செவ்வாய், 25 அக்டோபர், 2022

கந்தசஷ்டி சஷ்டிஆரம்பம் விரதமிருப்பது எப்படி?

கந்தசஷ்டி சஷ்டி ஆரம்பம் :

விரதமிருப்பது எப்படி?

* கந்தசஷ்டி விரத துவக்கநாளான அக்.25 முதல் தினமும் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். மருத்துவர் ஆலோசனையில் இருப்பவர்கள் பால், பழம், பழச்சாறு என எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம்.

* முருகனுக்குரிய மந்திரங்களான ஓம் சரவணபவ ஓம் சரவணபவாயநம ஓம் முருகா ஆகிய மந்திரங்களை ஜபிப்பது அவசியம். 

திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம் பாடல்களை காலையும், மாலையும் பாராயணம் செய்ய வேண்டும்.

* முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றுங்கள்.

* கோயிலுக்கு குழுவாகச் சென்று, ஒருவர் முருகன் நாமத்தைச் சொல்ல மற்றவர்கள் அரோகரா கோஷமிடலாம்.

உதாரணம்: கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா.

* மலைக்கோயில்களை வலம் வந்தால் புண்ணியம் உண்டாகும். கோயில்களில் தங்கி விரதமிருப்பது நல்லது.

* ஆறுநாட்களும் விரதமிருந்தால் புத்திர தோஷம் விலகும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.

தாகம் தீர்த்த வேலாயுதம்
திருச்செந்துாரில் உள்ள நாழிக்கிணற்றில் உள்ள தண்ணீர், கடலுக்கு அருகில் இருந்தாலும் உப்பு கரிப்பதில்லை. ஆனால் இந்த கிணறைச் சுற்றியுள்ள மற்ற கிணறுகளில் உப்பு நீரே கிடைக்கிறது. 

ஆனால் நாழிக்கிணற்றில் மட்டும் சுவையான நீர் கிடைக்க காரணம் என்ன தெரியுமா... சூரபத்மனுடன் போரிட்ட வீரர்கள் தாகத்தால் சிரமப்பட்டனர்.

அப்போது முருகப்பெருமான் தன் வேலாயுதத்தால் உருவாக்கிய தீர்த்தமே இந்தக்கிணறு.
Previous Post
Next Post

0 Comments: