வியாழன், 9 மார்ச், 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 9/3/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 9/3/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 9/3/23

உறவென்று நமக்கு
ஆயிரம் பேர் இருந்தாலும்..

பிடித்தவர் ஒருவருக்காக 
மனது 
ஏங்குவது தான்..

உண்மையான 
அன்பு!

ஒன்றை இழந்தால் தான்
ஒன்றை பெற முடியுமாம்..

ஆனால்
பிடித்ததை இழந்து விட்டு
வேறு எதை பெற்றாலும்
மனம் அதில் ஒட்டுவதில்லை!

பாடுபட்டு உழைத்ததை பக்குவமாய் சேமித்துக் கொள்ளுங்கள்..

எந்நிலையிலும் எச்சியிலையாய் தூக்கியெறிப்படுவோம் என்பதை மறக்காமல்!

😢😢😢

காசை வைத்து கர்வம் கொண்டு ஆடாதே..

கடவுள் நினைத்தால் கண் இமைக்கும் நேரத்தில் அத்தனையும் கரைந்து போகும் என்பதை மறக்காதே!

😈😈😈

சேகரிப்பது தவறில்லை..

அதை தான் மட்டுமே அனுபவிக்க வேண்டுமென நினைப்பது தவறு..

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை மறக்காமல்!

🥕🥕🥕

மூச்சுக்காற்றை வெட்டி வீழ்த்திய பிறகு..

உயிர் மூச்சை பாதுகாக்க ஆக்ஸிஜன் தேடுவதில் பலனில்லை!

😰😰😰

துரோகத்தால் அன்பான மனங்களை கொன்ற பிறகு..

போலியாக வாரி அணைத்துக் கொள்வதில் பலனில்லை!

😭😭😭

இரட்டை ஜடை, ஒற்றை ஜடை ஆகும்போது..

பெண்களின் அழகில் பாதி குறைந்து விடுகிறது!

😜😜

ஆழமாய் நேசிக்கும் உயிரிடம் அழகை தேடாதே..

அழகை தேடும் உயிரிடம் உண்மை இருக்காது என்பதை மறக்காதே!

மகிழ்ச்சியானவர்களிடம் இருப்பதெல்லாம் சிறப்பானது இல்லை........  
அவர்கள் கிடைப்பதை சிறப்பாக்கி கொள்கிறார்கள்..........!!

Previous Post
Next Post

0 Comments: