புதன், 18 ஜனவரி, 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 18/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 18/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 18/1/23

கண்களில் தென்பட்ட யாவரும் 
இதயத்தில் இடம் பிடிப்பது இல்லை 
இதயத்தில் இடம் பிடித்த 
யாவரும் 
கண்களில் மட்டும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் 
கண்ணீராக

கனவுகள் மட்டும் ஆயிரம் 
வார்த்தைகள் பேசுகின்ற 
நிஜத்தில் மட்டும் ஏன் இல்லை

நீ என்னை மறந்து வாழ்வது 
போலவே எனக்கு கொஞ்சம் கற்று 
கொடு நானும் உன்னை போல 
மறந்து வாழ முயல்கிறேன் 
இல்லையே மரணிக்கிறேன் உன் 
நினைவுகளோடு

மறக்கத்தான் போகிறேன் உன்னை
அல்ல 
உன்னோடு பேசிய அந்த நாட்களை 
மரணத்திற்கு பின்

விலகி செல்ல ஆயிரம் காரணம் சொல்லி விலகி போகலாம் 
ஆனால் இல்லாத ஒன்றை சொல்லி நேசித்த இதயத்தை காயப்படுத்தி சொல்லாதீர்கள் 
பின்னால் இதே வலி நீங்களும் அனுபவிக்க நேரிடும்

ஒவ்வொரு புன்னகைக்கும் 
உயிர் உண்டு 
சில வற்றால் உயிர் எடுக்கவும் 
சில வற்றால் உயிர் கொடுக்கவும்

போராடி கொண்டே இருங்கள் 
ஒரு நொடி கூட கலங்கி விடாதீர்கள் எங்கோ ஒரு எல்லையில் உனக்கான அனைத்தும் 
பத்திரமாக காத்து கொண்டிருக்கும் போராடாமல் எதுவும் கிடைப்பது இல்லை இந்த உலகில்

நான் இருக்கின்றேன் என்ற வார்த்தைக்கு இந்த உலகில் 
எத்தனை இதயங்கள் ஏங்கி
கொண்டிருக்கிறது. சொல்லுவது பொய் என்று 
தெரியாமல்

உன்னை இழந்து கொண்டிருக்கிறேன் கொஞ்சம் கொஞ்சமாக 
ஆனால் உன்னை விட்டு நான் 
விலகி செல்ல வில்லை

எனக்கு பிடித்த மாறி 
உன்னை படைத்த இறைவன் 
ஏனோ எனக்கென்று எழுதவில்லை

முகவரி இன்றி முடிந்து போன 
உறவுகளிடம் 
முடங்கி கிடக்கின்றது நம் உணர்வுகளும்

நிஜங்கள் தரும் சந்தோஷத்தை விட 
நினைவுகள் தரும் சந்தோஷதுக்கு வலிமை 
அதிகம். 
நிஜங்கள் நிலைப்பது இல்லை 
நினைவுகள் என்றும் அழிவதில்லை

உன் குறுந்தகவல் கூட அழிக்க மணமில்லா எனக்கு உன் நினைவுகள் அழித்து விடு என்று கட்டளை இடும் உன் அறியாமை என்னவென்றுசொல்ல

அழகான அன்பில் மட்டுமே 
ஆழமான காயங்களை
தர முடியும்

அதிக அன்பும் 
பாசமும் காதலும் கொண்டவர்களுக்கு 
கடைசியாக கிடைப்பது என்னவோ பிரிவு ஒன்று மட்டும்தான்

எல்லா வலிகளையும் வார்த்தைகளில் சொல்லி விட முடியாது ஓசையின்றி ஓராயிரம் வலிகள் எல்லார் மனதிலும் உண்டு

அதிகமாய் அன்பு வைத்த இடமெல்லாம் 
வசதியாய் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது பிரிவும் 
கிடைக்கும் அன்பை உதாசீனம் செய்யாதீர்கள்
நீங்கள்.தேடும் எளிதில் கிடைத்து விடாது

பிடித்தவர்களுக்கா விட்டு கொடுத்து வாழ பழகி கொள்ளுங்க ஒரு வேளை உங்கள் பாசம் உண்மை என்று புரிந்தா அவர்கள் தேடி வந்து பேசுவார்கள்

மெளனம் 
அமைதியின் அடையாளம் 
மட்டும் அல்ல மற்றவர்களின் 
உள்ளத்தில் உரசி உறவாடும்
ஆயும்தம் கூட

நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாரும் 
எளிதில் சொல்லி விட முடியாது

வாழ்க்கையில் யாருக்கும் எளிதில் 
நிம்மதி கிடைத்து விடாது 

போராடி கொண்டு இருங்கள் அன்பு அரவணைப்பும் விட்டு விடாதீர்கள் நீங்கள் நீங்கள் தேடும் போது கிடைக்காது
Previous Post
Next Post

0 Comments: