புதன், 25 செப்டம்பர், 2024

சுரக்காய் அல்வா செய்வது எப்படி ....?

சுரக்காய் அல்வா செய்வது எப்படி ....?


சுரைக்காய் இயற்கையிலேயே நீர்ச்சத்து நிறைந்த காய். இதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் இ நிறைந்து உள்ளது. மேலும் இதில் சேர்க்கப்படும் நட்ஸ் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

இப்பொழுது இந்த சுரைக்காய் வைத்து எப்படி சுவையான அல்வா செய்வது என்பதை பார்ப்போம்.

சுரைக்காய் அல்வா:


அரை கிலோ சுரைக்காயை தோல் சீவி நன்றாக துருவி கொள்ள வேண்டும். துருவிய சுரைக்காயை அரை லிட்டர் பாலில் வேக வைக்க வேண்டும். இது வேகும் நேரத்தில் மற்றொரு பாத்திரத்தில் 400 கிராம் சீனி எடுத்து அதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக் கொள்ள வேண்டும்.

பாகு கம்பி பதம் வந்த பின்னர் வெந்த சுரைக்காயை சர்க்கரை பாகில் சேர்த்து வேக விட வேண்டும். பாகும் சுரைக்காயும் ஒன்று சேர்த்துக் கிளறி விடவும். 150 கிராம் நெய் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கிளற வேண்டும்.

இப்பொழுது 100 கிராம் கோவாவையும் இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். இது கடாயில் ஒட்டாமல் சுருண்டு வரவேண்டும். அப்படி சுருண்டு வரும்பொழுது பத்து முந்திரிப் பருப்பு, திராட்சை என தேவையான நட்ஸ்களை நெய்யில் வறுத்து இதன் மேல் சேர்த்து, சிறிதளவு ஏலக்காய் தூள் தூவி கிளறி இறக்கி விடலாம் ஆறிய பின்பு பரிமாறலாம்.

அவ்வளவுதான் சுவையான குழந்தைகளுக்குப் பிடித்த சுரைக்காய் அல்வா தயார்.
Previous Post
Next Post

0 Comments: