சனி, 28 செப்டம்பர், 2024

தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்பு அடை செய்வது எப்படி ....?

தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்பு அடை செய்வது எப்படி ....?


ஒவ்வொரு ஊருக்கும் சிறப்பாக தனித்தனி சமையல் ரெசிபிகள் இருக்கும். அந்த ரெசிபி அந்த நாட்டின் சிறப்பையும் தனி சுவையையும் பிரதிபலிக்கும் விதத்தில் அற்புதமாக தனித்துவமாகவும் இருக்கும். வகையில் தற்பொழுது சோழவள நாடு தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்பு அடை செய்வதற்கான ரெசிபியை இதில் பார்க்கலாம்..

அதை செய்வதற்கு தேவையான பொருட்களை முதலில் எடுத்துக் கொள்ளலாம் ஒரு கப் பச்சரிசி, ஒரு கப் புழுங்கல் அரிசி, ஒரு கப் உளுந்து, ஒரு கப் துவரம் பருப்பு, ஒரு கப் கடலைப்பருப்பு போன்ற பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை ஒன்றாக சேர்த்து நான்கு முதல் ஐந்து முறை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் பருப்புகள் முழுவதும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நான்கு முதல் ஐந்து மணி நேரம் தனியாக ஊற வைக்க வேண்டும்.

5 மணி நேரம் கழித்து ஒரு மிக்ஸி ஜாரில் காரத்திற்கு ஏற்ப 5 பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து நாம் ஊற வைத்திருக்கும் பருப்பில் பாதி அளவு பருப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அதை மிக்ஸி ஜாரில் மீதி இருக்கும் பருப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது முறை ஊற வைத்த பருப்பு அரைக்கும் பொழுது அரை கப் தேங்காய் துருவல், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். நாம் இதில் ஒரு உளுந்து சேர்க்கும் பொழுது கருப்பு உளுந்து சேர்த்தால் சற்று சுவை கூடுதலாக இருக்கும்.

இப்பொழுது நாம் அரைத்து வைத்திருக்கும் மாவு வடை சதம் இல்லாமல் அதை தோசை பதம் இல்லாமல் சற்று கெட்டியாகவும் இருக்க வேண்டும். இந்த மாவு கரைசலுடன் அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய மல்லி கருவேப்பிலை இலைகள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்

அடுத்ததாக அதே மாபெரும் பல்லு பல்லாக கீறிய அரை முறி தேங்காய், கொடியாக நறுக்கிய சுரைக்காய் பாதிக்கப், பொடியாக நறுக்கிய பல்லாரி வெங்காயம் 2 சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு தேவைப்பட்டால் கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை நல்லெண்ணெயுடன் வதக்கி சேர்த்துக் கொள்ளலாம். முருங்கைக்கீரை சேர்த்துக் கொள்வது அவரவர் விருப்பம் மட்டுமே.

இப்பொழுது அடை செய்வதற்கான மாவு தயாராக உள்ளது. இந்த மாவு வடை போன்ற கெட்டியாக இல்லாமல் தோசை மாவு போல தண்ணியாகவும் இல்லாமல் இரண்டிற்கும் நடுப்பட்ட பக்குவத்தின் சரியாக இருக்க வேண்டும்.

இப்பொழுது நடுப்பக்கம் சற்று குழிவாக இருக்கும் தோசை கல்லை அடை செய்வதற்கு பயன்படுத்த வேண்டும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடு படுத்தி அதில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவை இரண்டு குழி கரண்டி எடுத்து தோசை பதத்திற்கு வட்டமாக தட்டி தோசை கல்லில் போட்டு எடுக்க வேண்டும்.
முன்னும் பின்னும் பொன்னிறமாக வரும் வரை மிதமான தீயில் மாற்றி போட்டு வேக வைக்க வேண்டும்.
Previous Post
Next Post

0 Comments: