வியாழன், 12 ஜனவரி, 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 12/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 12/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 12/1/23

அவளுடன் சேர்ந்திருந்தால், 
அன்றே முடிந்திருக்கும் 
என் காதல்..! 
 
அன்று அவள் என்னைவிட்டு 
பிரிந்ததால்தான்,  
இன்னும் நீளுகின்றது 
என் காதல்..!

நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்துவிட்டால்... 
நினைவின் மொழியும், 
பிரிவின் வலியும் தெரியாமல் போய்விடும்..!

நீ தந்த காயங்களை கூட 
ஆறுவதற்கு நான் 
அனுமதிப்பதில்லை, 
 
அந்த வலிகள் உன்னை 
நினைவூட்ட 
வேண்டும் என்று ..!

எத்தனை பேர் 
என்னுடன் 
இருந்தாலும், 
 
நான் 
எதிர்பார்க்கும் ஒருவர் 
இல்லாத போது 
தனிமையையே 
உணர்கிறேன்..!

என்னை பிடிக்கவில்லை என்று சொல்லும் போதெல்லாம் வலிக்கவில்லை,  
எனக்கு பிடிக்காதவர்களிடம்  
நீ பழகும் போதுதான் வலிக்கிறது..!

அன்று நான் என்ன பேசினேன்...?நீ என்ன 
பேசினாய்...? 
 
என்ற அர்த்தமற்ற இறந்தகால 
சிந்தனையினாலே 
 
பல உறவுகள் இதயம் 
வெடித்து பிரிந்து போகிறது

நீ நேசித்த இதயத்தை ஏமாற்றி விடாதே 
பின்பு நீயே தேடி சென்று நேசித்தாலும் 
அது உன்னை நேசிக்காது...

அழுதாலும் தீராது என் சோகம் 
என்னை அழ வைக்கும் 
உன் நினைவுகள் 
இருக்கும் வரையில்...!

என்னை நீ மறக்கும் அளவுக்கு உன்னை நான்  
வைத்திருக்கவில்லை, 
இருந்தும் எப்படி மறந்து போனாய்...? 
 
உனக்கு விட்டுகொடுத்து விட்டுகொடுத்து 
இன்று நான் உன்னையே இழந்து நிற்கிறேன்.... 
 
எங்கோ ஒருநாள் உனை வழியில் சந்திக்க நேர்ந்தால் 
நான் சந்தோசமாக‌ இருப்பதாய் நடித்துக்கொள்கிறேன்.!

என்னுடைய காதல், 
உண்மையான அன்பில் உருவான காதல்,  
உயிரே விட்டுப் பிரிந்தாலும்  
உன்னைவிட்டுப் பிரியாது..!

பிரிவுகள் தரும் 
வேதனையை விட, 
உன்னை உண்மையாக 
நேசித்ததற்காக, 
நான் படும் வலிகள் 
கொடியவை..!

பொய்யுடன் பழகுபவரை நம்பும் நீ 
உண்மையுடன் உன் பின்னால் 
வரும் என்னை 
விலத்தி விலத்தி செல்வதை தான் 
என்னால் தாங்க முடியவில்லை.! 
 
உன் வாழ்க்கை என்னுடன் என்று 
நிர்ப்பந்தம் போட மாட்டேன், 
ஆனால் உன் வாழ்வில் 
துன்பத்தை சந்திக்கும் 
தருணத்தில் விலகி நின்று பார்க்க 
மாட்டேன்..! 
 
நீ எனக்கு வேண்டும் 
என்பதைவிட 
உன் வாழ்வில் இன்பம் வேண்டும் 
என்பதற்காய் தான் 
நீ வெறுத்த போதிலும் 
உன் நலனிற்காய் உழைக்கிறேன், 
புரிந்து கொள் அன்பே. !!

நீ வார்த்தைகளால் காயப்படுத்தும் தருணங்களில்  
எதிர்த்து பேச மனம் வரவில்லை, 
 
 என் மெளனவுனங்களிலாவது புரிந்துகொள்ள முயற்சி செய், 
 
எனது வலிகளை..!  
 
என் கண்ணீர் சொல்லியும் உணராத வலிகளை 
நீயாக உணர்ந்தால் மட்டுமே முடியும்..!

எல்லோரும் தனக்கு  
ஒரு இதயம் இருக்கிறது  
என்பதை உணர்வதே,  
 
யாரோ ஒருவரின் அன்பை  
ரசிக்க ஆரம்பிக்கும் பொழுது தான்..!

நீ என்னை வெறுக்கிறாய் - என்று 
எனக்கு தெரியும். 
என் இதயத்துக்கு தெரியாது - நான் 
சொன்னாலும் புரியாது அதுக்கு. 
வெறுக்காதே..!

என் இதயத்தில் 
உனக்கான இடம் அப்படியே 
தான் இருக்கும்...

அங்கு நீயும் வரப் போவதில்லை,
நானும் அதை யாருக்கும் 
தரப்போவதும் இல்லை..

மறக்கவும் முடியவில்லை,
வெறுக்கவும் முடியவில்லை,
வாழவும் முடியவில்லை,
சாகவும் முடியவில்லை,
ஆயுள் தண்டனை தந்து விட்டு சென்று விட்டாய் நீ...
அணு தினமும் துடிகின்றேன் நான்..!

நீ பேசாவிட்டலும் நான் பேசுகிறேன்
என்று என்னை இழிவாக
நினைக்காதே..!
என்னால்
உன்னை விட்டு ஒரு துளியேனும்
விலகிச் செல்ல முடியவில்லை...!
உன் மீது கொண்ட அன்பு,
அக்கறை,கா தல்
தான் காரணம்.
காதலித்த நாள் முதலாய் உன்னை 
என் கைக்குழந்தையாகவே 
கண்டஎனக்கு திடீரென்று 
நீ என்னை விட்டு சென்றது போல என்னால்
விலகிட முடியவில்லை...!
என்னை மன்னித்து விடு...!
உனக்கு பிடிக்காத ஒன்றை 
உன்னிடம் கேட்கிறேன்.
தயவு செய்து என் நிலை புரிந்து 
திரும்பி வா 
என்னிடம் ..

உன்னோடு பேசவில்லை,
காற்றோடு பேசுகிறேன் 
கவிதையாக..!

என் கல்லறை சிந்தும் கண்ணீரும்
உந்தன் காலடி தேடி வரும்
பெண்ணே..!
என் காதலின் உண்மையை உனக்கு
உணர்த்த..!
Previous Post
Next Post

0 Comments: