புதன், 1 பிப்ரவரி, 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 1/2/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 1/2/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 1/2/23

திடீரென 
சிலரின் நியாபகம் வரும்போது..

கண்களுக்கு நடிக்க 
தெரியவில்லை!

யாருக்காகவும் 
உன்னை நீ
மாற்றிக்கொள்ளாதே..

ஆனால், 
உனக்காக தன்னையே
மாற்றிக் கொள்பவர்
கிடைத்தால்..

அவர்களை
எக்காலத்திலும் விட்டு விடாதே!

நான் கேட்கும் 
பாடல்‌ அனைத்தும்..

உன் ‌நினைவுகளை‌
அதிகம் ‌தந்து விடுகின்றன!

வார்த்தைகள்
தேடி அலைந்த போது
வந்து சிக்கிய
கவிதை..

நீ..!

தேடும்
அழகை
விட..

தேடாத
அன்பு
சிறந்தது!

தடைகள் வந்தால் தான்
அதை தாண்டுவதற்கான
வேகமும், தீவிரமும் உனக்குள்
உண்டாகும்..

உன் பலம் என்ன என்றும் 
உனக்கு தெரியும்..

தடைகளை தட்டிக் கழிக்காதே!

கோபத்தில் விலகி இருப்பதை விட..

உரிமையோடு சண்டையிட்டு
கூடவே இருங்கள்..

உறவுகள் மெய்ப்படும்!

காலைக்கும் இரவுக்கும்
இடையே மௌனமாக 
நீள்கிறது உரையாடல்..

உன் வருகை நோக்கி 
தவம் இருக்கும் 
என் வார்த்தைகள்..

உன் அணைப்பில் 
நிம்மதியாகிறது 
என் உறக்கம்!

நாம்
ஒருவரை
நேசிக்கும்
கடைசி
நொடிவரைதான்..

அவர்களை
காயப்படுத்த
முடியும்!

அள்ள அள்ளக் 
குறைவதில்லை..

சொல்லித்தந்தும்
வருவதில்லை..

கண்ணியத்திற்கு
குறையேதுமில்லை..

காலங்கள் என்றிங்கு
வரைமுறையில்லை..

புத்தகத்தில்
பதிந்ததுமில்லை..

புதுமை செய்ய
இதிலேதுமில்லை..

புரிந்துகொண்டு
வாழ்ந்திருந்தால்..

புவியில் காதலுக்கு
வயதாவதுமில்லை!

துரோக
செயல்களை
செய்துவிட்டு..

தைரியமாக
பரிகாரம்
செய்ய
துடிப்பார்கள்
ஒரு சிலர்!

உறவு ௭ன்ற விதையை  
விதைக்கும் போதே  
பிரிவு ௭ன்ற அறுவடை நாளும்  
௭ழுதப்படுகிறது! அதனால்  
உறவை கண்டு மயங்காதே  
பிரிவை கண்டு வருந்தாதே  
இருக்கும் வரை நிஜத்தை நேசி  
இல்லாமல் போனால்  
நினைவுகளை நேசி!  
நெஞ்சம் இருக்கும் வரை  
நேசிக்க மறக்காதே...!!

இன்றைய தினத்தைச் சவாலாக எடுத்துக் கொள்ளும்போது, நேற்றைய தினம் கனவாகவும், நாளைய தினம் நனவாகவும் அமைகிறது...!!  
  
வணக்கம்..!!

செய்த குறையை மறைக்கவும் கடவுளை மகிழ்ச்சிபடுத்தவும் பெரும்பாலும்  
காணிக்கைகள் நிறைவேற்றப்படுகிறது  
எளியவருக்கு பசியாற்றினாலே கடவுள்  
பிரமித்துப் போவார்...!!

நம்முடைய குறைகளை நேருக்குநேராக சொல்பவர்கள் ஒருபோதும்  
நமக்கு  
துரோகியாக இருக்கமாட்டார்கள்  
நம்மீது சிலருக்கு அக்கறை உண்டு...!!


என் நேசத்தின்  
சிந்தனையில்  
நீ மட்டுமே

மௌனித்து  
தொலைந்து கொண்டு  
மறுபடி மறுபடி ஏன்  
வந்து தொலைக்கிறாய்  
நினைவுகளில் மறந்து  
போகும் வரம் தந்து போயிருக்கலாமே

*'பிடித்ததை' வைத்துக்*  
*கொள்ளுங்கள்..*  
*ஆனால், எதையும் 'பிடித்து'*  
*வைத்து கொள்ளாதீர்கள்..!!*

எல்லா வலிமையும் வசதியும் இருப்பது முக்கியமல்ல...!!  
மனவலிமை தான் இங்கு எல்லோருக்கும்  
அதிகம் தேவைப்படுகிறது.  
மனதை திடப்படுத்துங்கள் எல்லாவற்றையும்  
நாம்தாம் பார்க்க வேண்டும்...!!

முடிந்ததையும் சரி.... இழந்ததையும் சரி..... ஒருபோதும் உங்களின் நினைவிற்குக் கொண்டு வராதீர்கள்.....
Previous Post
Next Post

0 Comments: