வியாழன், 29 செப்டம்பர், 2022

பிரபஞ்சம் என்றால் என்ன

பிரபஞ்சம் என்றால் என்ன
PRABANJAM ENRAL ENNA

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் நிறைந்து எங்கும் பரந்து விரிந்திருக்கும். பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியே பிரம்ம சக்தி எனப்படும். இதை பிரபஞ்ச ஆற்றல் எனவும், பேராற்றல் எனவும், அகிலத்தை இயக்கும் மகாசக்தி, பராசக்தி, பரம்பொருள் என்றும் பல விதமாகவும் அழைக்கின்றனர்.

இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும், வடிவமும் பிரபஞ்ச ஆற்றல் மூலமாகவே உருவாகி பாதுகாத்து மாற்றப்படுகின்றது. (ஒரு தன்மையிலிருந்து ஒரு தன்மையாக மாற்றப்படுகின்றது). உதாரணமாக ஒரு மனிதன் பிறப்பதும், வளர்வதும் பின்னர் பிரபஞ்ச பூத உடலை விட்டு பிரிவதும் அனைத்திற்கும் பிரபஞ்ச ஆற்றலே காரணமாகின்றது.

பிரபஞ்சம் ஒரு புள்ளியில் தொடங்கியது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அணுவானது ஒரு புள்ளியில் இருக்கும். அதன் ஆற்றலானது ஒரு சிறு புள்ளியில் இருந்து பெரு வெடிப்பின் மூலமாக வெடித்துச் சிதறி அது ஒவ்வொன்றும் பேராற்றலாக மாறியது. இவ்வாறு ஆற்றலாக மாறி அது விரிவடைந்து நாளடைவில் ஒரு பிரபஞ்சமாக மாறியது என்பது தான் அறிவியல் கருத்து.

இப்பிரபஞ்சமானது விரிவடைந்து கொண்டே தான் இருக்கும். இதேபோல் பூமியும் விரிவடைந்து கொண்டிருக்கும். உதாரணம் சில மலைகள் வளர்ந்துகொண்டே இருக்கும். மலைகளின் உயரமும் உயர்ந்துகொண்டே இருக்கும்.

Table of Contents
பிரபஞ்சம் என்றால் என்ன
பிரபஞ்சம் உருவான விதம்
பிரபஞ்சம் என்றால் என்ன

பிரபஞ்சம் தமிழில் பேரண்டம் என அழைக்கப்படுகின்றது. பிரபஞ்சம் என்பது அனைத்தையும் உள்ளடக்கியது ஆகும்.

இந்த உலகம் மற்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், கோள்கள், சூரியன், நிலவு, விண்மீன்களுக்கிடையிலுள்ள விண்துகள்கள், அவற்றின் இயக்கம், இவற்றையெல்லாம் சூழ்ந்துள்ள வெட்டவெளி, கண்ணுக்குத் தெரியாத தொலைவிலுள்ள பால்வெளி மண்டலங்கள் ஆகிய எல்லாம் சேர்ந்தது பிரபஞ்சம் ஆகும்.

பிரபஞ்சம் உருவான விதம்
பிரபஞ்சம் தோன்றி 13.7 பில்லியன் ஆண்டுகளாகின்றது. பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பதற்கு பல கருத்துக்கள் இருந்தாலும் பெருவெடிப்புக் கொள்கையை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்கின்றது.

இந்த பெரு வெடிப்பு 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறு புள்ளியிலிருந்து ஒரு பிரஞ்சமாக விரிவடைந்து இருக்கலாம் என்று அறிவியளாலர்கள் குறிப்பிடுகின்றனர். நமது பிரபஞ்சம் உருவான பொழுது ஒரு வெளிச்சம் தோன்றியது அதுவே இன்று வரை நாம் பார்க்கிறோம் என்று கூறுகிறார்கள்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த வெடிப்பு ஒரு சிறிய புள்ளியிலிருந்து உருவாகி விரிவடைந்து விரிவடைந்து ஒரு மிக பெரிய பிரபஞ்சத்தை உருவாக்கியுள்ளது.

இந்தப் பிரபஞ்சம் மிகப் பெரியதாக இருப்பதனால் அதனை ஒளியாண்டு (light year) என அழைக்கின்றார்கள். ஒரு ஒளியாண்டு என்பது 9.46 மில்லியன் கிலோமீட்டராகும். ஒளியாண்டு என்றால் ஒளி ஒரு ஆண்டில் பயணம் செய்யும் தொலைவாகும்.

பல சூரிய குடும்பம் சேர்ந்ததே பிரபஞ்சம் என்கின்றோம். பல பிரபஞ்சங்கள் சேர்ந்ததை Cluster என்கின்றனர். பல Cluster சேர்ந்ததை Super Cluster என்கின்றனர். Super Cluster என்பது 200 மில்லியன் ஒளியாண்டு விட்டமுடையது.

Previous Post
Next Post

0 Comments: