சனி, 17 செப்டம்பர், 2022

காதல் வலி கவிதைகள்

Tamil Love Pain Quotes: 
காதல் வலி கவிதைகள்



அவள் கரம் சேர காதலுடன்
காத்திருந்தேன். கரம்
கோர்த்து அழைத்து
வந்தால் அவள்
காதலனை..!

தனிமையும் ஒரு சுகமாக
போய்விட்டது. உன்
நினைவுகளை நினைத்து
பார்க்கையில்..!

உன்னோடு சேர முடியாத
இந்த வாழக்கையை வாழ
முடியாமல் தவிக்கும்
மனதிற்கு எப்படி ஆறுதல்
சொல்லவது என்று
எனக்கு புரியவில்லை.

சுவாசித்த காற்றையும்
நேசித்த காதலையும்
எப்போதும் மறக்க முடியாது.
அப்படி மறந்தால் அது
மரணமாக தான் இருக்கும்…!

உன்னை தொலைத்த என்
இதயம் உன்னை
தொலைத்த இடத்தில்
நிண்டு உன்னை எதிர்பார்த்து
காத்துக் கொண்டிருக்கின்றது.

நீ தூரத்தில் பிரிந்து இருந்தாலும்
உன் நினைவுகள் என்னுடன்
நெருக்கமாக இருந்து
கொண்டிருக்கின்றது..!
உன் நினைவுகளை யாராலும்
என்னிடம் இருந்து
பிரிக்க முடியவில்லை..!

நீ தந்த வலிகளை இனிமையாக்க
உன் நினைவுகள் மட்டும்
போதுமாக இருக்கின்றது.

மிகப் பெரிய வலி நான்
உன்னுடன் பேச நினைத்தும்
உன்னோடு பேச முடியாமல்
தவிப்பது தான்.

காதலை போல் முகச் சிறந்த
பரிசும் இல்லை..! காதலைப்
போல மிக மோசமான
வலியும் இல்லை..!

எவ்வளவு தான் அழுதாலும்
காதல் ஏற்படுத்திய வலிகள்
குறைவதில்லை..!

நீ தந்த காதல் வலிகளால்
உன் அழகிய நினைவுகள்
கூட கனவில் வரமால்
போய்விட்டது.


என் முழு வாழ்க்கையையும்
உனக்காக வாழ்ந்த எனக்கு..!
நீ தந்த வலிகள் என்னை
வலிகளின் அர்த்தத்தை
உணர்த்திக் கொண்டிருக்கின்றது..!

என் காதலே எனது மறக்க
முடியாத புன்னகையையும்
நீ தான் தந்தாய்..! எனது
மறக்க முடியாத அழுகையும்
நீ தான் கொடுத்தாய்..!

நான் இல்லை என்றால்
உனக்காக பலர்
காத்திருப்பார்கள்..! ஆனால்
எனக்கோ நீ இல்லை என்றால்
எனக்காக காத்திருப்பது என்
மரணம் மட்டும் தான்..!

என்னை மறந்து விடு என்று
சொல்லும் போது வார்த்தையோ
சிறியது தான் ஆனால் அதன்
வலியோ கொடுமையாக
இருக்கும்.

இரக்கமே இல்லாத உன்னை
ஒவ்வொரு நொடியும்
உண்மையாக நேசித்த
பாவத்திற்கு ஒவ்வொரு
நொடியும் வலியுடனே
நகருகின்றது.

இந்த உலகில் யாரும்
யாருக்காகவும் இல்லை
என்ற உண்மை புரிந்து
விட்டால் வாழ்வின் பல
வலிகள் இல்லாமல்
போய் விடும்..!

அன்பு எவ்வளவு அழகானது
என்பதை உன்னிடம் தான்
அறிந்தேன். அதே அன்பு
எவ்வளவு வலிகளை தரும்
என்பதையும் உன்னிடம்
தான் உணர்ந்தேன்.

உயிரிலும் மேலாக ஒருவரை
நேசித்து அந்த உறவால்
புறக்கணிக்கப்பட்டும் போது
இதயத்திற்கு ஏற்படும்
வலியை தீர்க்க முடியாது.

நாம் உயிரிலும் மேலாக
நேசிக்கும் இதயத்திடம்
நம் எதிர்பார்ப்பு ஏமாற்றம்
அடையும் போது கோபம்
இருக்காது வலிகள்
தான் இருக்கும்.

நம் உடலுக்கு நம் உயிர் கூட
வலியாக தான் இருக்கும்.
நாம் உயிராக நேசிக்கும்
ஒரு உயிர் நம்மை
மறந்து விட்டால்.

சில நேரம் வலிகளின்
உச்சத்தால் சிலரை
வெறுக்க தோணும்.
ஆனால் எந்த நேரத்திலும்
அவர்களை மறக்க தோணாது..!
Previous Post
Next Post

0 Comments: