திங்கள், 20 நவம்பர், 2023

அருள்மிகு முத்துகுமார சுவாமி திருக்கோயில்

அருள்மிகு முத்துகுமார சுவாமி திருக்கோயில்
மாவட்டம் : ஈரோடு
இடம் : பவளமலை
முகவரி : பவளமலை, ஈரோடு
தாலுகா : ஈரோடு

வரலாறு : வாயுவும், ஆதிசேஷனும் தமக்குள் யார் சக்திமிக்கவர் என்று போட்டி போட்டனர். வாயு புயலாக மாறி வீசத்துவங்கினார். சக்தி வாய்ந்த மேருமலையையே தகர்க்கும் நோக்கத்துடன், தன்னுடைய முழுபலத்துடன் மலை மீது மோதினார். காற்றின் வேகம் தாளாமல், மலையின் சிகரங்களில் ஒன்று பூலோகத்தில் விழுந்தது. அந்த சிகரமே பவளமலை. ஞானப்பழம் கிடைக்காததால் பெற்றோரிடம் கோபித்த முருகப்பெருமான் பழநியில் தங்கினார். அதன்பிறகு குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக உலகத்தார் வழிபடத் துவங்கினார். அவ்வகையில், பவளமலையில் முருகன் கோயில் எழுப்பப்பட்டது. இவருக்கு, முத்துகுமார சுவாமி என்பது திருநாமம்.
Previous Post
Next Post

0 Comments: