வெள்ளி, 25 அக்டோபர், 2024

மில்க் கேசரி செய்வது எப்படி.....?

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

மில்க் கேசரி செய்வது எப்படி.....?


தேவையான பொருட்கள்:

பால் - 200 மில்லி லிட்டர்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய் - 7
வெள்ளை ரவை - 100 கிராம்
நெய் - 30 மில்லி
முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்
கிஸ்மிஸ் (உலர் திராட்சை) - 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் பருப்பு - 2
பிஸ்தா - 2
செர்ரி பழம் - 2

மில்க் கேசரி
செய்முறை:

வாணலியில் சிறிது நெய் விட்டு ரவையை நிறம் மாறாமல் சிம்மில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.

மற்றொரு வாணலியில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.

மற்றொரு வாணலியில் பால் சேர்த்து காய்ச்சியதும் வறுத்த ரவை, தட்டிய ஏலக்காய் சேர்த்துக் கிளறவும்.

பால் வற்றி ரவை வெந்த பிறகு சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். சர்க்கரை உருகி, கேசரி பதத்துக்கு ரவை வந்த பிறகு, நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் (உலர் திராட்சை) சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

இதில் பாதாம் பருப்பு, பிஸ்தா, செர்ரியை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.
Previous Post
Next Post

0 Comments: