வியாழன், 9 மார்ச், 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 9/3/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 9/3/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 9/3/23

உறவென்று நமக்கு
ஆயிரம் பேர் இருந்தாலும்..

பிடித்தவர் ஒருவருக்காக 
மனது 
ஏங்குவது தான்..

உண்மையான 
அன்பு!

ஒன்றை இழந்தால் தான்
ஒன்றை பெற முடியுமாம்..

ஆனால்
பிடித்ததை இழந்து விட்டு
வேறு எதை பெற்றாலும்
மனம் அதில் ஒட்டுவதில்லை!

பாடுபட்டு உழைத்ததை பக்குவமாய் சேமித்துக் கொள்ளுங்கள்..

எந்நிலையிலும் எச்சியிலையாய் தூக்கியெறிப்படுவோம் என்பதை மறக்காமல்!

😢😢😢

காசை வைத்து கர்வம் கொண்டு ஆடாதே..

கடவுள் நினைத்தால் கண் இமைக்கும் நேரத்தில் அத்தனையும் கரைந்து போகும் என்பதை மறக்காதே!

😈😈😈

சேகரிப்பது தவறில்லை..

அதை தான் மட்டுமே அனுபவிக்க வேண்டுமென நினைப்பது தவறு..

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை மறக்காமல்!

🥕🥕🥕

மூச்சுக்காற்றை வெட்டி வீழ்த்திய பிறகு..

உயிர் மூச்சை பாதுகாக்க ஆக்ஸிஜன் தேடுவதில் பலனில்லை!

😰😰😰

துரோகத்தால் அன்பான மனங்களை கொன்ற பிறகு..

போலியாக வாரி அணைத்துக் கொள்வதில் பலனில்லை!

😭😭😭

இரட்டை ஜடை, ஒற்றை ஜடை ஆகும்போது..

பெண்களின் அழகில் பாதி குறைந்து விடுகிறது!

😜😜

ஆழமாய் நேசிக்கும் உயிரிடம் அழகை தேடாதே..

அழகை தேடும் உயிரிடம் உண்மை இருக்காது என்பதை மறக்காதே!

மகிழ்ச்சியானவர்களிடம் இருப்பதெல்லாம் சிறப்பானது இல்லை........  
அவர்கள் கிடைப்பதை சிறப்பாக்கி கொள்கிறார்கள்..........!!

புதன், 8 மார்ச், 2023

Happy_Womens_day

Happy_Womens_day_|_Girls_Motivational_Stlkavithai

Happy_Womens_day_|_Girls_Motivational_Stlkavithai


*உலகிற்கே நீதான் விழுது!*

உலகிற்கே நீதான் விழுது
பெண்ணே....!
உன் சிறப்புரைக்க‌
ஒரு நாள் போதுமா...?
உன் சிறப்புகளை
வார்த்தைகளால்
எழுதிடவும் முடியுமா....?
எங்கெங்கு காணினும்....
பல இல்லங்களிலும்....
நல்ல உள்ளங்களிலும்...
நிலைத்திருந்து
உலகினை வழி நடத்து....!
ஒரு நாளில் மட்டும்
உன் புகழ் பேசிவிட்டு...
மற்ற நாளெல்லாம்
உன்னை ஏசிடும்....
மனிதரை உதாசினப்படுத்து....!
உன் வழியில் நடந்து
உனக்கான வரலாறை
நீ எழுது.....!
உலகுள்ள நாள். வரைக்கும்...
அன்பில் அனைவருமே
உம்மை தொழுது....
உள்ளங்களை நீ உழுது....
பார்த்திடுவாய் நன்றாய் பழுது...
துயரத்தில் ஏனோ அழுது...
உலகிற்கே நீதான் விழுது....!

இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

நித்திரை  
கலைந்ததும்  
வரும் முதல் நினைவே ....!

அறிவுரையை கொஞ்சம் சுத்தி வளைச்சு சொன்னா அதான்  
ஆறுதல்!!!

எல்லாத்துக்கும் தீர்வு  
நாமாக இருந்தாலும்  
நடப்பதை தீர்மானிப்பது  
நாமாக இருக்க இயலாது.. 💐

உந்தன் கண்ணீரின்  
விலை  
தெரியாதவர்களுக்கு...  
அவர்கள் உயிராய்  
நேசிப்பவர்கள்  
கண்ணீர் சிந்தும்  
போதுதான் தெரியும்...💕

பிடித்த ஒன்றுதான் அதிக இரணப்படுத்தி செல்லும் பிடிக்காத ஒன்று சற்று கீறிவிட்டு செல்லும்.!

மறதியையும், மகிழ்ச்சியையும் அழகாய் வெளிப்படுத்தும் குழந்தை பருவமே பேரழகு


பெண் - அன்பில் ஒரு தாய்

பெண் - அழகில் ஒரு தேவதை

பெண் - அறிவில் ஒரு மந்திரி

பெண் - அதரவில் ஒரு உறவு

பெண் - வெறுப்பில் ஒரு நெருப்பு

பெண் - வெற்றிக்கு ஒரு மாலை

பெண் - தோல்விக்கு ஒரு பள்ளம்

பெண் - நட்பில் ஒரு நேர்மை

பெண் - கண்டிப்பில் ஒரு ஆசிரியார்  
இருந்தாலும் பெண் ஒரு புரியாத புதிர்...

அன்புடன் மகளிர் தின வாழ்த்துக்கள்

தேவைக்கு மட்டுமே
பயன்படுத்தாமல்..

அவளும்.. இரத்தமும்
சதையும் கொண்ட
சகமனுசிதான்..

அவளுக்கும்
வலிக்கும் என நினைத்தாலே
போதும்.. 

பெண்மை 
நன்றியுடன் வாழும்!

பெண்கள் தினம்!

இவள் இயல்பிலே அதீத அழகானவள்..

இவள் மிகமிக புனிதமானவள்..

இவள் சாமரசம் வீசும் தேவதை..

இவள் தாய்மையின் 
ஒப்பில்லா அழகு..

மனைவியாக தோளில் 
சாயும் தேவதை..

இவள் அவ்வப்போது ஒரு குழந்தையென சிணுங்குவாள்..

தேவதை அவள்.. தவம் கொண்ட தேவதை அவள்..

தேவதை அவள்.. தன்னை மறந்த தேவதை அவள்..

தேவதைகள் தின வாழ்த்துக்கள்!

💗💗💗

திங்கள், 6 மார்ச், 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 6/3/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 6/3/23
இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 6/3/23

சற்று
செவியுற்று நில் காதலி...!

க்கும்
உன் சலிப்பும்
இனிக்கவே செய்கிறது
இந்த
பரபரப்பனுக்கு

காதல்மீது
எனக்கு
காதலில்லையோயென்ற
உனது 
ஐயங்களுக்கு
ஈர முத்தங்களைவிட
ஏது சாட்சி...?

கனவுகளும்
காலமும் 
என்னை மென்று தின்று
அவைகள்
மீட்சி கொள்கின்றன

யாவும்
கைகூடும் காலம்
அதோ
பார்வைக்கு பக்கத்திலேயே...!

சந்தேகம் தொலை
எந்நேரமும்
நீயே என்
நிம்மதியின் ஊற்றலை...!

எத்தனைதான்
கணக்குப்போட்டு பார்த்தாலும்
காதலைவிட
பெரிய பூரிப்பு
பூமியில்
இல்லவேயில்லை...!

பெரும் திரளை
வாய் பிசைந்துகொள்ள 
வைப்பதைத் தவிர
புகழுக்கு வேறு
புளகாங்கிதம் எதுவுமில்லை...!

இப்படியே இரு
எழிலாளினியே...!

நொபெலுக்கு
சிபாரிசு செய்கிறேன்
இத்தனை
எழிலான குறுங்காவியத்தை
எவர்
எழுதியிருக்கக்கூடும்
இதழ்களில்...?

நீ
சொல்லும் பொய்யும்
நேசத்தினால்
நேசத்திற்காகவே என்றறியும்போது
மேலும் 
காதல் பொலிவுறுகிறதடா
நேசக் கள்வனே...!

நீ
என்ன செய்தாலும்
நியாயம் கற்பிக்கும்
என்
படுபாச மனதிற்கு
நெடுநீள தித்திப்பை
கெடுவின்றியளிக்கும்
குறும்ராட்சனே...!

உன்னை
ருசிக்க ருசிக்க
அத்தனை திட்ட வேண்டும்
நீ
இனிக்க இனிக்க ரசிப்பதை
என்
புலன் ஐந்தும் 
பசிக்கப் பசிக்க புசிக்கவேண்டும்...!

என்னை
கொன்றுக் கொன்று
உன்னை
உயிர்ப்பிக்கும்
என்ன காதலடா இது...?

ஏதாே ஒரு
இனம் புரியாத வலி
உயிர் முழுவதிலும்
உலா வந்து காெண்டேயிருக்கின்றது...!

உன் பெயரை
சத்தமாக 
கூறிக்காெண்டே....!

காெஞ்சம் 
இரு காதலி

பிரபஞ்சம் முழுவதும்
பிரகடனம் செய்து விட்டு
வருகிறேன்...! 

உன் நாணத்தை
காதலின் குறியீடாக...!

யாரடி நீ...?

பெண்ணுருவில்
அப்படியே
என்னைப் பிரதிபலிக்கிறாய்...!

என்
காலம் முழுவதும்
பெண்கள்
கடந்து சென்றிருக்கிறார்கள்
பூக்களையும்
புளகாங்கிதத்தையும்
எறிந்து சென்றவர்களே
ஏகம்...!

நீயென்ன
தீப்பிழம்பை தின்று வளர்ந்தவளா...?

அக்னிச்சுவாலைகளை
அள்ளி வீசுகிறாய்
எரிமலையின் மீதே...!

உன்
சின பிடிவாதம்
ஆண்களின்
சிதையுற்ற சிதில்கள்மீதே

உன்
ஆண்சாரம் கேட்டு
என் வீரம்
கர்வம் கொண்டது

ஆண்
தொலைந்த தெருக்களில்
கம்பீரம் 
தேடுகிறாய் நீ...!

சோம்பிகள் மட்டுமே
சுற்றியிருப்பதால்
வீம்பன்களுக்கு
விலாசம் கூட இல்லையென்கிறாய்...!

எதிர்கொண்டவனெல்லாம்
உன்னிடை
தாண்டாதவனாகிப் போனதால்
உன்னைத் தாண்ட
ஆணே
இல்லையோயென்று
ஆலோசிக்கிறாய்...!

பிழைவாதம்
பிரியமானவளே

சபல விகாரங்களை
மட்டுமே
சந்திக்க நேர்ந்தது
சூழ்நிலைச் சதியாக இருக்கலாம்

கடுமையை விடவும்
இனிமையிருக்கிறது
உன்னிடம்
உன் வன்மையை 
வென்றவனுக்கே
அது சொந்தமென்ற
வரையறையும் வைத்திருக்கிறாய்...!

வீழ்த்துபவனின்றி
வீறுகொண்டு நிற்கிறாய்

நீ வீழ்வாய்
ஏனெனில்
நீ வெல்லப்படுவதை
விரும்புபவள்
நீ வீழும்போது
அங்கேயொரு
ஆணின் கைத்தாங்கலிருக்கும்
உன்
கனிவை கோதிவிட....!

இத்தனை வளமாய்
வெறுமையை
பயிர் செய்துவிட்டு
அறுவடையையும்
கொள்முதலையும்
ஏனடா
என்னையே
கொள்ளச் செய்கிறாய்...?

வலிகளுக்கு
எத்தனை வழிகளிருக்கிறதோ
அத்தனையையும்
என் பக்கமே
திறந்துவிடும்
உன் இரக்கத்தில்
காதல்
தற்கொலைக்கு தயாராகிறது...!

எல்லா
தற்கொலைக்கு பின்னும்
கொலையாளி ஒளிந்திருப்பான்
நீயும்
கொலையாளியா காதலா...?

பற்று
சற்று இற்றுப்போகும் 
போது
தொற்றுத் தொற்றாய்
தொற்றிக்கொள்கின்றன
சற்றும் யோசிக்காத
முற்றிய
வெக்கை நோய்கள்...!

கதகதப்பாய்
இருக்கக்கூடும் காய்ச்சல்
வெதுவெதுப்பு தானே
காரணம்
வெதும்புவதற்கும்...!

தெளியாத நிலைக்கு
தீட்டுவதும்
தேய்ப்பதும்
ஒன்றாகவே உணரப்படுகிறது
பாகுபாடு
எவ்வாறு புரியும்
பன்றிக்கு
நந்தவனத்தில் நடந்தாலும்...?

குருவியின் தனிமை
ஆகாயத்தை
அநாதையாக்கியது...!

அங்கீகாரமென்பது
உலகத்தின்மீது வைக்கப்படும்
அடுத்த பரிந்துரை
சிபாரிசை 
ஏளனம் செய்கிறது
தரம்...!

அழுதுவிடாதே
உன் கண்ணீரை
உலகம்
அத்தனை நேசிக்கிறது
மீண்டும் மீண்டும்
நச்சரிக்கும் 
விருப்பம் எப்போதும்
பிடிவாதம் செய்யும்...!

உறுதியாக சொல்லி வை
நீ 
சொன்னாலும்
வந்துவிடக் கூடாதென்று
கண்ணீருக்கு...!

எனக்கும்
கவிதைக்கும் இடையில்
வாழ்க்கை
நாடகமாடுகிறது
ஒரேயொரு ஆறுதல்
அரசன் 
வேடமேயில்லை...!

புத்தனின்
கனவில் குதித்த
சித்தார்த்தன் கேட்டான்
உங்களின்
துறக்கமுடியாத ஆசைதானே
துறவு...?

பதில்
கூறவேயில்லை புத்தன்
சித்தார்த்தனை
சித்தார்த்தன் 
துறக்கும் வரை...!

கனவு 
துறந்தபோது
புத்தன் 
ஜீவ முக்தியில்
ஞான ஆசைகள்
சீடர்களாய் சூழ்ந்து நின்றன...!

சமயங்களில்
பெண்கள் பாறைகள்தான்
ஆயின்
இளக்குவதற்கு
எதற்கு நீங்கள்
பாரை தேடுகிறீர்கள்...?

அச்சமயங்களில்
உயிர் வருடி
மனம் கோதிவிடுங்கள்
நெகிழ்ந்து நெகிழ்ந்து
உயிர்நிலையையே
தளர்ந்த நிலமாக்கித் தருவார்கள்...!

சமுத்திரம் வேண்டி
அவர்கள்
சண்டையிடுவதில்லை
கரிசனமான
திவலை ஈரத்தில்
திராணி நனைந்து போகிறார்கள்...!

எரிமலையாய் 
இருக்க நேர்ந்தாலும்
பெண்மை 
எண்பது சதவீதம் தாய்மையானதே...!

செல்லப்பிராணிக்கு
கொடுக்கப்படுகின்ற
அன்புகூட
இல்லத்தரசிகளுக்கு
கிடைக்காமல் போவது
ஆண்களின்
மூடத்தனமேயன்றி வேறென்ன...?

மரத்தைவிட
பெருத்திருந்தாலும்
மங்கையர்களென்றும்
பாசக்கொடிகளே...!

யாவற்றையுமளித்து
ஏதோவொன்றிற்காக
வேள்வியிருக்கும் 
அவர்களுக்கு
நாம் ஏன்
யாவதுமாய் ஆவதேயில்லை...?

ஏனடா
உன்னை
கொடுமை படுத்தாத
என்
நினைவுகளையும்
கூறுபோட்டுக் கொல்கிறது
உன் நினைவுகள்...?

வதைபடும்
என் உயிரில்
குளிர்காய்கிறாய்
இருந்தும்
எரிய எரிய நேசிக்கிறேன்
உன்னை
எறிய முடியாமல்...!

என்
சாம்பல் மீதும்
நீயே 
பூத்து நிற்பாய்
ஆம்பலாய்
அப்போதும் உன்னை
நானே தாங்கி நிற்பேன்
நீ
வலியுணராவண்ணம்...!

ஏனெனில்
நானுன்னை
காதலிக்கிறேன்...!

எல்லாம்
கவிதைக்குள்
குதித்துவிடுவதில்லையென்பதை
கவிதை
எத்தனை இசைவாய்
இயம்புகிறது...!

வழிவது
நிரம்பியதன் மிச்சமா...?

நிரம்ப வேண்டியும்
சமயத்தில் 
வழிகிறது உச்சம்...!

ஆயுளின்
அன்புப் பொதியையெல்லாம்
ஒரு மணியினுள்
என்மீது
உருட்டி விட்டு
உள்ளார்ந்து மகிழ்கிறாய்...

தாங்கும்
வல்லமை தருவாயா
உன்
அகன்ற மார்பின்
கதகதப்பில்
அணைத்துக் கொண்டபடி...!

ஆத்மாவையோ 
மனதையோ
ஏதோவொன்று 
ஆட்கொள்ளுமென்றால்
அதனுள் 
சிறையிருக்க
உயிர் சிநேகிக்கிறது...!

அது
நீயென்றான போது
ஆயுள்கைதியாவதில்
ஆவல் 
கூடுகிறது...!

சிறையிருப்பதும்
சுகமாகத்தானிருக்கிறது
பொருள் புரியாத
கவிதையின் கரு மாதிரி...!

நீ
எங்கே எங்கே
என்று கேட்டு
நச்சரிக்கும்
உன் நினைவுகளுக்கு

யாரைக் காண்பித்து
சமாதானப்படுத்த...?

திறந்தவெளி
தென்றலாய் வந்தாய்

மனம் முழுவதும்
மையல் காெண்டாய்

சிறுபிள்ளையாய்
செல்லச் சண்டைகள் புரிந்தாய்

எது கசந்ததாே
தூரத்திற்கு அருகில்
இடை வெளி
நீட்டிக்காெண்டாய்...?

மணம் தரும்... குணமும் தரும்! சுகந்தி மலர்’லாவண்டர் பூ’

மணம் தரும்... குணமும் தரும்!

மனம் கவரும் ஊதா நிறத்தில் உள்ள ‘லாவண்டர் பூ’ நறுமணம் மிக்கது என்பதாலேயே தமிழில் ‘சுகந்தி மலர்’ என்பார்கள். 

உணவுகள் மற்றும் பானங்களில், இந்த மலர் நறுமணமூட்டியாகவும் சுவை கூட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக மருந்து தயாரிப்புகளிலும் லாவண்டர் எண்ணெய் பயன்படுகிறது. இதன் முழுமையான பலன்கள் என்னவென்று அரோமா தெரபிஸ்ட்டான கீதா அசோக் அவர்கள் கூறுவது..

‘‘லாவண்டர் பூக்களை சோப்புகள், அழகுசாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் அலங்காரங்களில் ஒரு மண மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பூவின் எண்ணெயை உணவு தயாரிப்பில், ஐஸ்க்ரீம் மற்றும் தேநீருடனும் வாசனைக்காக சேர்க்கிறார்கள். மேலும் பாத்ரூமில் கிருமிநாசினியாகவும், எண்ணெய்  வடிவில் அதிக பயன்பாட்டில் உள்ள முக்கியமான ஒன்று லாவண்டர் ஆயில். பொதுவாக லாவண்டர் பூ மற்றும் எண்ணெயை மருத்துவத்தில் கவலை, அமைதியின்மை, தூக்கமின்மை, மனச்சோர்வு, தலைவலி, பல்வலி மற்றும் பிற வலிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

லாவண்டர் எண்ணெய் மயக்க விளைவைக் கொண்டிருப்பதால்(Sedative) தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து தளர்வடையச் செய்கிறது. Antibacterial, Anti inflammatory மற்றும் Anti fungal விளைவுகளைக் கொண்டிருப்பதால் பல நோய்களுக்கு மருந்தாகிறது. லாவண்டர் எண்ணெய் எல்லா வயதினருக்கும், அனைத்துவிதமான சரும வகைக்கும் ஏற்றது. சருமம் மற்றும் கூந்தல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும், அழற்சியால் ஏற்படும் வீக்கத்திற்கும் சிறந்த பலனைத் தருவது.

சிலர் தூக்கமின்மைப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள், இரவில் ஒரு பக்கெட் தண்ணீரில் சில துளிகள் லாவண்டர் ஆயிலை விட்டு குளித்தாலோ, காதுக்குப்பின்னால் சில துளிகள் தடவிக்கொண்டு அல்லது தலையணையில் தடவிவிட்டுத் தூங்கினால் ஆழ்ந்த நித்திரை கிடைக்கும். படிப்பதற்கு அடம்பிடிக்கும் குழந்தைகளின் அறைகளில் 100 மிலி தண்ணீரில் சில துளிகள் லாவண்டர் ஆயில் விட்டு ஸ்ப்ரே செய்தால், அந்த நறுமணத்தால் அவர்கள் அப்படியே அமைதியாகி, நல்ல கவனம் செலுத்தி படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். மன அமைதிக்கும், கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கும் நல்ல பயனுள்ளது.

தீக்காயம் ஏற்படும்போது பாதிக்கப்பட்ட சருமத்தின்மேல் லாவண்டர் எண்ணெயை அப்படியே நேரடியாக தடவும்போது தீக்காயம் விரைவில் குணமடையும். வீட்டில் சமையலறை, பாத்ரூம், புத்தக ஷெல்ப்,  துணிகள் அடுக்கும் பீரோ போன்றவற்றில் லாவண்டர் எண்ணெயை தெளித்து மூடி வைத்தால் சிறு பூச்சிகள் அண்டாது. இது சிறந்த கிருமிநாசினியாக வேலை செய்கிறது. பாம்பு, பூரான், தேள் போன்ற விஷக்கடிகளுக்கு அதன்மேல் நேரடியாக 30 சொட்டுகள் லாவண்டர் ஆயிலை தடவினால் விஷம் உடலில் ஏறவிடாமல் தடுப்பதோடு, அதுபோன்ற நேரங்களில் பாதிப்படைந்தவர்களுக்கு இயல்பாக ஏற்படும் பயத்தையும் குறைத்துவிடும்.

கூந்தல் உடைந்து, துண்டு துண்டாக உதிர்பவர்கள் 100 மிலி விளக்கெண்ணெயில் 200 சொட்டு லாவண்டர் எண்ணெயை சேர்த்து போடும்போது, கூந்தலின் உலர்வைப்போக்கி கூந்தல் உடைவதைத் தடுக்கும். முகத்தில் பெரிய பருக்கள் வந்தவர்கள் லாவண்டர் எண்ணெயை நேரிடையாகத் தடவினால் பருக்கள் அமுங்கி, சிவப்புத்திட்டுக்களும் குறைந்துவிடும். கண்களுக்கு அருகில் கருவளையம் உள்ளவர்கள் தாமரைப்பூவை அரைத்து அதனுடன் லாவண்டர் ஆயில் துளிகளைச் சேர்த்து தடவி வந்தால் 2, 3 நாட்களிலேயே கருப்பு நிறம் குறைவதைப் பார்க்கலாம்.

லாவண்டர் எண்ணெயில் உள்ள Anti Analgesic தன்மை பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் வரும் Menstrual Cramp  எனப்படும் அடிவயிற்றுவலி, இடுப்பு வலி, கை, கால் குடைச்சல் போன்ற வலிகளைக் குறைத்துவிடும். ஒரு ஸ்பூன் கடுகு எண்ணெய், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயுடன் 10 முதல் 20 சொட்டு லாவண்டர் ஆயிலை கலந்து வலி உள்ள இடங்களில் தடவினால், கடுமையான வலி கூட குறைந்துவிடும். ஒருவருக்கு மன அழுத்தம், பதற்றம் இருக்கும்போது தூக்கம் வராது. தூக்கமின்மைக்கு காரணமான மனப்பிரச்னைகளையும் போக்கும் தன்மை உடையது லாவண்டர் எண்ணெய்.

மன அழுத்தத்தை குறைக்க வேண்டுமானால், மனதையும், உடலையும் ஒருமைப்படுத்த வேண்டும். இந்த வேலையை லாவண்டர் ஆயில் செய்கிறது. சிலர் தேவையில்லாமல் எல்லாவற்றுக்கும் பயப்படுவார்கள். இதன் காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். அவர்களின் பயத்தையும் லாவண்டர் எண்ணெய் நறுமணம் போக்கிவிடும். எப்படி தியானம், பிரார்த்தனை இடங்களுக்கு செல்லும்போது மனம் அமைதியடைகிறதோ, அதே விளைவை இந்த எண்ணெய் ஏற்படுத்தும். அறுவை சிகிச்சைக்கு முன் எப்படிப்பட்ட தைரியசாலிக்கும் ஒரு மரண பயம் வந்துவிடும்.
அறுவைசிகிச்சை செய்யப்போகும் நோயாளியின் மனநிலையை தயார்படுத்த இதை பயன்படுத்தலாம். அந்த விதத்தில், நம் மூளையில் உள்ள மோட்டார் நரம்புகளை அமைதிப்படுத்த, கழுத்துக்கு பின்புறம் 10 சொட்டு லாவண்டர் எண்ணெயைத் தடவினால், ரத்த ஓட்டத்தில் கலந்து உடலையும், மனதையும் அமைதிப்படுத்தும். அறுவைசிகிச்சைக்குப்பின் உண்டாகும் புண்ணை ஆற்றுவதற்கு லாவண்டர் எண்ணெய் மிகவும் முக்கியம். புண்களும் மிக விரைவில் குணமாகும். குறிப்பாக அரோமா தெரபியில் மட்டுமே லாவண்டர் ஆயிலை பயன்படுத்துகிறோம். இதை பலவிதங்களிலும் பயன்படக் கூடிய எண்ணெய் என்று சொல்லலாம். மனம், உடல், நோய் என எல்லாவற்றுக்கும் ஒரே மருந்தாக பயன்படுகிறது.

வயது, குறிப்பிட்ட நோயுள்ளவர்கள் என வேறுபாடில்லாமல் எல்லோருமே பயன்படுத்தக் கூடிய ஒன்று. தொண்டைப்புண் உள்ளவர்கள் வெந்நீரில் 10 சொட்டு கிளிசரின், 10 சொட்டு தேன், 10 சொட்டு லாவண்டர் எண்ணெய் கலந்து வாயில் விட்டு புண்ணில் படுமாறு கொப்பளித்தால் வாய்ப்புண்ணை ஆற்றிவிடும். தலையில் வட்ட வட்டமாக கரப்பான் வந்த இடத்தில் முடி உதிர்ந்து சொட்டையாக இருக்கும். அந்த இடத்தில் லாவண்டர் ஆயிலை தடவி வந்தால், முடி புதிதாக வளர்ந்துவிடும். மைக்ரேன் தலைவலி, மெனோபாஸ் அறிகுறி, ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் போன்ற பிரச்னைகளுக்கெல்லாம் கூட லாவண்டர் எண்ணெய் நல்ல பலன் தருகிறது...

தயிரை இப்படி சாப்பிட்டால் உடம்புக்கு நல்லதல்ல!

Hello Doctor மருத்துவம்
தயிரை இப்படி சாப்பிட்டால் உடம்புக்கு நல்லதல்ல! 

தயிர் சாப்பிடுவது உடலுக்கு நல்லதுதான். ஆனால், சில உணவுப்பொருட்களை தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. 

அந்தவகையில், தயிருடன் பழங்கள் குறிப்பாக மாம்பழம் சேர்த்து சாப்பிடக்கூடாது. 

தயிர் குளிர்ச்சியானது, மாம்பழம் சூடானது. இது இரண்டும் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதில்லை. 

மேலும் எண்ணெய் உணவு பொருட்களுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் செரிமானப் பிரச்னை ஏற்படும்.

உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெட்டி வேர் !!*

Hello Doctor மருத்துவம்
*உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெட்டி வேர் !!*


சிறிதளவு, கொட்டை நீக்கிய கடுக்காய் 1 இதை இரண்டையும் சுடுநீரில் போட்டு முதல் நாள் இரவே ஊறவைத்து விடுங்கள்.

பிறகு அதை மறுநாள் காலையில் எடுத்து அரைத்து முகத்தில் பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் முக பருக்கள் நீங்கும்.

தீ காயம் ஏற்பட்டவர்களுக்கு இந்த வெட்டி வேரை அரைத்து தீ காயம் உள்ள இடத்தில் போட்டு வந்தால் தீ காயம் விரைவில் குணமாகும்.

அதுமட்டுமில்லாமல் வெயில் காலத்தில் ஏற்படும் வியர்வையினால் உடலில் துர்நாற்றம் வீசும். அத்தகைய துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்கும் அரைத்த வெட்டி வேரை வெந்நீரில் கலந்து குளிக்க வேண்டும்.

செவ்வரளி பூ வின் ஏராளமான மருத்துவ பயன்கள்!!*

Hello Doctor மருத்துவம்
*செவ்வரளி பூ வின் ஏராளமான மருத்துவ பயன்கள்!!*


நுண்ணுயிரிகளாக செயல்பட்டு, அழுகிய புண்களை ஆறச் செய்கின்றன.

அரளிப் பட்டையை 35 கிராமளவு எடுத்து, ஒன்றிரண்டாக தட்டி, அரளிப்பட்டை கசாயத்தால் அரைத்து, ஒரே உருண்டையாக உருட்டி 250 மி.லி., நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, பதத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை அழுகிய புண்கள் உள்ள இடங்களில் தடவி, பருத்தி துணியால் கட்டி வர விரைவில் ஆறும். படுக்கைப்புண்களில் இந்த தைலத்தை தடவி வரலாம். இது நஞ்சுத்தன்மை உடையதாகையால் உள்ளே சாப்பிடக்கூடாது.

தோல் நோய்கள் குணமாக பசுமையான அவுரி இலையின் மருத்துவ பயன்கள்!!*

Hello Doctor மருத்துவம்

*தோல் நோய்கள் குணமாக பசுமையான அவுரி இலையின் மருத்துவ பயன்கள்!!*


ஆகியவற்றின் இலைகளை சம அளவாகச் சேகரித்து, நிழலில் காயவைத்து, தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில், ஒரு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர பெண்களுக்கான முறையற்ற மாதவிடாய் சரியாகும்.

மேலும், வயிற்றுப்பூச்சிகள், கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகளும் விலகும். காலை, மாலை வேளைகளில் 45 நாட்கள் வரை தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.

சித்தரத்தையின் மருத்துவப் பயன்கள்!!*

Hello Doctor மருத்துவம்
*சித்தரத்தையின் மருத்துவப் பயன்கள்!!*


சித்தரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. அவை சிற்றரத்தை. பேரத்தை. இவை இந்தியாவில் பயிராகும். இதன் வேர் மருத்துவ குணம் உடையது. மஞ்சளைப் போல், இஞ்சியை போல், சித்தரத்தையும் கிழங்கு வகையை சார்ந்தது.

சித்தரத்தை கோழை, கபத்தை அகற்றும். உடல் வெப்பத்தை அகற்றும். பசியை தூண்டும்.

மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் செயல்படுவதுமான சித்திரத்தை பன்னெடுங் காலமாகத் தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மூலிகையாகும். சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது.

நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது.

ஒரு காலத்தில் தென்னாடு எங்கும் எல்லா வீட்டு மருந்துப் பெட்டிகளிலும் சித்தரத்தை இடம் பெற்றிருந்தது. கபம் சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும். கக்குவான் இருமல் உள்ள குழந்தைகளுக்கு சித்தரத்தையை அரைத்து தேனில் குழைத்துக் கொடுக்க இருமலின் தாக்கமும் இழுப்பும் குறைந்தது.

சித்தரத்தை ஒரு சிறந்த மணமூட்டியாக இருப்பதால் இதை வாயிலிட்டுச் சுவைக்க வாய் நாற்றம் மறையும். இதன் நறுமணம் காரணமாக இதைப் பல வகை ஆயுர்வேத மருந்துகளில் சேர்ப்பதுண்டு.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும் ஆவாரம்பூவின் மருத்துவக் குணங்கள்!!*

Hello Doctor மருத்துவம்
*பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும் ஆவாரம்பூவின் மருத்துவக் குணங்கள்!!*

ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர்.

இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.

நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போவக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.