செவ்வாய், 24 ஜனவரி, 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 24/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 24/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 24/1/23

எனக்கான வாழ்க்கை முழுவதும் 
நீ இருக்க ஆசை இல்லை...
என் வாழ்க்கையே நீயாக 
இருக்க ஆசை.

ஒவ்வொரு முறையும் 
நீ கொடுக்கும் நெற்றி
முத்தத்திலும் ...
நான் உனக்கானவள் என்பதை
உணர்த்திக்கிறாயடி...!

என் காதலையும் ...உன் 
மீது வைத்திருக்கும் 
அன்பையும் சொல்ல ...
இந்த ஒரு ஜென்மம் போதாது....

ஏன் எனறால் என் காதல் 
அந்த வானம் போல்
இரவில் வரும் நட்சத்திரம்
போல 
என்னவும் முடியாது..
அளக்கவும் முடியாது..

நீ என்னில் ஆதிக்கம் செலுத்திய 
போதெல்லாம் தெரிய வில்லை.
நீ பிரிந்து சென்ற பிறகு இவ்வளவு 
பாதிக்கும் என் மனதை என்று.
அன்று நீ விட்டு சென்ற இடத்திலே
நிற்க்கிறேன்.
தொட முடியாத தூரத்தில் நீ.
அவமானங்களை அன்பளிப்பாகவும்
வலிகளை வரமாகவும்
தந்துவிட்டு சென்றாய்.
வலிகள் நிறைந்ததுதான் என்
வாழ்க்கை என்று நீ அறியாததா.
பின் ஏன் வலிகளை வாழ்க்கையாக 
தந்து செல்கிறாய்....?

எத்தனை முறைதான்
ஏமாற்றும் இந்த அலைகள்
உன்னைப்போல...
எத்தனை முறைதான்
ஏமாறும் இந்த கரைகள்
என்னைப்போல...

எவரோடும் வாழலாம்
என்றிருந்திருந்தால்
காதல் தேவையில்லை
உன்னோடு மட்டும்
உனக்காகவே வாழவேணும்
என்பதால் உன்னைகாதலித்தேன்...

இறந்த பின் சொர்க்கம் செல்வேனா 
என தெரியவில்லை ஆனால் 
உன்னோடிருந்த ஓர் சில நொடிகளில் உணர்ந்துவிட்டேன்.. 
என் சொர்க்கம் எதுவென..

தனியாக இருக்கலாம்
என்று நினைத்தாலும் 
சில நினைவுகள் தனியாக 
இருக்க விடுவதில்லை 
மாறாக அழுகையே 
வர வைக்கின்றது.....!!!!

என் காதலை சாகடிக்க 
நீ இருக்கும் என் மனதை ஏனடி நோகடிக்கின்றாய்....

தெரிந்து கொள் என் காதல் என்றும் சாகாதடி
நோகடிப்பது நீயாக இருந்தாலும்....

யாரும் திறக்காத 
என் இதயத்தை 
திறந்து வைத்தது
உன் கடைக் கண் பார்வைதான் .......
கல்லாய் இருந்த இதயம்
முதன் முறையாக 
பூவாக மாறி
தோற்றதும் உன்னிடம்தான்
என் உயிரே.........

யாரும் திறக்காத 
என் இதயத்தை 
திறந்து வைத்தது
உன் கடைக் கண் பார்வைதான் .......
கல்லாய் இருந்த இதயம்
முதன் முறையாக 
பூவாக மாறி
தோற்றதும் உன்னிடம்தான்
என் உயிரே.........

யாரை அதிகம் பிடிக்கிறதோ
அவர்களிடம்தான்
அதிககோபம் வருகிறது
அந்தகோபம் தான்
அவர்களிடம் இருந்து 
நம்மை பிரித்துவிடுகின்றது...!

பலருக்கு பல இரவு வேண்டும் என்றால் 
சிலருக்கு சில இரவுகள் தேவைபடுவதில்லை.. 
காரணம் காதல்
காதலித்து பார் அதன் ஆழம் தெரியும் என்று கூறியவர்களுக்கு....
 ஏன் அதன் வழி தெரியவில்லை???...

ஒருஆணின் சோகம் பெண்ணை தாக்குமா
என்பது தெரியவில்லை...
ஆனால் பிடித்த பெண்ணின் ஒரு துளி
கண்ணீர் கூடஅந்த ஆணை உருகுலய
செய்யும் என்பதில் சந்தேகமில்லை

நித்தமும் உன் நினைவுகள் தான்... 
என் நெஞ்சிலும் உன் கனவுகள் தான்... 
சஞ்சலம் ஏதும் இல்லாவிட்டாலும், சங்கடம் கொள்கிறது என் மனசு... 
கரையைத் தேடும் அலைகள் போல, 
உன்னையே தேடுகிறது என் காதல்...

உயிரே... 
உன்னை கண்ட நாள் முதல்... 
என் கண்கள் உறங்கவில்லை... 
விட்டு துடிக்கும் என் இதயம் கூட... 
விடாமல் துடிக்கிறது... 
என்னில் நீ 
இருப்பதால் தானோ... 
கண்ணுக்குள் கண் வைத்து 
உன்னை பார்கிறேன்... 
என் இதயமாக.....

எனக்கு மட்டும்
காற்றாக பிறக்கும்
பாக்கியம் கிடைத்தால்
உன் சுவாசத்தில் மட்டூமே 
சிறையிருப்பேன்

நீ கோவித்தாலும் அழகுதான் 
சிரித்தாலும் அழகுதான்
அதனால்தான் உன்னிடம் சண்டையும் போடுறேன்
கொஞ்சி விளையாடவும்
செய்கிறேன்.....

மௌனமாய் தூரம் நின்றால்
மடியிலே பாரம் இல்லை..!!!
மீண்டும் ஒரு காதல்செய்ய
கண்களில் ஈரம் இல்லை 💙


தோல்விகள் புதிதல்ல என் மனதிற்கு..
ஆனால் நீ கொடுக்கும் வலிகள் தான் இன்னமும் புதிதாகவே இருக்கின்றது 
என் மனதிற்கு...
Previous Post
Next Post

0 Comments: