செவ்வாய், 20 செப்டம்பர், 2022

தமிழ் கவிதைகள் காதல் | Love Quotes In Tamil

தமிழ் கவிதைகள் காதல் | Love Quotes In Tamil


இந்த பதிவில் தமிழ் கவிதைகள் காதல் | Love Quotes In Tamil, காதல் கவிதை மற்றும் காதல் கவிதைகள் போன்றவற்றை பார்க்கலாம்.

தமிழ் கவிதைகள் காதல் | Love Quotes In Tamil

உனக்கான என்னுடைய
காத்திருப்பு என்றுமே
தொடர்ந்து கொண்டே
இருக்கும்…

நீ எனக்காக
ஆசைப்படுவதால்
என்னவோ என்
ஆசைகள் கூட
உனக்கானதாக
மாறி விடுகின்றது..

காதல் உறவு
அழகானது பிரிந்து
சென்றாலும் அந்த
உறவுடனே மறுபடியும்
காதல் செய்ய விரும்பும்.

உன்னை என்
வாழ்நாளில் வெறுத்ததும்
இல்லை உன்னை
விலகிச் செல்ல நான்
நினைத்ததும் இல்லை.

அன்பே என்னிடம்
சிறகுகள் இல்லை
உன்னிடம் தேடி வர
ஆனால் என்னிடம்
இதயம் இருக்கிறது
உன்னை நினைத்து
உனக்காக உனக்காக
வாழ்ந்திட…

அழகை
எதிர்பார்ப்பவர்களிடம்
உங்கள் காதலை
எதிர்பார்க்காதீர்கள்..
அன்பை
எதிர்பார்ப்பவர்களிடம்
மட்டும் காதலை
எதிர்பாருங்கள்..


காலம் நம்மை
சேர்க்கா விட்டாலும்
விதி நம்மை சேர்க்கும்
என்று நம்புவோம் பயம்
கொள்ளாமல்
என்னுடன் வா..

இரவில் தோணும்
நிலவை விட அழகானது
என் மனதில் இருக்கும்
உன் நினைவுகள்…

காதல் என்பது இரண்டு
கண்கள் ஒன்றோடு ஒன்று
கலப்பதனால் மனதில்
உருவாகும் கர்ப்பம்
எவ்வளவு வலிகளை
தந்தாலும் அந்த வாழ்வில்
சுகம் அதிகம்..

என் காதலுக்கு உயிர்
கொடுத்த தேவதையே…
நான் உன்னை தொட்ட
தென்றல் காற்று அல்ல
நீ சுவாசிக்கும்
முச்சுக் காற்று…
வாழ்ந்தாலும் இறந்தாலும்
அது உன்னுடன்
மட்டும் தான்….!

உன் அழகு என்
கண்ணை ஈர்த்தது
ஆனால் உன் அன்பு
என் இதயத்தை
கொள்ளை அடித்தது.


நீ என் அருகில் நெருங்கி
வரும் போது நான்
பனியாக உறைந்து
போகிறேன் நீ விலகிச்
செல்கையில் உருகிப்
போகிறேன்..!

உன் மீது நிறைந்து
கிடக்கும் நேசங்கள்
அனைத்தையும்
வெளிப்படுத்த எனக்கு
கிடைத்த ஆயுதம்
தான் காதல்.

உன்னுடன் நான்
எவ்வளவு சண்டை
போட்டாலும் உன்னை
பிரிந்து ஒரு நொடி கூட
என்னால் நிம்மதியாக
சந்தோசமாக
வாழ முடியாது
என்பதே உண்மை..!

என் மனதில்
உன் மீது கொண்ட
காதல் என்னை
மண்ணில் புதைக்கும் வரை
என்னிடம் இருந்து
பிரிக்க முடியாது..!

காதல் தான்
அற்புதங்கள் செய்யும்
என்று எண்ணி இருந்தேன்
ஆனால் உன் கண்களும்
மாயம் செய்யும் என்பதை
புரிந்து கொண்டேன்
உன்னை பார்த்த பிறகு..!

நான் உன் மீது
கொண்ட காதல்
உன்னை மட்டும்
காதலிக்க கற்றுத்
தரவில்லை உன்னை
தவிர வேறு யாரையும்
காதலிக்க கூடாது
என்பதையும்
கற்றுத் தந்துவிட்டது.

எனக்கு உயிர் இருக்கும்
வரை உன்னோடு
இருக்க வேண்டும் என்பது
என் ஆசை அல்ல…
உன்னோடு இருக்கும் வரை
எனக்கு உயிர்
இருந்தால் போதும்..!


நேரில் உன்னை
பார்க்கும் போது
என்னால் பேச
முடியவில்லை
அதனால் தான்
தினமும் உன்னோடு
கனவில் பேசிக்
கொண்டிருக்கிறேன்.

நான் உன்னிடம் வர
முடியாமல் தூரத்தில்
இருந்தாலும் உன்
நினைவுகள் மட்டும்
என் இதயத்தில்
எப்போதும் இருக்கும்..!

Previous Post
Next Post

0 Comments: