செவ்வாய், 20 செப்டம்பர், 2022

மனதை தொடும் காதல் கவிதைகள் வரிகள்

மனதை தொடும் காதல் கவிதைகள் வரிகள்

சிறிது கை தவறினாலே
கையில் உள்ள பொருள்
உடைந்து விடும் என்று
தெரிந்த பலருக்கு சொல்
தவறினால் பல உறவுகளின்
மனம் நொருங்கி விடும்
என்று சிந்திப்பதில்லை.

நம் மனதிற்கு எந்த
காரணமும் தேவையும்
இன்றி ஒரு சிலரை
அதிகமாக பிடித்து
விடுகிறது. ஆனால்
அந்த உறவுகளுக்கு
நாம் எவ்வளவு தான்
காத்திருந்தாலும்

அவர்களுக்கு நம் அன்பும்
அரவணைப்பும்
புரிவதுமில்லை நம்மை
பிடிப்பதுமில்லை.

நமக்கு வலி தருகிறார்கள்
என தெரிந்தும் அவர்களை
உயிரிற்கும் மேலாக
தாங்குவது தான்
உண்மையான
காதலின் புனிதம்.

என்ன தான் மாற்றங்கள்
வந்தாலும் உண்மையான
அன்பு மாறாது அப்படி
மாற்றங்களை கண்டு
மாறுமானால் அது
உண்மையான
அன்பு கிடையாது.

உண்மையாக நேசிக்கும்
அன்புக்கு காலங்கள்
செல்ல செல்ல தான்
அதன் பிணைப்பும்
தூய்மையும் இறுக்கமாகி
கொண்டே செல்லும்.

பல நேரங்களில் நம்மை
விட்டு பல தூரத்தில்
நாம் நேசிக்கும் அன்பு
இருந்தாலும் நம்
நினைவுகளால் நம்
மனதில் எப்போதும
நம் கூடவே இருக்கும்
உணர்வு இருக்கும்.


தேவைதை போல ஒரு
வாழ்கை துணை நமக்கு
கிடைக்க வேண்டும் என்று
நம் அனைவருக்கும் ஆசை
இருக்கும். ஆனால்
கிடைக்கும் துணையை
தேவதைக்கு மேலாக
பார்த்து கொள்பவன் தான்
சிறந்த கணவன்.

தற்போது அனைத்தின்
மதிப்பும் பணத்தால் தான்
அளவிடப்படுகின்றது
பாசத்தின் மதிப்பும்
பணத்தால் அளவீடு
செய்யப்பட்டால்
வாழ்க்கை
நரகமாக மாறிடும்.

சண்டை போடாமல்
சகித்து செல்லும்
உறவை விட எவ்வளவு
தான் சண்டைகளும்
சச்சரவுகளும் வந்தாலும்
பிரியாமல் இணைந்து
இருக்கும் உறவு தான்
பலமானது.

யார் மனதையும் நாம்
தெரியாமல் கூட
காயப்படுத்தி விட கூடாது.
என நினைத்து வாழ்ந்தால்
நம்மை மற்றவர்கள்
இலகுவாக காயப்படுத்தி
விடுவார்கள்.

நமக்கு பிடித்த உறவு
நம் அருகில் இல்லை
என்றால் கண்களில்
தூக்கம் வராது மனதிற்கு
நிம்மதி கிடைக்காது
வாழ்க்கையும்
சந்தோசமாக அமையாது.


சுற்றும் பூமியும் நீ தரும்
அன்பும் ஒன்று தான்
இரண்டும் எப்போதும்
நிற்பதில்லை.


Previous Post
Next Post

0 Comments: