புதன், 11 செப்டம்பர், 2024

கை கால் குடைச்சல் ஏற்படுவதற்கானகாரணங்கள் என்ன...?

கை கால் குடைச்சல் ஏற்படுவதற்கான
காரணங்கள் என்ன...?

கை, கால்களில் குடைச்சல் வருவதற்கு பல காரணங்கள் இருக்க முடியும். 

முதுகுத்தண்டுவடத்தில் உள்ள டிஸ்க் நழுவி நரம்பு மேலே அழுத்துவதால், கை, கால் குடைச்சல் ஏற்படக்கூடும். 

ரத்த நீரழிவுநோய் கட்டுப்பாடு இல்லாமல் அதிகமாக இருத்தாலும், கை, கால் உளைச்சல் இருக்ககூடும்.

நரம்பு பாதிப்படைந்து இருப்பது, 

வைட்டமின் பி12, 

கால்சியம் சத்து குறைபாடு, 

தைராய்டு ஹார்மோன் குறைவாக இருத்தல்

இந்த பிரச்சனைகள் பெரும்பாலும் முப்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். 
வேலையின் காரணமாக வரலாம். உதாரணமாக……

சுமைதூக்கும் தொழிலாளிகள், விவசாய வேலை, தொடர்ச்சியாக நீண்ட நேரம் வாகனம் ஓட்டுபவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்த நிலையில் பல மணி நேரம் வேலை, மற்றும் மன அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிகம் பாதிக்கிறது.

மேலும் மாதவிலக்கு, தாய்மை அடைதல், அதிக வேலைச்சுமை, ரத்தசோகை, தைராய்டு ஹார்மோன் குறைபாடு ஆகியவையும் காரணமாகும். இது பரம்பரைக்கும் வரும் என்று கூறமுடியாது. குடைச்சல் வரப்போவதை சில அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். 

காலின் அடிப்பாகத்தில் எரிச்சல் தோன்றும்.படிப்படியாக முழங்கால் வரை அதிகரிக்கும்.

இரவு நேரங்களில் தூங்கும்போது, கெண்டைக் காலில் இழுத்துப் பிடிக்கிற உணர்வுகள் இருப்பது. 

குடைச்சல் ஏற்படுவதற்கு முன்னர் கை, கால்கள் மரத்து போதல்……

ஆகியவை இதன் அறிகுறியாக இருக்கும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதங்களில் ஊசி குத்துவது, சுருக் என்ற வலி போன்ற உணர்வுகள் இருப்பதுண்டு.

கீழே உள்ள இந்த அறிகுறி பெண்களுக்கு இருந்தால்…… 

இடுப்பு வலி மற்றும் தலைவலி வரும்.சிலருக்கு தூக்கமின்மை ஏற்படலாம். உற்கார்ந்து துணிதுவைக்க முடியாத நிலை, வீட்டு வேலைகளைச் சரியாக செய்ய இயலாத நிலைஏற்படும். சர்க்கரை நோய், தைராய்டு பிரச்னை ஆகியவற்றால் ஏற்படுகிற கண் நரம்பு பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு,முடி உதிர்தல் ஆகியவையும் சேர்ந்து கொண்டு மேலும் தீவிரமாக்கும்.

சிறிது கடுக்காய் தூளும் அதே அளவுக்கு மிளகுத்தூளும் சேர்த்து தேவையான அளவு ஆமணக்கு எண்ணெய் விட்டு காய்ச்சி வைத்துக் கொண்டு தொடர்ந்துமூன்று நாட்கள் காலை மட்டும் பத்து மில்லி அளவில் குடித்து உப்பு புளி காரம் நீக்கி பத்தியம் இருந்து வர குடைச்சல், குத்தல் வீக்கம் வாதவலி போன்ற உபாதைகள் படிப்படியாக தீரும்.

உடலில்_ஓடி_ஓடி_தொல்லை தரும்_வாய்வு_குணமாக…

கொடிவெலிவேர்பட்டை 10 கிராம்
பரங்கிச்சக்கை 10 கிராம்
பிரப்பங்கிழங்கு 10 கிராம் 
சுக்கு 10 கிராம்………

இவற்றை நன்றாக இடித்து ஒருபுதுசட்டியில்போட்டு
500 மில்லி நீர்விட்டு அடுப்பில்வைத்து 350 மில்லியாக சுண்டவைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.இதை நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு ஸ்பூன் தர உடலில் ஓடி ஓடி தொல்லை தரும் வாயு,தேகக்கடுப்பு கை,கால் குடைச்சல் குணமாகும்.

கை கால் எரிவு நோய் தீர

தே.பொருட்கள்.

திரிகடுகு 1/2 பலம் 
(சுக்கு, மிளகு, திப்பிலி) 

திரிபலை 1/2 பலம் (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்)

சீரகம் 1/2 பலம் 
பறங்கிப் பட்டை 2 பலம்

இவைகளை நன்கு இடித்துச் சூரணமாக்கி வைத்துக் கொள்ளவும்.

வெள்ளைக் குங்கிலியம் 5 பலத்தை எருக்கு இலைக்குள் வைத்து, பத்து வறட்டியில் புடம் போட்டு எடுத்து வைத்துக் கொண்டு, பிறகு வேப்பம் பட்டைக் குடிநீரில் துலாயந்திரமாகக் கட்டி சுத்தி செய்து, அதன் பிற எருமை வெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வெள்ளைத் துணியில் தோய்த்துப் பிழிந்து முன்சொன்ன சூரணத்துடன் இதையும் சூரணித்துக் கலந்து சாப்பிட வாதப்பிடிப்பு, தெறிப்பு, குடைச்சல், கை கால் எரிவு முதலியன தீரும்.

முடக்கத்தான் கீரை சூப்

தேவையானவை:

வேகவைத்த துவரம்பருப்பு ஒரு கப் முடக்கத்தான் கீரை 2 கைப்பிடி அளவு,

நசுக்கிய பூண்டு 2 பற்கள்

சின்ன வெங்காயம், தக்காளி 1

மிளகுத்தூள்,சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

வெண்ணெய் ஒரு டீஸ்பூன்.  

செய்முறை:

கடாயில் வெண்ணெயைப் போட்டு சூடாக்கி, முடக்கத்தான் கீரை, பூண்டு, சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் வேகவைத்த பருப்பு, 4 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். அதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.

பலன்கள்

வாயுத் தொல்லைக்கு அருமருந்து முடக்கத்தான் சூப்.வாயுப் பொருமல், தொப்பை, அக்கி, வயிற்றுப்புழு, மசக்கை, பசி, ஏப்பம் மறைந்து உடலுக்கு தெம்பைக் கூட்டும். குடல் புழுக்கள் அழியும். மேல் வாய்வுப் பிடிப்பு, இடுப்பு வாய்வுப் பிடிப்பு விலகும். கை, கால், கழுத்து பிடரி வலி இருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிடலாம். முடக்குவாதம், பக்கவாதம் இருப்பவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டுவந்தால் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

முதுகு தண்டு வலிமை பெற

தேவையான பொருட்கள்:

பூண்டு(பற்கள்) - 5 எண்ணிக்கை,
பால் - 200 மி.லி,

மிளகு தூள் - சிறிதளவு,

மஞ்சள் தூள் - சிறிதளவு,

தேன் - தேவையான அளவு,

உலர் திராட்சை - 10 எண்ணிக்கை.


செய்முறை:

முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு 200 மி.லி., பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் இடித்த பூண்டையும் சேர்த்துக் கொண்டு நன்கு வேகவைக்கவும். பிறகு இதனுடன் சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் மிளகுதூள் சேர்த்துக்கொண்டு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பிறகு இதனை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
மேலும் இதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.பிறகு இதனுடன் உலர் திராட்சை சேர்த்துக் கொள்ளவும். இப்போது ஒரு சுவையான பானம் தயார் ஆகிவிடும்.இதனை முதுகு வலி உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் காலை மற்றும் இரவு குடித்து வந்தால் முதுகு வலி நீங்கி முதுகு தண்டு வலிமை பெறும். தேவைப்பட்டால் மீண்டும் மருந்து தயார் செய்து குடிக்கலாம் தவறு இல்லை.
Previous Post
Next Post

0 Comments: