திங்கள், 16 அக்டோபர், 2023

சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு பையூர்பிள்ளைவயல் அருள்மிகு பிள்ளைவயல்காளியம்மன் ஆலயம்.

 ஆலயம் அறிவோம் 🙏

*சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு பையூர்பிள்ளைவயல் அருள்மிகு பிள்ளைவயல்காளியம்மன் ஆலயம்.*


*மூலவர்:*

காளியம்மன்

*பழமை:*

500-1000 வருடங்களுக்கு முன்

*ஊர்:*

பையூர் பிள்ளைவயல்

*மாவட்டம்:*

சிவகங்கை

*மாநிலம்:*

தமிழ்நாடு

*திருவிழா:*

*ஆண்டு தோறும் ஆடி முதல் வெள்ளியன்று காப்புக்கட்டு, தீமிதி விழாக்கள் நடக்கும். கடைசி வெள்ளியன்று பூச்சொரிதல் திருவிழா சிறப்பாக நடக்கும். மாதந்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.*

*தல சிறப்பு:*

*இக்கோயில் பற்றி ஆராய்ச்சி செய்த அருங்காட்சியக அதிகாரிகள் அம்மன் சிலை வடிவத்தை வைத்து பார்க்கும்போது இது ஆந்திராவில் செய்யப்பட்ட சிலை என்றும், 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதையும் உறுதி செய்தனர்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோயில்,பிள்ளைவயல், பையூர்,சிவகங்கை மாவட்டம்.*

*பொது தகவல்:*

*முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பின் போது, இந்து கோயில்கள் அழிக்கப்பட்டன. அச்சமயத்தில் இந்த காளியை பாதுகாக்க எண்ணி, அம்மன் சிலையை கண்மாய்க்குள் இருந்த கிணற்றில் கல்லைக்கட்டி போட்டு விட்டனர்.*

*பல ஆண்டுகள் கழித்து கண்மாய் தூர்வாரும் போது, சிலை வெளிப்பட்டது. பின்பு அம்பிகையை தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்தனர்.*

*தன்னைக் காக்கும் சோதனையை மக்களுக்கு தந்த அம்பிகை, அந்த சோதனையில் வென்ற மக்களை இப்போது பாதுகாத்து வருகிறாள்.*

*கோயில் வயல்வெளியில் இருப்பதாலும் இந்த அம்மனுக்கு, "பிள்ளைவயல் காளியம்மன்,' என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.*

*பிரார்த்தனை:*

*இக்கோயிலின் சிறப்பே குழந்தை பாக்கியம் தருவதுதான்.*

*திருமணமான தம்பதியர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் அடுத்தாண்டு அவர்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை.*

*நேர்த்திக்கடன்:*

*பிறக்கப்போகும் பிள்ளைகளுக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் பாதுகாப்பு, திருமணம் தடைபடும் பெண்கள் ஒவ்வொரு வெள்ளியும் தவறாமல் சென்று, விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும்.*

*தலபெருமை:*

*அம்பாள் மக்களை சோதிப்பாள், தன் பிள்ளைகள் சோதனையில் வெற்றி பெறுகிறார்களா என கவனிப்பாள். இப்படித்தான் சிவகங்கை மாவட்டம் பையூர் பிள்ளைவயல் காளியம்மன் 500 ஆண்டுகளுக்கு முன் மக்களை சோதித்தாள்.*

*முஸ்லிம் படையெடுப்பின் போது, தன் சிலைக்கு ஆபத்து வரச் செய்தாள். மக்களோ சிலையை பாதுகாத்து, அவள் வைத்த சோதனையில் வெற்றி பெற்றனர். இப்போது பராமரிப்பே இல்லாமல், கஷ்டப்படுவது போல நடிக்கிறாள்.*

*தன்னை பாதுகாக்க யாராவது ஒருவர் முன் வருகிறார்களா என காத்துக் கொண்டிருக்கிறாள் இந்த ஆந்திரத்து ஆதிபராசக்தி.*

*தல வரலாறு:*

*500 ஆண்டுகளுக்கு முன் பையூர் கிராம பகுதியில் வசித்த மக்கள் தங்களைப் பாதுகாக்க அம்மனின் உதவியை வேண்டினர். அவர்களின் கருத்தாக்கத்தால் உருவானாள் காளியம்மன்.*

*பல ஆண்டுகளாக அவர்கள் காளியை சிங்காரத்தோப்பு ஊரணிக்கரையில் வைத்து வழிபட்டனர். முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பின் போது, இந்து கோயில்கள் அழிக்கப்பட்டன. அச்சமயத்தில் இந்த காளியை பாதுகாக்க எண்ணி, அம்மன் சிலையை கண்மாய்க்குள் இருந்த கிணற்றில் கல்லைக்கட்டி போட்டு விட்டனர்.*

*பல ஆண்டுகள் கழித்து கண்மாய் தூர் வாரும்போது, சிலை வெளிப்பட்டது. பின்பு அம்பிகையை தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்தனர். தன்னைக் காக்கும் சோதனையை மக்களுக்கு தந்த அம்பிகை, அந்த சோதனையில் வென்ற மக்களை இப்போது பாதுகாத்து வருகிறாள்.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*இக்கோயில் பற்றி ஆராய்ச்சி செய்த அருங்காட்சியக அதிகாரிகள் அம்மன் சிலை வடிவத்தை வைத்து பார்க்கும்போது இது ஆந்திராவில் செய்யப்பட்ட சிலை என்றும், 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதையும் உறுதி செய்தனர்.*

*அமைவிடம்:*

*சிவகங்கை மாவட்டம், பையூர் பிள்ளைவயல் கிராமம்.*

*அருகிலுள்ள ரயில் நிலையம்:*

சிவகங்கை

*அருகிலுள்ள விமான நிலையம்:*

மதுரை

*தங்கும் வசதி:*

காரைக்குடி.
Previous Post
Next Post

0 Comments: