சனி, 21 ஜனவரி, 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 21/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 21/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 21/1/23

உன்னை அழவைப்பது 
உன்னை பிடிக்காதவர்கள் இல்லை!
உன்னை உயிராக நினைப்பவர்கள் மட்டுமே! —

கைகளால் கண்களை தடவி பார்க்கின்றேன் தூக்கம் வரவில்லை 
கண்ணீர் மட்டுமே வற்றாத ஊற்றாய் ஓடிக்கொண்டிருந்தது ......

ஒரு நாள் நீ புரிந்துகொள்வாய்
என் காதல் உண்மையானது என்பதை...

ஒரு நாள் நீ புரிந்துகொள்வாய்
உன் அருகில் நான் இல்லை என்பதை...

ஒரு நாள் நீ புரிந்துகொள்வாய்
என்னை விட்டு ஏன் விலகினாய் என்பதை...

ஒரு நாள் நீ புரிந்துகொள்வாய்
உன்னை விட்டு விலகும் போது
எனக்கு எவ்வாறு வலித்தது என்பதை...

அந்த நாள் நீ என்னை நேசிப்பாய்
என்னைப் போலவே...

நீ செய்யும் தவறுகளை எனக்குதெரியாமல் செய்துகொள். .
அதை தாங்கும் சக்தியும். , கேட்கும் தென்பும் 
எனக்கு இல்லை. . !

கடற்கரை மணலில் வரையப்பட்ட இதயமாய் என் காதல்....!
அலைகளின் வலிமையில்தான்
தங்கிக்கிடக்கிறது
அமைதிபெறுவதா இல்லை
அழிந்துவிடுவதா என்று....!
ஆம்....
உன் அன்பெனும் அலையில்தான்
தங்கிக் கிடக்கிறது 
என் காதல்...
உயிர்பெறுவதும் உலர்ந்துபோவதும்....!!!

சொன்ன காதலின் பிரிவை விட
சொல்லாத காதலின் பிரிவுக்கே
வலி அதிகம்..

மனதை தொட துடிக்கும் காதல்
தோற்பதில்லை....

உடலை மட்டும் தொட துடிக்கும்
காதல் நிலைப்பதில்லை...

என் மௌனத்திற்கு உள்ளே
ஒளிந்து கொள்கிறது..என்னை
போல் என் வேதனைகளும்...!!!

கண்கள் முகம் பார்ப்பது,
காதல் அல்ல- 
இதயம் இதயத்தை
பார்ப்பது தான் "காதல்

ஆணோ,பெண்ணோ உங்களுக்கு பிடிக்கலையோ நேர சொல்லிடுங்க சும்மா அவங்கள உங்க பின்னாடி நாய் மாதிரி அலையவைக்கிறதில உங்களுக்கு அப்பிடி என்ன சந்தோசம் ம்ம்ம்ம் ........... இந்த நிலைமை நாளைக்கு உங்களுக்கு வந்த எப்பிடி இருக்கும் எண்டு யாராவது சிந்திக்கிரீங்களா? சிந்தியுங்க சிந்தியுங்க இதுக்கு பிறகாவது மனிசன மனிசனா மதிச்சு நடக்கபலகுங்க அதுதான் உங்களுக்கும் நல்லது உங்கள சுத்தி இருக்கிறவங்களுக்கும் நல்லது இது கதளிக்கிரவங்களுக்கும் காதலுக்குக காத்திருக்கிரவங்களுக்கும் காக்க வைக்கிரவங்க்க்களுக்கும் பொருந்தும் இனிமேலும் திருந்தி சொன்னது போல நடக்கல ஏன்டா நீங்க மனித பிறவியே இல்லை.................

ஒரு நொடியில் பார்த்த முகத்தை
ஒவ்வொரு நொடியும் 
நினைத்து கொண்டிருக்கும்
அற்புதமான உணர்வு தான் காதல்

காதல் புனிதமானது 
உனக்கே தலையணையாய்..... 
விடிகிற வரை நான் கிடப்பேன் -
உறக்கம் கலையும்என்றால்
இதய துடிப்பையும் நானுகுறைப்பேன்....!

குளிரில்
மனம் விட்டு பேச
ஆசை தான்..,
மனதை எங்கோ விட்டு விட்டு
யாரிடம் எதைப் பேச...

கண்கள் பேசும் மொழி புரியாத உன்னக்கு.
மௌனம் பேசும் மொழியும் அறியாத உன்னக்கு.
எப்படி உரைப்பேன் நீ இல்லாத நொடிகளின் இரணங்களை..........

ஆகாயம் இல்லை என்றால்....!
கடலுக்கு #நிறமே இல்லை.....
காதல் இல்லை என்றால்.......!!
வாழ்வதில் #அர்த்தம் இல்லை......

முதல் பார்வையிலேயே,
என் பருவம் பதறியதே,
கன்னி நான் கர்ப்பம் அடைந்தேன்,
நம் காதலை பிரசவித்தேன்

காதலுக்காக நீயும் இல்லை
உன்னை காதலிக்காமல் 
நானும் இல்லை
ஏனோ மறுக்கிறது
என் மனம்
இது வேண்டாம் என்று
தினம் தினம்
பார்வையால் பரிசளித்தது
உன் கண்கள்
புன்னகையை மறுத்ததில்லை
உன் உதடுகள்
நீ பேச காத்திருக்கிறேன்
கட்டாயம் முடியாது,
நான் என் மௌனத்தை
முறிக்கும் வரை..

கனவுகள்
யாவும்
நிஜங்களாக
காண
ஆனந்த
கண்ணீரின்
திரையிடல்
விழிகளில்...

ஒரு முறையேனும்
உதடுகளால் உன்
காதலை உச்சரி என
நித்தமும் நச்சரிக்கிறாய்!!

உலக மொழிகளையெல்லாம்
மொத்தமாய் கோர்த்தாலும், 
நெஞ்சமெங்கும் நீக்கமற
நிறைந்துவிட்ட என்
நேசத்தின் நுனி மட்டுமே விளங்கிடும்
என்கையில் எந்த மூலைக்கடா?

இந்த மூன்றெழுத்து
ஆங்கில வார்த்தையெல்லாம்!!
சொல்ல முடியாது
போடா மடையா!!!

இதயமே இல்லை என்று சொல்பவர்களுக்கு
எப்படி தெரியும் என் இதயம் இருப்பது
உன்னிடம் தான் என்று!!!

நான் கண்களை மூடிக் கொண்டபோதும்
நீ விட்டு வைப்பதில்லை தவறாமல்
என் கனவிலும் வந்துவிடுகிறாய்......

பேசுவதேயில்லை என்று சொல்கிறாய்
ஆனால் என்னைத் தவிர
எல்லோரிடமும் நீ பேசுகிறாய்.....

உதடுகள் கூட அசைக்காமல்
பேசிட எங்குதான் கற்றுவந்திருப்பாய்
நான் யாரிடம் கேட்டு தெரிந்துகொள்வது?

கண்களில் ஈர்ப்பு என்று கவிஞர்
சொன்னதெல்லாம் உண்மைதானென
நான் உணர்ந்தது உன்னை பார்த்த பின்பே.....

ம் என்பதும் ம்ஹீம் என்பதும்
நீ உச்சரிப்பதால் தான்
அத்தனை இனிமையாய் கேட்கிறது....

நீ கண்ணாடி முன்னே நிற்காதே
உந்தன் கண் அழகை கண்டே
அது கண்வைத்து விடுகிறது....

உந்தன் புருவங்களைப் போல
ஒரு சிறந்த ஓவியம் யாரேனும்
தீட்டிவிட முடியாது எப்போதும்....

அடடா உனக்காய் எழுதிட
நினைக்கையில் வார்த்தைகள்
கூட அழகாய் தான் வந்துவிழுகிறது...
Previous Post
Next Post

0 Comments: