செவ்வாய், 13 டிசம்பர், 2022

உயிர் நண்பன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள் வரிகள்

உயிர் நண்பன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள் வரிகள்

நிலையான அன்பிற்கு
பிரிவில்லை சொல்லாத
சொல்லுக்கு அர்த்தமில்லை
தேடும் பாசத்திற்கு தோல்வி
இல்லை.. உண்மையான
நம் நட்புக்கு என்றும்
மரணமில்லை..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பா..!

தடுமாறும் போது தாங்கி
பிடிப்பவனும் தடம் மாறும்
போது தட்டிக் கேட்பவனுமே
உண்மையான நண்பன்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!

நட்பு..! கடற்கரை மணலில்
எழுதும் வெறும் எழுத்தல்ல..
இதய ஆழத்தில் குத்தப்படும்
பச்சை..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் உயிர் நண்பன்..!

நல்ல நண்பன் உள்ள எவனும்
வாழ்க்கையில் தோற்றுப்
போக மாட்டான்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!

அர்த்தமற்ற வாழ்வை
அர்த்தமுள்ளதாக மாற்றுவது
அன்பு.. அர்த்தமுள்ள வாழ்வை
அற்புதமாக மாற்றுவது நட்பு..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் என்
உயிர் நண்பன்..!

நட்பு என்பது கண்களையும்
கை விரல்களையும் போன்றது
கை விரலில் காயம் பட்டால்
கண்கள் அழுகிறது..
கண்கள் அழுதால்
கை விரல்கள் துடைக்கிறது..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!


நம்மை பற்றி நமக்கே
தெரியாத ரகசியங்களை
நமக்கு வெளிச்சம்
போட்டு காட்டும்
சிறந்த கருவி தான் நட்பு..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் உயிர் நண்பன்..!

அறிமுகம் இல்லாமல்
வந்தோம் அடிகடி
பேசி கொண்டோம்
உறவுகளுக்கு மேலே..
உயிர் ஆனோம். காலங்கள்
கடந்து சென்றாலும்
கடைசி வரை
தொடர வேண்டும்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பா..!

நல்ல நண்பன் இருப்பின்..
முகம் பார்க்கும் கண்ணாடி
அவசியம் இல்லை.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நண்பன்..!

வார்த்தைகள் இல்லாத
வடிவம்..
அளவுகோள்
இல்லாத அன்பு..
சுயநலம் இல்லாத
இதயம்..
வெறுப்பை காட்டாத
முகம் “நட்பு”..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!

சண்டையிட்டு ஐந்து
நிமிடத்தில் எதுவும்
நடக்காதது போல்
உரிமையுடன் பேசும்
நட்பு உடனிருந்தால்
வாழ்க்கை சொர்க்கம் தான்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!


உன்னை உண்மையிலேயே
புரிந்து கொண்டிருக்கும்
நண்பன் தான் உன்னையே
உருவாக்கிறான்.. பிறந்தநாள்
வாழ்த்துக்கள் உசுரு..!

உன் நட்புக்காக எதை
வேண்டுமானாலும்
விட்டுக் கொடுப்பேன்.. ஆனால்
எதற்காகவும் நட்பை
விட்டுக் கொடுக்கமாட்டேன்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நண்பா..!

நட்புக்கு வயதில்லை
பிறப்பு முதல் இறப்பு வரை
தொடரும் உன்னதமான
உறவே நட்பு.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நண்பன்..!

உறவு என்பது ஊஞ்சல் மாதிரி
அது சிலரை தாங்கும் சிலரை
விழவைக்கும் ஆனால்
நட்பு என்பது பூமி மாதிரி
அது எல்லோரையும் தாங்கும்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நண்பா..!

அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில்

*அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில், குக்கி சுப்ரமண்யா, தட்ஷின கன்னடா, கர்நாடகா*

*திருவிழா*     கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, நவராத்திரி ஆகிய விழாக்கள் நடத்தப்படுகிறது.  

*தல சிறப்பு*   முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  

*பொது தகவல்*

சமஸ்கிருதத்தில் இத்தலம் "குக்ஷி' என அழைக்கப்படுகிறது. பேச்சு வழக்கில் "குக்கி சுப்ரமண்யா' என மாறி அந்தப் பெயரே நிலைத்து விட்டது. இத்தலத்தை சுற்றி 113 சிவத்தலங்கள் உள்ளன. 9 கால பூஜை நடக்கிறது. 

காலையில் கோ பூஜை, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் சாயரட்சை பூஜை ஆகியவற்றை கேரள தந்திரிகள் செய்கின்றனர். மற்ற பூஜைகளை அர்ச்சகர்கள் செய்கின்றனர். கால பைரவர் சன்னதி உள்ளது. நாகர் பிரகார ஈசான மூலையில் உள்ளது. 

நாக தோஷ பரிகார ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.  

*பிரார்த்தனை*

நாகங்களின் தலைவியான வாசுகிக்கு முருகன் அபயம் அளித்துள்ளதால், ராகு, கேது தோஷத்தால் சிரமப்படுபவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்கிறார்கள். 

பிரம்மஹத்திதோஷம் (கொலை பாவம்), முன் ஜென்ம பாவங்கள், பித்ரு கடன் நிவர்த்தி தலமாக விளங்குகிறது. வயிற்று வலி, தோல் நோய், மன நோயால் பாதிக்ப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

*நேர்த்திக்கடன்*

சர்ப்பஹத்தி தோஷம், காலசர்ப்ப தோஷ நிவர்த்திக்கு ரூ. 1500 கட்டணத்தில் சிறப்பு பூஜையும், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், வேலை வாய்ப்பு வேண்டுபவர்களுக்கு ரூ. 250 கட்டணத்திலும் பூஜை நடத்தப்படுகிறது.  

*தலபெருமை*

தமிழகத்தில் பழநி முருகன் கோயில் பிரசித்தமாக இருப்பது போல, கர்நாடக மாநில முருக ஸ்தலங்களில் பிரபலமானது "குக்கி சுப்ரமண்யா' கோயிலாகும்.

இது பல யுகம் கண்ட கோயிலாகும்.

கந்தபுராணத்தில் "தீர்த்த சேத்ரா மகிமணிரூபணா' அத்தியாயத்தில் இத்தலத்தை பற்றி கூறப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள குமாரமலைப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. இயற்கை காட்சிகளை தன்னகத்தே அடக்கியது இம்மலை.

முருகப்பெருமான் தாரகாசூரனை அழித்த பின், தனது வேலில் படிந்திருந்த ரத்தத்தை கழுவ இந்த நதிக்கு வந்தார் என புராணங்கள் தெரிவிக்கின்றன. பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க இங்குள்ள தீர்த்தத்தில் நீராடியுள்ளார். 

ஆதிசங்கரர், மத்வாச்சாரியார் ஆகியோர் இங்கு வந்துள்ளனர்.  

*தல வரலாறு*

காஷ்யப முனிவரின் மனைவியரான கத்ரு, வினதா என்பவர்களுக்கு இடையே குதிரைகள் பற்றிய சர்ச்சை எழுந்தது. இருவரும் தங்கள் கருத்தே சரியென வாதம் புரிந்தனர். முடிவில், யாருடைய கருத்து சரியானதோ, அவர் மற்றவருக்கு அடிமைப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

இந்த பந்தயத்தில், கத்ரு தோற்றாள். ஒப்பந்தப்படி கத்ருவும், அவளது குழந்தைகளான நாகங்களும் வினதாவிற்கு அடிமையாயின. வினதாவின் குழந்தையான கருடன், நாகங்களை துன்புறுத்தி வந்தது.

வருந்திய நாகங்கள், வாசுகி என்ற பாம்பின் தலைமையில் குமாரதாரா என்ற நதியின் அருகிலிருந்த குகையில் வந்து தங்கின. அங்கிருந்தபடியே தங்களைக் காக்கும்படி அவை சிவனை வேண்டின.

சிவபெருமான் அந்தப் பாம்புகள் முன்தோன்றி, ""எனது மகன் சுப்பிரமணியனிடம் உங்கள் குறைகளைக் கூறுங்கள். அவன் உங்களைக் காப்பாற்றுவான்,'' என்றார். அதன்படி பாம்புகள் குமாரதாரா நதியில் நீராடி, சுப்ரமணியரை வழிபாடு செய்தன. 

இதனால் மகிழ்ந்த சுப்பிரமணியர் நாகங்களைக் காப்பாற்றினார். இதற்கு நன்றிக்கடனாக வாசுகி பாம்பு, தனது ஐந்து தலைகளையும் விரித்து சுப்பிரமணியருக்கு குடையானது.

இந்த நதி தற்போது கர்நாடகத்தில் ஓடுகிறது. அந்த நதிக்கரையில் சுப்பிரமணியருக்கு கோயில் எழுப்பப்பட்டது. ஊரின் பெயரே "சுப்ரமண்யா' என்பது தான். சேவல் கொடி வைத்துள்ள இத்தல முருகன், "குக்குட த்வஜ கந்தஸ்வாமி' என அழைக்கப்படுகிறார்.

இக்கோயிலை ஒட்டி பள்ளூஸ் என்ற இடத்திலுள்ள குகையில், சிவபார்வதி அருள்பாலிக்கின்றனர்.  

*அதிசயத்தின் அடிப்படையில்* : முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இன்றைய கோபுர தரிசனம்

*கோபுர தரிசனம் கோடி புண்ணியமே..*

*🙏இன்றைய கோபுர தரிசனம்..!!🙏*

*ஈரோடு மாவட்டம்.*
*தமிழ்நாடு.*
*கதித்தமலை.*
*வெற்றி வேலாயுத சுவாமி ஆலயம்.*

*கடவுள் குடியிருக்கும் இடம் கோயில். இதன் அடையாளம் கோபுரம். அதை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நின்று வழிபட்டாலும் புண்ணியமே. இதனால் எல்லா சன்னதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும்.  இதை ’கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பர்.*

*வெற்றிவேலாயுதசுவாமி*

*மூலவர் : வெற்றி வேலாயுதன்*

*உற்சவர் : -*

*அம்மன்/தாயார் : தனி கோயிலில் வள்ளி, தெய்வானை*

*தல விருட்சம் : -*

*தீர்த்தம் : முருகன் உண்டாக்கிய தீர்த்தம் மலை மீது உள்ளது.*

*ஆகமம்/பூஜை : -*

*பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்*

*புராண பெயர் : -*

*ஊர் : கதித்த மலை*

*மாவட்டம் : ஈரோடு*

*மாநிலம் : தமிழ்நாடு*

*பாடியவர்கள்: அருணகிரிநாதர்.*

திருவிழா

தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி 

தல சிறப்பு

வள்ளி தெய்வானை தனி சன்னதியிலும் முருகன் தனி சன்னதியிலும் அருள்பாலிக்கின்றனர். 

திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும். 

முகவரி

அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில், கதித்த மலை, ஊத்துக்குளி-638 751,ஈரோடு மாவட்டம். 

போன்

+91- 4294-262 052-54 

பொது தகவல்

கோயில் அமைப்பு

குன்றின் மீது 5 நிலை கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கி நிற்கிறது. கோயிலுக்கு செல்ல அகலமான படிக்கட்டுகள் உள்ளன. ராஜகோபுரத்தின் முன்னால் தீப ஸ்தம்பம் உள்ளது. பிரகாரமும் இருக்கிறது. முருகனின் கண தலைவரான இடும்பனுக்கு தனி சன்னதி உள்ளது.

முருகனின் கோயிலுக்கு கீழே தென்கிழக்கு பக்கமுள்ள பாம்பு புற்றுக்கு தனி கோயில் உள்ளது. இது மயூரகிரி சித்தரின் சமாதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கு அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. பக்தர்கள் இந்த புற்றை "சுப்பராயர்' என அழைக்கிறார்கள். வள்ளி தெய்வானை சன்னதிக்கு செல்லும் வழியில் பாலை மரத்தின் அடியில் காவல் தெய்வமான சுக்குமலையான் சன்னதி உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் சுக்கு மலையானை வழிபாடு செய்கிறார்கள். 

பிரார்த்தனை

திருமணத்தில் தடை உள்ளவர்கள், பிரிந்த தம்பதியினர் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். 

நேர்த்திக்கடன்

முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். 

தலபெருமை

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்' என்பதற்கேற்ப ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி கதித்தமலையில் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். அருணகிரிநாதரால் பாடல் பெற்றதும், அகத்தியர் பூஜித்த பெருமை பெற்றதுமான இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. கோயிலில் மூலவரான வெற்றி வேலாயுதசுவாமி வள்ளி தெய்வானை இல்லாமல் தனியாக நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

வள்ளி தெய்வானை தனி சன்னதிக்கான காரணம்

சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகன் தனிமையில் இருந்தார். அவரை மணம் முடிக்க விரும்பிய இந்தப் பெண்கள் இம்மலைக்கு வந்து முருகன் தங்களை ஆட்கொள் ளுமாறு வேண்டினர். அவரது அருளாசியின்படி இந்திரனின் மகளாக தெய்வானையும், நம் பிராஜனின் வளர்ப்பு மகளாக வள்ளியும் அவதரித்தனர். திருமணத்துக்கு முன்னதான நிலை என்பதால், இவர்களுக்கு தனி சன்னதி தரப்பட்டுள்ளது.

மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. வள்ளி, தெய்வானை, வேல் ஆகியன முறையே இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகியவை. ஆசை, செயல், அறிவு என் னும் மூன்று சக்திகளை குறிக் கின்றன. இவை மூன்றும் பரப் பிரம்மமாகிய முருகனுக்குள் அடங்கியுள்ளது. பெரும்பாலான முருகன் கோயில்களில் இச்சா சக்தியும், கிரியா சக்தியும் அவருக்கு இருபக்கம் வைக்கப்பட்டு, ஞான சக்தியான வேல் மட்டும் அவரது மார்பின் மேல் வைக்கப்படும். ஞானசக்தி தான் இம் மூன்றில் முக்கியமானது. இச்சையும், கிரியையும் இருந்தால் தான் ஞானம் பெற முடியும். ஆனால், அபூர்வ சக்தி படைத்த முருகன், இவ்விரண்டும் இல்லாமலே ஞானசக்தி பெற்றவர் என்பதையும் இது காட்டுகிறது.

தல வரலாறு

முருகன் குடிகொண்டுள்ள தலங்களுக் கெல்லாம் அகத்தியர் தரிசிக்க சென்றார். அவருடன் நாரதர் மற் றும் பல தேவர் களும் உடன் வருகின்றனர். பூஜைக் குரிய நேரம் வந்ததும் அகத்தியர் ஓரிடத்தில் முருகனுக்கு பூஜை நைவேத்தியம் செய்ய நீரின்றி தவித்தார். அவருக்கு தாகமும் ஏற்பட்டது. இதனால் முருகப்பெருமானை வேண்ட, முருகன் அங்கு தோன்றினார். தம் வேலை தரையில் குத்தி ஒரு ஊற்று ஏற்படுத்தினார். நீர் பெருக்கெடுத்து ஓடியது.

அகத்தியரும் மகிழ்ச்சியுடன் பூஜைகளை முடித்து கொண்டு தன் தாகத்தையும் தீர்த்துக்கொண்டார். முருகனால் அன்று ஏற்படுத்தப் பட்ட ஊற்று வற்றாமல் இன்று வரை நீரை கொடுத்துக் கொண்டிருக்கிறது. குழியில் இருந்து ஊற்று தோன்றியதால் "ஊத்துக்குளி' என அப் பகுதி அழைக்கப்பட்டது. இந்த அற்புதத்தை நிகழ்த்திய முருகனுக்கு கோயிலும் கட்டப்பட்டது.

சிறப்பம்சம்

அதிசயத்தின் அடிப்படையில்
வள்ளி தெய்வானை தனி சன்னதியிலும் முருகன் தனி சன்னதியிலும் அருள் பாலிக்கின்றனர்.

அமைவிடம்

திருப்பூரில் இருந்து (15 கி.மீ)ஊத்துக்குளி வழியாக ஈரோடு செல்லும் பஸ்களில் சென்றால், கதித்த மலை முருகன் கோயிலை அடையலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம்

ஊத்துக்குளி,திருப்பூர்.

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்புத்தூர்

தங்கும் வசதி

திருப்பூர்

திங்கள், 12 டிசம்பர், 2022

உண்மை கவிதைகள் வரிகள் | Unmai Kavithai

உண்மை கவிதைகள் வரிகள் | Unmai Kavithai
இந்த தொகுப்பில் “உண்மை கவிதைகள் வரிகள் | Unmai Kavithai” காணலாம்.

உண்மை கவிதைகள் வரிகள் | Unmai Kavithai
உண்மை ஒரு போதும்
ஆபத்தானது அல்ல.

பொய்யால் செழிப்பாக
வாழ்வதை விட உண்மைக்காக
துன்பப்படுவது மிகச் சிறந்தது.

நீங்கள் மற்றவர்களை சில
மணிநேரம் முட்டாளாக்கலாம்..
ஆனால் அவர்களை எல்லா
நேரத்திலும் முட்டாளாக்க
முடியாது.

நீங்களே நேர்மையாக
இல்லாவிட்டால் வேறு
யாருடனும் நீங்கள்
உண்மையாக நேர்மையாக
இருக்க முடியுமா..?

உண்மைக்காக எதையும்
துறக்கலாம்; ஆனால்
எதற்காகவும் உண்மையைத்
துறக்காதே..!

உண்மையும் நேர்மையும்
உள்ளவனாக வாழ்ந்தால்
அஞ்சா நெஞ்சம்
கொண்டவனாக இருக்கலாம்.


உங்கள் கண்கள்
காணாதவற்றிற்காக உங்கள்
காதுகளை நம்ப வேண்டாம்.

உண்மையாகவும்
நேர்மையாகவும் இருப்பது
அடுத்தவனுக்காக இல்லை.
நமக்காக..!

நேர்மையாகவும்
உண்மையாகவும்
இருப்பவர்களை தான்
வாழ்க்கை அதிகம்
ஏமாற்றி விடுகின்றது.

உள்ளத்தில் உண்மையும்
தைரியமும் இருந்தால்
நடக்கும் பாதை
நேரானதாகவே இருக்கும்.

பணத்திற்காக
உண்மையை விற்ற
அற்ப நபரின் மனம்
ஒரு போதும் அமைதியாக
இருக்காது.


உரிமை இல்லாத உறவும்
உண்மை இல்லாத
அன்பும் நேர்மை இல்லாத
நட்பும் என்றும்
நிரந்தரம் இல்லை.

ஒரு உண்மையான மனிதன்
யாரையும் வெறுக்க மாட்டான்.

நாம் உண்மையின் பாதையில்
நடக்க வேண்டும்..
ஏனென்றால்
உண்மை தான்
இறுதியில் வெல்லும்.

உண்மைக்கு ஒத்திகை
தேவையில்லை.

கஷ்ட காலங்களில் தான்
நாம் உண்மையான
உறவுகளை காண்கிறோம்.

மிகவும் ஆபத்தான
பொய்கள் என்னவென்றால்
பாதி சிதைந்த உண்மைகள்.

குழந்தைகளும் முட்டாள்களும்
உண்மையாக பேசுகிறார்கள்.


நேர்மையும் உண்மையும்
விலை உயர்ந்த பரிசு
எல்லா மனிதர்களிடமிருந்து
அதை எதிர்பார்க்க வேண்டாம்.

நீங்கள் எதையாவது
உண்மையாகவும்
நேர்மையாகவும்
செய்ய விரும்பினால்
அதை எப்போதும் நீங்களே
தனியாக செய்து கொள்ளுங்கள்.

தவறு செய்யும் மனிதர்களை
பார்த்து தவறாக பேசாதீர்கள்
ஏனென்றால் உங்கள்
வாழ்க்கை இன்னும்
முடியவில்லை.

உண்மையான வார்த்தைகள்
எப்போதும் அழகாக
இருப்பதில்லை. அழகான
வார்த்தைகள் எப்போதும்
உண்மையாக இருப்பதில்லை.

உண்மை சில நேரங்களில்
வலிக்கும் ஆனால் இறுதி
வரை வாழ வைக்கும்.
பொய் எல்லா நேரமும்
மனிதனைக் கொல்லும்.

உன்னை வெறுப்பவர்கள்
வெறுக்கட்டும் ஆனால்
நீ எப்போதும்
உண்மையாக இரு.

அன்பும் ஒரு நாள்
தோற்றுப் போகும்
உண்மை இல்லாதவரை
நீ நேசித்தால்.

பொய்யான உறவுகளுக்கு
முன் புன்னகையும் ஒரு
பொய் தான். உண்மையான
உறவுகளுக்கு முன் கோபம்
கூட புன்னகை தான்.

எனக்கு என் வாழ்க்கையில்
நான் கஷ்டப்படாமல்
கிடைத்த ஒரு விடயம்
கஷ்டம் மட்டும் தான்.

ஆணின் அன்பில் மென்மை
இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் நிச்சயம்
உண்மை இருக்கும்.

நேசித்த பின் மறந்தால்
அது வெறும் நினைவுகள்..
வெறுத்த பின்பும் நேசித்தால்
அது தான் உண்மையான
உறவுகள்.

உனக்கு பிடித்தவரிடம்
அன்பாக இரு உன்னைப்
பிடித்தவர்களிடம் எப்போதும்
உண்மையாக இரு.

உண்மையான உழைப்பிற்கு
ஊதியம் உண்டு..
உண்மையான அன்பிற்கு
அர்த்தம் உண்டு.. உண்மையான
காதலுக்கு கனவு உண்டு..
உண்மையான வாழ்க்கைக்கு
உயர்வு உண்டு.