புதன், 11 செப்டம்பர், 2024

பெண்களே உங்கள் கர்ப்பப்பை சினைப்பை அளவு என்ன?

பெண்களே உங்கள் கர்ப்பப்பை சினைப்பை அளவு என்ன?

கர்ப்பை சுருங்கால் மற்றும் சினைப்பை சுருங்காமல் இருக்கவேண்டும் என்றால் மாதவிடாய் மாதமாதம் சரியாக வரவேண்டும் அல்லது வரவைக்க வேண்டும்.

அதற்க்கான வீட்டு வைத்தியம் என்ன?

‘பெண் உடலின் ஆதாரமே கர்ப்பப்பை தான். ஒரு பெண்ணின் வாழ்வில் சகலத்தையும் தீர்மானிப்பதில் அதன் பங்கு மகத்தானது. கர்ப்பப்பையில் ஏற்படுகிற பிரச்னைகள் பல நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடிவதும் உண்டு.

அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பான கர்ப்பப் பையின் அளவில் ஏற்படுகிற மாறுதல்கள்கூட அவளது ஆரோக்கியத்தையும் நிம்மதியையும் கெடுக்கலாம்.

கர்ப்பப்பை அளவு எப்படியெல்லாம் பிரச்னைகளைக் கொடுக்கும்.

பொதுவாக 18 முதல் 25 வயது வரைக்குமான பெண்களின்……

கர்ப்பப்பை 7 முதல் 7.5 செ.மீ அளவிலும்……

சினைப்பை அளவு 3.5 Cm அளவிலும் இருக்கும்.

மாதவிலக்கின் போது புரொஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் சுரந்து கர்ப்பப்பையை வளரச் செய்யும். 

மாதவிலக்கு சுழற்சியில் சில கோளாறுகள் ஏற்படும்போது, கர்ப்பப் பையின் வளர்ச்சியும் தடைப்பட்டு, கர்ப்பப்பை சுருங்கும். இந்த நிலையை எதிர்கொள்கிறவர்களுக்கு புரொஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களை ஆங்கில மருத்துவத்தில் செயற்கையாக கொடுத்தால்தான் மாதவிலக்கு வரும்.

 எண்டோமெட்ரியல் தடிமன் அளவு

கருப்பையின் உள் அடுக்கின் சிறிய அளவு……

எண்டோமெட்ரியத்தின் தடிமன் குறைந்தது……  

0.6 செ.மீ கூட 0.7 செ.மீ 

ஆக இருக்க வேண்டும். 

0.5 செ.மீ தடிமன் கொண்ட 0.5 செ.மீ கீழ் இருந்தால் கர்ப்பம் தரிக்க முடியாது.

கருவுற்ற முட்டையை பொருத்துவதற்கு சாதகமான நிலைமைகளை உருவாக்குவதே எண்டோமெட்ரியத்தின் முக்கிய செயல்பாடு. 

கருத்தரிப்பதற்கு, கருப்பையின் எண்டோமெட்ரியத்தின் குறைந்தபட்ச தடிமன் குறைந்தது 7,மி.மீ இருக்க வேண்டும். 

கர்ப்பத்தின் தொடக்கத்துடன், உள் அடுக்கின் அமைப்பு கணிசமாக மாறுகிறது.

இயற்கையாகவே சில பெண்களுக்கு கர்ப்பப் பையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கலாம். 

சினைப்பையில் பிரச்னை இருந்து மாதவிலக்கு சுழற்சி பாதிக்கப்பட்டு, அதன் காரணமாகவும் கர்ப்பப்பை வளர்ச்சி பாதிக்கப்படும். 

சினைப்பை பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுத்து ஹார்மோன் மருந்துகள் கொடுத்தால், மாதவிலக்கு சுழற்சியும் முறைப்படும். கர்ப்பப்பையும் சாதாரண அளவுக்கு வரும்.

மெனோபாஸ் காலத்திலும் கர்ப்பப்பையானது தன்னுடைய அளவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சிறியதாக ஆரம்பிக்கும். அதாவது மெனோபாஸுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கர்ப்பப்பை, அவள் பூப்பெய்துவதற்கு முன்பு இருந்த மாதிரி சின்ன அளவுக்குத் திரும்பும்.

கர்ப்பப்பை வளர்ச்சி இல்லாதது எப்படி பிரச்னைக்குரிய விஷயமோ, அதே மாதிரிதான் கர்ப்பப்பை வீக்கமும் பிரச்னைக்குரியது.❗

கர்ப்பப் பை வளர்ச்சி சீராக உள்ள பெண்ணுக்கு மாதத்தில் 2 முதல் 3 நாட்களுக்கு மாதவிலக்கு இருக்கும். 

மாதவிலக்கின் போது வெளியேறும் ரத்தத்தின் அளவு 50 முதல் 100 மி.லி அளவு இருக்கும். 100 மி.லியை தாண்டினாலே பிரச்னைதான். 
அதன் தொடர்ச்சியாக…… 

ரத்தசோகை வரும். ரத்தசோகை பிரச்னை சாதாரணமானதாக நினைத்து அலட்சியப்படுத்தக்கூடியதில்லை.
அதனால்…… 

இதயம், 

சிறுநீரகம், 

நுரையீரல் 

என்று உடலின் ஒட்டுமொத்த உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகும். தவிர, மாதவிலக்கின்போது அதீதமான ரத்தப்போக்கு ஏற்பட்டு, கூடவே 

வயிற்றுவலி, 

களைப்பு, 

வேலையே செய்ய முடியாத நிலை 

என்று மற்ற அறிகுறிகளும் இருந்தால், அவர்களுடைய கர்ப்பப்பை வீக்கமாக இருக்கலாம் என்று சந்தேகப்படலாம். இந்தப் பிரச்னைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம்.

மாதவிலக்கு சுழற்சி சரியில்லாத பெண்களும், 

கர்ப்பம் தரிக்காத பெண்களும், 

அதிக ரத்தப்போக்கை சந்திக்கிற பெண்களும் 

ஸ்கேன் மூலமாக கர்ப்பப் பை அளவைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்கேற்ற சிகிச்சைகளையும் காலத்துக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும்.’’

மாதவிலக்கு விலக்கு பிரச்சனைக்கு 
இய‌ற்கை வைத்தியம்.

நாள்பட்ட வராமல் இருந்த மாதவிடாய் Irregular Periods…

ஒரே நாளில் வந்து விடும்.

பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்படும். ஆனால் ஒரு சில உணவு மாற்றங்கள் காரணமாக இன்றைக்கு பல பெண்கள் PCOD என்ற மாதவிடாய் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். 

எப்படிப்பட்ட மாதவிடாய் நாள்பட்ட மாதவிடாய் வராமல் இருந்தாலும் சரி ஒரே ஒரு முறை இந்த முறையை பயன்படுத்தி குடித்து வாருங்கள் ஒரே நாளில் மாதவிடாய் வந்து விடும்.

தேவையான_பொருட்கள்:

1. ஒரு பெரிய வெங்காயம்

2. ஓமம் 1 ஒரு ஸ்பூன்

3. எலுமிச்சை பழ சாறு 2 ஸ்பூன்.


செய்முறை:

1. ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் பெரிய வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டுக் கொள்ளவும்.( சிறிய வெங்காயமும் பயன்படுத்தலாம்).

2. வெங்காயத்துடன் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் எரிய விடவும்.
3. வெங்காயம் ஒரு கொதி வந்தவுடன் அதில் ஒரு ஸ்பூன் ஓமத்தை சேர்க்கவும்.

4. ஒரு கிளாஸ் தண்ணீர் அரை கிளாஸ் வரும் வரை சுண்டக் காய்ச்சவும்.

5. இப்பொழுது அடுப்பை அனைத்து விட்டு அந்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.

6. இந்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கொள்ளவும்.

7. இதில் சுவைக்காக எதுவும் சேர்க்கத் தேவையில்லை.

பயன்படுத்தும் முறை:

1. ஐந்து மாதங்களுக்கு மேல் மாதவிடாய் வராமல் இருந்தால் காலையில் வெறும் வயிற்றில் இதனை பருகலாம் மற்றும் இரவு படுக்கச் செல்லும் முன் இதை பருகலாம். அடுத்த நாளே மாதவிடாய் வந்து விடும்.

2. ஒரு மாதம் மட்டுமே தள்ளிப்போய் இருந்தால் இரவு படுக்க செல்லும் முன் குடித்தால் அடுத்த நாள் காலையில் மாதவிடாய் வந்து விடும்.

3. பல மாதங்கள், வருடங்கள் மேல் ஆகி இருந்தால் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு காலையில் வெறும் வயிற்றிலும் மற்றும் இரவு 
படுக்கச் செல்லும் முன்பு 
எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக மாதவிடாய் வெளியேறி விடும்.

எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்னை தீரும்.

கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் எடுத்து பொடித்து கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் 5 கிராம் பொடியை போட்டு கொதிக்க விட்டு கஷாயமாக்கி குடித்தால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும். அதிக ரத்தப் போக்கும் நிற்கும்.

கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.

கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து காலை, மாலை இரண்டு வேளை யும் சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.

கல்யாண முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.

கீழாநெல்லி வேரை இடித்து சாறு பிழிந்து, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.

கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமடையும்
Previous Post
Next Post

0 Comments: