செவ்வாய், 17 ஜனவரி, 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 17/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 17/1/23


இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 17/1/23


எத்தனை ஜென்மம் எடுத்தாலும், 
நான் காதலிக்க தயாராக இருக்கின்றேன், 
அத்தனை ஜென்மத்திலும் நீ என் காதலியாக கிடைத்தால்..!

எழுத படாத எழுத்துகளும்,
சொல்ல படாத வார்த்தைகளும்,
காட்ட படாத பாசங்களும்,
உன் ஒருமுறை அணைப்பு சொல்லிவிடுகிறது,
அனைத்தையுமே..!

அவளோடு சேர்ந்து நடந்த கடல்கரையில், 
இன்று நான் மட்டும் நடக்கிறேன் தனியாக..!

அவளை பார்த்த முதல்கனமே, 
என்னை சிறை எடுத்தால், 
அவளின் இதய சிறையில்..!

அன்று அவளிடம் பலமுறை கேட்டேன், 
உன் தோளில் சாய்ந்து அழவேண்டும் என்று  
ஆனால் அவள் மறுத்துவிட்டாள், 
இன்று அவள் அழுகின்றால் என்னை நினைத்து, 
 என் கல்லறையில் சாய்ந்து..!

உன்னை என் இதயம் என்னும் கருவறையில், 
தினம் தினம் சுமகின்றேன் குழந்தையை போல..!

நான் நடக்க விரும்புகிறேன், 
அவள் நடந்த காலடி சுவடுகளை பின்தொடர்ந்து..!

அழுகின்ற வினாடியும்,
சிரிக்கின்ற நிமிடங்களும்,
நாம் வாழ்கை என்ற கால 
கடிகாரத்தில் நிரந்திரமாக அமைவதில்லை.., 

அதுபோல, 

நாம் காதலின் பிரிவும் நிரந்திரமில்லை..!

என்னுடைய காதல்..

அன்று அவள் எனக்காக இரத்தம் சிந்தினால்,
இன்று அவளுக்காக நான் கண்ணீர் சிந்துகிறேன்..!

நான் வாழ விரும்புகின்றேன்..! 
 உன்னக்காக உயிர் வாழ்ந்து கொண்டு, 
நீ செல்லும் இடங்களில் பின் தொடர்ந்து வரும் நிழல் போல..!

கனவில் என்னுடன் வாழும் நீ, 
நிஜத்தில் வேறு ஒருவனுடன் வாழுவது ஏன்..? 
 
ஏன் உயிரில் கலந்த நீ, 
மற்றொருவன் உடலுடன் கலந்தது ஏன்..?

உன்னை நினைத்து பல கவிதைகள் எழுதுகின்றேன்  
ஆனால், 
உன்னை வெறுத்து சில வார்த்தைகள் கூட எழுதமுடியவில்லை...!

நான் என் உயிர் இருக்கும் வரை உன்னை நேசித்தால், 
என் நிழல்யாவது நீ பார்ப்பயா..?

வானத்தில் இருக்கும் நிலவினை போன்று  
என்னுள் இருக்கும் உன்னை, 
நிர்போன்று இருக்கும் என் கண்ணாடி இதயத்தில் வைத்தவன் யார் ..?


நான் என் வாழ்க்கையை வாழ நினைத்தது எனக்காக ஆனால், 
நான் என் வாழ்க்கையை வாழுந்து முடித்து என்னுள் இருக்கும் அவளுக்க..!

என் மனதோடு வாழும் உன்னை,
என் உயிரோடு வாழ செய்தது உன் காதல்..!

என் உயிரோடு வாழும் உன்னை,
என் மனதிலே மறைய செய்தது என் காதல்..!

நினைக்கும்பொழுது நினைவில் வர மறுகின்றாய், 
மறக்கும் பொழுது எதிரே வந்து நிற்கின்றாய்..!

மறுக்கப்பட்ட அன்பும், 
முறிக்கப்பட்ட பந்தமும், 
வெறுக்கப்பட்ட உறவும், 
ஒருபோதும் காதலுடன் கலந்து வாழுவதில்லை...

உன்னை பார்க்கும்பொழுது மட்டும் என் மனதுக்குள் ஒரு மாற்றம், 
ஏன் இந்த மாற்றம் என் மனதுக்குள் தோன்றியது..? 
இதன் பேர்தான் காதலோ..!

நான் எழுதிய முதல் கவிதை : 
 
காதலித்தால் தான் கவிதை எழுத முடியும் என்றால், 
இன்று முதல் நானும் காதலிக்கிறேன், 
என்னுள் இருக்கும் அவளை..!
Previous Post
Next Post

0 Comments: