வியாழன், 19 ஜனவரி, 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 19/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 19/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 19/1/23

மரணம் அருகில் வந்தாலும் 
உன் மடியில் மடிந்திட வரம் கேட்பேன் 
மறு பிறவி உன்னுடன் இருக்க 
நினைக்கிறேன் 
உன் காதலனாக இல்லை 
உன் உயிராக 
உனக்காக துடிக்கும் இதயமாக 
நீ இருக்கும் வரை நானும் துடித்து 
கொண்டே இருக்க ஆசை உனக்காக

ஒன்றையை நினைத்து தன்னையே மறப்பது தவமென்று சொன்னால் 
நான் உன்னையே நினைத்து 
என்னையே மறப்பதும் கூட தவம்தான்

அதிகாலை சூரியன் 
அந்தி மாலை நேர சூரியன் 
இரவை தாலாட்டும் 
நட்சத்திரம் நிலா இப்படி 
நிஜங்கள் மறந்து போனாலும் 
நீ தந்து சென்ற உன் நினைவுகளை 
என்றும் மறக்க முடியவில்லை அன்பே

எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து விட்டு போங்க ஆனால் ஒன்னு மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள் உங்களால் ஒருத்தர் அழவோ 
அழியவோ கூடாது வாழும் ஒரு வாழ்க்கை 
உண்மையா எல்லாருக்கும் பிடித்தா மாறி வாழ்ந்து விட்டு சென்றால் இறந்த பின்னும் உன் பெயர் இந்த உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கும்

என்னதா அன்பு பாசம் வச்சிருந்தாலும் நாம் கோபத்தில் பேசும் ஒரு சில வார்த்தைகள் நம் மனதுக்கு பிடிச்ச சில அன்பான உறவுகளை இழக்கிறோம் 
அந்த கோபத்தில் அன்பு நிறைய இருக்கு புரிந்து கொண்டா சரி

காதல் என்பது ஊர் சுற்றுவதும் பொருட்கள் வாங்கி கொடுப்பதும் மட்டும் இல்லை இறுதி காலம் வரை உண்மையான அன்போடு ஒருவருவொருக்கு விட்டு கொடுக்காமல் 
இருப்பதே காதல்

நான் அப்படி வாழ்ந்தன் இப்படி வாழ்ந்தன் பெருமை பேசும் அனைவரும் மரணம் எப்போ வரும் என்று தெரியாது நீ வாழும் வாழ்க்கையில் பெண்களை மதிக்க கற்று கொள்ள வேண்டும் காசு பணம் இருந்தா உன்னிடம் அனைவரும் இருப்பாங்க சொந்தம் பந்தம் எல்லாம் அது உன்கிட்ட இல்லனா நீ , நடை பிணம் ஆகிவிடுவாய் அப்படி ஆன உன்னை மீட்டு ஒரு நிலை கொண்டு வர இந்த உலகில் ஒருவரால் முடியும் அது உன் மனைவியாக இருக்கம் 
உலகில் அனைத்து தியாகங்கள் உள்ளது அதில் பெண்ணின் தியாகத்துக்கு ஈடு இங்கு ஏதும் இல்லை அம்மா அப்பா அண்ணா தம்மி தங்கை அக்கா மொத்த சொந்தம் இழந்து வரும் அவளிடம் சீதனம் எண்ணும் கொடுமை ஒரு ஆண் கொடுக்கிறான் ஒரு சிலர் கொஞ்சம் யோசி மனிதா இவளோ தியாகங்கள் பண்ணி வரும் அவளுக்கு நீ என்ன சீதனம் கொடுக்க போகிறாய்

அன்பின் ஆழம் எவ்வளவு என்பதை 
பிரிவின் போதுதான் உணர முடியும் 
அதை உணர்கிறேன் உன்னோடு பேசாதா 
இந்த நிமிடம்
 பேசுவாய் என எதிர் பாக்கிறேன் அன்பே

அன்பிற்க்காக ஏங்கி கொண்டிருக்கும்
ஒரு இதயத்திற்கு 
உண்மையான அன்பு எங்கு இருந்து 
கிடைக்கிறதோ
அங்கு உருவாகும் ஒரு உன்னதமான 
உறவே காதல்

என் விழியோரம் உறைந்தவளே 
என் உயிரெல்லாம் நிறைந்தவளே 
நிஜம் எனும் திரையில் நீ வர 
மறுப்பது ஏனோ

காலங்கள் ஆயிரம் உருண்டோடி 
போனாலும் 

நீ என் அருகில் வந்த 
அந்த முதல் நிமிடமும் 
அந்த நாளும் 

இனி ஒரு போதும் நான் 
மறக்க போவது இல்லை அன்பே

காதல் ஒரு சுகமான வலி தான்
ஏனெனில் 
நேரில் சந்ததித்து பேசுவது 
மட்டும் காதல் அல்ல
நினைவில் அழ வைப்பதும்
காதல் தானே

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் 
ஏதாவது ஒன்றை இழந்ததுதான் ஆக வேண்டும் 
அது உயிரா 
உணர்வா என்பது அவர் சந்திக்கும் பிரச்சனை பொறுத்து அமைக்கிறது

பாசம் வைப்பது தவறில்லை 
அதை தவரானவர் மேல் வைப்பதுதான் 
தவறு 
தவறென்று தெரிந்து மறுநொடி திருத்த 
நினைக்கியில் தவறி போவது பாசம் 
மட்டும் அல்ல பாசத்தை பகிர்ந்த 
எம் இனிய இதயமும்தான்

வலியாக உணர முடியவில்லை 
வலிக்கும் இடமும் அறிய முடியவில்லை 
ஆனாலும் வலிக்கிறது 
உந்தன் பிரிவு

உங்களின் தேவைக்காகவோ 
பொழுதுபோக்கிற்காக்கவோ
மற்றவர்களின் உண்மையான 
அன்பிலும் உணர்விலும்
விளையாடதீர்கள் 
இதை நீங்கள் உணரும் காலம்
வரும் போது நிம்மதி அற்றவராய் 
காணப்படுவீர்கள்

நீ அளித்த பரிசுகளில் எனக்கு 
மிகவும் பிடித்தது 
=பிரிவு =
பரிசாகதான் நினைக்கிறேன் 
உன்னை அதிகம் நினைக்க 
வைப்பதால்


பாசம் தேடி அலைவதில்
பாதி வாழ்க்கை 
தொலைகிறது 

பாசம் வைத்து அழுவதில்
மீதி வாழ்க்கை 
முடிகிறது  

அன்பை உதாசீனம் செய்யாதீர்கள் 
அதன் வலி மரணத்தை விட கொடியது

காலமும் கடந்து போகும் காதலும் மறைந்து போகும் ஏதோ வாழ்கிறோம் எதற்காக வாழ்கிறேன் எதுவும் தெரியாமல் தடுமாற்றம் தடம்மாறி போகிறது என் எதிர்காலம்

அன்பை எதற்காகவும் உதாசீனம் பண்ணாதீர்கள் அன்பானவர்களின் பிரிவு ஒரு எதிர்காலத்தை அழித்துவிடும் உண்மையான அன்பை எல்லோரிடமும் பகிர்ந்து செல்வோம்

என்றோ தொலைந்த நம் 
சந்திப்புகள் 
இன்னும் நினைத்து நினைவுகளோடு கரைகிறது 
இனிமையான நாட்களின் ஒவ்வொரு 
நொடிகளின் இழந்த மகிழ்ச்சியை 
இடைவிடாது நினைத்த படி
Previous Post
Next Post

0 Comments: