வியாழன், 11 ஏப்ரல், 2024

ஒரே ராசி, ஒரே நட்சத்திரக்காரர்களுக்கு ஏன் திருமணம் செய்யக்கூடாது?...

ஒரே ராசி, ஒரே நட்சத்திரக்காரர்களுக்கு ஏன் திருமணம் செய்யக்கூடாது?...

இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் முக்கியமான திருப்பமாகும். திருமணத்தின் மூலம் இணையும் மணமக்களின் வாழ்க்கை எண்ண ஒற்றுமை மட்டுமல்லாமல் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டிய சூழல் அனைவரிடத்திலும் இருக்கின்றது.

நாம் ஒருவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்றால் முதலில் நாம் வலிமையாக இருக்க வேண்டும் என்பது முதன்மையாகும். ஒரே ராசியில், ஒரே நட்சத்திர பாதத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் எனில் அவர்கள் இருவருக்கும் நடைபெறும் திசா புத்தியானது ஒரே மாதிரியாக செயல்படும். 

அதாவது வரவு என்றாலும் இரு மடங்காகவும், செலவு என்றாலும் இரு மடங்காகவும் உண்டாகும்.

மேலும், ஏழரை சனியானது ஒரே வீட்டில் இருவருக்கும் ஒரே நேரத்தில் தொடங்கி ஒரே நேரத்தில் முடிவடையும். அவ்வேளைகளில் அத்தம்பதிகளுக்கு ஏற்படும் துன்பம் என்றாலும் இரு மடங்காகவும், இன்பம் என்றாலும் இரு மடங்காகவும் உண்டாகும்.

அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் கோச்சாரத்தில் ஏற்படும் கிரகங்களின் சாதகமற்ற பெயர்ச்சிகளில் ஒரே நட்சத்திரத்தில், ஒரே பாதத்தில் உள்ளவர்களுக்குள் மன வருத்தங்கள் மற்றும் பொருளாதார சிக்கலும் உண்டாகும்.

அதனை கருத்தில் கொண்டே ஒரே ராசி, ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் என்பது வேண்டாம் என்று நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.

ஒரே ராசியில் உள்ள வெவ்வேறு நட்சத்திரத்தில் அதாவது ஒன்பது பாதங்களில் ஒருவர் முதல் பாதம், மற்றொருவர் கடைசி பாதம் என்றால் திருமணம் செய்து கொள்ளலாம். இதில் விதிவிலக்கு உண்டு.

அதாவது திருமணம் ஆன இருவர் ஒரே ராசியில் உள்ள வேறுபட்ட நட்சத்திரத்தில் வெவ்வேறு பாதங்களாக இருக்கும் பட்சத்தில் ஒருவருக்கு ஒரு திசாவாகவும், மற்றொருவருக்கு வேறு திசாவாகவும் நடைபெறும்.

அதாவது தம்பதிகளின் ஒருவரின் திசாப்படி ஒரு துன்பம் ஏற்படுமாயின் மற்றொருவரின் திசாப்படி அந்த துன்பத்தை கடப்பதற்கான ஆதரவும், வழிகாட்டுதலும் உண்டாகும்.‌

வாழ்க வளமுடன்....

பல குடும்பங்களிலும் உள்ள ஓரே பிரச்சனை

பல குடும்பங்களிலும் உள்ள ஓரே பிரச்சனை குடும்ப அமைதி இன்மை. 
குடும்ப அமைதிக்கு வெண்கடுகு...

வெண் கடுகு சாமான்யமான பொருள் அல்ல. அது கடவுள் தன்மையைக் கொண்டது. அது தேவ கணம் ஆகும். வெண் கடுகை குறித்த ஒரு கதையைப் படியுங்கள். அதன் சக்தி புரியும். மகத நாட்டை ஆண்டு வந்த மயில்வண்ணன் என்ற மன்னன் பெரும் கொடையாளி. மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வந்தான். ஆகவே அவனது புகழ் எங்கும் பரவி இருந்தது. அவன் மீது பொறாமைக் கொண்ட விரோதிகள் அவன் மீது தீய ஏவல்களை ஏவி விட்டார்கள். அதனால் நாளடைவில் அவனால் எதையும் சரிவர யோசனை செய்ய முடியாமல் தத்தளித்தான். அவன் குடும்பத்திலும் அமைதி குலைந்தது. ஆகவே அவன் தனது ராஜ குருவை அழைத்து தன்னுடைய சங்கடங்களைக் கூறி அதற்குப் பரிகாரம் கேட்டான். ராஜகுருவும் அவனுக்கு ஒரு விசேஷ பூஜையை செய்யுமாறு அறிவுரை செய்தார். அதன்படி ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்தப் பின் சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகைப் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும் என்றும் கூறினார். எதற்காக பாத பூஜையிலும் சாம்பிராணிப் புகையிலும் வெண் கடுகை பயன்படுத்த வேண்டும் என்று மன்னன் கேட்க ராஜ குரு கூறினார் ‘ மன்னா, வெள்ளைக் கடுகுச் செடிகள் குளிர்ச்சியை தருபவை. அவை இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும். பிரபஞ்சத்தின் அனைத்து தீய சக்திகளைளையும் அடக்கி ஒடுக்கி வைத்துள்ளவர் பைரவர் ஆவார். ஆகவே வெண் கடுகு உள்ள இடத்தில் தீய சக்திகள் இருக்க முடியாது. அவை புகையாக மாறும்போது, அதன் உள்ளே உள்ள தேவ கணங்கள் தீய ஆவிகளை அடித்துத் துரத்தும்.

சாதாரணமாக ஸூதர்சன ஹோமங்களில் ஓதப்படும் மந்திரங்களில் சர்வ சத்ரு நாசன மந்திர உச்சாடனமான ஓம் க்லீம் க்ருஷ்ணாய என்று துவங்கும் வார்த்தைகள் வலிமை மிக்க மந்திர ஒலிகள். அதை ஓதும்போது பகவான் விஷ்ணுவே ஸூதர்சனராக வந்து சத்ருக்களை அழிப்பார். அப்படிப்பட்ட ஹோமத்தில் வெண்கடுகை ஸமித்து ஹோமம் செய்யும் போது சர்வ சத்ருக்களும் அவர்களுடன் சேர்ந்த தீய ஆவிகளும் அழிவார்கள். அது போலவே போர்களில் அடிபட்டு இறக்கும் தறுவாயில் உள்ள வீரர்கள் பூமியில் கிடக்கும்போது அவர்களை சுற்றி உள்ள இடங்களில் வெண்கடுகைத் தீயிலிட்டுப் புகையை உண்டாக்கினால் யம பகவான் அவர்களின் உயிர்களை பறிக்க வர மாட்டார் என்ற நம்பிக்கை சங்க காலங்களில் இருந்துள்ளது. அதற்குக் காரணம் வெண்கடுகுப் புகை ஸூதர்சனார் வருகை தரும் நிலையைக் குறிப்பதாகும் . ஆகவேதான் வெண் கடுகு கடவுள் தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டது’ என்று விளக்கம் அளித்தார். தனது ராஜ குரு கூறியதைப் போலவே மன்னன் மயில்வண்ணன் வெண் கடுகைப் போட்டு பூஜையும், யாகமும் செய்ய அனைத்து தீய ஆவிகளும் வீட்டை விட்டு வெளியேறின. அவர் குடும்பத்தில் மீண்டும் அமைதி ஏற்பட்டது.

முதுமை + தனிமை= கொடுமை !

முதுமை + தனிமை= கொடுமை !

பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி..., மணமுடித்து... வைக்கிறோம்!

வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்...

இங்கு... 70 வயதிற்கு மேல்... வாழ்ந்த வீட்டிலேயே தனிமை...

இங்குதான் என் மகள் படிப்பாள்...

இங்குதான் விளையாடுவாள்...

என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்...

என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து...

என்ன சமைப்பது?...

என்ன சாப்பிடுவது?...

அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..

பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது...

தனிமை... வெறுமை...

அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்...

பயணம் ஒரு கொடுமை...

லோயர் பர்த் கிடைக்கவில்லை - என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்...

சென்னை சென்ட்ரல் - போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகிவிட்டது...

ஓலாவும், ஊபரும்...
நமக்கு தேவைப்படும் நேரத்தில்,
பீக் hour சார்ஜ்
போட்டு களைப்படைய
செய்கின்றனர்...

நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்....

இன்று சென்ட்ரலில், அரை அடி படி ஏற... இறங்க... கைப்பிடி கேட்கிறது...

எல்கலேட்டரில் போக மனசு குதித்தாலும்...

வாட்ஸ்ஆப் வீடியோக்கள் மனதில் வந்து, வந்து பயமுறுத்துகின்றன!

இவை வேண்டாமென ஒதுங்கி...

பிள்ளையை வாட்சப்பில் பிடிப்போம்...

பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்...
என்றால்...

அந்த நேரம் அவர்கள்...

ஏதோ ஒரு மாலில்...

ஏதோ ஒரு ஓட்டலில்...

ஏதோ ஒரு சினிமா தியேட்டரில்...

பிசியாக இருப்பார்கள்...

"ஏதாவது அர்ஜன்ட்டா? அப்புறம் கூப்பிடறேம்ப்பா..." என்பார்கள்...

"இல்லை" என்று ஃபோனை கட் பண்ணி விடுவோம்...

நாலு நாள் கழித்து...

"எதுக்குப்பா ஃபோன் பண்ணினே?" என்று கேட்பர்...

நான் பாசத்தோடு வளர்த்த என் பிள்ளைகள்...

அவர்கள் டைமிற்கு...

நம் தூக்க நேரம்...

பாசத்தை என்றும் மிஞ்சுகிறது தூக்கம்!

நமக்கு பேரப் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசம்...

அவர்களுக்கு, நம்மிடம் இருக்காது.

மூன்று வயது வரைதான் தாத்தா... பாட்டி... என்று அடிக்கடி ஃபோனில் கூப்பிட்டு பேசுவர்...

பிறகு எப்போது அவர்களை ஃபோனில் அழைத்தாலும்...

அவன் வெளியே விளையாடறான்...

அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருக்கான்...

அவன் டியூஷன் போயிருக்கான்...

யோகா போயிருக்கான்...

என்று ஏதோ ஒரு பதில் மட்டுமே கிடைக்கும்...

எப்போதாவது குழந்தை முகம்... ஃபோனில்... வீடியோ காலில்...

முகத்தைக் காட்டி... ஹாய்... என்று ஒன்றைச் சொல் சொல்லி விட்டு...

ஓடி விடும்...

என் தாடி வளர்ந்த வயதான முகம் அதற்கு நெருடலாய் இருக்குமோ?...

நமது பண்பாடு... கலாச்சாரம்... தாத்தா பாட்டி உறவுகள்...

அனைத்தையும் டெக்னாலஜி முழுங்கி விட்டது!...

எத்தனை நேரம்தான் டிவி பார்ப்பது...?

இந்த அரசியல்களும்...

இந்த பொய்களும் B Pயை உயர்த்துகின்றன!...

என் சொந்த வீடே... எனக்கு அனாதை இல்லமாகிப் போனது...

ஏதோ... வாட்சப்... Facebook... இருப்பதால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது...!

மகனும், மகளும் போடும் Status-தான்... என் அன்றாட சுவாரசியங்கள்...

"எப்படிப்பா இருக்கே?" என்று மற்றவர்கள் கேட்கும்போது...

( விட்டுக் கொடுக்க முடியுமா... என் பிள்ளைகளை...)

"எனக்கென்னப்பா... ஜாம் ஜாம்ன்னு... பசங்களோட..., பேரனுங்களோட... அட்டகாசமா..."
( மனதுக்குள் ஏதோ...)
வாழ்கிறேன்!

பல குழந்தைகளின் தாத்தா, பாட்டிகளுக்கு... இது சமர்ப்பணம்

பாட்டி அடிக்கடி சொல்லுவாள்

பாட்டி அடிக்கடி சொல்லுவாள்

நீரால் கோலம் போடாதே
நெற்றியைக் காலியாய் விடாதே
குச்சியைக் கொளுத்தி வீசாதே
இரவில் ஊசியை எடுக்காதே

கால் மேல் காலைப் போடாதே
காலையில் அதிகம் தூங்காதே
தொடையில் தாளம் போடாதே
தரையில் வெறுதே கிடக்காதே

மலஜலம் அடக்கி வைக்காதே
நகத்தை நீட்டி வளர்க்காதே
ஆலயம் செல்லத் தவறாதே
அதிகமாகப் பேசாதே

எண்ணெய் தேய்க்க மறக்காதே
சந்தியில் நீயும் உண்ணாதே
விரிப்பைச் சுருட்ட மறக்காதே
பகலில் படுத்து உறங்காதே

குளிக்கும் முன்பு புசிக்காதே
ஈரம் சொட்ட நிற்காதே
நாமம் சொல்ல மறக்காதே
நல்ல குடியைக் கெடுக்காதே

தீய வார்த்தை பேசாதே
நின்று தண்ணீர் குடிக்காதே
எதையும் காலால் தட்டாதே
எச்சில் பத்தை மறக்காதே

எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே
எந்தன் குடியில் மூத்தோரே
எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே
என்றும் வளமாய்த் தீர்வோரே

*என்ன அழகான வரிகள் இதை முதலில் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே

விசாகன் பெயரில் இரு திருத்தலங்கள்...

ஆலயதரிசனம்...

விசாகன் பெயரில் 
இரு திருத்தலங்கள்...

முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும். விசாக நட்சத்திரத்தில் உதித்த விசாகன் என்ற முருகன் பெயரால் இரு திருத்தலங்கள் உள்ளன. 

விசாகன் என்றால் பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் என்று பொருள். வி-பட்சி, சாகன்-சஞ்சரிப்பவன் மயில் பட்சியை வாகனமாகக் கொண்டவன். முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும். இவை இறைவனிடம் காட்டும் ஒப்பற்ற கருணையைக் குறிக்கிறது. 

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன். ஆறு விண்மீன்களைக் கொண்டது விசாகம். முன் மூன்றும் பின் மூன்றும் கொண்டு விளங்குவது. முன் மூன்றில் நடுவில் உள்ளது ஒளிமிக்கது. ஆறுமுகனின் முகங்கள் முன் மூன்றும் பின் மூன்றுமாக இருப்பது விசாகத்தின் வடிவே என்றும் சொல்வார்கள். 

சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள் தான் வைகாசி விசாகம் ஆகும். அதனால் தான் முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகத் திருநாள் ஓர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 

விசாக நட்சத்திரத்தின் பிரதான தேவதை முருகப்பெருமான் ஆவார். விசாக நட்சத்திரத்தின் அதிதேவதைகள் இருவராவர் ஒருவர் இந்திரன் மற்றொருவர் அக்னி. இவர்கள் சகல மங்களங்க ளையும் அளிப்பவர் களாக தமது இருதிருக்கரங்க ளில் வரதம் மற்றும் அபய முத்திரை ஏந்தி அருள்புரிகிறார்கள். 

அக்னி சிவப்பு நிற மேனி கொண்டவர். இந்திரனோ தகதகக்கும் தங்கத் திருமேனி உடையவர். விசாக நட்சத்திரத்தில் உதித்த விசாகன் என்ற முருகன் பெயரால் இரு திருத்தலங்கள் உள்ளன. 

1. வைசாக் மற்றும் விசுவை என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் ஆகும். இது ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமாகும். இது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் தலங்கள் 237-ல் ஒரு திருத்தலமாகும்.

2. தலம் விசாகபவனம் எனப்படும் தலமாகும். இத்தலம் தணிகை புராணம் எழுதிய நூலாசிரியர் ஸ்ரீ கச்சியப்ப முனிவர் என்பவர் கூறும் 64 திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...

தலைமுறை இடைவெளி.. அன்றும் இன்றும்...

தலைமுறை இடைவெளி.. 
அன்றும் இன்றும்...

நான் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன் இப்ப இருக்கிற புள்ளைங்க சாப்படுறதுக்கு கஷ்டப்படுதுங்க..

அன்று பரிட்சை எழுத காலண்டர்அட்டையை கொடுத்த என் தந்தையிடம் சரி மேல மாட்டுற கிளிப்பாவது (வெறும் 3 ரூபாய்) வாங்கி தாங்க என்று அழுதபோது , டேய் உனக்காவது இது கிடைத்தது நான் படிக்கும்போது இதுக்குகூட எனக்கு வசதியில்லை என்று சொன்ன என் தந்தையை பார்த்து நம்பாமல் நக்கலாக சிரித்தேன்

இன்று மூன்றாவது வகுப்பு படிக்கும் என் மகளுக்கு exam board வாங்க போனபோது 150 ரூபாய் மதிப்புள்ள examboard ஐ பார்த்து உதட்டை பிதிக்கி இதவிட betterஆ வேறஇல்லையா என்று கடைகாரரை பார்த்து கேட்டபோது எனக்கு தூக்கிவாரி போட்டது என் மகளிடம் பொருமையாக பாரும்மா அப்பா படிக்கும்போது பரிட்சை எழுத காலண்டர் அட்டையை தான் கொண்டு போவேன்..

ink பாட்டில் வாங்கவசதி இல்லாமல் (10ருபாய்) 10 பைசாவிற்கு கடையில் மை வாங்கியிருக்கிறேன்,
சில சமயம் பக்கத்தில் இருப்பவர்களிடம் ஒரு சொட்டு மை கடன் கேட்பேன்,,,

புதிய புத்தகங்கள் வாங்க காசில்லாமல் போனவருடம் பாசான அண்ணன்மார்களிடம் இருந்து புத்தகங்களை வாங்கி பள்ளிக்கு போனேன்;

bookஐ மறந்தாலும் மதிய சத்துணவுக்காக தட்டை கொண்டுபோக மறந்ததில்லை

என்று என் மகளிடம் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொன்னபோது நம்பாமல் நக்கலாக சிரிக்கிறாள் நான் அன்று என் தந்தையை பார்த்து சிரித்ததுபோலவே

நாசமா போறவ குடிக்கிறதண்ணீய குடம் நாலானா (25பைசா) சொல்லுறா என்று புலம்பிக்கொண்டே பக்கத்து தெரிவிலிருந்து தண்ணீர் பிடித்த என் தாயாரை பார்த்த அதே கண்களால் இன்று அப்பா filter water கேன் (2குடம் இருக்குமா?) வெறும் 35 ரூபாய்தானாம் என்று ஆச்சரியப்படும் என் மகளையும் (3 std படிக்கிறாள்) பார்க்கிறேன்

இதுதான் தலைமுறை இடைவேளியா?

நாய் கூட நடக்காத நண்பகல் வேளையில் நண்பர்களோடு கண்மாய்கரையை ஒட்டிய groundல் கிரிக்கெட் விளையாண்டுவிட்டு
தாகம் எடுத்தால் ஏதாவது ஒரு வீட்டின் கதவை தட்டி ( அவங்க என்ன ஆளுங்க என்றுகூட எங்களுக்கு தெரியாது, நாங்க என்ன ஆளுங்க என்றுகூட அவங்களுக்கும் தெரியாது)

அக்கா குடிக்க கொஞ்சம்தண்ணீ தாங்க என்று கேட்டால் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து தருவார்கள் நாங்கள் எல்லாரும் போட்டிபோட்டு கொண்டு மூச்சிரைக்க சட்டை நனைய தண்ணீர் குடிக்கும் அழகை ரசித்துகொண்டே தம்பி போதுமா இன்னும் வேணுமா என்று கேட்பார்கள்
( ஆளுக்கு ஒரு சொம்பு என்றால் குறைந்தது 10 சொம்பு கிட்டத்தட்ட 4 லிட்டிர்) இன்று என் வீட்டின் கதவை 10 பசங்க தட்டி தண்ணீர் கேட்டால் என் மனைவி தருவாளா? சந்தேகம்தான்?என்மனைவியிடம் கேட்டேன் ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள்
நான் கதவையே திறக்க மாட்டேன்"

இன்று jio SIM ல் இலவசமாக பேசிக்கொண்டு 10 ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு இருக்கும் நான், ஒரு காலத்தில் 1ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு 6ரூபாய்க்கு போன் பேசி இருக்கிறேன்( ஞாயிற்குகிழமை ஆப் charage என்று வரிசையில் நின்று இருக்கிறேன்)

இன்று 64gb memory card ல்10 படங்களை வைத்து இருக்கும் நான் ஒரு காலத்தில் யாருடைய வீட்டில்லாவது டெக்கில் புது படம் போடுகிறார்கள் என்றால் வாசலில் தவம் கிடந்து இருக்கிறேன்..

இன்று ஒரு லிட்டர் gold winner oil வாங்க ஓடும் நான் ஒரு காலத்தில் 100 milli எண்ணெய் வாங்க டானிக் பாட்டிலில் சரடை கட்டி கொண்டு ஓடி இருக்கிறேன் (கடகார அண்ணாச்சி திரும்பி எண்ணை ஊத்துற கேப்புல முன்னாடி இருக்கும் கடலபுண்ணாக்க எடுத்து லபக்குன்னு வாயில் போடுவது தனி சுகம்)

boost is secert of my energy என்று விளம்பரத்தில் சொன்ன கபில்தேவை பார்த்து வாழ்க்கையில் ஒரு முறையாவது boostஐ வாங்கி குடித்து விடவேண்டும் என்று நினைத்தேன்

இன்று பூஸ்ட் ,ஹார்லிக்ஸ், காம்பிளான் , பீடியா சுயர் ,என்று எதை வாங்கி குடுத்தாலும் taste சரியில்லை என்று பிள்ளைகள் சாப்பிடாமல் குப்பைக்கு போகிறது

இத படிச்சதும் புன்னகை வந்தா நீங்களும் என் இனம் தான்.

பிள்ளையார்பட்டி அதிசயம்

பிள்ளையார்பட்டி அதிசயம்

அர்ச்சணை கட்டணம் கிடையாது.
தரிசணங்களுக்கு வரிசை கட்டணம் கிடையாது. VIP, சாதாரணமானர் எனும் பாகுபாடுகள் கிடையாது. ஒரேயொரு பிரார்த்தனை உண்டியல் தவிர வேறு எந்த இடத்திலும் உண்டியல் கிடையாது. அர்ச்சகர்களின் கட்டாய அடாவடி வசூல் கிடையாது. குறிப்பாக ஊழல் உலவாரம் செய்ய அரசு அறநிலயத்துறை கிடையாது..

 நியாயமான விலையில் அர்ச்சனை தட்டு கோவில் நிர்வாகத்தால் மட்டுமே கிடைக்கிறது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் பிரைவேட் வியாபாரிகள் நுழைய தடை. இப்படி ஒழுக்கமும், நியாயமும், தூய பராமரிப்பும் நிறைந்த இயற்கை எழில் சூழ்ந்த அமைதியான சூழலும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் விடயங்கள் . கார், பஸ் போன்றவை பார்க்கிங் செய்ய பெரிய இடவசதி மற்றும் நியாயமான கட்டணங்கள்.

நாட்டு்க் கோட்டை நகரத்தார்களால் முற்றிலும் தூய்மையாக, தூய பக்தியோடு பராமறிக்கப்பட்டு, ஒளி வெள்ளத்தில் ஜொளிக்கும் உலகப்பிரசித்தி பெற்ற கற்பக விநாயகரை வாழ்வில் ஒரு முறையேனும் தரிசியுங்கள். முக்திபேரு அடையுங்கள்.

அருகிலேயே குன்றக்குடி முருகன். உலகப்பிரசித்தி பெற்ற சிற்பங்கள் நிறைந்த நேமம் சிவன் கோவில், மேற்கூரை வண்ண ஓவியங்கள் நிறைந்த வைரவன்பட்டி வைரவநாதர் கோவில், போன்றவற்றையும் தரிசிக்கலாம்.

இருப்பிடம் : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து 10 கிமீ. திருப்பத்தூரில் இருந்து 12 கிமீ. மதுரையில் இருந்து 80 கிமீ.

சுகவாழ்வு அளிக்கும் திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர்!

ஆலயதரிசனம்..

சுகவாழ்வு அளிக்கும் திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர்!

புராண வரலாறு..

திருக்கட்டளை என்பது திருக்கற்றளியில் இருந்து மருவி வந்த சொல் ஆகும். கல்+தளி என்றும் என்று பிரிக்கவேண்டும் தளி என்றால் கோயில் என்று பொருள் எனவே கற்றளி என்பது கற்கோயிலைக்குறிக்கிறது என்பது புரியும். செங்கல்,சுண்ணாம்பு போன்றவை இல்லாமல் பாறைக்கற்களை மட்டுமே அடுக்கிக்கட்டப்பட்ட கோயிலைத்தான் கற்றளி என்று நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இவ்வாறு முழுவதுமே கற்களினாலாயே கட்டப்பட்டதால்தான் 1150ஆண்டுகளுக்கு மேலாக அழகு குறையாமல் இன்னும் மிளிர்கிறது. இங்குள்ள உள்ள அருள்மிகு மங்களநாயகி சமேத சுந்தரேஸ்வரர் மிகப்பழமையான பரிவார வகைக்கோயிலாகும.; இந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் விஜயாலய சோழீச்சுவரம் கோயில், 

கொடும்பாளுரில் உள்ள மூவர் கோயில் போன்றவiயும் பரிவார வகைக்கோயில்கள்தான், ஆனால் இவையெல்லாம் உள்நாட்டு, வெளிநாட்டு மன்னர்கள் படையெடுப்பால் சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளன. ஆனால் திருக்கட்டளையில் மட்டும்தான் கட்டப்பட்ட காலத்திலிருந்து அப்படியே கலையழகும், ஆன்மிக உயர்வும் குறையாமல் பரிவார வகைக்கோயில் அமைப்பு விளங்குகிறது. இதனைப்பார்ப்பதே கண்கொள்ளக்காட்சி அகும். 

பரிவார வகைக்கோயில் என்றால் நடுவே சிவபெருமான் அமைந்திருக்கும் சுற்றிலும் வெளிப்பிரகாரத்தில் மதில் சுவரோடு சூரியன், ஏழு கன்னிமார்கள், மூலவிநாயகர், முருகன், ஜேஷ்டாதேவி, சந்திரன், மற்றும் சண்டிகேஸ்வரர் போன்ற கடவுளரின் ஆலயங்கள் தனித்தனியாகக் கட்டப்பட்டிருக்கும். அதுபோல இங்கே அனைத்தும் இருக்கிறது. இக்கற்கோயில் அளவில் சிறியதாக இருக்கலாம் ஆனால் தஞ்சையில் சோழப்பேரரசன் ராஜராஜன் அமைத்த பெரிய கோவிலுக்கு இக்கோயிலும் ஒரு முக்கிய மாதிரியாக விளங்கியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. 

சிவலிங்கம் உள்ள கருவறை மீது எடுப்பிக்கப்பட்டுள்ள ஐம்பது அடி கோபுரத்தின் (விமானம்;) மேல் தட்டில் நான்;கு திசைகளிலும் நான்கு நந்திகள் வைக்கப்பட்டிக்கிறது. இதுபோல தஞ்சைப்பெரிய கோயிலும் மூலவர் வீற்றிருக்கும் கருவறை மீது கட்டப்பட்டிருக்கும் விமானத்தின் மேல் தட்டிலும் நந்தி திரு உருவங்களைக்காணலாம். 

இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலமாக சிவபெருமான், கார்குறிச்சி கற்றலைப்பெருமானடிகள், பின்னர் ஈஸ்வரமுடையார், இப்போது சுந்தரேஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. அதனால் இப்பகுதியில் இருக்கும் கோவில்களுக்கு சுந்தரமகாளி, சுந்தரவிநாயகர் அதுபோன்ற திருநாமங்களும் மனிதர்களுக்கு சோமசுந்தரம், சுந்தரம், சுந்தரக்கண்ணு, சுந்தரம்பாள், சுந்தரி போன்றவர்களுடைய பெயர்களும் அதிகளவில் வைத்துள்ளனர். இந்த சோமசுந்தரேஸ்வரை வந்து வேண்டினால் நோய்வாய்ப்பட்டவர்கள் நல்ல சுகமுடன் வாழ்வார்கள.;

திருமணம் முடித்தவர்கள் மங்கள நாயகியின் முன்நின்று வேண்டி அதன் குங்குமத்தை தன்னுடைய மாங்கல்யத்தில் வைத்துக்கொண்டால் மாங்கல்யம் நிலைத்து அந்த தம்பதியினர் 100ஆண்டுகள் வாழ்வார்கள் என்பது ஐதீகம். 

இக்கோயில் ஆதித்திய சோழன் காலத்தில் (கி.பி.870-907) ஆகிய ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று மூலவர் கோயில் வடபுறச்சுவரில் சிதிலமடைந்த நிலையில் உள்ள கல்வெட்டுக்குறிப்பிடுகிறது. மூலவர் வீற்றிருக்கும் கருவறை 12பக்கமுள்ள சதுர வடிவில் அமைந்திருக்கின்றது கருவறைக்கு முன் அரத்த மண்டபமும், அதனையொட்டி முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070-1120) காலத்தில் கட்டப்பட்ட முகமண்டபமும் உள்ளன. 

கருவறைக்கு மேலேயுள்ள கோபுரம் சதுர வடிவில் உள்ளது. அமைக்கப்பட்டதாகும். இன்னொறு கல்வெட்டில் மிலட்டுரில் நடந்த ஓரு போரில். கார்குறிச்சியைச்சேர்ந்த போகேந்திர சிங்க பேரரையன் என்பவரது மரணத்தைப்பற்றிக்கூறுகிறது. அவரது தம்பி அனுக்கன் என்பவரைப்பற்றியும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவர் தங்களுக்கிடையே பகைமை தீர வேண்டுமென்பதற்காகக் கோயிலில் விளக்கெரிக்கத்தேவைப்படும் நெய் எடுப்பதற்காக 25ஆடுகளைத்ததனமாக கொடுத்த செய்தியும் கல்வெட்டில் சொல்லப்படுகிறது. 

தலப்பெருமை..

தெட்சிணாமூர்த்தி வீராடனமூர்த்தி, பிக்ஷாடானமூர்த்தி ஆகிய மூன்று அவதாரங்களில் இங்கே இருக்கிறார். இதுபோன்ற மூன்று அவதாரங்கள் ஒரே இடத்தில் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஜேஷ்டாதேவி தன்னுடைய குழந்தைகளான மாந்தி,குளிகன் ஆகியோரை கையில் ஏந்தியபடி இருக்கிறது இதற்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியில் அபிஷேகம் நடைபெறுகிறது. 

பங்குனி மாதத்தில் நேரடியாக சூரியனின் ஒளி சிவலிங்கம் மீது படும்போது சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஒரு காலத்தில் தேரோட்டம் நடைபெற்றுவுள்ளது ஆனால் ஒரு நாள் அத்தேர் சுற்றி வரும்போது எதிர்பாராமல் கோவில் முன்பு உள்ள குளத்தில் விழுந்துவிட அந்நாளில் இருந்து தேரோட்டம் நடைபெறவில்லை என்று சொல்லப்படுகிறது. 

சிறப்பு விழாக்கள் ஆருத்ரா தரிசனம், மகாசிவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை சோமவாரம்.

பெருமாளின் கல்யாண குணங்கள் :

பெருமாளின் கல்யாண குணங்கள் :

ஸ்ரீமன் நாராயணனின் கல்யாண குணங்கள் எண்ணில் அடங்காதவை!

வாருங்கள் சிலவற்றை அறிவோம்.

பரத்துவம்:

பிரம்மனை போன்று எவ்வளவு மேன்மையானவரும் சரணாகதி அனுஷ்டிக்க தகுந்தவன், அனைத்துக்கும் மேன்மையானவன் நாராயணன், அனைத்துக்கும் இருப்பிடம், அனைத்திலும் இருப்பவன்.

ஸௌலப்யம்:

நம்மை போன்று அவ்வளவு சிறியவரும் அணுகி மோக்ஷத்தை யாசித்து பெற்று கொள்ள கூடிய அளவில் எளிமையாக நமக்காக மேலிருந்து கீழ் இறங்கி அவதரித்து நம்முடனே வாழ்ந்து காட்டி எங்கும் வியாபித்து அந்தர்யாமியாய் இருக்கிறான்.

சரணாகதி பண்ணுவதற்கும் மற்றும் மோக்ஷம் அளிக்கவல்லவன் அவன் ஒருவனே என்பதை உணர்த்துவதற்கும் அவன் கொண்டிருக்கிற இரு கல்யாண குணங்களே பரத்துவம் & ஸௌலப்யம்.

ஸ்வாதந்த்ரியம்:

மற்ற அனைத்து கல்யாண குணங்களை மறைத்து நம்முடைய புண்ணிய பாவங்களை ஆராய்ந்து அதனால் கோபமுற்று மோக்ஷத்தை அளிக்கா தன்மையை ஏற்படுத்தும் இந்த குணம். 

ஆனால் கலி யுகத்துக்கு இந்த கூற்று பொருந்தாது என்பதே அடியேனின் கூற்று.

கலி யுகத்தில் அவருக்கு கோபமோ செருக்கோ இருக்காது என்பது அடியேனின் கூற்று அல்ல, கண்டிப்பாக இருக்கும் இன்னும் அதிகமாவே இருக்கக்கூடும். ஆனால் காரணம் ஒருவனுமே மோக்ஷம் கேட்டு தன்னிடம் வரவில்லையே என்று தான் இருக்கும், ஒரு ஜீவனாவது வந்தால் தானே புண்ணிய பாவத்தை ஆராய்ந்து கோபப்படுவதற்கு.

ஒரு வேளை ஏதாவது ஓர் ஜீவன் சரணடைந்து இந்த குணம் கொண்டு பெருமான் மோக்ஷம் தராவிட்டால் அந்த ஜீவன் என்ன செய்வது அல்லது என்ன செய்ய முடியும், கவலையே வேண்டாம் ஸ்ரீதேவி தாயார் அந்த ஜீவனுக்காக மன்றாடி பெற்று தந்து விடுவாள்.

ஆகையால் தான் ஸ்ரீ உடன் சேர்த்தே ஸ்ரீமன் நாராயணன் என்று நம் சம்பிரதாயத்தில் போற்றப்படுகிறது. ரஹஸ்ய த்ரயத்தில் ஸ்ரீ யுடன் கூடிய த்வயத்துக்கே மதிப்பு மற்ற இரண்டை காட்டிலும்.

வாத்ஸல்யம்:

நம்முடைய குற்றத்தை கண்டு தண்டிக்காமல் அதையே குணமாக ஏற்று கொண்டு ரக்ஷிப்பதே இந்த குணம். இக்குணம் ஆச்சர்யகரமானது, நம்மை போன்ற அடியார் மனத்தை ஈர்ப்பது. இந்த குணம் பெருமானிடம் இல்லையென்றால் நாம் யாராவது அவனிடம் நெருங்குவோமா?

ஸ்வாமித்துவம்:

சொத்தை உடையவன் ஸ்வாமி. இந்த மொத்த உபய விபூதிக்கும் ஸ்வாமி அவன் ஒருவனே. நாம் என்ன காரியத்தோடு அவன் முன் நின்றாலும் நடத்தி குடுக்க கூடிய சக்தி கொண்ட வல்லமையே இந்த குணம்.

ஸௌசீல்யம்:

பெருமான் தனது மேன்மை பாராமல் மற்றும் நமது சிறுமை பாராமல் நம்மூடம் கலப்பதே இந்த குணம். எனவே அவனது மேன்மை கண்டு அகல வேண்டிய தேவை நமக்கு இல்லை.

ஸர்வக்ஞன்:

சகல ஞானமும் கொண்டவன் என்பதை குறிக்கும் குணம் இது.

ஸர்வசக்தன்:

நினைத்தபடி எதையும் செய்து நிறைவேற்றவல்லவன். நம்மை நொடிப்பொழுதில் வைகுண்டத்தில் சேர்க்க கூடிய குணம் இது.

ப்ராப்த்தி:

நம் மீது முழு உரிமை கொண்டவன் பெருமான் ஒருவனே. அவன் ப்ராப்தன் நாமெல்லாம் அவனுக்கு ப்ராப்த்தி.

பூர்த்தி:

அவன் பூர்ணன். முழுவதும் நிறையே ஒரு குறையும் இல்லாத குணம் இது. நம்மிடம் அவன் எதிர்பார்த்து ஒன்றும் இல்லை.

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா
நிகரில் புகைழாய் உலகமூன்று உடையாய் என்னை ஆள்வானே 
நிகரில் அமரர் முனிகணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே 
புகழ் ஒன்றில்ல அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

மன அமைதிக்கு தியானம் சிறந்த பயிற்சி

மன அமைதிக்கு தியானம் சிறந்த பயிற்சி

வாழ்க்கை என்பது என்ன… சவால்கள், சலனங்கள், சங்கடங்கள், சந்தர்ப்பவாதங்கள், ஏமாற்றங்கள், ஏற்றம், தாழ்வு, மோசடி, வருத்தம், சோகம், சந்தோஷம் இப்படி ஒவ்வொரு அம்சமும் ஒன்றாகக் கலந்த ஒரு கூட்டுக் கலவை. ஒவ்வொரு தருணத்திலும் ஒரு அம்சம் வெளிப்பட்டு வியாபித்து விஸ்வரூபம் எடுத்து நிற்கும்.

அந்தந்த அம்சத்திற்கேற்ப சாமர்த்தியமாக நடந்து அதை சமாளித்து வெல்வதில்தான் வாழ்க்கையை வெற்றிகரமாக வைத்துக் கொள்வது அடங்கியுள்ளது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கப் போகும் வரை எத்தனை டென்ஷன், பதட்டம், படபடப்பு, அவதி, அவஸ்தை..

வேலைக்குப் போவோருக்கு ஒரு டென்ஷன் என்றால், வீட்டில் உள்ளோருக்கு ஒரு வகையான டென்ஷன். நினைவுகளின் அழுத்தம் தரும் பதட்டம், காதல் தரும் பதட்டம், கணவர்களால் ஏற்படும் பதட்டம், மனைவியரால் ஏற்படும் பதட்டம், ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் வரும் பதட்டம் என பதட்டங்கள் பலவிதம். ஆனால் இதில் அப்படியே மூழ்கிப் போய் விட்டால் என்னாகும்.. மனம் நொறுங்கும், வாழ்க்கை சிதறிப் போகும். அதிலிருந்து மீள என்ன செய்யலாம்…?

இப்படிப்பட்ட மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றை ஓரம் கட்ட தியானம் சிறந்த வழி என்கிறர்கள் நிபுணர்கள். இது மனதையும், உடலையும் ஒரு சேர நார்மலாக்குகிறது, ரிலாக்ஸ் செய்கிறதாம். சிந்தனைகளை சீர்படுத்தி, தேவையற்ற சிந்தனைகளை அமுங்கிப் போகவும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் தலை தூக்கவும் இவை உதவுகிறதாம். மனதைப் போட்டு அரிக்கும் சிந்தனைகளை தடுத்து நிறுத்தி, இங்கே பார், நீ இவனுக்குத் தேவையில்லை, இவனை நிம்மதியாக இருக்க விடு, இவனை விட்டுப் போய் விடு என்று தடுத்து நிறுத்தும் கவசமாக தியானம் இருக்கிறதாம். சிந்தனைகள் சீர்பட்டாலே மனசு அமைதியாகி விடும் அல்லவா…

அதுதான் தியானத்தின் முக்கிய அம்சமாகும். சரி எப்படி தியானம் செய்யலாம்…? மூச்சுப் பயிற்சி – முதலில் நல்ல வசதியான, சவுகரியமான இடத்தைத் தேர்வு செய்து அமர வேண்டும். கண்களை மூடிக் கொள்ள வேண்டும். உடலை லேசாக வைத்துக் கொள்ள வேண்டும், இறுக்கம் கூடவே கூடாது, அப்படியே காற்று போல உடல் இருக்க வேண்டும். மூச்சை நிதானமாக இழுத்து விட வேண்டும். ஆழமாக மூச்சு விடுங்கள், அதேபோல அமைதியாக அதை வெளியே விடுங்கள்.

கவனச் சிதறலைத் தடுக்க ஒவ்வொரு முறை மூச்சை இழுத்து விடும்போது அதை மனதுக்குள் எண்ணிக் கொண்டு வரலாம். இதை ஒரு பத்து அல்லது 20 நிமிடம் வரை செய்யுங்கள். இது ஒருவகை தியானம். இதேபோல மேலும் சில முறைகள் உள்ளன. அதையும் பார்க்கலாம் வாருங்கள். குறிப்பிட்ட பொருளின் மீது கவனம் செலுத்தலாம் – அதாவது ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது முழுக் கவனத்தையும் செலுத்தி தியானம் செய்யலாம். அதாவது ஒரு வடிவம், வண்ண வித்தியாசம், தட்பவெப்பம், அசைவு ஆகியவற்றைச் சொல்லலாம்.

பெரும்பாலும் இதுபோன்ற தியானத்திற்கு பூக்கள், மெழுகுவர்த்தியின் ஜூவாலை போன்றவற்றை பயன்படுத்தலாம். அலாரம் கிளாக், மேசை விளக்கு, காபி மக் ஆகியவற்றைக் கூட சிலர் இதற்காகப் பயன்படுத்துகிறார்கள். அதில் தப்பில்லை, நமக்குத் தேவை, கவனக்குவிப்புக்கு ஒரு பொருள். ஒலி மீது கவனம் செலுத்தலாம் – இதுவும் ஒரு வகை. அதாவது ஏதாவது ஒரு சத்தம் மீது நமது முழு மனதையும் செலுத்துவது. மனசு முழுமையாக அதில் ஈடுபட்டு ஒன்றிப் போய் விட வேண்டும். அதற்குத் தேவையான ஒரு ஒலியை நாம் தேர்வு செய்து கவனம் செலுத்தலாம்.

ஒலியைத் தேர்வு செய்து தியானத்தில் அமரும்போது மனசு முழுவதையும் அந்த சத்தத்தின் மீது போட்டு விடுங்கள், மனசை முழுமையாக இலகுவாக்கிக் கொண்டு இதைச் செய்யுங்கள். கற்பனைப் பொருட்கள் – இதையும் செய்யலாம். இது இன்னும் அருமையான ரிசல்ட்டைக் கொடுக்குமாம்.

அதாவது உங்களது மனதுக்குப் பிடித்த ஒரு கற்பனை விஷயத்தை நீங்கள் மனதுக்குள் வரித்துக் கொண்டு அதன் மீது முழு கவனத்தையும் செலுத்துவது. இது மனதுக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் உபயோகமாக இருக்குமாம். மனதை சந்தோஷமாக்கவும், லேசாக்கவும் இது உதவும். எதையும் நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்.. உங்களது மனதை சந்தோஷப்படுத்தக் கூடிய எதையும் நீங்கள் கற்பனை செய்யலாம்…

மனசு நிம்மதியாக, சாந்தியாக, சாந்தமாக, சமர்த்தாக இருந்தால்தான் வாழ்க்கையில் தவறுகள் குறையும், செய்யும் செயல்களில் நிதானம் கூடும். செய்து பாருங்கள்!

தேனியின் பிரமாண்டம்.வீரபாண்டி திருவிழா

ஆன்மீக பயணம்

தேனியின் பிரமாண்டம்.
வீரபாண்டி திருவிழா

தேனியின் பிரமாண்டம்... வீரபாண்டி திருவிழா!
தேனி மாவட்டத்தின் மிகப் பிரமாண்டமான திருவிழா இதுதான். வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருவிழாவின் போது, அம்மனுக்கு வேண்டிக்கொண்டால், எல்லா நல்லதுகளையும் இனி பார்த்துப்பார்த்துச் செய்வாள். நம் எல்லோருக்கும் தாயாகத் திகழ்பவள், ஒரு அம்மாவைப் போலவே கனிவும் கருணையுமாக நன்மைகள் வழங்குவாள் என்று பூரிக்கின்றனர் பக்தர்கள்.

அகிலத்துக்கே சக்தி கொடுப்பவள்தான் அன்னை. ஆனால் அசுரனை அழிக்க இன்னும் சக்தி வேண்டுமே... அஷ்டசக்திகளில் ஒருத்தியான கெளமாரி, அதற்காக அந்த அடர்ந்த வனத்தில், சிவலிங்க பூஜை செய்து கொண்டிருந்தாள். இதை அறியாமல் இருப்பானா அசுரன்?

அவளை பூஜை செய்யவிடாமல் தடுக்க நினைத்தான் அசுரன். அவளை நெருங்கினான். கண்கள் மூடி தவமிருக்கும் நிலையிலேயே இதையெல்லாம் உணர்ந்திருந்தாள் கெளமாரி. அருகில் இருந்த அருகம்புல்லை எடுத்து, அவன் மீது வீசினாள். அருகம்புல், மிகப்பிரமாண்டமான ஆயுதமானது. அவனை நோக்கிச் சென்றது. அந்த அசுரனை இரண்டாகப் பிளந்துபோட்டது. அவன் துடிதுடிக்க செத்துப்போனான்.

அப்போது வானில் இருந்து தேவர்கள் மகிழ்ந்தனர். பூச்சொரிந்தனர். அந்த பூமியே குளிரும்படி மழை பெய்தது. கண்ணாக இருந்து காத்தருளிய சிவனாருக்கு, கண்ணீஸ்வரர் எனும் திருநாமம் அதனால்தான் அமைந்தது. அந்த கெளமாரிக்கு கோயில் எழுப்பி, இன்றைக்கும் வழிபட்டு வருகிறார்கள் பக்தர்கள்.

தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைந்துள்ளது கெளமாரி அம்மன் கோயில்.

இந்தக் கோயில் குறித்து இன்னொரு சரிதமும் உண்டு.

மதுரையை தலைமையகமாகக் கொண்டு ஆட்சி செய்துவந்தான் வீரபாண்டியன் எனும் மன்னன். முந்தைய வினைப்பயனால், திடீரென அவன் கண்பார்வையை இழந்தான். மந்திரிமார்களும் குருமார்களும் சொன்னபடி, ஏராளமான கோயில்களுக்குச் சென்றான். புனித தலங்களில் நீராடினான்.

ஒருநாள் அவன் கனவில் தோன்றிய ஈசன், கெளமாரியை வணங்கு. கண்பார்வை பெறுவாய் என அருளினார். சிலிர்த்து எழுந்த மன்னன், முல்லை நதி பாயும் வனப்பகுதியில், கெளமாரி அம்மனின் இருப்பிடத்துக்கு வந்தான். நதியில் நீராடினான். அவளின் சந்நிதிக்கு வந்து வேண்டினான். நெடுஞ்சாண்கிடையாக பிரார்த்தனை செய்தான். மன்னனின் ஒரு கண்ணில் ஒளி வந்தது. அங்கே இருந்த கண்ணீஸ்வரரையும் வேண்டி வணங்கினான். இன்னொரு பார்வையும் கிடைக்கப் பெற்றான். இதில் நெகிழ்ந்து நெக்குருகிப் போன மன்னன், சந்நிதியாக மட்டும் இருந்த கண்ணீஸ்வரருக்கும் கெளமாரிக்கும் ஆலயம் எழுப்பித்தான் என்கிறது ஸ்தல வரலாறு.

தேனியில் இருந்து சின்னமனூர் செல்லும் வழியில், 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வீரபாண்டி எனும் கிராமம். இங்கே சாலையோரத்தில், ஆற்றங்கரையை ஒட்டியே அழகுற அமர்ந்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறாள் கெளமாரியம்மன்.

வருடந்தோறும் சித்திரை மாதத்தில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது திருவிழா. இந்த விழாவின் போது, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள், வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் எனும் ஊரிலும் கெளமாரி அம்மன் கோயில் கொண்டிருக்கிறாள். இவள் அக்கா. இவளுடைய தங்கைதான் வீரபாண்டியில் கோயிலில் குடியிருந்து அருளாட்சி செய்துகொண்டிருக்கிறாள். முதல் ஒருவாரம் கம்பம் கெளமாரிக்கு விழா அமர்க்களப்படும். அதன் பிறகு வீரபாண்டி கெளமாரியம்மனுக்கு திருவிழா, கோலாகலமாக நடைபெறும். இந்த விழா ஒருவாரம் சீரும்சிறப்புமாக நடந்தேறிய பிறகு, பெரியகுளத்தில் அமைந்துள்ள அம்மனுக்கு விழா விமரிசையாக நடைபெறும்.

தேனி, சின்னமனூர், கோம்பை, தேவாரம், பண்ணைபுரம், உத்தமபாளையம், கம்பம், அல்லிநகரம், பெரியகுளம், தேவதானப்பட்டி, வருசநாடு, இந்தப்பக்கம் ஆண்டிப்பட்டி வரைக்கும் உள்ள மக்கள், வீட்டில் ஏதேனும் சிக்கல், பிரச்சினை என்றால், எவருக்கும் நோவு என்றால், வீரபாண்டி கெளமாரியிடம் வேண்டிக்கொள்வார்கள். ‘இதையெல்லாம் சரிபண்ணு தாயே. உன் சந்நிதிக்கு வரேன்’ என்று பிரார்த்தனை செய்வார்கள்.

அதன்படி நிறைவேற்றித் தருவாள் கெளமாரி. சித்திரைத் திருவிழாவின் போது, அக்கினிச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள் பக்தர்கள். அதேபோல், அலகு குத்திக்கொண்டு வழிபடுகிற பக்தர்களும் இருக்கிறார்கள். ஆயிரம்கண் பானை எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.  

முல்லையாற்றங்கரையில் உள்ள சேற்றுமண் எடுத்து உடலெங்கும் பூசிக்கொண்டு ஊர்வலமாக வந்து, நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ‘மண்ணோடு மண்ணாப் போயிருக்க வேண்டிய உயிரை, நோயிலிருந்து காப்பாத்திட்ட தாயே’ என்று சேற்றுமண் நேர்ச்சை என்கிறார்கள் பக்தர்கள்.

ஏராளமான பக்தர்கள், ஆடு நேர்ந்துவிடுவார்கள். கோழி கொடுப்பார்கள். அதேபோல், ஆலயத்தில் கருப்பண்ணசாமியின் சந்நிதியும் அமைந்துள்ளது. கருப்பசாமியை வேண்டிக்கொண்டு, ஆடு, கோழி பலியிடுவது, பிறகு அதைச் சமைத்து எல்லோருக்கும் பிரசாதமாக வழங்குவதும் நடைபெறும்.

சித்திரை மாதத்தின் இறுதியில், மே மாதத்தின் முதல் வாரத்தில் திருவிழா தொடங்கும். தினமும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் திருவீதியுலா வருவார். அன்னவாகனம், சிம்மவாகனம், காமதேனு வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம் என ஒய்யாரமாக அமர்ந்து வீதியுலா வரும் அழகைக் காணக் கண் போதாது. ஓர் வெள்ளிக்கிழமை நாளில், விழாவின் போது, பிரமாண்டமான பூப்பல்லக்கில் வீதியுலா வருவார் கெளமாரியம்மன்.

கோயில் திருவிழா என்றாலே, கொண்டாட்டங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் குறைவிருக்காது. இன்றைக்கும் மாறாமல் இங்கே கேளிக்கைகளும் உற்சாகங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. திருவிழாவையொட்டி ஏராளமான கடைகள் முளைத்திருக்கும். பெண்களுக்கு, குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் விற்பனைக்கு இருக்கும். ராட்டினம் முதலானவை தவறாமல் இடம்பிடித்திருக்கும்.

விடியவிடிய கூத்து, கச்சேரி, நேர்த்திக்கடன், தரிசனம் என வீரபாண்டிப் பகுதியே அமர்க்களப்படும். பக்கத்தில் உள்ள மாவட்டக்காரர்களும் சென்னை மாதிரியான பெருநகரங்களில் குடியேறிவிட்டவர்களும் மறக்காமல், வீரபாண்டித் திருவிழாவுக்கு வருவார்கள். அப்படியே சுருளி அருவி, தேக்கடி, கும்பக்கரை அருவி என சுற்றிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

தேனி மாவட்டத்தின் மிகப் பிரமாண்டமான திருவிழா இதுதான். வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருவிழாவின் போது, அம்மனுக்கு வேண்டிக்கொண்டால், எல்லா நல்லதுகளையும் இனி பார்த்துப்பார்த்துச் செய்வாள். நம் எல்லோருக்கும் தாயாகத் திகழ்பவள், ஒரு அம்மாவைப் போலவே கனிவும் கருணையுமாக நன்மைகள் வழங்குவாள் என்று பூரிக்கின்றனர் பக்தர்கள்.

ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே

ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்

இதோ அதற்கு ஓர் உதாரணம்:

அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான்.

மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.

""ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள். "செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள். இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா அல்லது விதிவிலக்குகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்,'' என்று நினைத்தான் மன்னன். அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.

இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள். 

""மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்குக் களப்பயிற்சி தரப் போகிறேன். உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்.

உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும். அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்.

நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம். அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்து விடுவோம். அவன் அதை உண்டு உங்களை வாழ்த்த வேண்டும்..

இந்தப் பயிற்சி திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி மக்களின் பசி போக்கலாம்.''

மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான். ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது. மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு. மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள்.

அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.

முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார். நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது. 
சாக்குப்பையை நிரப்ப அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.

இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார். பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார். சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்று எண்ணி அப்படியே செய்த அந்த நபர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.

மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை. பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற நினைப்பில் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் போட்டு பையை நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார். ஒரு நாழிகைப் பொழுதில் வேலையை முடித்துவிட்டுத் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார்.

மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான். அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.

""இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள். அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள். சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும். அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம். அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.''

மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி தாங்காமல் மாண்டுவிட்டார்.

இரண்டாமவரோ அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார். ஆனால், அவர் உடல்நலம் கெட்டுவிட்டது. மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான்.

முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார். தான் சேகரித்த தரமான காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார். 

மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான்.

இந்தக் கதையில் உள்ள வாழ்வியல் தத்துவத்தை நச்சென்று விளக்குகிறது மகாபாரதத்தில் வரும் ஒரு ஸ்லோகம்.. அதன் உட்பொருள் இதுதான்.

ஒரு இடத்தில் ஆயிரம் பசுக்கள் இருக்கின்றன. தன் தாயைத் தேடி வரும் ஒரு கன்று அந்த ஆயிரம் பசுக்களில் தன் தாயைச் சில நொடிகளில் கண்டுபிடித்து அதனிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

அதேபோல், ஒருவன் செய்யும் வினையின் பயனானது அவன் எங்கிருந்தாலும் அவனைக் கண்டுபிடித்து அவனைச் சென்றடைந்துவிடும்.'' வினையை விதைத்துவிட்டு அறுவடைக்காலத்தில் சாமர்த்தியமாக வெளியூர் சென்று விட்டாலும் வினையிடமிருந்து தப்ப முடியாது. 

வினையை விதைத்தால் வினையை அறுவடை செய்தேயாக வேண்டும். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தேயாக வேண்டும்.

நாம் அனைவரும் நன்மை செய்கிறோமா, தீமை செய்கிறோமா என்று இறைவன் கண்காணிப்புக் கேமரா வைத்துக் கொண்டு பார்ப்பதில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று நமக்குப் பூரண சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டான். ஆனால் உங்கள் செயலின் பலனை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும் என்ற நியதியையும் அழுத்தமாக வைத்துவிட்டான். 

நீங்கள் உங்கள் பையில் நல்ல பழங்களைப் போடுகிறீர்களா.. இல்லை.. சருகுகளையும் அழுகிய பழங்களையும் போடுகிறீர்களா என்று யாருமே கண்காணிப்பதில்லை.. ஆனால் நீங்கள் சேகரித்ததை நீங்கள்தான் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே' என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள். அக்கிரமம் செய்பவன் இப்போதுதான் காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான்.

விரைவில் தனிமைச் சிறையில் அவற்றை உண்ண வேண்டிய காலம் வரும். அப்போது அவனுக்குப் பசியும் மரணமுமே பரிசாகக் கிடைக்கும். 

இது மனிதன் இயற்றிய சட்டம் இல்லை; இறைவன் வகுத்த நியதி. இதற்கு விதிவிலக்கு இல்லை

#Beleive_in_God #கடவுளை_நம்பு

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும் ?

வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும் ???


இதற்கான விடையை ஒரு கதை மூலம் பார்க்கலாம்.

'என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை' என்றான் ஒரு அரசன் ஞானியிடம்.

'உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா' என்று ஞானி கேட்டார்.

'என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. 

முறையாக நீதி செலுத்தப்படுகிறது. 

நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். 

ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. 

இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை' என்றான்.

'அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு' என்றார் ஞானி.

'எடுத்துக் கொள்ளுங்கள்'என்றான் மன்னன்.

'நீ என்ன செய்வாய்' என்றார் ஞானி.

'நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்' என்றான் அரசன்.

'எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். 

உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. 

நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.' என்றார். சரி என்றான் மன்னன்.

ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார். 

அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். 

அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.

'அது கிடக்கட்டும்' என்ற ஞானி 'நீ இப்போது எப்படி இருக்கிறாய்' என்று கேட்டார்.

'நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்'
'முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா.....???'

'இல்லை'

'அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்.....???

இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்.......???' 

விழித்தான் அரசன். ஞானி சொன்னார்.

'அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். 

இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். 

அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. 

நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். 

இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல. 

எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும். 

இதே மனநிலையுடன் நீ இந்த நாட்டை நீயே ஆட்சி செய்' என்று கூறி விடைபெற்றார் ஞானி.

ஐம்புலன்களையும் இடைவிடாமல் நெறிப்படுத்துபவன் மனம் ஒருமித்தவன் ஆகிறான். அவனிடம் சலனங்கள் ஏற்படுவதில்லை .

குட்டி கதை : கடவுள் நம்மோடு இருக்கிறார்...

குட்டி கதை : 
கடவுள் நம்மோடு இருக்கிறார்...

முனிவர் ஒருவர் ஆசிரமம் ஒன்றை நிர்வகித்து வந்தார்.மிகப் பழமையான ஆசிரமம் அது. ஒரு காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்தது அது. பக்தர்கள் எப்போதும் நிரம்பி வழிவார்கள். உலகமெங்கும் அந்த ஆசிரமத்துக்கு நல்ல பெயர் இருந்தது.

ஆனால் கொஞ்ச காலமாய் ஆசிரமம் பொலிவிழக்கத் துவங்கியதை உணர்ந்தார் முனிவர். காரணம், சீடர்களுக்குள் ஒற்றுமை இல்லை.

நூற்றுக்கணக்கான சீடர்கள் அந்த ஆசிரமத்தில் உண்டு. தான் என்கிற கர்வமும், போட்டி மனப்பான்மையும் அவர்களுக்குள் நிரம்பி, அடிக்கடி சீடர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்கள்.முனிவர் மிகவும் நொந்து போனார். சஞ்சலமடைந்தார். இப்படியே சென்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் ஆசிரமம் சீர் குலைந்து விடுமோ என்ற கவலை அவரை வதைத்தது.

இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவது எப்படி என்று யோசித்தார். அப்போது முனிவரின் பால்ய கால நண்பரான சகல கலைகளையும் கற்ற இன்னொரு முனிவ்ர், வட நாட்டிலிருந்து அங்கே வருகை புரிந்தார். இருவரும் அளவளாவினார்கள்.

வட நாட்டு முனிவர் , ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்தார். அத்தனை சீடர்கள் முன்னிலையில் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்.

அதிலே ஓர் ஆச்சர்யமான விஷயத்தை அவர் சொன்னார்.

‘‘இந்த ஆசிரமம் பற்றி ரகசியம் ஒன்றை நான் சொல்லப் போகிறேன். அதைச் சொல்வதற்காகத்தான் கயிலையிலிருந்து இங்கே நான் வந்திருக்கிறேன். கடவுள் சிவ பெருமான் , கயிலையில் என்னிடம் அசரீரியாகப் பேசினார்.

அவர் சொன்னது இதுதான். இந்த ஆசிரமத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான சீடர்களில் ஒருவராக மனித உருவில் தானும் இருப்பதாகச் சிவபெருமான் என்னிடம் கூறினார். அந்த அற்புத தகவலைச் சொல்வதற்காகவே நான் இங்கே வந்தேன்.

சிவனாக இங்கேயிருக்கும் சீடர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை. அந்த சக்தி என்னிடம் இல்லை. அதனால் பொதுவாக அத்தனை சீடர்களையும் நான் வணங்குகிறேன்.’’ என்று கண்களில் நீர் கசிய கை கூப்பினார் வடநாட்டு முனிவர்.மறுநாளிலேயே ஆசிரமத்தில் மாற்றம் தெரிந்தது. சீடர்கள் தங்களுக்குள் இருந்த சச்சரவை மூட்டை கட்டி வீசினார்கள்.

ஒவ்வொருவரும் மற்றவரை மரியாதையாகப் பார்த்தார்கள். மற்றவரின் திறமையை மதித்தார்கள்.
இதில் யார் சிவபெருமான் என்று சரியாகத் தெரியாததால் அனைவரையும் அன்புடன் நோக்கினார்கள். பணிவுடன் நடந்து கொண்டார்கள்.ஆசிரமத்தின் சங்கடங்கள் தீர்ந்தன. மீண்டும் ஆசிரமத்தின் புகழ் பரவத் துவங்கியது.

இரண்டு முனிவர்களும் பேசி வைத்துக் கொண்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கலாம். அதைப் பற்றி நமக்கு என்ன கவலை? ஆனால் நான் சொல்ல வந்தது வேறு.
நம்மைச் சுற்றியும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். கடவுள் மனித உருவத்தில் வருபவர் என்பதால், நம்மைச் சுற்றியுள்ளவர்களில் ஒருவராக கடவுளும் இருக்கக் கூடும் என்பதை உணருங்கள். அனைவரையும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்துங்கள்.

நீங்கள் கடவுளைக் கண்டுபிடிக்கிறீர்களோ இல்லையோ, மற்றவர்கள் உங்களை மதிப்புடன் ஒரு கடவுள் போன்று நடத்துவதை உணர்வீர்கள்.உங்களைச் சுற்றி அன்பு மயமாவதைப் புரிந்து கொள்வீர்கள்...

குட்டி கதை : புறம் பேசாதீர்...

குட்டி கதை : புறம் பேசாதீர்...

காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.

ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார். மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான். மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான்.

மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், ‘மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா?. அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு!’ என்று கூறி விட்டு போய்விட்டார். 

மன்னன் நடுங்கி விட்டான். தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருந்தினான்.
தான தர்மங்கள் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான். அரண்மனை ஆடம்பர சுகத்தை மறந்தான். தன் நாட்டிலுள்ள இளம்பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பிவைத்தான். இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.

அரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டி விட்டனர். ‘மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்’ என்று திரித்துக் கூறினர். இப்படியாக பல விமர்சனங்கள் வந்தவண்ணமிருந்தன.

ஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள். அந்த கணவன், ‘நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?’ எனக் கேட்டான்.
‘அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு’ என்று பதிலளித்தாள் அந்தப் பெண்.
அதற்கு அவளது கணவன், ‘ஓ! தானம் கொடுப்ப தாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா?’ என்றான். அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாயைப் பொத்தினாள்.

பின் மெதுவாக தன் கணவனிடம் கூறத்தொடங்கினாள். ‘சுவாமி! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்பதற்காக தயாரானது. அவ்விஷயம் மன்னனுக்குத் தெரிய வரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு, கன்னியருக்கு தானதர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறான்.

ஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசி கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள். மேலும் அடுத்தப் பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள்’ என்று கூறினாள். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அவளது கணவன்.

தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும்.

 உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக்கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக்கொள்கிறார்கள். அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.

நாம் செய்த பாவத்தை சுமக்கவே, நமக்கு இந்த ஒரு பிறவி போதுமா என்பது தெரியாத நிலையில், தேவையில்லாமல் புறம்பேசி அடுத்தவரின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன!

தாமிரபரணி கரையோர நவகைலாய சிவாலயங்கள்...

தாமிரபரணி கரையோர 
நவகைலாய சிவாலயங்கள்...

தோஷங்களை விலக்கும் ஆலயங்கள் பல்லாயிரம் உள்ளபோதிலும் நவ கைலாய வழிபாடு தோஷங்களை விலக்கவும் நலம் பெறவும் உதவும் என்பது நம்பிக்கை. பொதிகை மலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அகத்திய பெருமானின் முதல் சீடரான உரோமச முனிவர் சிவமுக்தி நிலையை அடைய வேண்டி சிவபெருமானை வணங்கினார். சிவபெருமான், மாமுனிவர் அகத்தியர் வழியே அவரது சீடருக்கு வழியைக் கூற விரும்பினார்.

பின்னர், தனது சீடரிடம் அகத்தியர் கூறுகையில், தாமிரபரணியில் 9 மலர்களை அனுப்புகிறேன். இந்த மலர் ஒவ்வொன்றும் எங்கு நிற்கிறதோ அந்த இடத்தில் சிவலிங்கத்தை வைத்து வழிபடு. நீ வணங்கும் சிவலிங்கம் ஸ்ரீகைலாசநாதர் என்றும், உமையாள் ஸ்ரீ சிவகாமி அம்மை என்றும் விளங்கும். அதன்பின்பு தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் சிவமுக்தி பேறு அடையலாம் என்றார். அகத்தியரின் கூற்றுப்படியே அருள்தரும் நவகயிலாய கோயில்கள் தாமிரபரணி நதிக்கரையில் திருநெல்வேலி- தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளில் சிவபெருமானின் பேரருளால் உருப் பெற்றுள்ளன.

பாபநாசம்: முதல் கோயில் பாபநாசமாகும். இங்கு ஸ்ரீபாபநாச நாதர் என்ற ஸ்ரீகைலாசநாதர் - உலகம்மை கோயில் உள்ளது. சூரியபகவான் அம்சம் கொண்டது. திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ. தொலைவில் பொதிகை மலையின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. தாமிரபரணியின் முதல் தடுப்பணை அமைந்துள்ளதால் ஆண்டு முழுவதும் பக்தர்கள் நீராட வசதி பெற்ற திருத்தலம்.

சேரன்மகாதேவி: இரண்டாவதாக சேரன்மகாதேவியில் உள்ள ஸ்ரீஅம்மைநாதர் என்ற கைலாசநாதர் -ஆவுடைநாயகி திருக்கோயில். திருநெல்வேலியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. சந்திரபகவான் அம்சம் கொண்ட தலம்.

கோடகநல்லூர்: மூன்றாவதாக கோடகநல்லூரில் உள்ள கைலாசநாதர்- சிவகாமி அம்மை திருக்கோயில். திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் நடுக்கல்லூரியில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. செவ்வாய்பகவான் அம்சம் கொண்ட தலம்.

குன்னத்தூர்: நான்காவதாக குன்னத்தூரில் உள்ள அருள்மிகு கோதை பரமேஸ்வரன் என்ற கைலாச நாதர்- சிவகாமசுந்தரி திருக்கோயில். திருநெல்வேலியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் மேலத்திருவேங்கடநாதபுரம் அருகே உள்ளது. ராகுபகவான் அம்சம் கொண்ட தலம்.

முறப்பநாடு: ஐந்தாவதாக தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாட்டில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் -சிவகாமி அம்மை திருக்கோயில். திருநெல்வேலி- தூத்துக்குடி சாலையில் 17 கி.மீ. தொலைவில் உள்ளது. குருபகவான் அம்சம் கொண்ட தலம்.

ஸ்ரீவைகுண்டம்: ஆறாவதாக ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-சிவகாமி அம்மை திருக்கோயில். திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. சனிபகவான் அம்சம் கொண்ட தலம்.

தென்திருப்பேரை: ஏழாவதாக தென்திருப்பேரையில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-அழகிய பொன்னம்மை திருக்கோயில்.
 திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் சுமார் 38 கி.மீ. தொலைவில் ஆழ்வார்திருநகரி அருகே அமைந்துள்ளது. புதன்பகவான் அம்சம் கொண்ட தலம்.

ராஜபதி: எட்டாவதாக ராஜபதியில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-பொன்னம்மாள் என்ற சிவகாமி அம்மை திருக்கோயில். தென்திருப்பேரையில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ளது. கேது பகவான் அம்சம் கொண்ட தலம்.

சேர்ந்தபூமங்கலம்: ஒன்பதாவதாக சேர்ந்தபூமங்கலத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-அழகிய பொன்னம்மாள் என்ற சிவகாமி அம்மை திருக்கோயில். தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் ஆத்தூரில் இருந்து புன்னக்காயல் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. சுக்கிரன் பகவான் அம்சம் கொண்ட தலம்.

நவகைலாய கோயில்களில் பக்தர்கள் மிகவும் எளிமையாக வழிபட உதவும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கோட்டம் சார்பில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புப் பேருந்துகள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. காலையில் புறப்படும் பயணிகள் அனைத்து ஆலயங்களிலும் தரிசனம் செய்துவிட்டு இரவில் திருநெல்வேலியை அடையலாம்.

முருகனை பற்றிய வித்தியாசமான ஆய்வு

முருகனை பற்றிய வித்தியாசமான ஆய்வு ......

ஏறத்தாழ 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள்.தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பு உண்டு. வயதாகும் நிலையை அதாவது Aging Process -ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூதஉடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

’சரம்’ என்றால் மூச்சு. ’சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்’ என்பது இவரது தத்துவம். சரத்தை வணப்படுத்திக் காட்டியதால் ‘சரவணன்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

 மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது; சிவமாக வேண்டும். கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றிக்கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி. அதை அவரே நிரூபித்துக் காட்டியதால், ‘பெம்மான் முருகன் பிறவான்; இறவான்...’ என்று அருணகிரி நாதரால் பாடப் பெற்றார்.

அகத்தியர், போகர், ஔவையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார் உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய மகான்கள். உலகில் முருகனை அறியாத
தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள் எந்த நாட்டிலும் இல்லை. முருகக் கடவுள் இல்லாத ஒரு நபரல்ல, மனிதனாக இருந்தவர் மகானாக மாறி இருக்கிறார்.

"தமிழ் கடவுள் முருகன் என்கிறாய் ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை" என முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர் பற்றியும் அறிந்து கொள்ள மானுடராகிய நமக்கு இன்னும் ஞானம் போதாது 

இருப்பினும் அவருக்கு மனைவியர் இரண்டு பேர் எதற்கு என்பதை இந்த பதிவில் பார்ப்போம் .அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் சுழுமுனை என்றால் என்ன என்பதினை தெரிந்து கொள்ள வேண்டும். மகான் ஸ்ரீமத்சத்குரு சாந்தானந்த சுவாமிகள் தன் கந்தகுரு கவசத்தில் சொல்வதினை பாருங்கள்.

"நடுனெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்
பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய்.
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா"

சுழுமுனை என்பது மானுட உடலில் உள்ள ஒரு மைய நரம்பு. நமது உடலில் இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள் எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம், கண்கள், மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம், கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச் சொல்லலாம் இவை உடலின் இடது புறமாகவும் வலது புறமாகவும் ஒரு மையத்தினைச் சுற்றி பின்னிப் பினைந்து உள்ளன. 

அந்த மையமே சுழுமுனை என்பது
ஆகும். இன்னும் விரிவாக சொல்லப் போனால் நமது உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக இல்லாமல் ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள் எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது உடலின் மத்தியிலேயே அமைகின்றன.

இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து பார்த்தால் மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்

1.நெற்றி (பிரம்மந்திரா)
2.தொண்டைக் குழி (ஆங்ஞை)
3.மார்புக்குழி (விசுத்தி)
4.தொப்புள் குழி (மனிப்புரம்)
5.ஆண் /பெண் குறி (சுவாதீஸ்டன்)
6.மலக்குழி (மூலாதாரம்)

இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால் இனைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை என்பதாகும். இந்த சுழுமுனை புருவமுடிச்சிலிருந்து தலையில் விரிந்து பின் குவிந்து ஒடுங்குகிறது இந்த தலைப்பரப்பினை பெரியோர்கள் சாஹஸ்ரா எனவும் அர்ஸ் எனவும் அழைப்பர். மருத்துவர்களின் லோகோவான கீழுள்ள படத்தினைப் பார்த்தால் இது எளிதாக புரியும். 

முருகன் கையிலுள்ள வேலும் இந்த
சுழுமுனை குறியீடே. வேலின் குவிந்த பரப்பு நமது நெற்றியையும் வேலின் கீழுள்ள தண்டானது மற்ற 6 குழிகளை இணைக்கும் சுழுமுனை கோடாகவும் உள்ளது. மருத்துவர்களின் லோகோவில் இடது
புறமாகவும் வலது புறமாகவும் சுழுமுனையைப் பின்னிப் பினைந்து செல்பவை நமது அவயங்கள். வலது புறம் இருப்பது பிங்கலை இடது புறம் இருப்பது இடகலை.இதைத்தான் கந்தகுருகவசத்தில் ஸ்ரீமத்
சத்குரு சாந்தானந்த சுவாமிகள் சொல்லுகிறார்.

"இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்"

எனவே இடது புறமும் வலது புறமும் உள்ள அவயங்களை இயக்கி இயங்கச் செய்வது இந்த
சுழுமுனையே சுழுமுனை தத்துவத்தினை அறிந்து கொண்டால் எல்லாம் வல்ல இறைவனையும் அறிந்திடலாம் குண்டலினி சக்தி எனச் சொல்லப் படுவதும் இந்த சுழுமுனை முடிச்சான நெற்றிப் பரப்பேதான். ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இறைவன் உறைகிறான். காண்பன யாவற்றிலும் இறைவன்
உள்ளான். இதையே கந்த குரு கவசத்தில் இப்படி சொல்லுகிறார் சதானந்த சுவாமிகள்

 "உள்ளொளியாய் இருந்து 
உன்னில் அவனாக்கிடுவான் 
தன்னில் உனைக்காட்டி 
உன்னில் தனைக்காட்டி 
எங்கும் தனைக்காட்டி 
எங்குமுனைக் காட்டிடுவான்"
சுழுமுனையைப் பற்றி தெரிந்து கொண்டாயிற்று இன்னும் தலைப்புக்கு வரவில்லையே என திட்ட வேண்டாம். ஒவ்வோரு உயிரிலும் உள்ள சுழுமுனையே முருகன் இடகலை பிங்கலை என இடப்புறமும்
வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி, தெய்வானை. ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே. ஆனால், மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால் இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்.

இறுதியாக ஒன்று கடவுள் ஒருவரேஅவர் எவராலும் பெறப்படவும் இல்லை. அவர் எதையும் பெற்றிறுக்கவும் இல்லை. எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு மனைவியர் இரண்டு என்பது இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர வேறொன்றும் இல்லை. முருகன் என்பது மனிதன் இல்லை சத்தம் ஓசை சிவன் படைப்புக்களை சத்தமாகி முருகன் ஊடாகவே உருவாக்குகிறான் உருவாக்கி கொண்டு இருக்கிறான் 

அதனாலே ஓசையனசத்ததின் ஊடாக உருவாகும் தமிழ் மொழிக்குகடவுள் முருகன் என்றார் . எமது உடலில் இதயத்தில் சத்தம் கேட்டுக்கொண்டு இருக்கிறது அது சத்தம் ஓசை முருகன் அந்த சத்தம் எமது இதையத்தில் இல்லை என்றால் உயிர் இறந்து விட்டது உயிர் இருந்தால் தான் படைப்பு உருவாகும் .

ஒரு மொழிக்கு ஓசை கொடுப்பதை என்றால் உலக அறிவான தகவல்களை ஆவனப்படுத்த வேண்டும் எனவே ஆவணப்படுத்தாத அறிவான தகவல் மனித ஆயுலுடன் முடிந்து போகும் எனவே எனவே என்னதான் ஓசை படைப்பாக இருந்தாலும் அதை ஆவணப்படுத்தாட்டி வெறும் ஓசையாக அதன் அர்த்தம் கருத்து தெரியாத வெறும் ஓசையாகவே உணர்வோம். எனவே ஆவணப்படுத்தும் எழுத்து வடிவத்தை
பிள்ளையார் என்று அழைத்தார்

அகத்தியர் & இராவணன் போன்ற மகாண்கள். சிவன் அணுத்துகள் atom , என்பதை உணர்ந்த அதந்தியர் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும் சிவனை சிவசத்தியன சிவலிங்கத்தை வழிப்பட சிவ பக்தர்கள். முதல் தமிழ் சங்க தமிழ் மொழி ஓசை ஊடக உருவாக்க பட்டமையல் ஓசை முருகன் என்றனர் நடராசர் கையில் உள்ள உடுக்கு ஓசையை குறிக்கிறது. முருகனிடம் உள்ள வேல் மனித மூளைக்குல் இருக்கு செவ்வேல் குறிக்கும் 

அதவது pinnal இதில் இருந்துதான் மெலட்னோன் என்ற சுரப்பு இரவு சுரந்து உடலை சமநிலை சீர் செய்கிறது. இதை மூன்றாம் கண் என்றும் சொல்வார்கள். இதனாலே தான் சிவனின் மூன்றாம் கண்ணில் இருந்து முருகன் தோன்றினார்கள் என்றும் சொல்கிளார்கள் சிவன் மனித உடலில் தலையில் உருவாக்கி இருப்பது தான் செவ்வேல்..

இதை முருகனுக்கு சூரனை அழிக்க சக்தி கொடுத்தார் என்பதன் பொருள் அறியாமை இருளில் மனிதன் மிருகங்கள் போன்று வாழமல் மனித மூளையில் உள்ள செவ்வேலை பயன்படுத்தி அறியாமை என்ற சூரனை வதம் செய்து அறிவுடன் வாழ செல்லும் வரலாறு விந்து கட்டுதல் என்றொரு பயிற்சி நிலை யோகத்தின்கண் உள்ளதுதான், என்ற உண்மையும், அது சாதாரண மக்களுக்கு சொல்லப்பட்டதல்ல என்றும் உணர்வதுடன் அதன் தன்மையையும் உணர்ந்திடலாம்.

ஞானம் பெறுதலின் ஒரு படிநிலையே விந்து கட்டுதலாகும் என்றும் அதுவே முடிவானது அல்ல என்றும் அதை மூன்றாம் படி நிலையாகிய யோகநிலைதனை ஆறுமுகனார் அருளினால் பெற்றிட்ட யோகிகளால்தான் செய்திட இயலும் என்றும் அறியலாம். பெண்பாலிலுள்ள சுரோணிதமும், ஆண்பாலிலுள்ள சுக்கிலமும் சேர்ந்து கருத்தரித்து உடம்பும் உயிரும் உண்டாகிறது. 

தந்தையிடமிருந்து உயிரும் தாயிடமிருந்து உடம்பும் தோன்றினாலும் தோன்றிய அந்த உடம்பும் உயிரும், நூறு ஆண்டுகள் வரை நட்புடன் இருந்து உடம்பும் உயிரும் பிரியாமல் நட்போடு வாழ்ந்தாலும் ஒரு காலத்தில் எப்படியாவது உடம்பை விட்டு உயிர் பிரிந்து போய் விடுகிறது. இதுவே இயற்கையின் நியதியாகும். பரு தேகமான ஆணும், பெண்ணும் கூடினால், உயிரும் பிரிந்துப் போகக்கூடிய பரு உடம்பும் உண்டாகிறது. ஆனால் சூட்சும தேகத்தை உண்டாக்கவல்ல இடது கலையாகிய பெண்ணும், வலது கலையாகிய ஆணும் சேர்ந்தால் சூட்சும தேகம் உண்டாகும்.

ஆனால் இடது கலையும் வலது கலையும் ஒருபோதும் சாதாரணமாக ஒன்று சேராது. ஆனால் ஒன்று சேராத இடது கலையையும் வலது கலையாகிய சூரிய கலையையும் சுழிமுனையாகிய புருவ மத்தியில் ஒன்று சேர்த்தால் அழிகின்ற பரு உடம்பும் அழியாது, அழியாத சூட்சும தேகமும் தோன்றும், உயிரும் தோன்றி எல்லாம் ஒன்றினுள் ஒன்றாய் கலந்து என்றும் அழிவற்ற மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்று மாறாத இளமை கொண்ட ஒளிதேகமாக மாறி விடும். 

இந்த மாபெரும் இரகசியத்தை முதலில் அறிந்த முதுபெரும் தலைவன் முருகப்பெருமான் தான் பெற்ற அந்த பேரின்பத்தை தனது சீடனான அகத்தியம் பெருமானைச் சார்ந்து சேராத இடது வலது கலைகளை சுழிமுனையில் ஒடுக்கி சேர்ந்திட செய்து அகத்தியம் பெருமானையும் மரணமிலாப் பெருவாழ்வை பெறச் செய்தார் என்பதையும் அறியலாம்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா