திங்கள், 16 அக்டோபர், 2023

மைசூரு தசரா விழா அரிய தகவல்கள்

மைசூரு தசரா விழா அரிய தகவல்கள்

மகிஷாசூரனை மைசூரு சாமுண்டி மலையில் வைத்து வதம் செய்தார்.
நன்மைக்கும், தீமைக்கும் நடந்த போராக கருதப்படுகிறது.
கலை, கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் மைசூரு தசரா விழாவைப் பற்றி இங்கு காண்போம்.

பார்வதி தேவியை வேண்டினர்

விஜயதசமி நாளில் மைசூருவின் சாமுண்டீஸ்வரி அம்மன் மகிஷாசூரனை வெற்றி கொண்ட நாள் தான் மைசூரு தசரா விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது மகிஷாசூரன் என்ற கொடூர அரக்கன் மக்களை கொடுங்கோல் ஆட்சியால் வாட்டி வதைத்து வந்தான். அதையடுத்து மக்கள் தங்களை காக்க வேண்டி காவல் தெய்வமான பார்வதி தேவியை வேண்டினர். அதன்பேரில் அவர் சாமுண்டீஸ்வரி அம்மனாக பிறந்தார். பின்னர் விஜயதசமி நாளன்று சாமுண்டீஸ்வரி அம்மன், படைகளுடன் சென்று மகிஷாசூரனை மைசூரு சாமுண்டி மலையில் வைத்து வதம் செய்தார். அதைத்தான் மைசூரு தசரா விழாவாக கொண்டாடுவதாக கூறப்படுகிறது. மேலும் இது நன்மைக்கும், தீமைக்கும் நடந்த போராக கருதப்படுகிறது.

மகிஷாசூரன் என்கிற பெயரில் இருந்து தான் மகிசூர் என்ற பெயர் தோன்றியதாகவும், பிற்காலத்தில் அது மருவி மைசூரு என வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு கொண்டாடப்பட்ட மைசூரு தசரா விழா 400-ம் ஆண்டு தசரா விழா ஆகும்.

தனியார் தர்பார்

கர்நாடக மக்களின் கலை, கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் மைசூரு தசரா விழா விஜயநகர பேரரசர்களால் 15-ம் நூற்றாண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. பெர்ஷியன் தூதுவர் அப்துர் ரஜாக் `இரண்டு புனித நட்சத்திரக் கூட்டங்களின் எழுச்சியும், இரண்டு கடல்களின் சங்கமமும்' என்ற புத்தகத்தில் மகாநவமி என்ற பெயரில் தசரா கொண்டாட்டங்கள் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். விஜயநகர பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மைசூருவை ஆண்ட உடையார் வம்ச அரசர் ராஜ உடையார் இந்த தசராவை ஸ்ரீரங்கப்பட்டணாவில் (மண்டியா மாவட்டம்) கொண்டாடினார்.


தசரா கொண்டாட்டங்களில் கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் சிறப்பு தர்பார் இடம் பெற்றது. இந்த தர்பார் மைசூரு அரண்மனையில் கூடியது. அரச குடும்பத்தினரும், சிறப்பு விருந்தினர்களும், அதிகாரிகளும், பொதுமக்களும் இந்த தர்பாரில் பங்கேற்றனர். அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவின்போது தனியார் தர்பார் நடந்து வருகிறது. மஹாநவமி என்று சொல்லப்படும் ஒன்பதாவது தினம் அரசரின் வாள் யானையின் மேல் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இந்த ஊர்வலத்தில் யானைகளுடன் ஒட்டகங்களும், குதிரைகளும் பங்கேற்கும்.

தங்க அம்பாரி

முதலில் மைசூரு மன்னர்கள் மற்றும் அரண்மனை சார்பில் கொண்டாடப்பட்ட தசரா விழா பின்னர் கர்நாடக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா விழாவின் கடைசி நாளில் ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெறும். அதாவது சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருள 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை ஒரு யானை சுமந்து கொண்டு யானைகள் புடைசூழ செல்ல, அதனை தொடர்ந்து மற்ற யானைகள் அணிவகுத்து வரும். யானைகளுக்கு முன்னர் பல்வேறு கலைக்குழுவினர், அலங்கார வண்டி அணிவகுப்புகள் நடைபெறும்.

மேலும் பீரங்கிகளும் முழங்கும். ஒட்டகங்கள், குதிரை படைகள், போலீசாரின் இசைக்குழு ஆகியவற்றுடன் ஜம்பு சவாரி ஊர்வலம் களைகட்டும். ஜம்பு சவாரி ஊர்வலம் மைசூரு அரண்மனையில் இருந்து தொடங்கி பன்னிமண்டபத்தில் உள்ள தீப்பந்து விளையாட்டு மைதானம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் நடக்கும். இந்த சந்தர்ப்பத்தில் வழிநெடுகிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஜம்பு சவாரி ஊர்வலத்தை கண்டு ரசிப்பார்கள்.

தீப்பந்து விளையாட்டு மைதானத்தை அடைந்ததும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாணவேடிக்கை நடைபெறும். முன்னதாக பன்னி(வன்னி மரங்கள்) வெட்டும் நிகழ்ச்சியும் நடத்தப்படும். பாண்டவர்கள் தங்களது ஆயுதங்களை அந்த மரத்தில் தான் மறைத்து வைத்திருந்தார்கள் என்றும், அதனால் தான் பன்னி மரத்தை வெட்டும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. அரசர்கள் இந்த மரத்தை வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள் என்று கூறப்படுகிறது.

மின்விளக்கு அலங்காரம்

இதுஒருபுறம் இருக்க தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனை வண்ண, வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும். அதுபோல் தற்போது மைசூரு நகரம் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது. தீப்பந்து விளையாட்டு மைதானத்தில் போலீசாரின் சாகச நிகழ்ச்சிகள், பல்வேறு வீரர்களின் சாகசங்கள், லேசர் கதிர்கள் மூலம் ஒளி வாயிலாக நடத்தப்படும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறும்.

முன்னதாக மன்னர் குதிரை சவாரி செய்து ராணுவ மரியாதையை ஏற்றுக் கொள்வார். இது ராஜாவிடம் இருக்கும் படை பலத்தை வெளிக்கொண்டு வந்து மக்களின் மனதில் தங்களை ராஜா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை விதைக்கும் என்று கூறப்படுகிறது. இப்படி பல்வேறு சிறப்புமிக்க மைசூரு தசரா விழா இந்த ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

அமாவாசைவிஷேச தலங்கள்..

அமாவாசைவிஷேச தலங்கள்..

அமாவாசை  ஒட்டி முன்னோர் வழிபாட்டுக்குரிய தலங்கள் இங்கே இடம் பெற்றுள்ளன. 

*ராமேஸ்வரம்* 

ராவணனை சம்ஹாரம் செய்த பாவம் தீர ராமர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் ராமேஸ்வரம். இங்கு ராம பிரதிஷ்டை செய்த சிவன் ராமலிங்கம் என்றும், அனுமன் பிரதிஷ்டை செய்த சிவன் விசுவலிங்கம் என்றும் அறியப்படுகிறது. 
காசி யாத்திரை செல்வோர் இங்கு வந்து தீர்த்தங்களில் நீராடி, ராமநாதரை கங்கை நீரால் அபிஷேகம் செய்தால் மட்டுமே யாத்திரை சென்ற பலன் உண்டாகும். கோயிலுக்கு எதிரிலுள்ள கடல் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. 

பிதுர் தர்ப்பணம் செய்வோர் ஆடி அமாவாசையன்று தீர்த்தங்களில் நீராடி, ராமநாதசுவாமியை வழிபடுவது நல்லது.
எல்லா அமாவாசை தினத்தில் வழிபாடு செய்வது நல்லது மதுரையில் இருந்து 200 கி.மீ.,
தொலைபேசி: 04573 - 221 223

*திருப்புவனம்* 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், காசிக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது. வைகை ஆற்றின் கரையிலுள்ள பிதுர்தலமான இதற்கு பிதுர் மோட்சபுரம், புஷ்பவன காசி என்ற சிறப்பு பெயர்கள் உண்டு.

இங்கு வைகை ஆறு, வடக்கு நோக்கி உத்திரவாகினியாக ஓடுகிறது. இங்கு தர்ப்பணம் செய்து, இறந்தோரின் அஸ்திகளை ஆற்றில் கரைத்தால் அவர்கள் நற்கதியை பெறுவர் என்பது ஐதீகம். நாயன்மார்கள் தரிசனம் பெறும் விதத்தில் நந்தியும் விலகி நின்றதால், சற்று சாய்ந்த நிலையில் இருப்பதைக் காணலாம்.
மதுரையில் இருந்து 18 கி.மீ., 
தொலைபேசி: 04575- 265 082, 84.

*கன்னியாகுமரி* 

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பகவதியம்மன் அருள்புரிகிறாள். 

பாணாசுரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள் அம்பிகையின் உதவியை நாடினர். கன்னியால் மட்டுமே தனக்கு மரணம் நேர வேண்டும் என பிரம்மாவிடம் வரம் பெற்ற பாணாசுரனை அழிக்க,
அம்பிகையே குமரியாக வடிவெடுத்து தவத்தில் ஈடுபட்டாள். பலம் பெற்ற அம்பிகை சக்ராயுதத்தை ஏவி, பாணாசுரனை வதம் செய்தாள். 
இத்தலத்தில் ஆடி அமாவாசை நாளில் நீராடி பிதுர்தர்ப்பணம் செய்வோருக்கு முன்னோர் ஆசி உண்டாகும் என்பது ஐதீகம். 
தொலைபேசி: 04652 - 246 223

*அழகர்கோவில்* 

திவ்யதேசங்களில் ஒன்றான அழகர்கோவிலில் கள்ளழகர் அருள்பாலிக்கிறார். மலைத்தலமான இங்கு சோலைமலை முருகனும் கோயில் கொண்டிருக்கிறார். காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பசாமி சக்தி மிக்கவர். உருவமற்ற இவர் கோயில் கோபுர வாசலில் குடிகொண்டிருக்கிறார். இவர் முன் சத்தியம் செய்து வழக்கு தீர்ப்பது இன்றும் நடைமுறையில் உள்ளது. இங்கு அனுமன் தீர்த்தம், கருடதீர்த்தம், சக்கரதீர்த்தம், நுாபுரகங்கை ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.

இதில் ஆடிஅமாவாசை நாளில் நுாபுர கங்கையில் நீராடி வழிபடுவது சிறப்பு. சுவை மிக்க இதில் நீராடினால் தோல்நோய் அகலும் என்பது ஐதீகம். 
மதுரையில் இருந்து 25 கி.மீ.,
தொலைபேசி: 0452 - 247 0228, 247 0229

*அய்யாவாடி* 

அமாவாசை வழிபாட்டு தலமான ஐயாவாடியில், காளியின் அம்சமான பிரத்யங்கிராதேவி அருள்புரிகிறாள். போரில் வெற்றி பெறுவதற்காக ராமர், யாகம் செய்து தேவியை வழிபட்டார். சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய இவள் கரிய நிறத்துடன் சிங்க முகம், 18 கைகளுடன், சிரித்த முகத்துடன் இங்கு காட்சி தருகிறாள். 

அமாவாசையன்று அம்மனுக்கு காலை முதல் மதியம் வரை நிகும்பல யாகம் என்னும் மிளகாய் வத்தல் யாகம் நடக்கும். அமாவாசையன்று இங்கு வருவோருக்கு எதிரி தொல்லை நீங்கும் என்பது ஐதீகம். 
கும்பகோணம் உப்பிலியப்பன் கோயிலில் இருந்து 3 கி.மீ., 
தொலைபேசி: 0435 - 246 3414

*சொரிமுத்தையனார்* *கோயில்* 

பொதிகை மலையில் சாஸ்தாவின் முதல் தலமான சொரிமுத்தையனார் கோயில் உள்ளது. சாஸ்தாவான இவர் இடது காலை மட்டும் குத்துக் காலிட்டு வலக்காலை தொங்கவிட்டபடி பூரணை, புஷ்கலா தேவியருடன் வீற்றிருக்கிறார். 

தாமிரபரணியில் உள்ள புனித தீர்த்தங்களில் முதலாவதான பாணதீர்த்தம் இக்கோயிலில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது. வானத்தில் இருந்து விழுவதைப் போல தோற்றம் கொண்ட இதனை 'வான தீர்த்தம்' என்றும் சொல்வர். 
அம்பில் புறப்பட்ட பாணம் போல அருவி நீர் கொட்டுவதால் பாணதீர்த்தம் என வந்ததாக கூறுவர். ஆடி அமாவாசையன்று பக்தர்கள் பெருமளவில் இங்கு கூடுகின்றனர். 
திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் 50 கி.மீ., அங்கிருந்து காரையார் செல்ல பஸ் வசதி உள்ளது. 
தொலைபேசி: 04634 250 209

*சுருளிமலை* 

மலைகள் அனைத்தும் முருகனுக்கே சொந்தம் என்ற அடிப்படையில் சுருளிமலையில் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கிறார்.
சித்தர்கள் முருகனை வழிபட்ட தலமான இங்கு, ஆண்டிக்கோலத்தில் சுவாமி காட்சியளிப்பதால் சுருளியாண்டி என அழைக்கப்படுகிறார். கைலாச புடவு என்னும் குகையில் கைலாசநாதராக சிவனும், குகையின் மேல்பகுதியில் முருகனும் இருக்கின்றனர். சனியின் பிடியிலிருந்து தேவர்களை காப்பாற்றியதால், இங்கு வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் என்பர்.

ஆடி அமாவாசைஅன்று சுருளி தீர்த்தம் அருவியில் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் அளிக்கின்றனர். இங்குள்ள பூதநாராயணப்பெருமாள் கோயிலில் விபூதியே பிரசாதமாக வழங்கப்படுகிறது. 
தேனியிலிருந்து 40 கி.மீ.,
அலைபேசி: 93452 61022.

*ஆனைமலை* 

ஆனைமலை அடிவாரத்தில் ஆழியாற்றின் கரையில் மன்னன் நன்னனுக்குரிய மாமரம் ஒன்று இருந்தது. அதில் பழங்களை யாரும் பறிப்பது கூடாது என உத்தரவிட்டிருந்தான். 
ஒருநாள் ஆழியாற்றில் நீராடிய இளம்பெண் ஒருத்தி, ஆற்றில் மிதந்த மாம்பழத்தை எடுத்து உண்டாள். அவளுக்கு நன்னன் மரண தண்டனை விதித்தான். ஊரார் அவளுக்கு மயானத்தில் சயன கோலத்தில் உருவம் அமைத்து வழிபடத் தொடங்கினர்.
உப்பாற்றின் வடகரையில் மாசாணியம்மன் 17 அடி நீளத்தில் தெற்கே தலை வைத்து கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தியபடி காட்சி தருகிறாள். நீதி தெய்வமான இவளை அமாவாசை நாளில் வழிபடுவது சிறப்பு. 
பொள்ளாச்சியில் இருந்து 14 கி.மீ.,
தொலைபேசி: 04253 - 282 337, 283 173 

*அனுமந்தபுரம்* 

தட்ச யாகத்தை நிறுத்த சிவன் வீரபத்திரரை அனுப்பினார். தட்சனின் தலையை வீரபத்திரர் வெட்ட, தலை யாகத்தீயில் விழுந்தது. தட்சனின் தந்தையாகிய பிரம்மாவின் ஆணையால், அங்கிருந்த ஆட்டின் தலை தட்சனுக்குப் பொருத்தப்பட்டது. அங்கிருந்து சினத்துடன் புறப்பட்ட வீரபத்திரர் சிவனிடம் முறையிட்டார். பூலோகத்தில் அனுமந்தபுரம் வெற்றிலை தோட்டத்தில் தங்கினால் சாந்தம் உண்டாகும் என வழிகாட்டினார். 

அதன்படி வீரபத்திரருக்கு கோயில் உருவானது. அமாவாசையன்று இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, சுவாமிக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடுகின்றனர். 
விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து 10 கி.மீ., 
தொலைபேசி: 044 - 2746 4325

*பண்ணாரி* 

வனப்பகுதியில் மேய்ந்த பட்டியில்(பசுக்கூட்டத்தில்) ஒரு பசு மட்டும் வேங்கை மரத்தடியில், தானாக பால் சுரந்தபடி நின்றிருந்தது. 

இதை அறிந்த மாடு மேய்ப்பவன் அந்த இடத்திலுள்ள புற்றின் அடியில், சுயம்பு திருமேனி இருப்பதை கண்டான். விஷயமறிந்த ஊரார் வந்தபோது, அங்கிருந்த ஒருவருக்கு அருள் வந்து “இங்கு பண்ணாரி மாரியாக வீற்றிருந்து அருள் புரிவேன்” என்று அம்மன் வாக்களித்தாள். அதன்படி கோயில் அமைத்து வழிபாடு செய்தனர். 

தெற்கு நோக்கி வீற்றிருக்கும் இந்த அம்மனின் பிரசாதமாக புற்று மண்ணே தரப்படுகிறது. ஆடி செவ்வாய், வெள்ளி, அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. 
சத்தியமங்கலத்தில் இருந்து 15 கி.மீ., ஈரோட்டில் இருந்து 77 கி.மீ.,
தொலைபேசி: 04295 - 243366

*அச்சிறுபாக்கம்* 

திரிபுர அசுரர்களை அடக்க எண்ணிய சிவன் தேரில் புறப்பட்டார். அப்போது முதற்கடவுளான விநாயகரை வணங்க வேண்டும் என்ற நியதியை பின்பற்றவில்லை. இதை அறிந்த விநாயகர், தேரின் அச்சை முறித்து சிவனைத் தடுத்தார். உண்மை உணர்ந்த சிவனும் உளப்பூர்வமாக விநாயகரை மனதில் தியானிக்க தேர் சரியானது.

தேரின் அச்சு முறிந்த இடமான அச்சிறுபாக்கத்தில் சிவனுக்கு கோயில் அமைக்கப்பட்டது. ஆட்சிபுரீஸ்வரர் என்னும் திருநாமத்துடன் விளங்கும் இவரை அமாவாசை நாளில் வழிபட்டால் முயற்சி தடையின்றி நிறைவேறும். 
காஞ்சிபுரத்திலிருந்து 70 கி.மீ., செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. 
தொலைபேசி: 044 - 2752 3019

*திருச்செங்கோடு* 

கொடிமாடச் செங்குன்றம் என்று சிறப்பு பெயர் கொண்ட தலம் திருச்செங்கோடு. இங்கு சிவன் அர்த்தநாரீஸ்வரராக அம்பிகையை இடபாகத்தில் ஏற்ற நிலையில் அருள்புரிகிறார்.

இங்குள்ள செங்கோட்டு வேலவன் சன்னதியும் சிறப்பு மிக்கது. 1200 படிகள் கொண்ட மலைக்கோயிலான இங்குள்ள 60வது படி, சத்தியப்படி என அழைக்கப்படுகிறது. அந்தக் காலத்தில் வம்பு, வழக்குகள் இங்கு பேசித் தீர்க்கும் வழக்கம் இருந்தது. இங்குள்ள அர்த்தநாரீஸ்வரரின் திருவடியில் சுரக்கும் தேவதீர்த்தம் மகிமை மிக்கது. 

அமாவாசை நாளில் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு தீர்த்தம் பருகினால் உடல், உள்ளநோய் நீங்கும். கருத்துவேறுபாடு நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். 
ஈரோட்டில் இருந்து 18 கி.மீ.,
தொலைபேசி: 04288 - 255925

சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு சிங்கம்புணரி அருள்மிகு சேவுகப்பெருமாள் ஆலயம்.

இன்றைய கோபுர*
*தரிசனம்

*சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு சிங்கம்புணரி அருள்மிகு சேவுகப்பெருமாள் ஆலயம்.

*கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

*மூலவர்:*

சேவுகப் பெருமாள்

*தல விருட்சம்:*

வில்வம்

*தீர்த்தம்:*

புஷ்கரிணி, விரிசிலை ஆற்று நீர், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீர்

*பழமை:*

500-1000 வருடங்களுக்கு முன்

*ஊர்:*

சிங்கம்புணரி

*மாவட்டம்:*

சிவகங்கை

*மாநிலம்:*

தமிழ்நாடு

*திருவிழா:*

*வைகாசியில் தேர்த்திருவிழா. தேர்நிலைக்கு வரும்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் நேர்த்திக்கடனாக தேங்காய்களை அருகிலுள்ள சுவரில் அடித்து உடைப்பர்.*

*தல சிறப்பு:*

*இத்தலத்து அய்யனார் வீராசனத்தில், தலையில் மகுடம், யோகப்பட்டை அணிந்து, பூரணை, புஷ்கலையுடன் அருள்பாலிக்கிறார். அய்யனாருக்கு வலதுபுறம் காவல் தெய்வமான பிடாரியம்மன், இடதுபுறம் சுயம்பிரகாசேஸ்வரர் என்னும் பூவைவல்லி உடனாய தான்தோன்றீஸ்வரர் தனித்தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோயில் ,சிங்கம்புணரி - 630 502திருப்புத்தூர் தாலுகா,சிவகங்கை மாவட்டம்.*

*போன்:*

*+91- 98650 62422*

*பொது தகவல்:*

*பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானை உடனாய முருகன், பரிவார தேவதைகள், கருப்பண்ணசாமி, கருப்பர், சப்தகன்னியர், நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர்.*

*பிரார்த்தனை:*

*கேட்டதை கொடுப்பதில் வல்லவரான அய்யனார், ஊரைக்காப்பவராகவும், நெல் விளைச்சலைப் பெருக்குபவராகவும், கால்நடைகளைக் காப்பாற்றுபவராகவும் போற்றப் பெறுகிறார். சனி தோஷம், ராகுதோஷம் நீங்கவும் இவரை வழிபடலாம்.*

*நேர்த்திக்கடன்:*

*பிரார்த்தனை நிறைவேறியதும் கன்றுகள் நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது. சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.*

*தலபெருமை:*

*சாஸ்தா என்றும் ஐயப்பன் என்றும் போற்றப்படும் தெய்வங்களின் அம்சமான அய்யனார் காவல் தெய்வமாக பல தலங்களில் அருள்பாலிக்கிறார். இத்தல சேவுகப் பெருமாள் அய்யனார் மிகவும் சக்தி வாய்ந்தவர். சிவனுக்குரிய வில்வ இலையைக் கொண்டு இங்கு பூஜை செய்யப்படுகிறது. மேலும் பெருமாளின் திருநாமம் பெற்றுள்ளார். சிவவிஷ்ணுவின் கூட்டணியில் பிறந்ததால், இத்தகைய சிறப்பு இவருக்கு தரப்பட்டுள்ளது.*

*சொல்லும் பொருளும்:*

*தேவர்களின் அரசன் இந்திரன் சாஸ்தாவை வளர்த்து வந்தார். அவரால் வளர்க்க இயலாத சூழ்நிலையில் பூலோகத்தில் உள்ள வேடுவ இனத்தவரிடம் ஒப்படைத்து வளர்க்க கூறினார். அவர்கள் அவரை அய்யனாராக பாவித்து காட்டில் மிருகங்களிடம் இருந்து பாதுகாப்பு தர வேண்டி வணங்கினர். காலப்போக்கில் காடுகள் குறைந்து ஊர்கள் பெருகவே ஊரின் எல்லையில் காவல் தெய்வமாக இருக்க வேண்டினர். இவ்வாறு, சாஸ்தாவின் அம்சமான அய்யனார் வழிபாடு உருவாயிற்று.*

*அய்யனாரைப் போல அய்யப்பனும் ராகு , மாந்தி போன்ற கோள்களின் தீமையை நீக்கும் கடவுளாகத் திகழ்கிறார். ஐ என்ற முதல் நிலையோடு அப்பன் என்ற தந்தையை உணர்த்தும் சொல் இணைந்து அய்யப்பன் என்ற சொல் விளங்குகிறது. அய்யனார், அய்யப்பன் இரண்டும் ஒருவரையே குறிப்பிடக்ககூடிய சொற்கள். அய்யனார் என்பதில் அன், ஆர் என்பன சேர்ந்திருக்க அய்யப்பனில் அப்பன் சேர்ந்திருக்கிறது. சொல்லில் சேரும் சேர்க்கைகள் தான் வேறாகின்றன. உணர்த்தும் பொருளும் சொற்களின் பொருளும் ஒன்றே. சேரநாட்டு அய்யப்பனும் காடுகளுக்கு இடையே மேடான இடத்தில் தான் வீற்றிருக்கிறான். சபரிமலை அய்யப்பன் வழிபாடும் தமிழகத்தின் அய்யனார் வழிபாடும் ஒன்றுபோல விளங்குகின்றன. இரண்டும் அந்தந்த சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி பெற்று இன்றுபுகழ் பெற்று விளங்குகின்றன.*

*மலையாளமும், தமிழகமும்:*

*முழுமுதற்கடவுள் மூவருள்ளும் தலைமை பெற்றவர்கள் அரியும் அரனும் இருவரும் ஈன்றமகனே அரிகரன். அதனால் தான் இந்தப் பகுதியில் (சிவகங்கை மாவட்டத்தில்) சிவன்ராத்திரி அன்று அய்யனார் கோயில்களில் பெரும் சிறப்புடன் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.அய்யப்பன் வரலாறு சேரநாட்டுக்குத் தக்கவாறு மன்னன் மகனாகப் பந்தளநாட்டு இளவரசனாக ஐயப்பன் விளங்குவதை எடுத்துரைக்கிறது. அவன் வாழ்வில் சாதிக்க முடியாதவற்றைச் சாதித்து அவன் மிகச் சிறந்த தலைவனாக காட்சி தருகிறான்.சபரிமலை அய்யப்பன் திருவுருவத்திற்கும் அய்யனார் திருவுருவத்திற்கும் பெரும் வேறுபாடு இல்லை.அய்யனைப் போல அய்யனாரும் வீராசனமாகவே வீற்றிருக்கிறார். இரண்டு கைகளை அபயவரதமாக அல்ல செண்டாயுதத்தைப் பற்றிக் கொண்டு அய்யனார் வீற்றிருப்பார். யோகப்பட்டை அணிந்திருப்பார்.தலையில் மகுடம் உண்டு. அய்யானாருக்கும் அய்யப்பனுக்கும் உருவ அமைப்பில் பெரும் வேற்றுமை இல்லை.*

*தலவிருட்சம்:*

*இத்திருக்கோயில் அமைந்த இடம் வில்வவனமாகியபடியால், இங்கு வில்வம் தல விருட்சமாகும். பரிவார தேவதைகள் உட்பட இங்குள்ள அனைத்துத் தெய்வங்களும் வில்வ இலைகளினாலேயே அர்ச்சிக்கப் பெறுகின்றன.*

*தல தீர்த்தம்:*

*இத்திருக்கோயிலின் தல தீர்த்தம் (புஷ்கரணி) விரிசிலை ஆற்று நீரும், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீரும் ஆகும்.*

*தல வரலாறு:*

*பல்லாண்டுகளுக்கு முன்பு, வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு வேட்டையாட வந்த வேடுவர் ஒருவர், மானைக்கண்டு அதன்மீது அம்பு எய்தார். தப்பிய மான் இங்கிருந்த மரப்பொந்து ஒன்றுக்குள் புகுந்து மறைந்தது. அதனை பிடிக்க வேடுவர் முயன்றபோது, புதருக்குள் ஒரு அய்யனார் சிலை இருந்தது.வியப்படைந்த வேடுவன், "சேவுகபெருமாளே! மானைத் தேடிப் போன நான் இன்று முதல் உனக்கு சேவகம் செய்யும் பாக்கியம் பெற்றேன்,'' என்றதுடன், ""பெருமாளே'' என்று சொல்லியும் வணங்கினான். அன்று முதல் இவர், "சேவுகப்பெருமாள் அய்யனார்' என்ற பெயரில் காவல்தெய்வமாக அருளுகிறார்.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*இத்தலத்து அய்யனார் வீராசனத்தில், தலையில் மகுடம், யோகப்பட்டை அணிந்து, பூரணை, புஷ்கலையுடன் அருள்பாலிக்கிறார். அய்யனாருக்கு வலதுபுறம் காவல் தெய்வமான பிடாரியம்மன், இடதுபுறம் சுயம்பிரகாசேஸ்வரர் என்னும் பூவைவல்லி உடனாய தான்தோன்றீஸ்வரர் தனித்தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர்.*

*அமைவிடம்:*

*மதுரையிலிருந்து 60 கிமீ., காரைக்குடியிலிருந்து மேற்கே 55 கி.மீ., தொலைவில் சிங்கம்புணரி உள்ளது. பஸ்ஸ்டாண்டிலிருந்து 1 கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.*

*அருகிலுள்ள ரயில் நிலையம்:*

காரைக்குடி

*அருகிலுள்ள விமான நிலையம்:*

மதுரை

*தங்கும் வசதி:*

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையாகாளி அம்மன் ஆலயம்.

இன்றைய கோபுர தரிசனம் 

சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையாகாளி அம்மன் ஆலயம்.

மூலவர்:
வெட்டுடையா காளி

தல விருட்சம்:
ஈச்சமரம்

தீர்த்தம்:
தெப்பம்

பழமை:
500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்:
கொல்லங்குடி

மாவட்டம்:
சிவகங்கை

மாநிலம்:
தமிழ்நாடு

திருவிழா:
பங்குனியில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பெருக்கு, கந்தசஷ்டி, தைப்பொங்கல், சிவராத்திரி, ஆடி, தை வெள்ளி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, மார்கழி பூஜை, பவுர்ணமி பூஜை.

தல சிறப்பு:
கோயிலில் அம்பிகையின் நேர் எதிரே அய்யனார், பஞ்சகச்சம் கட்டி வலது காலைத் தொங்க விட்டு அமர்ந்துள்ளார். வலதுகையில் தண்டம் அணிந்து உள்ளார். இங்குள்ள காளியோ தன் வலது காலை ஊன்றி, இடதுகாலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளாள். இவள் வைத்திருக்கும் கத்தியும், கேடயமும், வில்லும், அம்பும் இன்னும் மற்ற ஆயுதங்களும் தூர இருந்து பார்க்கும் போதே நமக்கு பயத்தை தோற்றுவிக்கும். எவ்வளவு பெரிய தீய சக்தியாக இருந்தாலும் அதனை எல்லாம் அழித்து விடுவேன் என்று பராசக்தியின் அம்சமான அவள் சொல்வது போல இந்த காட்சி அமைந்துள்ளது. காளியின் சன்னதிக்கு எதிரில் ஆஞ்சநேயர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோலைமலை, விஷ்ணு, கருப்பசாமி, வீரப்பசாமி, முனியப்பசாமி, பேச்சியம்மன், சூலாட்டுகாளி, பைரவர் ஆகியோர் உள்ளனர். இவர்களில் நம்மை அதிகம் கவர்பவள் சூலாட்டுக்காளிதான்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, பவுர்ணமி நாட்களில் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு வெட்டுடையா காளி திருக்கோயில்,கொல்லங்குடி வழி, விட்டனேரி போஸ்ட்,அரியாக்குறிச்சி-623 556,சிவகங்கை மாவட்டம்.

போன்:
+91-90479 28314, 93633 34311

பொது தகவல்:
நீதிபதி அம்பிகை:
அம்பிகை வலது காலை மடித்து அமர்ந்து, எட்டு கைகளுடன் காலுக்கு கீழே அசுரனை வதம் செய்தபடி காட்சி தருகிறாள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நம்பிக்கை துரோகம், வீண்பழி, அவமரியாதையால் பாதிக்கப்பட்டோர், செய்யாத தவறுக்கு தண்டனைக்கு உள்ளானோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு அம்பாள் சன்னதியில் காசு வெட்டிப்போட்டு வழிபடுகின்றனர். இந்த அநியாயங்களை எல்லாம் அம்பிகை தட்டிக்கேட்டு, குற்றவாளிகளைத் தண்டிப்பாள் என்பது நம்பிக்கை. இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் யாரேனும் தவறு செய்துவிட்டால், அவர்களைத் தண்டிக்க "நாணயம் தவறியோர்க்கு நாணயம் வெட்டிப்போடு' என்று சொல்லும் வழக்கமும் உள்ளது. வெட்டுடையார் காளியம்மன் மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைத்து, நடுநாயகமாக இருந்து நீதி வழங்குவதால் பக்தர்கள் இவளை "நீதிபதி' என்றே அழைக்கின்றனர். பவுர்ணமி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு விசேஷ பூஜைகள் உண்டு.

பிரார்த்தனை:
நோய் நீங்க, திருமணம், குழந்தை பாக்கிய தோஷங்கள் நீங்க அம்பிகைக்கு அபிஷேகம் செய்வித்தும், முடிகாணிக்கை செலுத்தியும் வழிபடுகின்றனர். மாங்கல்ய தோஷம் நீங்க அம்பாள் பாதத்தில் தாலி வைத்து வாங்கிச் செல்கின்றனர். குழந்தை பாக்கியத்திற்காக கோயிலுக்கு வெளியே உள்ள விசிறி மரத்தில் தொட்டில் கட்டுகின்றனர்.

கூடுதல் பிரார்த்தனை:
ஒன்றுக்கும் இல்லாத சிறிய விஷயம், தானே பெரியவர் என்ற குணத்தால் பிரிந்தவர்கள் பலர். இவர்கள் மீண்டும் ஒன்று சேர வழிபடும் பிரதான தலம் இது. பிரச்னையால் பிரிந்துவிட்டு மீண்டும் சேர விரும்பும் தம்பதியர், உறவினர், சகோதரர்கள் இங்கு "கூடுதல் வழிபாடு' என்னும் பிரார்த்தனை செய்கின்றனர். பிரிந்து சென்றோர் இங்கு வந்து அம்பாளுக்கு பொங்கல் வைத்து, அதை அம்பிகை சன்னதி முன் வைத்து ஒன்றாகக் கூடுகின்றனர். பின், பிரச்னை ஏற்பட்டவர்கள் தங்களுக்குள் அம்பிகை முன் சமரசம் செய்து, தாங்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வழிபடுகின்றனர். அம்பிகையே இவர்களுக்கு நடுநாயகமாக இருந்து சேர்த்து வைப்பதாக ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

பக்தர்கள் தங்களுக்கு தீங்கு செய்தவர்களை தண்டிக்க அம்மனிடம் முறையிடுவதும், தீய சக்திகளால் பிரிய நேர்ந்தவர்கள் இக்கோயிலுக்கு வந்து சேர்ந்து கொள்வதும் இக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும். குழந்தை வரம் கிடைக்கவும், பேசாத குழந்தைகளுக்கு பேச்சு நன்கு வரவும் இங்கு வேண்டிக் கொள்கின்றனர்.

தலபெருமை:
சங்காபிஷேகம்:
பங்குனியில் இங்கு 10 நாள் விழா நடக்கிறது. இவ்விழாவின்போது, சிவனைப்போலவே அம்பிகைக்கு 108 சங்காபிஷேகம் நடப்பது விசேஷம். இந்நாட்களில் அம்பிகை கேடயம், பூதகி, கிளி, அன்னம், காமதேனு, காளை, சிம்மம், தங்கக்குதிரை ஆகிய வாகனங்களில் பவனி வருவாள். விழாவின் 9ம் நாளில் தேர்பவனியும் உண்டு. ஆடிப்பெருக்கன்று அம்பாள் சன்னதி முழுதும் பூக்களை நிரப்பி, பூச்சொரிதல் விழா விசேஷமாக நடக்கும்.

இவர்களில் நம்மை அதிகம் கவர்பவள் சூலாட்டுக்காளிதான்.

அமைவிடம்:
சிவகங்கையில் இருந்து காளையார்கோவில் செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில் கொல்லங்குடி உள்ளது. இவ்வூரில் இருந்து 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். கொல்லங்குடியில் இருந்து பஸ் கிடையாது. ஆட்டோ உண்டு.

அருகிலுள்ள ரயில் நிலையம்:
சிவகங்கை

அருகிலுள்ள விமான நிலையம்:
மதுரை

தங்கும் வசதி:
காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு பையூர்பிள்ளைவயல் அருள்மிகு பிள்ளைவயல்காளியம்மன் ஆலயம்.

 ஆலயம் அறிவோம் 🙏

*சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு பையூர்பிள்ளைவயல் அருள்மிகு பிள்ளைவயல்காளியம்மன் ஆலயம்.*


*மூலவர்:*

காளியம்மன்

*பழமை:*

500-1000 வருடங்களுக்கு முன்

*ஊர்:*

பையூர் பிள்ளைவயல்

*மாவட்டம்:*

சிவகங்கை

*மாநிலம்:*

தமிழ்நாடு

*திருவிழா:*

*ஆண்டு தோறும் ஆடி முதல் வெள்ளியன்று காப்புக்கட்டு, தீமிதி விழாக்கள் நடக்கும். கடைசி வெள்ளியன்று பூச்சொரிதல் திருவிழா சிறப்பாக நடக்கும். மாதந்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.*

*தல சிறப்பு:*

*இக்கோயில் பற்றி ஆராய்ச்சி செய்த அருங்காட்சியக அதிகாரிகள் அம்மன் சிலை வடிவத்தை வைத்து பார்க்கும்போது இது ஆந்திராவில் செய்யப்பட்ட சிலை என்றும், 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதையும் உறுதி செய்தனர்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோயில்,பிள்ளைவயல், பையூர்,சிவகங்கை மாவட்டம்.*

*பொது தகவல்:*

*முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பின் போது, இந்து கோயில்கள் அழிக்கப்பட்டன. அச்சமயத்தில் இந்த காளியை பாதுகாக்க எண்ணி, அம்மன் சிலையை கண்மாய்க்குள் இருந்த கிணற்றில் கல்லைக்கட்டி போட்டு விட்டனர்.*

*பல ஆண்டுகள் கழித்து கண்மாய் தூர்வாரும் போது, சிலை வெளிப்பட்டது. பின்பு அம்பிகையை தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்தனர்.*

*தன்னைக் காக்கும் சோதனையை மக்களுக்கு தந்த அம்பிகை, அந்த சோதனையில் வென்ற மக்களை இப்போது பாதுகாத்து வருகிறாள்.*

*கோயில் வயல்வெளியில் இருப்பதாலும் இந்த அம்மனுக்கு, "பிள்ளைவயல் காளியம்மன்,' என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.*

*பிரார்த்தனை:*

*இக்கோயிலின் சிறப்பே குழந்தை பாக்கியம் தருவதுதான்.*

*திருமணமான தம்பதியர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் அடுத்தாண்டு அவர்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை.*

*நேர்த்திக்கடன்:*

*பிறக்கப்போகும் பிள்ளைகளுக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் பாதுகாப்பு, திருமணம் தடைபடும் பெண்கள் ஒவ்வொரு வெள்ளியும் தவறாமல் சென்று, விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும்.*

*தலபெருமை:*

*அம்பாள் மக்களை சோதிப்பாள், தன் பிள்ளைகள் சோதனையில் வெற்றி பெறுகிறார்களா என கவனிப்பாள். இப்படித்தான் சிவகங்கை மாவட்டம் பையூர் பிள்ளைவயல் காளியம்மன் 500 ஆண்டுகளுக்கு முன் மக்களை சோதித்தாள்.*

*முஸ்லிம் படையெடுப்பின் போது, தன் சிலைக்கு ஆபத்து வரச் செய்தாள். மக்களோ சிலையை பாதுகாத்து, அவள் வைத்த சோதனையில் வெற்றி பெற்றனர். இப்போது பராமரிப்பே இல்லாமல், கஷ்டப்படுவது போல நடிக்கிறாள்.*

*தன்னை பாதுகாக்க யாராவது ஒருவர் முன் வருகிறார்களா என காத்துக் கொண்டிருக்கிறாள் இந்த ஆந்திரத்து ஆதிபராசக்தி.*

*தல வரலாறு:*

*500 ஆண்டுகளுக்கு முன் பையூர் கிராம பகுதியில் வசித்த மக்கள் தங்களைப் பாதுகாக்க அம்மனின் உதவியை வேண்டினர். அவர்களின் கருத்தாக்கத்தால் உருவானாள் காளியம்மன்.*

*பல ஆண்டுகளாக அவர்கள் காளியை சிங்காரத்தோப்பு ஊரணிக்கரையில் வைத்து வழிபட்டனர். முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பின் போது, இந்து கோயில்கள் அழிக்கப்பட்டன. அச்சமயத்தில் இந்த காளியை பாதுகாக்க எண்ணி, அம்மன் சிலையை கண்மாய்க்குள் இருந்த கிணற்றில் கல்லைக்கட்டி போட்டு விட்டனர்.*

*பல ஆண்டுகள் கழித்து கண்மாய் தூர் வாரும்போது, சிலை வெளிப்பட்டது. பின்பு அம்பிகையை தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்தனர். தன்னைக் காக்கும் சோதனையை மக்களுக்கு தந்த அம்பிகை, அந்த சோதனையில் வென்ற மக்களை இப்போது பாதுகாத்து வருகிறாள்.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*இக்கோயில் பற்றி ஆராய்ச்சி செய்த அருங்காட்சியக அதிகாரிகள் அம்மன் சிலை வடிவத்தை வைத்து பார்க்கும்போது இது ஆந்திராவில் செய்யப்பட்ட சிலை என்றும், 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதையும் உறுதி செய்தனர்.*

*அமைவிடம்:*

*சிவகங்கை மாவட்டம், பையூர் பிள்ளைவயல் கிராமம்.*

*அருகிலுள்ள ரயில் நிலையம்:*

சிவகங்கை

*அருகிலுள்ள விமான நிலையம்:*

மதுரை

*தங்கும் வசதி:*

காரைக்குடி.

குஞ்சிதபாதம் என்றால் என்ன?_

குஞ்சிதபாதம் என்றால் என்ன?_

குஞ்சிதபாதம் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு;

தில்லைக் கூத்தப்பிரானின் வளைந்த தூக்கிய திருவடி.

தூக்கிய திருவடிக்கு குஞ்சிதபாதம் என்று பெயர்.

மற்றொரு பொருள் சிதம்பரத்தில் தயாரிக்கப்படும் மூலிகை வட்டமாகும். இது நடராஜர் காலை அலங்ரிக்கும்; 

வெட்டிவேர் மற்றும் மூலிகைப் பொருளைக் கொண்டு வட்டமாகத் தயாரித்து இருப்பர். அதை நடராஜனின் காலில் அணிவிப்பர்.

சிவபெருமானின் இடது பாகத்தில் சக்திதேவி இருக்கிறார்.
சிதம்பரத்தில் சக்தி சிவகாமவல்லி தன் பாதம் நோகுமென்றே தரையில் அடிவைக்க தயங்கி நின்றதுவோ? என்பது அதில் ஒரு வரி.

நடராஜரின் துணைவியான சிவகாமி, அவர் அருகில், இரண்டு கால்களையும் நன்றாக ஊன்றித்தான் நிற்கிறாள். ஆனால்,
அவளுக்கு பாதம் வலிக்குமென இவர் காலை தூக்கிக் கொண்டாராம். அதாவது சிவனே, நடராஜர் என்னும் பெயரில் நடனம்
ஆடுகிறார். 

அவரது இடது பாகத்தை, தன் மனைவிக்கு கொடுத்து விட்டார். இவர் நடனமிடும் போது, மனைவிக்குரிய இடது பாதம், தரையில் பட்டால் வலிக்குமே என, காலை உயர்த்திக் கொண்டார்m

 எமதர்மராஜன், மார்க்கண்டேயனைத் துரத்திப் பாசக்கயிற்றை வீசிய போது மார்க்கண்டேயன், சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். அப்போது எமனின் பாசக்கயிறு சிவலிங்கத்தின் மேல் பட்டது. இதனால் கோபம் அடைந்து எமனை இடது காலால் எட்டி உதைத்தார் ஈசன். 

தாயும்-தந்தையுமான சிவ-சக்தியை மார்க்கண்டேயன் சரண் அடைந்ததால் சிவபெருமான், சக்தி தேவியின் அம்சமான தனது இடது பாகத்தில் உள்ள பாதத்தால் எமனை எட்டி உதைத்தார். அந்த இடது கால் சக்தி தேவியின் அம்சம் என்கிறது புராணம்.
அதனால் ஆடல் நாயகனைத் தரிசிக்கும் போது கண்டிப்பாக இடது காலைத் தரிசிக்க வேண்டும். 

அப்படித் தரிசித்தால் செய்வினை பாதிப்பு, சனீஸ்வரால் ஏற்படும் தொல்லை மற்றும் பொதுவாக ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள், வியாதிகள் நீங்கும். மோட்சம் கிடைக்கும். உடல் வலிமை பெறும் என்கிறது சாஸ்திரம்.

எந்த நாளில் எந்த கடவுளுக்கு விரதம் இருக்கலாம்_

எந்த நாளில் எந்த கடவுளுக்கு விரதம் இருக்கலாம்_

வாரத்தில் உள்ள 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக கருதப்படுகிறது. 

ஆகவே எந்தெந்த நாட்களில் எந்தெந்த கடவுளை விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் 

 திங்கட்கிழமைகளில் சிவனை வேண்டி அவருக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை படைப்பது சிறந்தது. அதோடு நீலகண்டனுக்கு விரதம் இருந்தால் பல நலன்களை பெறலாம்.

செவ்வாய் : செவ்வாய் கிழமை துர்க்கை, முருகன் மற்றும் அனுமனுக்கு மிகவும் உகந்த நாளாகும். எனவே செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வந்தால், வாழ்வில் வளம் பெருகும். மேலும் முருக பெருமானை நினைத்து கந்தசஷ்டி கவசம் படித்துவந்தால் நவகோள்கள் மகிழ்ந்து நன்மையளிக்கும்.

புதன் : புதன் கிழமை விநாயக பெருமானுக்கு உகந்த நாளாகும். எனவே புதன்கிழமைகளில் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாட்டு வந்தால் எந்த ஒரு காரியம் சிறப்பாக நடக்கும்

வியாழன் : வியாழன் கிழமை விஷ்ணு, தட்சணாமூர்த்தி மற்றும் லக்ஷ்மி தேவி ஆகிய கடவுளுக்கு உகந்த நாளாகும். எனவே வியாழக்கிழமை அன்று தட்சணாமூர்த்தி மற்றும் இரண்டு தெய்வங்களை நினைத்து விரதம் இருந்து வழிபடுவது சிறந்தது.

வெள்ளி : வெள்ளிக்கிழமை துர்கை அம்மனுக்கு மிகவும் உகந்த நாளாகும். ஆகவே வெள்ளி கிழமைகளில் விரதமிருந்து துர்கை அம்மனின் அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடுவது மிகவும் சிறந்தது.

சனி : நவகிரகங்களில் ஒருவரான சனிபகவானுக்கு உகந்த நாள் சனிக்கிழமை. அதோடு ஆஞ்சநேயர், பெருமாள், காளி தேவி ஆகிய தெய்வங்களுக்கும் சனிக்கிழமை உகந்த நாளே. ஆகையால் சனிக்கிழமை அன்று சனிபகவானையும் மற்ற தெய்வங்களையும் வழிபடுவது சிறந்தது.

ஞாயிறு : நவகிரகங்களில் முதன்மையான கடவுளாக கருதப்படுபவர் சூரிய பகவான். இவருக்கு ஞாயிறு என்று மற்றொரு பெயரும் உண்டு. ஞாயிற்று கிழமைகளில் சூரிய பகவானுக்கு விரதமிருந்து வழிபட்டால் வழக்கை பிரகாசமாக இருக்கும்.✍🏼🌹

சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் ஆலயம்.

 இன்றைய கோபுர
*தரிசனம் 
*சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் ஆலயம்.*

*கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

*மூலவர்:*

திருவேங்கடமுடையான்

*அம்மன்/தாயார்:*

ஸ்ரீதேவி, பூதேவி

*பழமை:*

500 வருடங்களுக்குள்

*ஊர்:*

அரியக்குடி

*மாவட்டம்:*

சிவகங்கை

*மாநிலம்:*

தமிழ்நாடு

*திருவிழா:*

*சித்திரை மாதப் பிறப்பன்று திருமஞ்சனம், சித்ரா பவுர்ணமியன்று சுவாமி வீதியுலா, வைகாசியில் பிரமோற்ஸவம், ஆடிப்பூர உற்சவம், கோகுலாஷ்டமி, புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரத்தில் சுவாமிக்கும் தாயாருக்கும் திருக்கல்யாணம் உள்ளிட்ட பல விழாக்கள் நடக்கின்றன.*

*தல சிறப்பு:*

*இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் உள்ள கருடாழ்வார் இருபுறமும் சிம்மங்களுடன் காட்சி தருவது அதிசயமாக உள்ளது.*

*திறக்கும் நேரம்:*

*காலை 6 மணி முதல் 4 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில் ,அரியக்குடி-630 302,காரைக்குடி தாலுகா,சிவகங்கை மாவட்டம்.*

*போன்:*

*+91 -4565 - 231 299*

*பொது தகவல்:*

*இங்கிருந்து 15 கி.மீ., தூரத்தில் பிள்ளையார்பட்டி தலம் உள்ளது.*

*பிரார்த்தனை:*

*திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.*

*நேர்த்திக்கடன்:*

*பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.*

*தலபெருமை:*

*இக்கோயிலில் உள்ள கருடாழ்வார் இருபுறமும் சிம்மங்களுடன் காட்சி தருவது அதிசயமாக உள்ளது. ஒவ்வொரு மாத சுவாதி நட்சத்திரத்திலும் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. ஆடி சுவாதியன்று கருடனின் ஜென்மநட்சத்திரமான "மகா சுவாதி' நடக்கிறது.*


*ராமானுஜர் காலத்தில் உற்சவ விக்கிரகங்கள் ஸ்ரீரங்கத்திலிருந்து அனைத்து கோயில்களுக்கும் கொடுக்கப்படுகின்றன என்பதை அறிந்த சேவுகன் செட்டியார் தனது முயற்சியால், உடையவரால் ஆராதிக் கப்பெற்ற திருவேங்கடம் உடையானை இத்தலத்திற்கு கொண்டு வந்தார்.திருப்ப தியிலிருந்து சடாச்சரியும், திருமயத்திலிருந்து அக் னியும் கொண்டு வரப்பெற்று திருவேங்கடம் உடையான் கோயில் திருப்பணி துவங்கியது. அன்று முதல் அரியக்குடி "தென்திருப்பதி' என புகழ் பெற்றது.*


*தல வரலாறு:*

*இப்பகுதி பிரமுகரான சேவுகன் செட்டியார், திருவேங்கடம் உடையானின் தீவிர பக்தராக இருந்தார். அவரைக் காண வரும் மக்கள் சுவாமிக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வந்தனர். ஆண்டு தோறும் அந்த உண்டியலை நடந்தே சென்று திருப்பதியில் செலுத்தி வந் தார். வயதான நிலையில் ஒரு நாள் தலையில் உண்டியலை சுமந்து கொண்டு திருப்பதி மலையேறி செல்லும் வழியில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அப்போது அவர் முன் "எம்பெருமான்' தோன்றினார். ""தள்ளாத வயதில் மலையேறி வரவேண்டாம். பக்தன் இருக்குமிடத்திற்கு நான் வருகிறேன்,'' என கூறி மறைந்தார்.ஊர் திரும்பிய அவரது கனவில் மீண்டும் தோன்றிய பெருமாள், ""நாளை நீ மேற்கே செல்..என் இடம் தெரியும்,'' என்றார். அதன்படி மறுநாள் அவர் நடந்து சென்றபோது, தற்போது கோயில் இருக்குமிடத்தில் ஒரு துளசி செடியும், தேங்காய் காளாஞ்சியும் இருந்தன. அந்த இடத்தில் கோயில் கட்ட நிலத்தை சீர்செய்தபோது, தற்போதுள்ள மூலவர் சிலை நிலத்தின் அடியிலிருந்து கிடைத்தது.திருப்பதியை போன்று பெருமாளை தனியாக நிறுவ விரும்பாது, அலர்மேல் மங்கை தாயார், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.*

*அமைவிடம்:*

*சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரோட்டில் 4 கி.மீ., தொலைவில் அரியக்குடி கோயில் உள்ளது. காரைக்குடியில் இருந்து பஸ்கள், ஆட்டோக்களில் செல்லலாம்.*

*அருகிலுள்ள ரயில் நிலையம்:*
காரைக்குடி
*அருகிலுள்ள விமான நிலையம்:*
திருச்சி
*தங்கும் வசதி:*
காரைக்குடி

அருள்மிகு மலையாள பகவதி அம்மன் திருக்கோயில்,

*"🙏தினம் ஒரு கோபுர தரிசனம்🙏"* 

*காலை சூரிய உதயத்தில்...*

*கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்...*

*இன்றைய கோபுர தரிசனம்*

அருள்மிகு மலையாள பகவதி அம்மன் திருக்கோயில்,
*கணக்கன்பாளையம் – 638452,*
*கோபிசெட்டிபாளையம்,* 
*ஈரோடு மாவட்டம்.*
*காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.........

முன்னோர்கள் சாபம் நீங்க – கோவில் பரிகாரம்

முன்னோர்கள் சாபம் நீங்க – கோவில் பரிகாரம்

பிரம்மஹத்தி தோஷத்தை போக்கக்கூடிய கோவில்
திருவிடைமருதூர்

உலக வாழ்க்கையில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொருவிதமாக அமைகின்றது. ஒரு சிலருக்கு வெற்றித் திருமகள் தேடிவந்து மாலை அணிவிக்கிறாள். ஒரு சிலருக்கு என்ன உழைத்தாலும், அதற்கு உரிய பலன்கள் கிடைக்காமல் போகின்றன. இதற்கு பலவகையான தோஷங்கள் காரணமாக இருந்தாலும், குறிப்பாக பிரம்மஹத்தி தோஷம்தான் முக்கிய காரணம் என்கிறார்கள். பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது இதற்கு உரிய பரிகாரங்கள் என்ன 

''பிரம்மஹத்தி தோஷம் என்பது, கொடுமையான பாவங்களைச் செய்வதால் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. தாய்க்கு உணவளிக்காமல் விரட்டி அடிப்பது, பசுவைக் கொல்வது, குருவை உதாசீனப்படுத்துவது, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது, தெய்வச் சொத்தைத் திருடுவது போன்றவற்றால் இந்த தோஷம் ஏற்படும். குறிப்பாக நன்றி மறப்பதால்தான் இந்த தோஷம் ஏற்படுகிறது. 

இந்த தோஷம் இருந்தால், ஜாதகர் தனது பிறவியில் என்ன உழைத்தாலும் அதற்கு உரிய பலன் கிடைக்காமல், வறுமையும் தோல்விகளையுமே சந்தித்து வாழ்வார். வேலை கிடைக்காது, வேலை கிடைத்தாலும் உரிய கூலி கிடைக்காது. கூலி கிடைத்தாலும் முறையான அங்கீகாரம் கிடைக்காது. இந்த நிலை ஓர் ஆண்டு இரண்டு ஆண்டுகள் அல்ல. பல ஆண்டுகள் நீடிக்கும். தொழிலில் உரிய அங்கீகாரம் கிடைக்காது. சமூகத்தில் திறமை இருந்தும் நல்ல நிலையை அடைய முடியாமல் தடுமாறிய வண்ணம் இருப்பார்கள். ஏன் சிலவேளைகளில் அவர்களது குடும்பத்திலே கூட அவர்களுக்கு மரியாதை இருக்காது. இதற்கு அவர்கள் பெரிய அளவில் செலவில்லாத முறையான எளிய பரிகாரங்களைச் செய்தாலே போதும். நல்ல பலன்கள் கிடைத்து மேன்மை அடைவார்கள்.

பிரமஹத்தி தோஷம் ஒருவருக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதை எப்படி அறிந்து கொள்வதெனப் பார்ப்போம்.

லக்னத்துக்கு 4 -ம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்து, 6, 8, 12 -ம் இடங்களில் சுபர்கள் இருந்தாலும், 5, 9 - ம் வீடுகளுக்கு அதிபதிகளாக அசுப கிரகங்கள் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து இருந்தாலும், அசுபர் வீட்டில் இருந்தாலும் இந்த தோஷம் அவர்களுக்கு உள்ளதென அறியலாம். 

* ராகுவின் இருக்கும் ராசியில் இருந்து 5 அல்லது 9 - ம் வீட்டில் சனி, குரு சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும் (அதாவது சனியும் குருவும் ஒரே பாதத்தில் 10 டிகிரியில் இருக்கவேண்டும்) தோஷமாகும்.

பரிகாரங்கள்: 

* சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் உள்ள தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும். இது தவிர ஒரு பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது அல்லது வயது முதிர்ந்த ஏழைத் தம்பதியருக்கு வீட்டில் உணவளித்து அவர்களுக்கு புதிய துணிமணிகள் வாங்கிக்கொடுத்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொள்ள வேண்டும். 

* உத்தமர்கோவில், கொடுமுடி, கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம் கோயில்களுக்கு புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சென்று தோஷ நிவர்த்தி பூஜை செய்துகொள்வது நல்லது.

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்து எல்லோருக்கும் கொடுத்தால் நல்ல பலன் அளிக்கும்.

* திருபுல்லாணி சென்று, இறந்த மூத்தோருக்கு (தகப்பனார் இல்லாதவர்கள்) பித்ருக் கடன் செய்து அதற்கு அருகே உள்ள தேவிப்பட்டினத்தில் உள்ள நவ பாஷாணத்திலான நவகிரகங்களின் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும்'' இவ்வாறு அவர் கூறினார்.

முன்னோர்கள் சாபம் நீங்க – கோவில் பரிகாரம் -பிரம்மஹத்தி தோஷத்தை போக்கக்கூடிய கோவில்

முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடைபெறாது. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் எதற்கெடுத்தாலும் சண்டை, சச்சரவு போட்டுக்கொண்டு நிம்மதி இல்லாமல் இருப்பார்கள். ஒரு சிலருக்கு உடல்நல ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டேயிருக்கும். வேறு சிலர் வசதியின்றி, வறுமையில் கஷ்டப்பட்டு வருவர். அது மட்டுமில்லாமல் திருமணம் நடைபெறாமல் தள்ளிப்போதல், குழந்தை பேறின்மை, திருமணமான தம்பதியரிடையே பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள், துன்பங்கள் போன்றவைகள் வருவதற்கு தலைமுறை, தலைமுறையாக ஏற்படும் முன்னோர்களின் சாபங்கள் தான் காரணம் என்று நம்பப்படுகிறது. அதையடுத்து, முன்னோர்களின் சாபங்களை போக்குவதற்கான கோயில் குறித்து பார்க்கலாம்.

* பிரம்மஹத்தி தோஷம் :

• சாபங்களிலேயே மிகவும் கொடிய சாபமாக முன்னோர்களின் சாபமே பிரம்மஹத்தி தோஷமாக கருதப்படுகிறது.
• பிரம்மஹத்தி தோஷத்தை போக்கக்கூடிய கோயிலாக கும்பகோணம் அருகே உள்ள திருவுடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

• 1200 ஆண்டுகளுக்கும் பழமையான இந்த கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் போன்றோர்களால் பாடப்பட்டதாகும்.
• முன்பொரு சமயம் மதுரையை அரசாட்சி செய்து வந்த வரகுண பாண்டியன் என்ற மன்னன் வேட்டைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தான்.
• அப்போது சாலையோரமாக தூங்கிக் கொண்டிருந்த அந்தனன் மீது குதிரையின் கால்பட்டு இறந்து விட்டான்.
• இந்த செயல் பாண்டிய மன்னனுக்கு தெரியாமலே நடந்தது என்றாலும் மன்னனை, பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது.
• பெரிய சிவபக்தனான வரகுண பாண்டியன் இதிலிருந்து விடுபட மதுரை சோமசுந்தரரை வணங்கினான்.
• அப்போது வரகுண பாண்டியன் கனவில் தோன்றிய சிவபெருமான், சோழ நாட்டில் உள்ள திருவிடைமருதூர் சென்று வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும் என கூறினார்.

