வெள்ளி, 7 அக்டோபர், 2022

முப்பாத்தம்மன்திருக்கோயில்.

#ஆலயதரிசனம்...

முப்பாத்தம்மன்
திருக்கோயில்....

1. அன்னை ராஜராஜேஸ்வரியின் சக்தியின் மற்றொறு வடிவமே முப்பாத்தம்மன். இந்த அம்மனுக்கு பல இடங்களில் கோயில்கள் உள்ளது.

2. முப்போகம் விளையும் பூமியில் நின்று அருள்செய்யும் சக்தியை நமது முன்னோர்கள் "முப்போகத்தம்மாள்" என பக்தியோடு வணங்கி வந்தனர். 

3.விளைச்சலுக்கு உரிய தேவியாக இருந்து, வேளாண் மக்களைப் பாதுகாக்கும் அம்மன் பெயர் காலப் போக்கில் மருவி "முப்பாத்தம்மன்" என்று மாறியது.

4. முன்னொரு காலத்தில் சென்னையில் மழைவிடாமல் பொழிந்து கொண்டே  இருந்தது. அந்த பேய் மழையை கண்டு தியாகராய நகர் மக்கள் அஞ்சினார்கள். 

5. அந்த சமயம் ஒரு அற்புதம் நிகழ்ந்தது, பெரும் மழை வெள்ளதில் சிலையாக அன்னை பராசக்தி வெளி வந்தாள். ஒரு குளத்திற்கு வந்து “இதுவே என் இடம்” என உறுதியோடு அங்கேயே நின்றாள். 

6. அப்போது கனியப்பன் என்ற முதியவர், அம்மன் சிலையை கண்டு, குளத்தில் இறங்கி அம்மன் சிலை தொட்ட உடன் பேய் மழை நின்றது.

7. பல நாட்களாக எட்டிபார்க்காத சூரியன், அம்பாளை காண வேண்டும் என்ற ஆர்வதில் மேகங்களை விலக செய்து, அம்பாளை தரிசித்த ஆனந்தத்தில் பிரகாசித்தது.

8. ஊர் மக்கள் மகிழ்சியடைந்தார்கள். தங்கள் வாழ்வில் நல்ல திருப்பங்களை தந்திடவே அம்மன் நம்மை தேடி வந்திருக்கிறார் என்பதை உணர்ந்தார்கள்.

9. கனியப்பன், முப்பாத்தம்மன் என பெயரிட்டு தன் சக்திக்கு ஏற்ப, சிறிய அளவில் முகப்பு மண்டபமும், சுற்றுச் சுவரும் எழுப்பி கோயில் கட்டினார்.

10. முப்பாத்தம்மனை தினமும் பால் அபிஷேகம் செய்து வணங்கியதால் கனியப்பன் வறுமை நீங்கி செல்வம் பெருகியது. அம்மனை வணங்கும் பக்தர்களின் துன்பமும் நீங்கியது

11. பக்தர்களால் ஆலயம் பெரிய அளவில் கட்டப்பட்டது. உடன் வேப்பமரம் புற்றும் உருவாகி வளர்ந்தது. பக்தர்களின் குறை தீர்க்கும் அம்மனாக திகழ்கிறாள்.

12. அந்த வேப்பமரத்தை தொட்டு வணங்கினால், நோய்நொடிகள் நீங்கும், இதை பக்தர்கள் மனதார உணர்ந்துள்ளனர்.

13. ஆலயத்தின் சிறப்பே இங்கு அமைந்துள்ள பிரமாண்ட புற்றுதான். சுற்றிலும் நாகர் சிலைகள் அமைந்து இருக்கும் புற்றில் மஞ்சள், குங்குமம் தெளித்தால் தீராத நோயையும் தீர்த்து வைப்பாள் முப்பாத்தம்மன் என்கிறார்கள் இங்கு வரும் பக்தர்கள். 

14. நாக தோஷம் உள்ளவர்கள், திருமணதடை நீங்க, குழந்தை வரம் வேண்டுவோர் எனப் பலரும் புற்றைச் சுற்றி பால் ஊற்றி நலன் அடைந்துள்ளனர்.

15. நாகதோஷம், காலசர்ப்பதோஷம் விலக அதற்குரிய தலங்களுக்கு செல்லமுடியாதவர்கள், இந்த முப்பாத்தம்மனை வணங்கி புற்றில் பால் ஊற்றி வணங்கினால், நாகதோஷம் சர்ப்பதோஷம் விலகும்.

16. கணபதி, நவகிரகங்கள், முருகப்பெருமான், ஐய்யப்பன், ஆஞ்சநேயர் எனப் பல சந்நிதிகளைக் கொண்டு இந்த ஆலயம் அழகுற அமைந்துள்ளது. 

17. நான்கு திருக்கரங்களுடன் சிறிய வடிவச் சிலை என்றாலும், காண்பவரோடு கலந்து விடக்கூடிய கருணை கொண்டவள். 

18. வேண்டியவை யாவையும் நிறைவேற்றித் தரும் இந்த மங்கல நாயகியாம் முப்பாத்தம்மனை ஆடி மாதங்களில் வந்து வணங்குவது சிறப்பானது.

19. ஆடி மாத வருடாந்திர உற்சவ விழா வெகு சிறப்பாக நடக்கும். கூழ் வார்த்தலும், இரவு அலங்கார திருவீதி உலாவும் நடைபெறும்.

20. சென்னை நகரின் தியாகராய நகரில் பனகல் பூங்கா அருகே வடபழனி செல்லும் உஸ்மான் ரோட்டின் இடதுபுறம் மகாராஜபுரம் சந்தானம் சாலையில் ஆலயம் அமைந்துள்ளது.
Previous Post
Next Post

0 Comments: