண்புகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

நாம் தமிழர்கள், நாம் மனிதர்கள் என்ற நியதிக்கேற்ப ஒழுகத் தவறுதல் கூடாது. நாம் தமிழர்களாகவும், மனிதர்களாகவும் வாழ்வதே நல்லொழுக்கமாகும். இனம், மொழி, சாதி, மதச்சண்டைகள் போடுதல் தீயொழுக்கமாகும்.

எல்லோரும் ஒரு குலம் எல்லோரும் ஓர் இனம் என்று எண்ணுதல் நல்லொழுக்கமாகும். பயனுள்ள பழக்க வழக்கங்களை தீமை பயக்காத செயல்களை வளர்த்து நல்லொழுக்க சீலர்களாக வாழ கல்வி அறிவு உதவுகின்றது.


Table of Contents
நல்லொழுக்கம் என்றால் என்ன
ஒழுக்கத்தின் மேன்மை
ஒழுக்கம் பற்றிப் பெரியார் கூறிய சிந்தனைகள்
நல்லொழுக்கம் என்றால் என்ன
நல்லொழுக்கம், என்பது ஒரு நபரின் தார்மீக மேன்மை ஆகும். மேலும் நல்லொழுக்கம் என்பது தார்மீக ரீதியில் நல்லவர்களாக இருப்பதற்கான தரம் ஆகும். தார்மீக ரீதியில் சிறந்தவர்கள், நல்லவர்கள் என மதிப்பிடப்படுபவர்கள் நல்லொழுக்கங்களால் உருவாக்கப்பட்ட பண்பைக் கொண்டுள்ளனர்.

உதாரணமாக, அவர்கள் நேர்மையானவர்கள், மரியாதைக்குரியவர்கள், தைரியமானவர்கள், மன்னிப்பவர்கள் மற்றும் அன்பானவர்கள் என கூறுமளவிற்கு சிறந்தவர்களாக இருப்பர்.

அவர்கள் சரியானதைச் செய்கிறார்கள், தூண்டுதல்கள், அல்லது ஆசைகளுக்கு வளைந்து கொடுக்கமாட்டார்கள். ஆனால் மதிப்புகள் மற்றும் கொள்கைகளின்படி செயல்படுபவர்களாக இருப்பர்.

நல்லொழுக்கம் என்பது நல்லதைச் செய்வதற்கான ஒரு பழக்கமான மற்றும் உறுதியான மனநிலையாகும். இது ஒரு நபரை நல்ல செயல்களைச் செய்வதற்கு மட்டுமல்லாமல், சிறந்த வாழ்க்கை வாழவும் நல்லொழுக்கம் அனுமதிக்கிறது.

ஒழுக்கத்தின் மேன்மை
ஒழுக்கம் ஒரு நபருக்கு சிறந்த ஆரோக்கியத்தை வழங்குகின்றது. மோசமான நாளைக் கொண்டிருக்கும் ஒருவரிடம் கருணை காட்டுவது அவரை அல்லது அவளைப் புன்னகைக்கச் செய்து நல்லுறவை வளர்க்கும்.

நல்லொழுக்கமானது உறவின் மீதான நம்பகத்தன்மையையும், நெருக்கத்தையும் வளர்க்கிறது. மதிப்புமிக்க, அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குகிறது.


நல்லொழுக்கம் என்ற வார்த்தை Vir என்ற லத்தீன் சொல்லிலிருந்து உருவானதாகும். இது ஆங்கிலத்தில் Virtue என அழைக்கப்படுகின்றது.

முதலில் அறம் என்பது ஆண்மை அல்லது வீரம் என்று பொருள்பட்டது. ஆனால் காலப்போக்கில் அது ஒழுக்க மேன்மையின் உணர்வில் நிலைபெற்றது.

மனித நற்பண்புகள் மனதின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன. மற்றும் பாவத்தைத் தவிர்க்கின்றன.

நல்லொழுக்கங்கள் நம்பிக்கை மற்றும் பகுத்தறிவின் கட்டளைகளின்படி நம் நடத்தையை வழி நடத்துகின்றன. சுயக்கட்டுப்பாட்டின் அடிப்படையிலான சுதந்திரத்தை நோக்கியும், நல்ல ஒழுக்க வாழ்வில் மகிழ்ச்சியை நோக்கியும் நம்மை வழி நடத்துகின்றன.

ஒழுக்கம் பற்றிப் பெரியார் கூறிய சிந்தனைகள்

பிறருக்குத் தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு ஆகும்.

மற்றவர்களிடம் பழகும் விதத்தையையும், ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாகக் கற்றுக் கொண்டால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதனாவான்.

நாடு சுபீட்சத்துடன் வாழ வேண்டும் என்றால் அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.

ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ அப்படி எல்லோரிடமும் அவனும் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.


செப்பேடுகள் என்றால் என்ன

செப்பேடுகள் என்றால் என்ன
SEPPEDUGAL IN TAMIL

அரசர்கள் அவர்கள் காலத்தில் நடந்த நில தானங்கள், முக்கிய நிகழ்வுகள் போன்றவற்றை செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும், ஓலைச்சுவடிகளிலும் பதிக்கும் முறையை கையாண்டனர்.

இவை தற்காலத்தில் பழங்காலத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு உதவும் தொல்லியல் சான்றுகளாக காணப்படுகின்றது.

Table of Contents
செப்பேடுகள் என்றால் என்ன
செப்பேடுகளின் சிறப்பு
செப்பேடுகளின் அமைப்பு
செப்பேடுகள் என்றால் என்ன
செப்பேடுகள் என்பது பழங்காலத்தில் மன்னர்களின் கோவில் தானங்கள், வம்சாவளி, போர்க்குறிப்புக்கள், மரபுவழி கதைகள் போன்ற நிகழ்வுகளை பதிந்து வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உலோக தகடுகள் ஆகும்.

கல்வெட்டுகளில் பதியப்படும் சில செய்திகள் செப்பேடுகளிலும் பதியப்பெற்று தானம் பெறுபவனுக்கு வழங்கப்படும். அவை பொதுமக்கள் பார்வைக்கு வழங்கப்படுவதில்லை.

செப்பேடுகளின் சிறப்பு
செப்பேடுகளில் காணப்படும் செய்தி கவித்துவமாக அமைந்திருக்கும்.
இரு மொழி கையாளப்படும். அதாவது முதல் பகுதி சமஸ்கிருதத்திலும், இரண்டாம் பகுதி தமிழிலும் அமைந்திருக்கும்.
தானம் கொடுத்த அரசன் பெயர், தானம் கேட்டு விண்ணப்பித்தவன் பெயர், சாட்சிகள், செய்தியை கவிதை வடிவமாக சொன்ன புலவர், அதை பொறித்த ஆசாரி போன்ற செய்திகள் செப்பேட்டில் காணப்படும்.
பிற்காலத்தில் நில தானம் பெற்றவருக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் இச்செப்பேட்டை காட்டி ஊர் சபையினரிடம் தீர்வு காண முடியும்.
செப்பேடுகளின் அமைப்பு

செப்பேடுகள் ஒரு முனையில் துளையிட்டு அதில் மிகப்பெரிய வளையத்தின் மூலம் பிற இதழ்களை இணைத்திருப்பர். அதன் முகப்பானது வட்ட வடிவில் அரச முத்தரையை தாங்கி இருக்கும்.

தமிழகத்தில் ஏறக்குறைய 250 செப்பேடுகள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் சோழர்கள் காலத்தில் வெளியிடப்பட்டு இதுவரை 19 செப்பேடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் 13 செப்பேடுகளின்  காலத்தையும், வெளியிட்ட அரசரின் பெயர் போன்ற செய்திகளை நோக்குவோம்.

முதலாம் பராந்தகன்
சோழர்கள் செப்பேடுகளில் காலத்தால் மிகவும் மூத்தது உதயேந்திரம் செப்பேடு ஆகும். இது கி.பி 1850 ஆண்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள உதயேந்திரம் எனும் ஊரின் சௌந்தரராஜபெருமாள் கோவில் தர்மாகர்த்தாவிடம் இச்செப்பேடு தொகுதிகள் இருந்தது. இச்செப்பேடு இரண்டு இதழ்களை கொண்டவை.

முதலாம் பராந்தகன்
வேளச்சேரி செப்பேடு கி.பி 932 காலத்துக்குரியது. இது வேளச்சேரி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நாகலாபுரம் வரையிலான ஆட்சித் தகவல்களை கொண்டுள்ளது. இச்செப்பேடு  ஐந்து இதழ்களை கொண்டவை.

இரண்டாம் பராந்தகன்
இரண்டாம் பரந்தகன் உடைய அன்பில் செப்பேடு கி.பி 961 காலத்திற்கு உரியது. அன்பில் செப்பேடு திருச்சி மாவட்டத்தில் லால்குடி அருகே உள்ளது. இச்செப்பேடு  பதினாறு இதழ்களை கொண்டவை.

இரண்டாம் பராந்தகன்
பள்ளன் கோவில் சாப்பாடு கி.பி 970 ஆம் ஆண்டுக்குரியது. இது பள்ளன் கோயில், நாகை மாவட்டம் ,திருத்துறைப்பூண்டி  பற்றிய தகவல்களை உடையது.

உத்தம சோழன்
மெட்ராஸ் மியூசியம் செப்பேடு கி.பி 985 ஆண்டுக்குரியது. இது மெட்ராஸ் மியூசியத்திற்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. இங்கேயே இருந்த காரணத்தால் இப்பெயராலேயே அழைக்கப்படுகிறது. இதில் ஐந்து இதழ்கள் மட்டுமே உள்ளன. இதன் முன்னும்,  பின்னும் காணப்பட்ட சில இதழ்கள் கிடைக்கப்பெறவில்லை.

முதலாம் இராஜராஜன்

திருச்செங்கோடு செப்பேடு கி.பி 990 ஆண்டுக்குரியது. இது திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. இது இரண்டு இதழ்களை கொண்டது.

முதலாம் இராஜராஜன்
கி.பி 995 ஆண்டுக்குரிய திருச்செங்கோடு செப்பேடானது இரண்டு இதழ்களை கொண்டது.

முதலாம் இராஜராஜன்
கி.பி 1006 ஆண்டுக்குரிய ஆனைமங்கலம் செப்பேடானது, ஆனைமங்கலம் நாகை மாவட்டத்தில் உள்ளது. இது 21 இதழ்களை கொண்டது தற்போது ஹாலந்து நாட்டில் லெய்டன் பல்கலைக்கழகத்தில் உள்ளது.அளவில் பெரிதாக இருப்பதனால் பெரிய லெய்டன் செப்பேடு என்று அழைக்கப்படுகிறது.

முதலாம் இராஜேந்திரன்
கி.பி 1018 ஆண்டுக்குரிய திருவாலங்காடு செப்பேடு, திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம் , திருத்தணி அருகில் உள்ளது. இது 31 இதழ்களைக் கொண்டு அமைந்துள்ளது.

முதலாம் இராஜேந்திரன்
கி.பி 1020 ஆண்டுக்குரிய கரந்தை செப்பேடானது, தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகில் புத்தூரில் கண்டுபிடிக்கப்பட்டது. கரந்தை தமிழ் சங்கத்தில் வைத்து பாதுகாத்தமையால், அப்பெயரால் அழைக்கப்படுகிறது. இது 57 இதழ்களை கொண்ட அமைந்துள்ளது.

முதலாம் இராஜேந்திரன்
கி.பி 1030 ஆண்டுக்குரிய திருக்களர் செப்பேடு ஆனது, திருக்களர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்  இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இது ஒரு இதழை கொண்டது.

முதலாம் இராஜேந்திரன்
கி.பி 1036 ஆம் ஆண்டுக்குரிய எசாலம் செப்பேடு, ஏசாலம் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்திற்கு அருகில் உள்ளது. இது 15 இதழ்களை கொண்டு அமைந்துள்ளது.

முதலாம் இராஜாதிராஜன்
கி.பி 1049 ஆம் ஆண்டுக்குரிய திருக்களர் செப்பேடு ஆனது, திருக்களர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிவில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  இது ஒரு இதழைக் கொண்டது.

வியாழன், 29 செப்டம்பர், 2022

ஒளி வேறு பெயர்கள்

ஒளி வேறு பெயர்கள்
ஒளி வேறு சொல்

இவ்வுலகை ஜொலிக்க வைக்கும் ஒளி என்ற சொல்லானது “ஒள்” என்ற வினை அடியில் இருந்து தோற்றம் பெற்றது.

ஒள் என்றால் ஒளிர்வு அல்லது ஒளி என்று பொருள்படும். ஒளி என்ற சொல்லானது பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் பயன்படுத்தப்படுகின்றது.

பெயராக வரும் பொழுது ஒளியானது கண்ணுக்கு புலனாகும் வெளிச்சம் என்று பொருள்படும் ஒளி என்ற சொல் வினையாக வரும் போது மறைத்து வை எளிதாக கண்டுபிடிக்க இயலாதவாறு மறைத்துவை என்று பொருள்படும்.

மின்காந்த அலை நீளத்தைப் பொறுத்து சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் என கண்ணுக்குப் புலனாகும் ஒளி பல நிறம் உடையதாகவும் இருக்கும், அல்லது அவை எல்லாம் சேர்ந்து வெள்ளை ஒளியாகவும் இருக்கும். இவ்வாறான ஒளிக்கு பல வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

Table of Contents
ஒளி வேறு பெயர்கள்
ஒளி மூலங்கள்
ஒளியின் வேகம்
ஒளி வேறு பெயர்கள்
ஒளிர்வு
ஒள்
வெளிச்சம்
சுடர்
சோதி
பிரகாசம்
கதிர்

இவ்வாறான பெயர்கள் ஒளிக்கு வழங்கப்படுகின்றன.

ஒளி மூலங்கள்
ஆரம்பக் காலம் தொட்டு இன்று வரை எல்லோராலும் அறியப்படும் ஒளி மூலம் சூரியன் ஆகும்.
மின்விளக்கு.
எரியும் பொருட்கள்.
ஒளியின் வேகம்
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் சரியாக 2,99,792.458 மீ/செ (வினாடிக்கு சுமார் 1,86,282 மைல்கள்) ஆகும். எல்லா வகை மின்காந்தக் கதிர்வீச்சுக்களும் வெற்றிடத்தில் இந்த வேகத்திலேயே நகர்கின்றன. இக்கணியத்தை “ஒளியின் வேகம்” எனக் குறிப்பிடலாம்.

அந்நிய செலாவணி என்றால் என்ன

அந்நிய செலாவணி என்றால் என்ன
ANNIYA SELAVANI ENRAL ENNA

வெளிநாட்டுப் பயணத்திற்குச் செல்லும் போது குறித்த நாட்டின் நாணயத்தை எடுத்துச் செல்வது மிகமிக அவசியமாகும். இதனால் தேவையான அனைத்துச் செலவீனங்களையும் எளிதாகச் செய்ய முடியும்.

மற்ற நாடுகளின் நாணயத்தை எங்கிருந்து பெறுகின்றோம் என பலரது மனதில் கேள்வி எழலாம். இத்தகைய ஆதாரத்தைச் சேர்ந்ததுதான் அந்நியச் செலவாணி சந்தையாகும்.

உலக நாடுகள் ஒவ்வொன்றும் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதிலே அதிக கவனம் செலுத்தி வருகின்றன. ஏனெனில் இதனைக் கொண்டே ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை ஏனைய நாடுகள் எடை போடுகின்றன என்பதனாலேயாகும்.

அந்நியச் செலாவணியின் மதிப்பானது நிலையாக இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டிருக்கும். அன்றாட உலக வர்த்தகத்திற்குத் தகுந்தாற்போல் மதிப்பு ஏறலாம் அல்லது இறங்கலாம்.

Table of Contents
அந்நிய செலாவணி என்றால் என்ன
அந்நிய செலாவணி சந்தையின் அடிப்படைகள்
அந்நிய செலாவணி என்றால் என்ன

“எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால் வெளிநாட்டுப்பணம் தான் அந்நியச் செலாவணி. வெளிநாட்டுப் பணத்தைத்தான் அந்நியச் செலாவணி என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் Forex Reserve என்று கூறுவார்கள்.

அந்நியச் செலாவணி என்ற சொல்லானது வெளிநாடு மற்றும் பரிமாற்றம் என்ற சொற்களின் கலவையிலிருந்து வருகின்றது. அந்நிய செலாவணி என்பது ஒரு சந்தையாகும். இது ஒரு நாணயத்தை மற்றொரு நாணயமாக மாற்றுவதற்கான செயல்முறையை எளிதாக்குகின்றது.

அந்நியச் செலாவணி என்பதன் எளிமையான விளக்கம் யாதெனில் பிற நாட்டுப் பணங்களை நாம் செலவளிப்பதே அந்நியச் செலாவணி எனப் புரிந்துகொள்ளலாம்.

அதாவது, அயல் நாடுகளிடையே வணிகப்பரிமாற்றத்தின் போது ஏற்படும் நாணய மதிப்பே அந்நியச் செலாவணி என அழைக்கின்றோம்.

அந்நிய செலாவணி சந்தையின் அடிப்படைகள்
மக்கள் பொதுவாகத் தமது நாணயங்களை முக்கியமாக இரண்டு நோக்கங்களுக்காக மாற்றிக் கொள்கின்றனர். அதாவது சுற்றுலா(Tourism) மற்றும் வர்த்தகத்திற்காக(Trade) மாற்றிக் கொள்கின்றனர்.

இவை இரண்டும் உலகவில் பரவலாக இருப்பதால் அந்நிய செலாவணி சந்தை உலகளவில் மிகச் சிறந்த திரவ சந்தைகளில் ஒன்றாகும்.

பங்குகள் மற்றும் நிதி வழித்தோன்றல்கள் மையப்படுத்தப்பட்ட சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. ஆனால் சுவாரசியமான விடயம் என்னவெனில் நாணயங்களிற்கு அத்தகைய சந்தை என்ற ஒன்று இல்லை என்பதாகும்.


உலகம் முழுவதிலும் நாணயங்கள் கணினித் தளங்கள் மூலமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன.

இவ்வகையான சந்தை அமைப்பு Over-The-Counter (OTC) System என்று அழைக்கப்படுகின்றது. நாணயங்கள் OTC இல் எந்தவொரு பிரிவிலும் வர்த்தகம் செய்யப்படுகின்றன. ஆனால் அவை எதிர்கால தளத்தில் அதாவது Future Platform இல் நிறைய அளவில் வர்த்தகம் செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு நாணயப் பரிவர்த்தனைக்கும் எப்போதும் இரண்டு நாணயங்கள் சம்மந்தப்பட்டிருக்கும். இந்த நாணயங்கள் நாணய ஜோடிகள் (Currency Pair) என்று அழைக்கப்படுகின்றன. (எடுத்துக்காட்டு – EUR/USD) இவ்வகை நாணயங்கள் ஒன்றுக்கொண்று அடிப்படை நாணயமாகவும், மேற்கோள் நாணயமாகவும் எழுதப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஜோடிக்கும் அதனுடன் தொடர்புடைய இரண்டு வகையான விலைகள் உள்ளன. ஏலவிலை (Bid Price), கேட்கும் விலை (Ask Price).


ஏல விலை என்பது வியாபார நாணயத்திற்குச் செலுத்திப் பெற விரும்பும் ஒன்றாகும். கேட்கும் விலை என்பது ஒரு வியாபாரி அதே நாணயத்தினை விற்கும் விலையாகும். இந்த இரண்டிற்குமான வேறுபாடு ஜோடியின் பரவல் என்று அழைக்கப்படுகின்றது.

சந்தையில் முன் வரையறுக்கப்பட்ட ஜோடிகள் உள்ளன. இவை மட்டுமே சந்தையில் வர்த்தகம் செய்ய முடியும். 3 வகையான நாணய ஜோடிகள் உள்ளன. பெரிய (Major Pair), சிறிய (Minor Pair) மற்றும் கவர்ச்சியான ஜோடிகள் (Exotic Pair) என்பனவே இவையாகும்.

முக்கிய ஜோடிகள் அனைத்தும் அமெரிக்க டொலராகவும் அல்லது அமெரிக்க டொலரை ஒரு அங்கமாகக் கொண்ட ஜோடிகளாகும். சிறிய ஜோடிகள் குறிக்கு ஜோடிகள் எனப்படுகின்றது.

சமயம் என்றால் என்ன

சமயம் என்றால் என்ன
SAMAYAM ENRAL ENNA

உலகில் மனிதன் தோன்றி குழுவாக வாழ்ந்து சமூகமான போது சமயங்கள் தோன்றின. அவ்வாறு தோன்றிய பல்வேறு சமயங்களில் முக்கியமானவையாக இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவை முப்பெரும் சமயங்களாகும்.

இன்று உலகில் பன்னிரண்டுக்கும் மேலான பெரிய சமயங்களும், நூற்றுக்கணக்கான சிறிய சமயங்களும் உள்ளன. உலகின் 740 கோடி மக்கள் தொகையில், 600 கோடி மக்கள் ஏதாவது ஒரு சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.

உலகிலுள்ள பெரிய சமயங்களில் இந்து சமயம், ஜைன சமயம், புத்தசமயம், சீக்கிய சமயம் ஆகியவை கிழக்கத்திய நாடுகளில் தோன்றிய சமயங்கள் ஆகும்.

ஜுடாயிசம், ஜொரொஸ்ட்ரியனிசம், கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதமும் மேற்கு நாடுகளில் தோன்றியவை ஆகும். ஒவ்வொரு சமயமும் வழிபாட்டுத் தலங்களையும், சமய குருமார்களையும் சமய சடங்குகளையும் கொண்டிருக்கின்றன.

Table of Contents
சமயம் என்றால் என்ன
இந்து சமயமும் அறிவியலும்
சமயம் என்றால் என்ன

சமயம் (சமம்+இயம்) என்றால் எல்லோரும் சமம் என்ற எண்ணத்தோடு ஒத்தும், உதவியும் வாழ வேண்டும் என்பதாகும்.

மேலும், சமயம் என்பது இறை உயிர் உலகம் பற்றிய ஒரு நம்பிக்கை முறை எனலாம். கடவுள் நம்பிக்கை அல்லது கடவுள் எழுந்தருளி இருப்பதை ஏற்கின்ற அமைப்புகளை சமயம் எனலாம்.

அதாவது, சமயம் அல்லது மதம் என்பது கடவுள் நம்பிக்கையின் அடிப்படையிலான கோட்பாட்டமைப்புகளில் ஒன்று ஆகும். ஒரு கடவுள் அல்லது கடவுள்கள் மீதான நம்பிக்கையும் அது தொடர்பான செயற்பாடுகளையும், சமயச் சடங்குகளையும் மதம் குறிக்கிறது.

இந்து சமயமும் அறிவியலும்
இந்து மதம் என்பது ஒரு புதிரான மதமாகும். எண்ணிலடங்கா சடங்குகள், மரபுகள், சம்பிரதாயங்கள் நம்பிக்கையின் பின்புலமாக அமைந்துள்ளன.

நம்மில் பலர் பல சடங்குகளை மூட நம்பிக்கை என ஒதுக்கி வைத்து விடுகின்றோம். ஆனால் அவைகள் எல்லாம் பழங்காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வருபவைகளாகும். இந்து சமயத்தில் ஒவ்வொரு சடங்குகளுக்கு பின்னால் பல அறிவியல் காரணங்கள் உள்ளன.

நமஸ்காரம் செய்வது இந்துக்களின் உன்னத செய்கையாகும். பொதுவாக இதை மரியாதை அளிக்கும் செயலாகப் பார்க்கின்றனர்.

ஆனால் நமஸ்காரம் செய்யும் போது இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும் அவைகள் ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்பட தொடங்கும். இதனால் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்க செய்யும்.


திருமணமான இந்து பெண்கள் மெட்டி அணிவது வாடிக்கையான ஒன்றே. அது வெறும் அலங்காரத்திற்கு மட்டுமல்ல பொதுவாக பெருவிரலுக்கு அடுத்த விரலில் தான் பெண்கள் மெட்டி அணிவார்கள்.

இந்த விரல்களில் இருந்து செல்லும் நரம்பு கர்ப்பப்பை மற்றும் இதயத்திற்கு நேரடியாக செல்கிறது. இரண்டாம் விரலில் மெட்டி அணிவதால் கர்ப்பப்பை வலுவடைந்து மாதவிடாய் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவும்.

இந்திய நாட்டில் சமயங்கள் பரிணாம வரிசையை அடிப்படையாகக் கொண்டு சமயம் ஆறு பிரிவுகளாக உருவாயின. அவை சைவம், சாக்தம், வைணவம், செயரம், காணபத்தியம், கௌமாரம் ஆகும்.

வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் எனும் நான்கு வளங்களையும் உள்ளடக்கிய இறைநிலையை உணர்ந்த ஞானிகள் அது அசைவற்றிருப்பதால் சிவம் எனக் கூறி சைவ சமயத்தை உருவாக்கினர்.


இறைநிலையிலிருந்து தோன்றிய சக்திதான் தெய்வம் என்ற பெரியவர்கள் சாக்த சமயத்தை உருவாக்கினர்.

விண் தற்சுழற்சியின் போது சத்தத்துடன் சுழல்வதை உணர்ந்தவர்கள் இறைவனுக்கு சங்கையும், சக்கரத்தையும் கொடுத்து வைணவ சமயத்தை உருவாக்கினர்.

அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற பஞ்ச தன்மாத்திரைகளை உணர்ந்தவர்கள் இவை இயற்கையின் ஐந்து கரங்கள் என விநாயகனை படைத்து காணபத்தியம் என்ற சமயத்தை உருவாக்கினர்.

பஞ்ச தன்மாத்திரைகளோடு உயிரின் அலையான மனத்தையும் சேர்த்து இயற்கைக்கு ஆறு முகங்கள் என அறிந்தவர்கள் கௌமார சமயம் எனக் கூறி வழிபட்டனர்.

பிரபஞ்சம் என்றால் என்ன

பிரபஞ்சம் என்றால் என்ன
PRABANJAM ENRAL ENNA

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் நிறைந்து எங்கும் பரந்து விரிந்திருக்கும். பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியே பிரம்ம சக்தி எனப்படும். இதை பிரபஞ்ச ஆற்றல் எனவும், பேராற்றல் எனவும், அகிலத்தை இயக்கும் மகாசக்தி, பராசக்தி, பரம்பொருள் என்றும் பல விதமாகவும் அழைக்கின்றனர்.

இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும், வடிவமும் பிரபஞ்ச ஆற்றல் மூலமாகவே உருவாகி பாதுகாத்து மாற்றப்படுகின்றது. (ஒரு தன்மையிலிருந்து ஒரு தன்மையாக மாற்றப்படுகின்றது). உதாரணமாக ஒரு மனிதன் பிறப்பதும், வளர்வதும் பின்னர் பிரபஞ்ச பூத உடலை விட்டு பிரிவதும் அனைத்திற்கும் பிரபஞ்ச ஆற்றலே காரணமாகின்றது.

பிரபஞ்சம் ஒரு புள்ளியில் தொடங்கியது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அணுவானது ஒரு புள்ளியில் இருக்கும். அதன் ஆற்றலானது ஒரு சிறு புள்ளியில் இருந்து பெரு வெடிப்பின் மூலமாக வெடித்துச் சிதறி அது ஒவ்வொன்றும் பேராற்றலாக மாறியது. இவ்வாறு ஆற்றலாக மாறி அது விரிவடைந்து நாளடைவில் ஒரு பிரபஞ்சமாக மாறியது என்பது தான் அறிவியல் கருத்து.

இப்பிரபஞ்சமானது விரிவடைந்து கொண்டே தான் இருக்கும். இதேபோல் பூமியும் விரிவடைந்து கொண்டிருக்கும். உதாரணம் சில மலைகள் வளர்ந்துகொண்டே இருக்கும். மலைகளின் உயரமும் உயர்ந்துகொண்டே இருக்கும்.

Table of Contents
பிரபஞ்சம் என்றால் என்ன
பிரபஞ்சம் உருவான விதம்
பிரபஞ்சம் என்றால் என்ன

பிரபஞ்சம் தமிழில் பேரண்டம் என அழைக்கப்படுகின்றது. பிரபஞ்சம் என்பது அனைத்தையும் உள்ளடக்கியது ஆகும்.

இந்த உலகம் மற்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், கோள்கள், சூரியன், நிலவு, விண்மீன்களுக்கிடையிலுள்ள விண்துகள்கள், அவற்றின் இயக்கம், இவற்றையெல்லாம் சூழ்ந்துள்ள வெட்டவெளி, கண்ணுக்குத் தெரியாத தொலைவிலுள்ள பால்வெளி மண்டலங்கள் ஆகிய எல்லாம் சேர்ந்தது பிரபஞ்சம் ஆகும்.

பிரபஞ்சம் உருவான விதம்
பிரபஞ்சம் தோன்றி 13.7 பில்லியன் ஆண்டுகளாகின்றது. பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பதற்கு பல கருத்துக்கள் இருந்தாலும் பெருவெடிப்புக் கொள்கையை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்கின்றது.

இந்த பெரு வெடிப்பு 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறு புள்ளியிலிருந்து ஒரு பிரஞ்சமாக விரிவடைந்து இருக்கலாம் என்று அறிவியளாலர்கள் குறிப்பிடுகின்றனர். நமது பிரபஞ்சம் உருவான பொழுது ஒரு வெளிச்சம் தோன்றியது அதுவே இன்று வரை நாம் பார்க்கிறோம் என்று கூறுகிறார்கள்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த வெடிப்பு ஒரு சிறிய புள்ளியிலிருந்து உருவாகி விரிவடைந்து விரிவடைந்து ஒரு மிக பெரிய பிரபஞ்சத்தை உருவாக்கியுள்ளது.

இந்தப் பிரபஞ்சம் மிகப் பெரியதாக இருப்பதனால் அதனை ஒளியாண்டு (light year) என அழைக்கின்றார்கள். ஒரு ஒளியாண்டு என்பது 9.46 மில்லியன் கிலோமீட்டராகும். ஒளியாண்டு என்றால் ஒளி ஒரு ஆண்டில் பயணம் செய்யும் தொலைவாகும்.

பல சூரிய குடும்பம் சேர்ந்ததே பிரபஞ்சம் என்கின்றோம். பல பிரபஞ்சங்கள் சேர்ந்ததை Cluster என்கின்றனர். பல Cluster சேர்ந்ததை Super Cluster என்கின்றனர். Super Cluster என்பது 200 மில்லியன் ஒளியாண்டு விட்டமுடையது.

மாநகராட்சி என்றால் என்ன

மாநகராட்சி என்றால் என்ன
MANAGARATCHI ENDRAL ENNA

ஒரு பெரு நிலப்பகுதியை நிர்வாகம் செய்ய வேண்டுமெனில் தனியாக நிர்வாகம் செய்வது மிகவும் கடினமானதாகும். ஆகவே அதனை பிரித்து நிர்வகிப்பது இலகுவானதாகும்.

இந்தியா போன்ற பெருநாட்டை நிர்வகிப்பதற்கு மாநிலங்களாக பிரிக்கின்றனர். மாநிலங்களை மாவட்டங்களாகவும், மாவட்டங்களுக்குள் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராமப்புற பஞ்சாயத்து, வார்ட்டு என சிறு சிறு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. இதன்மூலம் நிர்வாகம் சிறப்பாக இடம்பெறும்.

இவற்றிற்கு மாநில அல்லது மாகாண அரசுகள் தனியான சட்டங்கள் மூலம் தன்னாட்சி அதிகாரம் பெறுகின்றன.

இந்தியாவின் மிகப்பெரிய மாநகராட்சியாக மும்பை விளங்குகின்றது. இதனைத் தொடர்ந்து டெல்லி, கொல்கத்தா, சென்னை போன்றனவும் பெரு மாநகராட்சிகளாக விளங்குகின்றன.

மாநகராட்சி – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு, மாநில அரசுக்குட்பட்ட, பெரு நகரங்களை ஆளுமை செய்யும் ஆட்சி மன்றம்.


நகராட்சி – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு, மாநில அரசுக்குட்பட்ட நகரங்களை ஆளுமை செய்யும் ஆட்சி மன்றம்.

பேரூராட்சி – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு, மாநில அரசுக்குட்பட்ட பேரூர்களை ஆளுமை செய்யும் ஆட்சி மன்றம்.

கிராம பஞ்சாயத்து – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு, மாநில அரசுக்குட்பட்ட கிராமங்களை ஆளுமை செய்யும் ஆட்சி மன்றம்.

Table of Contents
மாநகராட்சி என்றால் என்ன
ஒரு நகராட்சி மாநகராட்சி அதற்குரிய தகுதிகள்
மாநகராட்சி அமைப்பு பணிகள்
தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்
மாநகராட்சி என்றால் என்ன
உள்ளாட்சி அமைப்புக்களில் ஒன்றுதான் மாநகராட்சி ஆகும். உள்ளுராட்சி பிரிவுகள் கிராமம், நகரம் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. நகர்ப்புற பிரிவுகளாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியன அடங்கும்.

கிராமப்புற பிரிவுகளாக உள்ளூராட்சி (கிராம பஞ்சாயத்து), ஊராட்சி ஒன்றியம் (பஞ்சாயத்து யூனியன்), மாவட்ட ஊராட்சி ஒன்றியம் ஆகியன அடங்கும்.

மாநகராட்சி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு, மாநில அரசுக்குட்பட்ட, பெரு நகரங்களை ஆளுமை செய்யும் ஆட்சி மன்றம் ஆகும்.


அதாவது மாநகராட்சி என்பது ஒரு மாநகரம் அல்லது பெருநகர் பகுதியினை கொண்ட உள்ளாட்சி அமைப்பாகும். இந்தியாவில் பத்து இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகள் மாநகராட்சி தகுதி பெறுகின்றன. இவற்றிற்கு மாநில அல்லது மாகாண அரசுகள் தனியான சட்டங்கள் மூலம் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கின்றன.

ஒரு நகராட்சி மாநகராட்சி அதற்குரிய தகுதிகள்
ஒரு நகராட்சி மாநகராட்சியாவதற்கு சட்டத்தின் அடிப்படையில் எவ்வித தகுதியும் இல்லை. அரசாங்கமானது ஒரு இடத்தை எடுத்து பகுப்பாய்வு செய்து அதனை மாநகராட்சியாக அறிவிப்பதற்கு அதிகாரம் உண்டு.

எனினும் நகராட்சி, மாநகராட்சி ஆக்குவதற்கு ஒரு சில வரையறைகளைப் பரிந்துரை செய்கின்றனர்.

ஒரு மாநகராட்சியாக மாற வேண்டுமெனில், மக்கள் தொகை குறைந்த பட்சம் பத்து லட்சத்திற்கும் மேல் இருக்க வேண்டும். வருடத்திற்கு 50 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட வேண்டும்.


எனவே மக்கள் தொகை, வருவாய் அடிப்படையில் பிரிக்கின்றனர். எனினும் இரண்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட இடங்களும் மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. ஆகவே இதற்கு பொதுவான வரையறை என்பதில்லை.

மாநகராட்சி அமைப்பு பணிகள்
மாநகராட்சியின் பணிகளாக

ஒரு நகரில் மாநகராட்சி சாலைகள் பராமரிப்பு
பொதுப்போக்குவரத்து, குடிநீர் வழங்கல்
பிறப்பு, இறப்பு பதிவு
கழிவுகள் அகற்றுதல்
ஆகிய பொறுப்புகளை ஏற்று உள்ளது. மேலும் சில மாநகராட்சிகள் பொதுமக்கள் பாதுகாப்பிற்கான தீயணைப்பு மற்றும் முதலுதவி வண்டி, சேவைகளையும் வழங்குகின்றன. பூங்காக்கள் மற்றும் கட்டிடங்களையும் பராமரிக்கின்றன.

இவற்றிற்கான நிதி வருவாய் சொத்து வரி, மனமகிழ்வு வரி, ஆக்ட்ராய் எனும் நுழைவு வரி மூலமும் பயன்படுத்தும் சேவைகளுக்கான கட்டிடங்கள் மூலமும் பெறப்படுகின்றது.

தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்
தமிழகத்தில் சுமார் 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் முதலாவது மிகப்பெரிய மாநகராட்சியாகச் சென்னை விளங்குகின்றது.

இதனைத் தொடர்ந்து முறையே கோயம்பத்தூர் மாநகராட்சி, திருச்சிரப்பள்ளி மாநகராட்சி, மதுரை மாநகராட்சி, சேலம் மாநகராட்சி போன்றனவும் மிக முக்கியமான மாநகராட்சிகளாக விளங்குகின்றன.

தமிழகத்தில் மிகக் குறைந்த வரி வருவாயைக் கொண்ட மாநகராட்சியாகத் திண்டுக்கல் விளங்குகின்றது. மாநகராட்சி மக்கள் தொகைக்கேற்ப வார்ட்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளை இணைத்துப் புதிய இணையத்தளம் உருவாக்கப்பட்டு அதன் வாயிலாக சொத்துவரி, குடிநீர்க் கட்டணம் மற்றும் தொழில் வரி, பாதாள சாக்கடைக் கட்டணம் மற்றும் குத்தகை, பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக் கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புதன், 28 செப்டம்பர், 2022

வானம் வேறு பெயர்கள்

வானம் வேறு பெயர்கள்
வானம் வேறு சொல்

ஐம்பூதங்களில் ஒன்றே வானம் ஆகும். வானம் என்பது பூமியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் விரிந்து காணப்படும் அனைத்தையும் உள்ளடக்கிய பரந்த வெளியை குறிக்கும். இது வளிமண்டலத்திற்கு அப்பால் உள்ள விண்வெளியையும் குறிக்கும்.

வானியலில் வானமானது “வானக்கோளம்” எனவும் அழைக்கப்படுகின்றது. வானம் என்பது கற்பனையானது என்றும் அதில் சூரியன், சந்திரன், விண்மீன் போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் வானம் என்பது இன்றியமையாதது இதனாலையே இந்துக்கள் சிதம்பரத்தை வானத்திற்கு உரிய தலமாக கொண்டு வழிபடுகின்றனர். அங்குள்ள இறைவனின் பெயர் ஆகாச லிங்கம் ஆகும்.

இவ்வாறு சிறப்புடைய வானத்திற்கு வேறு பல பெயர்கள் வழங்கப்படுகின்றன.

Table of Contents
வானம் வேறு பெயர்கள்
வானத்தில் காணப்படும் பொருட்கள்
வானத்தின் நிறம்
வானம் வேறு பெயர்கள்
அண்டம்
ககனம்
ஆகாயம்
உம்பர்
எமிலி
ககண்டு
கார்
கொண்டல்
சேண்
நிருபம்
மஞ்சு
விசும்பு
விண்
ஆகாயம்
அத்திட்டம்

மொழிபெயர்ப்புகள்

sky – வானம்
வானத்தில் காணப்படும் பொருட்கள்
இந்த வெளியிலே சூரியன், நிலா, விண்மீன்கள், முகில், வானவில், வடமுனை ஒளி என்பன வானத்தில் காணக்கூடிய இயற்கையான சில தோற்றப்பாடுகளாகும். பொழிவு (வானிலையியல்), மின்னல் என்பனவும் வானத்துடன் தொடர்புடைய தோற்றங்களே ஆகும்.

வானத்தின் நிறம்
பகலில், முகில்களற்ற வானம் இருக்கையில் சூரியன் தெரியும். அத்துடன் முகில்களற்ற வானம் நீல நிறமாக இருக்கும். இதற்குக் காரணம் வளிமண்டலத்தில் இருக்கும் வளிமம் ஆகும்.

சூரிய ஒளியிலிருந்து வரும் வெவ்வேறு நிறங்களில், நீல நிற ஒளியை அதிகமாக சிதறடிக்கின்றது.

நீல நிறத்தை விடவும் அலைநீளம் குறைவான ஊதா, கருநீலம் ஆகிய நிறங்கள் அதிகமாகச் சிதறடிக்கப்பட்டாலும், நமது கண்களில், குறிப்பிட்ட நிறக் கதிர்களைப் பெற்றுக் கொள்ளுவதற்கான உணர்திறன் குறைவாக இருப்பதனால் நீல நிறமே, பார்வையில் ஆதிக்கம் செலுத்துகின்றது.

அந்தி நேரத்தில், அல்லது அதிகாலை வேளைகளில் சூரியன் மிகவும் தூரத்திலும், ஒரு சாய்விலும் இருப்பதனால், சிதறடிக்கப்படும் நீல ஒளி வேறு திசைக்குச் சென்றுவிடும். எனவே வானம், மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

இரவில் சூரிய ஒளி இன்மையால், வானம் இருண்ட நிறத்தில் தெரியும். இரவில் நமது பார்வையில், பிரகாசமான சூரிய ஒளியின் குறுக்கீடு இல்லாமல், சூரியனின் ஒளி விண்மீன்கள், கோள்கள், நிலா போன்றவற்றில் பட்டுத் தெறிப்பதால், நம்மால் அவற்றைப் பார்க்கக் கூடியதாக இருக்கும்.


ஆனால், பகலிலோ, இரவிலோ, முகில்கள் வானத்தில் இருப்பின், முகிலினால் ஏற்படும் மறைப்பினால், சூரியனையோ, ஏனைய விண்மீன்கள், கோள்கள், நிலாவையோ நம்மால் பார்க்க முடியாது.

இவ்வாறு சிறப்புடைய வானம் பற்றி பல அறிசஞர்கழ் தம் பாடல்களில் பாடி உள்ளனர். எனவே இயற்கை அன்னையின் கொடையான வானம் மேன்மையானது எனலாம்.

இரவு வேறு பெயர்கள்

இரவு வேறு பெயர்கள்
இரவு வேறு சொல்

அனைத்து உயிரினமும் தன் கடமைகளை எல்லாம் நிறைவு செய்த பின் ஓய்வு எடுக்கும் காலமே இரவாகும்.

இரவு என்பது “இர்” என்ற சொல்லடியிலிருந்து தோற்றம் பெற்றது. இரவு என்பது பூமியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் சூரிய ஒளி இல்லாது இருக்கும் காலப்பகுதியே ஆகும்.

இக்காலப்பகுதி நாட்டுக்கு நாடு வேறுபடும். இருள் சூழ்ந்திருக்கும் நேரமே இரவாகும். இது சூரியன் மறைவுக்கும் சூரியன் உதிப்பதற்கும் இடைப்பட்ட காலமாகும்.

ஓர் இரவுவும் ஓர் பகலும் கொண்டது ஓர் நாளாகும். அக்காலம் தொட்டு இக்காலம் வரை இரவு என்பது மகிமையுடையது. இவ்விரவுக்கு பல பெயர்கள் வழங்கப்படுகின்றன.

Table of Contents
இரவு வேறு பெயர்கள்
இரவு தோன்றும் முறை
இரவின் சிறப்புக்கள்
இரவு வேறு பெயர்கள்
இரா
இராத்திரி
நிசி
இருட்டு
இருள்
மங்குல்
அல்
இரவு தோன்றும் முறை

பூமி தனது அச்சில் சுழலும்போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பாதி சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருப்பதனால், அப் பக்கத்துக்கு சூரிய ஒளி கிடைப்பதில்லை. இதன் காரணமாக அப் பகுதி இருட்டாக இருக்கும். அத்தகைய பகுதிகளில் அந்த நேரம் இரவாக இருக்கும். இவ்வாறே இரவு தோன்றுகின்றது.

இரவின் சிறப்புக்கள்
பூமியில் வாழும் எல்லா உயிரினமும் ஓய்வு எடுக்கும் நேரம் ஆகும்.
நாளின் முடிவைக் காட்டும் நேரம்.
பல அற்புதங்கள் இடம்பெறும் காலப்பகுதி.
ஆரம்ப கால கவிகளால் அதிகளவாக போற்றி பாடப்பட்ட காலப்பகுதி.
காதலர்களுக்கு உரிய காலப்பகுதி.
சந்திரன் என்னும் அற்புதம் வெளித்தெரியும் காலம்.
இவ்வாறு சிறப்புடைய காலப்பகுதியே இரவாகும்.


மேலாண்மை என்றால் என்ன

மேலாண்மை என்றால் என்ன
MELANMAI ENRAL ENNA

மேலாண்மை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கைக்கு இன்றியமையாதது மற்றும் அனைத்து வகையான நிர்வாகங்களையும் நடத்துவதற்கு அவசியமானது. நல்ல நிர்வாகமே வெற்றிகரமான நிறுவனங்களின் முதுகெலும்பு ஆகும்.

வாழ்க்கையை நிர்வகித்தல் என்பது வாழ்க்கையின் நோக்கங்களை அடைவதற்கான காரியங்களைச் செய்வதாகும். மற்றும் ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பது என்பது அதன் நோக்கங்களை அடைய பிறர் மூலம் தேவையான விஷயங்களைச் செய்வதாகும்.

தலைமைத்துவம் என்பது நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளில் முக்கியப் பங்கும் வகிக்கிறது.

அதே நேரத்தில் மேலாண்மை என்பது தொழில்நுட்ப மற்றும் சமூக செயல்முறைகளின் ஒருங்கிணைந்த அங்கமாகும்.

Table of Contents
மேலாண்மை என்றால் என்ன
மேலாளரின் ஐந்து அடிப்படை செயல்பாடுகள்
மேலாண்மை என்றால் என்ன

ஒரு நிறுவனத்தின் இலக்குகளை திறம்பட அடைய மனித வளங்கள், நிதி, உடல் மற்றும் தகவல் வளங்களை திட்டமிடுதல், முடிவெடுத்தல், ஒழுங்கமைத்தல், வழிநடத்துதல், உந்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் மேலாண்மை ஆகும்.

பொதுவாக மேலாண்மை என்பது திட்டமிடல், ஒழுங்கமைத்தல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளுடன் தொடர்புடைய கோட்பாடுகளின் தொகுப்பாகும் எனக்கொள்ளலாம்.

மேலாளரின் ஐந்து அடிப்படை செயல்பாடுகள்
இலக்குகளை அமைத்தல் – ஒரு மேலாளர் வெற்றியை அடைவதற்கும், பராமரிப்பதற்கும் முதன்மையான வழி இலக்குகளை அமைப்பது ஆகும்.

ஏற்பாடு செய்தல் – மேலாளர்கள் பணியின் வகையை மதிப்பீடு செய்கிறார்கள். அதை அடையக்கூடிய பணிகளாகப் பிரித்து, அதை ஊழியர்களுக்கு திறம்பட வழங்குகிறார்கள்.

நிறுவனமானது தனிப்பட்ட ஊழியர்கள் மற்றும் நிறுவனத்திற்குள் உள்ள துறைகள் அல்லது நிறுவனங்களுக்கு இடையேயான தொடர் உறவுகளைக் கொண்டுள்ளது. இந்த தனிநபர்களும் நிறுவனங்களும் இணக்கமாக வேலை செய்வதை உறுதி செய்வது மேலாளரின் பொறுப்பாகும், ஒரு நல்ல மேலாளர் தங்கள் குழு உறுப்பினர்களிடையே தனிப்பட்ட உறவுகளை உருவாக்குவதில் திறமையானவராக இருக்க வேண்டும்.

அணியை ஊக்குவித்தல் – அமைப்பு மற்றும் பிரதிநிதித்துவப் பணிகளுக்கு கூடுதலாக, உந்துதல் என்பது ஒரு குழுவில் உள்ள பல்வேறு வகையான ஆளுமைகளைக் கையாளும் திறன்களைக் கொண்டுள்ளது. ஒரு திறமையான மேலாளர் வெற்றிகரமான அணிகளை எவ்வாறு உருவாக்குவது, வழிநடத்துவது மற்றும் உறுப்பினர்களை எவ்வாறு ஊக்கப்படுத்துவது என்பதை அறிந்திருக்க வேண்டும்.

அளவீட்டு அமைப்புகளை உருவாக்குதல் – நிர்வாகிகள் குழு இலக்குகளை அல்லது முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளை அமைக்க வேண்டும்.


செயல்திறனைப் புரிந்துகொள்வதற்கான அளவிடக்கூடிய வழிகளைக் கொண்டு வருவது சவாலானதாக இருப்பதால், மேலாளர்கள் பெரும்பாலும் ஆக்கப்பூர்வமாகவும் சிந்தனையுடனும் இருக்க வேண்டும்.

இருப்பினும், நிர்வாகத்தின் மற்ற செயல்பாடுகளைப் போலவே, வணிக செயல்திறனை மேம்படுத்துவதற்கு அளவீடு முக்கியமானது.

வளரும் மக்கள் – தங்கள் அணியை ஒரு இலக்கை நோக்கி இட்டுச் செல்வதற்கு மேலாளர்கள் தங்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றலாம். அவர்களின் வாழ்க்கையில் முன்னேற இலக்குகளை அமைக்க அவர்களுக்கு உதவலாம்.

இந்த ஐந்து செயல்பாடுகளை வெற்றிகரமாகப் பயன்படுத்த மேலாளர்கள் தலைமைத்துவ திறன்களைக் கொண்டிருக்க வேண்டும்.


தங்கள் குழு உறுப்பினர்களது பலம் மற்றும் பலவீனங்களை அடையாளம் கண்டு அவர்களின் செயல்திறனை மேம்படுத்த உதவுவதுடன் அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பும் மேலாளருக்கு உண்டு.

மேலாளர்கள் திறமையான மேற்பார்வையாளர்களாக விளங்க தங்கள் தலைமைத்துவத் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

அபிவிருத்தி என்றால் என்ன

அபிவிருத்தி என்றால் என்ன
ABIVIRUTHI IN TAMIL

அபிவிருத்தியானது கால ரீதியாக மாற்றமடையக் கூடியது. 20 ஆம் நூற்றாண்டில் முன்னரைப் பகுதியில் ஒரு நாட்டினுடைய பொருளாதார ரீதியிலான அபிவிருத்திதான் அபிவிருத்தியாகக் கருதப்பட்டது.

அதாவது ஆரம்ப காலத்தில் பொருளாதாரக் குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தி என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

அந்தவகையில் ஆரம்ப காலத்தில் அபிவிருத்தியை அளவீடு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட குறிகாட்டிகளாக மொத்தத் தேசிய உற்பத்தி, தலா வருமானம் போன்றவற்றின் மூலமாக அபிவிருத்தி அளவீடு செய்யப்பட்டது.

இக்குறிகாட்டிகள் யாவும் பொருளாதாரக் குறிகாட்டிகளாகவே காணப்பட்டது. அந்த வகையில் ஆரம்பகாலத்தில் பொருளாதார அபிவிருத்தியாக மட்டுமே காணப்பட்டது.

பிற்பட்ட காலத்தில் பரந்துபட்ட எண்ணக்கருவாக வளர்ந்தது. அதாவது 20 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் அபிவிருத்தி என்பது பௌதீக மற்றும் பொருளாதார குறிகாட்டிகள் மட்டுமன்றி மனித அபிவிருத்திக்கு அவசியமான பல்வேறுபட்ட கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது.


20 ஆம் நூற்றாண்டில் பின்னரைப் பகுதியில் அபிவிருத்தி என்ற கருத்தைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்ட குறிகாட்டிகளாக சிசுமரண வீதம், பிரசவ மரண வீதம், எழுத்தறிவு வீதம்,பிறப்பின் போது எதிர்பார்க்கப்படும் ஆயுள் எதிர்பார்ப்பு, தகவல் தொடர்பாடல் வசதிகள், சுகாதார வசதிகள், கல்விக்கான சந்தர்ப்பம், அரசியல் தீர்வினை எடுக்கக் கூடிய சுதந்திரம், பொருட்கள் சேவைகளைக் கொள்வனவு செய்யும் சக்தி, வருமான வேறுபாடு போன்ற குறிகாட்டிகள் பயன்படுத்தப்பட்டது.

அண்மைக்காலத்தில் அபிவிருத்தி என்பது பொருளாதார அபிவிருத்தி மட்டுமல்ல சமூகப் பொருளாதார அரசியல் ரீதியான பல்வேறுபட்ட காரணிகளை ஒன்றிணைத்த தன்மையினை அவதானிக்க முடிகின்றது.

Table of Contents
அபிவிருத்தி என்றால் என்ன
மனிதவள அபிவிருத்தியில் கல்வியின் முக்கியத்துவம்
அபிவிருத்தி என்றால் என்ன
அபிவிருத்தி என்றால் என்ன என்பதற்கு பல அறிஞர்களும் நிறுவனங்களும் வரைவிலக்கணம் கூறியுள்ளன. “நாட்டில் பொருளாதார அபிவிருத்தியோடு சமூக அபிவிருத்தியும் ஏற்பட வேண்டும்” என அபிவிருத்தி பற்றி 1978 ஆம் ஆண்டு யுனெஸ்கோ பிரகடனம் குறிப்பிட்டுள்ளது.

டட்லி சியர்ஸ் என்பவர் “யாதேனும் நாட்டில் வறுமை ஒழித்து, தொழில் வாய்ப்புக்கள் அதிகரித்து, வருமானம் பிரிந்து செல்வதில் ஏற்றத்தாழ்வு நீங்குமாயின் அதுவே அபிவிருத்தி” எனக் கூறியுள்ளார்.

எனவே அபிவிருத்தி என்பது ஒரு நாட்டின் சனத்தொகை, சமூக கலாசார, ஒழுக்கம் ஆகிய காரணிகளுடன் தொடர்புபடுத்தப்படுகின்ற தொடர்ச்சியான செயன்முறை அபிவிருத்தி எனக் கொள்ள முடியும்.

மனிதவள அபிவிருத்தியில் கல்வியின் முக்கியத்துவம்
மனிதவள அபிவிருத்தி என்பதன் மூலம் கருதப்படுவது நபர்களின் ஆற்றல், திறன்கள், வல்லமை ஆகியவையினை இனங்கண்டு அவற்றினைப் பயில்வதும், குணநலத்தினை மேம்படுத்துவதும் அதன் மூலம் பூரண ஆளமையினை உழைக்கும் வளமாக மாற்றுவதுமாகும்.


நாம் வாழும் பூமியில் உயர்குல சக்தியாக மனிதன் இருக்கின்றான். இன்றைய உலகில் பண்பாட்டுச் சுற்றாடலை முழுமையாகக் கட்டுப்படுத்துவது மனிதனே. மனிதனின் நுண்ணறிவுத் திறனின் ஊடாகப் பௌதீக சுற்றாடலில் உள்ள வளங்களினை பயன்படுத்தி புத்தாக்கங்களையும், உற்பத்திகளையும் மேற்கொள்கின்றான்.

எனவே எதிர்காலத்திற்கான பேண்தகு உலகினை நிர்மாணிக்கின்ற மனித உடல் உள ரீதியாக வலுப்படுத்தப்படல் என்பது மிக முக்கியமானதாகும்.

தொழில்நுட்ப அடிப்படையில் மிகவும் உயர் நிலையினை அடைந்துள்ள உலகிலுள்ள எல்லாப் பிரஜைகளுக்கும் குறித்த திறன்களை பெற்றுக் கொடுத்தல் மனிதனது கடமையாகக் காணப்படுகின்றது.

இதன் மூலமே பூரணமான ஆளுமைக் கட்டியெழுப்ப முடியும். அந்த ஆளுமையில் தொழிநுட்பத் திறன்கள், விழுமியங்கள், நன்னெறிகள், மனப்பாங்குகள், மனிதநேயங்கள் போன்றன வளர்க்கப்பட வேண்டும்.


நீர் வேறு பெயர்கள்

நீர் வேறு பெயர்கள்
NEER VERU PEYARGAL IN TAMIL

“நீரின்றி அமையாது உலகு” என திருவள்ளுவரின் வாக்கிற்கு இணங்க இவ்வுலகமானது நீரில்லாமல் இயங்க முடியாது. உலகு மட்டுமல்ல உயிரினங்கள் கூட நீர் இல்லாமல் வாழ முடியாது. இப்பூமியில் நீர் காணப்படுவதனாலேயே பூமி நீலக்கோல் ஆகின்றது.

மானிடனின் எல்லா தேவைகளுக்கும் நீர் அவசியமாகின்றது. உலகில் உள்ள நீரான நன்னீர், உவர்நீர், சவர்நீர் போன்ற நீரின் வகைகள் திண்மம், திரவம், வாயு போன்ற மூன்று நிலைகளில் காணப்படுகின்றன. இவ்வாறு சிறப்புடைய இயற்கை அன்னையின் கொடையான நீரானது பல்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.

நீர் வேறு பெயர்கள்
புனல்
விசும்பு
தண்ணீர்
ஜலம்
அம்பு
அறல்
அனலாற்றி
இவ்வாறான் பெயர்கள் நீருக்கு வழங்கப்படுகின்றன. என்பதை இதன் மூலம் அறியலாம்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2022

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை
NEERIN MUKKIYATHUVAM KATTURAI IN TAMIL

இந்த பதிவில் நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை பதிவை காணலாம்.

இயற்கையின் வரமாக கிடைக்கும் நீரானது மனிதனுக்கு மட்டுமின்றி, பிற உயிர்கள், தாவரங்கள் என அனைத்திற்கும் அத்தியாவசிய தேவை ஆகும்.

நீரின் முக்கியத்துவம்
Neerin Mukkiyathuvam Katturai In Tamil
மரம் வளர்ப்போம் கட்டுரை
Table of Contents
நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
நீரின் பிறப்பிடம்
நீரின்றி அமையாது உலகு
நீர்விரயம்
நீரை பாதுகாக்க மேற்கொள்ள கூடிய நடவடிக்கைகள்
முடிவுரை
நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
நீரின் பிறப்பிடம்
நீரின்றி அமையாது உலகு
நீர் விரயம்
நீரை பாதுகாக்க மேற்கொள்ளக் கூடிய வழிமுறைகள்
முடிவுரை
முன்னுரை
தண்ணீர் என்பது மனிதன் வாழ்வதற்கான மூலாதாரமாகும். உணவின்றி மனிதனால் சில நாட்கள் வாழமுடியம் ஆனால் நீரின்றி மூன்று தினங்கள் கூட வாழமுடியாது.

மனிதர்கள் மாத்திரமன்றி இங்கே படைக்கப்பட்டிருக்கின்ற தாவரங்கள், பறவைகள், விலங்குகள் என அனைத்து வகையான ஜீவராசிகளுக்கும் நீரானது மிகவும் அவசியமென்பது யாவரும் அறிந்த ஒன்று.


பூமியில் நீர் மூலாதாரம் இருப்பதனால் தான் மனித வாழ்க்கையும் பிற உயிரினங்களின் நிலவுகையும் சாத்தியமாகி இருக்கின்றது.

இக்கட்டுரையில் நீர் எவ்வாறு உருவாகிறது, அதன் முக்கியத்துவங்கள் மற்றும் நீர் விரயம் அதனை பாதுகாக்க என்ன செய்யலாம் என்பன தொடர்பாக நோக்கப்படுகிறது.

நீரின் பிறப்பிடம்
நீரானது ஒரு ஐதரசன் மற்றும் இரண்டு ஒட்சிசன் (H2O) மூலக்கூறுகளால் உருவான பங்கீட்டு வலுப்பிணைப்பாக அறியப்படுகிறது. பூமியில் 71 சதவீதமானது நீரினாலும் 29 சதவீதம் நிலத்தினாலும் உருவாகியுள்ளது.

இங்கு நீரின் சதவிகிதம் உயர்வாக உள்ளது. சமுத்திரங்கள், கடல்கள், ஏரிகள், ஆறுகள், குளங்கள், நீரூற்றுக்கள், தரைக்கீழ் நீர், பனிக்கட்டி, வளிமண்டலம் இவை தான் பூமியில் நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள மூலங்களாகும்.

இங்கே உள்ள நீர் தான் பூமியை வரண்டு பாலைவனமாகாமலும் குளிர்ந்து பனிக்காடாக மாறாமலும் சமநிலையில் வைத்திருக்கின்றன.

இங்குள்ள நீர் ஆவியாகி, ஒடுங்கி, படிவு வீழ்ச்சியாகி, ஓடும் நீராகி மீண்டும் நீர்நிலைகளை அடையும் அவை மீண்டும் ஆவியாகும். இவ்வாறு ஒரு நீரியல் வட்டமாக பூமியை சமநிலையாக வைத்திருக்கிறது.

பூமியில் நீரானது திண்மம், திரவம், வாயு எனும் மூன்று நிலைகளில் காணப்படுகிறது. மனித உடலும் 60 சதவீதம் நீரினாலே உருவாகியுள்ளது. இவ்வாறு நீர் இங்கே பரந்து வியாபித்துள்ளது.

நீரின்றி அமையாது உலகு

“நீர் இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு” நீர் இல்லையென்றால் இவ்வுலகமே இல்லை என்கிறார் திருவள்ளுவர். அந்தளவிற்கு நீரின் முக்கியத்துவமானது காணப்படுகிறது.

இங்கே மனித உடலில் நீரானது உடல் வெப்பநிலையை பேணவும் உடலில் உள்ள அனைத்து கலங்களுக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டுபோய் சேர்க்கவும் பயன்படுகிறது.

அது மட்டுமன்றி மூளையை ஒழுங்காக வேலை செய்ய வைக்கவும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற வைக்கவும் உமிழ்நீர் போன்ற சுரப்பிகள் தொழிற்படவும் நீரே ஆதாரமாக உள்ளது.

பூமியில் மனிதன் உயிர் வாழவும், அவன் அன்றாட பயன்பாடுகளுக்கும், விவசாய நடவடிக்கைகளுக்கும், எல்லா வகையான தொழிற்சாலைகளுக்கும், உணவு உற்பத்திகளுக்கும் நீரே ஆதாரம். இங்கு நீரில்லை என்றால் மனிதன் வாழவே இயலாது.

நீர்விரயம்

நீர் பூமிக்கு இயற்கையின் வரமாக வளிமண்டலத்தில் இருந்து மழையாக
கிடைக்கிறது.

மழைவீழ்ச்சியினால் ஆறுகள் உருவாகி குளங்களை நிரப்புகின்றன. தரைக்கீழ் நீராகவும் ஊடுவடிகின்றன. இவை இயற்கையின் நிகழ்வுகளாகும்.

மனிதன் தனது தேவைக்காக போதுமான நீரை எடுப்பதோடு நிறுத்தி விடாது தரைக்கீழ் நீரை பம்பிகள் மூலம் அதிகமாக உறிஞ்சுவதும்

நீர் நிலைகளில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதும் அசேதனங்கள் பார உலோகங்களை நீரில் கலந்து நீரை மாசுபடுத்துகிறான்.

ஆழமாக தரைக்கீழ் நீர் நுகர்வதால் கடல் நீர் உட்புகுந்து நீர் உவராகின்றது. அதிகளவான நீர் மாசடைதல் அண்மைக்காலங்களில் இங்கு அரங்கேறி வருகிறது.

இது நீர் பற்றாக்குறையை உண்டு பண்ணி மனிதனை அழிவுக்கு இட்டுசெல்கிறது.

நீரை பாதுகாக்க மேற்கொள்ள கூடிய நடவடிக்கைகள்
முன்னொரு காலத்தில் தலைசிறந்த நீர்மேலாண்மையயை எம் முன்னோர்கள் மேற்கொண்டனர். நீரை விரயமாக விடாது குளங்களும் ஏரிகளும் அமைத்து நீரை தேக்கி வைத்து நீர் வளத்தை பாதுகாத்தனர்.

அவற்றை தான் நாமும் செய்ய வேண்டும் நீர் நிலைகளை மாசடைய விடாது தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

அபிவிருத்தி எனும் பெயரில் நீர் தேக்கங்களை அழிவடைய செய்யாது பாதுகாக்க உரிய சட்ட நடவடிக்கைகளை அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டும்.

நீரை உறிஞ்சும் தொழிற்சாலைகளை மூட வேண்டும். இயற்கையான காடுகளை பாதுகாக்க வேண்டும். மழைநீர் சேகரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சிக்கனமான நீர்ப்பாசன முறைகளை பயன்படுத்த வேண்டும்.

நீரை பாதுகாக்காமல் விட்டால் மனித சமுதாயமே அழியும் என்பதில் துளியும் ஐயமில்லை. இவற்றினை விழிப்புணர்வூட்ட உலகமெங்கும் “மார்ச் 22” உலக நீர் தினம் கொண்டாடப்படுகிறது.

முடிவுரை
பூமியில் படைக்கப்பட்ட நீர் வளம் மிகப்பெறுமதியானது. அதனை மாசுபடுத்தவும் விரயமாக்கவும் செய்வது ஆகச்சிறந்த முட்டாள் தனமாகும்.

இன்றைக்கு எந்த ஒரு நாடு அதிக நீர் வளம் கொண்டதோ அதுவே சிறந்த நாடு எனும் அளவிற்கு தண்ணீரின் தட்டுப்பாடு மனிதகுலத்தை ஆட்டம் காண செய்துள்ளது. நாடுகள் தண்ணீருக்காக போராடும் நிலையானது உருவாகலாம்.

எனவே இன்றே விழித்து கொள்வோம் இயற்கையின் வரமான நீரை பாதுகாத்து வாழும் வகையறிந்து வாழ்வோம்.

நீரில்லையேல் உயிரில்லை என்றுணர்வோம் நீரை பாதுகாப்போம்.

இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை

இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை தமிழ்
IYARKAI KAPPOM KATTURAI IN TAMIL

இந்த பதிவில் “இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை தமிழ்” பதிவை காணலாம்.

நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றிணைத்து வாழ்ந்தார்கள் ஆனால் இன்றைய நவீன காலத்தில் நாம் இயற்கையோடு ஒன்றிணையாமல் செயற்கையோடு பின்னி பிணைந்து வாழ்கின்றோம்.

இயற்கையை பாதுகாத்து அதை நம் அடுத்த சந்ததியினரிடம் கையளிக்க வேண்டியது ஒவ்வொரு உயிர்களிதும் தலையாய கடமையாகும்.

இயற்கையை காப்போம் கட்டுரை
Iyarkai Kappom Katturai In Tamil
மரம் வளர்ப்போம் கட்டுரை
Table of Contents
இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை தமிழ்
இயற்கையை காப்போம்
முன்னுரை
இயற்கையின் சிறப்பு
இயற்கை மாசடைதல்
இயற்கை அனர்த்தங்கள்
இயற்கையை பாதுகாத்தல்
முடிவுரை
இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை தமிழ்
இயற்கையை காப்போம்
முன்னுரை
இயற்கையின் சிறப்பு
இயற்கை மாசடைதல்
இயற்கை அனர்த்தங்கள்
இயற்கையை பாதுகாத்தல்
முடிவுரை
முன்னுரை
இந்த உலகமானது இயற்கையின் கொடைகளால் நிறைந்துள்ளது. இவ்வியற்கையின் கொடைகளுடன் இணைந்து வாழும் படியாகவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.


மனிதன் இப்பூமியில் நீடித்து வாழும் பொருட்டு இயற்கை அதன் கொடைகளை இவ்வுலகிற்கு வாரிவழங்கியுள்ளது. உண்கின்ற உணவில் இருந்து அருந்துகின்ற குடிநீர் வரை இயற்கை மனிதவாழ்வில் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றது.

ஆனால் அண்மைக்காலமாக இயற்கையானது அளவிடமுடியா பல அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளது. அவற்றை நாம் கட்டுப்படுத்த வேண்டுமாயின் இயற்கையை பற்றி முதலில் அறிந்து கொள்ளவேண்டும்.

இயற்கையின் சிறப்பு
இந்த பூகோளமானது பரந்து விரிந்த நிலப்பரப்புக்களையும், அதன் நாற்புறமும் சூழப்பட்ட சமுத்திரங்களையும், பச்சைப்பசேலென்ற காடுகளையும், எழில்கொஞ்சும் நீர்வீழ்ச்சிகளையும், சலசலத்து ஓடுகின்ற ஆறுகளையும் வளங்களாக கொண்டமைந்துள்ளது.

அந்த வளங்களை அனுபவித்திட மனிதர்கள், விலங்குகள் மற்றும் ஏனைய உயிரினங்களையும் ஒருங்கமையப் பெற்றுள்ளது.

பூமியில் இவ்வுயிரினங்கள் நிலைபெற்று வாழ மழை, காற்று, தீ, நிலம், நீர் போன்ற பஞ்சபூதங்களையும் கொண்டமைந்துள்ளது.

இந்த இயற்கையானது செழித்து விளங்காவிட்டால் மனித இனமானது அழிவுற்றுவிடும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இயற்கையை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இயற்கை மாசடைதல்
இயற்கையில் உள்ள விலைமதிக்க முடியாத வளங்களான நிலம், நீர், காற்று போன்றன பல்வேறுபட்ட காரணங்களால் மாசடைதலே இயற்கை மாசடைதலாக கருதப்படுகின்றது.


இந்த மாசடைதலிற்கு அதிகரித்து வரும் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் கைத்தொழில் மயமாக்கலோடு மனிதர்களது விரும்பத்தகா நடவடிக்கைகளும் காரணமாக அமைகின்றன.

உலகத்தின் அழகிய பரந்த நிலப்பரப்பானது பல்வேறுபட்ட காரணங்களால் அதன் இயல்புத் தன்மையை இழந்து வருகின்றது.

இறப்பர், பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை நிலத்தினுள் எரிக்கும் போதோ அல்லது புதைக்கும் போது மண்வளம் அற்றுப்போகின்றது. மேலும் இரசாயன கிருமி நாசனிகளை பயிர்களிற்கு தெளிக்கும் போது மண் மாசடைகின்றது.

அண்மைக்காலங்களில் சூழலை அச்சுறுத்திவரும் ஒரு செயற்பாடாக மண் அகழ்தல் இடம்பெற்று வருகின்றது. கடற்கரை மற்றும் ஆற்றுப்படுக்கையில் உள்ள மண் அகழ்வுக்கு உட்படும் போது நீரானது ஊர்மனைகளிற்குள் புகும் அபாயம் எழுந்துள்ளது.

நீரின் பயனை வள்ளுவர் “புறத்தூய்மை நீரான் அமையும்” என்று குறிப்பிடுகின்றார். மனித வாழ்க்கையில் மிகமுக்கியமான இடத்தை வகிக்கும் நீரானது குப்பை கூழங்கள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளை நீர்ர்நிலைகள் மீது கொட்டுவதாலும், நீர்நிலைகளை சரியாக பராமரிக்காததாலும் மாசடைகின்றது.

மேலும் ஆழ்துளைகிணறுகளை அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுவதனால் நிலத்தடி நீரானது அற்றுப்போகின்றது.

இந்த உலகத்தில் மனிதவாழ்க்கைக்கு அவசியமாய் விளங்கும் மற்றொரு காரணி வளி. ஏனெனில் எந்தவொரு மனிதனாலும் சுவாசிக்காமல் இருக்கமுடியாது.

இந்த வளியானது புகைபோக்கிகளில் இருந்து வெளியேறும் அதிகபுகை மற்றும் நச்சுவாயுக்கள் கலக்கும் போது அசுத்தமடைகின்றது.

காடுகளை அழிப்பதனாலும் கனியவளங்களை அகழ்வதனாலும் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன.

இவ்வாறு இயற்கையின் கிடைத்தற்கரிய கொடைகள் மனிதசெயற்பாடுகளால் அழிவிற்குட்பட்டு வருகின்றன.

இயற்கை அனர்த்தங்கள்
இயற்கையானது மனித செயற்பாடுகளால் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாது, இயற்கையாகவே நிகழும் சில நிகழ்வுகளாலும் அழிவுக்குள்ளாகின்றது.

உதாரணங்களாக சுனாமி, சூறாவளி, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, பனிப்பொழிவு மற்றும் காட்டுத்தீ போன்றவற்றை குறிப்பிடலாம்.

மனிதனால் கட்டுப்படுத்த முடியாத இவ்வனர்த்தங்களால் மனிதர்கள் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களும் அழிவடைகின்றன.

பல உயிர்களை காவுகொண்ட இயற்கை பேரழிவிற்கு உதாரணமாக 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்ப்பட்ட சுனாமியை குறிப்பிடலாம்.

இயற்கை அனர்த்தங்களாலும் விலை மதிக்க முடியாத இயற்கையானது அழிவிற்கு உள்ளாகின்றது.

இயற்கையை பாதுகாத்தல்
இயற்கையை பாதுகாப்பது தனிமனிதர்கள் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.

இயற்கை வளங்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்துவதற்காக ஒவ்வொரு நாடுகளிலும் பல்வேறு சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

உலகிலுள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக பன்னாட்டு பாதுகாப்பு சங்கம் 1980 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு உலகபாதுகாப்பு தினமாக ஒவ்வொரு வருடமும் யூலை மாதம் 28ம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

மனிதர்கள் அனைவருமே இயற்கையை தேவைக்கேற்ப மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன்படுத்த வேண்டும்.

நீரை வீண்விரயம் செய்யாது பயன்படுத்துவதோடு பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையை ஒட்டுமொத்தமாக குறைக்கவேண்டும்.

மரங்களை வெட்டுதலை தடுத்து நிறுத்துவதோடு எங்களால் இயன்றளவு மரங்களை வளர்த்து இப்பூமியை பசுமையானதாக மாற்றவேண்டும்.

முடிவுரை
செயற்கை அதிகம் மிகுந்த இவ்வுலகில் மனிதன் தனது மனநிம்மதியை திரும்பபெறுவதற்காக இயற்கையை தேடி ஓடிக் கொண்டிருக்கின்றான்.

இயற்கை சூழலில் வாழ்ந்த காலம் போய் இன்று இயற்கையை காண சுற்றுலா செல்லும் நிலைமையை மனிதன் எதிர்நோக்கியுள்ளான்.

இன்னும் சிலகாலம் இந்நிலைமை தொடருமாயின் இயற்கையோடு சேர்ந்து மனித இனமும் அழிந்து விடக்கூடிய அபாயம் உள்ளது.

இதற்கான உடனடியான தீர்வு இயற்கையை தேவைக்கேற்ப பயன்படுத்தி அதனைப் பாதுகாத்தலாகும்.

எனவே இயற்கைவளங்களை எதிர்கால சந்ததியினரும் பயன்படுத்தும் வகையில் உயிர்ப்போடு வைத்திருந்து நாமும் நலம் பெற்று வாழ்வோமாக.

காட்டு வளமே நாட்டு வளம் கட்டுரை

காட்டு வளமே நாட்டு வளம் கட்டுரை
KATTU VALAME NATTU VALAM KATTURAI IN TAMIL

இந்த பதிவில் “காட்டு வளமே நாட்டு வளம் கட்டுரை” பதிவை காணலாம்.

இயற்கையின் சமநிலையை பேணி உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கியதில் காடுகளிற்கு முக்கிய பங்கு உண்டு.

காடுகளின் பயன்கள் கட்டுரை
Table of Contents
காட்டு வளமே நாட்டு வளம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
காடுகளின் முக்கியத்துவம்
இந்தியக் காடுகளின் தனிச்சிறப்பு
தமிழகக் காடுகளின் சிறப்பு
காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள்
முடிவுரை
காட்டு வளமே நாட்டு வளம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
காடுகளின் முக்கியத்துவம்
இந்தியக் காடுகளின் தனிச்சிறப்பு
தமிழகக் காடுகளின் சிறப்பு
காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள்
முடிவுரை
முன்னுரை
இயற்கை நமக்களித்த அற்புதப் படைப்புக்களில் காடுகள் முதன்மை வகிக்கின்றன. காடுகள் செழிப்பாக இருந்தால்தான் நாடு வளமாக இருக்கும்.

இதனால்தான் “காட்டின் வளமே நாட்டின் வளம்ˮ⸴ “காடழிந்தால் நாடழியும்ˮ போன்ற பழமொழிகளைக் கூறுவர். புவி மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பகுதி காடுகளே ஆகும். இது இடப்பரப்பு மட்டுமல்ல மனித உயிர் வாழ்க்கைக்கு இதுவே ஆதாரமாகும்.


“மணிநீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடையது அரண்ˮ என்கிறார் வள்ளுவர்.

நீலமணி போன்ற நீளமுடைய அகழியும்⸴ வெட்டவெளியான நிலப்பரப்பும்⸴ உயரமான மலையும் மரநிழல் செறிந்த காடுகளும் கொண்டதே அரண் என்கின்றார். ஒரு காடு வளமாக இருந்தால்தான் நாடு வளமாக இருக்கும் என்பது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

காடுகளின் முக்கியத்துவம்
உயிரின பாதுகாப்பில் காடுகளின் பங்கு மகத்தானது. “ஒருமுறை உயிர் கொடுத்தால் தாய் ஒவ்வொரு முறையும் உயிர் கொடுக்கின்றது மரம்”. இயற்கைச் சமநிலையைப் பேணிக்காக்க காடுகள் அவசியமாகின்றன.

உலக வெப்பத்தை குறைக்கவும்⸴ பசுமையைப் பேணவும் காடுகள் முக்கியமாகின்றது. பறவைகள்⸴ விலங்குகள் உட்பட உயிரின பாதுகாப்பிற்கும்⸴ வாழ்விடங்களிற்கும் காடுகள் முக்கியம் வகிக்கின்றன.

இந்தியக் காடுகளின் தனிச்சிறப்பு
உலகளாவிய ரீதியில் இந்திய காடுகளுக்கு தனிச்சிறப்பு உண்டு அடர்த்தியான பல்லுயிர்ப் பெருக்க காட்டுப் பகுதிகள் 25 உலகில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று இந்தியாவிலுள்ளது.

உலகில் காணப்படும் 12 பல்லுயிர் பெருக்க மையங்களில் இந்தியாவும் ஒன்றாகும். உலகளாவிய ரீதியில் 30 வகையான செம்மரங்கள் உள்ளன. அவற்றில் நான்கு வகை மரங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.

உலக நிலப்பகுதியில் 2.5% ஐ பெற்றுள்ளது நம் நாடு. அதேசமயம் உலக இயற்கை வளத்தில் 6% விடக் கூடுதலான வளம் இந்தியாவிலுள்ளது. தேசம் பெருமை கொள்ள வேண்டிய இந்த நேரத்தில் சூழலியல் பாதுகாப்பில் மற்றைய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவுக்கு அதிக பங்குள்ளதை தெளிவுபடுத்துகின்றது.

தமிழகக் காடுகளின் சிறப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சுற்றுச்சூழல் திட்டத்தின்படி ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் மொத்த பரப்பளவில் 33% காட்டுவளம் இருக்க வேண்டும்.

எனினும் தமிழகத்தில் 5 தேசிய பூங்காக்கள்⸴ 10 வனவிலங்கு சரணாலயங்கள்⸴ 14 பறவைகள் சரணாலயங்கள்⸴ 4 புலிகள் காப்பகம்⸴ 4 யானைகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கதாகும்.

இந்தியாவில் காணப்படும் 14672 பூக்கும் தாவரங்களில் 5640 தாவரங்கள் தமிழகத்தில் காணப்படுகின்றன. இதில் பெரும்பாலானவை அரிய வகைத் தாவரங்களாகும்.

காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள்
இன்று காடுகள் மனித தேவைகளுக்காகவும்⸴ இயற்கை அனர்த்தங்களாலும் அழிக்கப்பட்டு வருகின்றன. நீருக்கான ஆதாரங்கள் இல்லாமல் போய்விடுகின்றது. மண்சரிவு⸴ மண்ணரிப்பு ஏற்படுகின்றது. இதனால் வளம்மிக்க மண்கள் அழிக்கப்படுகின்றன.

வெப்பம் அதிகரித்து வறட்சி ஏற்படுகின்றது. பல அரிய மூலிகைகள் அழிந்து விடுகின்றன. காற்று மாசுபடுகின்றன. வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து காபனீரொட்சைட் அதிகரிப்பதனால் பசுமைக் கூடார விளைவு ஏற்படுகின்றது.

துருவப் பகுதிகளில் பனிக்கட்டி உருகுதல். இதனால் கடல் மட்டம் உயர்வடைதல் போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

முடிவுரை
ஒரு நாட்டில் காட்டுவளம் செழிப்பாக இருப்பின் நாடு வளம் பெறும். காடுகளைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். மரங்கள் அழிக்கப்படும் போது அதற்கு பதிலாகப் பல மரங்களை நாட்ட வேண்டும்.

காட்டின் அவசியத்தை இந்திய அரசு உணர்ந்ததால் தான் மத்திய-மாநில அரசுகள் திட்டங்களை வகுத்துள்ளன. இதற்கு நாமும் ஒத்துழைப்பு கொடுத்து காடுகளைக் காக்க வேண்டும். “காட்டு வளமே நாட்டின் வளம்ˮ எனவே அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்படுவோம்.