சனி, 7 செப்டம்பர், 2024

சூப்பர் டிப்ஸ் இதோ...

சூப்பர் டிப்ஸ் இதோ...

பூரி மாவுடன் கொஞ்சம் துருவிய தேங்காய் சேர்த்துப் பூரி செய்தால், புதுமையான சுவையுடன் அசத்தும்.

ரசத்துக்கு புளி கரைக்கும்போது, கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கரைத்தால், சுவை கூடும்; தாளிக்கும்போது சிறிதளவு முருங்கை இலையைச் சேர்த்து தாளித்தால், மணமும் ருசியும் அதிகரிக்கும்.

சத்துமாவு கஞ்சிக்கு அடுப்பில் கொதிக்க வைக்கும் போது சில சமயம் கட்டி தட்டிவிடும். இதைத் தவிர்க்க, முதலில் தண்ணீரில் மாவைப் போட்டு நன்றாகக் கரைத்து அதன் பின் அடுப்பில் வைத்து காய்ச்சினால்... கட்டிதட்டாது...
Previous Post
Next Post

0 Comments: