வெள்ளி, 30 செப்டம்பர், 2022

புராணங்கள் என்றால் என்ன

புராணங்கள் என்றால் என்ன
PURANANGAL IN TAMIL

புராணங்கள் வேதத்தின் கண்ணாடி எனக் கூறப்படுகின்றன. புராணங்கள் எழுதப்பெற்ற காலத்தினைக் கணக்கிட்டுக் கூறுவதில் கருத்துவேறுபாடுகள் உள்ளன. எனவே புராணங்கள் எழுதப்பட்ட காலத்தை இன்றளவும் துல்லியமாகக் கணித்துக்கூற முடியவில்லை.

இந்தியத் துணைக்கண்டத்தில் நான்கு வேதங்களும், பதினெட்டுப் புராணங்களும் தோன்றியுள்ளன. இவை உலக அளவில் மிகப் பழமையான நூல்கள் எனக் கருதப்படுகின்றன.

Table of Contents
புராணங்கள் என்றால் என்ன
யுகங்கள் பற்றிய புராண ரகசியங்கள்
பஞ்சபுராணம் என்றால் என்ன
புராணங்கள் என்றால் என்ன
புராணம் என்ற சொல்லானது சமஸ்கிருத மொழியிருந்து பெறப்பட்டதாகும். புராணம் என்பது “பழமையான வரலாறு” என்று பொருள்படுகின்றது.

மேலும் வேதங்களைத் தெளிவாக விரிவாக விளக்கமாக எடுத்துக் கூறுவதே புராணங்கள் எனலாம்.

யுகங்கள் பற்றிய புராண ரகசியங்கள்

யுகம் என்பது இந்துக்களின் காலக்கணிப்பு முறையில் காலத்தை அளக்கும் அலகுகளில் ஒன்றாகும். யுகங்கள் மொத்தம் 4 வகைப்படும். கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்பனவையே அவை நான்குமாகும்.

கிருத யுகம் மக்கள் அனைவரும் அறநெறியுடன் வாழும் யுகமாகப் பார்க்கப்படுகின்றது. இங்கு மனிதர்கள் சராசரியாக 5 அடி உயரமும் 840 வருடங்களும் வாழலாம். இந்த யுகமானது 1718,000 ஆண்டுகள் கொண்டது. இங்கு அசுரர்கள் பாதாள உலகிலும், தேவர்கள் மேல் உலகிலும், மனிதர்கள் பூலோகத்திலும் வாழ்ந்தனர்.

திரேதாயுகத்தில் நான்கில் 3 பங்கு மக்கள் அறநெறியுடனும், ஒரு பகுதி மக்கள் அறம் இல்லாமலும் வாழ்வார்கள். அங்கு வாழும் மனிதர்கள் சராசரியாக 5 அடி உயரம் உள்ளவர்களாகவும் சராசரியாக 616 வருடங்களும் வாழ்வார்கள். இவ் யுகமானது 129000 ஆண்டுகள் கொண்டதாகும். ஸ்ரீராமர் இந்த யுகத்தில்தான் அவதாரம் எடுத்தார்.

துவாபரயுகத்தில் மக்கள் சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி மக்கள் அறம் இல்லாமலும் வாழ்வார்கள் இங்குள்ள மனிதர்கள் சராசரியாக 7 அடி உயரம் கொண்டவர்களாகவும் 300 ஆண்டு காலமும் வாழ்வார்கள். இந்த யுகம் 864000 ஆண்டுகள் கொண்டது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்த யுகமாகும். இங்கு அசுரர்களும் தேவர்களும் ஒரே குடும்பத்தில் வாழ்ந்தார்கள்.

கலியுகத்தில் நான்கில் ஒருபகுதி மக்கள் அற நெறியுடனும் 3 பகுதி மக்கள் அறம் இல்லாமலும் வாழ்வார்கள். இங்கு மனிதர்கள் சராசரியாக 6 அடி உள்ளவர்களாகவும் 120 வருடங்களும் வாழ்வார்கள். இந்த யுகம் 436000 ஆண்டுகள் கொண்டதாகும். இந்த யுகத்தில் அசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழத் தொடங்குவார்கள்.

இந்த நான்கு யுகங்களும் இணைந்து மகா யுகம் அல்லது சதுர்யுகம் என்று அழைக்கப்படுகின்றது.

இவ்வாறு 71 மகா யுகங்கள் கடந்தால் மனுமந்திரம் என்று பெயர். மொத்தமாக 14 மனுமந்திரங்கள் உள்ளன. இப்போது நாம் இருப்பது 7 ஆவது மனுமந்திரம் ஆகும்.

பஞ்சபுராணம் என்றால் என்ன

பஞ்ச என்று சொல்லப்படுகின்ற வார்த்தையின் பொருள் ஐந்து என ஒரு பொருள் இருந்தாலும் அதன் பொருளில் இங்கு பார்ப்பதில்லை.

பஞ்ச என்ற சொற்தொடருக்கு வடமொழியின் “விரிவது” என்று பொருளாகும். புராணம் என்பது “பெருமை நிறைந்தது” என்று பொருளாகும்.

அதே வேளை புரா என்றால் “பழமை” ணம் என்றால் “புதுமை” என்றும் பொருளுண்டு. எனவே பழையதுக்குப் பழமையாகவும், புதுமைக்குப் புதுமையாகவும் இருக்கக் கூடிய சிவபெருமானை அவருடைய பெருமை விளங்குமாறு போற்றித் துதித்துப்பாடும் பாடல்களுக்குத்தான் பஞ்சபுராணம் என்று பெயராகும்.

Previous Post
Next Post

0 Comments: