வெள்ளி, 25 அக்டோபர், 2024

ராகி பணியாரம்! செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

ராகி பணியாரம்!


தேவையான பொருள்கள்:

ராகி மாவு - ஒரு கப்
கோதுமை மாவு - அரை கப்
பேக்கிங் சோடா - ஒரு தேக்கரண்டி
அரிசி மாவு. - கால் கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து (பொடியாக நறுக்கியது)
காரட் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை:

வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும். காரட்டை துருவி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எல்லா வகையான மாவையும் ஒன்றாக போட்டு உப்பு சேர்த்து கலக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, துருவிய காரட், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.

பின்னர் வதக்கியவற்றை மாவில் போட்டு கலக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் பணியார கல்லை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி கரைத்து வைத்திருக்கும் மாவை குழியின் முக்கால் அளவிற்கு ஊற்றி இருபுறமும் நன்றாக திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கவும்.

சுவையான ராகி பணியாரம் ரெடி.

கோதுமை குழி பணியாரம்...!

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

கோதுமை குழி பணியாரம்...!

தேவையான பொருட்கள்:

1. கோதுமை மாவு - கால் கிலோ
2. இட்லி மாவு - கால் கப்
3. ரவை - 1 டேபிள் ஸ்பூன்
4. முட்டை - 1
5. தேங்காய் துருவல் - கால் கப்
6. முந்திரி - 3(பொடியாக்கியது)
7. உப்பு - தேவைக்கேற்ப
8. வெல்லம் - 300 கிராம் (பொடியாக்கியது)
9. ஏலக்காய் - 3(பொடியாக்கியது)
10. எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

1. வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

2. கோதுமை மாவில் இட்லி மாவு, ரவை, முட்டை, பொடியாக்கிய முந்திரி, உப்பு, ஏலக்காய் பொடி, வடிகட்டிய வெல்லம் அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

3. கலவை கெட்டியாக இருந்தால் தேவைக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி கலக்கி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.

4. பின்பு, குழிபணியார சட்டியை காயவைத்து கொஞ்சமாக எண்ணெய் அல்லது நெய் விட்டு பணியாரமாக சுட்டெடுக்கலாம்.

5. இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

மில்க் கேசரி செய்வது எப்படி.....?

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

மில்க் கேசரி செய்வது எப்படி.....?


தேவையான பொருட்கள்:

பால் - 200 மில்லி லிட்டர்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய் - 7
வெள்ளை ரவை - 100 கிராம்
நெய் - 30 மில்லி
முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்
கிஸ்மிஸ் (உலர் திராட்சை) - 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் பருப்பு - 2
பிஸ்தா - 2
செர்ரி பழம் - 2

மில்க் கேசரி
செய்முறை:

வாணலியில் சிறிது நெய் விட்டு ரவையை நிறம் மாறாமல் சிம்மில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.

மற்றொரு வாணலியில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.

மற்றொரு வாணலியில் பால் சேர்த்து காய்ச்சியதும் வறுத்த ரவை, தட்டிய ஏலக்காய் சேர்த்துக் கிளறவும்.

பால் வற்றி ரவை வெந்த பிறகு சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். சர்க்கரை உருகி, கேசரி பதத்துக்கு ரவை வந்த பிறகு, நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் (உலர் திராட்சை) சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

இதில் பாதாம் பருப்பு, பிஸ்தா, செர்ரியை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

நெய் மைசூர்பாகு ரெசிபி

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

நாவில் வைத்ததும் கரைந்து போகும் நெய் மைசூர்பாகு ரெசிபி:

தேவையானப் பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 21/2 கப்
நெய் - 2 கப்

செய்முறை

1.கடலைமாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். 

2.நெய்யை சூட வைத்து கரைத்துக் கொள்ளவும். 

3. அடி கனமான ஒரு பாத்திரத்தில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி சர்க்கரையை போட்டு கம்பி பாகு வரும் வரை கொதிக்க விடவும். 

4. சர்க்கரை பாகு வைத்த உடனே பாகில் சிறிது சிறிதாக மாவையும் நெய்யையும் சேர்த்து கட்டி விழாமல் கிளறவும். அடுப்பை லோப் பிளேமில் வைத்து தான் மாவை பாகில் இட்டு கிளற வேண்டும். 

5.இப்படியே மாவையும் நெய்யையும் மாறி மாறிச் சேர்த்து கிளறவும். 

6. நெய்யுடன் மாவு பொங்கி வரும் சமயத்தில் அடுப்பை ஆஃப் செய்து மீதமுள்ள நெய்யையும் சேர்த்து கலந்து நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்த தாராஸ் கிச்சன் ஸ்டைலில் நெய் மைசூர் பாகு ரெடி. 

7. மைசூர் பாகு ஆறியதும் உங்களுக்கு பிடித்த வடிவத்தில் துண்டுகள் இட்டு முந்திரி பாதாம் பிஸ்தா தூவி கொடுக்கலாம் பிரண்ட்ஸ். 

8. இந்த மைசூர் பாகு வாயில் வைத்ததும் கரைந்துவிடும். 

பி.ற கு:

நெய் அதிகம் வேண்டாம் என்றால் குறைத்துக் கொள்ளலாம்.

பால் பேடா எப்படி?

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

பால் பேடா எப்படி? 


தேவையான பொருட்கள் :

கெட்டியான பால் - 200 கிராம்
பால் பவுடர் - 3/4 கப்
நெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
குங்குமப் பூ - 3-4


செய்முறை:

அடுப்பில் கடாயை வெச்சு மிதமான சூட்டில் நெய் சேர்த்துக்கோங்க.. அது கூட பால் பவுடர், கெட்டியான பாலை சேர்த்துக்கோங்க.... 2-3 நிமிசம் நல்லா கிளறிவிடுங்க.. அடி பிடிக்காம கவனமா இருக்கணும்..

அது கூட ஏலக்காய் பொடி சேர்த்துக்கோங்க.... (உங்களுக்கு பிடிச்சா ஏலக்காய் பொடி சேர்த்துக்கோங்க). நல்லா கிளறி விட்டு பாத்திரத்தில பக்கவாட்டில ஒட்டாம பார்த்துக்கோங்க. பால் கெட்டியாகி கோவா போல திரண்டு வரும். சீக்கிரமா அடிபிடிச்சிடும். அதனால கைவிடாம கிண்டிகிட்டே இருங்க. முடிஞ்ச அளவுக்கு அடி கனமான Non - Stick கடாய் பயன்படுத்துங்க. சரியான பதம் வந்ததும் அடுப்பை அனைச்சுட்டு 5-10 நிமிசம் நல்லா ஆற வெச்சுடுங்க...

இந்த நேரத்துல இது கூட குங்குமப் பூ சேர்த்துக்கோங்க.... 

உங்களோட உள்ளங்கைல வெச்சு சின்ன சின்ன பந்து உருண்டைகளா உருட்டிட்டு, அப்படியே பேடா வடிவத்துல தட்டிக்கோங்க.

நீங்க விருப்பபட்டால் பேடா நடுவில காஞ்ச திராட்சை வெச்சுக்கலாம்...

அப்படியே ஒரு தட்டுல நீங்க செஞ்ச பேடாவ வரிசையா அடிக்கி வெச்சி பாருங்க... இதையெல்லாம் நீங்களா செஞ்சீங்கன்னு ஆச்சர்யமா இருக்கும்.

கப்கேக் செய்வது எப்படி......?

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

கப்கேக் செய்வது எப்படி......?

தேவையான பொருட்கள்:

வெண்ணெய் - 100 கிராம்
பொடித்த சீனி - 100 கிராம்
முட்டை - 2
மைதா மாவு - 200 கிராம்
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
ரோஸ் எஸென்ஸ் - 1 தேக்கரண்டி
பேப்பர் கேஸ் - 25

செய்முறை:

மாவையும் பேக்கிங் பவுடரையும் 3 தடவைகள் சலிக்கவும்.

வெண்ணெயையும் சீனியையும் நன்கு அடிக்கவும்.

முட்டைகளை நன்கு அடித்து எஸென்ஸ் கலந்து மறுபடியும் சற்று கலக்கவும்.

வெண்ணெய்க் கலவையில் சிறிது சிறிதாக முட்டையைக் கலந்தவாறே அடிக்கவும்.

பிறகு மாவை சிறிது சிறிதாகக் கலக்கவும்.

கலவை சற்று கெட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து சிறிது தளர வைத்துக் கொள்ளவும். கொட்டும் நிலை ஆக இருக்க வேண்டும்.

பேப்பர் கேஸ்களில் பாதியளவு ஊற்றி 160 டிகிரி C அளவில் சூடுபடுத்தப்பட்ட காஸ் அவனில் வைத்து 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.

உளுந்து முறுக்கு செய்வது எப்படி...?

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

உளுந்து முறுக்கு செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:

½ கப் வெள்ளை உளுத்தம் பருப்பு

2 கப் அரிசி மாவு

2 டீஸ்பூன் நெய்

2 தேக்கரண்டி உப்பு

2 தேக்கரண்டி எள் விதைகள்

½ தேக்கரண்டி அசாஃபோடிடா

ஆழமாக வறுக்க எண்ணெய்


செய்முறை:

உளுத்தம் பருப்பைக் கழுவி, பிரஷர் குக்கரில் எடுத்து வைக்கவும். 2 கப் தண்ணீரில் மூடி வைக்கவும். பிரஷர் குக் 3 விசில். பிரஷர் வெளியானதும் குக்கரைத் திறந்து, அதிகப்படியான தண்ணீர் இருந்தால் வடிகட்டவும். குளிர்விக்க ஒதுக்கி வைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் எடுத்து மிருதுவாகும் வரை ப்யூரி செய்யவும்.

துருவிய உளுத்தம் பருப்பு கலவையை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். உப்பு, எள் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது அரிசி மாவு, நெய் சேர்த்து உங்கள் கைகளால் நன்கு கலக்கவும். மாவு காய்ந்ததாகத் தோன்றினால் பருப்பு வேகவைத்த தண்ணீரை சிறிது சிறிதாக சேர்க்கலாம். மென்மையான மாவை பிசையவும்.

முறுக்கு அழுத்தி மாவை வைத்து சிறு முறுக்கு செய்யவும். சூடான எண்ணெயில் முருக்கை இறக்கி, எண்ணெயில் குமிழ்கள் குறையும் வரை வறுக்கவும். மிருதுவாக இருக்கும் வரை ஆழமாக வறுக்கவும். சில பேப்பர் டவலில் துளையிட்ட கரண்டியைப் பயன்படுத்தி முருக்கை வடிகட்டவும், அதை முழுமையாக குளிர்விக்கவும்.

காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும்.

கார்ன்பிளார் அல்வாசெய்வது எப்படி....?

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

கார்ன்பிளார் அல்வா
செய்வது எப்படி....?

தேவையான பொருட்கள்:

சோளமாவு - ஒரு கோப்பை
சர்க்கரை - 2 கோப்பை
பால் - 3 கோப்பை
ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
கேசரி கலர் - 2 சிட்டிகை
முந்திரி - 25 கிராம்
திராட்சை - 25 கிராம்
நெய் - 100 கிராம்


செய்முறை:

1. ஒரு அகன்ற பாத்திரத்தில் பால், சர்க்கரை, சோளமாவு சேர்த்து நன்றாக கட்டி விழாமல் கலக்கவும்.

2. அதனுடன் கேசரி கலர் சேர்த்து கலக்கவும்.

3. முந்திரி, திராட்சையை சிறிது நெய் விட்டு தனியே பொன்நிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.

4. வாணலியில் சோளமாவுக் கலவையைக் கொட்டி அடுப்பில் வைத்து அடிபிடிக்காமல் கிளறவும்.

5. கலவை திரண்டு கெட்டியாக வரும்போது ஏலக்காய் பொடியைச் சேர்க்கவும்.

6. பின்னர் இக்கலவையுடன் சிறிது சிறிதாக நெய் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

7. ஊற்றிய நெய் மேலே திரண்டு வரும் போது வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

8. ஒரு தட்டில் நெய் தடவி, அடுப்பிலிருந்து இறக்கிய கலவையை அதில் கொட்டி, ஆறியபின் வேண்டிய வடிவில் துண்டுகளாக்கவும்.

மைசூர்பாகு செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

மைசூர்பாகு


தேவையானவை
கடலை மாவு - 100 கிராம், சர்க்கரை - 300 கிராம், 
நெய் - 200 கிராம் (வெண்ணெயைக் காய்ச்சி பயன்படுத்தினால் சுவை கூடும்).

செய்முறை
அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கரையவிடவும். வேறொரு அடுப்பில் நெய்யை சூடாக்கிக்கொள்ளவும். சர்க்கரை கரைந்து முத்து பாகு பதம் வந்தவுடன் ஒரு கை கடலை மாவு, சிறிது சூடான நெய் என ஒன்று மாற்றி மாற்றி சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை பூத்து (பொற பொற என்று) வருகையில் இறக்கி, நெய் தடவிய டிரேயில் கொட்டி, சிறிது சூடாக இருக்கையில் வில்லைகள் போடவும்.

குறிப்பு
கலவையில் சிறிது சமையல் சோடா சேர்த்தால், கூடு கூடாக (தேன் கூடுபோல்) மைசூர்பாகு வரும்.

காராபூந்தி செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

காராபூந்தி


தேவையானவை
வீட்டில் அரைத்த கடலை மாவு - 200 கிராம்,
அரிசி மாவு - 2 டீஸ்பூன், 
சமையல் சோடா - ஒரு சிட்டிகை, வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை
கடலை மாவு, உப்பு, அரிசி மாவை ஒன்றுசேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூந்தி கரண்டியில் மாவை விட்டு, எண்ணெயில் விழும்படி தேய்த்து சிவக்க பொரித்துக் கொள்ளவும். இத்துடன் பொரித்த வேர்க்கடலை, மிள காய்த்தூள் சேர்க்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து நன்கு கசக்கி இந்தக் கலவையுடன் சேர்ந்து நன்றாக குலுக்கிவிட்டால், மொறுமொறு காராபூந்தி தயார். இதை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.

இஞ்சி முரப்பா செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

இஞ்சி முரப்பா


தேவையானவை
சுக்குப் பொடி - 50 கிராம், சர்க்கரை - 100 கிராம், 
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை
சர்க்கரையில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து கொதிக்கவிடவும். பாகு பூத்து வருகையில் சுக்குப் பொடி, நெய் விட்டு நன்கு கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, வில்லைகள் போடவும்.

குறிப்பு
சுக்குப் பொடி கடைகளில் கிடைக்கும். கிடைக்காதபட்சத்தில் சுக்கு வாங்கி, நன்கு நசுக்கி, மிக்ஸியில் பொடித்து, சலித்து உபயோகப்படுத்தவும். பட்சணங்கள் அதிகமாக சாப்பிடும்போது ஏற்படும் வாயுத்தொல்லைக்கு இது நல்ல நிவாரணம் அளிக்கும்.

பாம்பே காஜா செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

பாம்பே காஜா


தேவையானவை
மைதா மாவு - 150 கிராம், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - கால் கிலோ, 
கலர் கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், 
உப்பு - ஒரு சிட்டிகை, 
கேசரி கலர் - சிறிதளவு.

செய்முறை
மைதா, உப்புடன் நீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு போல் பிசைந்து மெல்லியதாக சிறிய அப்பளம் போல் இடவும். இதை பாதியாக மடித்து, மீண்டும் அதை பாதியாக மடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் விட்டு, இரட்டை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, கேசரி கலர், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பொரித்த காஜாவை இதில் அழுத்தி தோய்த்து எடுத்து தட்டில் வைத்து, கலர் கொப்பரை தூவவும்.

கோதுமை அல்வா செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

கோதுமை அல்வா


தேவையானவை
கோதுமை மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், 
கேசரி கலர் - சிறிதளவு, 
நெய் - 100 கிராம், 
எண்ணெய் - 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி, வெள்ளரி விதை - தலா ஒரு டீஸ்பூன், 
பால் - ஒரு கப்

செய்முறை
நெய் - எண்ணெயை ஒன்றுசேர்க்கவும். கோதுமை மாவுடன் கேசரி கலர், பால், சிறிதளவு நீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சர்க்கரையில் அரை கப் நீர்விட்டு கரைத்து கொதிக்கவிடவும். நுரை பொங்கி வருகையில் கரைத்த கோதுமை மாவு சேர்த்து கைவிடாது கிளறவும். அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவைவிட்டுக் கிளறி, ஒட்டாத பதம் வரும்போது இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டி கொட்டி, மேலே வறுத்த முந்திரி, வெள்ளரி விதையால் அலங்கரிக்கவும். ஆறியபின் துண்டுகள் போடவும்.

மோகன் தால் செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

மோகன் தால்


தேவையானவை
கடலை மாவு - 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், சர்க்கரையில்லாத கோவா - 50 கிராம்,
நெய் - முக்கால் கப், 
வறுத்த முந்திரி - சிறிதளவு, குங்குமப்பூ - சில இதழ்கள்

செய்முறை: 
நெய்யை சூடாக்கி கடலை மாவு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுத்து, கோவாவை உதிர்த்து சேர்க்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சி... கடலை மாவு - கோவா கலவையை சேர்த்து நன்கு கிளறவும். ஓரங்களில் ஒட்டாது வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, வறுத்த முந்திரி, குங்குமப்பூவால் அலங்கரித்து விரும்பிய வடிவில் வில்லைகள் போட... மோகன் தால் ரெடி!

குறிப்பு
செய்முறை மைசூர்பாகு போல் இருப்பினும், கோவா சேர்ப்பதனால் மிகவும் சாஃப்ட்டாக இருக்கும் மோகன் தால்.

பாதாம் டிலைட் செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

பாதாம் டிலைட்


தேவையானவை:  
மைதா மாவு - 200 கிராம், 
பாதாம் துருவல் - 100 கிராம் (தோல் நீக்கி துருவியது), பொடித்த சர்க்கரை - 75 கிராம், கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், 
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - அரை கிலோ,
நெய் - ஒரு டீஸ்பூன், 
உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை
மைதா, உப்பு, நெய் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, நீர்விட்டு, சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசையவும். பாதாம் துருவல், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பொடித்த சர்க்கரை ஆகியவற்றை நன்கு கலந்து பூரணம் தயாரிக்கவும். பிசைந்த மைதாவை சிறிய பூரிகளாக இட்டு நடுவில் ஒரு டீஸ்பூன் பாதாம் பூரணம் வைத்து நன்கு குவித்து உருட்டி, மீண்டும் பூரியாக இட்டு, சூடான எண்ணெயில் (மிதமான தீயில்) பொரித்து எடுக்கவும்.

தேன்குழல் செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

தேன்குழல்


தேவையானவை
பச்சரிசி (தண்ணீரில் கழுவி, நிழலில் உலர்த்தியது) - 400 கிராம், 
முழு உளுந்து - 100 கிராம் (சிவக்க வறுக்கவும்), 
சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - அரை கிலோ.

செய்முறை
அரிசியுடன் வறுத்த உளுந்து சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்து சலிக்கவும். மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், ஒரு கரண்டி சூடான எண்ணெய் விட்டு, சிறிதளவு நீரும் சேர்த்துப் பிசைந்து, தேன்குழல் பிடியில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

மகிழம்பூ முறுக்கு செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

மகிழம்பூ முறுக்கு
 

தேவையானவை
பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து, நிழ லில் உலர்த்தியது) - 300 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், 
உப்பு - தேவையான அளவு, 
எண் ணெய் - கால் கிலோ, பெருங் காயத்தூள் - சிறிதளவு, காய்ச்சிய எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:  
பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து, ஆறவிட்டு, அரிசியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இத்துடன் காய்ச்சிய எண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு பிசையவும். மாவை முள்ளு முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் முறுக்காக பிழியவும். சிவந்த பின் எடுக்கவும்.

சீப்பு ரோல்ஸ் செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

சீப்பு ரோல்ஸ்


தேவையானவை
பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தியது) - 300 கிராம், பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை - தலா 50 கிராம், 
தேங்காய்ப்பால் - கால் கப், வெண்ணெய் - 2 டீஸ்பூன், 
உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த் தூள் - தேவையான அளவு, 
தேங்காய் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை
பாசிபருப்பை வறுத்து, அரிசி, பொட்டுக்கடலையுடன் சேர்த்து மாவாக்கிக்கொள்ளவும். மாவுடன் வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறவும். பிறகு, தேங்காய்ப்பால், தேவையான நீர் விட்டுப் பிசையவும். நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து சிப்ஸ் தேய்க்கும் கட்டை / எவர்சில்வர் சிப்ஸ் கட்டரின் பின்புறம் (வரிவரியாக இருக்கும்) மாவை அழுத்தி தேய்த்து உருட்ட, சங்கு போல் சுருண்டு வரும். இதை சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால்.. மணம் மிக்க, ருசியான சீப்பு ரோல்ஸ் தயார். சோழி வடிவத்தில் இருக்கும் இது, சீப்பு சீடை என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர் செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர்


தேவையானவை
கெட்டி அவல் - 200 கிராம், பொடித்த சர்க்கரை - 3 டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் - தலா 25 கிராம், 
வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன், 
நறுக்கிய கொப்பரைத் துண்டுகள் - சிறிதளவு (நெய்யில் வறுக்கவும்),  
எண் ணெய் - 250 கிராம், 
நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை
அவலை சுத்தம் செய்து, எண்ணெயில் (நிறம் மாறாது) பொரித்து, டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் நீக்கவும். 2 டீஸ்பூன் நெய்யில் பொடித்த சர்க்கரையை கரையவிட்டு அடுப்பை அணைத்து, அவல் உள்ளிட்ட மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளற... ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர் ரெடி.

குறிப்பு: நெய் - சர்க்கரை கலந்த சூடான கலவையில் மற்றவற்றைப் போட்டால்தான் இனிப்பு சுவை நன்கு கிடைக்கும். இல்லாவிட்டால், மிக்ஸர் அவ்வளவு இனிப்பாக இருக்காது.

ஜாங்கிரி செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

ஜாங்கிரி


தேவையானவை
முழு உளுந்து - 200 கிராம், 
அரிசி - ஒரு டீஸ்பூன், 
சர்க்கரை - 300 கிராம், 
கேசரி கலர் அல்லது மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, 
ஏலக்காய் எசன்ஸ் அல்லது ரோஸ் எசன்ஸ் - சில துளிகள், சீவிய முந்திரி - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை
உளுந்தை களைந்து அரிசியுடன் அரை மணி ஊறவிட்டு கிரைண்டரில் பொங்க பொங்க அரைத்து (கெட்டியாக), ஃபுட் கலர் சேர்க்கவும். சர்க்கரையுடன், அது கரையும் அளவு நீர் விட்டு, பிசுக்கு பதத்தில் பாகு காய்ச்சி, அகலமான பேசின் அல்லது தாம்பாளத்தில் ஊற்றி, எசென்ஸ் சேர்க்கவும்.

துணி / பால் கவரில் சிறிய துளையிட்டு மாவு நிரப்பி, சூடான எண்ணெயில் ஜாங்கிரியாக பிழிந்தெடுத்து, ரெடியாக இருக்கும் சர்க்கரைப் பாகில் சேர்த்து, 10 நிமிடம் ஊறிய பின் எடுத்துவிடவும். சீவிய முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.

ஓமப்பொடி செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

ஓமப்பொடி


தேவையானவை
கடலை மாவு (கடலைப்பருப்பை வெயிலில் உலர்த்தி மாவாக்கியது) - அரை கிலோ, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு, 
பச்சரிசி மாவு - 100 கிராம், 
ஓமம் - 2 டீஸ்பூன் (மிக்ஸியில் நீர்விட்டு அரைத்து வடிகட்டவும்), எண்ணெய் - அரை கிலோ.

செய்முறை
கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் (எண்ணெய் நீங்கலாக) சிறிது நீர் விட்டு பிசைந்து, ஓமப்பொடி அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால், சிறிதளவு மிளகாய்த்தூள் மிளகுத்தூள் சேர்த்து செய்யலாம்.

ரவா லட்டு செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

ரவா லட்டு


தேவையானவை
வறுத்துப் பொடித்த ரவை - கால் கிலோ, 
பொடித்த சர்க்கரை - கால் கிலோ, நெய் - 200 கிராம், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு.

செய்முறை
நெய் தவிர பிற பொருட்களை கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு உருண்டைகள் பிடிக்கவும்.

டூ இன் ஒன் லட்டு செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

டூ இன் ஒன் லட்டு


தேவையானவை:
பொட்டுக்கடலை மாவு - 100 கிராம், 
பாசிபருப்பு - 100 கிராம் (வறுத்து அரைக்கவும்), 
பால் பவுடர் - 50 கிராம், 
பொடித்த சர்க்கரை - 200 கிராம், நெய் - 150 கிராம், 
வறுத்த முந்திரி - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை
நெய் தவிர மற்ற பொருட்களை நன்கு கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு விரும்பிய அளவில் லட்டுகள் பிடிக்கவும்.

கேஷ்யூ ஃப்ரை செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

கேஷ்யூ ஃப்ரை


தேவையானவை
பாதியாக இருக்கும் முந்திரி - 200 கிராம், 
கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு (சேர்த்து) - அரை கப், 
ஒன்றிரண்டாக நசுக்கிய இளம் இஞ்சி - பச்சை மிளகாய் (சேர்த்து) - ஒரு டீஸ்பூன், 
இளம் கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, 
நெய் - 2 டீஸ்பூன், 
உப்பு - சிறிது,
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ.

செய்முறை
ஒரு பெரிய பேஸினில் மாவு வகைகள், முந்திரி, கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்த்தூள், நசுக்கிய இஞ்சி - பச்சை மிளகாய், உருக்கிய சூடான நெய் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்துப் பிசிறவும் (பிசையக் கூடாது). எண்ணெயை சூடாக்கி, மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு, சிவக்க பொரித்து எடுக்கவும்.

டபுள் கலர் மைதா கேக் செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

டபுள் கலர் மைதா கேக்


தேவையானவை
மைதா - 150 கிராம், 
சர்க்கரை - 250 கிராம், 
நெய் அல்லது வனஸ்பதி - 100 கிராம், 
பச்சை ஃபுட் கலர் - சிறிதளவு, வெனிலா எசென்ஸ் - சில துளிகள், 
பால் பவுடர் - 50 கிராம்,

செய்முறை
நெய் (அ) வனஸ்பதியை வாணலியில் நன்கு சூடாக்கிக்கொள்ளவும். மைதா, பால் பவுடரை சேர்த்து நன்கு சலித்து, உருக்கிய நெய் / வனஸ்பதியில் விட்டு, இட்லி மாவு பதத்தில் தயாரித்துக்கொள்ளவும். இதை இரண்டு சரிபாகமாக பிரிக்கவும். சர்க்கரையில் பாதி அளவு எடுத்து சிறிதளவு நீர்விட்டுக் காய்ச்சி, நன்கு நுரைத்து வருகையில் பாதி மைதா மாவு கலவை சேர்த்து நன்கு கிளறவும். இது இறுகி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பவும்.

மீதி சர்க்கரையுடன் சிறிதளவு நீர் விட்டு, பச்சை ஃபுட் கலர் சேர்த்து நுரைத்து வரும்போது, மீதி உள்ள மைதா கலவை சேர்த்து நன்கு கிளறி, இறுகும்போது வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். இதை நெய் தடவிய தட்டில் இருக்கும் மைதா கலவை மீது நன்கு பரவலாக சேர்த்து, சமன் செய்து, லேசாக சூடு இருக்கையில் விரும்பிய வடிவில் வில்லைகள் போடவும்.

பாதுஷா செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

பாதுஷா 

தேவையானவை
மைதா - 200 கிராம், 
சர்க்கரை - 300 கிராம்,
உப்பு, சமையல் சோடா - தலா ஒரு சிட்டிகை, 
எண்ணெய் - கால் கிலோ, 
நெய் - ஒன்றரை டீஸ்பூன், 
பால் - ஒரு டீஸ்பூன்,
கலர் கொப்பரை துருவல் - சிறிதளவு, 
ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்.

செய்முறை:  
உப்பு, சமையல் சோடாவை ஒன்றரை டீஸ்பூன் நெய்யில் நன்கு நுரைக்க தேய்த்து, இதில் மைதா மாவு, சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, பெரிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து, தட்டி, சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு சூடாக்கி, நுரைக்கையில் பால் விட்டு அழுக்கு நீக்கவும். பிசுக்கு பதத்துக்கு பாகு வந்ததும் எசன்ஸ் சேர்த்து இறக்கவும். பொரித்த பாதுஷாவை பாகில் முக்கி எடுத்து, கலர் கொப்பரை துருவல் தூவவும். கலர் கொப்பரை கிடைக்காவிட்டால் முழு முந்திரியை சீவி அலங்கரிக்கலாம்.

காரா சேவ் செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

காரா சேவ்


தேவையானவை
கடலை மாவு - 200 கிராம், பச்சரிசி மாவு - 50 கிராம், மிளகுத்தூள் - சிறிதளவு, 
உப்பு - தேவையான அளவு, 
ஓமம் - சிறிதளவு, 
எண்ணெய் - கால் கிலோ, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.

செய்முறை
கடலை மாவு, பச்சரிசி மாவு, மிளகுத்தூள், உப்பு, ஓமம் ஆகியவற்றுடன் 2 டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நீர்விட்டு கெட்டியாக பிசையவும். எண்ணெயைச் சூடாக்கி, மாவை காராசேவ் கரண்டியில் போட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, பொரித்து எடுக்கவும்.

இதன் கலர் சிவக்காது மஞ்சளாகத்தான் இருக்கும். மிளகாய்த்தூள் சேர்த்தால் காராசேவ் சிவக்கும்.

பாதாம் மில்க் அல்வா செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

பாதாம் மில்க் அல்வா


தேவையானவை
பாதாம் பருப்பு - 100 கிராம், 
பால் - 100 மில்லி, 
சர்க்கரை - 150 கிராம், 
பாதாம் எசன்ஸ் - சில துளிகள், மஞ்சள் ஃபுட் கலர் - அரை சிட்டிகை, 
நெய் - 50 கிராம்.

செய்முறை
பாலை கொதிக்கவிட்டு, ஆறவைக்கவும். பாதாம் பருப்பை 2 மணி நேரம் ஊறவிட்டு, தோல் நீக்கி, பாலுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து பாதாம் - பால் விழுது, சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்து கரையவிடவும். அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறி, கலவை ஒட்டாத பத்தில் வரும்போது பாதாம் எசன்ஸ் சேர்த்து இறக்கவும்

குறிப்பு: அளவு அதிகமாக தேவைப் பட்டால், சிறிதளவு வறுத்த வேர்க்கடலை யையும் பாலுடன் ஊறவிட்டு அரைத்து சேர்த்துச் செய்யலாம்.

பந்தர் லட்டு செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

பந்தர் லட்டு  


தேவையானவை
கடலை மாவு - 200 கிராம்,
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,
நெய் - 100 கிராம்,
பொடித்த சர்க்கரை - 150 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து, நீர் விட்டு பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழியவும். முக்கால் பாகம் வெந்து வருகையில் எடுத்து ஆறவிட்டு மிக்ஸியில் பொடி செய்யவும். நெய்யை சூடாக்கி பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பொடித்த முறுக்கு சேர்த்துக் கலந்து, உருண்டை பிடிக்கவும்.

ஆந்திராவில் உள்ள பந்தர் எனும் ஊர் இந்த லட்டுக்கு மிகவும் பிரசித்தம் பெற்றது.

டிரை ஃப்ரூட் அல்வா செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

டிரை ஃப்ரூட் அல்வா

தேவையானவை
விதை நீக்கிய பேரீச்சை - 100 கிராம், 
கர்ஜூர் - 8 (விதை நீக்கியது), நெய் - 100 கிராம், 
எண்ணெய் - 50 மில்லி, 
சர்க்கரை - 250 கிராம், 
டூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம், முந்திரி, திராட்சை - தலா 25 கிராம், 
வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்.

செய்முறை
பேரீச்சை, கர்ஜூர் இரண்டையும் முதல் நாள் இரவே மூழ்கும் அளவு நீர் விட்டு ஊறவைத்து, மறுநாள் அந்த நீருடன் நைஸாக அரைக்கவும். நெய் - எண்ணெயை ஒன்றாக சேர்க்கவும். வாணலியில் சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்து கிளறவும் (முதலில் அது இளகும். பயப்பட வேண்டாம்). அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவை சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் வரும்போது முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து இறக்கவும்.

நவதானிய அப்பம் செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

நவதானிய அப்பம்


தேவையானவை:  
நவதானிய மாவு - ஒரு கப், 
ரவை - ஒரு கப், 
ஆச்சி பாதாம் மிக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், 
பால் - ஒரு கப், 
சர்க்கரை - ஒரு கப், 
எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

செய்முறை
நவதானிய மாவு, ரவை, சர்க்கரை, பால் எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் கரைத்து, அத்துடன் ஆச்சி பாதாம் மிக்ஸ் பவுடரையும் கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, ஆப்பச்சட்டியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, மாவு விட்டு சின்னச் சின்ன அப்பங்களாக சுட்டு எடுத்து, மேலே சிறிதளவு சர்க்கரை தூவிப் பரிமாறவும்.

அப்பம் சாஃப்ட்டாக இருக்க வேண்டு மானால், ஒரு வாழைப்பழத்தை மசித்து மாவில் சேர்க்கலாம்.

அசோகா செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

அசோகா


தேவையானவை
பாசிப்பருப்பு (மசிய வேகவிட்டது) - 100 கிராம், 
கோதுமை மாவு - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 200 கிராம், 
நெய் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு, பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:  
சிறிதளவு நெய்யில் கோதுமை மாவை சிவக்க வறுத்து, பால் பவுடர் சேர்த்து வைத்துக்கொள்ளவும். அடிகனமான வாணலியில் சர்க்கரையை சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு, கரைந்தவுடன் வேகவைத்த பாசிப்பருப்பு, கோதுமை மாவு கலவையைச் சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் இருக்க நெய் ஊற்றிக்கொண்டே கிளறவும். கலவை திரண்டு வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.

டெசிகேட்டட் கோகோனட் பர்ஃபி செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

டெசிகேட்டட் கோகோனட் பர்ஃபி

தேவையானவை: 
டெசிகேட்டட் கோகோனட் (உலர்ந்த தேங்காய்த் துருவல் - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், 
பால் பவுடர் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 கிராம்.

செய்முறை: 
ஏலக்காய்த்தூள் தவிர பிற பொருட்களை ஒன்றாக சேர்த்து வாணலியில் போட்டு, நன்றாக கரைந்து சுருள பூத்து வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தவும். சற்று சூடாக இருக்கும்போதே வில்லைகள் போடவும். பால் பவுடர் சேர்ப்பதனால் இந்த பர்ஃபி மிருதுவாகவும் அதிக வெள்ளையாகவும் இருக்கும்.

இதை 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

சன்னா தால் ஃப்ரை செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

சன்னா தால் ஃப்ரை

தேவையானவை:  
கடலைப் பருப்பு - 200 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள் - தேவையான அளவு, 
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,
உப்பு - சிறிதளவு.

செய்முறை: 
கடலைப்பருப்பை கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, நிழலில் உலர்த்தவும். உலர்ந்த பிறகு கடலைப்பருப்பை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்க வும். மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

மூங்தால் ஃப்ரை செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

மூங்தால் ஃப்ரை


தேவையானவை: 
பாசிப்பருப்பு - 200 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் - தேவையான அளவு, 
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,
உப்பு - சிறிதளவு.

செய்முறை: 
பாசிப்பருப்பைக் கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, ஈரம் போக நிழலில் உலர்த்தி எடுக்கவும். இதனை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்கவும். மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும்.

இது ஒரு மாதம் வரை கெடாது.

உக்காரை செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

உக்காரை


தேவையானவை: கடலைப்பருப்பு - 200 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், வெல்லம் - 250 கிராம், 
நெய் - 100 கிராம், 
வறுத்த முந்திரி - 25 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: 
கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு, ரவை ரவையாக அரைத்து (நீர்விடக் கூடாது) வழித்தெடுக்கவும். வெல்லத்தை ஒரு கரண்டி (50 மில்லி) நீர் விட்டு கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு சூடானதும் அரைத்த பருப்பு சேர்த்துக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). வெந்த பின்பு வெல்லக் கரைசல் சேர்த்து கட்டிதட்டாமல், அடிபிடிக்காமல் நன்கு உதிராக வரும் வரை கைவிடாது கிளறி இறக்கி, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்க்கவும்.

தேங்காய் சுகியன் செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

தேங்காய் சுகியன்

தேவையானவை: 
தேங்காய்த் துருவல் - ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், 
நெய் - ஒரு டீஸ்பூன்,
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

மேல் மாவுக்கு: 
தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தி அரைத்த பச்சரிசி மாவு - 100 கிராம், உளுத்தமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: 
வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய், அரிசி மாவு சேர்த்து பூரணமாக கிளறி இறக்கி, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைத்துக்கொள்ளவும். பூரண உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: அதிக சூட்டில் பொரித்தால், பூரணம் கரைந்து எண்ணெயில் சிதறிவிடும்.

கடலைப்பருப்பு சுய்யம் செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

கடலைப்பருப்பு சுய்யம்


தேவையானவை: கடலைப்பருப்பு (மெத் தென்று வேகவிட்டது) - 100 கிராம், 
பாகு வெல்லம் - 100 கிராம், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், முந்திரித்தூள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ

மேல்மாவுக்கு: 
மைதா மாவு - 75 கிராம், 
அரிசி மாவு - 2 டீஸ்பூன், 
உப்பு - ஒரு சிட்டிகை, 
மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.


செய்முறை: 
வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும். கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், வெல்லக் கரைசல் ஆகியவற்றை மிக்ஸியில் மைய அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரித்தூள் சேர்த்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவுக்கான பொருட்களை, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூரண உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து பொரித்தெடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).

லட்டு செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்

லட்டு செய்முறை

தேவையானவை: 
கடலை மாவு - 200 கிராம், சர்க்கரை - 350 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, 
முந்திரி, திராட்சை - தலா 20, லவங்கம் - 8,
டைமண்ட் கல்கண்டு - 15, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, முழு ஏலக்காய் - 5, 
பால் - ஒரு டீஸ்பூன், 
கேசரி கலர் - சிறிதளவு.


செய்முறை: 
சர்க்கரையில் 50 மில்லி நீர்விட்டு சூடாக்கவும். கொதிக்கும்போது பால் விட்டு அழுக்கு நீக்கி, கேசரி கலர் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும். கடலை மாவை நீர்விட்டு பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, மாவை லட்டு தேய்க்கும் கரண்டியில் விட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, முத்து முத்தாகப் பொரித்து பாகில் சேர்க்கவும். முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை பொரித்து முழு ஏலக்காய், டைமண்ட் கல்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்து, சர்க்கரை பாகு - பூந்தி கலவையில் கொட்டிக் கிளறவும். கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும்.

குறிப்பு: கடலைப்பருப்பை வெயிலில் காயவைத்து, மெஷினில் அரைத்தால்தான் லட்டு சூப்பர் சுவையில் அசத்தும். செய்து வைத்த பாகு உறைந்து கெட்டியாகிவிட்டால் கவலை வேண்டாம். லேசாக சுடவைத்தும் லட்டு பிடிக்கலாம்.

வியாழன், 24 அக்டோபர், 2024

நெய்யப்பம் செய்யும் முறை

சுவையான தீபாவளி பலகாரங்கள்
நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படும் தீபாவளியை மேலும் தித்திப்பாக கொண்டாடுவதற்காக இதோ அசத்தும் சுவையான தீபாவளி பலகாரங்கள்.

நெய்யப்பம்

தேவைப்படும் பொருட்கள்
அரிசி மாவு, கோதுமை மாவு, பழுத்த வாழைப்பழம், நறுக்கிய தேங்காய் துண்டுகள், ஏலக்காய் பொடி, வறுத்த எள், நெய், எண்ணெய்.

செய்முறை
நறுக்கிய தேங்காய் துண்டுகளை நெய்யில் பொன்னிறம் வரும் வரையில் வறுக்கவும்.
அதன் பின்பு வெல்ல பாகு காய்ச்சி எடுத்து வைக்கவும்.
பழுத்த வாழைப்பழத்தை நன்கு பிசைந்து அரைத்து கொள்ளவும்.
இப்போது அரிசி மாவையும் கோதுமை மாவையும் ஒரு நிமிடத்திற்கு நிறம் மாறாமல் வறுக்கவும்.
ஓர் பெரிய பாத்திரத்தில் தயாரித்து வைத்துள்ள அரிசி மாவு, கோதுமை மாவு, வறுத்த தேங்காய் துண்டுகள், பிசைந்து அரைத்த வாழைப்பழம் ஆகியவற்றை இட்லி மாவின் பதத்திற்கு கெட்டியாக கலக்கவும்.
பின்பு அதனை அரை மணி நேரம் ஊறவைத்துவிட்டு அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு, வறுத்த எள், ஏலக்காய் பொடி போன்றவற்றை சேர்க்கவும். இப்போது நெய்யப்பத்திற்கான மாவு தயார்.
பணியார சட்டியை அடுப்பில் வைத்து அனைத்து குழியிலும் சிறிதளவு நெய் விடவும். தயாரித்து வைத்துள்ள மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும். அடுப்பை மெதுவாக எரித்தவாறு மாவின் இருப்பக்கத்தையும் பொன்னிறம் வரும் வரை வேகவைத்தால் சுவையான நெய்யப்பம் தயார்.

மடக்கு பூரி செய்யும் முறை

சுவையான தீபாவளி பலகாரங்கள்
நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படும் தீபாவளியை மேலும் தித்திப்பாக கொண்டாடுவதற்காக இதோ அசத்தும் சுவையான தீபாவளி பலகாரங்கள்.

மடக்கு பூரி


தேவைப்படும் பொருட்கள்
கோதுமை மாவு, துருவிய தேங்காய், சர்க்கரை, நெய், முந்திரி, எண்ணெய், உப்பு.


செய்முறை

முதலில், கோதுமை மாவு, நெய், தேவையான அளவு உப்பு அதனுடன் வெதுவெதுப்பான தண்ணீரை கலந்து பூரி தட்டும் பதத்திற்கு மாவை தயாரிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நன்கு உலர வைத்த துருவிய தேங்காய், சர்க்கரை, நொறுக்கிய முந்திரி ஆகியவற்றை கலக்கவும். துருவிய தேங்காய் ஈரப்பதமின்றி நன்கு உலர்ந்திருந்தால் பலகாரம் நீண்ட நாள் நன்றாக இருக்கும். இப்போது மடக்கு பூரி தயாரிப்பதற்கான பூரணம் தயார்.
சப்பாத்தி உருட்டியை பயன்படுத்தி பூரியை தயாரிக்கவும். தயாரித்து வைத்துள்ள பூரணத்தை பூரியினுள் வைத்து மடித்து விருப்பத்திற்கேற்ப ஓரங்களில் வடிவமைக்கவும்.
ஓர் கடாயில் எண்ணெய் ஊற்றி அதனை பொன்னிறம் வரும் வரையில் நன்கு பொரித்தெடுக்கவும்.
இப்போது குழந்தைகளுக்கு பிரியமான மடக்கு பூரி சுவைப்பதற்கு தயார்.

மதுர் வடை செய்யும் முறை

சுவையான தீபாவளி பலகாரங்கள்
நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படும் தீபாவளியை மேலும் தித்திப்பாக கொண்டாடுவதற்காக இதோ அசத்தும் சுவையான தீபாவளி பலகாரங்கள்.

மதுர் வடை


தேவைப்படும் பொருட்கள்
அரிசி மாவு, ரவை, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காய தூள், உப்பு.

செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவும், சிறிதளவு ரவையையும் சேர்த்து கலக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
இந்த கலவையை சூடான எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சப்பாத்தி மாவின் மென்மையான பதம் போன்று மாவை தயாரிக்கவும்.
தற்போது மாவு தயாரானவுடன் அதனை உருண்டை பிடித்து தட்டை போல் தட்டி கொள்ளவும்.
பின்பு வெங்காயம் பொன்னிறம் வருமளவிற்கு எண்ணெயில் நன்கு பொறிக்கவும். மிகவும் மொறுமொறுப்பாக வேண்டுமென்றால் நீண்ட நேரம் எண்ணெய்யில் பொரிக்கவும். தயாரித்த மதுர் வடையை பொருத்தமான தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

குல்கந்து ஜாமூன் செய்யும் முறை

சுவையான தீபாவளி பலகாரங்கள்
நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படும் தீபாவளியை மேலும் தித்திப்பாக கொண்டாடுவதற்காக இதோ அசத்தும் சுவையான தீபாவளி பலகாரங்கள்.

குல்கந்து ஜாமூன்


தேவைப்படும் பொருட்கள்
பிரட், குல்கந்து, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலக்காய் பொடி, எலுமிச்சை சாறு, நெய், எண்ணெய்.

செய்முறை
ஓர் சூடான கடாயில் தண்ணீர் ஊற்றி அதனுடன் சர்க்கரையை சேர்க்கவும். பின்பு அதனை நன்றாக கொதிக்கவிட்டு சிறிது நேரம் கழித்து அதில் ஏலக்காய் பொடி,குங்குமப்பூ, துளியளவு எலுமிச்சை சாறு போன்றவற்றை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.இப்போது இனிப்பு பாகு தயார்.
பிரட்டின் ஓரங்களை நீக்கி அதன் நடுப்பகுதியை மட்டும் பொடி செய்துகொண்டு அதனுடன் பால் சேர்க்கவும்.
பின்பு அதனை மெதுவான மாவின் பதத்திற்கு நன்றாக பிசையவும். இப்போது அதனை உருண்டை பிடித்து கொள்ளவும். சுவையான ஜாமூன் உருண்டைகள் தயார்.
இந்த உருண்டைகளுக்குள் சிறிதளவு குல்கந்து வைத்து மீண்டும் நன்கு உருட்டிக்கொள்ளவும்.
சூடான எண்ணெய் அல்லது நெய்யில் குல்கந்து உருண்டைகளை பொன்னிறம் வருமளவிற்கு நன்கு பொரிக்கவும்.
பொன்னிறமாக உருண்டைகள் பொரிந்தபின்பு அதனை தயாரித்து வைத்துள்ள இனிப்பு பாகில் அரை மணி நேரம் நன்கு ஊற வைக்கவும்.
இப்போது எச்சில் ஊறும் சுவையான குல்கந்து ஜாமூன் சுவைப்பதற்கு தயார்.

முந்திரி கொத்து செய்யும் முறை

சுவையான தீபாவளி பலகாரங்கள்
நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படும் தீபாவளியை மேலும் தித்திப்பாக கொண்டாடுவதற்காக இதோ அசத்தும் சுவையான தீபாவளி பலகாரங்கள்.

முந்திரி கொத்து


தேவைப்படும் பொருட்கள்
முழு பச்சை பாசி பயறு, வெல்லம், அரசி மாவு, துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய்.

செய்முறை
வெதுவெதுப்பான தண்ணீரில் வெல்லத்தை கொதிக்கவைத்து வெல்ல பாகு தயாரித்து கொள்ளவும்.
ஓர் சூடான கடாயில் பச்சை பாசி பயறை நன்கு வறுத்து சிறிது நேரம் கழித்து அதனை பொடியாக அரைக்கவும்.
பின்பு தேங்காயை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். அதில் அரைத்து வைத்துள்ள பாசி பயறு மற்றும் ஏலக்காய் பொடி போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது தயாரித்து வைத்துள்ள வெல்லப் பாகை மீண்டும் சூடுபடுத்தி அதனுடன் கலக்கி வைத்துள்ள பாசிப்பயறு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து, அவை அனைத்தும் வெல்ல பாகோடு சேறுமாறு நன்கு கலக்கவும்.
அவை நன்கு கலந்த பின்பு வெதுவெதுப்பான சூடுடன் இருக்கும் போதே அதனை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
பின்பு வேறு பாத்திரத்தில் அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு, ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் கலந்து இட்லி மாவின் அடுத்த நிலை பதத்திற்கு கலககவும்.
தயாரித்த உருண்டைகளை மாவில் முக்கி எடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி பொரித்தெடுக்கவும். கொத்தாக வேண்டுமென்றால் இரண்டு மூன்று உருண்டைகளை சேர்த்து ஒன்றாக பொரிக்கவும்.
நன்கு பொரிந்த பின்பு இனிப்பு கொத்துகளை பரிமாறவும். இதனை சிறிது நாட்கள் வைத்தும் சாப்பிடலாம்.

ஜவ்வரிசி லட்டு செய்யும் முறை

சுவையான தீபாவளி பலகாரங்கள்
நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படும் தீபாவளியை மேலும் தித்திப்பாக கொண்டாடுவதற்காக இதோ அசத்தும் சுவையான தீபாவளி பலகாரங்கள்.

ஜவ்வரிசி லட்டு


தேவைப்படும் பொருட்கள்
ஜவ்வரிசி, சர்க்கரை, மஞ்சள் தூள், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, நெய், முந்திரி.

செய்முறை
தேவையான ஜவ்வரிசியை ஓர் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
ஓர் கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரிகளை பொன்னிறமாக வறுத்து அதனை ஓர் தனி கிண்ணத்தில் எடுத்த்துக்கொள்ளவும்.
அதே கடாயில் மீண்டும் சிறிது நெய் ஊற்றி நன்கு ஊறிய ஜவ்வரிசி, சர்க்கரை சேர்த்து கட்டிப்படாமல் கிளறவும்.
அதனுடன் ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, மஞ்சள் தூள் போன்றவற்றை சேர்த்து கலக்கவும்.
நெய் ஊற்றி நெய் முழுவதும் வற்றும் அளவிற்கு நன்கு கலக்க வேண்டும்.
இப்போது வறுத்து வைத்துள்ள முந்திரிகளை சேர்த்துவிட்டு அடுப்பை அணைக்கவும்.
வெதுவெதுப்பான சூடு இருக்கும் போதே ஜவ்வரிசி கலவையை உங்களின் விருப்பத்திற்கேற்ற அளவில் உருண்டையாக லட்டு வடிவத்தில் உருட்டிக்கொள்ளவும்.
இப்போது தயாரித்த லட்டுகளின் மேல் ஓர் முந்திரியை வைத்து அலங்கரித்தால் தித்திக்கும் ஜவ்வரிசி லட்டு தயார். இது நான்கு நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும்.

ஆப்பிள் தேங்காய் பர்ஃபி செய்யும் முறை

சுவையான தீபாவளி பலகாரங்கள்
நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படும் தீபாவளியை மேலும் தித்திப்பாக கொண்டாடுவதற்காக இதோ அசத்தும் சுவையான தீபாவளி பலகாரங்கள்.

ஆப்பிள் தேங்காய் பர்ஃபி

தேவைப்படும் பொருட்கள்
தோல் அகற்றிய சீவிய ஆப்பிள், குளிர்ந்த துருவிய தேங்காய், சர்க்கரை, குங்குமப்பூ, நுணுக்கிய ஏலக்காய், உடைத்த பாதாம், முந்திரி, கிஸ்மிஸ், பிஸ்தா.

செய்முறை
கடாயில் சீவிய ஆப்பிள், துருவிய தேங்காய், சர்க்கரை, குங்குமப்பூ ஆகியற்றை சேர்த்து மெதுவான சூட்டில் நன்கு வதக்கவும்.
அனைத்தும் ஒன்றாக சுண்டி வதங்கிய பின்பு அதில் ஏலக்காய் பொடி, பாதாம், முந்திரி, கிஸ்மிஸ், பிஸ்தா போன்றவற்றை சேர்க்கவும்.
இந்த கலவை மெதுவான நீர் தன்மையின்றி வருமளவிற்கு நன்கு கலக்கவும். ஐந்து நிமிடத்திற்கு பின்பு அடுப்பை அணைத்து விடவும்.
இந்த கலவையை 3-4 இன்ச் உள்ள நெய் பரப்பிய சதுர தட்டில் அல்லது பாத்திரத்தில் ஊற்றி சிறிது நேரம் உலரவைத்து அதனை தட்டைக்கரண்டி கொண்டு நன்கு அமுக்கி பரப்பிவிடவும். இப்போது பர்ஃபி தயார்.
பின்பு பர்ஃபியை ஒரு இன்ச் சதுர வடிவமாக வெட்டவும். அதனை இரண்டு மணி நேரம் உலரவைத்தால் அதன் வடிவம் மாறாமல் கெட்டியான பதத்திற்கு வரும்.
இப்போது சதுரமாக நறுக்கிய பர்ஃபியை சதுர வடிவ பாத்திரத்தில் இருந்து எடுத்து பரிமாறவும்.

பூண்டு முறுக்கு செய்யும் முறை

சுவையான தீபாவளி பலகாரங்கள்
நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படும் தீபாவளியை மேலும் தித்திப்பாக கொண்டாடுவதற்காக இதோ அசத்தும் சுவையான தீபாவளி பலகாரங்கள்.

பூண்டு முறுக்கு


தேவைப்படும் பொருட்கள்
அரிசி மாவு, பூண்டு, பெருங்காயம், சீரகம், எள், வெண்ணெய், உப்பு, எண்ணெய்.

செய்முறை
முதலில் பூண்டை விழுது போல் அரைத்து கொள்ளவும்.
ஓர் அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, பெருங்காயம், சீரகம், வெண்ணெய், எள் போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கி முறுக்கு மாவை தயாரித்து கொள்ளவும்.
வெண்ணெய் நன்கு மாவுடன் கலந்த பின்பு அரைத்து வைத்துள்ள பூண்டு விழுதை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
மாவுடன் தண்ணீர், சூடான எண்ணெய் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
ஓர் கடாயில் எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும். அதே நேரத்தில் தயாரித்து வைத்துள்ள முறுக்கு மாவை முறுக்கு குழலில் வைத்து விருப்பத்திற்கேற்ற வடிவத்தில் பிழிந்து விடவும்.
பின்பு அதனை எடுத்து எண்ணெய்யில் பொரித்தது எடுத்தால் சுவையான பூண்டு முறுக்கு தயார்.

கார தட்டை செய்யும் முறை

சுவையான தீபாவளி பலகாரங்கள்
நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படும் தீபாவளியை மேலும் தித்திப்பாக கொண்டாடுவதற்காக இதோ அசத்தும் சுவையான தீபாவளி பலகாரங்கள்.

கார தட்டை


தேவைப்படும் பொருட்கள்
அரிசி மாவு, வறுத்து அரைத்த உளுந்து பொடி, வறுத்த பொறிக்கடலை, கடலை பருப்பு, நுணுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயம், மிளகாய் தூள், உப்பு, எண்ணெய்.

செய்முறை

கடலை பருப்பை தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும். அதே நேரத்தில் கடாயில் அரிசி மாவை நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும்.
அதே கடாயில் உளுந்து பொடியை வறுத்து எடுக்கவும். ஒரு கப் அரிசி மாவிற்கு இரண்டு மேஜை கரண்டி அளவிற்கு உளுந்து மாவு சேர்க்க வேண்டும். வறுத்த மாவுகளை ஓர் தனி பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
வறுத்த மாவுகளுடன் பொறிக்கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயம், கறிவேப்பில்லை, நுணுக்கிய பூண்டு மற்றும் ஊறவைத்த கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
தண்ணீர் மற்றும் சிறிது சூடான எண்ணெய் சேர்த்து நன்கு மாவை பிசைந்து கொள்ளவும். தட்டை மாவு தயார்.
இப்போது தயாரித்து வைத்துள்ள மாவை உருண்டை பிடித்து அதனை உள்ளங்கையில் வைத்து தட்டைபோல் அமுக்கவும்.
ஓர் சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி அதனை நன்கு பொரிக்கவும்.
இரண்டு புறமும் நன்கு பொரிந்த பின்பு அதனை எடுத்து சிறிது நேரம் எண்ணெய் வடிய வைத்தால் காரமான தட்டை தயார்.

சீப்பு சீடை செய்யும் முறை

சுவையான தீபாவளி பலகாரங்கள்
நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படும் தீபாவளியை மேலும் தித்திப்பாக கொண்டாடுவதற்காக இதோ அசத்தும் சுவையான தீபாவளி பலகாரங்கள்.

சீப்பு சீடை

தேவைப்படும் பொருட்கள்
அரிசி மாவு, வறுத்து அரைத்த உளுந்து பொடி, பாசி பருப்பு பொடி, தேங்காய் பால், உப்பு, எண்ணெய்.

செய்முறை
உளுந்து பொடி, பாசி பருப்பு பொடி தயாரிப்பதற்கு உளுந்தையும்,பாசி பருப்பையும் வறுத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து பொடி, பாசி பருப்பு பொடியுடன் உப்பு, தேங்காய் பால், சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி அதனுடன் தண்ணீர் தெளித்து மாவை மிருதுவாக தயாரிக்கவும்.
தயாரித்து வைத்துள்ள மாவை சீப்பு சீடை வடிவ தட்டு வைத்த முறுக்கு குழலில் வைத்து பிழியவும்.
பின்பு பிழிந்த மாவை மோதிர வடிவ அளவிற்கு பாதி பாதியாக வெட்டவும்.
வெட்டிய மாவை எடுத்து விரலில் வைத்து மோதிரம் போல் சுருட்டி இரு புறங்களும் இணையுமாறு மடக்கி கொள்ளவும். சீப்பு சீடை பொரிப்பதற்கு தயார்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தயாரித்து வைத்துள்ள சீடையை பொரிக்கவும்.
சீடை பொன்னிறமாக பொரிந்த பின்பு அதனை எடுத்து எண்ணெய் வடிந்த பின் காற்று போகாத பாத்திரத்தில் வைத்து ஒரு வாரம் மொறு மொறுப்புடன் சுவைக்கலாம்.
மேற்கண்ட உணவுகளை செய்து ருசித்து பார்த்து தித்திக்கும் தீபாவளியை மேலும் தித்திப்புட்டுங்கள்.

திங்கள், 7 அக்டோபர், 2024

பிரியாணியில் சேர்க்கப்படும் இந்த மசாலா உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்து ஆயுளை அதிகரிக்குமாம்...!

பிரியாணியில் சேர்க்கப்படும் இந்த மசாலா உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்து ஆயுளை அதிகரிக்குமாம்...!



நட்சத்திர சோம்பு அல்லது அன்னாசி பூ என்பது உண்மையில் இலிசியம் வெரம் என்று விஞ்ஞானரீதியாக அறியப்படும் நட்சத்திர சோம்பு மரத்தின் பழத்தின் கடினமான பெரிகார்ப் ஆகும். தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனாவின் சில பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டது.

இந்த மசாலா பொருள் அனைத்து இந்திய சமையலறைகளிலும் இருக்கும் அத்தியாவசிய மசாலா பொருளாகும். இந்த நட்சத்திர வடிவ மசாலா அதன் நறுமணம் மற்றும் அதிலுள்ள இரசாயன கலவைகள் காரணமாக மிகவும் விரும்பப்படுகிறது. இந்த மசாலா பொருளில் ஷிகிமிக் அமிலம் என்ற கலவை உள்ளது, இது உலகெங்கிலும் உள்ள காய்ச்சல் எதிர்ப்பு மருந்துகளின் மிக முக்கியமான பகுதியாகும்.

இந்த மூலிகை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமையல் மற்றும் பாரம்பரிய மருத்துவ பயன்பாடுகளுக்கு அதன் சுவை காரணமாக பயன்படுத்தப்படுகிறது, இது மிகவும் விலையுயர்ந்த மசாலா பொருள் மற்றும் அதன் சில தனித்துவமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

இந்த அன்னாசி பூவில் பல்வேறு வகைகள் உள்ளன, அவற்றில் சில நுகர்வுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தவை. எனவே சரியான நட்சத்திர சோம்பை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். சுவை மற்றும் நறுமணத்தைத் தாண்டி அதில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் :

அதிக அளவிலான பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்களுடன், நட்சத்திர சோம்பு உடல் முழுவதும் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குவதை ஊக்குவிக்க உதவுகிறது, குறிப்பாக இவை சருமத்தில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியவை. இது சருமங்களில் சுருக்கங்கள் ஏற்படுவதைக் குறைக்கவும், தோல் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கவும், பழைய வடுக்கள் மற்றும் கறைகளை மறைத்து உங்கள் சருமத்தை இளமையாகவும், துடிப்பாகவும் வைத்திருக்க உதவும்.


நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் :

அன்னாசி பூவின் பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகள் பரவலாக ஆராய்ச்சி செய்யப்பட்டு நன்கு அறியப்பட்டவை, மேலும் இந்த மசாலா பல நூற்றாண்டுகளாக வயிறு மற்றும் உடலின் பிற பகுதிகளின் பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஒருவேளை மிக முக்கியமாக, இந்த மசாலா பல ஆண்டிபயாடிக்-எதிர்ப்பு பாக்டீரியா விகாரங்களுக்கு எதிராக பயனுள்ளதாக தோன்றுகிறது. இது மருத்துவத் துறையில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

சுவாச நோய்த்தொற்றுகளுக்கு மருந்தாக செயல்படலாம் :

நட்சத்திர சோம்பு சுவாச ஆரோக்கியத்தை ஆதரிக்கும், எனவே உங்களுக்கு இருமல் அல்லது தொண்டை புண் இருந்தால், அல்லது காய்ச்சலின் ஆரம்பக் கிளர்ச்சியை உணர்ந்தால், ஒரு கப் நட்சத்திர சோம்பு தேநீர் வீக்கத்தை விரைவாக தீர்த்து, மிகவும் தீவிரமான அறிகுறிகள் தோன்றும் முன் அடிப்படை நோய்த்தொற்றை நடுநிலையாக்க முடியும்.

தூக்க பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் :

நட்சத்திர சோம்பு சில மயக்கமடையும் பண்புகளைக் கொண்டுள்ளது என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன, இதிலுள்ள ஆக்ஸிஜனேற்ற அளவுகள் மற்றும் மசாலாவின் மெக்னீசியம் உள்ளடக்கமே இதற்கு காரணமாகும். இது தளர்வு மற்றும் தூக்கத்தைத் தூண்டும் சில நரம்பியக்கடத்திகளின் வெளியீட்டைத் தூண்டுகிறது, தூக்கமின்மை மற்றும் தொடர்ந்து இடையூறு செய்யும் தூக்க முறைகளால் பாதிக்கப்படுபவர்கள் இந்த மசாலாவை பயன்படுத்தலாம்.

பூஞ்சை தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும் :

இந்த மசாலா சக்திவாய்ந்த பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் இது ஏராளமான பூஞ்சை தொற்றுகளுக்கு நம்பகமான இயற்கை தீர்வாக உள்ளது. பெரும்பாலான பூஞ்சை தொற்றுகள் ஒப்பீட்டளவில் பாதிப்பில்லாதவை என்றாலும், நட்சத்திர சோம்பு டீயின் வழக்கமான அளவை உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு இந்த நோய்க்கிருமிகளுக்கு எதிராக தேவையான பாதுகாப்பை அளிக்கும்.


புற்றுநோய் எதிர்ப்பு சாத்தியம் இருக்கலாம் :

இந்த மசாலாவில் உள்ள பல்வேறு வகையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குவெர்செடின் மற்றும் கேம்ஃபெரால் முதல் தைமால் மற்றும் கூமரிக் அமிலம் வரை, அனைத்தும் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை பாதிக்கலாம். இதன் முக்கிய அங்கங்களில் ஒன்றான டிரான்ஸ்-அனெத்தோல் புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாட்டைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், ஃபைப்ரோசர்கோமா, மற்றும் எர்லிச் ஆஸ்கிட்ஸ் கட்டி. இதற்கிடையில், பெருங்குடல் புற்றுநோயின் வளர்ச்சியைக் குறைக்கும் திறன் உள்ளதா என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவும் :

ஹார்மோன் அளவுகளில் நட்சத்திர சோம்புகளின் விளைவுகள் பரவலாக ஆய்வு செய்யப்படுகின்றன, ஏனெனில் இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் மிகவும் சக்திவாய்ந்த விளைவை ஏற்படுத்தும்.

ஆண்களில், இது ஒரு ஆற்றல்மிக்க ஊக்கத்தை அளிக்கும் மற்றும் செக்ஸ் உந்துதலை அதிகரிக்கும், அதேசமயம் பெண்களில் இது மாதவிடாய் சுழற்சியை சீராக்கும், மனநிலை ஊசலாடுதல் மற்றும் மாதவிடாயின் பிற ஹார்மோன்-உந்துதல் பக்க விளைவுகளை கட்டுப்படுத்தும்.