* திரும்பி வரும் போது…

• எதிரி மன்னனாக திகழும் சோழ நாட்டிற்குள், எப்படி செல்வது என நினைத்துக் கொண்டிருந்த போது, பாண்டிய நாடு மீது சோழ மன்னன் படையெடுத்து வந்திருப்பதாக செய்தி கிடைத்தது.
• அதையடுத்து, போரில் வென்ற வரகுண பாண்டியன், சோழ படைகளை அவர்களது எல்லைக்கு விரட்டினான்.
• அப்போது திருவிடைமருதூர் கோயிலில் கிழக்கு வாயில் வழியாக சென்று மகாலிங்கேஸ்வரரை தரிசனம் செய்து பாண்டிய மன்னன் வழிபட்டான்.
• வரகுண பாண்டிய மன்னன் கோயிலுக்குள் நுழையும் போது, அவரை பற்றி இருந்த பிரம்மஹத்தி தோஷம் வெளியே நின்றது.
• வரகுண பாண்டியன் திரும்பி வரும் போது மீண்டும் பற்றிக் கொள்ளலாம் என நினைத்து காத்திருந்தது.
• அப்போது சிவபெருமான், நீ மேற்கு வாயில் வழியாக வெளியே போ என கூறினார். அதனால் வரகுண பாண்டியனை தொற்றி இருந்த பிரம்ஹத்தி தோஷம் நீங்கியது.
• அதையடுத்து, பாண்டிய மன்னன் சென்றது போலவே, இன்றும் இந்த கோயிலுக்கு செல்லும் சிவ பக்தர்கள் கிழக்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்து, மேற்கு வாயில் வழியாக வெளியே செல்வது வழக்கமாக உள்ளது.

* சிறப்பு :

• உலகளவில் மருத மரத்தை ஸ்தல விருட்சமாக கொண்டிருக்கும் 3 கோயில்களில் இதுவும் ஒன்றாகும். ஸ்ரீசைலம் மற்றும் திருநெல்வேலி ஆகியவை மற்ற 2 கோயில்களாகும்.
• திருவுடைமருதூர் கோயிலில் இருக்கும் 3 பிரகாரங்களை வலம் வருவது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

* அஸ்வமேதப் பிரகாரம் :
முதலாவதாக இருக்கின்ற இந்த வெளிப்பிரகாரத்தை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

* கொடுமுடிப் பிரகாரம் :
இரண்டாவதாகவும், மத்தியிலும் இருக்கும் இப்பிரகாரத்தை வலம் வருவது. சிவபெருமான் குடியிருக்கும் கைலாய மலையை வலம் வருவதற்குச் சமம் என்று கூறப்படுகிறது.

* பிரணவப்பிரகாரம் :
மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும்.

7 தலைமுறை முன்னோர்களின் பாவத்தை நீக்கக்கூடிய சக்தி வாய்ந்த சிவ மந்திரம்..

ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ ஓங்காரம் மல்லேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹ

ஓம் நம சிவாய…

ஞாயிறு, 1 அக்டோபர், 2023

Entered BiggBoss House ON BOARD

Biggboss 7 Confirmed Contestant 













BIGG BOSS TAMIL SEASON 7 24/7
✅ BIGG BOSS UPDATES
✅ BIGG BOSS PROMO
✅ BIGG BOSS REVIEW
All Updates Every Sec Uploaded 👇👇👇
நமது YouTube Channel 
Subscribe செய்து Bigg Boss Updates கண்டு மகிழுங்கள் 

This is the 18 official contestants in the biggboss tamil 7 house

Entered BiggBoss House ON BOARD #BiggBossTamil #BBT #BBSeason7 #பிக்பாஸ் #VijayTv #biggbosspromo 
Total 18 official contestants entered Biggboss
7 house
100
Cool suresh
Raveena Dhaha
Yugendran vasudevan
Saravana vikram
Bava chelladurai
Akshaya
Aishu
Jovika
Manichandra
Maya krishnan
Vinusha
Pratheep Anthony
Poornima ravi
Vijay varma
Vichithra
Ananya Rao
Nixen
Vishnu vijay

Creamy Mushroom Gravy : பரோட்டாவுக்கு இந்த மாதிரி கிரீம் காளான் கிரேவி செய்து சுவைத்து பாருங்கள்!கிரீம் காளான் கிரேவி

பரோட்டாவுக்கு இந்த மாதிரி கிரீம் காளான் கிரேவி செய்து சுவைத்து பாருங்கள்!

கிரீம் காளான் கிரேவி எப்படி செய்வது என்பது குறித்து இதில் காண்போம்

தேவையான பொருட்கள்

காளான் 75 கிராம்
2 டீஸ்பூன் எண்ணெய்
வளைகுடா இலை
பெருஞ்சீரகம் விதைகள் 1/2 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை, கிராம்பு 2
வெங்காயம் 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி 2
சிவப்பு மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் 1 தேக்கரண்டி
கரம் மசாலா 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1/2 தேக்கரண்டி
முந்திரி
உப்பு
1/2 டீஸ்பூன் கசூரி மேத்தி

செய்முறை

ஒரு கடாயில், 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். வளைகுடா இலை, பெருஞ்சீரகம் விதைகள் 1/2 தேக்கரண்டி, இலவங்கப்பட்டை, கிராம்பு 2 சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் 1 சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 2 தக்காளி அரைத்து சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். சிவப்பு மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் 1 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி, கொத்தமல்லி தூள் 1/2 தேக்கரண்டி சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை எண்ணெய் வடியும் வரை வதக்கவும்.
முந்திரி விழுதைச் சேர்க்கவும் (6 முந்திரியை 10 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து நன்றாக விழுதாக அரைக்கவும்). மசாலாவுடன் வதக்கவும். 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். 3/4 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் கழுவிய காளானை 75 கிராம் சேர்த்து வதக்கவும். அது சமைத்து தண்ணீர் விட்டுவிடும். காளான் நன்கு வெந்ததும், 1/2 டீஸ்பூன் கசூரி மேத்தி சேர்த்து நன்கு கலக்கவும். உங்களுக்கு பிடித்த உணவோடு சூடாக பரிமாறவும்.

ஆரோக்கியமான பச்சைப் பயிரு கடையல்.. காலையில் இப்படி செய்து கொடுங்கள்.. ஈஸி தான்!

ஆரோக்கியமான பச்சைப் பயிரு கடையல்.. காலையில் இப்படி செய்து கொடுங்கள்.. ஈஸி தான்!

சுவையான பச்சைப் பயிரு கடையல் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சை பயிறு - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு காய்கள் - 10
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
புளி தண்ணீர் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை

செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள பச்சை பயிறு. வெங்காயம், தக்காளி,பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சாம்பார் தூள்,உப்பு,புளி தண்ணீர், சிறிது தண்ணீர் என அனைத்து பொருட்களையும் பிரஷர் குக்கரில் சேர்க்கவும். நன்றாகக் கலந்து 2-3 விசில் வரும் வரை பிரஷர் செய்யவும்.
முடிந்ததும் மத்து பயன்படுத்தி பயன்படுத்தி நன்றாக மசிக்கவும். இறுதியாக எண்ணெய் கடுகு கறிவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து தாளித்து மசித்து வைத்த பச்சைபயிர் கடையலில் ஊற்றவும். இப்போது சுவையான பச்சைப் பயிரு கடையல் ரெடி

பிரட் இல்லாமல் பிரட் அல்வா செய்யலாம்.. எப்படி தெரியுமா? இதோ இப்படி ட்ரை பண்ணுங்க

பிரட் இல்லாமல் பிரட் அல்வா செய்யலாம்.. எப்படி தெரியுமா? இதோ இப்படி ட்ரை பண்ணுங்க


பிரட் இல்லாமல் பிரட் அல்வா செய்வது எப்படி என்பது குறித்து இதில் காண்போம்

தேவையான பொருட்கள்
மில்க் ரஸ்க் - 10 முதல் 15 (1 கப் ரஸ்க் பவுடர்)
இனிக்காத கோவா - 1/2 கப்
நெய் - 1/2 கப்
பால் - 1 கப்
வெந்நீர் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
உப்பு - 1 டீஸ்பூன்
ஏலக்காய் தூள்
உலர்ந்த பழங்கள்
முலாம்பழம் விதைகள்

செய்முறை
பால் ரஸ்கை நன்றாகப் பொடியாகக் அரைத்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு கடாயில் உலர்ந்த பழங்களை நெய்யில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அதே கடாயில் அரைத்த ரஸ்க் பொடியை சேர்த்து சிறு தீயில் சில நிமிடங்கள் வதக்கவும்.
இப்போது சர்க்கரை, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு கப் வெந்நீர், ஒரு கப் பால் சேர்த்து கட்டிகள் இல்லாமல் தொடர்ந்து கிளறவும்.
குறைந்த தீயில் 5 நிமிடம் சமைக்கவும். பின்னர் ஒவ்வொரு 5-10 நிமிடங்களுக்கும் நெய் சேர்த்து நன்கு சமைக்கவும்.
15-20 நிமிடங்களுக்குப் பிறகு, நெய் தனித்தனியாகத் தொடங்கும், இப்போது வறுத்த உலர் பழங்கள், ஏலக்காய் தூள், முலாம்பழம் விதைகள் சேர்த்து உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிமாறவும்.

Weight Loss Fruits : உடல் எடை குறைப்பில் இருக்கிறீர்களா? நீங்கள் இந்தப்பழங்களை மறந்தும் கூட சாப்பிட்டுவிடாதீர்கள்!

Weight Loss Fruits உடல் எடை குறைப்பில் இருக்கிறீர்களா? நீங்கள் இந்தப்பழங்களை மறந்தும் கூட சாப்பிட்டுவிடாதீர்கள்!
உடல் எடை குறைப்பில் இருக்கிறீர்களா? நீங்கள் இந்தப்பழங்களை மறந்தும் கூட சாப்பிட்டுவிடாதீர்கள்!

Weight Loss Fruits பழங்கள் ஆரோக்கியமானது என்பதுதான் பொதுவான கருத்து, அதில் வைட்டமின், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், அவற்றை ஆரோக்கிய உணவு என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் சில பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை அதிகம் இருக்கும். அவை எந்த பழங்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
அதிக சர்க்கரை உள்ள பழங்கள்
நீங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தில் இருந்தால் குறிப்பிட்ட சில பழங்களை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று நிபுணர்கள் அறிவுறுத்துவார்கள். சர்க்கரை அளவு அதிகம் உள்ள பழங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

அன்னாசி பழம் இயற்கையாகவே கொழுப்பை குறைக்கும் பழம் என்று கூறப்படுகிறது. அன்னாசியில் இயற்கையாகவே இனிப்பு சுவை மிகுந்து இருக்கும். இதில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இதில் சர்க்கரை அளவும் அதிகம் உள்ளதால், ஒரு குறிப்பிட்ட அளவு இதை எடுத்துக்கொள்ளலாம்.

திராட்சை
இதில் அதிகம் உள்ள தண்ணீர் இது எடை குறைப்புக்கு உதவக்கூடிய பழமாக உள்ளது. ஆனால், திராட்சையில் இயற்கையாகவே சர்க்கரை அதிகம் உள்ளது. அது குட்டியாக இருப்பதால் நாம் கடகடவென்று சாப்பிட்டுவிடுவோம். இதனால், அதிக சர்க்கரை நமது உடலுக்குள் சென்றுவிடும்.

செரிகள்
குட்டிகுட்டியான செரி பழங்களில், கலோரிகள் குறைவாக உள்ளதுதான். இதனால், உடலின் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறப்பான தேர்வாக இருக்கும். ஆனால், இதில் சர்க்கரை அதிகம் உள்ள இனிப்பான பழம். இதை அதிகம் எடுத்துக்கொண்டால், உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மாம்பழம்
மாம்பழங்கள், மாங்காய்களை பிடிக்காத மனிதர்களே இல்லை என்று கூறலாம். அந்தளவுக்கு மாம்பழங்கள் அனைவருக்கும் பிடித்த பழம். எல்லோரும் கோடைக்காலம் எப்போது வரும் என்று மாம்பழங்களுக்காக காத்திருப்பார்கள். இது ஊட்டச்சத்தும் நிறைந்த பழம். உடல் எடை குறைப்புக்கும் உதவுகிறது. ஆனால் குறைவாக எடுத்துக்கொண்டால் மட்டுமே அந்த பலன் கிட்டும். நீங்கள் இதை அதிகம் எடுத்துக்கொண்டால் நீங்கள் இழக்க விரும்பும் எடையை குறைக்க முடியாது. ஏனெனில், இதில் அதிகம் உள்ள சர்க்கரை உங்கள் உடல் எடையை அதிகரித்துவிடும்.

லிச்சி
லிச்சி அதன் இனிப்பு சுவைக்காகவே பெயர் போனது. இது இனிப்புடன் கூடிய வித்யாசமான சுவை கொண்ட பழம். எனவே எடை குறைப்பு பயணத்தில் உள்ளவர்கள் இந்த பழம் அதிகம் எடுத்துக்கொள்வதையும் கைவிடவேண்டும். ஏனெனில் இதில் சர்க்கரை அளவு அதிகம்.

அத்தி
இனிப்பு சுவை மிகுந்த பழம். எடையிழப்பு பயணத்தில் இருப்பவர்கள் இந்த பழத்தை கட்டாயம் தேர்ந்தெடுப்பார்கள். ஏனெனில், இது ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பழமாகும். ஆனால், இதில் கலோரிகள் மற்றும் இனிப்பு சுவை அது இரண்டுமே இதில் அதிகம். இதில் ஆரோக்கிய நன்மைகள் அதிகம் உள்ளன. நீங்கள் இதை எடுத்துக்கொண்டால், குறைவான அளவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

டேங்கிரைன்கள்
டேங்கிரைன்கள் என்பவை சிட்ரஸ் வகை பழங்கள். இவை மிகவும் ஆரோக்கியமானவை, இதில் சர்க்கரை அதிகம் உள்ளது. திராட்சை போன்ற சர்க்கரை நிறைந்த பழம்தான் இதையும் அளவாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால் மற்ற அனைத்து பழங்களையும்விட இதில் அதிகம் சர்க்கரை உள்ளது. எனவே எடையிழப்பு பயணத்தில் உள்ளவர்கள், மேலே குறிப்பிட்டுள்ள பழங்களை சாப்பிடக்கூடாது.

Bun Parotta Tips : புஸ்புஸ் பன் பரோட்டா செய்ய வேண்டுமா? இதோ டிப்ஸ்கள்!

புஸ் புஸ் பன் பரோட்டா செய்வது எப்படி? இதோ டிப்ஸ்கள்

Bun Parotta Tips : புஸ்புஸ்ன்னு பன் பரோட்ட செய்ய வேண்டுமா? இதோ டிப்ஸ்கள்.
தேவையான பொருட்கள்
மைதா - 500 கிராம்
காய்ச்சாத பால் - 20 மிலி
சர்க்கரை - 3 டீஸ்பூன்
முட்டை - 1
டால்டா - 2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை 
ஒரு அகல பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சர்க்கரை, தண்ணீர், உப்பு, பால் அனைத்தும் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
மற்றொரு அகன்ற பாத்திரத்தில் மைதா மாவை கொட்டி அதன் நடுவே கலந்து வைத்திருக்கும் பால், சர்க்கரை, உப்பு முட்டைக் கலவையை ஊற்றி நன்கு பிசைய வேண்டும்.
ஓட்டல்களில் பரோட்டா மாவு பிசைவதை பார்த்திருபோம். அது போலவே மாவை நிறுத்தாமல் நன்கு இழுத்துப் பிசைந்து 3 ஸ்பூன் மைதா மாவை மேலே தூவி மாவை நன்கு அடித்துப் பிசையவும். பிசைந்த மாவின் மேல் ஒரு ஸ்பூன் எண்ணெய் மற்றும் டால்டா சேர்த்து, மாவை துணியால் மூடி 2 மணி நேரம் அப்படியே ஊற விடவேண்டும்.
பிறகு இந்த மாவை எடுத்து சிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும். பின் பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் உருண்டைகளைப் போட்டு அதன் மீது சிறிதளவு டால்டா ஊற்றி மீண்டும் 30 நிமிடங்களுக்கு அப்படியே ஊற விடவும். இப்போது மைதா மாவு எண்ணெயில் நன்கு ஊறி சரியான பதத்திற்கு வந்திருக்கும்.
அடுத்து, கையில் எண்ணெய் தடவிக்கொண்டு உருண்டைகளை மெல்லியதாகத் தட்டி, அதை நன்கு வீசி விசிறியாக மடித்து பன் பரோட்டா வடிவத்தில் அடுக்காக சுற்றி வட்டமாக தட்டி எடுக்கவேண்டும்.
பின்னர் அடுப்பில் தோசைக் கல்லை சூடாக்கி அதில் தட்டி வைத்துள்ள பரோட்டாக்களில் இருந்து ஒவ்வொன்றாக கல்லில் இட்டு அதைச் சுற்றி தாராளமாக எண்ணெய் ஊற்றி 2 பக்கமும் பொன்னிறமாக வேகும்படி சுடவேண்டும்.
அட்டகாசமான மதுரை ஸ்பெஷல் பன் பரோட்டா ரெடி. இதற்கு சால்னா, நாட்டுக்கோழி மசாலா, மட்டன் சாப்ஸ், சுக்கா, குடல், ஈரல் குழம்பு இப்படி எந்தக் குழம்புடனும் சாப்பிடலாம். வித்யாசமான அனுபவத்தை தரும்.
புஸ்புஸ் பன் பரோட்டா செய்ய டிப்ஸ்!
பன் பரோட்டா செய்யும்போது, அது நல்ல மிருதுவாக வரவேண்டும். அதற்கு மாவு ஊறும் நேரம் மிக முக்கியம். முதலில் மாவு பிசைந்ததும் 3 மணி நேரம் கூட ஊற வைக்கலாம்.
எண்ணெய் தடவி அரைமணி நேரம் ஊறினால் போதும். மாவு ஊறும்போது ஈரத்துணி அல்லது மூடி கொண்டு மாவின் மேல் மூடியிருப்பது அவசியம்.
டால்டா முக்கியமல்ல. ஆனால் அது புரோட்டாவிற்கு நல்ல நிறமும் க்ரிஸ்பியும் தரும். வாய்ப்புள்ளவர்கள் டால்டாவிற்கு பதில் நெய்யை சேர்த்துக் கொள்ளலாம்.
புரோட்டா மாவை எவ்வளவு நேரம் பிசைகிறோம் என்பது மிக மிக முக்கியம். மாவை 360 டிகிரியிலும் அமுக்கி, இழுத்து, தேய்த்து பிசையவேண்டும்.
முதலில் பிசையும்போது 15 நிமிடங்களும் 2 மணி நேரம் ஊறிய பின் 5 நிமிடங்களும் பிசைந்தால் பன் பரோட்டா அற்புத மென்மையாக வரும்.
மாவை கைகளால் தட்டும்போது மாவின் ஓரங்களை நன்கு அழுத்திக் கொடுக்கவும் மாவின் மத்தியில் அதிகமாக அழுத்தக்கூடாது.
புரோட்டாவை நன்கு வீசி அதை விசிறி மடிப்பாக சுருட்டிய பின்னர் அந்த மாவு பூரிக்கட்டையில் தேய்க்கக்கூடாது. கைகளால் மெலிதாக அழுத்தி ஒரு பன் திக்னஸில் அப்படியே கல்லில் போட்டு சுட்டு எடுக்கவேண்டும்.
விசிறத் தெரியாதவர்கள் மொத்த மாவையும் விசிறினால் எவ்வளவு பெரிதாகுமோ அந்த அளவிற்கு பூரிக்கட்டையால் மாவை நன்கு இழுத்துத் தேய்த்து பிறகு அதை மடித்து விசிறி போல் சுருட்டிக்கொள்ள வேண்டும்.
மாவை விசிறி போல சுருட்டும் போது மாவுக்குள் சிறிது காற்று இருக்கும்படி (பலூன் போல) அழுத்தி மடித்தால் நன்றாக இருக்கும். நீங்கள் மடிக்கும்போதே புஸ்ஸுனு பஃபியாக இருக்கணும். அப்போது தான் பர்ஃபெக்ட்டான பன் பரோட்டா கிடைக்கும்.