திங்கள், 20 நவம்பர், 2023

சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம்

சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம்
மாவட்டம் : ஈரோடு
இடம் : சத்தியமங்கலம்
முகவரி : சத்தியமங்கலம், ஈரோடு.
தாலுகா : சத்தியமங்கலம்

வரலாறு : தமிழ்நாட்டின் மிகப்பெரிய வனவிலங்கு உய்வகமாக விளங்கும் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம், ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் தாலுகாவில் அமைந்துள்ள தமிழ்நாட்டில் நான்காவதாக ஆரம்பிக்கப்பட்ட புலிகள் காப்பகமாகும். 

அடர்ந்த வனத்தில் 545 சதுரமைல் பரப்பளவு விரிவுபடுத்தப்பட்டு இயற்கை எழிலுடன் குளிர்ந்த சூழலை தன்னகத்தே கொண்டுள்ளது. 

இந்த காடுகளில் சந்தன மரம் அதிகமாக இருக்கிறது. இது சந்தன கடத்தல் வீரப்பன் இருக்கும் வரை 'வீரப்பன் காடு' என்று பெயர் பெற்றிருந்த சத்தியமங்கலம், அவர் கொல்லப்பட்ட பிறகு சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக திகழ்கிறது. 

இந்த வனப்பகுதி வெப்ப மண்டல பசுமையான, அரை பசுமையான,கலப்பு இலையுதிர்,முள் காடுகள் மற்றும் உலர்ந்த இலையுதிர் காடுகள் என்று 5 வகையான கொண்டுள்ளது. 

'வண்ணப் பூரணி' என்ற சுற்றுலாத் திட்டத்தினால் காட்டுக்குள்ளேயே சென்று விலங்குகளை பார்க்கையில் வனப்பிரியர்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்கிறது. 

காட்டுக்குள் உலாவும் அணில், யானை, சிறுத்தை, மான், காட்டெருமை, செந்நாய், கரடி மற்றும் புலி போன்ற வனவிலங்குகளை நேரில் கண்டு ரசிக்கலாம். 

திகில் நிறைந்த இந்த பயணத்தில் ஆங்காங்கே கீச்சலிடும் பறவைகள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக பறக்கும் காட்சி நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது. 

மேலும் இந்த அடர்ந்த வனப்பகுதியில் காட்சி முனைகள், கண்காணிப்பு கோபுரங்கள், குட்டைகள் ஆகியவை மனதை பரவசப்படுத்துகிறது.

சிறப்பம்சங்கள் : 

அங்குமிங்கும் உலாவும் வனவிலங்குகள்... 

கீச்சலிடும் பறவைகள்... 

வண்ணத்துப்பூச்சிகள்... 

காட்சி முனைகள்... 

வீரப்பன் வாழ்ந்த வனப்பகுதி... 

இயற்கை குடில்கள்...

எப்படி அடையலாம்?

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து 34 கி.மீ. தொலைவில் இந்த வனவிலங்கு உய்விடம் மற்றும் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.
Previous Post
Next Post

0 Comments: