செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

மழைக்கால செரிமானப் பிரச்னைகளை தீர்க்க உதவும் சுக்கு - மல்லி கஷாயம்! -Hello Doctor

Hello Doctor மருத்துவம்

மழைக்கால செரிமானப் பிரச்னைகளை தீர்க்க உதவும் சுக்கு - மல்லி கஷாயம்! -Hello Doctor 

சுக்கு - மல்லி கஷாயம்!

தேவையானவை:

சுக்கு - 10 கிராம்,
மல்லி - 20 கிராம்,
சீரகம் - 5 கிராம்.

செய்முறை:

சுக்கு, மல்லி, சீரகத்துடன் நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து, ஒரு டம்ளராக வற்றும் அளவு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். 

அதை ஆறவைத்தோ, மிதமான சூட்டிலோ பருகலாம். பனைவெல்லம் சேர்த்தும் குடிக்கலாம். 

இந்தக் கஷாயத்தை உணவுக்குப் பின் காலை, மாலை இருவேளை குடிக்க வேண்டும்.

பலன்கள்:

மழைக்காலங்களில் வரும் செரிமானப் பிரச்னைகளை தீர்க்க உதவும். வயிறு மந்தமாவதைத் தடுக்கும்.

மழைக்கால வெந்நீர் குளியல்... பயனுள்ள டிப்ஸ்! - Hello Doctor

Hello Doctor மருத்துவம்

மழைக்கால வெந்நீர் குளியல்... பயனுள்ள டிப்ஸ்! - Hello Doctor 

● மழை, குளிர்காலங்களில் வெந்நீரில் குளிப்பது நல்லது. அதிக சூடான தண்ணீரைவிட வெதுவெதுப்பான நீரே குளியலுக்குச் சிறந்தது.

● மழை, குளிர் காலங்களில் எண்ணெய்க் குளியலைத் தவிர்க்கலாம்.

● சைனஸ், மூக்கடைப்பு, ஆஸ்துமா பாதிப்புள்ளவர்கள் சுக்கு தைலத்தைப் பயன்படுத்திக் குளிக்கலாம்.

● வெந்நீரை அப்படியே தலையில் ஊற்றுவது முற்றிலும் தவறு. தலையில் நேரடியாக வெந்நீர் ஊற்றினால் வெப்பம் உடலைவிட்டு வெளியே போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

● வெந்நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும். பிறகு முழங்கால், இடுப்பு, நெஞ்சுப் பகுதி இறுதியாக தலை என கீழிருந்து மேல் நோக்கி தண்ணீரை ஊற்ற வேண்டும். வெப்பம் வெளியேற ஏதுவான முறை இதுதான்.

● மழை, குளிர்காலங்களில் ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் தலைக்குக் குளிப்பதை தவிர்க்கவேண்டும்.

● சாப்பிட்ட பிறகு குளிக்கக் கூடாது. மழைக் காலத்தில் பொதுவாகவே செரிமானம் தாமதமாக நடக்கும். உணவுக்குப் பின் குளித்தால் அது செரிமானத்தை மேலும் மட்டுப்படுத்தும்.

உதடு வெடிப்பு சரியாக! - Hello Doctor

Hello Doctor மருத்துவம்

உதடு வெடிப்பு சரியாக! - Hello Doctor 

● தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் காயத்தை குணப்படுத்தும் பண்புகள் இருப்பதால் உதடு வெடிப்பு நீங்க இதனை பயன்படுத்தலாம்.

● தேங்காய் எண்ணெய்யில் ஈரப்பத தன்மை அதிகம் உள்ளது. உதடுகளில் உ தடவிவர வெடிப்புகள் மறையும்.

● உதடு சிவப்பாக: பல் துலக்கும் முன், வெறும் ப்ரஷால் லேசான உதட்டில் வருடித்தர இறந்த செல்கள் நீங்கி சிவப்பாக மாறும். 

நண்பர்களுடன் பகிருங்கள்..

உடல் வெளுப்பு, தேமல் குணமாக! - Hello Doctor

Hello Doctor மருத்துவம்

உடல் வெளுப்பு, தேமல் குணமாக! - Hello Doctor 

● சோற்றுக் கற்றாழையின் நடுப்பகுதியை பிளந்து, அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினமும் உண்டு வந்தால் அல்சர் உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.

● வெள்ளைப்பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர உடல் வெளுப்பு, தேமல் குணமாகும். 

● ஓரிதழ் தாமரை பவுடர் ஒரு ஸ்பூன் வீதம் இருவேளை பசும்பாலில் கற்கண்டு (அ) தேன் சேர்த்து சாப்பிட விந்து உற்பத்தி பெருகும்.

காலையில் எலுமிச்சை நீரில் தேன் கலந்து குடித்தால்! - Hello Doctor

Hello Doctor மருத்துவம்

காலையில் எலுமிச்சை நீரில் தேன் கலந்து குடித்தால்! - Hello Doctor 

● காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சை சாறு, அதனுடன் தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்

● குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்

● வயிற்று பிரச்சனைகள் சரியாக உதவும்

● சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும்

● நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

● வயிற்றுப்புண், நீரிழிவு, அமிலத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள் இந்த முறையை தவிர்ப்பது நல்லது.

வயிற்றுப்போக்கு குணமாக! - Hello Doctor

Hello Doctor மருத்துவம்

வயிற்றுப்போக்கு குணமாக! - Hello Doctor

◆ மாதுளையின் துவர்ப்பு சக்தி வயிற்றுப்போக்கை நிறுத்த அதிகளவில் உதவுகிறது. 

◆ மாதுளையின் ஜூஸ் மட்டுமல்ல, அதன் விதை கூட வயிற்றுப்போக்கிற்கு நல்லது. 

◆ தேன் மற்றும் ஏலக்காய் பொடியை வெந்நீரில் கலந்து நாள் ஒன்றுக்கு 2 முறை குடித்தால் வயிற்றுப்போக்கு சரியாகும். 

◆ அரை டீஸ்பூன் சுக்குப்பொடியை மோரில் கலந்து நாள் ஒன்றுக்கு 3 (அ) 4 முறை குடித்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

சளி, இருமலை தடுக்க வீட்டு வைத்தியம்! - Hello Doctor

Hello Doctor மருத்துவம்

சளி, இருமலை தடுக்க வீட்டு வைத்தியம்! - Hello Doctor 

குளிர்காலத்தில் சளி, இருமல் போன்றவை எளிதாக அனைவருக்கும் வரக்கூடியது. ஆனால் இவர் எளிதில் சரியாகாது. பெரும் தொந்தரவாக இருக்கும். 

இதனை எதிர்கொள்ள சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. ஆவி பிடித்தல், கற்பூரவல்லி, தூதுவளை துவையல் சாப்பிடலாம். மிளகு ரசம் அடிக்கடி சாப்பிடலாம். 

தலைவலி, தொண்டைப்புண் ஆகியவற்றுக்கு சுக்கு பால் குடிக்கலாம். 

இஞ்சி, துளசி சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பி சக்தி அதிகரிக்கும்.

சாப்பிட்டதும் இதை செய்யாதீர்கள்! - Hello Doctor

Hello Doctor மருத்துவம்
சாப்பிட்டதும் இதை செய்யாதீர்கள்! - Hello Doctor 

உணவு சாப்பிட்டு முடித்ததும் குட்டித்தூக்கம் போடுவது. டீ, காபி குடிப்பது என சில பழக்கங்கள் நம்மிடம் உள்ளது. 

இதனால், செரிமான பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை உடலில் ஏற்படும். 

இதனை தவிர்க்க சாப்பிட்டதும், 

● தண்ணீர் பருகக்கூடாது 

● உடற்பயிற்சி செய்யக்கூடாது 

● பெல்ட்டை தளர்த்தக்கூடாது. 

● புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் கூடாது, 

இது 10 மடங்கு கூடுதல் தீங்கு விளைவிக்கும்.

நகங்கள் பளபளப்பாக இருக்க! - Hello Doctor

Hello Doctor மருத்துவம்

நகங்கள் பளபளப்பாக இருக்க! - Hello Doctor 

● பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்ணெய் ஒரு தேக்கரண்டி, பன்னீர் 2 தேக்கரண்டி, எலுமிச்சம் சாறு ஒரு தேக்கரண்டி மூன்றையும் கலந்து வெந்நீரில் 10 நிமிடம் கால்களை ஊறவிட்டு, பின்பு இக்கலவையை பூசிவர வெடிப்பு நீங்கும். 

● நகங்கள் பளபளக்க கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் நகங்கள் பளபளப்பாக இருக்கும்.

செரிமானக் கோளாறு நீங்க! - Hello Doctor

Hello Doctor மருத்துவம்

செரிமானக் கோளாறு நீங்க! - Hello Doctor 

● இரவு தூங்கச் செல்லும்முன் கடுக்காயை தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து அந்த நீரை அருந்த வேண்டும். 

தொடர்ந்து சில நாட்கள் இதுபோல் குடித்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் அனைத்தும் அகன்றுவிடும். 

உடல் செல்களை புதுப்பித்து உடலை வலுவாக்கி இளமையாக இருக்க துணைபுரியும். 

● இரவு தூங்கச் செல்லும் முன் 5 கிராம் கடுக்காய் தூளை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்துவர செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் குணமாகும்.

திங்கள், 27 பிப்ரவரி, 2023

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க..! - Hello Doctor

Hello Doctor மருத்துவம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க..! - Hello Doctor 

● நெல்லிக்காய்: 

கொய்யாப்பழமும், நெல்லிக்காயும் நோய் எதிர்ப்பு சக்தியை தருவன. இரண்டையும் தினமும் சாப்பிடலாம்.

நெல்லிக்காயை தேனில் ஊறவைத்தும் சாப்பிடலாம். 

● இஞ்சித்தேன்: 

இஞ்சியை தோல் சீவி, சின்ன துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்து தினமும் எடுத்துக்கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Stroke வருகிறதா? முன்கூட்டியே தெரிந்து கொள்வது எப்படி? - Hello Doctor

Hello Doctor மருத்துவம்

Stroke வருகிறதா? முன்கூட்டியே தெரிந்து கொள்வது எப்படி? - Hello Doctor 

உலகளவில் ஒவ்வொரு 3 நொடிகளுக்கும் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது. 

ஓராண்டுக்கு 1 கோடியே 20 லட்சம் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள். 

வாழ்க்கை முறை மாற்றத்தால் பக்கவாதம் அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. 

கடுமையான தலைவலி, மயக்கம், கண் பார்வை மங்குவது, பேச்சு குழறுவது, ஆகியவை பக்கவாதம் வருவதற்கான அறிகுறிகள். 

சர்க்கரை நோய், ஹைபர் டென்ஷன் ஆகியவை காரணிகளாக சொல்லப்படுகிறது.

படுத்தவுடன் தூங்க EASY TIPS! - Hello Doctor

Hello Doctor மருத்துவம்

படுத்தவுடன் தூங்க EASY TIPS! - Hello Doctor

புத்துணர்ச்சியுடனும், உடல்நலத்துடனும் இருக்க சரியான தூக்கம் அவசியம். படுத்தவுடன் தூங்க சில டிப்ஸ். 

● தினசரி ஒரே நேரத்தை பின்பற்றுங்கள். 

● தூங்கும் முன் டீ குடிப்பதை தவிருங்கள். 

● டிவி, செல்போன், கம்ப்யூட்டரை தொடாதீர்கள். 

● வயிறு முட்ட சாப்பிடாதீர்கள். 

● உடற்பயிற்சி செய்யுங்கள். 

● தூங்கும் அறையை அமைதியாக வைத்திருங்கள். 

● உங்களுக்கு வசதியானபடி படுக்கையை வைத்திருங்கள். 

● சிறிது நேரம் புத்தகம் படியுங்கள்.

கல்லீரலை காக்க டிப்ஸ்! - Hello Doctor

Hello Doctor மருத்துவம்

கல்லீரலை காக்க டிப்ஸ்! - Hello Doctor 

● முட்டையின் வெள்ளைக்கரு கல்லீரலுக்கு மிகவும் நல்லது. தினமும் ஒரு வெள்ளைக்குரு சாப்பிடலாம். 

● சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீரை சூடுபடுத்தி குடிப்பது நல்லது. 

● அல்சர் உள்ளவர்கள் திராட்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை தவிர்க்கவும். ஆப்பிள், மாதுளை, கொய்யா சாப்பிடுவது நல்லது. 

● ஃபாஸ்ட் ஃபுட், எண்ணெயில் பொரித்தவை, கூல்டிரிங்ஸ் சாப்பிடுவதை தவிர்க்கவும். 

● அதிகம் ஊறுகாய் சாப்பிடக்கூடாது.

இரவில் என்ன சாப்பிடலாம்? - Hello Doctor

Hello Doctor மருத்துவம்

இரவில் என்ன சாப்பிடலாம்? - Hello Doctor 

குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

● இரவில் தயிர் சாப்பிடுவதை தவிருங்கள். பதிலாக மோர் குடிக்கலாம்.

● அளவோடு சாப்பிடுங்கள். அதிக உணவு வேண்டாம். 

● பருப்பு, பச்சை காய்கறிகள் போன்ற புரத உணவு சாப்பிடலாம். 

● இஞ்சி சேர்த்த பாலை குடிக்கலாம். 

● அதிக உப்பு உணவை எடுக்க வேண்டாம்.

பரவுகிறது 'மெட்ராஸ் ஐ’! - Hello Doctor

Hello Doctor மருத்துவம்

பரவுகிறது 'மெட்ராஸ் ஐ’! - Hello Doctor

பருவமழை காலங்களில் பரவும் 'மெட்ராஸ் ஐ' என்னும் கண் வலி நோய் தற்போது அதிகமாக பரவி வருகிறது. இது அடினோ என்ற வைரஸ் மூலம் பரவுகிறது. 

கண்கள் சிவப்பாக மாறுதல், கண் எரிச்சல், நீர் வடிதல், லேசான வீக்கம், அரிப்பு உள்ளிட்டவை இதன் அறிகுறிகள். 

உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுதல் அவசியம். 

கண்களை அடிக்கடி கழுவி சுத்தம் செய்வதன் மூலம் இதனை தவிர்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு! - Hello Doctor

Hello Doctor மருத்துவம்

சர்க்கரை நோயாளிகளுக்கு! - Hello Doctor 

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அவசியமானது. இது செல்களுக்கு ஆக்சிஜனையும் கொடுக்கிறது.

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ தோல் முதிர்ச்சியடைவதை தடுத்து, பொலிவை காக்கிறது. 

மேலும், தோல் புற்றுநோய் வராமல் இருக்கவும் உதவுகிறது. 

சர்க்கரை நோயாளிகளுக்கு பிஸ்தா நல்ல பயனுள்ள உணவு. ரத்த நாளங்களை பாதுகாக்கிறது. இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.

கண் கட்டி வந்தால் என்ன செய்வது? Hello Doctor

Hello Doctor மருத்துவம்

கண் கட்டி வந்தால் என்ன செய்வது? Hello Doctor 

கண் கட்டி, வெளியே காற்றில் பரவும் பாக்டீரியா மற்றும் நுண்ணுயிரிகள் கண் இமைகள் மற்றும் முடிகளில் சேருவதால் கட்டிகள் உருவாகின்றன. 

பெரும்பாலும் இவை தானாகவே சுருங்கி விடும். 

அவற்றை சூடாக வைத்திருப்பதன் மூலம் அவை சரிசெய்யப்படுகின்றன. 

மேலும், நீண்ட நாட்கள் கண் கட்டி நீடித்தால் மருத்துவரை அணுகவும். அவை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அகற்றப்படும்.

மழைக்காலத்தில் இவற்றை செய்யுங்கள்! Hello Doctor

Hello Doctor மருத்துவம்

மழைக்காலத்தில் இவற்றை செய்யுங்கள்! Hello Doctor 


ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப தலைமுடியை பராமரிப்பது அவசியம். அதன்படி மழைக்காலத்தில் தலைமுடியை பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

◆ முடிக்கு வண்ணம் பூசுவதை தவிர்க்கவும்

◆ எண்ணெய்யை லேசாக சூடேற்றி முடிவேர்களை மசாஜ் செய்யவும்

◆ தலைக்கு குளிக்க வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தவும்

◆ ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

காலையில் பழைய சோறு சாப்பிட்டால்..! - Hello Doctor

Hello Doctor மருத்துவம்

காலையில் பழைய சோறு சாப்பிட்டால்..! - Hello Doctor 

◆ காலையில் பழைய சோறு சாப்பிட்டால், உடல் உஷ்ணம் குறையும்.

◆ ஆரம்பத்திலே கண்டறியப்படும் வயிற்று புண்களை சரிய செய்யும்.

◆ பழைய சோறுடன் 2 சிறிய வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரைந்து, மாரடைப்பு தடுக்கப்படும். 

◆ பழைய சோற்றில் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருட்கள் அதிகம் இருப்பதால், உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும். 

◆ பழைய சோறு சாப்பிட்டால் அதிக தூக்கம் வரும் என்பது உண்மையல்ல.

சுறுசுறுப்புக்கு உதவும் செவ்வாழை! - Hello Doctor

Hello Doctor மருத்துவம்
சுறுசுறுப்புக்கு உதவும் செவ்வாழை! - Hello Doctor 

பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் காலை உணவோடு செவ்வாழைப்பழத்தைக் கொடுத்தால், நாள் முழுவதும் அவர்கள் உற்சாகத்துடன் இருப்பார்கள்.

காலை உணவு சாப்பிட நேரமில்லாதவர்கள் செவ்வாழைப்பழத்தைச் சாப்பிட்டால் சோம்பல், மந்தம் நீங்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

சிவப்பு வாழைப்பழத்தில், 'பீட்டா கரோட்டின்' என்னும் ஆரஞ்சு நிறமியும் இருக்கிறது. இது, வைட்டமின்-ஏ உற்பத்திக்கு உதவுகிறது.

கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்-ஏ நிறைந்திருப்பதால், கண்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

நார்ச்சத்து நிறைந்த செவ்வாழைப்பழத்தை மலச்சிக்கல், அஜீரணம், வாயுத் தொல்லை போன்ற குடல் பிரச்னைகள் உள்ளவர்கள் சாப்பிட்டால் அவற்றின் தீவிரம் குறையும்.

செவ்வாழைப்பழம் வைட்டமின் பி-6 நிறைந்தது. இது, ரத்தச் சிவப்பு அணுக்களும் ஹீமோகுளோபினும் உருவாக மிக அவசியமானது.

ரத்தச்சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த செவ்வாழைப்பழத்தைச் சாப்பிடலாம்.

செவ்வாழையிலுள்ள பொட்டாசியம், சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கும். எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

காதலர்களுக்கான டெடி பியர்

காதலர்களுக்கான டெடி பியர்
Teddy Day 2023 
காதலர்களுக்கான டெடி பியர்
டெடி டே ஆனது, முதன் முதலில் மேற்கத்திய நாடுகளிலேயே பிரபலமானது. அதன் பின்னரே, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் காதலர் வாரத்தின் ஒரு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் காதலர்கள் டெடி பியர்களைப் பரிசாகக் கொடுத்து, தங்களது காதலை வெளிப்படுத்துவர். இதனுடன், காதல் வரிகளை எழுதியோ அல்லது பாராட்டுக்களைப் பகிர்ந்தோ தங்கள் அன்பை வெளிப்படுத்துவர். இது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தும் சிறப்பான நாளாகும்.

இந்த சிறப்பான தினத்தில் டெடி பியரைப் பரிசாகக் கொடுத்து காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள். அனைவருக்கும் இனிய டெடி தினம் நல்வாழ்த்துக்கள்.

டெடி தினம் கொண்டாடுவதற்குக் காரணம்

டெடி தினம் கொண்டாடுவதற்குக் காரணம்
Teddy Day 2023 டெடி தினம் கொண்டாடுவதற்குக் காரணம்
டெடிபியர் ஆனது, மென்மையான பொம்மை வகைகளைச் சார்ந்ததாகும். இந்த டெடிபியரை ஒருவர் நீண்ட காலம் நம்முடன் வைத்திருக்க முடியும். ஆண்களை விட, பெண்களே டெடி பியரை அதிகம் விரும்புவர். இது எப்போதும் நம்முடனே இருப்பதால், டெடிபியரை வழங்கியவர்கள் அதிக அளவு நம் நினைவுக்கு வருவர். மேலும், தூங்கும் போது டெடி பியரைக் கட்டிபிடித்து தூங்குவதென்பது பெண்களின் வழக்கமான ஒன்றாகவே மாறியுள்ளது.

காதலர் வாரத்தின் நான்காவது நாள் டெடி டே! அது ஏன் தெரியுமா..? | Teddy Day 2023 History

காதலர் வாரத்தின் நான்காவது நாள் டெடி டே! அது ஏன் தெரியுமா..? | Teddy Day 2023 History


Teddy Day 2023 டெடி தினம்
காதலர் தினம் வந்துவிட்டாலே ஒவ்வொருவரும் தங்களுக்குள் உள்ள உற்சாகத்தை வெளிக்கொணர்வர். காதலர் தினம் என்பது ஒரு நாளில் மட்டும் கொண்டாடப்படுவது அல்ல. வாரம் முழுவதும் 7 நாள்கள், ஏழு சிறப்பு தினங்களை எடுத்துக் கூறுகிறது. இந்த ஒவ்வொரு நாளுக்கும் ஒரு தனிச்சிறப்பு உள்ளது. காதலர்களுக்காக கொண்டாடப்படும் காதலர் வாரத்தின் நான்காவது நாளாகக் கொண்டாடப்படுவது டெடி தினம் ஆகும். இந்த தினத்தில் காதலர்கள் டெடி பியரை பரிசாக வழங்குவர். இந்த டெடி தினம் ஏன் காதலர் வாரத்தின் நான்காவது நாளாகக் கொண்டாடப்படுகிறது எனவும், டெடி தினத்தின் சிறப்பம்சங்களையும் பற்றி இதில் காண்போம்.

காதலர் வாரத்தின் நான்காவது நாள் டெடி டே! அது ஏன் தெரியுமா..? | Teddy Day 2023 History
டெடி தினம் 2023
ஒவ்வொரு ஆண்டும் காதலர் வாரத்தின் நான்காவது நாளாக டெடி தினம் கொண்டாடப்படுகிறது. அதன் படி, பிப்ரவரி 10 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ப்ராமிஸ் டே, ஹக் டே மற்றும் கிஸ் டே எனத் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. இந்த தினத்திற்கென தனிச்சிறப்பு உண்டு. மென்மையான தினத்தில் மென்மையான டெடி பியர்களை காதலர்களுக்கு பரிசு வழங்கி மகிழ்வர்.

வியாழன், 9 பிப்ரவரி, 2023

சாக்லேட் டே வாழ்த்துக்கள் | Chocolate Day wish for Lover

சாக்லேட் டே வாழ்த்துக்கள் | Chocolate Day wish for Lover

பிப்ரவரி 9 ஆம் தேதி சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது. என்ன காரணம் என்றால்? ஒருவருக்கு ஒருவர் பரிமாறும் அன்பு மற்றும் அரவணைப்பின் அடையாளமாக திகழ்வது சாக்லேட். முதன்மை காரணம் இது தான். தங்களுடைய வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக, இனிமையாக இருக்க வேண்டும் என்பதை மறைமுகமாக சொல்லும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

சாக்லேட் டே வாழ்த்துக்கள் | Chocolate Day wish for Lover

எங்கெங்கோ தேடி பார்த்தும் உன்னை விட பிடித்தமான chocolate-ஐ கண்டு பிடிக்க முடியவில்லை. ஹேப்பி சாக்லேட் டே!!

சாக்லேட் டே வாழ்த்துக்கள் | Chocolate Day wish for Lover

காதலை கொண்டாடும் நல்ல உள்ளங்களுக்கு இனிய சாக்லேட் தின வாழ்த்துக்கள்..

சாக்லேட் டே வாழ்த்துக்கள் | Chocolate Day wish for Lover

உன்னோடு பகிர்ந்து கொள்ளும் போது தான் Chocolate கூட இனிக்கிறது.
கொண்டாடுகிறேன்l
Happy Chocolate Day

சாக்லேட் டே வாழ்த்துக்கள் | Chocolate Day wish for Lover

சாக்லேட்டை கையில் வைத்திருக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியைப் போல உங்கள் வாழ்க்கை சந்தோஷத்தால் நிரம்பட்டும்.
இனிய சாக்லேட் தின வாழ்த்துக்கள்!

சாக்லேட் டே வாழ்த்துக்கள் | Chocolate Day wish for Lover

என்னுடைய வாழ்க்கையில் நீ வந்த பின்பு காதலால் தினமும் நாட்களை கொண்டாடுகிறேன்.
Happy Chocolate Day

புதன், 8 பிப்ரவரி, 2023

சாக்லேட் டே (Chocolate Day)

சாக்லேட் டே (Chocolate Day)


Happy Chocolate Day 2023: சாக்லேட் தினத்தில் சாக்லேட் கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்வதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்!
காதலர் வாரம் (Valentine's Week)

இந்த உலகில் மிக ரொமான்டிக்கான விஷயம் என்று சொன்னாலே அது காதல் தான். இதோ இன்னும் ஐந்தே நாட்களில் காதலர் தினம் வரப்போகுது. அந்த நாளை கொண்டாட காதலர்கள் எல்லாம் தயாராகி வருகின்றனர். 

சாக்லேட் டே (Chocolate Day)

காதலர்களுக்கு காதலர் தினத்தில் மட்டும் கொண்டாட்டம் இல்லைங்க, ஒரு வாரம் முழுவதும் கொண்டாட்டம்தான். அந்த வகையில் காதலர் வாரம் தொடங்கப்பட்டு இரண்டு நாட்கள் முடிந்துவிட்டது. மூன்றாவது நாள்தான் இந்த சாக்லேட் டே கொண்டாடப்படுகிறது. இது ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 9 அன்று கொண்டாடப்படுகிறது. இன்று வரையும் இது பின்பற்றப்பட்டு வருகிறது.

பொதுவாகவே, சாக்லேட் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, நாம் விரும்பும் ஒருவருக்கு அதை பரிசாகக் கொடுப்பதும் பரிமாறிக்கொள்வதும் வழக்கம். ஆனால், காதலர் வாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் 7 நாட்களில் மூன்றாவது நாளில் வரும் சாக்லேட் டே மிகவும் இனிமையான நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது, ஏனெனில் இந்த நாளில் காதலர்கள் தங்கள் அன்புக்குரியவருக்கு சாக்லேட்களை பரிசாக கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். 

சாக்லேட் கொடுப்பதில் இருக்கும் ரகசியம்

இந்த நாளில் சாக்லேட் கொடுத்து காதலை வெளிப்படுத்துவதற்கு என்ன காரணம் என்று தெரியுமா? சாக்லேட் என்றாலே பெரியவர்கள் கூட குழந்தைகளாகிவிடுகிறார்கள். அந்த அளவிற்கு சாக்லேட்டின் சுவை அனைவரையும் மயக்கி வைத்துள்ளது. சாக்லேட்டில் "ட்ரைப்டோஃபன்" என்ற மூலப்பொருள் அதிகமாக இருக்கிறது.

இது நம் உடலில் உற்சாகத்தை உண்டாக்கும் செரோடின் என்ற அமிலத்தை சுரக்கச் செய்கிறது. மேலும், சாக்லேட்டில் இருக்கும் கஃபைன் என்ற மூலப்பொருள் ஒரு ரொமாண்டிக் மூடை தூண்டுகிறது. இதனால் தான் காதலர் தினத்திலும், சாக்லேட் தினத்திலும் சாக்லேட்டை பரிமாறிக் கொள்கிறார்கள். நீங்களும் உங்கள் காதலியிடமோ அல்லது காதலனிடமோ ஒரு முத்தம் வேண்டுமென்றால் ஒரு பெரிய சாக்லேட்டை வாங்கிக் கொடுங்கள்.

சில நன்மைகள்
 
அதுமட்டுமல்லாமல், சாக்லேட்டில் பல அற்புதமான நன்மைகளும் இருக்கிறது. இது உடலில் உள்ள கொழுப்பின் அளவையும், இருதய பிரச்சனைகள் ஏற்படுத்தும் அபாயத்தையும் குறைக்கிறது. சாக்லேட் சாப்பிடுவதால் மூலையின் செயல்பாடுகளும் கூர்மையாகின்றன. தினமும் 100 கிராம் சாக்லேட்டை சாப்பிட்டு வந்தால் பக்கவாதம் வராதாம். ஆனால், அதிகம் சாப்பிட்டாலும் ஆபத்தில் தான் முடியும். எனவே, அளவோடு சாப்பிட்டு; ஆரோக்கியமாக இருங்கள்.

இந்த சாக்லேட் டேயில் ஒரு அழகான கவிதை!

" நீ தந்த சாக்லேட் கவர்கள் கூட இன்று உன் நினைவுச் சின்னங்களாய் தூங்குகிறது.. பூட்டிய என் வீட்டு அலமாரியில்...!"

"இந்த சாக்லேட் உனக்கு மகிழ்ச்சியைத் தருவது போல, நீ என் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருகிறாய்...!"

Happy Chocolate Day….!

செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

Tamil Love Proposal Kavithaigal

Best Tamil Kavithai Love Proposal Images | Tamil Love Impress Kavithaigal
 
Tamil Kavithai Love Proposal,deep love tamil kavithai

Anbe unnodu pesumbothu mattume nam natpu endra uravaiyum thaandi etho oru puthu vitha ilam puriyaa unarvugalaal thoondapattu thadumaarukiren kadhal thaano endru puriyavillai en mananilaiyai unnidam velipaduthavum ennal iyalavillai.

அன்பே உன்னோடு பேசும்போது மட்டுமே நம் நட்பு என்ற உறவையும் தாண்டி எதோ ஒரு புது வித இளம் புரியா உணர்வுகளால் தூண்டப்பட்டு தடுமாறுகிறேன் காதல் தானோ என்று புரியவில்லை என் மனநிலையை உன்னிடம் வெளிப்படுத்தவும் என்னால் இயலவில்லை.


Unnidam idaiveli vittu pesa Naan virumbavillai naalpoluthum neengathu idaividaamal pesave virumbukiren ennai etru kolvaayaa aruyire

உன்னிடம் இடைவெளி விட்டு பேச நான் விரும்பவில்லை நாள்பொழுதும் நீங்காது இடைவிடாமல் பேசவே விரும்புகிறேன் என்னை ஏற்று கொள்வாயா ஆருயிரே.


Penne un kangalum manathum pesi kollum ondrai un udhadu solvathu eppothu? kaathirukiren kaalangalil karainthu endrume unakaaga…

பெண்ணே உன் கண்களும் மனதும் பேசி கொள்ளும் ஒன்றை உன் உதடு சொல்வது எப்போது? காத்திருக்கிறேன் காலங்களில் கரைந்து என்றுமே உனக்காக…


ennavale en manathil ulla enathu ennathai nee arinthum ariyathathu pola nadikiraaya illai thaguntha santharpam amaiyattum ena ethirpaarthu kaathirukiraayaa penne.

என்னவளே என் மனதில் உள்ள எனது எண்ணத்தை நீ அறிந்தும் அறியாதது போல நடிக்கிறாயா இல்லை தகுந்த சந்தர்ப்பம் அமையட்டும் என எதிர்பார்த்து காத்திருக்கிறாயா பெண்ணே.


Un paarvai varam kidaka thinamum eangi thavikindrathu en kadhal anukal.

உன் பார்வை வரம் கிடைக்க தினமும் ஏங்கி தவிக்கிறது என் காதல் அணுக்கள்.


Penne sirithu neram un vetkathai vilaki vaithu en kadhalai unnidam uraipatharku sirithu vaaipaavathu kodu.

பெண்ணே சிறிது நேரம் உன் வெட்கத்தை விலக்கி வைத்து என் காதலை உன்னிடம் உரைப்பதற்கு சிறிது வாய்ப்பாவது கொடு.


Suvaasika kattayam vendume kaatru naan moochu ullavarai nesika vendume un idhayam.

சுவாசிக்க கட்டாயம் வேண்டுமே காற்று நான் மூச்சு உள்ளவரை நேசிக்க வேண்டும் உன் இதயம்.

En karangal un karangalai patra… naan thoonga un madi meethu saaya… avaludan kathu nirkiren un ninaivalaikaludan.

என் கரங்கள் உன் கரங்களை பற்ற… நான் தூங்க உன் மடி மீது சாய… ஆவலுடன் காத்து நிற்கிறேன் உன் நினைவலைகளுடன்.

Idhu varai naan thediya thedalkaluku vidaiyaai en unarvugalauku oru thunaiyaai kidaitha unnai oru pothum kai vida maaten.

இது வரை நான் தேடிய தேடல்களுக்கு விடையாய் என் உணர்வுகளுக்கு ஒரு துணையாய் கிடைத்த உன்னை ஒரு போதும் கை விட மாட்டேன்.

En thanimai vaalkaiku thunai thediya enaku unnai enthan vaalkai thunaiyaai antha deivam anupiya thevathaiyaai naan unarkiren.

என் தனிமை வாழ்க்கைக்கு துணை தேடிய எனக்கு உன்னை எந்தன் வாழ்க்கை துணையாய் அந்த தெய்வம் அனுப்பிய தேவதையாய் நான் உணர்கிறேன்.

Intha ulagil evvalavu mozhikal irupinum en kadhalai unnidam solvatharku thaguntha mozhi neeyum naanum paarkum paarvai mozhikale…

இந்த உலகில் எவ்வளவு மொழிகள் இருப்பினும் என் காதலை உன்னிடம் சொல்வதற்கு தகுந்த மொழி நீயும் நானும் பார்க்கும் பார்வை மொழிகளே…

Vilai malivilla puthagam nee…! unnai eppadiyenum en kadhalil moolka vaithu unnai vilaiku vaanka ninaikum vaasaganaaga naan…!

விலை மலிவில்லா புத்தகம் நீ…! உன்னை எப்படியேனும் என் காதலில் மூழ்க வைத்து உன்னை விலைக்கு வாங்க நினைக்கும் வாசகனாக நான்…!

Thinamum unnai allatthaan ninaikuren neeyo alla alla alavillamal en manathil kaattaru pola perugi konde pokindrai…!

தினமும் உன்னை அள்ளத்தான் நினைக்குறேன் நீயோ அள்ளஅள்ளஅளவில்லாமல் என் மனதில் காட்டாறு போல பெருகி கொண்டே போகிறாய்…!

Un ullam endra ondril naan irunthaal pothum intha ayul kaalam muluvathum unnidam uyiraai irupen.

உன் உள்ளம் என்ற ஒன்றில் நான் இருந்தால் போதும் இந்த ஆயுள் காலம் முழுவதும் உன்னிடம் உயிராய் இருப்பேன்.

Thunai thedum intha ulagil naan kanda unmaiyaana meiporul nee thaan en chellame.

துணை தேடும் இந்த உலகில் நான் கண்ட உண்மையான மெய்ப்பொருள் நீ தான் என் செல்லமே.

காதலர்களுக்கு ரோஸ் டே வாழ்த்துக்கள் | Rose Day 2023 Kavithai in Tamil

காதலர்களுக்கு ரோஸ் டே வாழ்த்துக்கள் | Rose Day 2023 Kavithai in Tamil

காதல் இருமனம் ஒன்றாக சேர்வது மட்டும் கிடையாது. காதலில் நிறைய வகை உள்ளது - வலி, வேதனை, துக்கம், பிரிவு, மகிழ்ச்சி என்று அதற்கு நிறைய அர்த்தம் உள்ளது. காதலர் தினமானது ஒரு வாரம் முழுவதும் கொண்டாடப்படுகிறது என்று. அதாவது பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை லவ்வர்ஸ் டே கொண்டாடப்படுகிறது. அந்த ஏழு நாட்களுக்கும் ஒவ்வொரு சிறப்புக்கள் உள்ளது.

உலக காதலர் தினத்தை முன்னிட்டு இன்று பிப்ரவரி 7 ஆம் தேதி "ரோஸ் டே" கொண்டாடப்படுகிறது. காதலுக்கு அடையாளமாக திகழும் ரோஜாவை நினைவுப்படுத்தும் வகையில் இந்நாளில் உங்களுக்கு காதலி அல்லது காதலனுக்கு ரோஜா தின வாழ்த்துக்களை அனுப்பி காதலை வெளிப்படுத்துங்கள். மேலும் மிக ஆழமாக காதலித்து வாழுங்கள். உங்களின் காதல் வாழ்க்கை வெற்றிப்பெற வாழ்த்துக்கள். Happy Rose Day.